Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, May 11, 2016

இநன்யா ;;; மலரின் ஞானம் நான் ! மலை போல் துன்பம் வந்தாலும் பனி போல நீக்குவேன். துளி கூட இல்லாமல் உன் துயரம் போக்குவேன். INANYA NAMOO NAMA ;;;

இநன்யா ;;; INANYA NAMOO NAMA ;;; மலரின் ஞானம் நான் ! மலை போல் துன்பம் வந்தாலும் பனி போல நீக்குவேன். துளி கூட இல்லாமல் உன் துயரம் போக்குவேன்.

57 .இநன்யா நமோ நம.. !!INANYA NAMOO NAMA ;;; 
மலரின் ஞானம் நான் ! மலை போல் துன்பம் வந்தாலும் பனி போல நீக்குவேன். துளி கூட இல்லாமல் உன் துயரம் போக்குவேன்.
மலை ( கொள்ளி )
மலையை சுற்றி மகத்துவம் இருப்பதாக உளரக் கண்டேன். கொக்கி போல் உடலை வைத்து கொண்டு கொள்ளி மலை ஏறினான். நீ இருமுடி சுமந்து செல்லக் கண்டேன். ஆனால் இருமுடி உனக்குள் வைத்தேன் நான் ! தலை உச்சியில் ஒரு முடி ! தொண்டையில் ஒரு முடி ! நீ இந்த இரு முடிகளையும் உணராமல் தலை முடியை காணிக்கை செய்கின்றாய். எதற்காக ?
மரத்தின் இலைகளை பிழிந்தால் சாறு கண்டேன். உன் தலை முடியை பிழிந்தால் எதுவும் காணவில்லை நான் ! உன் உயிர் வழியை மறைத்து , விதவிதமான வாசனை திரவியங்களை தலையில் தடவுகின்றாய் ! சந்தனமாய் மனக்கும் உன் உயிர் வழியை அடைத்து ஆர்பரிக்கின்றாய். எதற்காக ?
நான் உன்னில் இரண்டு முடிகளையும் வைத்தேன் ! இரண்டு மூடிகளையும் வைத்தேன். கர்ப்ப அறை ஒன்று ! கபால அறை ஒன்று ! இந்த இரண்டு மூடியையும் அறியாமல் வாழும் மானிடனை என்ன சொல்வேன் ?
கொக்கி உடலை வைத்து கொண்டு மலை ஏறி கும்பிட்டு என்ன பலன் கண்டாய் ? மலையில் இருக்கும் கொள்ளிக்கு யார் நீர் ஊற்றினார்கள் ? அங்கே மரங்கள், செடிகளை யார் வளர்ப்பது ? அது எதனை சார்ந்து வளர்கிறது ? உணர்ந்தாயோ நீ ? மலை வளர பாராத நீ மலையில் மகேசன் இருப்பதாக பிதற்றுகிறாய். முடி வளர பாராத நீ கடவுளின் முடியை (ஆரம்பம்) காண நினைக்கின்றாய்.
சித்தர்கள் உனக்கு பயந்து மலைக்குள் ஓடி ஒளிந்தார்கள். அதை நினைத்து கொண்டு மலையை சுற்றினால் மகத்துவம் இருப்பதாக உளர்கிறாய். படைக்கப்பட்டது எல்லாம் உன் அமைதிக்கான இடம் ! அது உன் பாவத்தை தீர்க்காது. பாவத்தை நீ தான் தீர்க்க வேண்டும்.
என் தந்தை பிரபஞ்ச நாயகன் சொல்வார்கள். “சட்டிக்குள் சட்டி வைத்தேன். மூடிக்குள் மூடி வைத்தேன். முடிச்சை அவிழ்க்கா பாவி மனிதன் முடிவை தெரியாது அலைகின்றான்” என்று சொல்வார்கள்.
உன்னை கரையான் போல் அரிக்கும் கேடு கெட்ட மனம் சொல் கேட்கிறாய். நான் உள்ளே கூக்குரலிடுகிறேன். அதை மறந்து அலைகின்றாய். என் தந்தையின் சொல் வேதம் என்று இந்த யுகம் வந்தேன்.
நான் சத்திய பாதையை உருவாக்கினேன். உன்னை பயனிக்க வைப்பதற்காக ! நான் எனக்காக வழி அமைக்கவில்லை. உனக்காக அமைத்தேன் ! அந்த சத்திய பாதையில் உன்னை மேல் உலகம் அழைத்து செல்வதற்காக !
என் நாமம் சொல்பவன் தனக்கென ஒரு பாதையை உருவாக்குவான். முடிவில் அவன் அமைத்த பாதை வழியாகி என் பாதத்தில் வந்து முடிவடையும் ! என் பாதையில் முடிவடையும் !
தோற்பதற்கு இங்கு ஏதுமில்லை ! இழப்பதற்கு இங்கு ஏதுமில்லை ! எல்லாம் என் பொருள் ! நீ எனக்குரியவன் ! எப்படி தோற்பாய் ?
