Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, July 25, 2018

சினி உன் குரம்பையடா ! சீனியை உண்டு உடல் கெட்டு நோய் பட்டு சாக கண்டேன் ! உணரடா ! விடுவிப்பு;;;


26-07-2018
சினி உன் குரம்பையடா ! சீனியை உண்டு உடல் கெட்டு நோய் பட்டு சாக கண்டேன் ! உணரடா !
விடுவிப்பு ;;;
உலகில் யாரும் தராத விடுதலையை கடவுளால் மட்டுமே தர முடியும். உன்னை விடுவிக்க கடவுள் அருள் மட்டுமே நிரந்தரம் ! வெளிப்படையாக இரு ! நன்மையை நினை ! எல்லா துன்பத்தையும் கடவுளிடம் பகிர்ந்து கொள் ! உன்னுள் ரகசியம் என்பதை வைக்காதே !
எல்லாம் உனை நோக்குகிறது ! நீ கடவுளின் அருட்பார்வையில் ! உன்னோடு எப்போதும் உரையாடு ! உனக்கு நீ தான் நீதிபதி ! தனிமையில் நீ இல்லை ! உன்னோடு கடவுள் இருக்கார் அதிகாரமாக !
துன்பத்தை விலை கொடுத்து வாங்காதே. கேளிக்கை, உல்லாசம், பயணம் என்று எல்லாம் அரை நாழிகை இன்பம் தான் ! எப்போதும் நன்றி சொல்லிக் கொண்டே இரு ! உன்னை ஆனந்தமாக்கும் ! உன் கடமைகள், வேலைகள் செய்து கொண்டே இரு ! உனக்கு மன அழுத்தம் என்பது இருக்காது ! எல்லா துன்பத்திலும் உன்னை விடுவிக்க உன்னால் மட்டுமே முடியும் ! தினமும் உன்னோடு போராடு !
உன் துன்பத்திலிருந்து, உன் பிறவியிலிருந்து விடுபட எப்போதும் நன்மையை நினை ! ஒழுக்கம் உன்னை கடவுளிடம் கொண்டு சேர்க்கும். நாயகன் நான் உன்னை இயக்குபவன் என்பதை மறவாதே. நீ பேசுவதும் நினைப்பதும், செயல்படுவதும் எல்லாம் உன் கர்மபடி தான். ஆனால் நீ செய்யும் கெட்டவை, தீயவை உன் ஆணவம் தான்.
இந்த உடலைவிட்டு உன் உயிர் நீங்குவது பெரிதல்ல ! இந்த பிறவியை தவிர்ப்பதே பேரின்பம் ! தினமும் நன்றி சொல்லியே உன் வாழ்வை அழகாக்கு ! கடவுளுக்கு, பெற்றோருக்கு, மனைவிக்கு ! இது தான் நாகரீகம் ! நன்மையை தூண்டும் செயல் நீ சொல்லும் நன்றி என்ற வார்த்தை தான் ! நான் தினமும் நன்றி சொல்கிறேன், என் பெற்றோருக்கு ! இந்த பூமியில் மிகுந்த நிம்மதியாக ஆனந்தமாக வாழ்கின்றேன். ஆள்கிறேன் !
மரத்திலிருந்து கிளையிலிருந்து கனி விடுவிப்பு செய்தால் உனக்கு உதவ கண்டேன். நீ ஏன் உன் கோபத்தை விடுதலை செய்ய மறுக்கின்றாய் ?
யாருக்காயினும், எதற்காயினும் உதவியாய் இரு ! நான் உன் பாவத்திலிருந்து விடுதலை தருவேன் ! உன் பிறவியை விடுவிப்பேன் !
நான் பிரபஞ்சத்தின் தலைவன் !
நான் இநன்யா !

