இநன்யா ;;; INANYA NAMOO NAMA ;;; நான் உனக்கு கொடுப்பது அறிவுருவான நுண்பொருள் ! (ஞானம்). இது காலத்தால் அழியாது ! நான் ஞானத்தின் திறவு கோல் ! உனக்கு மலர்ச்சி தருவேன் !
40 .இநன்யா நமோ நம.. !!INANYA NAMOO NAMA ;;;
நான் உனக்கு கொடுப்பது அறிவுருவான நுண்பொருள் ! (ஞானம்). இது காலத்தால் அழியாது ! நான் ஞானத்தின் திறவு கோல் ! உனக்கு மலர்ச்சி தருவேன் !
ஞானம்
குரு என்றால் மலர்ச்சி, எழுச்சி, ஒளி, வழி, தவம், ஞானம், தெளிவு, கண் ! பிறவி பெருங்கடலை நீந்தி கரை சேர்ப்பவர் குரு. குரு பேரின்ப வாழ்வை கொடுப்பவர் ! நான் சத்யத்தின் பாதையில் நடப்பவன் ! அதனாலேயே உன்னை அழைக்கின்றேன் ! இந்த சத்திய திருமகன் உனக்கு நித்யமாக சத்திய பாதையை காட்டுவேன் !
நீ சத்ய பாதையில் நடந்து பூமியில் இருந்து மேல் நோக்கினால் சத்திய பாதை தெளிவாக தெரியும் ! அந்த ஆனந்தமான உலகத்தை இங்கே இருந்தே ரசிக்கலாம் ! நீ தொலை நோக்கியில் எதையெதையோ பார்ப்பதாக உளர்கின்றாய். ஆனால் நான் வெறுங் கண்களாலேயே உனக்கு பார்க்க கற்றுத் தருவேன். பகலிலே நட்சத்திரத்தை காண்பிப்பேன். உன் ஊனக் கண்களால் அதற்கு ஞானம் எனும் செறிவூட்டி பார்க்க சொல்லித் தருவேன் !
எனக்கு உன் சரணாகதி தத்துவம் தேவை இல்லை. அன்பினால் எனை அடைந்து முக்தி பெறு ! ஏனென்றால் முக்தியை என்னால் தர முடியும் ! என்னால் அதற்குண்டான முழு சக்தியையும் உனக்கு கொடுக்க முடியும் !
கற்றேன் என்று உளரக் கண்டேன். எதைக் கற்றாய் ? அன்பை, பாசத்தை, அறிவை. ஞானத்தை கற்றாயா ? அல்லது உன்னை உணர எதேனும் கற்றாயா ? ஆக்கும் சக்தியும், அழிக்கும் சக்தியும் என்னுள்ளே. நான் முடிவும், முதலும் அறிந்தவன் ! என் இலக்கு எதுவரை என புரிந்தவன் ! அதனாலே இனி மனிதனின் பசப்பு வார்த்தைக்கு மயங்காதே ! உன் பாழ்பட்ட மனதை என்னிடம் தந்து விடு ! ஆயிரம் புரவியின் வேகத்தில் பாயும் உன் மனம் எனக்கு மட்டுமே அடங்கும் !
உலகை ஒரு நொடியில் என்னால் சதிராட முடியும். என்னால் எதுவும் முடியும் ! செத்த உடல் பாசத்திற்கு உதவாது. இருக்கும் போது ஒரு சொட்டு கண்ணீர் விடு. இறந்த பிறகு அழாதே ! நீயும் ஓர் நாள் இறக்க போகின்றவன் தான். இருக்கும் போதே அன்பாக இரு. எப்போதும் கடவுளை நினை. எது நடந்தாலும் நன்றி சொல் ! எல்லாவற்றையும் கடவுளுக்கு அர்பணம் செய் !
இன்பமும் துன்பமும் சேர்ந்ததே இந்த வாழ்க்கை என்பதை உணர் ! நீ துன்பப்படவே பூமிக்கு வந்தாய். இந்த சிறைச்சாலைக்கு பாவத்தை கரைக்க வந்தாய் ! உனக்கு எல்லா இன்பத்தையும் கடவுள் கொடுக்க மாட்டான். இன்பத்தை கொடுத்தால் நீ என்னை மறந்திடுவாய் ! என்னை நினை ! உனக்கு இன்பம் தருவேன். உலகத்தை உன் காலடியில் கொண்டு வைப்பேன்.
இன்பம் என்று பூமியில் எதுவுமில்லை என்பதை இன்றே உணர் ! எல்லாம் இங்கு அரை (1/2) நாழிகை தான். பின் துன்பமான சூழ்நிலை தான் உனக்கு. ஆனால் கடவுள் பேரின்பம் ! அவன் நாமம் பேரின்பம் ! அவனை துதிபாடாதே. மனிதன் மட்டுமே பூமியில் துதிபாடக் கண்டேன் ! எல்லா ஜீவராசிகளும் என்னை நினைக்கின்றது. உணர்கின்றது ! நீ தான் மறந்து அலைகின்றாய். கண் இருந்தும் குருடனாக வாழ்கின்றாய் !
