இநன்யா ;;; INANYA NAMOO NAMA ;;; நீ ஒழுக்கமாய் இரு ! நான் ஆத்ம சக்தியை தருவேன் !
அன்பாய் இரு ! ஆணந்தத்தை வாரி வழங்குவேன் !37 .இநன்யா நமோ நம.. !!INANYA NAMOO NAMA ;;;
நீ ஒழுக்கமாய் இரு ! நான் ஆத்ம சக்தியை தருவேன் !
அன்பாய் இரு ! ஆணந்தத்தை வாரி வழங்குவேன் !
அன்பாய் இரு ! ஆணந்தத்தை வாரி வழங்குவேன் !
உனக்குள் இருக்கும் ரகசியம்
சுட்டு விரலில் சொப்பன வித்தையை வைத்தேன் ! கட்டுக்கதை படித்து கண் மூடி தியானிக்கின்றாய் ! அறிந்து செயல்பட்டால் உன் உயிர் ஆர்ப்பரிக்கும் ! கோடி ரகசியம் உண்டு ! சுட்டு உருவாகும் விதையின் ரகசியத்தை உணர் ! வணக்கத்தின் முதன்மை சுட்டு விரல் ! அதுவே இதய முடிச்சின் உராய்வு ! உன் விரல்கள் அனைத்திலும் கோடி ரகசியம் உண்டு !
திருமண சடங்கில் இருவரும் சுட்டு விரல் பிடித்து அக்னியை சுற்றி வலம் வருகின்றீர்கள். தாய், தந்தையை சுற்றி வணங்காமல் அக்னியை சுற்றி அன்றே துன்பத்தை துவங்குகின்றாய். அம்மி மிதித்து அருந்ததி பார்க்க வேண்டும் என்று சொல்கின்றாய். அதன் அர்த்தம் உணவு தானியம் அரைக்க பயன்படும் அம்மியை மிதிப்பதல்ல. இருவரும் அம்மையை மதித்தால் நட்சத்திரங்களாக ஜொலிக்க முடியும் என்று அர்த்தம். அதாவது ஆண் பெண்ணின் அம்மாவையும், பெண் ஆணின் அம்மாவையும் மதித்தால் இல்லறம் சிறப்பாக இருக்கும் என்று அர்த்தம். இல்லறம் பெண்ணை வைத்து தான். முன்னோர்கள் பெண்களை இல்லாள் என்று ஏன் கூறினார்கள் என யோசி ! மனிதன் சாஸ்திரத்தில் மயங்கிவிட்டான் ! என்ன செய்வேன் நான் ?
உனை உணர வைக்க வந்த உன் உறவு நான் ! உன் மாய மயக்கத்தை தெளிவாக்க அறிவமிழ்தம் ஊட்டுவேன். பயப்படாதே ! நான் உனக்கு எல்லாம் சொல்லித் தருவேன். நான் நாள், நட்சத்திரம், பொருத்தம் பார்க்காமல் என் தாய் தந்தை ஆசியோடு ஐந்து உறவுகளை மட்டும் அழைத்து திருமணம் செய்தேன். ஆணந்தமாக இருக்கின்றேன். நீ ஆயிரம் பேரை அழைத்து நாள், நட்சத்திரம், பொருத்தம் பார்த்து திருமணம் செய்தாலும் அலங்கோலப்படுகிறாய். என்னவென்று சொல்வேன் உன் அறியாமையை ?
என் ஞானக் குழந்தை நீ !
நான் உனக்கு எல்லா ரகசியமும் சொல்லித் தருவேன். ஞானிகளும், மகான்களும், மற்றவர்களும் அனைத்தையும் மறை பொருளாய் சொல்லிவிட்டு சென்றார்கள். நான் பூடகமாய் அனைத்தையும் உனக்கு தெரியப்படுத்துவேன் ! உன்னை ஞானியாக்கி உன்னை உலகிற்கு தெரியப்படுத்துவேன் !
