இநன்யா ;;; INANYA NAMOO NAMA ;;; மலரின் ஞானம் நான் ! மலை போல் துன்பம் வந்தாலும் பனி போல நீக்குவேன். துளி கூட இல்லாமல் உன் துயரம் போக்குவேன்.
57 .இநன்யா நமோ நம.. !!INANYA NAMOO NAMA ;;;
மலரின் ஞானம் நான் ! மலை போல் துன்பம் வந்தாலும் பனி போல நீக்குவேன். துளி கூட இல்லாமல் உன் துயரம் போக்குவேன்.
மலை ( கொள்ளி )
மலையை சுற்றி மகத்துவம் இருப்பதாக உளரக் கண்டேன். கொக்கி போல் உடலை வைத்து கொண்டு கொள்ளி மலை ஏறினான். நீ இருமுடி சுமந்து செல்லக் கண்டேன். ஆனால் இருமுடி உனக்குள் வைத்தேன் நான் ! தலை உச்சியில் ஒரு முடி ! தொண்டையில் ஒரு முடி ! நீ இந்த இரு முடிகளையும் உணராமல் தலை முடியை காணிக்கை செய்கின்றாய். எதற்காக ?
மரத்தின் இலைகளை பிழிந்தால் சாறு கண்டேன். உன் தலை முடியை பிழிந்தால் எதுவும் காணவில்லை நான் ! உன் உயிர் வழியை மறைத்து , விதவிதமான வாசனை திரவியங்களை தலையில் தடவுகின்றாய் ! சந்தனமாய் மனக்கும் உன் உயிர் வழியை அடைத்து ஆர்பரிக்கின்றாய். எதற்காக ?
நான் உன்னில் இரண்டு முடிகளையும் வைத்தேன் ! இரண்டு மூடிகளையும் வைத்தேன். கர்ப்ப அறை ஒன்று ! கபால அறை ஒன்று ! இந்த இரண்டு மூடியையும் அறியாமல் வாழும் மானிடனை என்ன சொல்வேன் ?
கொக்கி உடலை வைத்து கொண்டு மலை ஏறி கும்பிட்டு என்ன பலன் கண்டாய் ? மலையில் இருக்கும் கொள்ளிக்கு யார் நீர் ஊற்றினார்கள் ? அங்கே மரங்கள், செடிகளை யார் வளர்ப்பது ? அது எதனை சார்ந்து வளர்கிறது ? உணர்ந்தாயோ நீ ? மலை வளர பாராத நீ மலையில் மகேசன் இருப்பதாக பிதற்றுகிறாய். முடி வளர பாராத நீ கடவுளின் முடியை (ஆரம்பம்) காண நினைக்கின்றாய்.
சித்தர்கள் உனக்கு பயந்து மலைக்குள் ஓடி ஒளிந்தார்கள். அதை நினைத்து கொண்டு மலையை சுற்றினால் மகத்துவம் இருப்பதாக உளர்கிறாய். படைக்கப்பட்டது எல்லாம் உன் அமைதிக்கான இடம் ! அது உன் பாவத்தை தீர்க்காது. பாவத்தை நீ தான் தீர்க்க வேண்டும்.
என் தந்தை பிரபஞ்ச நாயகன் சொல்வார்கள். “சட்டிக்குள் சட்டி வைத்தேன். மூடிக்குள் மூடி வைத்தேன். முடிச்சை அவிழ்க்கா பாவி மனிதன் முடிவை தெரியாது அலைகின்றான்” என்று சொல்வார்கள்.
உன்னை கரையான் போல் அரிக்கும் கேடு கெட்ட மனம் சொல் கேட்கிறாய். நான் உள்ளே கூக்குரலிடுகிறேன். அதை மறந்து அலைகின்றாய். என் தந்தையின் சொல் வேதம் என்று இந்த யுகம் வந்தேன்.