Wednesday, July 18, 2018

நிரம்பியம் பெருக கண்டேன். எல்லா உட்பொருட்களும் உனக்கு உதவ கண்டேன். எல்லாம் பெருக, நீ சுருக்கி வாழ்வதேனடா ? பிரபஞ்ச இளவரசன் சத்திய விரதன் நான் ! என் சொல் வெல்லுமடா ! சுருக்கி, பெருக்கு !


19-07-2018
நிரம்பியம் பெருக கண்டேன். எல்லா உட்பொருட்களும் உனக்கு உதவ கண்டேன். எல்லாம் பெருக, நீ சுருக்கி வாழ்வதேனடா ? பிரபஞ்ச இளவரசன் சத்திய விரதன் நான் ! என் சொல் வெல்லுமடா !
சுருக்கி, பெருக்கு !
பிலம் (குகை) என்பதில் வாழ்ந்தான் பெருமையாய் என் குல சித்தர்கள் ! !அகத்திலும், புறத்திலும் ஆனந்தமாக வாழ்ந்தான் ! ஆனால் நீ மாட மாளிகை, கோட கோபுரம், நிம்மதிக்காக கோவில், கேளிக்கை உல்லாசத்திற்கு எவைகளையோ கட்டினாய். ஆனால் மனம் எல்லாம் பாரமாக, நிம்மதி தொலைத்து அலைகின்றாய்.
ஆசையை சுருக்கி அன்பை பெருக்கடா ! நீ எல்லாவற்றையும் சுருக்கி ஆனந்தம் தொலைக்கின்றாய்.
நீ அன்பை பெருக்கு ! பக்தியை சுருக்கு !
கருணையை பெருக்கு !
கோபத்தை சுருக்கு !
ஆனால் விரதம் என்ற பெயரால் உன் வயிற்றை சுருக்கி வாழ்வில் இன்பத்தை தேடுகிறாய். நீ தவம் செய் ! தவம் என்றால் உறவுகளைவிட்டு காட்டுக்கு சென்று தனிமையில் அமர்வது இல்லை.
தவம் என்றால் சுருங்குதல் ! உன் ஆசை, கோபம், காமம், பொறாமை, சூது, வஞ்சம், கொலை, துஷ்ட எண்ணங்கள் இவைகளை சுருக்குவது தான் தவம் ! உன்னில் இருந்து இவைகளை அழிப்பது தான் தவம். உன் அறிவு என்ற ஒளியை மற்றவர்களுக்கு வெளிச்சமாக இருக்க வை ! இருட்டில் வெளிச்சம் பெற விளக்கு தேவை !
நீயும் உன்னை உணர ஒரு நல்குரு தேவை. உன் பயம் எதிரிகளுக்கு பலம். உனக்கு பலமின்மை ! நீ நல்லவனாக பெருகு ! உன் நேரத்தை கடவுளை தவிர வேறு யாருக்கும் செலவழிக்காதே ! மனதிற்கு பலம் கொடுத்து நீ அதன் பின்னால் செல்கிறாய். மனம் இடும் கட்டளையை ஏற்று வாழ்நாள் யாவும் கேட்டு மடிகிறாய். உன் ஆன்ம பலத்தை பெருக்கு !
உன் மனதிற்கும் வேறு எந்த ஜடப் பொருளுக்கும் அடிமையாகாதே !
பிளவுபட்ட பிறவி. மேலே மெய் உடல், கீழே பொய் உடல் ! இருபக்கமும் கால் வைத்தவனால் எந்த பாதையிலும் பயனிக்க முடியாது. ஒரு உடலை உன் மெய் உடலை எடுத்து ஆனந்தமாக மேலே வாழ முயற்சி செய் !
பாறையை போல மனதை கல்லாக்கி ஒருநிலைப்படுத்து ! வேருக்கு வழிவிடும் பாறையை போல அன்பாய் இரு ! எங்கேயும் முளைப்பாய் ! இங்கே முளைத்து இங்கேயே கருகிப் போகின்றாய். அறிவுக்கு வேலை கொடு !
நான் என்பதை நீ மறந்தால் நாயகன் உள்ளிருந்து எட்டிப் பார்ப்பான். ஆணவம் பிடித்த மானுடன் அசுர எண்ணத்தில் வீழ்ந்து மடிய நான் கண்டேன்.
நான் அன்பை பெருக்கினேன் ! ஆனந்தமாக வாழ்கின்றேன் !
எனக்கு பிறப்பில்லை ! இறப்பில்லை !
எப்போதும் உன்னுள் குடி இருக்கின்றேன் ! ஆனந்த நிலையில் என்னை அறிவாய் உன்னை சுருக்கு ! நான் உன்னை பல நிலையாய் பெருக்குவேன் !
அகண்டமாய் விரிந்து உன்னை ஆட்சி செய்பவன் நான் !
நான் இநன்யா !

