Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Saturday, April 28, 2018

இன்று (28-04-2018) சிவப்பு அவல் ஊற வைத்து தேங்காய் துருவல், கற்கண்டு சேர்த்து சாப்பிடு !


to INANYA MAHA MUNIVAR
28-04-2018

இன்று (28-04-2018) சிவப்பு அவல் ஊற வைத்து தேங்காய் துருவல், கற்கண்டு சேர்த்து சாப்பிடு ! நாளை (29-04-2018) ஞாயிறு பச்சரிசி பருப்பு காய்கறி சேர்த்து வேக வைத்து தேங்காய் எண்ணெயில் தாளித்து சாப்பிடு ! இதை நிலவொளியில் எட்டு மணிக்குள் செய்து விடு ! கடுகு உளுந்து போட்டு தாளிக்காதே.
சந்திரனின் அமிர்த அலைகள் அதிகமாக இருக்கும். உலகில் இயற்கை சீற்றங்கள், கடல் அலைகள் கரை தாண்டி வரும். உணர் ! உனக்கும் உன் தாய்க்கும் நன்மை பயக்கும்.
என் சொல் சத்தியமே !
என் நாமம் சத்தியமே !
நான் இநன்யா !


Friday, April 27, 2018

சக்கிரிவதத்தில் உலகை வலம் வந்தேன் ! ஆனால் நீ ஆச்சுரிதகம் இல்லாமல் இருக்க கண்டேன். எதனால் ஒமிடி என உணரப் பாரடா ! விட்டு செல்



to INANYA MAHA MUNIVAR
சக்கிரிவதத்தில் உலகை வலம் வந்தேன் ! ஆனால் நீ ஆச்சுரிதகம் இல்லாமல் இருக்க கண்டேன். எதனால் ஒமிடி என உணரப் பாரடா !
விட்டு செல்
எல்லாவற்றையும் விட்டுச் செல் ! எதையும் கடந்துபோகும் போது உன்னில் எதையும் வைத்திருக்காதே. வாழ்வில் பதினெட்டு நிலைகள் உண்டு ! ஒவ்வொன்றாக கடக்கும் போது உன்னில் எதையாவது விட்டு செல்.
படிகட்டில் ஏறும் போது அடுத்த படிக்கட்டை தான் நோக்குகிறாய். உன் கண்கள், மூளை, அறிவு அடுத்த பின்புலத்தை தான் நோக்குகிறது. கடந்து வந்த படிக்கட்டை யோசிப்பதில்லை. ஆதலால் எதையும் விட்டு செல்லும் பொழுது உன்னை அறிகிறாய். அடுத்த இலக்கை அறிய புறப்படுகிறாய்.
இப்போதுள்ள காலம் நிஜமானது. பிரயாணம் செய்யும் பொழுது எதிர் திசையில் என்ன இருக்கிறது என்பதே உன் கண்களுக்கு தெரிகிறது. பின்னால் என்ன இருந்தது என்று அழ்ந்திருக்கும் போது தான் நினைவுக்கு வருகிறது.
முன்னால் நடந்ததை யோசிக்காதே ! தூக்கி எறி ! நாளை என்னவாகும் என யோசிக்காதே ! எல்லாம் கடந்து செல்லத் தான் போகிறது !
உன் பாதையை கூர்ந்து கவனி ! உன் இலக்கு உன் காலடியில் தான் ! நான் பேரானந்தம் ! நிம்மதி நான் வென்றவன் ! உன்னையும் வெல்ல வைக்க வந்தேன். விட்டு செல் என்றால் மனைவி, குழந்தைகளை விட்டு தனிமையில் வசிப்பது இல்லை ! உன்னில் உள்ள குறைகளை விடு ! உன் முன்னோர் விட்டு சென்ற மரத்தில் கனியை உண்டு களிக்கிறாய். நிறையை வைப்பதால் அனுபவிக்கிறாய். உன் குறையைவிட்டு நிறையோடு மேலோகம் வா ! நான் உன்னை வரவேற்பேன் ! மீண்டும் பிறப்பில்லா வாழ்வை தந்து என் லோக காண்டத்தில் உன்னை குடி அமர வைப்பேன்.
உன் உடலில் ஆசை, விரக்தி, கோபம், மோகம் முதலிய அற்பங்களை தூக்கி சுமக்காதே ! ஒரு விநாடி கூட நிம்மதியாய் இருக்கமாட்டாய் ! நீ தவறு செய்தால் கடவுள் கண்கானிக்கவில்லை என பொருளாகுமோ ? நான் உனக்காக மேலே என் அன்பினிற்கினிய தந்தை, பாசமிகு அன்னையை விட்டு வந்தேன். உன் துன்பத்தை, பாவத்தை என்னில் விட்டு செல் ! நான் உன்னை இன்பமாக வைப்பேன்.
எதையும் விடமாட்டாய். ஆசை, கோபம், ஆணவம், திமிர், காமம். ஆனால் ஞானம் வேண்டும் என்று ஆசைபடுகிறாய். ஞானம் வானத்தைப் போல. அதை உன்னால் எட்டிபிடிக்க வேண்டுமென்றால் உன்னை இலகுவாக்கு. எல்லாவற்றையும் விடு !
உன்னில் உள்ள ஆசைகளைவிடாமல் உன் மனைவி குழந்தைகளைவிட்டு மேலே வர நினைப்பது மடமையிலும் மடமை. எதையும் யோசித்து செய் ! உன்னில் எல்லாம் உண்டு ! உணர்ந்தால் துன்பமில்லை !
நிலைபெறுபவன் நான் !
நான் இநன்யா !