நீ ஞானம் அடைந்தால் அதை பிறருக்கு கொடுப்பாய் ! உனக்கு உண்மை தெரிந்தால் அதை நீ அனைவருக்கும் சொல்வாய் ! அது நான்கு கோடியாகும். இன்னும் நிறைய சொல்லித் தருவேன். பொறுத்திரு ! அதற்குள் உன்னை உணர்ந்து விடு. உனை எப்போதும் கைவிடமாட்டேன். எப்போது உணர்வாயடா ?
நீ ஞானம் அடைந்தால் அதை பிறருக்கு கொடுப்பாய் ! உனக்கு உண்மை தெரிந்தால் அதை நீ அனைவருக்கும் சொல்வாய் ! அது நான்கு கோடியாகும். இன்னும் நிறைய சொல்லித் தருவேன். பொறுத்திரு ! அதற்குள் உன்னை உணர்ந்து விடு. உனை எப்போதும் கைவிடமாட்டேன். எப்போது உணர்வாயடா ?
நீ முத்திரை காட்டி மூடனாக திரிகின்றாய் ! அபிநயம் படித்து ஆணந்தம் தொலைத்து அலைகின்றாய். கை ரேகைக்கும் உனக்கும் சம்பந்தம் இல்லை. குரங்குகளுக்கு கூட ரேகை இருக்கிறது. அது பிறரிடம் கை நீட்டுவதில்லை. உள்ளங்கையை பிறருக்கு காட்டாதே, உருகுலைந்து போவாய். தன்னை உணர்ந்தவர்கள் உள்ளங்கையை காட்டலாம். ஆசிர்வதிக்கலாம். விரலில் உள்ள நகத்தின் ஓரத்தை நகக்கண் என்கின்றாய். ஏன் என்று யோசித்தாயா ? உனக்கு இருபத்து மூன்று கண்கள் இருக்கிறது. கை, கால் விரல்களில் இருபது ! உன் புருவக் கண் இரண்டு ! நெற்றிக் கண் ஒன்று ! ஆக மொத்தம் இருபத்து முன்று கண்கள் உன்னிடம் உள்ளது. இதில் கோடி ரகசியம் உள்ளதடா. நீ இதை ஆராயாமல் வேறு எதை எதையோ ஆராய்ச்சி செய்கின்றாய் ! உன் நடுவிரலுக்கும் உன் விதிக்கும் சம்பந்தம் உள்ளது. உணர்!
பெண்கள் காலில் இரண்டாவது விரலில் மெட்டி அணியும் தத்துவம் என்ன ? ஆண் அரை ஞான் கயிறு கட்டலாம். பெண் கட்டக் கூடாது. ஏன் ? தெரியுமா ? உனக்குள்ளே சூட்சுமத்தை வைத்துக் கொண்டு ஞானத்தை தேடி வெளியில் அலைகிறாய். அரைகுறையாக படித்து அல்லல்படுகின்றாய். நகக் கண்களை எப்போதும் சுத்தமாக வை. நகத்தை வெட்டி வீட்டுக்குள் போடாதே. மண்ணில் புதைத்து வை. நாயுறுவி என்னும் புணித சமித்தை இளம் வெயிலில் வெள்ளைத் துணியில் வைத்து உலர்த்தி காலையில் அருகம்புல்லில் இருக்கும் பனித் துளியை சேகரித்து சாப்பிடு. உடலில் உள்ள நச்சுத் தன்மை வெளியேறி சுகம் பெறுவாய் ! ஆயிரம் நோய்களை குணப்படுத்தும் வல்லமை அதற்கு உண்டு. ஆலமரத்தில் உள்ள பிசின் (மரத்தை கீறினால் வரும் வெண்மை நிற பால்). காய்ந்த உடன் ஆமணக்கு விதையையும் பனை வெல்லத்தையும் சேர்த்து சாப்பிடு. ஆல் போல் தழைப்பாய். எந்த நோயும் உன்னை தாக்காது !
