இநன்யா ;;; INANYA NAMOO NAMA ;;; நான் யுகத்தில் அவதரித்த புணித தாமிரபரணி ! புண்ணியம் தரும் செல்வ நதி,
47 .இநன்யா நமோ நம.. !!INANYA NAMOO NAMA ;;;
நான் யுகத்தில் அவதரித்த புணித தாமிரபரணி ! புண்ணியம் தரும் செல்வ நதி, நெல்லை சீமை நித்தம் நெல் விளையும் பூமி. நீர் இல்லையேல் நீ இல்லை. நீ இல்லையேல் நான் உண்டு. உணர் ஞானமிருந்தால் !
பொன் தினிந்த பொருநை நதி
தாமிரபரணி எனும் புணித நதி. என் ஸ்பரிஷம் கலந்து உறவாடி தமிழோடு கலந்து ஓடும். தென் பொதிகை சாரல் அடித்து தினம் தினம் மெருகேறி தாமிரமாய் மின்னும் ! எனை தாலாட்டி என் ஸ்தூல உடம்பை சுத்தபடுத்தி புணிதனாக்கிய பொன் தினிந்த பொருநை நதிக்கரையில் பூமியை கட்டி காக்கும் நோக்கத்தோடு புணிதனாக அவதரித்தேன் ! நான் அவதாரம் எடுத்து வரவில்லை. நான் சுயம்பு ! காற்றில் ஜணனமாகி பிறப்பெடுத்தேன் ! நான் அவதாரம் கொடுப்பேன் !
இருபுறமும் வயல்வெளி ! இறுமாந்து கிடக்கும் நெல் மணிகள் ! நான் இல்லை என்றால் நீ இல்லை என்று சொல்லி ஆடும் நெற்கதிர்கள் ! என்னால் எல்லோர்க்கும் நன்மை என்று துள்ளி குதித்து சந்தோஷமாக ஓடும் புண்ணிய நதியான பொருநை நதி ! தாமிரம் கலந்து ஓடும் இனிய நதியில் குளித்து ஆணந்தமாக வளர்ந்தேன் நான் ! அதன் கரையில் ஆசையாய் பிறப்பெடுத்தேன். சிறு வயதில் கழுதை மேல் உட்கார்ந்து இருபுறமும் நெற்கதிர்கள் தாலாட்ட ஆகாய தாமரையோடு நொங்கும், நுரையுமாக வரும் புணித நதியில் குளிப்பேன். ஆணந்தம் எனக்குள்ளே ! அனைவருக்கும் தான் ! புணித பசுக்களை குளிப்பாட்டி அங்கே நெடிந்து நிற்கும் ஆலமரத்தின் அடியில் உட்கார்ந்து அளவிலாது சித்தர்களோடு பேசிக் கொண்டிருப்பேன் பேராணந்தமாய் !
என்னை பற்றி தர்மாக்கள் பேச ஆரம்பிக்கும் போது உன்னை பற்றியும் உலகத்திற்கு சொல்வேன் என்று தாமிரபரணி நதியில் குளிக்கும் போது எப்போதும் அதனிடம் சொல்லிக் கொண்டிருப்பேன் ! அதன் அருமை தெரியாமல் பிணம் மிதந்து செல்லும் நீரில் குளிப்பதற்கு வடக்கே ஓடுகின்றான் மனிதன்.
கையில் வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்யை தேடுபவனிடம் என்னவென்று சொல்ல ? அந்த ஞானம் தரும் சத்திய நதியை பற்றி உலகம் தெரிந்து கொள்வதற்காகவும், அதன் சத்தியத்தை காப்பாற்றவும் தாமிரபரணி நதியின் பெருமைகளை இப்பொழுது எழுதினேன் !
முன் நாட்களில் குளிக்கும் நதியே குடிக்கும் நீரானது. இப்பொழுது கழிவு நீரை கலந்து புண்ணிய நதியை மாசுபடுத்துகின்றான் கொடிய மனிதன். நான் அதை மீண்டும் தெளிவு நீராக்குவேன்.
