நிம்பத்தை தின்று உண்டு, வணங்கி நிம்மதியை தொலைக்க கண்டேன். பிரியாம்பு வலிமை உணராமல் ஊமை கூட்டமாக வாழ கண்டேன்.
மலர்களின் பயன்கள் ;;;
அலரி, கொக்கிரகம், வென், செந்தாமரை, வில்வம், கோங்கம், நீலோத்பலம், தும்பை மலர் முதலிய இந்த ஏழு புணித மலர்களும் ஏழு பேராத்மாக்களுக்கு பிடித்தது. இதை ஒரு சேர எடுத்து பூமியில் வைத்து ஆகாயத்தை நோக்கி வணங்கு ! உன் இன்பம் எதுவென்று உணர்வாய் !
மலர்கள் மண்ணில் உன்னை உணர வைப்பதற்காக படைக்கப்பட்டது. மலரின் குணம் தெரிந்தால் மகேஸ்வர நிலையை அடைவாய் !
கீழே வரும் மலர்கள் கடவுளுக்கு படைக்கலாம். ஞான பெண்களும் தலையில் சூடலாம். அபரிதமான பலன்கள் உண்டு ! தாமரை மலர் உன் தலையில் உள்ள ஆறு நரம்புகளையும் தட்டி எழுப்பும் சக்தி உள்ளவை. தலையில் உள்ல வியாதி அனைத்தையும் தீர்க்கும் ! மனதில் உள்ள தீய எண்ணங்களை நீக்கி மன அமைதியை தரும் ! செல்வம் நிலைக்க வைக்கும் !
வில்வம் உன் சுவாசத்தை சீராக்கி உன் உயிர் நிலையை அறிய வைக்கும் !
பாரி ஜாதம் லோகத்தை தெரியபடுத்தி, எதிர்காலத்தை நலமாக நிர்ணயிக்கும்.
ரோஜா கண் நோய், தலை சுற்றலை நீக்கும் !
மகிழம் வாய் குறைபாடு, முக்கியமாக பல சம்பந்தப்பட்ட வியாதிகள் அனைத்தும் தீர்க்கும் !
மல்லிகை மன அமைதிக்கு உதவும் ! தாம்பத்யம் சிறக்க, தாய்பால் சுரக்க உதவும். உடலில் குளிர்ச்சி ஏற்படுத்தி ஆண்மையை பெருக்கும்.
செண்பகம் எழுபத்தி ஆறு வகை வாதங்களையும் சரியாக்கும் !
செம்பருத்தி தலை முடிப் பிரச்சனைகளை சீர்படுத்தும் !
கணகாம்பரம் தலைவலியை குணமாக்கும் !
பன்னீர் உனை பக்குவபடுத்தி பாசமாக்கும் !
பாதிரி செரிமான பிரச்சனைகள், காது பிரச்சனைகள், கண் எரிச்சல் குணமாக்கும் வல்லமை பெற்றது.
சித்தகத்தி தலைவலியை (ஒற்றை) உடனே போக்கும் !
தாழம்பூ மிதமான தூக்கம், வீரியம், வினை அழிக்கும் சூட்சுமத்தை தரும் !
முல்லை உன் ஞான உணர்வை தூண்டும் ! உன் இதயத்திற்கு நன்மை தரும்.
சம்பங்கி எப்போதும் ஆணந்தம் நிலைக்க வைக்கும் !
மரி கொழுந்து உன் உடலில் உள்ள நாற்றங்களை அகற்றும் !
மலர்களை எல்லாம் கடவுளுக்கு படைத்துவிடு என்று முன்னோர் சொன்னார்கள் ! உணர் ! தலையில் சூடாமலிருந்தாலும் கைகளின் ஸ்பரிஷத்தால் உணரும் போதும் உன் உடல் நிலை ஆனந்தம் தரும். உன் உயிருக்கு நிம்மதி தரும் என்று சூசகமாக சொல்லிப் போனார்கள் !
பூக்கள் உன் உள் சாப்பிடுவதால் வரும் பலன்கள் அறிவாயோ நீ ? கேளடா !
தென்னம்பூ திகைப்பை தரும் !
வாழைப்பூ சிறுநீரகத்தை சுத்தப்படுத்தும் !
நெருஞ்சி கல்லீரலை பக்குவப்படுத்தும் !
பூவரசம்பூ உடலில் உள்ள தோல் வியாதியை அகற்றும் !
புனித தும்பை பூவில் உள்ள தேன் உனை தூய்மையாக்கி உனை வசப்படுத்தும் ! அமாவாஸ்யைக்கு இரண்டு நாள் முன் அதில் தேன் இருக்கும். தேனியும், தும்பியும், தேன்சிட்டும் சாப்பிட்டு இன்பமாய் வாழ கண்டேன். இந்த அற்ப மனிதருக்கு தான் ஏதும் தெரியவில்லை !
வாழைப் பிஞ்சு உருவாகும் முன் இதழில் தேன் இருக்கும். மிக அற்புத மகத்துவம் நிறைந்தது. இதை பக்குவமாக உண்பவன் ஞான நிலை அடைவான் !
மாம்பூ உன் உடலில் உள்ள கழிவுகளை அகற்றி நோயில்லாமல் வைக்கும் !
சுத்தமான தேனில் புனித பூக்கள், மலர்களின் மகரந்தம் இருக்கும். உன் நரம்புக்குரிய எண்ணிக்கையில் (333) மலர்களில் தேன் இருக்கும் ! எழுபத்து ஆராயிரம் வகை நாடி நரம்புகளுக்கும் இரத்த ஓட்டத்தை சீராக்கும் ! படைப்பின் ரகசியத்தை உணர் !
மகிழம்பூ, சந்தனப் பூ, ரோஜா, செண்பகம் உன் வாத கபத்தை சரி செய்யும்.
வாழைப் பூ உன் பித்தத்தை சரி செய்யும் !
நந்தியாவட்டை உன் கண்களுக்கு குளிர்ச்சி தரும். கண் நோய் முற்றிலும் அகற்றும்.
அரளி மென்மை, ஸ்பரிஷம், ஆனந்தம் தரும் அதனாலே சித்தர்கள் நந்தவனத்தில் அமர்ந்து நாட்டுநடப்பு பேசக் கண்டேன் !
இன்னும் எத்தனையோ ரகசியங்கள் நான்கு கோடி மலர்களில், இரண்டு கோடி பூக்களிலும் ! நீ எதை அறிந்து எதை உண்டாயடா ?? உணர் !
மலரின் ஞானத்தை உணரடா ! பூக்களில் இருக்கும் தீரும் தத்துவத்தை !
ஞானமலரின் நாயகன் நான் !
நான் இநன்யா !