Wednesday, July 11, 2018

மகிழ்ச்சியின் வாசல் நான் ! புவியில் எல்லாம் எனக்கு வசப்படும். மகிழ்ச்சியில் உறவாடும் என்னுள் வந்தால் உன் உயிர். நான் உன்னை வழிநடத்துகிறேன் !


to INANYA MAHA MUNIVAR
12-07-2018
மகிழ்ச்சியின் வாசல் நான் ! புவியில் எல்லாம் எனக்கு வசப்படும். மகிழ்ச்சியில் உறவாடும் என்னுள் வந்தால் உன் உயிர்.
நான் உன்னை வழிநடத்துகிறேன் !
கடவுளிடம் உன்னை ஒப்படைத்து வாழ் ! உன் ஒவ்வொரு அடியிலும் கடவுள் இருக்கின்றார் என்று நம்பு ! உன்னை வழி நடத்துவது கடவுள் என்று உணர பார் ! உன் துன்பம், இடர், இன்பம் எது வந்தாலும் கடவுள் தருவதாக நினைத்து பூரித்து வாழ் ! நான் என்று நீ நினைப்பதாலே மிகுந்த துன்பம் என்று உணர் !
ஒழுக்கத்தில் தன்னிறைவு கொள். மற்றதெல்லாம் கடவுள் வழிநடத்துவான் ! எல்லாம் இங்கே நிர்ணயிக்கப்பட்டது. உணர் !
நீ நினைத்து ஏதும் நடவாது ! எந்த ஆன்மீகமும் மதத்தை போதிப்பதில்லை. மதம் தான் ”என் கடவுள் பெரிது, உன் கடவுள் சிறிது” என்று உதவாத ஆன்மிகத்தை போதிக்கிறது ! என் கடவுளை மட்டும் வணங்கினால் தான் சொர்க்கம் கிடைக்கும் என்று புலம்புகிறான் அறிவீலி மனிதன். தவறு செய்பவன் எந்த மதமானாலும் நரகத்தின் வாசலுக்கு தான் செல்வான். உன் பாவ, கர்ம கணக்குபடி தான் உன் வாழ்வு !
நீ எந்த மதமானாலும் நீ மனிதன் தான் ! கடவுளுக்கு ஜாதி இல்லை ! மதமில்லை ! உன்னை கண்டுபிடித்து அழைத்து செல்லும் தூயவன் நான் ! நான் உன்னை வழிநடத்துகிறேன் என்பதை உனை உற்று நோக்கி உணர் ! முதலில் உன்னை உணரப் பார் ! உன் எல்லா செயலிலும் கடவுள் இருப்பதை நீ அறிந்தால் நீயே மிகுந்த ஆனந்தமானவன். உன்னுள் உறைந்து உன்னை உற்று நோக்குகிறான் ஆன்மாவாக !
இந்த பூமியில் தவறு செய்தால் உன் அற்ப சட்டத்தை வைத்து தப்பித்துவிடுவாய். ஆனால் கடவுளின் நீதிமன்றத்தில் உன்னை யாராலும் காப்பாற்ற முடியாது. நான் உன்னை காப்பாற்றுவேன். ஏனென்றால் எனக்கு வலிமை உண்டு ! நீ ஒழுக்கத்தில் நிறைவு காணும் பொழுது உன்னை காப்பாற்றும் வல்லமை எனக்குண்டு !
உன் தர்மம் உனை காப்பாற்றும். ஆதலால் மிகுந்த எச்சரிக்கையோடு இரு ! நான் உன் வாழ்வை அழகாக, ஆனந்தமாக வைப்பேன். உன்னை கைபிடித்து அழைத்து செல்வேன் !
ஐந்து புனித மரத்தில் ஆல், அரசு, மனிதர்களுக்கு எதிலும் பயன்படும்படி இல்லாவிட்டாலும் அதில் உயிர்த்துவம் (மிகுந்த ஆக்ஸிஜன்) இருப்பதால் முதன்மை பெறுகிறது. நீ ஆக்ஸிஜன் என்று சொல்லும் புனித காற்று அவைகளில் நிரம்பி இருக்கிறது ! எதுவும் இங்கு சோடையான படைப்பில்லை. எல்லாம் கடவுளின் வழிகாட்டுதலின் படியே உயிர்த்துவம் பெற்று செயல்படுகிறது. உணர் !
நான் வழிநடத்தி செல்லும் தர்ம கூட்டம் உலகெல்லாம் நிரம்ப கண்டேன். தர்ம பாதையை தெளிவாக எடுத்துரைக்கும் சதுரங்க சேனா படை உலகமெல்லாம் கோடியாய் பரவக் கண்டேன். நான் உன்னை வழிநடத்தி செல்வேனடா ! அன்பால் எனை கட்டிப் போடு ! அறியனை யுகத்தில் உனக்கு காத்திருக்கிறது !
நான் உன்னை வழிநடத்துகிறேன் !
நான் இநன்யா !