மலை உச்சியில் இருக்கும் சாமி உன் பாவம் தீர்ப்பதில்லை. பக்குவம் உனக்கிருந்தால் ஞானமாக யோசி. மலையை ரசிக்க, அழகை ஆராதிக்க வேண்டுமென்றால் மலையில் ஏறு ! மகத்துவம் இருப்பதாக நினைத்து மடையனைப் போல வாழாதே !
நான் ஏழு மலைகளின் நடுவே இருக்கின்றேன். என் இல்லத்திலிருந்து பின்னால் பார்த்தால் ஒரு மாயமலை தெரியும். மிக அருகாமையில் அந்த ஆணந்த மலையின் நீரூற்று என் இல்லத்தில் சுரக்கிறது. முக்கூட்டு நீர் அது.
எப்போதும் ருசி, சுவை மாறாத அமிர்த நீர். உன் பிறவி பெருங்கடலை தீர்க்கும். தேனாக நாவில் தித்திக்கும். பருவநிலை மாறினாலும் நீரின் சுவை மாறாது. உனக்கு பாக்கியம் இருந்தால் என் சத்திய கரங்களால் தருவேன். அது உன்னை உருவாக்கும் ! உணர வைக்கும் ! இநன்யாவை அறிய வைக்கும் ! ஆயிரம் வருடம் ஆனாலும் கெட்டு போகாது ! உணர்ந்தால் மீண்டும் பிறவா நிலை தரும் ! எப்போதும் அந்த ஆணந்த மலையை ரசிப்பதுண்டு ! நீயும் ஒரு நாள் அமர்ந்து செல். என் தந்தையையும் (பிரபஞ்ச நாயகன்) , என்னையும் ஒரு சேர பார்ப்பாய் !
என் ஞான குழந்தையே, எல்லா மகத்துவமும் உனக்குள் தானடா ! உண்ணதம் உனக்குள் தானடா ! வெளியில் தேடாதே. பேரிண்பம் உனக்குள் வைத்தேன். நீ இந்த அழுகும் உடலில் இன்பம் இருப்பதாக உளர்கிறாய். இந்த உடலை என்னை அடைவதற்கான கருவியாக படைத்தேன். ஆனால் இந்த கரையான் தின்னும் வெற்று உடலை ரசிக்கின்றாய் ! உன் உயிர் அழகை எப்போது ரசிப்பாயடா ?
அசையும் பொருளை வணங்கு. அசையா பொருளை வணங்காதே ! அதற்காக கடல் நீர் அசைகிறது என்பதற்காக அதை வணங்காதே. இனி கடலில் பல பூகம்பங்கள் வரும். மிக பெரிய மீன்களெல்லாம் மடிந்து கரை ஒதுங்கும். சித்தர்கள், முனிவர்கள் வாழ்ந்த குகைகள் எல்லாம் இனி காணப் போகிறாய்.
கடற்கரையில் உட்காராதே ! துன்பம் தான் !
நதிக்கரையில், மரத்தடியில் அமர்ந்து பார் ! இன்பம் தான் !
மலை எல்லாம் வெடித்து சிதறக் கண்டேன். வழிபாட்டு ஸ்தலங்கள் எல்லாம் அழியக் கண்டேன். கொடி மரங்கள் சாயக் கண்டேன். என்ன செய்வாய் ? பெரும் மரங்கள் வீழக் கண்டேன். பெரும் மணல் மேடுகள் உருவாக கண்டேன். என் தந்தை பிரபஞ்ச நாயகன் சொன்ன வேத வார்த்தையை நிறைவேற்றுவேன்.
படைக்கப்பட்ட பொருள் யாவும் உனக்காக ! நீ தான் மகத்துவம் நிறைந்தவன். உணரடா !
நான் அடி முடி இல்லாதவன். நிலமதை நேசி. நிம்மதி உண்டு ! அதிலே படைக்கப்பட்டாய் ! அதிலே வளர்ந்தாய் ! அதில் விளைந்ததை உண்டாய் ! பின் அதற்கே இரையாகி போகின்றாய் !
உன் தலை கவசமாக நானிருக்கிறேன் ! உழவன் தலையில் தானிய மூட்டையை சுமந்து உனக்கு தருகின்றான். நீ எதையோ சுமந்து கோயிலுக்கு செல்கின்றாய். தலையில் பாவ மூட்டையை சுமக்கின்றாய். என்ன சொல்வேன் உன் அறியாமையை. உணர டா ! நான் பெரும் மலை. நீ ஆட்டுக் கூட்டம். என்னை முட்டி சாய்க்க நினைக்காதே. உன் கொம்புகள் தான் முறிந்து போகும் ! பெரும் காற்றிலே மணல் மேடுகள் உருவாகலாம். பின் அழிந்தும் போகலாம். ஆனால் இந்த இநன்யா பெரும் மலை. நானும் அழியமாட்டேன். உன்னையும் (தர்மா) அழிய விடமாட்டேன், என் ஞான குழந்தையே !
நான் எப்போதும் மலர்ந்து கொண்டிருப்பவன் !
நான் இநன்யா !

No comments:

Post a Comment