என் சிதாணந்தம் உனக்கு சீரான பாதையை, வாழ்வை எதிர் நோக்கும் வல்லமை தரும் !
உள்ளம் மகிழ யூகி !
மனதிற்கு அடிமையானவன் தான் உலகம் தீமையானது என்று புலம்புகின்றான். மனதிற்கு எஜமானாக இருப்பவன் உலகம் அழகானது என்று மகிழ்கின்றான். உலகம் அழகானது. அதன் மடியில் துயிலும் மனிதன் தான் அழகானவன் இல்லை. மனிதன் மனதிலே மகிழ்ச்சி உண்டு ! அவன் எண்ணங்களே அவனை மகிழ்ச்சியாக்குகின்றன !
ஒழுங்கில்லா கல்லை குத்தி, குடைந்து சீர்படுத்தி செதுக்குகின்றான். தன் துன்பம் தன்னை வணங்க வைக்கபடும் என்று அந்த ஒழுங்கில்லா கல்லுக்கு தெரிவதில்லை ! அதே போல் மனிதர்க்கு வரும் துன்பம் எல்லாம் முடிவில் அவனை செதுக்குகிறது. இங்கே வலி இல்லாமல் மகிழ்ச்சி இல்லை. ஒருவனை சோர்வடைய செய்வது ஆசை தான் ! ஆகவே ஆசை இல்லா வாழ பழகு !
உன் கடமையை செய்துவிட்டு நடப்பது நடக்கட்டும் என்று கடவுள் மீது பாரத்தை போடு ! நீ தப்பிக்க பெரிய வழி இது தான் !
கடவுள் திருவடியே இங்கு முதன்மையான செல்வம் ! நான் செல்வம் என்று குறிப்பிடுவது அதை தான் ! அத்தனை பேரின்பமும் அதனுள் அடக்கம். ஞானிகள் கடவுளின் திருவடியை தேடினார்கள். மிகுந்த மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள் ! ஆனால் மனிதன் வேறு எதையோ தேடி மகிழ்ச்சியை தொலைக்கின்றான்.
என்னை பின்பற்றினால் எல்லாம் கிடைக்குமா என்று கேள்வி விளம்ப கேட்டேன். நான் என்பது உன்னுள் உறங்கும் ஆண்மா ! என்னை தட்டி எழுப்பினால் சகலமும் உன் காலடியிலே ! என்னை பின்பற்ற குழந்தை மனதோடு இரு ! நீயாக இல்லாமல் இருந்தால் “நான்” என்பது மறையும். குழந்தை மனது என்றால் என்ன ? குழந்தை மூன்று குணங்களோடு எப்போதும் இருக்கும். எப்போதும் மகிழ்ச்சி, சுறுசுறுப்பு, பிடிவாதம் முதலிய குணங்களோடு இருக்கும் ! இந்த குணங்களோடு கடவுளை நெருங்கு ! உழைத்து தர்மம் செய்து உன் லட்சியத்தில் பிடிவாதமாக இரு !
மகிழ்ச்சியான முக மலர்ச்சியோடு எதையும் நெருங்கு ! உன் பாதையை எளிதில் அடைந்துவிடலாம் ! குணங்கள் தான் உன்னை தீர்மானிக்கின்றது. நற்குணமும், நற்சிந்தனையும், கடவுள் பால் உன்னை நோக்க வைக்கும் !
மேலே உன் போல் மனிதர்கள் உண்டு ! இதை எல்லா ஞானியர்களும், சித்தர்களும் சொன்னதுண்டு ! என்ன அவர்களுக்கு வேலை என்று என்னிடம் கேட்கின்றான். மேலே மகிழ்ச்சி, ஆணந்தம், இன்பம் உண்டு ! அது எப்படி என்று என்னிடம் விளம்புகின்றான். மேலே உள்ளவர்கள் கீழே உள்ளவர்களை கண்காணிக்கும் வேலை. எல்லோரும் அதிகாரிகள்.
பூமியில் தான் கர்மா உண்டு ! இங்கே தான் மண், தானியம், அழுக்கு, துன்பம். மேலே இதை போன்று இல்லை. மண்ணின் அழுக்கு உன் மேல்பட்டால் தான் இங்கே வாழ முடியும் ! இங்கே மனிதர்கள் அனைவரும் கூலிகள். மேலே இருப்பவர் அதிகாரிகள். அதனாலே மேல் உள்ளவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். அதனாலே மேலே சொர்க்கம் என்று சொன்னேன் !
நீ மேலிருந்து கீழே வர ஆசை கொள்ளாதே. மீண்டும், மீண்டும் பிறக்க நினைக்காதே !
“இநன்யா நமோ நம” என்பது என்ன ? அதன் அர்த்தம் என்னவென்று கேட்கின்றான். இதில் நம என்பது என்ன ?
"நம" என்றால் எல்லாம் இதற்குள் என்று அர்த்தம் ! "நமம" என்றால் எதனிலும் இல்லை என்று அர்த்தம். கடவுள் உன்னோடு என்று அர்த்தம் ! இந்த நம என்ற சொல்லில் இருந்து தான் உப்பை நம என்றான். விதை இல்லாமல் உருவாகும் பயிர் உப்பு மட்டுமே !
உள் உணர் ! உண்மையை உணர்வாய் ! மனதை உளி கொண்டு செதுக்கி கடவுள் திருவடி சேர எப்போதும் நிலை கொள். உன் லட்சியம் மீண்டும் இங்கு பிறக்காமல் இருப்பது மட்டும் தான். உனக்குள் இருக்கும் உண்மையை உணர்ந்தால் உலகம் உனக்கு வசப்படும்.
என்னைத் தோண்டி விடை பெறு ! உண்மையை சொல்லப் போனால் பூமியில் உள்ள உறவுகள் எல்லாம் துன்பம் தான். ஆனாலும் நீ உணர வேண்டும் ! எப்போதும் தனித்திரு உன் புலன்களை விட்டு !
உன்னையே முதலில் நேசி !
நீயே அன்பானவன், அறிவானவன், அழகானவன். திறமைமிக்கவன் என்று ஆழ்ந்து நம்பிக்கையோடு நேசி ! எல்லாம் உனக்குள் மகிழ்ச்சியாகும் ! பின் மலர்வாய் புஷ்கரி போல !
நானே உன் ஆணந்தம் !
நான் இநன்யா !