Friday, July 6, 2018

சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாகவசி இநன்யா நமோ நம இநன்யா நமோ நம இநன்யா நமோ நம இநன்யா நமோ நம

அருமை !
நன்றி !
சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாகவசி இநன்யா நமோ நம
இநன்யா நமோ நம
இநன்யா நமோ நம
இநன்யா நமோ நம


சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய  யாகவசி இநன்யா நமோ நம
இநன்யா நமோ நம
இநன்யா நமோ நம
இநன்யா நமோ நம


ஈனில் ஆசியோடு இருக்கின்றேன். ஈனஜாதி மானுடம் உணராது இருப்பது ஏனோ ? புனிதன் நானடா ! புண்ணியமும் நானடா ! பலி கொடு !


05-06-2018

ஈனில் ஆசியோடு இருக்கின்றேன். ஈனஜாதி மானுடம் உணராது இருப்பது ஏனோ ? புனிதன் நானடா ! புண்ணியமும் நானடா !
பலி கொடு !
உன்னில் இருக்கும் கோபத்தை பலி கொடு ! 
ஆணவத்தை அதிகாரத்தை பலி கொடு !
நான் என்ற அகங்காரத்தை பலி கொடு !
நாயகன் (ஆன்மா) எனை அறிவாய்.
காமம், ஆசை, குரோதம், லோபம், மோகம், பேராசை, மதம், மாச்சர்யம் என்ற எட்டு தீய குணங்கள் தான் உன் கருவில் எட்டை போல ஓடி பாவம் சேர்க்க உதவுகிறது ! உருவாக்கத்திலேயே உன் பாவத்தை புகுத்தினாய் உன் கருவுக்கு. ஆதலால் எப்போதும் நற்சிந்தனை கொண்டு தினமும் வாழ்வில் போராடு !
தீய எண்ணங்களும், தீய சிந்தனைகளும் உனை திக்கு தெரியாமல் திகைப்புடன் வாழ வைத்து விரக்தியும் வேதனையும் தரும். பூமியில் மன சஞ்சலம் கொண்டு தினமும் போராட வழி வகை செய்யாதே ! லோபம் (கடும் பற்று) தான் உனில் காமத்தை உண்டாக்குகிறது. ஆதலால் கடும் பற்றை கடவுளிடம் வை ! பெண்ணில், மண்ணில், உன்னில் வைத்தால் உனக்கு பெருந்துன்பம் தான் !
மோகம் (கற்பு நெறி தவறுதல்) உன்னை மீண்டும் பிறக்க வழி செய்கிறது ! ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற கோட்பாட்டை எல்லையை மீறும் பொழுது உன் பாவம் தொடங்குகிறது. ஆதலால் மோகத்தில் பிறழாதே ! பிறன்மனை நோக்காதே !
