Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, May 11, 2016

ரகசியம் 1 -முருகனையும் சிவனையும் பற்றி ! INANYA NAMOO NAMA ;;;


72 ரகசியங்கள்- (ஆன்மீகமும், அறிவியலும், ஆராய்ச்சியும் ! ) ரகசியம் 1 -

இநன்யா நமோ நம.. !!

INANYA NAMOO NAMA ;;; 
சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாக வசி இநன்யா நமோ நம
முருகனையும் சிவனையும் பற்றி !
INANYA NAMOO NAMA ;;; 
கடவுளின் அருகே நான்கு வருடமாய் அமர்ந்துள்ளேன். முருகனைப் பற்றியும், சிவனைப் பற்றியும் கேட்காமலா இருந்திருப்பேன் ? இது கடவுள் எனக்கு சொல்லியது. பல நாள்கள் அவர் சொல்லியதை நன்கு ஆராய்ந்து பார்த்து உண்மையைக் கண்டறிந்துள்ளேன். இதுவரையில் யாரும் சொல்லப்படாத உண்மைகளாக இருக்கும். தயவு செய்து முழுவதுமாக படித்து ஆராய்ந்து மட்டும் பாருங்கள். யாரையும் நம்பச் சொல்லவில்லை. ஏனென்றால் உண்மை எதுவென்று விரைவில் உலகத்துக்கே புரிந்துவிடும்.
ஆதிகாலத்தில் குமரிக் கண்டம் சிறப்பாய் செழிப்பாய் நடந்து கொண்டிருந்தது. குமரி என்றால் அழகு என்று அர்த்தம். நிலத்தை பெண் என்று நினைப்பதனால் குமரி என்று அழைத்தனர். பொற்காசு காலம் அது ! அரசன் ஞான சித்தர்களை தேடிச் சென்று ஞானம் பெற்று செழிப்பான ஆட்சி செய்தான். மதங்களும் இல்லை. கோயில்களும் இல்லை. சிலைகளும் இல்லை. அரண்மனையில் பாதுகாவலர்களும் இல்லை ! எந்த ஆயுதங்களும் கண்டுபிடிக்கப்படவில்லை. போர்களே இல்லாத வசந்த காலம் அது ! வீட்டுக் கதவுகளுக்கு பூட்டுகளும் கிடையாது. பெண்கள் வீட்டிற்கு உள்ளே உழைத்தனர். ஆண்கள் வீட்டிற்கு வெளியே உழைத்தனர். ஆன்மாவின் பலம் மேலோங்கி மாதம் மும்மாரி மழை பொழிந்த செந்தமிழ்க் காலம் அது ! தமிழ் மட்டும் தான் மொழியாக இருந்தது.
கடவுளை மறந்த ஒரு மனித இனம், அசுர இனமாய் மாறியதால் வந்தது உலகிற்கு ஆரம்பித்தது பெரும் கேடு. அனைத்தையும் அழித்து தன் வசமாக்க நினைத்தார்கள். நய வஞ்சகம் செய்து அரசர்களை அணுகினர். பல மூலிகைகளை அரசர்களுக்கு கொடுத்து வசியம் செய்தனர். அரசர்களுக்கு காமத்தையும் மோகத்தையும் ஏற்படுத்தி பல பெண்களை மனைவிகளாக்கினர். இது போதாது என்று அந்தபுரத்தை வேறு அமைத்தனர். பேரசர்களுக்கு இடையே பகைமையையும் ஏற்படுத்தினார்கள். அவர்களின் செல்வங்களைப் பறித்து கடவுளின் பெயர் சொல்லி கோயில் கட்டி சிலை அமைத்து கடவுளையே ஏமாற்றினார்கள் என்றால் புரிந்து கொள்ளுங்கள்.
