கடவுளின் அருகில் அமர்ந்து அவர் முகத்தைப் பார்க்க என்ன தவம் செய்தேனோ என்று தெரியவில்லை. என் அலுவலக வேலையை விரைவில் முடித்துக் கொண்டு அவரிடம் பேச அமர்ந்துவிடுவேன். அவர் சொல்லியதை எழுத ஆரம்பித்துவிடுவேன். அவரிடம் பேசும் பொழுது என் கைக் கடிகாரத்தை கழற்றி விடத் தோன்றும். லோகத்திலும் யுகத்திலும் கால வேறுபாடுகளை அறிவேன். அவர் பேசும் பொழுது அவரின் வார்த்தைகள் மட்டும் தான் கேட்கும். வேறு எதுவும் நினைவில் நிற்காது ! ஆகாயத்திற்கு சென்று வந்தது போல் இருக்கும். காலணிகள் அணிவது சிரமமாக தோன்றும். பசி சற்றும் ஏற்படாது. உயிருக்கு உணவளிக்கும் பொழுது உடல் உண்ண மிகவும் சிரமப்படும். மதிய உணவு இடைவேளியின் பொழுது அவருடன் உண்ணுவது மிகவும் சிரமமாக தோன்றும். வீட்டில் மூன்று நிமிடங்கள் உண்ணும் உணவை அவருடன் அமர்ந்து உண்ணும் பொழுது 30 நிமிடங்கள் வரை ஆகும்.
அவரின் செயல்கள் அனைத்தும் அதிசயமாகத் தோன்றும். பல பறவைகள் அவரின் இருப்பிடம் வந்து பேசிச் செல்வதை கண்ணால் கண்டுள்ளேன். அணில்களும் அவரிடம் வந்து உணவருந்திவிட்டு செல்லும். பசுக்களும் , நாய்களும் வீட்டிற்கு படையெடுக்கும். அனைத்து ஜீவராசிகளுக்கும் அவர் யார் என்று தெரியும். இரண்டு நாட்களாக ஒரு அரிய வகை குருவி அவர் இருப்பிடம் நோக்கி வந்து கூச்சலிட்டுக் கொண்டே இருக்கிறது. மக்கள் நடமாட்டம் உள்ள அவரின் இருப்பிடத்திற்கு அருகே கையெட்டும் தூரத்தில் கூடு கட்டி இவரையே பார்த்தவாறு உள்ளது ! அந்த புகைப்படத்தை இங்கே இணைத்துள்ளேன். இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.
அவர் கடவுள் என்று என்றைக்காவது ஒரு நாள் உலகத்திற்கு தெரிய வரும். இங்குள்ள ஒவ்வொருவருக்கும் அவரைப் பார்க்கும் வாய்ப்பு நிச்சயமாக வரும் ! அதற்கு முன் உணர்தல் மிக அவசியமானது ! அவரைப் பார்த்த பின் புதுப் புது அனுபவங்கள் தோன்றும். ஆன்ம பலம் கூடும். துன்பங்கள் அனைத்தும் தீர்வதற்கு ஆனம் பலம் பெருகும். உங்கள் துன்பங்களை நீங்களே தகர்த்து எறிவீர்கள். தாயுடனும் தந்தையுடனும் பழகுவதைப் போல அவருடன் சகஜமாக பழக முடியும். மஹா குருவாய் வந்து என் வாழ்வை அர்த்தமுள்ளதாக மாற்றினார். தினமும் நீரைக் கொடுத்து என் பிணியை போக்கினார். அதற்கு பரிசாக அவர் நாமத்தை உலகம் முழுவதும் எடுத்துச் செல்வேன். காற்றில், நீரில் அவரின் நாமம் ஒலிக்கப் போகிறது !
