இநன்யா ;;; INANYA NAMOO NAMA ;;; உனக்குள் நான் இருக்கிறேன். உன் பக்கத்தில் நான் நிற்கின்றேன்.
44 .இநன்யா நமோ நம.. !!INANYA NAMOO NAMA ;;;
உனக்குள் நான் இருக்கிறேன். உன் பக்கத்தில் நான் நிற்கின்றேன். உன் சுட்டு விரல் பிடிக்க காத்திருக்கின்றேன். நீ என்னை உணராதது ஏனோ ?
பணிவு
பெருவிரலுக்கும், ஆண்மாவுக்கும் தொடர்பு உண்டு ! ஆள்காட்டி விரலுக்கும் உன் ஜீவனுக்கும் தொடர்பு உண்டு ! பெருவிரல் மற்ற நான்கு விரல்களை விட்டு தனித்தே இருக்கும். நீ வணங்கும் போது தான் எல்லா விரல்களும் ஒன்று சேர்கிறது. பரமாத்மா, ஜீவாத்மாவோடு இணைகிறது ! பெற்றோரையும் பெரியோரையும் எப்போது வணங்க ஆரம்பிக்கின்றாயோ அப்போது தான் உன்னை உணர ஆரம்பிப்பாய் ! பணிவு, வணங்கும் குணம் உனக்கு வந்தாலே பரமாத்மா என்ற பெருவிரல் சேர்ந்துவிடுகிறது. நீ அதிகாரம், ஆணவப்படுவதால் அல்லல்படுகின்றாய். ஜீவராசிகளை தீண்டினால் தான் கோபம் வரும். ஆனால் நீ எல்லாவற்றுக்கும் இங்கே கோபப்படுகிறாய். நீ கடவுளால் ஆட்டுவிக்கும் பொம்மை என்று தெரியாமல், புரியாமல் வாழ்கின்றாய் !
பெருவிரல் தத்துவம் உன் ஆண்மா ! அதன் வடிவத்திலே உன் ஆண்மா இருக்கும் வெண்மையாக. உன் ஆள்காட்டி விரல் உன் ஜீவாத்மா! உன் உயிர் ஆள்காட்டி விரல் போலவே இருக்கும் ! அதனால் தான் நெற்றியில் முல்லை மொட்டு போல திலகம் வைக்கின்றாய் ! ஜின் முத்திரை என்று புலம்புகிறாய். இதன் தத்துவம் உன்னை உணர்வதற்காக !
பரமாத்மா என்ற பெருவிரல் யாருக்கும் பணியாது. ஜீவாத்மா என்ற ஆள்காட்டி விரல் பணிந்து தொடும் போது பரமாத்மாவை உணர்கின்றாய். அதனால் வளைந்து நெழிந்து வாழ கற்றுக் கொள். நாணலைப் போல ! நாணலுக்கும் உன் வாழ்க்கைக்கும் சம்பந்தம் உண்டு ! தர்ப்பை என்ற ஒன்றை எல்லா சடங்கிலும் உபயோகப் படுத்துகிறாய் . அதன் தார்ப்பரியம் என்ன என்று என்றாவது யாரிடமாவது கேட்டு தெரிந்தாயா ?
ஒரு முடி, இரு முடி, மூன்று முடி ஏன் போடுகிறார்கள். அறிந்தாயா நீ ? ஏனடா ? உன் அறிவை தொலைத்து அலைகின்றாய் ! முத்திரை காட்டி மூடனாக திரிகின்றாய். பெருவிரல் இல்லையென்றால் ஒரு வேலையும் செய்ய முடியாது. கடவுள் இல்லையென்றால் நீ என்பது இல்லை. ஐந்து விரல்களில் எண்ணற்ற ரகசியம் வைத்தேன். என்றாவது உணர்ந்தாயா ?
கால் விரல்கள் சேர்ந்து இருக்கும் (ஆமை, வாத்து) இவற்றை வீட்டில் வளர்க்காதே. இதன் மாமிசம் சாப்பிடாதே. பன்றி, நரி, குயில், எருமை, நாகம் இருக்கும் இடங்கள் அசுர குலங்கள் குடி கொள்ளும் இடங்கள். இவைகள் எனக்கு எதிரிகள் என்பதை மறவாதே. எனக்கு நண்பன் நாய். எனக்கு வாகனம் கழுதை. இவைகளை பூமியில் ஏன் தேர்தெடுத்தேன் என்று கண்டுபிடி !