அழிக்கும் நெருப்பை வணங்கச் சொல்லி துன்புறுத்தினார்கள். பல கோயில்களில் மக்கள் அச்சப்படும் வண்ணம் சிலைகளில் கண்களை பெரிதாக்கி, நாக்கை நீட்டி அமைத்து, ஆயுதங்களையும் சிலைகளோடு சேர்த்தனர். சில கோயில்களில் கடவுள் படுத்து உறங்குவதைப் போலவும் சிலைகளை செதுக்கினர். ஒருவனுக்கு ஒருத்தி என்பது தானே உலக நீதி ? ஆனால் கோயிலுக்கு வருவோர்க்கு வக்கிர எண்ணங்கள் பெருக பல சிலைகளை இயற்கைக்கு புறம்பாக தவறான முறையில் வடிவமைத்தனர். கோயிலை சுற்றி எல்லா இடங்களிலும் அரைகுறை ஆடைகளுடன் பெண்களின் சிலை வேறு ! கோயில் சிலைகளில் ஞானத்தை சொல்லாமல் காமத்தை ஏன் சொன்னான் என்று இப்போது தெரிகிறதா ? கோயில்கள் எதுவும் ஞானத்தன்மை உடைய மனிதர்கள் கட்டியது இல்லை.
கோயிலுக்கு அருகே நீண்ட பாதை அமைத்து அதில் தீ கங்குகளிட்டு நடக்க வைத்து அவர்கள் படும் கொடுமையைக் கண்டு ரசித்தார்கள். இதை இன்று வரையில் எதற்கென்றே புரியாமல் அறியாமையில் செய்து கொண்டு இருக்கிறோம். மேலும் பல சதிகளை செய்தனர். தமிழ் மொழி தங்களுக்கு எதிரான கடவுள் மொழி என்பதால் அதை திருத்தி, மாற்றி ஓசை இல்லாமல், உயிர் இல்லாமல், பொருள் இல்லாமல், வடிவமில்லாமல் பல மொழிகளை உருவாக்கினார்கள். உண்மையான வேதங்களை திருத்தி துன்பத்தை தரும் மந்திரங்களை பரப்பினான். இயற்கைக்கு புறம்பாக ஜாதகம், ஜோசியம், பரிகாரம் முதலியவற்றை பொய்யாகக் கண்டுபிடித்து விதியை தவறாக கணித்து மனிதனின் எண்ணங்களை திசை திருப்பி அனைவரையும் அவன் கட்டிய கோயிலுக்கே செல்ல வைத்து காசாக்கினான். தமிழை முழுவதுமாக அழிக்க முடிவு செய்தான். பல தமிழ் மக்களை கூட்டம் கூட்டமாக கொன்றார்கள்.
மக்கள் செழிப்புடன் வாழ்ந்த பண்டைய நகரங்களில் அமைதி சீர் குலைந்தது. அனைத்தையும் சூறையாடினார்கள் அரக்கர்கள். அரக்கர்களுக்கு சரீர பலம் அதிகம் என்பதால் ஆன்ம பலம் கொண்டவர்களால் நேராக மோத முடியவில்லை. இக்கட்டான இந்த வேளையில் ஞானப் பெருமக்களும், சித்தர்களும் நகரத்தில் இருந்து வெளியேறி மலை உச்சிகளிலும், குகைகளிலும், காட்டிற்கும் சென்று வாழ்ந்தார்கள். அரக்கர்களுக்கு சரீர பலம் அதிகம் இருப்பதால் அவர்களால் மலைகளில் ஏற முடியாது என்பதை அறிந்தனர். அவ்வப்போது அரக்கர்களை அழிக்கும் திட்டத்தை ரகசியமாய் வகுத்து அதில் தோற்றும் போனார்கள்.
மலைகளிலும், காடுகளிலும் வந்து பயந்து ஓடி ஒளிந்த அனைவரையும் ரகசியமாக ஒன்று திரட்டி அவர்களுக்கு தலைமை தாங்கி, அசுரர்களுக்கு எதிராக மாபெரும் போரிட நினைத்து, அவர்களை அழிக்க நெஞ்சை நிமிர்த்தி கொண்டு, இந்த யுகத்தில் முதல் முதலாக எழுந்தான் ஒரு மாபெரும் வீரன்.