நான் சத்திய பாதையை உருவாக்கினேன். உன்னை பயனிக்க வைப்பதற்காக ! நான் எனக்காக வழி அமைக்கவில்லை. உனக்காக அமைத்தேன் ! அந்த சத்திய பாதையில் உன்னை மேல் உலகம் அழைத்து செல்வதற்காக !
என் நாமம் சொல்பவன் தனக்கென ஒரு பாதையை உருவாக்குவான். முடிவில் அவன் அமைத்த பாதை வழியாகி என் பாதத்தில் வந்து முடிவடையும் ! என் பாதையில் முடிவடையும் !
என் நாமம் சொல்பவன் தனக்கென ஒரு பாதையை உருவாக்குவான். முடிவில் அவன் அமைத்த பாதை வழியாகி என் பாதத்தில் வந்து முடிவடையும் ! என் பாதையில் முடிவடையும் !
தோற்பதற்கு இங்கு ஏதுமில்லை ! இழப்பதற்கு இங்கு ஏதுமில்லை ! எல்லாம் என் பொருள் ! நீ எனக்குரியவன் ! எப்படி தோற்பாய் ?
மலை உச்சியில் இருக்கும் சாமி உன் பாவம் தீர்ப்பதில்லை. பக்குவம் உனக்கிருந்தால் ஞானமாக யோசி. மலையை ரசிக்க, அழகை ஆராதிக்க வேண்டுமென்றால் மலையில் ஏறு ! மகத்துவம் இருப்பதாக நினைத்து மடையனைப் போல வாழாதே !
நான் ஏழு மலைகளின் நடுவே இருக்கின்றேன். என் இல்லத்திலிருந்து பின்னால் பார்த்தால் ஒரு மாயமலை தெரியும். மிக அருகாமையில் அந்த ஆணந்த மலையின் நீரூற்று என் இல்லத்தில் சுரக்கிறது. முக்கூட்டு நீர் அது.
எப்போதும் ருசி, சுவை மாறாத அமிர்த நீர். உன் பிறவி பெருங்கடலை தீர்க்கும். தேனாக நாவில் தித்திக்கும். பருவநிலை மாறினாலும் நீரின் சுவை மாறாது. உனக்கு பாக்கியம் இருந்தால் என் சத்திய கரங்களால் தருவேன். அது உன்னை உருவாக்கும் ! உணர வைக்கும் ! இநன்யாவை அறிய வைக்கும் ! ஆயிரம் வருடம் ஆனாலும் கெட்டு போகாது ! உணர்ந்தால் மீண்டும் பிறவா நிலை தரும் ! எப்போதும் அந்த ஆணந்த மலையை ரசிப்பதுண்டு ! நீயும் ஒரு நாள் அமர்ந்து செல். என் தந்தையையும் (பிரபஞ்ச நாயகன்) , என்னையும் ஒரு சேர பார்ப்பாய் !
எப்போதும் ருசி, சுவை மாறாத அமிர்த நீர். உன் பிறவி பெருங்கடலை தீர்க்கும். தேனாக நாவில் தித்திக்கும். பருவநிலை மாறினாலும் நீரின் சுவை மாறாது. உனக்கு பாக்கியம் இருந்தால் என் சத்திய கரங்களால் தருவேன். அது உன்னை உருவாக்கும் ! உணர வைக்கும் ! இநன்யாவை அறிய வைக்கும் ! ஆயிரம் வருடம் ஆனாலும் கெட்டு போகாது ! உணர்ந்தால் மீண்டும் பிறவா நிலை தரும் ! எப்போதும் அந்த ஆணந்த மலையை ரசிப்பதுண்டு ! நீயும் ஒரு நாள் அமர்ந்து செல். என் தந்தையையும் (பிரபஞ்ச நாயகன்) , என்னையும் ஒரு சேர பார்ப்பாய் !
