வெண் பஞ்சும் வெண்மை தானே ? உனை வேவு பார்க்கும் உன் ஆன்மாவும் வெண்மை தானே ? வயதானால் வரும் வெண் நரையும் வெண்மை தானே ? உணர் !
ஆடை ;;;
ஆடையின்றி பிறந்தாய். ஆனந்தமாய் ஆளுமை உள்ளவனிடம் ஆனந்தமாக பேசி மகிழ்ந்தாய். ஆனால் வளர வளர பாவம் சேர்த்தாய். உன் பாவம் உன் வெட்கதலங்களை மறைத்து, உள் இருப்பவனை மறந்து பேச மறுக்கிறாய். உன்னை உணராமல், அறியாமல், உன் உள் இருக்கும் வெண்மையை அறியாமல் மூடி வைத்த வெட்கதலங்களை அறிய முற்பட்டாய். அதனால் ஆனந்தம் தொலைத்தாய். உணர் !
உனக்குள் இருப்பவனிடம் பேசாமல் ஊருக்கு போதனை செய்ய புறப்பட்டாய். பின் முடிவில் கைவிரித்து மேல் உலகம் வருகின்றாய். ஆகாயம், பூமி, பட்சி, தாவரம், நீர், பால் இவையனைத்திற்கும் ஆடை உண்டு ! ஆனால் நீ ஆடையை உடுத்தி நாகரீகம் என்று புலம்புகின்றாய். பாலில் ஆடை இருப்பதை அறிந்தாய். ஏன் என்று உணர்ந்தாயோ ? நீருக்கு ஆடை இருப்பதை அறிவாயோ ? தாவரத்திற்கும் ஆடை உண்டு !
எல்லாம் ஆடை கலைந்து பார் ! ஆணவம் மறையும் ! எல்லாம் உனக்கு நன்மை செய்யும். ஆனால் இவையெல்லாம் அறியாமல் ஒன்றும் தெரியாமல் உருக்குலைந்து போகின்றாய். இந்த ஆடை தத்துவம் உன் கண்களுக்கு புலப்பட்டால் உன் ஆன்மா விரிவடையும் ! உணர் !
ஆடையின்றி பிறந்தாய், ஆடையின்றி அலைந்தாயோ ? மரணத்தை என்றாவது உணர்ந்தாயோ ? என் மனித உருவில் இருந்த ஆடையை என் தந்தை 1996 ல் நீக்கி இநன்யா என்ற ஆடை போர்த்தினார்கள். நான் சத்யன் தானே ? உன் ஆடை நீக்கு ! உன்னில் உள்ள கோபம், ஆசை, மோகம், காமம் என்ற தீய நாற்றமுள்ள ஆடையை கிழித்தெறி !
நீ தூய்மையானவன் ஆவாய் ! உன் ஆன்மா உனக்கு தூய ஆடை உடுத்தி அழகு பார்க்கும். நல் ஆடையை உடுத்தி கடவுளை நெருங்கு ! மனதை எந்த தீய ஆடையையும் கொண்டு போர்த்தாதே !
திறன் கொள் ! உன்னை பற்றி யோசி ! உண்மை தெரியும் வரை குழப்பம் தான் ! உன் குழப்பம் தீர என் நாமம் உனக்கு சக்தியை தரும். உன் விதி மாறுவதை உணர்வாய். உனக்கு நல் ஆடை போர்த்தி அழகு பார்க்க வெண்மை ஆடை உடுத்தி வேந்தனின் லோகத்திலிருந்து வந்தேன் ! நான் பிரபஞ்சத்தின் இளவரசன் இநன்யா !
பூமியின் ஆடையை நீக்கி பார் ! உன்னை அறிவாய் ! ஆகாயத்தின் ஆடையை நீக்கி பார் ! கடவுளை அறிவாய் !
எனை அறிவந்தவன் ஞானியாவான் !
நான் இநன்யா !