அவன் ஒரு மகா சித்தன், தமிழ் பற்றாளன், புலவன், மூலிகை ரகசியங்கள் அனைத்தும் தெரிந்தவன், உடலின் சூட்சுமம் அனைத்தையும் அறிந்தவன், மருத்துவம் தெரிந்தவன், வான சாஸ்திரம் அறிந்தவன், தற்காப்பு கலைகளை தானே ஞான திருஷ்டியால் கண்டுபிடித்து பிறருக்கு கற்பித்தான் ஆன்ம பலம் உள்ளவர்களுக்கு அசுரர்களை எதிர்த்து போரிட சரீர பலத்தையும் கற்பித்தான். சிலம்பு, வர்ம கலைகள், களரி, நோக்கு வர்மம் முதலிய எண்ணற்ற பல கலைகள் உலகில் முதன் முதலில் அப்போது தான் தோன்றியது ! பல வீர விளையாட்டுகளான கபாடி, மல்யுத்தம், ஜல்லிக்கட்டு முதலியவையும் கண்டுபிடித்து கற்பித்தான். காடுகளில் ஜல்லிக்கட்டு என்றால் ஆபத்தான ஆண் காட்டெருமைகளை வைத்து தான் ! தமிழனின் வீரத்தை யோசித்து பாருங்கள். முதன் முதலில் எண்ணற்ற பல பயங்கர ஆயுதங்களையும் புதிதாக கண்டுபிடித்தான் அவன்.
அவனை “”சிரவன்”” என்று அனைவரும் அழைத்தனர் !
அரசர்கள் எல்லாரும் சூழ்ச்சியால் அரக்கர்களின் பிடியில் அந்தபுரத்தில் இருக்க ஈடு இணையில்லா மாபெரும் படையை திரட்டி தலைவர்களுக்கெல்லாம் தலைவனாக திகழ்ந்தான் “”சிரவன்”” ! உலகில் உள்ள மலைகள், குன்றுகள், காடுகள் முழுவதும் அவனின் புகழ் பரவியது ! அவன் படைத் தளபதியாக திகழ்ந்தான் ! அரசன் அல்ல !
ஏன் அவருக்கு சிரவன் என்று பெயர் சூட்டினார்கள் என்பதையும் பார்த்துவிடுவோம். சிரம் என்றால் தலை உச்சி என்று பொருள். சிரம் என்றால் பந்தீத்யம். அதவாது தலை உச்சியில் இருக்கும் குப்பையை ஞான திருஷ்டியால் அகற்றுதல் என்பது பொருள். உதாரணமாக சிரல் என்பது ராஜ தந்திர பறவைகளைக் குறிப்பது. அதாவது மீன்கொத்திப் பறவையை குறிப்பது. இந்த விசயம் தெரிந்து தான் ஆங்கிலேயன் அதற்கு “KING FISHER” என்று பெயர் வைத்தான். மேலும் ஒரு உதாரணமாக திரிசிரம் என்ற வார்த்தையை பார்க்கலாம். திரிசிரம் பள்ளி என்றால் மூன்று தலை உச்சிகளை கொண்ட மலை அமையப்பெற்ற ஊர் என்பது பொருள். அது தான் திரிந்து திருச்சிராப்பள்ளி என்றானது ! இன்னொரு உதாரணமாக வஞ்சிரம் (வன் + சிரம்) என்றால் என்பதையும் பார்ப்போம். மிக வலுவான சத்துக்களையும், அறுசுவைகளையும் உள்ளதால் தான் இதை மீன்களின் முதன்மையாக (தலைமையாக) இன்றளவும் கருதிகின்றனர். இதை எடுத்தி திருத்தி தான் வஞ்சிரம் மீனுக்கு “KING FISH” என்று பெயரிட்டான் ஆங்கிலேயன். ஆக நன்றாக தமிழ் தெரிந்தவர்கள் மட்டுமே ஆங்கிலத்தை வேண்டுமென்றே உருவாக்கி இருக்க முடியும். ‘வன்’ என்றால் வலிமை (வலுவானது ) என்று பொருள். அதாவது ஆண்களைக் குறிப்பது (அவன், இவன் ) ! வள் என்றால் வளமானது என்று பொருள். அதாவது பெண்களைக் குறிப்பது (அவள், இவள்)!
