பாமினியை உணராதவன் காமினியில் லயித்தான். கிருகினியை அறியாதவன் அவளே இராக்கினி என்பதை புரியாமல் அலைகிறான். தும்பினி வாழ்வு கூட அர்த்தம் உண்டு . ஏனடா உணரவில்லை ?
பெண் என்ற சூட்சுமம்
தூமையில் (தூய்மை) துயர் உண்டு என்று சுடர் விட்டு எறியும் பெண் என்ற பெருவிளக்கை (ஒளி) அணைத்து சுகம் கண்டான் ஆளுமை இருப்பதாக நினைக்கும் ஆனந்த உணர்வில்லாதவன்.
ஆணவம் தலைக்கேறிய ஆளுமையில்லா மனிதன் ஆல் போல் விரியும் பெண்ணை அடிமைபடுத்தினான். பெண் தீட்டு என்று மூலையில் முடங்க வைத்தான். ஆனால் பெண் தான் தவம் என்று புரியாமல்.
ஆதியிலே சித்தர்கள் பெண்களை இழிநிலையாய் எழுதினார்கள். அசுர, ராட்ஷச வர்க்கத்தால் பயமுறுத்தப்பட்டு எழுத வைத்தார்கள்.
மாதத்தில் அந்த மூன்று நாட்கள் புணிதமானவை ! அந்த மூன்று நாட்களில் என்ன நினைத்தாலும் நடக்கும். பெண்ணுக்கு பயந்து தான் ஒதுக்கி வைத்தான். கோயிலுக்கு செல்லகூடாது என ஒதுக்கி வைத்தான். எந்த கோயிலுக்கும் அந்த நேரத்தில் பெண் சென்று மனம் நிறைந்து அந்த இடத்தில் சாபம்விட்டால் கோயில் எல்லாம் தரைமட்டமாகிவிடும். அதனாலேயே கோயிலுக்குள் செல்லக் கூடாது என்று முடக்கினான்.
அந்த மூன்று நாட்களில் எந்த வேலையும் செய்ய கூடாது என்றும் , அவளுக்கு கர்மம் செய்து அவள் மனம் வலித்து சாபமிட்டால் அந்த வீடு நலம் பெறாது என்பதற்காக பயந்து விலக்கி வைத்தான். இந்த சூட்சுமம் தெரியாமல் அவளை தீட்டு , ஒதுக்கப்பட்டவள் என்றான்.
இராமயண கதாபாத்திரத்தில் அந்த மூன்று நாட்களில் தான் சீதாவை இராவணன் கடத்தி சென்றான். அவள் விட்ட சாபம் இலங்கையை, இலங்கேஸ்வரன் கோட்டையை தவிடு பொடியாக்கியது.
மஹாபாரதத்தில் அந்த மூன்று நாட்களில் தான் அரசபைக்கு அழைத்து அவமானப்படுத்தப்பட்டாள் திரௌபதி ! கௌரவர் கோட்டையே சின்னபின்னாமாகியது.
கண்ணகி அந்த மூன்று நாட்களில் தான் அரசனை எதிர்த்து சாபமிட்டாள். மதுரை எறிந்தது ! மன்னன் மாண்டான் என்று கதை படித்தாய்.
உண்மையில் இது தான் உண்மையடா !
பெண் சாபமே இங்கு பெறும் பீடையாக நாட்டை வறுமைக்கு தள்ளுகிறது.
ஆதலால் பயந்தே கோயிலுக்கு வரக்கூடாது என்று நினைத்தார்கள். அதை மறைத்து பெண்ணை கொச்சை படுத்தி ஒதுக்கி வைத்தான்.
இங்கே இயக்குபவனை விட இயக்கும் பொம்மைகளுக்கே மதிப்பு அதிகம். அதே போல் படைத்தவனைவிட பாழ்பட்ட மனிதனையே வணங்கி வாழ்வை தொலைக்கின்றான். எல்லாம் இங்கு பொய்யடா. எப்பொது உணர்வாயடா ?
பெண்ணின் தீட்டை தின்று சிசுவாகி உடல் வளர்த்தாய் கருவறையில் ! அந்த புணித பாவையை எப்போது அறிவாயடா ! கூத்தை பார்த்து கோமாளியாக அலைகின்றான். கூத்தும், நடனமும், நாட்டியமும் பொய்த்து போக கண்டேன். கடவுளின் கூத்தை அறியாமல் ஏதோ நாடகம் நடத்துகிறான். இனி தெரு தெருவாக கூத்து நடத்துவான்.
காற்றின் இசை, பறவை , மரங்களின் இசையை உணராதவன் மனிதன் இசைக்கும் இசையில் மதிமயங்கி போனான். மானமிழந்து, மதியிழந்து அநாகரீகமாக பெண்களை வைத்து கூத்து நடத்தும் உன் கோமாளித்தனத்தை என்ன சொல்வேன் ?
இனி மாறும், எல்லாம் மாறும். பெண் இனி மாறுவாள். புயலென பொங்கி எழுவாள். சத்தியம் நிலைநாட்டப்படும். பெண் உலகை ஆட்சி செய்ய ஆயுத்தமாவாள். பின்னால் இருந்து இயக்கும் ஆண் என்ற பொம்மையை இயக்கும் பெண் இனி முன்னால் வருவாள்.
முறை தவறும் கலாச்சரம் மாறும். பண்பாடு நிலைக்கும். பாரம்பரியம் வளரும் !
தூய்மை பொருந்திய பெண்ணே முதன்மையானவள் ! பெண்ணே போற்றுதலுக்குரியவள் !
உலகில் சக்தி வாய்ந்த மூன்று நாடுகளை பெண்கள் ஆள்வார்கள். சட்டதிட்டம் மாறும். இந்த இநன்யாவின் சாம்ராஜ்ஜியத்தில் பெண் என்ற ஞானமலர்கள் ஆட்சி செய்வார்கள் !
பெண்ணை மலர் என்றான், ஏன் என்று கண்டுபிடி !
கடவுளை, அவதாரங்களை, மகான்களை சுமக்கும் கருவறை எப்போதும் மேன்மையானது தான் !
போற்றிப் பாடடா ! நீ புணிதனாவாய். மீண்டும் பிறக்கமாட்டாய் !
பெண்ணே தவம் !
நான் தாயினும் மேலானவன் !
நான் இநன்யா !