Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, March 29, 2017

என் சிதாணந்தம் உனக்கு சீரான பாதையை, வாழ்வை எதிர் நோக்கும் வல்லமை தரும் !


என் சிதாணந்தம் உனக்கு சீரான பாதையை, வாழ்வை எதிர் நோக்கும் வல்லமை தரும் !
உள்ளம் மகிழ யூகி !
மனதிற்கு அடிமையானவன் தான் உலகம் தீமையானது என்று புலம்புகின்றான். மனதிற்கு எஜமானாக இருப்பவன் உலகம் அழகானது என்று மகிழ்கின்றான். உலகம் அழகானது. அதன் மடியில் துயிலும் மனிதன் தான் அழகானவன் இல்லை. மனிதன் மனதிலே மகிழ்ச்சி உண்டு ! அவன் எண்ணங்களே அவனை மகிழ்ச்சியாக்குகின்றன !
ஒழுங்கில்லா கல்லை குத்தி, குடைந்து சீர்படுத்தி செதுக்குகின்றான். தன் துன்பம் தன்னை வணங்க வைக்கபடும் என்று அந்த ஒழுங்கில்லா கல்லுக்கு தெரிவதில்லை ! அதே போல் மனிதர்க்கு வரும் துன்பம் எல்லாம் முடிவில் அவனை செதுக்குகிறது. இங்கே வலி இல்லாமல் மகிழ்ச்சி இல்லை. ஒருவனை சோர்வடைய செய்வது ஆசை தான் ! ஆகவே ஆசை இல்லா வாழ பழகு !
உன் கடமையை செய்துவிட்டு நடப்பது நடக்கட்டும் என்று கடவுள் மீது பாரத்தை போடு ! நீ தப்பிக்க பெரிய வழி இது தான் !
கடவுள் திருவடியே இங்கு முதன்மையான செல்வம் ! நான் செல்வம் என்று குறிப்பிடுவது அதை தான் ! அத்தனை பேரின்பமும் அதனுள் அடக்கம். ஞானிகள் கடவுளின் திருவடியை தேடினார்கள். மிகுந்த மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள் ! ஆனால் மனிதன் வேறு எதையோ தேடி மகிழ்ச்சியை தொலைக்கின்றான்.
என்னை பின்பற்றினால் எல்லாம் கிடைக்குமா என்று கேள்வி விளம்ப கேட்டேன். நான் என்பது உன்னுள் உறங்கும் ஆண்மா ! என்னை தட்டி எழுப்பினால் சகலமும் உன் காலடியிலே ! என்னை பின்பற்ற குழந்தை மனதோடு இரு ! நீயாக இல்லாமல் இருந்தால் “நான்” என்பது மறையும். குழந்தை மனது என்றால் என்ன ? குழந்தை மூன்று குணங்களோடு எப்போதும் இருக்கும். எப்போதும் மகிழ்ச்சி, சுறுசுறுப்பு, பிடிவாதம் முதலிய குணங்களோடு இருக்கும் ! இந்த குணங்களோடு கடவுளை நெருங்கு ! உழைத்து தர்மம் செய்து உன் லட்சியத்தில் பிடிவாதமாக இரு !