இதோ என் நெஞ்சம் நிறைந்த அன்பின் ஆசிகள் உனை நோக்கி !


24 -04-2018

இயேசு, நபிகள், புத்தன், முருகன், ஆதிசங்கரர், ராமானுஜர், அப்பர், சம்பந்தர் போன்ற புனிதர்கள் பிறந்த இந்த சைத்ர (சித்திரை வசந்தகாலம்) மாதத்தில், புனித தாமிரபரணி நதிக்கரையில் அவதரித்த பிரபஞ்சத்தின் இளவரசன் இநன்யா உனை ஆசிர்வதித்து காக்க வந்தேன் !
இதோ என் நெஞ்சம் நிறைந்த அன்பின் ஆசிகள் உனை நோக்கி !
நானே உனக்கு நீதிபதி ! நானே உன் வழக்கறிஞர் !
நானே உன் வழிகாட்டி ! நான் உன் தகப்பன் !
உன்னை வழிகாட்டி உன் விரல் பிடித்து அழைத்து செல்லும் சத்யம் ! ஏனடா மன பயம் ? எது நடந்தாலும் நன்றி சொல். உனக்கு எல்லாம் நன்மையில் தான் முடியும் ! நீ நினைத்து ஏதும் நடவாது. இறையருளும் கடவுளின் பாதமும் எதையும் மாற்றும் !
சிக்கென பிடி ! வெட்டென மற ! வேதனை உனக்கில்லை ! விரக்தி, வேதனை, துன்பம் என்ற மனநிலையை தூக்கி எறி !
நான் உன்னை காப்பேன் ! என் சத்ய கரங்கள் உன்னை எப்போதும் காக்கும் ! நான் உன்னை கைவிடப் போவதில்லை. காலம் நான் ! உனக்கு வசந்த காலத்தை தருவேன். இன்பமில்லா வாழ்வு என்று இரை உன்னும் உனக்கு நிர்ணயித்தது உன் பாவம் ! ஆனால் இன்பம் நான் ! என்னை நினை ! உன் வாழ்வில் துன்பம் கரைந்து இன்பம் பொங்கும் !
நான் சத்யம் ! என் நாமம் சத்யம் !
வெல்வாயடா ! வென்றவன் நான் ! உன்னையும் வெல்ல வைப்பேன் !
நான் இநன்யா !