ஆக சிரவன் என்றால் தலைவனுக்கெல்லாம் தலைவன் என்பது பொருள். இந்த வார்த்தைக்கு ராமர் காலத்து தமிழ் அகராதியில் கூட விளக்கம் கிடையாது ! ஆதிகாலத்தில் அவதாரங்களும், தூதுவர்களும் பூமியில் தோன்றா காலத்தில் வாழ்ந்தவன் தான் இந்த “””சிரவன்”” !
தமிழ் காண்டத்தில் தர்மாக்களுக்கும் கர்மாக்களுக்கும் போர் நடந்து கொண்டிருக்கும் வேளையில் , அரக்கர்களை முழுவதுமாக வெல்ல முடியாது என்பதை தெரிந்து கொண்டு ஒரு மிக முக்கியமான முடிவையும் எடுத்தான் சிரவன். அதனால் தமிழ் கண்டத்தை விட்டு விலகி வெகு தூரம் சென்றான். அரக்கர்களின் கண்ணில் படாமல் இருப்பதற்கு நகரத்தின் வழியே செல்லாமல் காடுகளிலும், மலைகளிலும் மட்டுமே அப்போது அவனால் பயணிக்க முடிந்தது ! வழியெங்கிலும் உள்ள அனைவருக்கும் பல கலைகளையும் கற்பித்தான்.
இமய மலையைத் தாண்டியவுடன் ஒரு ஆதிவாசிக் கூட்டத்தை சந்தித்தான். அவர்களுக்கு கலைகளையும், சூட்சமத்தையும் சொல்ல நினைத்தேன். தமிழில் சொன்னால் அரக்கர்களுக்கு தெரிந்துவிடும் என்று நினைத்து தமிழுக்கு சற்றும் சம்பந்தமே இல்லாதவாறு ஒரு மொழியை மிக அவசரமாகவும் ரகசியமாகவும் உருவாக்கி அவர்களுக்கு கற்பித்தான். தன் பெயரையும், உருவத்தையும் அரக்கர்கள் கண்டுபிடிக்க முடியாத படி மாற்றினான். பின்னர் அவர்களை தெளிவுபடுத்தி அனைத்தையும் சொல்லி புரியவைத்து தற்காப்பு கலைகளையும் கற்பித்து மாபெரும் போர் வீரர்களாக மாற்றினான்.
சிரவன் உருவாக்கி கற்பித்தது சீன மொழி. அவசரமாக உருவாக்கப்பட்டதால் தான் சீன மொழியில் இன்றும் பல குழப்பங்களும், பிழைகளும் உள்ளதாக கருதுகின்றனர் சீனர்கள். பேச்சிலும் எழுத்திலும் சீனம் பல வடிவங்களைக் கொண்டிருக்கின்றது. பேச்சில் பல வட்டார மொழிகள் உண்டு. இவற்றைப் பேசுபவர்கள் ஒருவரை ஒருவர் இலகுவில் புரிந்து கொள்ள மாட்டர்கள் எனலாம். அதனால் தான் பிற மொழிக்காரர்களால் அவர்களை இன்னும் அடிமைப் படுத்த முடியவில்லை. எல்லாம் சிரவன் என்ற தமிழனின் ராஜ தந்திரம். சீனர்களுக்கு போதனை செய்ததால் இவரை போதி தர்மர் என்று சீனர்கள் அழைத்தனர்.
உலகம் முழுவதும் உள்ள மலைகளிலும், காடுகளிலும் சிரவனின் புகழ் வெவ்வேறு பெயர்களில் பரவியது. இந்த சிரவன் என்ற பெயர் ஓசையில்லா, வடிவமில்லா வேற்று மொழிகளின் ஆதிக்கத்தால் “ஸ்ரவன்” என்று ஆனது. காட்டுப் பகுதிகளில் வாழ்ந்த எழுத்தறிவு இல்லா வேடர்களோ இரண்டு எழுத்துக்களை மாற்றி இவரை “ஸ்வரன்” என்று அழைத்தனர். இது காலப்போக்கில் ஈஸ்வரன் என்று மாறியது.