மகிழ்ச்சியான முக மலர்ச்சியோடு எதையும் நெருங்கு ! உன் பாதையை எளிதில் அடைந்துவிடலாம் ! குணங்கள் தான் உன்னை தீர்மானிக்கின்றது. நற்குணமும், நற்சிந்தனையும், கடவுள் பால் உன்னை நோக்க வைக்கும் !
மேலே உன் போல் மனிதர்கள் உண்டு ! இதை எல்லா ஞானியர்களும், சித்தர்களும் சொன்னதுண்டு ! என்ன அவர்களுக்கு வேலை என்று என்னிடம் கேட்கின்றான். மேலே மகிழ்ச்சி, ஆணந்தம், இன்பம் உண்டு ! அது எப்படி என்று என்னிடம் விளம்புகின்றான். மேலே உள்ளவர்கள் கீழே உள்ளவர்களை கண்காணிக்கும் வேலை. எல்லோரும் அதிகாரிகள்.
பூமியில் தான் கர்மா உண்டு ! இங்கே தான் மண், தானியம், அழுக்கு, துன்பம். மேலே இதை போன்று இல்லை. மண்ணின் அழுக்கு உன் மேல்பட்டால் தான் இங்கே வாழ முடியும் ! இங்கே மனிதர்கள் அனைவரும் கூலிகள். மேலே இருப்பவர் அதிகாரிகள். அதனாலே மேல் உள்ளவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். அதனாலே மேலே சொர்க்கம் என்று சொன்னேன் !
நீ மேலிருந்து கீழே வர ஆசை கொள்ளாதே. மீண்டும், மீண்டும் பிறக்க நினைக்காதே !
“இநன்யா நமோ நம” என்பது என்ன ? அதன் அர்த்தம் என்னவென்று கேட்கின்றான். இதில் நம என்பது என்ன ?
"நம" என்றால் எல்லாம் இதற்குள் என்று அர்த்தம் ! "நமம" என்றால் எதனிலும் இல்லை என்று அர்த்தம். கடவுள் உன்னோடு என்று அர்த்தம் ! இந்த நம என்ற சொல்லில் இருந்து தான் உப்பை நம என்றான். விதை இல்லாமல் உருவாகும் பயிர் உப்பு மட்டுமே !
உள் உணர் ! உண்மையை உணர்வாய் ! மனதை உளி கொண்டு செதுக்கி கடவுள் திருவடி சேர எப்போதும் நிலை கொள். உன் லட்சியம் மீண்டும் இங்கு பிறக்காமல் இருப்பது மட்டும் தான். உனக்குள் இருக்கும் உண்மையை உணர்ந்தால் உலகம் உனக்கு வசப்படும்.
என்னைத் தோண்டி விடை பெறு ! உண்மையை சொல்லப் போனால் பூமியில் உள்ள உறவுகள் எல்லாம் துன்பம் தான். ஆனாலும் நீ உணர வேண்டும் ! எப்போதும் தனித்திரு உன் புலன்களை விட்டு !
உன்னையே முதலில் நேசி !
நீயே அன்பானவன், அறிவானவன், அழகானவன். திறமைமிக்கவன் என்று ஆழ்ந்து நம்பிக்கையோடு நேசி ! எல்லாம் உனக்குள் மகிழ்ச்சியாகும் ! பின் மலர்வாய் புஷ்கரி போல !
நானே உன் ஆணந்தம் !
நான் இநன்யா !