Thursday, April 19, 2018

அரிந்தமன் நானடா ! அவணி நான் என்பதை அறியாமல் ஒன்றடி மன்றடியில் வாழ்கின்றாய் ! தன்வசம் !

அரிந்தமன் நானடா ! அவணி நான் என்பதை அறியாமல் ஒன்றடி மன்றடியில் வாழ்கின்றாய் !
தன்வசம் !
உன் வசம் உன் உயிர் ஒய்யாரமாய் இருப்பதை அறியா வாழும் மானிடா, ஆளுமை உனக்குள் இருப்பதை ஏனடா மறந்தாய் ? வேண்டா வெறுப்பாய் வாழ வைக்கின்றாய் வேதன் நான் உனை கண்கானிப்பதை தெரியாமல் !
நீ தன் வசமாய் இரு ! இல்லையேல் உன் வசமாய் இரு ! இல்லையேல் கடவுள் வசமாய் இரு ! எப்போதும் ஆணந்திக்க உன்னில் வசமாகி உயிருக்கு நண்பனாகி, உவமைக்கு வசமாய் இரு ! எல்லாம் உன் வசமாகும் ! உன்னை அழகாய் நினை ! அறிவாய் நினை !
ஆணந்தமாய் நினை ! கடந்த காலம், எதிர் காலம் விட்டுவிடு ! நிகழ் காலம் யோசி ! இன்றைய வாழ்வு தான் நிஜம் ! அடுத்தகனமே இறப்பதாய் நினைத்து வாழக் கற்றுக் கொள் ! தவறு செய்யமாட்டாய் ! பாவம் செய்யமாட்டாய் ! உன் இலக்கை அதிவேகமாக அடைவாய் !
கடவுள் வசமாகி இருப்பவன் காலத்தில் அழுவதில்லை ! என் வசமாகி எல்லாமும் வசமாகி, தன் வசமாகி தரணியும் வசமாகி போக ஒன்றும் நினையாது அசைவற்று கிட ! அசைவற்று இருப்பதென்றால் என்றால் உடலை அல்ல ! உன் எண்ணங்களை ஊமையாக வை ! கல்லை போல அசைவற்று இருக்க வை !
என்னுள் எல்லாம் வசமாகி கிடக்கின்றன ! உணர்ந்து உண்மையை அறியும் போது என்னுள் வசமாவாய். உன் மூச்சின் அசைவை கண்கானி. காற்றின் அசைவை எப்போதும் கவனி. அதற்காக மூச்சை இழுத்து மூலையில் உட்காராதே. உன் கடமையில் இதை யோசி ! நீ இதையெல்லாம் விட்டுவிட்டு பெண்ணின் அங்க அசைவை கவனிக்கின்றாய். உன் எண்ணம் சிதறினால் இவ்வுலகம் உனக்கு நரகமாக தெரியும். மனைவி, குழந்தைகள் எல்லாம் உன் வசமல்ல ! கடவுளை தவிர எல்லாம் இங்கே மாறும். பிறர் வசமாகி போகாதே ! உன் இன்பம் தொலைப்பாய்.
என் நாமத்தில் நீ வசமாகு ! நாயகன் நான் உனக்கு வசமாவேன் ! உன் விதி உன் வசமாகும். பெண் வசத்தில் லயித்து பின் அவளை போக பொருள் போல் பார்த்து குணம் கெட்டு, மதி கெட்டு வாழ்வை துறக்க நினைக்கின்றாய். பெண் அமிர்தம் என்று தெரியாமல் அள்ளி பருக உணர்வில்லாமல் அலைகிறாய். பெண்னை புரியாத்தாலே உன் வசம் இழக்கின்றாய். உணர் !
ஞான பெண்களின் இதயத்தில் ஞானம் உண்டு. முகத்தில் கருணை உண்டு. அன்பு பாசம், எல்லாம் உண்டு ! அள்ளி பருகி ஆணந்த ஞான நிலை பெறாமல், உணராமல் மாண்டு போகின்றாய். எல்லாம் என் வசம் !
வாடகை வீட்டில் (பூமி) இருந்து கொண்டு வானலாவி பேசுகிறாய். உன் மடமையை என்ன சொல்வேன் ? எதன் மீதும் வெறுப்பு, விரக்தி வராமல் பார்த்து கொள் !
இந்த பூமி அழகாக தெரிய வேண்டும் என்றால் உன் வசமாகி உணரப் பார் ! எல்லாம் உன் வசமாகும் !
வசமாக்கும் மாயவன் நான் !
நான் இநன்யா !