நான் பிறந்த ஊர் நெல்லை சீமை தாமிரபரணி நதிக்கரையில் இருக்கும் திருபுரம் ! என் தாய் பிறந்த ஊரும் இதுவே ! தாமிரபரணி நதியில் குளித்து பாவம் தீர்த்து தவம் இருந்து என்னை பெற்றாள் என் தாய் ! கண்ணுக் கெட்டிய தூரம் பார்த்தால் மணப்படைவீடு என்ற ஊரின் பக்கத்தில் இருக்கும் வெள்ளிமலை தெரியும். அந்த மலைக்கு எருமை மாட்டின் மேல் உட்கார்ந்து சென்று வருவதுண்டு.
நதியின் பக்கத்தில் மிகப் பெரிய ஆலமரம் உண்டு. அதன் நடுவில் தீப்பாச்சியம்மன் என்ற தேவதை குடி கொண்டுள்ளது. நான் எப்போது வருவேன் என்று காத்திருந்து என்னை நதியின் கரைக்கு அழைத்து செல்லும் அந்த தேவதை. அந்த சிறு பிராயத்தில் நான் குளித்து கரை ஏறும் வரை, பசுக்களும், கழுதையும், தேவதைகளும், பரிவாரங்களும் கரையில் எனக்காக காத்திருப்பதுண்டு. மிருகங்களுக்கும், தேவதைகளுக்கும் என்னை தெரியும். உனக்கு தான் என்னை யார் என்று தெரியவில்லை.
எங்கேயும் தனித்தே செல்வேன், தனித்தே இருப்பேன். என் செயல்கள் மற்றவர்களுக்கு வியப்பை தரும்.
பொருநை நதி என்னும் தாமிரபரணி நதிக்கரையில் பிறந்தேன் ! திருச்செந்தூர் எனும் திருசீரலவாயில் வளர்ந்தேன் ! அதன் பக்கத்தில் சிரவன் என்னும் முருகன் தன் மனைவி வள்ளியோடு தங்கி சென்ற ஒரு குக்கிராமம் உள்ளது. செட்டி மாநகர் என்பது அதன் பெயர். செட்டி என்றால் பவித்ரமான அழகு என்று பெயர். சிரவன் என்ற முருகனுக்கு செட்டி என்று பெயர். அந்த வீரத் தமிழன் நான் வளர்ந்த கிராமத்தில் தன் மனைவி வள்ளியோடு தங்கி சென்றதால் அவன் பெயரால் உருவாகியது. அங்கே பதிமூன்று வயது வரைக்கும் வளர்ந்தேன். நீருக்கு கஷ்டப்பட்டு கொண்டிருப்பார்கள் என் கிராம மக்கள். மழை வந்தால் ஊருக்கு பக்கத்தில் ஊருணி என்ற புணித நீர் நிலை நிறைவதுண்டு.
அதன் பக்கத்தில் இருக்கும் பாறையில் சிரவன் தன் மனைவி வள்ளியோடு தங்கி சென்ற அடிச்சுவடு தெரியும். அந்த ஊருணியில் வலம்புரி சங்கு சத்தத்தை நிறைய மனிதர்கள் கேட்டதாக ஆச்சரியத்துடன் சொல்வதுண்டு ! ஆனால் யாரும் இதுவரையில் பார்த்ததில்லை. மதியம் யாருமில்லா நேரத்தில் நான் அங்கு சென்று வருவேன். அந்த வலம்புரி என்னை கண்டவுடன் நீரில் இருந்து எழும்பி ஆணந்தமாக ஓசை எழுப்பும் ! இதை நான் தினமும் பார்ப்பேன் !
மனிதன் செத்த சங்கை ஊதி திசை தெரியா அலைகின்றான். மனிதன் ஊதுகின்ற சங்கு ஊருக்கு மட்டுமே ! நான் ஊதுகின்ற சங்கு உலகத்திற்கே கேட்கும் ! உணர் ஞானமிருந்தால் !