அவர் வழிப்போக்கனைப் போல் ! ஆற்றைப் போல் யாருக்காகவும் நிற்காமல் ஓடிக் கொண்டிருப்பவர். அந்த புனித ஆற்றை சோதிக்கவும் முடியாது. ஆராயவும் இயலாது ! ஆற்றில் ஒரு கையளவு நீரைக் குடித்தால் நமக்கு தான் தாகம் தீரும் ! ஆற்றுக்கு எந்த நஷ்டமும் இல்லை ! தமிழகத்தில் ஒவ்வொரு ஊரிலும் ஒருவன் தன்னை கடவுள் என்று கூறிக் கொண்டுள்ளான். போலிச் சாமியார்களும், பொய் வேஷக் காரர்களும் அழியப் போவது உறுதி ! ஆன்மீகம் என்ற ஒன்றை விற்பனை செய்து கொண்டு மக்களை ஏமாற்றி கல்லூரிகள் கட்டிக் கொண்டிருக்கின்றது ஒரு கூட்டம். அவர்களுக்கு கஷ்டம் ஆரம்பித்துவிட்டது ! மீடியாவிடம் சென்று கடவுளைப் பற்றி சொல்லிப் பார்த்தார் ப்ரனகன் சார். ஏளனம் செய்தார்கள். அதனால் தான் முகநூலில் பல இன்னல்களை தாண்டி அவரைப் பற்றி இப்பொழுது கூறிக் கொண்டுள்ளோம்.
இதுவரையில் இந்த வட்டத்தில் இணைந்தவர்கள் பதிவுகளை படித்து தானாக வந்தவர்கள். யாரையும் , கட்டாயப்படுத்தி இங்கு சேர்க்கவில்லை. அனைத்து மதத்தினரும் இங்கு உள்ளனர். ஒரே நாளில் ஒரு லட்சம் பேரை இங்கு சேர்ப்பதற்கு "ADD PEOPLE TO GROUP" option உள்ளது ! அனைத்து GROUP களிலும் இதை பயன்படுத்துகிறார்கள். அது நமக்கு தேவையில்லை ! கூட்டம் வேண்டாம். கொடி பிடிக்க வேண்டாம் உணர்ந்து வந்தால் போதும். நான் என் அலுவலகத்தில் இவரைப் பற்றி யாரிடமும் சொல்லியதில்லை. சொல்வதற்கு பயமில்லை ! சொன்னாலும் உண்மை அவர்களுக்கு புரியப் போவதில்லை. கடவுள் என்ற உண்மை புரிந்தாலும் கடமையை செய்ய விடமாட்டார்கள். அவரின் மகிமைகளை அரைகுறையாக புரிந்து கொண்டு பணம் சம்பாதிப்பார்கள்.
மீடியாவிடம் அவரின் PHOTO வைக் கொடுத்து அவரைக் கடவுள் என்று சொல்லியிருந்தால் இங்குள்ள எத்தனைப் பேர் நம்பியிருப்பார்கள் ? நான் படித்தவன். பாமரன் அல்ல ! உலகமே கண்டு வியக்கக் கூடிய கல்லூரியில் பட்டம் பெற்றவன். கடவுள் வந்துள்ளார் என்று கூறிக் கொண்டுள்ளேன். யோசியுங்கள். பதிவுகளைப் முழுவதும் படித்து உணராமல் எதேதோ கூறிக் கொண்டுள்ளனர். பதிவுகளை SHARE செய்வதற்கு கூட தயக்கம் ஏன் ? சினிமா கதைகளையும், அரசியல் நாடகங்களையும் , தேவையில்லாத செய்திகளையும், வதந்திகளையும் எப்படி SHARE செய்ய முடிகிறது ?
அவரின் வார்த்தைகளை புரிந்து கொள்ள முடியாவிட்டால் அவரின் உடலை வைத்து எப்படி புரிந்து கொள்ள முடியும் ? ஆயிரம் பேர் உள்ள இந்த வட்டத்தில் ஒரு COMMENT போடுவதற்கு கூட பலருக்கு நேரமில்லை பாவம் ! கடவுளை போன் செய்ய சொல்லுங்கள் என்று ஒருவன் கேட்கின்றான். நடக்கப் போவது இனி நாம் அனைவரும் பார்க்காதது ! இதுவரையில் உலகம் பார்த்திருக்க முடியாது ! இமயத்தையே நகர்த்தியவர் அவர் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அவர் நமக்காக பொறுமையுடன் காத்துக் கொண்டிருக்கின்றார். உணருங்கள். இநன்யா நமோ நம !
No comments:
Post a Comment