நான் எல்லோரையும் நேசிக்கிறேன் ! நான் ஆணந்தமாக இருக்கிறேன் ! நீ எதிர்பார்த்து யோசித்து நேசிக்கிறாய். ஆதலால் நீ சந்தோஷமாக இல்லை.
நேசி !
அவதானி ( வேதம் அறிந்தவன் ) நான் ! ஆளும் வல்லமை உள்ளவன் நான் ! கருவறை காப்பவன் நான் ! உனை கண்ணின் மணியாய் காக்க வந்த கருணைமிக்கவனும் நான் !
தீமையை செய்பவன், தீய எண்ணம் கொண்டவன், பயணில்லாதவன், பெற்றோர் சொல் கேளாதவன், பெரியோரை மதிக்காதவன், கட்டிய மனைவியை துன்புறுத்துபவன், என்னை உணரமாட்டான் ! இந்த ஞானமில்லா மூடர் கூட்டம் எப்போதும் துன்பத்தில் துவழும். வஞ்சனை எண்ணம் கொண்டு பிறரை வசைபாடும்.
நல் கர்மா தான் எதிர்காலத்தை அறியும் ஊடகமாக செயல்படும். நான் அவன் உள்ளிருந்து ஊக்குவிப்பேன். எதுவும் இங்கு எளிமையாக கிடைப்பதில்லை. முதலில் உன் பாதையை செம்மைபடுத்தி கொள். உனக்கு ஒரு வழியை ஏற்படுத்திக் கொள். அதில் வரும் கஷ்டத்தையும், நஷ்டத்தையும் வேறறுக்க கற்றுக் கொள் !
ஞானம் அடைந்தவன் எப்போதும் சிரித்துக் கொண்டிருப்பான் ! எதையும் இழக்கவில்லை என்று உணர்வான் !
உனக்கு பூமியிலே கிடைத்த பொருள், கடவுள் கொடுத்த பொருள் ஒன்றே ஒன்று தான். உன் மனைவி மட்டுமே !
அவளாலே நீ ஞானம் அடைய முடியும். தாய், தந்தைக்கு நீ கிடைத்தாய். உனக்கு உன் மனைவி கிடைத்தாள் ! நீங்கள் இருவரும் சேர்ந்து உங்கள் பாவம் கிடைத்தது. அதனாலே பெண்ணை அறிய முற்படு !
உன் வலபக்க விளா எலும்பை (சுஹஸ்) வார்த்தெடுத்து உயிர் கொடுக்கப் பெற்றவள் உன் மனைவி. அதனாலே எலும்பும், சதையாக இருக்க படைத்தான். உன் உள் உணர்வு பெண் ! பெண்ணை புரிந்தால் யோக நிலை பெறுவாய் ! எண்ணற்ற சூட்சுமம் படைத்தான் பெண்ணில் ! நீ எதை தேடுகிறாய் அவளிடம் ?
கடவுள் என்று சொல்வதற்கே இங்கு அருகதை வேண்டும். நீ படைத்தவனை நோக்கி கல் எறிகிறாய். படைப்பின் ரகசியம் உணர். அதன் அழகை உணர். நீ பேசுவதனால், ஏசுவதனால் அவனை நித்திப்பதனால் ஏதும் பயனில்லை ! உனக்கு தான் நஷ்டம். நதியில் குளிக்காவிட்டால் நதிக்கு நஷ்டமில்லை. குளிக்காவிட்டால் உனக்கு தான் நஷ்டம் !
இநன்யா யார் என்று கேட்கிறான் !
நீ யார் ?
உன் பெற்றோர் யார்?
நண்பர்கள் யார் ?
உன் குழந்தைகள் யார் ?
யார் என்று புரியாதவன் என்னை யார் என்று கேட்கிறான். நீ யார் என்பதே உனக்கு தெரியாது. பின் நான் யார் என்று உனக்கு எப்படி தெரியும் ?