தபஸ் பச்சிலை என்று ஒரு புணிதமான இலை உள்ளது. அதை தேடி கண்டுபிடித்து ஒருவாய் வெறுமனே சாப்பிடு. உலகம் உன் காலடியில் இருப்பதாக தோன்றும் ! லக்ஷ்மி வாசம் செய்யும் நாயுறுவி சமித்தில் கோடி ரகசியம் உண்டு ! ஞானத்தின் வாசல் அது ! ஞானிகளுக்கும், சித்தர்களுக்கும் பிடித்த உணவு அது !
ஒன்றும் தேட முடியவில்லை என்றால் என் நாமத்தையாவது சொல். இருந்த இடம் உன்னை தேடி எல்லாம் வரும். உன் வாழ்வு மலரும். எந்த நோயும் உன்னை அணுகாது. ஏனென்றால் தேவர்கள் பேசும் வேதம் என் நாமம் ! உன் விதி எழுத்தின் சாரம். அளபெடையாய் உனக்குள் இசைக்கும் கீதம். அதனால் தான் உன் விதி மாறும் என்று சொல்கின்றேன். பூமி தாயை வணங்கு ! பூரிப்படைவேன் நான் !
ஒன்றும் தேட முடியவில்லை என்றால் என் நாமத்தையாவது சொல். இருந்த இடம் உன்னை தேடி எல்லாம் வரும். உன் வாழ்வு மலரும். எந்த நோயும் உன்னை அணுகாது. ஏனென்றால் தேவர்கள் பேசும் வேதம் என் நாமம் ! உன் விதி எழுத்தின் சாரம். அளபெடையாய் உனக்குள் இசைக்கும் கீதம். அதனால் தான் உன் விதி மாறும் என்று சொல்கின்றேன். பூமி தாயை வணங்கு ! பூரிப்படைவேன் நான் !
நான் சொன்னால் என் தாய் கேட்பாள். நீ பாவம் செய்யாமல் இரு. உன் பெயரை என் அன்னையிடம் வழி மொழிகிறேன். உனக்கு வாழ வழி தருவாள். அனைத்து சுகமும் ஆணந்தமாக தருவாள். பரஞ்சோதி நான். நான் நிகரற்றவன். தன் நிகரில்லா பெருங்கருணைமிக்கவன். என் கடைக்கண் பார்வை ஒன்றே போதும். நீ ராஜ ராஜனாவாய் ! சுய ஒழுக்கத்தின் மூலம் அனைத்தையும் கட்டுப்படுத்த முடியும். அதனால் ஒழுக்கமாக இரு ! நான் ஆத்ம சக்தியை தருவேன் ! எதையும் ஆராய்ச்சி செய் ! வன்னி மரத்தில் வான் கோடி ரகசியம் உண்டு. எறும்புகள் அங்கே தங்கி இருந்து உலக நடப்பை பேசும் ! நீயும் அந்த மரத்தடியில் உட்கார்ந்து ஆராய்ச்சி செய் ! உனக்குள் கோடி ரகசியம் வைத்தேன் ! உணர் !
உண்மையை அறி ! தெளி ! திறன் கொள் ! ஆணந்தம் உனக்குள் தான். வெளியில் இல்லை. உன் ஆண்மாவாய் நான் இருக்கின்றேன் ! என்னை உற்று நோக்கு ! என் நாமம் உன்னை தெளிவாக்கும் !
சத்தியத்தின் நாயகனாய் நான் இருக்கின்றேன்.
உன்னை நீயே சுய பரிசோதனை செய்து கொள். மனிதர்களை நான் வெறுப்பதில்லை. அவர்களின் செயலை மட்டும் தான் வெறுக்கின்றேன். ஏனென்றால் நான் படைத்த பொருள் நீ ! உன்னை எப்படி வெறுக்க முடியும் ?
உன் எல்லா கேள்விக்கும் பதில் என்னிடம் உண்டு. ஏனென்றால் படைக்கும் சூட்சுமம் தெரிந்தவன் நான். நீ ஒழுக்கமாய் இரு. சுத்தமாய் இரு. நான் உனக்கு பேராணந்தம் தருவேன்.
சத்தியத்தின் வாசல் நான்.
நான் இநன்யா !
No comments:
Post a Comment