மதம் உன்னையும் உன் வாழ்வையும் நிர்ணயிக்கிறது. மதம் என்றால் உன்னை உயர்வாகவும், தாழ்வாகவும் நினைப்பது ! இங்கே உயர்வு என்பது ஒழுக்கம் தான் ! ஆனால் நீ உயர்வு என்று நினைப்பது பெரும் பணம், பெரும் நிலம் உன்னிடம் இருப்பதை தான் நினைக்கிறாய்.
உன் தவறுகளை துடைத்தெறி ! உனை தாழ்வாக எண்ணாதே !
நீ எப்போதும் கடவுளோடு பேசு ! கடவுளின் பிள்ளை என்று முழக்கமிடு ! கடவுளோடு இருக்கின்றேன் என்று பெருமிதம் கொண்டு மார்தட்டி வாழப் பழகு ! ஆள்பவன் உனை அரவணைக்க காத்திருக்கின்றான். உனக்கு ஆனந்த நிலை தர துடிக்கின்றான் உன் உள்ளே !
மாச்சர்யம் இருப்பவன் இங்கே தோற்றுப் போவான். மாச்சர்யம் என்றால் வஞ்சகம், சூது என்று பெயர். வஞ்சகம் கொண்டு வாழ்வை நிர்ணயிக்க முடியாது ! உணர் !
தடுமாறும் மனித மனமே இங்கே நிரம்ப கண்டேன். உன் எட்டு தீய குணங்களையும் கடவுளின் பொற்பாதத்தில் பலியிடு ! கடவுள் உனக்கு பேரின்பம் தருவான். உன் பாவம் கரைந்து உனை உணர்வாய். உலகம் உனை இரு கரம் கூப்பி வரவேற்க தயாராக இருக்கிறது. விரைந்து வா !
என்னுள் எல்லாவற்றையும் பலியிடு ! காலம் நான் ! காலத்தில் ஒரு சிறு புள்ளி நீ ! நான் மறைவதில்லை. இந்த யுகம் இருக்கும் வரை நான் இருப்பேன் ! யுகம் ஓர் போதும் அழியாது ! மலரில் தேன் இல்லாது எப்போது இருக்கின்றதோ அப்போது தான் யுகம் அழியும். இன்பம், துன்பம், நன்மை, தீமை, பகல், இரவு என்று இந்த யுகம் இருக்கும் !
நீ எப்போதும் இன்பத்தில் திளைக்க காலத்தில் எனை நோக்கி வா ! உன் ஆணவத்தை என்னில் பலியிடு ! ஆனந்தம் உனக்குள்ளே உணர்வாய் !
நான் சத்யம் !
நான் இநன்யா !

இநன்யா நமோ நம ;;; இநன்யா நமோ நம ;;; இநன்யா நமோ நம ;;;