Thursday, March 23, 2017

மனம், ஆழ்மனம் என இரண்டுண்டு.

மனம், ஆழ்மனம் என இரண்டுண்டு. இதில் மனம் சஞ்சலப்படக்கூடியது. இது புற வாழ்க்கைக்கு மட்டுமே லாயக்கானது. ஆழ்மனம் மட்டுமே ஆற்றல்களை பெறும் தகுதி வாய்ந்தது. இது மனதையும் கட்டுப்படுத்தும் சக்தி பெற்றது. இந்த ஆழ்மனதை நம் நெற்றிக்கண்ணுக்கு நிலையாக இருக்க முன் நிறுத்தினால் பல அதிசயத்தக்க நிகழ்வுகளையும் தகவல்களையும் தருவதோடு சித்த சாதனை செய்ய வைக்கும். ஆக இந்த ஆழ் மனதை நாம் முன்நிறுத்த முயற்சிக்கும்போது மனமானது பல இன்னலான கேள்விகளை கொடுத்தும் புதிய புதிய சந்தேகங்களை உண்டுபண்ணியும் ஆழ் மனதை செயல்பட விடாதபடி தடுக்கப்பார்க்கும். இந்த மனதை அமைதிப்படுத்த ஒரே வழி புற ஆசையை வெறுக்க வேண்டும். அல்லது ஒதுக்க வேண்டும். ஆசைகளிடம் மனம் போகாமல் மனதைக் கொண்டே மனதைக் கட்டுப்படுத்த வேண்டும். இதை செய்தால் மனமானது ஆழ்மனம் முன்வந்து ஆக்ஞா சக்கரத்தில் நிலைத்து நிற்க தடை செய்யாது. ஆழ்மனம் வந்து நின்றுவிட்டால் அதில் எந்த சக்தியை அழைத்தும் பேசமுடியும்.இதுதான் வாலை.
நீங்கள் எந்த சக்தியை நினைத்து தியானிக்கிறீரோ, எந்த உருவத்தை நினைத்து தியானிக்கிறீரோ, எந்த மந்திரத்தை நினைத்து தியானிக்கிறீரோ அவையெல்லாம் உங்கள் விருப்பம். ஆனால் ஆழ் மனம் ஆக்ஞா முன்வந்து நின்றால் மட்டுமே பலன்.
இன்னும் ஒரு உண்மையை சொல்லப்போனால் தெய்வ உருவம், யந்திரம், மந்திரம், விளக்கு பார்த்தல், கரும்புள்ளி பார்த்தல் எல்லாமே ஆழ்மனதை முன் நிறுத்தத்தான். யார் யாருக்கு எதன்மேல் பிரியமோ? எதன் மேல் ஆழ்ந்த நம்பிக்கையோ, எதை மனம் ஏற்கிறதோ அவையெல்லாம் ஆழ் மனதை பாதிக்காதவை ஆகும்.
எனவே ஆக்ஞாவில் பிடித்ததை வைத்து உற்று நோக்கும் போது ஆழ் மனம் அமர்ந்து நிலைத்து விடும். இந்த ஆழ்மனதால் மட்டுமே நெற்றிக்கண் திறக்க முடியும். ஆழ் மனதில் மட்டுமே தெய்வ சக்தியாகட்டும், அசுப சக்தியாகட்டும் எதுவுமே வந்து பேச முடியும். இதுதான் வாலையின் பரிபூரண இரண்டாம் நிலை அருளாகும்.
லிங்கேஷ்வரன்

என் மாரூஸ்தலி பயணம் வெகு தூரமில்லை ! தந்தஸில் சுகமாக மேழியில் அகமாக இருக்கின்றேன் ! என் பயணம்


என் மாரூஸ்தலி பயணம் வெகு தூரமில்லை ! தந்தஸில் சுகமாக மேழியில் அகமாக இருக்கின்றேன் !
என் பயணம்
கூர்ப்ப முழாசில் குறை இல்லா நான் இருக்கின்றேன் ! நீ எங்கிருந்தாலும் உனை ஆசிர்வதிப்பேன் ! ஆண்மாவுக்கு மதம், ஜாதி இல்லை ! அறிவு முடியும் இடத்தில் மதம் தோன்றுகிறது. மதம் என்பது அன்பில்லா செயல். அதிகார சொல் ! மதம் பிடித்த யானை போல மதத்தில் ஏறி நிற்கின்றான் மண்ணில் வீழப்போவது தெரியாமல் !
என் ஆண்ம பயணம் அவதார நோக்கம் இப்பிறவியில் முற்று பெற்றது. 10.07.1969 இல் மேலிருந்து வந்தேன் ! 25.04.1970 இல் என் கருவறையில் இருந்து இப்புவியில் அவதரித்தேன் ! 1982 இல் ஞானம் பெற்று 1986 இல் தந்தை இருக்கும் இடம் தேடி பயணித்தேன். 1993 இல் சந்தித்து, 1996 இல் செங்கோல் வாங்கி, 1999 இல் இநன்யா என்று திருநாமம் சூட்டி தேவர்கள் மகிழ பெற்றேன் !