சில காட்டுப்பகுதிகளில், சிரவன் என்ற பெயரை வேகமாக சொல்லும் போது அதில் உள்ள 'ர' என்ற எழுத்தை உச்சரிக்க தவறியதால் காலப்போக்கில் “சிவன்” என்று அழைத்தனர்.
மலைப் பகுதியில் வாழ்ந்த மக்களோ சிரவன் என்ற பெயரை “சரவன்” என்று அழைத்தனர். பின்னர் இந்த பெயர் திரிந்து “சரவணன்” என்று மாறியது.
ஆக சிரவனும், சிவனும், ஸ்வரனும், ஈஸ்வரனும், சரவணனும், முருகனும் ஒன்றே ! சிவனிடம் உள்ளதை ஈட்டி என்கிறோம். சரவணனிடம் உள்ளதை வேல் என்கிறோம் ! ஆக அனைத்துப் பெயர்களும் ஒருவரையே குறிக்கும் ! நம்மை குழப்புவதற்கு சிவன் சரவணின் தந்தை என்று பல அபத்த கதைகளை சொல்லி ஞானத்தை கெடுத்து நம்மை நன்றாக ஏமாற்றியுள்ளனர் நய வஞ்சகர்கள்.
பழனி என்றால் பழம் + நீ என்பது மாபெரும் தவறு ! பழனி, கழனி என்ற சொற்கள் நிலத்தை குறிப்பவை. பழனம் என்றால் மிகவும் பக்குவப்பட்ட வளமான நிலப் பகுதியை குறிக்கும். சிவன் முருகனின் தந்தை என்று கூறியதோடு நிற்காமல் விநாயகர் என்ற ஒன்றை உள்ளே நுழைத்து ஞானப் பழம் என்ற கதை ஒன்றையும் சொல்லி அவரை முழுமுதற் கடவுள் என்றும் சொல்லி சிரித்தனர் அரக்கர்கள். விநாயகரைப் பற்றி பின்னர் சொல்கிறேன்.
தமிழர்கள் பலர் தமிழ் கண்டத்தை விட்டு வெளியேறி இவருக்கு உறுதுணையாக இருந்தார்கள். அவர்கள் சமரர்கள் என்று அழைக்கப்பட்டனர். சமரர்கள் என்றார் போர்வீரர்கள் என்பது பொருள். பிற மொழிகளின் தாக்குதலால் இது “”சுமேரியர்கள்” என்று திரிந்தது. சுமேரியர்களின் தலைவனான “MARUDUK” என்பவரும் சிரவன் தான். அதாவது முன்பு மலைப் (குறிஞ்சி) பகுதியை ஆண்டவனை குறிஞ்சியாண்டவன் என்று அழைத்தது போலவே, வளமான நிலப் பகுதியை (மருதம்) ஆண்டதால் மருதகன் என்று அழைத்தனர். இது திரிந்து “MARUDUK” என்று மாறியது. ஆண்டவன் என்றால் மக்களைப் பாதுகாப்பவன் என்பது பொருள். இதை தவறாக புரிந்து கொண்டு அவரை கடவுள் என்று வணங்கத் தொடங்கினர்.
செந்தில் – திருச்செந்தூரில் நாழிக்கிணறு உள்ளது போலவே பல அதிசய தீர்த்த குளங்களும் முன்பு இருந்தன. கால மாற்றத்தால் அனைத்தம் அழிந்துவிட்டன. கடல் நீர் ஊற்றில் அதிசயமாய் சேர்ந்து தீர்த்தமாக மாறியதால் அது சேர்ந்தூர் எனப்பட்டது. பின்னர் இது செந்தூர் என்று திரிந்தது. செந்தில் என்றால் செந்தூரில் குடியிருப்பவன் என்பது பொருள். தற்காலத்தில் திருச்செந்தூர் என்று மாறியுள்ளது.