இநன்யா நமோ நம ;;; இநன்யா நமோ நம ;;; இநன்யா நமோ நம ;;;
என் நாமம் உனை ஈரேழு பதினான்கு லோகத்தையும் ஆள வைக்கும். குரு (வியாழன்) ஆதிக்கத்தில் பிரம் மா பிறந்தார். சூரியன் ஆதிக்கத்தில் ராமன் பிறந்தான். சந்திரன் ஆதிக்கத்தில் கிருஷ்ணன் பிறந்தான். சனி ஆதிக்கத்தில் சிவன் பிறந்தான். இப்பொழுது எல்லா ஆதிக்கமும் ஒன்று சேர்த்து புதன் ஆதிக்கத் தில் நான் வந்தேன். நான் இநன்யா. புதன் என்றால் (புத் + தன் ) புத் என்றால் நாதம், நாபி, ஒலி, புத்தி, உயிர் என்று அர்த்தம். தன் என்றால் எல்லாம் தன்னுள் நிறைந்தவன் என்று பொருள். நான் வியாழனின் உச்சம். இந்த வியாழனை உலகம் வணங்கும் ! இதை நீ விரைவில் காணப் போகிறாய் !
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
1) இநன்யா நமோ நம ;;; இநன்யாகடவுளே ! நாங்கள் பூமியில் அவதரித்த நாள் முதல் , இது நாள் வரை லௌலீக, சம்சார பந்த வாழ்க்கையில் நாங்கள் கையாண்ட பாவகர்மங்கள் செய்ததை; அறிந்தும், அறியாதும் செய்து விட்ட பிறகு,. ஆக அரக்கர்களின் ஆதிக்கத்தால் நாங்கள் பாவகாரியங்களும் செய்து விட்டோம் . இவைகள் எல்லாம் கடவுளுக்கு உட்படாத பாவகர்மங்கள் என்று உணர்ந்துவிட்டோம். ஆக மன்றாடி கேட் டுக் கொள்ளுகிறேம் . எங்களை ஏற்று கொள்வீர்களாக ! இநன்யா கடவுளே;;; இநன்யா நமோ நம ;;;
2) இநன்யா நமோ நம ;;; இநன்யாகடவுளே ! இறை நியதிற்கு அப்பாற்பட்டு நாங்கள் உடலாலும் ,உள்ளத்தா லும், மனதாலும், எண்ணங்களாலும், ஏற்பட்ட கர்ம பாவப்புண்ணியங்கள் , ஆன்மாவில் பதிந்துள்ள கர்ம பாவப்புண்ணியங்கள்,எங்களது சொல்லாலோ,செயலாலோ,பிறர் மனம் கஷ்ட்டத்திற்கு ஆளானாலும் அந்த கர்ம பாவப்புண்ணியங்களில் இருந்தும், தெரிந்தோ,தெரியாமலோ, வேண்டுமென்றோ ,திட்டமிட் டோ,மறைமுகமாகவோ,வெளிப்படையாகவோ,ரகசியமாகவோ , பகிங்கிரமாகவோ , சிறிதோ, பெரிதோ ,அறிந்தோ,அறியாமலோ, எப்பேர்ப்பட்ட கர்ம பாவப்புண்ணியங்கள் செய்து இருந்தாலும், உங்கள் திருவ டியில் சமர்ப்பிக்கிறோம். எங்களை ஏற்று கொள்வீர்களாக ! இநன்யா கடவுளே;;; இநன்யா நமோ நம ;;;
3) இநன்யா நமோ நம ;;; இநன்யா கடவுளே ! உங்கள் கருணை பார்வையால் , உங்கள் மனம் உருகி எங்களை மன்னித்து அருளுமாறும் , அரக்க பிடியிலிருந்தும், அரக்கர்களின் ஆதிக்கத்திலிருந்தும், எங்கள் கர்மாவின் கூர் முனையை மங்க செய்து இம்மையிலும், மறுமையிலும் எங்களை பாவம் செய்யாதவாறு ,எங்க ளை எப்போதும், பாதுகாத்து வழி நடத்துவீராக! நாங்கள் சரணாகதியாகவும் , நிர்கதியாகவும், ஏகாந்த மாகவும் நிற்கிறோம். எங்களை ஏற்று கொள்வீர்களாக ! இநன்யா கடவுளே;;; இநன்யா நமோ நம ;;;