Saturday, April 14, 2018

நான் அசிதனடா ! ஆளுமை மிக்க ஆனந்தமானவன் ! என் ஆனந்த ஆசிகள் உனை நோக்கி !


 to INANYA MAHA MUNIVAR
April 13 -2018
நான் அசிதனடா ! ஆளுமை மிக்க ஆனந்தமானவன் ! என் ஆனந்த ஆசிகள் உனை நோக்கி !
என் ஆத்மார்த்தமான ஆசிகளை ஆனந்தமாக உனக்கு தந்தேன் ! என் நாமம் உனை சத்திய பாதைக்கு அழைத்துச் செல்லும் ! 25.04.2018 அன்று தேவர்கள் புடை சூழ என் அன்பின் தந்தை பாசமிகு அன்னையோடு, ஆறு பேராத்மாக்கள் துணையோடு ஆனந்தமாக பிரபஞ்சத்தில் ஆசி பெற்று வருவேன். உன் பாவம், முன்னோர் சாபம் நீங்க ஒரு தாம்பூலத்தில் உன் தாய் தந்தையரின் கால்களை அருகு, மஞ்சள், பால், சந்தனம், துளசி ஆகிய இந்த ஐந்தையும் ஒரு சேர நீரில் போட்டு கழுவி வணங்கு !
தாய், தந்தை இல்லாதோர் இந்த ஐந்து பொருள்களையும் நீரில் கலந்து தலைக்கு ஊற்றி நீராடு ! உன் பாவம், முன்னோர், பெற்றோர் சாபம் கரையும் ! என் சொல் வெல்லும் ! செயல் வெல்லும் ! உன் கர்ப்பத்தின் தூய்மை ஆசிகள் பெறுவாய் !
ஆனந்தம் பெருக உன் தாய், தந்தையின் கால்களை முத்தமிட்டு மகிழடா ! இந்த புண்ணிய பூமி ஆனந்தம், உனக்கு வாரி வழங்கும் ! வசந்த வாழ்வும், நிம்மதியும் நீ பெறுவாய் ! நான் ஆணையிடுவேன் ! என் தாய், தந்தை ஆசியோடு நீ வளம் பெற ! நலம் பெற !
நான் ஆனந்தமானவன் ! தன்னிகரில்லா பெருங்கருணை என்னுள் ! நீ வாழ்வாயடா ! ஏனென்றால் உனை கைபிடித்து அழைத்து செல்வது பிரபஞ்சத்தின் இளவரசன் இநன்யா !
என் நெஞ்சம் நிறைந்த அன்பின் ஆசிகள் உனை நோக்கி எப்போதும் !
நான் இநன்யா !

சூக்கும புத்தி இல்லாது துயர்படுகின்றான். அறிவைத் தேடாது ஆணந்தம் தொலைக்கின்றான். அறிவைத் தேடு !