என் ஞான குழந்தையே, எல்லா மகத்துவமும் உனக்குள் தானடா ! உண்ணதம் உனக்குள் தானடா ! வெளியில் தேடாதே. பேரிண்பம் உனக்குள் வைத்தேன். நீ இந்த அழுகும் உடலில் இன்பம் இருப்பதாக உளர்கிறாய். இந்த உடலை என்னை அடைவதற்கான கருவியாக படைத்தேன். ஆனால் இந்த கரையான் தின்னும் வெற்று உடலை ரசிக்கின்றாய் ! உன் உயிர் அழகை எப்போது ரசிப்பாயடா ?
அசையும் பொருளை வணங்கு. அசையா பொருளை வணங்காதே ! அதற்காக கடல் நீர் அசைகிறது என்பதற்காக அதை வணங்காதே. இனி கடலில் பல பூகம்பங்கள் வரும். மிக பெரிய மீன்களெல்லாம் மடிந்து கரை ஒதுங்கும். சித்தர்கள், முனிவர்கள் வாழ்ந்த குகைகள் எல்லாம் இனி காணப் போகிறாய்.
கடற்கரையில் உட்காராதே ! துன்பம் தான் !
நதிக்கரையில், மரத்தடியில் அமர்ந்து பார் ! இன்பம் தான் !
மலை எல்லாம் வெடித்து சிதறக் கண்டேன். வழிபாட்டு ஸ்தலங்கள் எல்லாம் அழியக் கண்டேன். கொடி மரங்கள் சாயக் கண்டேன். என்ன செய்வாய் ? பெரும் மரங்கள் வீழக் கண்டேன். பெரும் மணல் மேடுகள் உருவாக கண்டேன். என் தந்தை பிரபஞ்ச நாயகன் சொன்ன வேத வார்த்தையை நிறைவேற்றுவேன்.
நதிக்கரையில், மரத்தடியில் அமர்ந்து பார் ! இன்பம் தான் !
மலை எல்லாம் வெடித்து சிதறக் கண்டேன். வழிபாட்டு ஸ்தலங்கள் எல்லாம் அழியக் கண்டேன். கொடி மரங்கள் சாயக் கண்டேன். என்ன செய்வாய் ? பெரும் மரங்கள் வீழக் கண்டேன். பெரும் மணல் மேடுகள் உருவாக கண்டேன். என் தந்தை பிரபஞ்ச நாயகன் சொன்ன வேத வார்த்தையை நிறைவேற்றுவேன்.
படைக்கப்பட்ட பொருள் யாவும் உனக்காக ! நீ தான் மகத்துவம் நிறைந்தவன். உணரடா !
நான் அடி முடி இல்லாதவன். நிலமதை நேசி. நிம்மதி உண்டு ! அதிலே படைக்கப்பட்டாய் ! அதிலே வளர்ந்தாய் ! அதில் விளைந்ததை உண்டாய் ! பின் அதற்கே இரையாகி போகின்றாய் !
உன் தலை கவசமாக நானிருக்கிறேன் ! உழவன் தலையில் தானிய மூட்டையை சுமந்து உனக்கு தருகின்றான். நீ எதையோ சுமந்து கோயிலுக்கு செல்கின்றாய். தலையில் பாவ மூட்டையை சுமக்கின்றாய். என்ன சொல்வேன் உன் அறியாமையை. உணர டா ! நான் பெரும் மலை. நீ ஆட்டுக் கூட்டம். என்னை முட்டி சாய்க்க நினைக்காதே. உன் கொம்புகள் தான் முறிந்து போகும் ! பெரும் காற்றிலே மணல் மேடுகள் உருவாகலாம். பின் அழிந்தும் போகலாம். ஆனால் இந்த இநன்யா பெரும் மலை. நானும் அழியமாட்டேன். உன்னையும் (தர்மா) அழிய விடமாட்டேன், என் ஞான குழந்தையே !
நான் எப்போதும் மலர்ந்து கொண்டிருப்பவன் !
நான் இநன்யா !
No comments:
Post a Comment