என் தந்தை யுக சாம்ராஜ்ஜியத்தை சீர்படுத்த இந்த ராஜராஜன் இநன்யாவிற்கு கிரீடம் சூட்டி ஆசி தந்து என்னுள் இருந்து இயக்குவேன் என்று கட்டளையிட்டார்கள். 1999 இல் அன்னை வசியாவும் (லட்சுமி), 2003 இல் என் அன்னை நுண்வாவும் (சரஸ்வதி) எனக்கு மாயைகளாக என் பக்கத்தில் அமர்ந்து பாதுகாக்க கட்டளையிட்டார்கள். 2003 இல் மெஹட்டி எனும் தேவ வேத நாதத்தை என் கையில் கிடைக்க பெற்றேன்.
7.3.2015 இல் இநன்யா என்ற திருநாமம் யுகத்தில் காற்றில் பரவ அது தர்மாக்களுக்கு சென்று அடைய தேவர்கள் கட்டளையிட்டார்கள். 2017 ஜனவரி 17 முதல் என் சதுரங்க சேனாபடை உலகத்திற்கு ஞானத்தை சொல்ல புறப்பட்டது. நான் இருக்கும் இடம் செல்வ செழிப்பாகும் !
வடநாடு வாடும், தென்நாடு தாமரையாய் மலரும் இனி ! தாங்கவொனா, சோதனையும், சீற்றங்களும் இனி உண்டு ! பாலைவனத்தில் மழை பெய்யும் ! மிக நீண்ட காலமாக பூமியில் கிடைக்கும் திரவம் பொய்த்து போகும் இனி.
விஞ்ஞானம் கெடும். பஞ்சாங்கம் கெடும். இன்னும் பதினெட்டு வருடங்களில் உலகம் ஆதிகாலம் போல தோன்றும் ! காலையில் வியாதி மாலையில் மரணம் சம்பவிக்கும். புது புது நோய்கள் உருவாகும்.
என் பயணம் மேல் நோக்கி ! என் துணையாக நூற்றி பதினோறு கோடி முனிவர்கள் என் ஞான குலங்களை வழி நடத்துவார்கள் ! தர்மம் வெல்லும் ! மந்திரம் தோற்று போகும் ! இன்னும் நாற்பத்து எட்டு ஆயிரம் கோடி ஆண்டுகள் என் ஆண்மா இந்த யுகத்தில் இருக்கும்.
உனக்கு ஒரு வருடம் தேவர்களுக்கு ஒரு நாள் ! கணக்கெடுத்துப் பார் ! காலச் சக்கரம் புரியும் !
உணர்ந்து உவகை கொண்ட நான் என்ற இநன்யா படைத்தவன் பக்கத்தில் பருகி உணர்ந்தவன். அவன் பாத கமலங்களை பார்த்து அறிந்தவன். அடைந்தது பல பல ! அறிந்தது பல பல ! விரிந்தேன் நான் !
அகண்டமாய் விரிவேன் நான் !
எப்போதும் எழுவேன் ! உனக்கு துணை இருந்து கை தூக்கி கரை சேர்ப்பேன். என் கடையில் ஞானம் உண்டு ! உனக்காக கடை விரித்தேன்.
இந்த ஸ்தூல உடம்பில் என்ன இருக்கின்றது ? ஆண்மாவில் தான் எல்லாம் அடங்கி இருக்கின்றது ! என் ஆண்மா தினமும் பிரபஞ்ச வீதியிலே பயணித்து அங்கே நீராடி வருகின்றது. உணர்வாயோ ?
நீ உன் ஸ்தூல உடலை அழகென்று பிதற்றுகிறாய். கருவியை துரு பிடிக்காமல் பார்த்து கொள். அழகுபடுத்தி ஆணந்தம் தொலைக்காதே ! உன் பயணம் சுகமாக நான் துணை இருப்பவன் எப்போதும் !
நான் உன் முன்னால் நிற்கின்றேன் !
நான் இநன்யா !

இனி சிறுவிலை தான். பெரு நிலை அறிவான். பெருமைமிகு சூத்ரம் என் கையில் ! உண்மையில் நன்மை நானடா !