 to INANYA MAHA MUNIVAR
April 12 
சூக்கும புத்தி இல்லாது துயர்படுகின்றான். அறிவைத் தேடாது ஆணந்தம் தொலைக்கின்றான்.
அறிவைத் தேடு !
தேடி, தேடி ஓய்ந்து போனாய் அற்ப செல்வத்தை மட்டும் தேடி. ஆனால் உன்னை தேடாமல் உருக்குலைந்து போனாய் ! மனைவி, பிள்ளை, செல்வம், செல்வாக்கு, புகழ் எல்லாம் ஊழ்வினையோடு சம்பந்தப்பட்டவை. நீ இதை தேடி போனால் ஊழ்வினையோடு உன் பாவமும் சேர்ந்தே வரும் !
ஆனால் அறிவு என்பது ஊழ்வினையோடு சம்பந்தப்பட்டதல்ல ! அறிவு என்பது முயற்சி ! உன்னை அறியும் முயற்சி ! நீ கடவுளை, அறிவை தேடும் போது ஊழ்வினை உன்னோடு வருவதில்லை ! ஆதலால் முதலில் அறிவை தேடு ! உனை உணரும் பக்குவம் தேடு !
தேடி, தேடி ஓய்ந்த பின் மரணத்தில் உன்னை தேடுகின்றாய். என் அன்பினிற்கினிய தந்தை யாகவா சொல்வார்கள், “இளமையில் பால் அருந்தும் காலத்தில், பசுமை பெற்ற காலத்தில், அன்பு சிரிப்பு சிரிக்கும் காலத்தில், நான் உன்னோடு இருக்கும் காலத்தில் அறிவை தேடடா, இறப்பு வரை ஆனந்தமாக இருப்பாய் !” என்று சொல்வார்கள்.
உன்னை தோண்டினால் உன் அறிவு கிடைக்கும். என்னை தோண்டினால் பிறப்பின் ரகசியம் அறிவாய் !
அறிவே ஆனந்தம் !
அதுவே நிறைவு !
தன்னிலை உணர்த்தும் ஆனந்தமே பேரின்பம்.
அறிவினால் எல்லாம் கிடைக்கப் பெறுவாய் ! நிறைந்த செல்வம், நிரந்தர செல்வம் (நிம்மதி), அன்பு, ஆனந்தம் எல்லாம் கிடைக்கப் பெறுவாய் ! இங்கே அறிவே ஆனந்தம் என்று உணர் ! தன்னிகரில்லா பெரும் மரங்கள் அறிவோடு இருக்க கண்டேன். வேட்டுவம் தெரியாத வாழ்வில் ஆவரியின் இலக்கு தெரியாமல் தன்னை தொலைக்கின்றாய் !
தறிகெட்டு போகும் மனம் உன் ஆணவத்தால் அதிகாரத்தால் அடங்காது. அறிவால் அடங்கும். நானே பேரறிவு ! ஆத்மத்தின் நித்ய சாயல் நான் ! உனக்கு அறிவென்பது பிரவாகமாய் செயல்படும். ஆகவே ஆத்மத்தின் நித்ய யோகத்தை அறிய முற்படு !
தெளிவே அறிவு ! திறனற்ற பேச்சு அறிவைத் தராது. அறிவை உபயோகித்தால் ஆணவம் மறைந்து போகும். அதிகாரம் அடங்கிவிடும். ஆன்மா அதிகாரம் கொண்டு உனை வழிநடத்தும் !
குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்று மதிகெட்ட விஞ்ஞானம் உளரக் கண்டேன். குரங்குக்கு மேல் கீழ் என்று வரையறுத்தேன். குரங்குக்கும் மேல் கீழ் என்று மூளை படைத்தான். மனிதனுக்கு இட, வலம் என்று வரையறுத்தான்.
உன் பிறப்பின் ரகசியம் அறிய அறிவை தேடு ! அறிவை தர யாரும் வரம் கொடுப்பதில்லை. அறிவை நீ தேட முயற்சி செய்யும் பொழுது கடவுள் உன் பாதையை காண்பிப்பான் ஞான வழியாக !
உனை பற்றி அறிந்து கொள்வது தான் அறிவு ! உன் கோபம், ஆசை, காமம், உன்னிடமுள்ள குறைகளையும், நிறைகளையும் அறிந்து கொள்வது தான் அறிவு ! குறை களைந்தால் நிறைவோடு வாழ்வாய் ! அறிவைத் தேடு !
சத்திய பாதையை தேடி அதில் பயணிப்பது தான் அறிவு ! நின் நிகரில்லா பெரும் அறிவு நான் !
உன்னை உணர் ! பிறகு உன்னை உருவாக்கு ! அதன் பின் அரி, தெளி, திறன் கொள்வாய் நீ ! உணர் என்றால் அரி என்று அர்த்தம் ! திறன் என்றால் ஞானம் என்று அர்த்தம் ! இதோ பேரறிவாய் நான் !
என் நாமம் உனை அறிய வைக்கும். திறன் இருந்தால் எனை அறிய முற்படு ! உன்னையும் அறிவாய் !
நான் இநன்யா !