இப்போது என் கிராமத்தில் நீர் பஞ்சம் தீர்ந்துவிட்டது. நான் பிறந்த தாமிரபரணியின் புணித நீர் என் கிராமத்திற்கு வருகிறது. ஒரு காலத்தில் நீருக்கு பஞ்சமான என் கிராமம் இப்பொழுது செழித்து சிறந்து எங்கேயும் மரங்களுடன் கண்ணுக்கு குளிர்ச்சியாக ஆணந்தமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றது. என் கிராம மக்கள் இதை நினைத்து பார்த்திருக்கமாட்டார்கள். நான் எப்போதும் சொல்வேன் நான் இருக்கும் இடம் செல்வ செழிப்பாக மாறும் என்று. ஏனென்றால் பிரபஞ்ச நாயகி என் அன்னை லக்ஷ்மி என் நெஞ்சில் !
இப்பொழுது என் அவதார நோக்கம் முற்று பெறுவதற்காகவும், என் கடமையை செய்வதற்காகவும் காரண காரியத்தோடு சென்னை எனும் புணித பூமியில் (காஞ்சி மாவட்டம்) வந்தேன்.
நான் பிறந்தது ஓர் இடம் ! வளர்ந்தது ஓர் இடம் ! வாழ்வது ஒர் இடம் !
வந்தேன், வென்றேன் சென்று கொண்டிருக்கிறேன் !
வாழ்வில் உன் பிறவி பயன் தெளிவாக தாமிரம் கலந்து பாயும், பாவத்தை தீர்க்கும், தெற்கில் இருந்து வடக்கு நோக்கி பாயும் தாமிரபரணி நதியில் ஒரு முறையாவது நீராடிப் பார் ! ராமனும், கிருஷ்ணனும், சிரவனும், இயேசுவும், அகத்தியனும் குளித்த தாமிர பரணி எனும் புண்ணிய நதியில் மூழ்கி பாவங்களை கரைத்து விடு !
ஆயிரம் தடவை கங்கையில் குளிப்பதும் ஒரு தடவை தாமிரபரணியில் குளிப்பதற்கு சமம். அதில் குளித்து பாவம் கரை ! நான் உனக்கு மீண்டும் பிறவி பிறவா நிலை தருவேன்.
நீ இருக்க உன்னை கழுவும் நீரையும், நீ இறக்க உன்னை கழுவும் நீரையும் எப்போதும் மறந்துவிடாதே. அதை வணங்கு !
நீராய் நானிருக்கின்றேன் என்பதை ஒருபோதும் மறவாதே !
முன்னால் வட நாடு வாழ்ந்தது. தென் நாடு தேய்ந்தது. இப்போது இந்நாள் 04.03.2015 முதல் வடநாடு வாடும். தென் நாடு தாமரை போல் மலரும். உன்னையும் மலர வைப்பேன் நீ உணர்ந்தால் !
இந்த புணித தமிழ்நாட்டில் பிறப்பதற்காக தவம் செய்தவன் நீ ! பன்னாட்டு மன்னர்கள், மக்கள், சித்தர்கள் தேடி வருவார்கள். இங்கே வாழ ஆசைப்படுவார்கள் ! தமிழ்நாடு தானிய கிடங்காக மாறும் ! அசுர எண்ணம் கொண்டவர்களை வேறோடு பிடுங்கி எறிவேன் !
இந்தியா என்ற ஞான பூமி இனி உலகை வழி நடத்தும் ! தமிழ் உலகம் எல்லாம் போற்றப்படும். செல்வ செழிப்போடு இருக்கும் மேலை நாடுகள் எல்லாம் மேத விலாசம் இல்லாமல் போகும் ! உலகில் தோன்றிய முதல் மொழி மூத்த மொழி அமிழ்த மொழி தமிழ் இனி வாழும் ! தமிழன் உலகை ஆள்வான். இனி தர்மாக்கள் வாழும் ஞான பூமியாக தமிழகம் மாறும் !
மாரியை பொழிய வைப்பேன் ! நான் என்றும் மாறாதவன் என்பதை புரிந்து கொள் ! திறன் இருந்தால் உடனே தெளிந்து விடு !
பொன் தினிந்த பொருநை நதிக் கரையில் அவதரித்தவன் சொல்கிறேன். நான் உனை தெளிவாக்குவேன். என் சொல் வெல்லும் !
வெற்றி திருமகன் இநன்யா !
No comments:
Post a Comment