26-07-2018
சினி உன் குரம்பையடா ! சீனியை உண்டு உடல் கெட்டு நோய் பட்டு சாக கண்டேன் ! உணரடா !
விடுவிப்பு ;;;
உலகில் யாரும் தராத விடுதலையை கடவுளால் மட்டுமே தர முடியும். உன்னை விடுவிக்க கடவுள் அருள் மட்டுமே நிரந்தரம் ! வெளிப்படையாக இரு ! நன்மையை நினை ! எல்லா துன்பத்தையும் கடவுளிடம் பகிர்ந்து கொள் ! உன்னுள் ரகசியம் என்பதை வைக்காதே !
எல்லாம் உனை நோக்குகிறது ! நீ கடவுளின் அருட்பார்வையில் ! உன்னோடு எப்போதும் உரையாடு ! உனக்கு நீ தான் நீதிபதி ! தனிமையில் நீ இல்லை ! உன்னோடு கடவுள் இருக்கார் அதிகாரமாக !
துன்பத்தை விலை கொடுத்து வாங்காதே. கேளிக்கை, உல்லாசம், பயணம் என்று எல்லாம் அரை நாழிகை இன்பம் தான் ! எப்போதும் நன்றி சொல்லிக் கொண்டே இரு ! உன்னை ஆனந்தமாக்கும் ! உன் கடமைகள், வேலைகள் செய்து கொண்டே இரு ! உனக்கு மன அழுத்தம் என்பது இருக்காது ! எல்லா துன்பத்திலும் உன்னை விடுவிக்க உன்னால் மட்டுமே முடியும் ! தினமும் உன்னோடு போராடு !
உன் துன்பத்திலிருந்து, உன் பிறவியிலிருந்து விடுபட எப்போதும் நன்மையை நினை ! ஒழுக்கம் உன்னை கடவுளிடம் கொண்டு சேர்க்கும். நாயகன் நான் உன்னை இயக்குபவன் என்பதை மறவாதே. நீ பேசுவதும் நினைப்பதும், செயல்படுவதும் எல்லாம் உன் கர்மபடி தான். ஆனால் நீ செய்யும் கெட்டவை, தீயவை உன் ஆணவம் தான்.
இந்த உடலைவிட்டு உன் உயிர் நீங்குவது பெரிதல்ல ! இந்த பிறவியை தவிர்ப்பதே பேரின்பம் ! தினமும் நன்றி சொல்லியே உன் வாழ்வை அழகாக்கு ! கடவுளுக்கு, பெற்றோருக்கு, மனைவிக்கு ! இது தான் நாகரீகம் ! நன்மையை தூண்டும் செயல் நீ சொல்லும் நன்றி என்ற வார்த்தை தான் ! நான் தினமும் நன்றி சொல்கிறேன், என் பெற்றோருக்கு ! இந்த பூமியில் மிகுந்த நிம்மதியாக ஆனந்தமாக வாழ்கின்றேன். ஆள்கிறேன் !
மரத்திலிருந்து கிளையிலிருந்து கனி விடுவிப்பு செய்தால் உனக்கு உதவ கண்டேன். நீ ஏன் உன் கோபத்தை விடுதலை செய்ய மறுக்கின்றாய் ?
யாருக்காயினும், எதற்காயினும் உதவியாய் இரு ! நான் உன் பாவத்திலிருந்து விடுதலை தருவேன் ! உன் பிறவியை விடுவிப்பேன் !
நான் பிரபஞ்சத்தின் தலைவன் !
நான் இநன்யா !