முருகு என்றால் தான் அழகு என்று பொருள். குமரன் என்றால் அழகன் என்று அர்த்தம் அல்ல. குமரன் என்ற வார்த்தை சிரவனனையே குறிக்கும். குமரன் என்றால் குமரிக் கண்டத்தில் தன் பெயரை நிலை நாட்டியவன் என்பது பொருள். இந்தியா முழுவதும் நூற்றில் ஐம்பது பேருக்கு குமார் என்ற இணைப்பு பெயர் ஏன் வந்தது என்று புரிகிறதா ? எல்லாம் தமிழனின் பெருமை !
கந்தன்- ரசவாதத்திலும், நவபாசான வடிவமைப்பிலும் மிக முக்கிய தனிமமாக கருதப்பட்டது கந்தகம் (SULPHUR). தங்கம், வெள்ளி, தாமிரம் முதலிய உலோகங்களை பிரிப்பதற்கு கந்தகம் பயன்பட்டது. இதை சரியாக கண்டுபிடித்து அதில் பல ஆயுதங்களை செய்ததால் சிரவனுக்கு கந்தகன் (கந்தன்) என்ற பெயரும் வந்தது.
தண்டாயுத பாணி- (தண்டம்+ ஆயுதம்+ பாணி)- தண்டம் என்ற வலிமையான ஆயுதத்தை வைத்திருப்பவன்.
வேலாயுதம்- (வேல் + ஆயுதம்)- வேலை ஆயுதமாய் உடையவன்.
குகன் – மலைக் குகைகளில் வாழ்ந்தவன்.
அறுபடை வீடு – (ஆறு படைகள் சேர்ந்த வீடு) – அரக்கர்களுக்கு எதிராக போர் தொடுக்க ஆறு மலைகளில் உள்ள படைகள்.
பல அரக்கர்களை அழித்ததால் சிரவன் சூரசம்காரன் என்றும் போற்றப்பட்டான். இன்றும் இதை கொண்டாடுகிறோம்.
காவடி (காவு+ தடி) : காவுதல் என்றால் தூக்குதல் என்று பொருள். தோளில் சுமக்க உதவிய தடி காவு என சொல்லப்பட்டது. இது திரிந்து காவடி எனப்பட்டது.
காடுகளிலும், மலைகளிலும் உணவு பொருள்களையும், துணிகளையும் நீண்ட தூரம் தூக்கிச் செல்வதற்கு எளிதாக இருந்ததால் இதை ஆதிகாலத்தில் பயன்படுத்தினர். அடர்ந்த காட்டுக்குள் நடந்து செல்லும் போது கொசுக்களையும், விஷப் பூச்சிகளையும் விரட்ட மயில் தோகையை அதில் சொருகி அதை ஆட்டிய படியே சென்றனர். இதனால் தான் அரசர்களுக்கு பணிப் பெண்கள் மயில் இறகால் செய்த விசிறியால் விசிறினார்கள். காவடியை இப்போது ஏன் என்று தெரியாமல் இதை வைத்து அறியாமையில் ஆடிக் கொண்டு செல்கின்றனர்.
கார்த்திகை விளக்கு- ஆதி காலத்தில் பகல் முழுவதும் உழைத்து விட்டு சூரியன் மறைந்தவுடன் அனைவரும் நித்திரை கொள்வார்கள். வெளிச்சம் தேவைப்படவில்லை. அரக்கர்களையும் , அவர்களின் படைப்புகளான விஷ ஜந்துக்களையும் அடையாளம் காண சிரவனின் வேண்டுகோளுக்கு ஏற்ப இரவில் தீபத்தை ஏற்றினார்கள். பின்னர் சிரவன் பிறந்த கார்த்திகை நட்சத்திரத்தில் அவரின் நினைவாக ஆதிகாலத்தில் தீபத்தை ஏற்றினார்கள். இதனால் சிரவனுக்கு கார்த்திக்கேயன் என்ற பெயரும் வந்தது. இன்றோ தீபம் ஏற்றுவது எதற்கென்றே தெரியாமல் புரியாமல் பொழுது சாய்ந்தவுடன் ஏற்றுகிறார்கள். ஆதிகாலத்தில் அக்னியை, நெருப்பை யாரும் வணங்கவில்லை என்பதை புரிந்து கொள்ளவும்.