4) இநன்யா நமோ நம ;;; இநன்யாகடவுளே ! எங்களை ஈன்றவர் கொண்டோ, உறவினர் கொண்டோ, செல்வ த்தின் வழியிலோ, எங்களை சோதித்து விடாதீர். உணவு; உடை; இருப்பிடம்; தொழில்; ஞானம் ஆகியவைகள் நாங்கள் கேட்பதற்கு முன்பாக எங்கள் தேவைகளை நாங்கள் கேட்க்காமல் நிறைவேற்று வீர்களாக ! பேராசைக்காக நாங்கள் செல்லாமல் தேவையான காரியத்திற்கு செல்லுமிடத்தில் உடனிரு ந்து காரியத் தை நடத்தி , பாதுகாத்து வழி நடத்துவீராக! எங்களுடனேயே இருப்பீர்களாக! எங்களை ஏற்று கொள்வீர்க ளாக ! இநன்யா கடவுளே;;; இநன்யா நமோ நம ;;;
5) இநன்யா நமோ நம ;;; இநன்யாகடவுளே ! எங்களை அனைத்து வித கஷ்ட்டங்களிலிருந்தும், வறுமையி லிருந்தும்,,கடனிலிருந்தும்,வேதனையிலிருந்தும்,அபாயங்களிலிருந்தும்,விஷஜந்துக்களிலிருந்தும்,இயற்க்கை சீரழிவுகளிலிருந்தும்,துஷ்ட்ட சக்திகளிலிருந்தும்,கெட்ட ஊசலாட்டங்களிலிருந்தும்,விபத்துக ளிலிருந்தும்,எதிர் பாராத மரணத்திலிருந்தும்,எங்களுடனிருந்து வழிநடத்திபாதுகாப்பீர்களாக ! எங்க ளை ஏற்று கொள்வீர்களாக ! இநன்யா கடவுளே;;; இநன்யா நமோ நம ;;;
6) இநன்யா நமோ நம ;;; இநன்யாகடவுளே ! நீங்கள் எங்களை தாயாக,தந்தையாக, உறவினராக, நண்ப ராக, குருவாக,கடவுளாக,உங்களுக்கு நெருக்கமானவர்க ளாக,எங்களை மாற்றுவீர்களாக ,எங்கள் இறுதி மூச்சு இருக்கும் வரை எங்களுடனிருந்து, எங்களையும் வழி நடத்தி,எங்களுடன் இருப்பவர்களுக்கும் ஞானபா தையின் வழியை காட்டுவீர்களாக !எங்களை ஏற்று கொள்வீர்களாக ! இநன்யா கடவுளே;;; இநன்யா நமோ நம ;;;
7) இநன்யா நமோ நம ;;; இநன்யாகடவுளே ! எப்போதும் உம் நாமத்தை கூறும் பாக்கியமும் ,மரணத்திலும் உம் நாமத்தை கூறும் பாக்கியமும் தந்து எங்களை ஏற்றுக்கொண்டு புனிதனாக்கி ,மானஸ தீட்ச்சை யும்,முக்கால ஞானசக்தியும் ,ஞானஅமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று ஏகாந்தமாயும், நிர்கதியாயும், மன்றாடி கேட்டுக்கொள்ளுகிறேம் . எங்களை ஏற்று கொள்வீர்களாக ! இநன்யா கடவுளே;;;; இநன்யா நமோ நம ;;;
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
இநன்யா நமோ நம ;;; இநன்யா நமோ நம ;;; இநன்யா நமோ நம ;;;