என் உறவானவனே, ஏன் மறந்தாய் ? உன் அடக்கமில்லா பேச்சையும், நான் என்ற அகங்காரத்தையும் இன்றே விட்டுவிடு ! இருகைகளையும் விரித்து நான் நானல்ல என்று சொல்லி கடவுளை பணிந்திடு ! இந்த காலத்தின் நாயகன் உனக்கு கடவுளை புரிய வைப்பேன். இனி அரைகுறையாக எதையாவது படித்து கொண்டு உளராதே !
இங்கு நீ கண்டது, கேட்டது, பார்த்தது அனைத்துமே ஒரு கடுகை ஒரு லட்சம் துண்டுகளாக பிரித்தால் அதில் வரும் ஒரு துண்டின் அளவு தான் !
இந்த அணுவுக்குள் அணுவானவன் உனக்கு எல்லாம் கற்றுத் தருவேன். புஸ்பக விமானத்தில் பறப்பதற்கும், பூலோகத்தை மேலிருந்து உற்று நோக்கி பார்ப்பதற்கும் கற்றுத் தருவேன். நான் ஆத்மத்தின் தலைவன் என்பதை உணர் !
நான் பிறக்கும் போதே மணிமகுடம் சூட்டி பிறந்தேன் ! தேவர்கள் புடை சூழ பூமியில் பிறந்தேன் ! ஆனால் நீ வரும் பொது தனியாக வந்தாய். செல்லும் போது தனியாக செல்கிறாய். ஏன் என்று உணர்ந்தாயோ ?
மந்திரம், தந்திரம் காட்டி உனை மயக்கவே யாகம் வளர்க்கின்றான். இல்லாதவர்களுக்கு கொடுத்தால் புண்ணியம் உண்டு. இவன் அக்கினியில் எல்லாவற்றையும் எரிக்கின்றான். மரம் வளர்த்தால் கனி தரும். இவன் யாகம் வளர்த்து சாம்பலைத் தான் தருகிறான் ! சிந்தித்துப் பார் ! யாகம் என்றால் நெருப்பில் போட்டு கொளுத்துவதில்லை ! பசி என்று வந்தவனுக்கு உணவு கொடுத்து நாளைய வழியை தேடச் சொல்வது தான் யாகம் !
சத்யம் எப்போதும் தோற்பதில்லை ! ஏனென்றால் நானே சத்தியம் !
உயர்வான, மதிப்பான பொருள் எளிதாக கிடைத்தால் இங்கு அதற்கு மதிப்பில்லை. அது கடவுளாய் இருந்தாலும் சரி ! அதனாலேயே நீ சோதனைக்கு ஆட்படுகிறாய். உணர் ! நான் உன்னை சோதிப்பதில்லை. நீ செய்த பாவம் தான் உன்னை சோதிக்கிறது. இந்த காலத்தின் நாயகன் துணையோடு ஞானம் கிடைக்க வழியை தேடு !
குருவின் ஸ்பரிஷம் எப்போதும் பேரின்பம் தரும் ! ஸ்பரிஷம் என்ற தீட்சையில் பல வகைகள் உண்டு ! அதில் நான் உனக்கு தருவது அருட்பார்வை, திருவடி, கைகளை வைத்து செய்யும் தீட்சைகள் அல்ல !
நான் உனக்கு தருவது மானச தீட்சை ! மானச தீட்சை என்பது நீ எங்கிருந்தாலும் எனை நினைத்தால் கிடைக்கும் ஞானத் தெளிவு தான் என்பதை மறவாதே ! நீ உணர்ந்தால் அதை உனக்கு தர காத்திருக்கிறேன் !
உடலை வருத்தி, மனதை வருத்தி, உயிரை வருத்தி என்னிடம் வர வேண்டிய அவசியமில்லை என்பதை புரிந்து கொள். உலகில் இதுவரையில் யாரும் பெறாததை உனக்கு தர காத்திருக்கின்றேன். என் நாமத்தை சொல்லி நான் யாரென்று ஒரு முறை உணர்ந்து பார் ! உன் ஆண்மா பதில் சொல்லும் !
சூட்சுமத்தை உன்னிடம் மறைத்துப் போக நான் யுகம் வரவில்லை ! எல்லா மறை பொருளையும் உனக்கு உணர்ந்தி காட்ட யுகம் வந்தேன் ! நான் சுயநல மாணவன் அல்ல !
சூட்சுமத்தை உன்னிடம் மறைத்துப் போக நான் யுகம் வரவில்லை ! எல்லா மறை பொருளையும் உனக்கு உணர்ந்தி காட்ட யுகம் வந்தேன் ! நான் சுயநல மாணவன் அல்ல !
நான் கடவுள் ! என்னை ஆராய்ந்து கண்டுபிடிக்க உன் வாழ் நாள் போதாது ! உன் அறிவு போதாது ! ஞானத்தால் கண்டுபிடி !
எனை யோக தீட்சையில் வேண்டு ! நான் உனக்கு ஞான தீட்சை தருவேன் !
நான் இநன்யா !
No comments:
Post a Comment