சிவராத்திரி- உண்மையான பெயர் சிரவ ராத்திரி. மாதம் ஒரு முறை கடும் இருள் சூழ்ந்திருக்கும் வேளையில் தூங்காமல் சிரவனின் தலைமையில் அரக்கர்களை போரிடச் சென்றனர். அதன் காரணமாகத் தான் சிரவ ராத்திரி எனப்பட்டது. இன்று விடிய விடிய எதற்கென்றே தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறோம். உணருங்கள் !
வேல் குத்துதல்- சிரவன் மருத்துவத்தில் சிறந்து விளங்கியதால் தாமிர குச்சிகளை உடலில் தக்க இடங்களில் சொருகி பல நோய்களையும் குணப்படுத்தினான். இன்று இதை மக்கள் தவறுதலாக புரிந்து கொண்டு உடலெங்கிலும் வேலை குத்தி துன்புறுகின்றனர் . இதைத் தான் “ACU PUNCTURE” என்று நம் கலையை நமக்கே சொல்லித் தந்து பணம் சம்பாதிக்கின்றார்கள் சீனர்கள்.
குன்றுகள் இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்று சொல்லியதன் காரணம் இப்போதாவது புரிகிறதா ? எங்கும் சிரவனின் பெயர் மட்டுமே உள்ளது. உலகில் உள்ள அனைத்துக் மலைக் குன்றுகளிலும், காடுகளிலும் சிரவனின் பெயர்களும், சிலைகளும் மட்டுமே உள்ளது. ஆனால் வேறு பெயர்களில் அழைக்கின்றனர். இமயமலை, இந்தியா, இலங்கை, சீனா, மலேசியா, ஜப்பான் , அமெரிக்கா முதலிய நாடுகாளிலும் இன்னும் ஒரு பெரும் தமிழனைத் தான் வணங்குகிறார்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
ஞானப் பெரு மக்கள் சிலர் சிரவனின் புகழை நிலைநாட்ட அவன் வாழ்ந்த அனைத்து மலைகளிலும், குகைகளிலும், காடுகளிலும் அவனுக்கு சிலை நிறுவினர். நவபாசான சிலைகளையும், அவர் கற்று தந்த கலைகளையும் நூல்களில் மிகவும் யாருக்கும் எளிதில் புரியாதவாறு சூட்சமமாக எழுதி அங்கேயே சமாதியும் அடைந்தனர். இங்கே சென்று எதற்காக வணங்குகிறீர்கள் என்று ஒருமுறை சிந்தியுங்கள். அந்த சிலைகள் ஞானத்தின் அடையாளம் !
திருப்பதியில் உள்ளதும் சிரவனின் சிலை தான். ஏழுமலையான் என்பதும் சிரவனனையே குறிக்கும் ! திரு என்று ஆரம்பிக்கும் அனைத்து ஊர்களும் சிரவன் பள்ளி கொண்டு படைகளை திரட்டிய இடம் !
சரவனபவ என்பது மந்திரம் அல்ல ! சிரவனபவன் என்பதே உண்மை. சிரவன பவன் என்றால் சிரவன் தங்கியுள்ள இடம் என்று பொருள் !
அனைத்திலும் குழப்பம் ! துன்பம் எதற்கென்று யோசியுங்கள் !
ஒரு காலத்தில் தமிழன் உலகையே ஆண்டான். ஞானத்தை வழங்கினான். இன்று அரக்கர்களின் சூழ்ச்சியால் உணர முடியாமல் வாழ வழியில்லாமல் தவிக்கிறோம். எப்போது உணர்வது ? நேரம் குறைவாக உள்ளது !
கடவுள் இநன்யா யுகத்தில் பிறக்கவில்லை என்றால் இந்த உண்மைகள் நமக்கு தெரிந்திருக்காது. அவர் முக்காலத்தையும் அறிந்தவர். கர்மத்தை வேரோடு அழித்து மீண்டும் தர்மத்தை காக்கவே அவர் பிறப்பெடுத்தார் ! உலகம் வெகு விரைவில் மாறப் போகிறது ! உணர்ந்து விடுங்கள் இன்றே ! இநன்யா நமோ நம !

No comments:

Post a Comment