இரவில் தூங்கி பகலில் கண் விழிப்பாயா என்று உனக்கு தெரியாது. இரவு முழுவதும் தூங்காமல் உனை கண்கானிக்கின்ற இந்த இநன்யா யார் என்று கேட்கின்றாய் ! நான் அணுவுக்குள் அணுவானவன் ! நான் ஆளும் ஆண்மாவுக்கு சொந்தக்காரன். என்னை புரிந்தால் நீ துக்கத்தோடு வாழமாட்டாய். எறும்புக்கு கூட எனை தெரியும். உனக்கு தான் தெரியவில்லை. எறும்பு புற்றில் நான் நின்றால் அவைகள் என்னை கடிப்பதில்லை. என் அன்பு விசாலமானது. எல்லாம் என் அன்பில் ஒன்றிப் போகின்றது !
நீ உயிருடன் இருக்கும் போது உன்னை கடிக்கும் எறும்பை அடித்து கொல்கிறாய். நீ இறந்த பின் உன் உடலை அரிக்கும் கரையானை என்ன செய்யப் போகின்றாய் ?
ஒவ்வோன் ஒன்றும் பாராது செய்யோன். வய்யோன் வான் கொடை வல்வில்லோன். மேத விலாசத்தில் மெய்யோன் நான் என்பதை உணர் ! அகார உப்பு, மகார உப்பு, உகார உப்பு மண்ணில் கலந்து உன்னில் வைத்தேன். உப்பறியா, உணர்வறியா உனை நான் என்ன சொல்வேன் ?
கவி, புலமை, தத்துவம் இதை பதினொன்று உட்பிரிவுகளாக பிரிக்கலாம் !
கவி என்றால் நட்சத்திரம் !
புலமை என்றால் காற்று !
தத்துவம் என்றால் தரை !
இந்த மூன்றும் படைத்த சூட்சும புணித பொருளில் உள்ளது. அதை உணர்ந்துவிட்டாலே உன்னை அறிந்துவிடலாம்.
இவ்வுலகில் உள்ள அனைத்தும் சூரிய ஒளி, காற்று, நீர் , தரையின் உதவியால் விளைகின்றன. நட்சத்திரம், காற்று, தரையின் உதவியால் விளையும் பொருள் ஒன்று உள்ளது ! இதை தேடி கண்டுபிடி ! நீ ஞானியாவாய் !
நீ என்பது இந்த அழுகும் உடல் அல்ல ! உன் உயிர் !
உன் உயிர்க்கு உதவுவது அன்பு, பாசம், தர்மம் ! அற்ப நொடியில் கிடைக்கும் ஆணந்தத்தை நினைத்து சந்தோஷப்படுகிறாய்.
உணர்வுகள் சொரியும் உடம்பின் சுகத்தை பெரிதாக நினைக்கிறாய். ஆண்மாவின் ஆணந்தத்தை உணர் ! ஆயுள் முழுவதும் ஆணந்தமாக வாழலாம் !
சித்திரத்தால் ஏது பயன் ? சிற்பத்தால் ஏது பயன் ?
அதை தீட்டியவனுக்கு பயன் ! அதை செதுக்கியவனுக்கு பயன் !
நீ அதை வணங்கி ஏது பயன் ?
பயன் உன் தாய், தந்தை காலடியில் இருக்கின்றது ! அந்த மணி மகுடங்களை உன் தலையில் வைத்து கொண்டாடு ! இந்த இநன்யா உன்னை என் நெஞ்சத்தில் வைத்து ஆணந்தப்படுவேன் !
உன் அற்ப உடலை சிந்திக்க செய் ! நேசி ! நேசிக்க கற்றுக் கொள் !
எல்லாம் உன்னை நேசிக்கும். நேசிக்க, அன்பு காட்ட காசு, பணம் தேவையில்லை. உன் மனதிற்கு எல்லை போடாதே ! நான் எல்லோரையும் நேசிக்கிறேன். ஆணந்தமாக இருக்கிறேன். நீயும் நேசி ! நிலத்தில் நிம்மதியோடு வாழ்வாய் !
அன்பில் ஆணந்தம் நான் !
நான் இநன்யா !
No comments:
Post a Comment