இனி சிறுவிலை தான். பெரு நிலை அறிவான். பெருமைமிகு சூத்ரம் என் கையில் ! உண்மையில் நன்மை நானடா !
படைத்தான் நன்றாக
என் தந்தை எனக்குரைத்தது, சகலமும் நான் தான் என்று !
முதலில் வேத நாதத்தை படைத்து பின் அண்ட சராசரங்களை படைத்தான் ! உயிர் படைத்தான் ! விதை படைத்தான் ! புணித நீரும் படைத்து காற்று என்ற ப்ரணத்தை தான் படைத்தான் ! விண்மீன்களையும், நட்சத்திரங்களையும், வெள்ளியையும், கோள்களையும் தான் படைத்தான். வெப்பத்தை தான் படைத்து அதை பக்குவமாக தான் வளர்த்தான். விதையின்றி பயிராகும் உப்பை தான் படைத்து, மரம் படைத்து, செடி கொடி படைத்து எண்ணற்ற ஜீவாராசிகளை தான் படைத்தான் ! கருவூல பெட்டகத்தில் பக்குவமும், பருவமுமாக காலத்தில் தான் படைத்தான் !
எண்ணற்ற ஜீவ கோடிகளை ஈன்றவன் என் அப்பன் ! அவன் என் இதய சாம்ராஜ்யத்திலே ! பாசத்தோடு என் இதய கருவறையிலே ! அவன் நிறை யாருக்கு உரைப்பேன் ?
எல்லா உறுப்புகளையும் மறை பொருளாக வைத்து செவிகளை மட்டும் திறந்து வைத்தான். ஏன் என்று உணர்வாயோ நீ ? எல்லா உறுப்புகளும் இரண்டு இரண்டாக வைத்து மூன்று உறுப்புகளை மட்டும் ஒன்றே ஒன்றாக வைத்தான். ஏன் என்று யோசி !
ரகசியத்தின் ரகசியமானவா ? என் அழகானவா ? ஏன் என்று அறியாமல், புரியாமல் வாழும் இந்த வம்பு பேசும் மானிட பதர்களை என்னவென்று சொல்வேன் ?

பசு, கழுதை, நாய், பறவைகள் இதற்கெல்லாம் வேதம் தெரிகின்றது. உன்னையும் தெரிகிறது. என்னையும் தெரிகிறது. எல்லாம் கற்றேன், எல்லாம் தெரியும் என்று விளம்பும் இந்த அற்ப மனிதனுக்கு மட்டும் தான் எதுவுமே புரியவில்லை. நான் ஏதென்று உரைப்பேன் ?
நான் என்பதை தன்னில் வைத்தான், நாயகன் உனை புரியாமல் ! நாம் என்று என்னுள் உன்னையும், என்னையும் அறியாமல் ! வாழ்வை தொலைத்தான். வசந்தத்தை அறுத்தான். வசந்தகாலம் நான் என்பதை புரியாமல்.
உன்னை மறந்துவிட்டான். என்னையும் மறந்துவிட்டான். புலம்பி திரிகின்றான். புத்தி கெட்டு போகும் வழி தெரியாமல் மூர்ச்சையாகி மூலையில் நிற்கின்றான் !
நம்பிக்கையின் அடித்தளம் உறவுகள் என்பதையும் மறந்தான். உறவுகளை புரிந்தால் உன்னை அறியலாம், பின் என்னையும் அறியலாம் என்ற புதிரை மறந்து அலைகின்றான்.
கடவுள் படைத்ததை வணங்காமல் மனிதன் படைத்ததை வணங்கி பாழ்பட்டு நிற்கின்றான். படைத்த வெப்பத்தை அக்னியாக்கி காலால் மிதிக்கின்றான். ஆனால் மனிதன் படைத்த மின்சாரத்தை தொட கூட முடியாமல் தவிக்கின்றான். பாவம் மனிதன் !
படைத்தவனை நினை !
நினைத்தால் இந்த ஆத்மத்தின் தலைவன் அறிய வைப்பேன். உருவ வழிபாட்டால் நூறு சத்ய மகான்கள் உருவாகினால் எனக்கு சந்தோஷம் ! உருவாகினால் வணங்கு ! இல்லையேல் யோசி !
உன்னை உணராமல் எதை வணங்கினாலும் பலன் ஒன்றுமில்லை ! பாதை தெளிவாக உணர முற்படு ! நான் போகின்ற போக்கில் உன் சுட்டு விரல் பிடித்து அழைத்து செல்ல காத்திருக்கின்றேன் , சூட்சுமம், சூத்ரமும் உனக்கு கற்று தர !
என் சொல் சத்யம் !
என் செயல் சத்யம் !
என் நாமமும் சத்யமே !
உணர்ந்து உவகை கொண்டவன் நான் !
நான் இநன்யா !