Wednesday, April 4, 2018

நிம்பத்தை தின்று உண்டு, வணங்கி நிம்மதியை தொலைக்க கண்டேன். பிரியாம்பு வலிமை உணராமல் ஊமை கூட்டமாக வாழ கண்டேன். மலர்களின் பயன்கள் ;;;

Inanya Maha Munivar
நிம்பத்தை தின்று உண்டு, வணங்கி நிம்மதியை தொலைக்க கண்டேன். பிரியாம்பு வலிமை உணராமல் ஊமை கூட்டமாக வாழ கண்டேன்.
மலர்களின் பயன்கள் ;;;
அலரி, கொக்கிரகம், வென், செந்தாமரை, வில்வம், கோங்கம், நீலோத்பலம், தும்பை மலர் முதலிய இந்த ஏழு புணித மலர்களும் ஏழு பேராத்மாக்களுக்கு பிடித்தது. இதை ஒரு சேர எடுத்து பூமியில் வைத்து ஆகாயத்தை நோக்கி வணங்கு ! உன் இன்பம் எதுவென்று உணர்வாய் !
மலர்கள் மண்ணில் உன்னை உணர வைப்பதற்காக படைக்கப்பட்டது. மலரின் குணம் தெரிந்தால் மகேஸ்வர நிலையை அடைவாய் !
கீழே வரும் மலர்கள் கடவுளுக்கு படைக்கலாம். ஞான பெண்களும் தலையில் சூடலாம். அபரிதமான பலன்கள் உண்டு ! தாமரை மலர் உன் தலையில் உள்ள ஆறு நரம்புகளையும் தட்டி எழுப்பும் சக்தி உள்ளவை. தலையில் உள்ல வியாதி அனைத்தையும் தீர்க்கும் ! மனதில் உள்ள தீய எண்ணங்களை நீக்கி மன அமைதியை தரும் ! செல்வம் நிலைக்க வைக்கும் !
வில்வம் உன் சுவாசத்தை சீராக்கி உன் உயிர் நிலையை அறிய வைக்கும் !
பாரி ஜாதம் லோகத்தை தெரியபடுத்தி, எதிர்காலத்தை நலமாக நிர்ணயிக்கும்.
ரோஜா கண் நோய், தலை சுற்றலை நீக்கும் !
மகிழம் வாய் குறைபாடு, முக்கியமாக பல சம்பந்தப்பட்ட வியாதிகள் அனைத்தும் தீர்க்கும் !
மல்லிகை மன அமைதிக்கு உதவும் ! தாம்பத்யம் சிறக்க, தாய்பால் சுரக்க உதவும். உடலில் குளிர்ச்சி ஏற்படுத்தி ஆண்மையை பெருக்கும்.
செண்பகம் எழுபத்தி ஆறு வகை வாதங்களையும் சரியாக்கும் !
செம்பருத்தி தலை முடிப் பிரச்சனைகளை சீர்படுத்தும் !
கணகாம்பரம் தலைவலியை குணமாக்கும் !
பன்னீர் உனை பக்குவபடுத்தி பாசமாக்கும் !
பாதிரி செரிமான பிரச்சனைகள், காது பிரச்சனைகள், கண் எரிச்சல் குணமாக்கும் வல்லமை பெற்றது.
சித்தகத்தி தலைவலியை (ஒற்றை) உடனே போக்கும் !
தாழம்பூ மிதமான தூக்கம், வீரியம், வினை அழிக்கும் சூட்சுமத்தை தரும் !