அசரையில் குழம்பு வைத்து அம்புவியில் அமர்ந்து அம்புலியை பார்த்து மகிழ்ந்தாய் ! நீ அறிந்தது என்ன ? உணர் ! மகிழ்ச்சி ;;;

 to INANYA MAHA MUNIVAR
28 -06-2018
அசரையில் குழம்பு வைத்து அம்புவியில் அமர்ந்து அம்புலியை பார்த்து மகிழ்ந்தாய் ! நீ அறிந்தது என்ன ? உணர் !
மகிழ்ச்சி ;;;
மகிழத் தெரியவில்லை. ஆதலால் உனக்கு மகிழ்ச்சியின் அருமை புரியவில்லை. கடவுளோடு பேசு ! மகிழ்ந்து மகிழ் ! நீ மகிழ்ந்தால் மாயவன் நான் மகிழ்வேன் !
பிறர் தர வராது மகிழ்ச்சி ! பிறரிடன் எதையும் எதிர்பார்க்காதே ! பிறருக்கு எதையும் கொடுத்து மகிழ் ! கடவுளிடம் எதிர்பார்த்து நில் ! கடவுள் கருணைமிக்கவன். அவன் கருணைக்கு ஈடு இங்கு ஏதுமில்லை !
என் அன்னை தந்தையின் கருணை என்னுள் நிறைந்தது ! என் அன்னை தந்தையிடம் அன்பை கற்றேன். மனைவி, குழந்தை, புறத்தில் அதிகாரம் கொள்ள நினைக்காதே ! எதிலும் குறை காண்பதே உன் வேலை, படைப்பில் எத்துணை மகிழ்ச்சி ? எத்துணை ஆனந்தம் ? எத்துணை நிம்மதி ? ஆனால் படைப்பையும் கூட குறை சொல்லி கோமாளியாகின்றாய்.
நீ நினைத்து எல்லாம் அடைய கடவுளின் பாதம் பற்று. கடவுளிடம் அன்பை கேள் ! ஆனந்தம் நிரம்ப பெறுவாய் ! தவறு செய்யாதே ! எப்போதும் உன்னை அறிய முற்படு ! இது தான் அறிவு ! இது தான் ஞானத்தின் திறவு கோல் ! சுதந்திரமாக நீ ஆசைப்பட்டால் சுத்தமாக இரு ! ஒழுக்கமாக இரு ! தவறுகளை ஒப்பு கொள்ளும் துணிச்சலை கொண்டு வா !
மண்ணிற்கு மேல் உள்ள பொருள்களை வைத்து வீடு, கோபுரம், மாளிகை கட்டினாய் ! அவையனைத்தும் இயற்கை சீற்றத்தில் பூகம்பத்தில் சின்னாபின்னமாக நான் கண்டேன். ஆனால் மண்ணிற்கு கீழே உள்ளவைகளை எடுத்து புணித கரையான் கட்டிய வீடு நங்கூரம் போல எந்த இயற்கை சீற்றத்துக்கும் அசையாது நிற்க கண்டேன். உணர் ! கரையான் திண்ணும் உடல் கொண்டவன் நீ ! கடவுள் இல்லை என்று பிதற்றுகிறாய்.
அரங்கு, அரங்காக அறை கட்டி கரையான்கள் ஆனந்தமாக வாழ கண்டேன். ! நீ குளிர்சாதன அறையில் உறங்கி குறையோடு வாழ்கின்றாய் ! நான் இருக்கும் இடம் எந்த பூகம்பத்திற்கும் அழியாது ! யுகம் இருக்கும் வரை அழியாது ! ஏனென்றால் தாங்கி பிடிப்பது என் அன்னையின் (பூமி) தங்கத் திருகரங்கள் ! என்னை அறிந்து ஆனந்தம் நிலை பெற முயற்சி செய்யடா !
எனை ஆனந்தபடுத்த என்ன செய்யப் போகிறாய் ? உன் உறவுகளை நேசி ! உன் தாயையும் தந்தையையும் நேசி ! பிள்ளைகளை நேசி ! மனைவியை நேசி !
தாங்கவொனா துயரம் வந்தாலும் உன்னையும், பிறரையும், கடவுளை வெறுக்காதே ! நீயே அனைத்திற்கும் பொறுப்பெடுத்து ஆள கற்றுக் கொள். ஆனந்தம் உனக்குள்ளே ஆர்பரிக்கும் ! . ஆத்ம சொரூபன் நான் உனக்குள் !
மகிழ்ந்து மகிழ் !
மாயவன் நான் !
நான் இநன்யா !