Wednesday, March 8, 2017

நான் எதிரிலி ! என் ஏற்றனை உனக்காக காத்திருக்கிறது ! எப்போது உணர்வாயடா ? தேடுகின்றேன்


Inanya Maha Munivar
 09-03-2017
நான் எதிரிலி ! என் ஏற்றனை உனக்காக காத்திருக்கிறது ! எப்போது உணர்வாயடா ?
தேடுகின்றேன்
பொல்லா உலகில் நல்லோரை தேடுகின்றேன். தர்மத்தின் சாயல் இருந்தாலும் கர்ம எண்ணங்களோடு உணர்வில்லா திரியும் கர்ம மனிதர்களையே யுகத்தில் நிறைய கண்டேன். நான் யுகத்தை மாற்ற வந்தேன். மனிதன் மாறுவான். போகின்ற வழி தெரியாமல் புத்தி பேதலித்து அலைகின்றான். நான் கைபிடித்து கரை சேர்க்க நினைத்தால் குழம்பி திரிகின்றான். மனம் நிறைய வஞ்சவ சாயல் வைத்து என் நாமம் சொல்கின்றான். தன் துன்பத்திற்கும், வீட்டில் உள்ள பிரச்சனைகளுக்கு கடவுளை குற்றம் சொல்லி காலத்தை விரயமாக்குகின்றான்.
எப்பொழுது தன் துன்பத்திற்கு தானே காரணம் என்று புரிந்து தெளிவடைகின்றானோ அன்றே மலர்வான். வாழ்வில் மாற்றம் காண்பான். மாரூஸ்தலி பயனம் எளிதாக்க இங்கே யாரும் அறிய முற்படவில்லை. என்ன உரைத்தாலும், ஏது கற்றாலும் ஏதோ விரக்தியில் வாழ்கின்றான். இறப்பும், பிறப்பும் புரியாது பேதலித்து வாழ்கின்றான். வாழ்வதா, சாவதா என்று புரியாமல் விரக்தியில் வாழ்கின்றான். துன்பத்தை எதிர் கொண்டு வாழ்வை எளிதாக்க இங்கே யாருக்கும் துணிவில்லை. கோழை போல வாழ்வை துறக்க நினைக்கின்றான்.
கோமாளியைப் போல வாழ்கின்றான். தன் குறை பார்க்காமல் பிறர் குறை தேடி புலம்பி திரியும் மானிடா, உன்னை எப்போது தேடுவாயடா ? தன் குடும்பம், தன் பொருள், தன் வீடு என்று சுயநலமாக வாழ்கின்றான். ஆனால் துன்பம் வந்தால் என்னை குறை சொல்லி திரிகின்றான்.
நான் அகண்டமாய் விரிகின்றேன் ! ஆளுமை என்னுள் இருப்பதை புரியாமலும் என்னுள் இருக்கும் ஞானத்தை எப்படி அடைய வேண்டும் என்று அறியாமலும் வாழ்கின்றான்.
தன்னம்பிக்கையும், தைரியமும் கொண்ட நூறு நல் ஆத்மாக்களை தேடிக் கொண்டிருக்கின்றேன். இந்த யுகத்தை நல் யுகமாக மாற்றுவேன். என் நூற்றி பதினோரு கோடி முனிவர்களின் துணையோடு என் சதுரங்க சேனா படை தலைமை ஏற்று சதிராட எதிர் நோக்குகிறேன். தைரியமும், தன்னம்பிக்கையும், விவேகமும், வேகமும் கொண்டவனை தேடுகின்றேன்.