முல்லை உன் ஞான உணர்வை தூண்டும் ! உன் இதயத்திற்கு நன்மை தரும்.
சம்பங்கி எப்போதும் ஆணந்தம் நிலைக்க வைக்கும் !
மரி கொழுந்து உன் உடலில் உள்ள நாற்றங்களை அகற்றும் !
மலர்களை எல்லாம் கடவுளுக்கு படைத்துவிடு என்று முன்னோர் சொன்னார்கள் ! உணர் ! தலையில் சூடாமலிருந்தாலும் கைகளின் ஸ்பரிஷத்தால் உணரும் போதும் உன் உடல் நிலை ஆனந்தம் தரும். உன் உயிருக்கு நிம்மதி தரும் என்று சூசகமாக சொல்லிப் போனார்கள் !
பூக்கள் உன் உள் சாப்பிடுவதால் வரும் பலன்கள் அறிவாயோ நீ ? கேளடா !
தென்னம்பூ திகைப்பை தரும் !
வாழைப்பூ சிறுநீரகத்தை சுத்தப்படுத்தும் !
நெருஞ்சி கல்லீரலை பக்குவப்படுத்தும் !
பூவரசம்பூ உடலில் உள்ள தோல் வியாதியை அகற்றும் !
புனித தும்பை பூவில் உள்ள தேன் உனை தூய்மையாக்கி உனை வசப்படுத்தும் ! அமாவாஸ்யைக்கு இரண்டு நாள் முன் அதில் தேன் இருக்கும். தேனியும், தும்பியும், தேன்சிட்டும் சாப்பிட்டு இன்பமாய் வாழ கண்டேன். இந்த அற்ப மனிதருக்கு தான் ஏதும் தெரியவில்லை !
வாழைப் பிஞ்சு உருவாகும் முன் இதழில் தேன் இருக்கும். மிக அற்புத மகத்துவம் நிறைந்தது. இதை பக்குவமாக உண்பவன் ஞான நிலை அடைவான் !
மாம்பூ உன் உடலில் உள்ள கழிவுகளை அகற்றி நோயில்லாமல் வைக்கும் !
சுத்தமான தேனில் புனித பூக்கள், மலர்களின் மகரந்தம் இருக்கும். உன் நரம்புக்குரிய எண்ணிக்கையில் (333) மலர்களில் தேன் இருக்கும் ! எழுபத்து ஆராயிரம் வகை நாடி நரம்புகளுக்கும் இரத்த ஓட்டத்தை சீராக்கும் ! படைப்பின் ரகசியத்தை உணர் !
மகிழம்பூ, சந்தனப் பூ, ரோஜா, செண்பகம் உன் வாத கபத்தை சரி செய்யும்.
வாழைப் பூ உன் பித்தத்தை சரி செய்யும் !
நந்தியாவட்டை உன் கண்களுக்கு குளிர்ச்சி தரும். கண் நோய் முற்றிலும் அகற்றும்.
அரளி மென்மை, ஸ்பரிஷம், ஆனந்தம் தரும் அதனாலே சித்தர்கள் நந்தவனத்தில் அமர்ந்து நாட்டுநடப்பு பேசக் கண்டேன் !
இன்னும் எத்தனையோ ரகசியங்கள் நான்கு கோடி மலர்களில், இரண்டு கோடி பூக்களிலும் ! நீ எதை அறிந்து எதை உண்டாயடா ?? உணர் !
மலரின் ஞானத்தை உணரடா ! பூக்களில் இருக்கும் தீரும் தத்துவத்தை !
ஞானமலரின் நாயகன் நான் !
நான் இநன்யா !