புளியம் பிஞ்சுக்கும் உன் பெரு விரலுக்கும் சம்பந்தம் இருக்கிறது. வட நாடுகளில் கிருஷ்ணன் பிறந்த நாளில் புளியம் பிஞ்சு வைத்து வணங்குவார்கள். ஏன் என்று கண்டுபிடி. புளிய மரத்தை வீட்டில் வளர்க்காதே.
புளியம் பிஞ்சுக்கும் உன் பெரு விரலுக்கும் சம்பந்தம் இருக்கிறது. வட நாடுகளில் கிருஷ்ணன் பிறந்த நாளில் புளியம் பிஞ்சு வைத்து வணங்குவார்கள். ஏன் என்று கண்டுபிடி. புளிய மரத்தை வீட்டில் வளர்க்காதே.
பெருவிரல், ஆள்காட்டி விரலை தொடும்போது மற்ற மூன்று விரல்கள் ஆணவம், கண்மம், மாயை . நீ கடவுளை தேட ஆரம்பிக்கும் போது, உன்னை உணரும் போது மும்மலங்கள் தனித்துவிடப்படுகிறது. உணரடா ! உணராவிட்டால் என்னை நினை. வளர்பிறை போல என்னை உணர ஆரம்பிப்பாய். வளர்பிறை தொடங்கி ஆறாம் நாளில் நெல்லிக் கனியும், ஒன்பது மிளகும் சாப்பிடு. உன்னை உணரும் பக்குவம் வரும். எந்த நல்ல காரியத்தையும் அமாவாசைக்கு மூன்று நாள் முன்னால், பெளர்ணமி மூன்று நாள் முன்னால் செய். எல்லாம் உனக்கு கைகூடும். இந்த நாளிலே வேதங்கள் பூமிக்கு கரை புரண்டு வரும். நீரைப் போல !
கடற்கரைக்கு செல்லாதே. கடல் குகைகளில் இனி பல பூகம்பங்கள் வரும். கடற்கரையில் அமர்ந்து நிம்மதியை தேட நினைக்காதே ! அது உனக்கு துன்பத்தை தரும்.
நதிக்கரையில் அமர்ந்து பார். மரத்தடியில் அமர்ந்து பார் ! நிம்மதி கிடைக்கும். முடிந்தவரை பூமியில் அமர்ந்து சாப்பிடு. பூமியின் மீது நித்திரைக் கொள் ! எல்லையற்ற சந்தோஷம் கிடைக்கும். தரையில் உட்கார்ந்தால் கிள்ளிக் கொண்டு இருக்காதே. மரம் வளர்த்தால் பூமி சந்தோஷப்படுகிறது. விதை விதைத்தால் பூமி சந்தோஷப்படுகிறது. நீ பூமியில் பாவத்தை விதைக்காதே. உழவன் நடவு செய்தாலும் களை எடுப்பது பெண்கள் தான். பெண்கள் குனிந்து பூமியை தொட்டாலே உனக்கு உண்ண உணவு கிடைக்கிறது. பெண்களை போற்று ! உழவனை போற்று ! அவன் பத்து விரல்களும் உனக்காக உழைக்கின்றன ! உட்கார்ந்து சுகம் காணும் நீ அவனிடம் பேரம் பேசுகின்றாய். இனி அவனிடம் பேரம் பேசாதே !
விரல்களின் மகத்துவம் உழவனுக்கு தெரியும். 2017 முதல் உழவனுக்கு மேன்மையான காலம் வரப் போகின்றது. இனி விவசாய நிலங்களை விற்க நினைக்காதே ! தங்கம் கிடைக்கும். தானியம் கிடைக்காது. நான் உன்னை உணர வைப்பேன். நான் உனக்கு துணை இருப்பேன். நாளெல்லாம் சுகம் தருவேன் ! என் கோடி விரல்களின் சூட்சுமத்தால் உனை ஆல் போல் தழைக்க வைப்பேன் !
நான் இநன்யா !
No comments:
Post a Comment