உழைப்பும், தன்னம்பிக்கையும் இருந்தால் நிச்சயம் சாதிக்கலாம் ! சோர்வாய், விரக்தியில் இருப்பவனிடம் செல்வம் தங்குவதில்லை. வாழ்வின் பாதை தெரிவதில்லை.
நான் முற்றும் துறந்தவன் ! முழுமையின் வடிவம் நான் ! அரசு போல் ஆள்பவன், ஆல் போல தளைத்து வாழை போல் பிறருக்கு உதவும் எண்ணம் கொண்டவன். எனை அறிந்தவன் வாழ்வான் !
நீ நலமாக இருக்க தினமும் பிரபஞ்சம் சென்று என் அரசாங்கத்தில் முறையிடுகின்றேன். கோழை போல் வாழாதே ! உன் வீரியம் கல்லறை வரை இருக்கட்டும். உன் பெயரை வரலாற்றில் பதிய வை ! நீ முயற்சித்தால் நான் உனக்கு துணையாக வருகிறேன். ஆனாலும் வீரிய மிக்கவனையும், தன்னம்பிக்கை உள்ளவனையும் என் வாயிலில் நின்று எதிர் நோக்குகின்றேன்.
எப்போதும் விரக்தியோடு இறப்பை பற்றி நினைப்பவனை என் நெஞ்சில் நிறுத்துவதில்லை. என் தந்தை யாகவா தனது ஐம்பத்து நான்கு பிறவிகளிலும் நல்லோர்களை நான் காணவில்லை என்று சொன்னார்கள் ! ஆனால் நான் நல்லவர்களை தேடி கண்டுபிடித்து அவர்களிடம் காட்டுகிறேன் என்று 1999 இல் வாக்கு கொடுத்திருக்கின்றேன். நிச்சயம் நூறு வலிய, வீர , பராக்கிரம செயல் வடிவம் கொண்ட நல் ஆத்மாக்களை பார்ப்பேன் !
நான் சோதிக்க வரவில்லை. உன்னை சாதிக்க சொல்லவே வந்தேன் ! ஞானத்தை கொடுத்து உலகை மாற்றும் யுக்தியை சொல்லித் தர வந்தேன். வாய் மூடி, விழி மூடி, செவி மூடி, உன் மூடி எப்போது உணர்வாயடா ? மண் மூடி போகும் முன் என் மூடி எப்போது அறிவாயடா ?
உனை தட்டி எழுப்பவே இந்த யுகம் வந்தேனடா ! நான் தேடுகின்ற நல் ஆத்மாக்களில் நீயும் ஒருவனாக இருக்க ஆசைப்படு ! அத்தனை பேரின்பமும் உன் காலடியில் இருப்பதை உணர்வாய் !
நான் இநன்யா !

Wednesday, March 1, 2017

கூர்ப்பம் அறிந்தவன் சீடமணி வாழ்வை வைத்து மமதையால் வாழ்கின்றான், ஈன்றவளை தான் மறந்து ! மௌனம் ;;;


கூர்ப்பம் அறிந்தவன் சீடமணி வாழ்வை வைத்து மமதையால் வாழ்கின்றான், ஈன்றவளை தான் மறந்து !
மௌனம் ;;;;;;;
உலகில் மிக வலிமையான வடிவம் மௌனமே ! ஆனால் மௌனம் தெரியாது வஞ்சவம் எண்ணம் கொண்டு வாழ்கின்றான். மௌனம் என்பது வாய் மூடி இருப்பதில்லை. ஐம்புலன் அடக்குவதே மௌனம் ! அதுவே தியானம் ! யோகம் என்பது கடவுளை மட்டும் நினைப்பது அல்லாமல் மூச்சை நிறுத்தி மூடனாக திரிவதல்ல !
நான் எல்லாம் அறிய சிறு வயது முதல் மௌனமாக இருந்தேன். அற்ப சுகம் எல்லாம் அரை நாழிகை என்பதை புரிந்தேன். நான் யார் என்பதை அறிந்து உணர்ந்தேன். சிருஷ்ட பீஜம் என் வலக்கரத்தில் இருந்தும் மௌனமாக இருக்கின்றேன். மௌனம் தான் வலிமையானது !
என் மௌனம் காற்றை (உயிர்) நிறுத்தும் ! கடல் அலையை உசுப்பும் ! கரை தாண்டி சுழலச் செய்யும் ! சூறாவளியாய் இடி மின்னலாய் பொழிய வைக்கும் ! தர்மத்தை காக்கும் !
மௌனம் என்பது வாய் பேசாமல் இருப்பது அல்ல. ஏழு வீடு ஒன்பது வாசல் வைத்தான் ! அதில் ஐந்தை அடக்குவது தான் மௌனம். ஐந்தை அடக்க பழகினால் ஏழில் முற்று பெறும் ! பின் ஒன்பதில் நிலை பெற்று முக்தி தரும் ! முக்தி பெறும் சக்தி இருந்தும் தன்னை மறக்கின்றான். தனக்குள் கடவுள் தன்மை இருப்பதை மறந்து எண்ணற்ற பாவம் செய்கின்றான்.
மௌனம் எதையும் சாதிக்கும் ! ஆனால் கடவுள் துன்பம் கொடுத்து பக்குவப்படுத்தினால் மனிதன் கதறுகிறான். எல்லா சுகமும், நிம்மதியும் வேண்டும் என்று நினைக்கின்றான். இங்கே ஒன்றை இழந்தால் தான் மற்றொன்றை பெற முடியும் ! அடக்கி ஆள தெரியாதவன் ஆளுமை தேடுகின்றான். உயிர் நிலையை அறிந்து கொள்ளாமல் ஆண்ம நிலையை அறிய முயல்கின்றான்.

மூச்சுக்கும், மனதிற்கும் சம்பந்தம் உண்டு. எண்ணங்கள் குறுகினால், அற்ப ஆசையில் மூழ்கினால் மனம் வலிக்கும். வலி மூச்சில் உஷ்ணமாய் வெளியேறி தன்னை எறிக்கும். எத்தனை யோகா, தியானம் நீ செய்தாலும் உன் மனதை அடக்க முடியாது. ஒரு நல் குருவை தேடி சரணாகதி அடைந்து உணர முயன்று பார்.
வெட்ட வெளியில் பல பேர் கூடி மூச்சை இழுத்தால் மூடனாகத்தான் திரிவான். எல்லாம் ரகசியம் !
எந்த குரு உன்னை தனிமைப்படுத்தி உன் பற்றை நீக்கி, மௌன உணர்வை சொல்கின்றானோ அவனே நல் குரு ! குருவை அறிய கோடி தவம் வேண்டும் !
உன் பெற்றோர்கள் கடவுள் தருவது ! ஆனால் உன் குருவை நீ தேடி சென்று அடையப் பார் ! உன் தர்மம், சத்யம் சரியாக இருந்தால் குரு உனை தேடி வருவான் ! உன் மனம் ஒருவரை குருவாகவோ, கடவுளாகவோ ஏற்றுக் கொண்டால் எந்த இடையூறு வந்தாலும், இறுதி வரை நம்பிக்கையுடன் இரு ! இறப்பே வந்தாலும், சத்ய வழி மாறாமல் சாதிக்க பழகு. எல்லாம் நொடிப் பொழுதில் மாறிவிடும் !
ஏன், எதற்கு என்று கேளாமல் உன் துன்பத்தை எதிர் கொள்ள பழகு ! பின் குரு உனக்கு ஞானோபதேசம் செய்வார். கடவுள் குருவாய் வருவார். அதற்கு நீ குறையில்லாத உப்பை போல இரு !
சூரியனிலும், சந்திரனிலும் கரும்புள்ளி உண்டு. குறை உண்டு ! ஆனால் நீரிலும், உப்பிலும் குறை இல்லை ! முறையாக நீ உணர்ந்தால் குறையில்லா வாழ்வு குரு மூலம் தேடி வரும். புலன்களை கட்டவிழ்த்து கரை சேரா தவிக்கின்றான். கோபம் உன்னை கொல்லும். ஆதலால் மௌனமாக இரு !
மனதை ஒரு நாழி கூட வசப்படுத்த சொல்லித்தராதவன், தியானம், யோகா என்று கூட்டத்தை கூட்டி கூவுகின்றான், குறையான மனதை வைத்து கொண்டு !
கற்று கொடுத்தால் வராது கடவுள் நிலை. மௌனமாக இரு ! கடவுள் உன்னுள் கலந்து உறவாடுவார் !
உலகில் வலிமையான வடிவம் மௌனமே ! ஆதலால் மௌனமாக இரு !
மௌனி நான் !
நான் இநன்யா !