to INANYA MAHA MUNIVAR
30-11-2017
தமிழ், இனிமை ! அழகு ! ஆணந்தம் ! அமைதி தரும் ஆணந்த மொழி ! மொழியின் மோகம் உணர்ந்தேன் ! உண்மை தமிழை உணரடா !
அமிழ்த மொழி தமிழ்
மொழிகளில் முதன்மை மொழி ! இனிய மொழி ! இனிமை மொழி ! என் உயிர்த் தமிழ் மொழி ! தமிழின் சாறு அருந்தினேன். மொழியின் மோகம் உணர்ந்தேன். இனிதான தமிழ் மொழியை பேச பிறப்பெடுத்தேன் இங்கு !
நாவில் தேன் ஊறும், தித்திக்கும் “ழ்” என்ற உயிர் மெய்யை சுழட்டும் பொழுது உன் உள் நாக்கில் பேரின்ப ரசத்தை தரும். உலகில் உள்ள மொழிகள் அனைத்தையும் கடவுள் படைத்தான். மனிதன் உருவாக்கினான். ஆனால் தமிழ் மொழியையும், மனிதனையும் சிந்தித்து செயல் வடிவம் கொடுத்து அழகாய் வடிவமைத்து உருவாக்கினான் ! அதை சித்தர்கள் செதுக்கினான்.
இனிய மொழி தமிழை உணர்ந்தவன் கடவுளை எளிதாய் நெருங்குவான். இனன்யம் என்ற பிரம்ம லிபி என்ற பெரும் மொழியின் தாய் மொழி தமிழ் ! இதன் தொடக்கம் பூமி படைத்தபோதே உருவாக்கப்பட்டது. எல்லாம் மொழிகளும் இடையில் வந்ததே. கன்னியாகுமரியில் முதன்மொழி பேசப்பட்டது. பின் ஆஸ்திரேலியாவில் வேர் ஊன்றப்பட்டது. ஆப்பிரிக்காவில் செயல் வடிவம் கொடுத்து உலகமெல்லாம் பேசப்பட்டது.
வீர தமிழன் உலகை எல்லாம் முன்னால் ஆண்டான், ஆணவமில்லாமல். பிற எந்த மொழியையும் மனிதர்களுக்கு பெயராக சூட்டப்படவில்லை. ஆனால் தமிழைத்தான் மனிதன் தன் பெயராக சூட்டி மகிழக் கண்டேன்.
தமிழ் மொழி போல் இனிய மொழியை எங்கும் காணேன் ! அதனால் பிறமொழிகள் குறை இல்லை. எல்லாம் இதனிலிருந்தே தொடங்கியதை மறந்தான் மானிடன். நான் தமிழ் நாட்டில் பிறக்க மேலே ஆசை கொண்டேன்.
இது புணித பூமி ! இங்கே வாழ்பவன் வரம் பெற்று வந்தவன். இந்தியா என்ற ஞான தேசத்தில் பிறந்தவன் இறுதி பிறப்பாய் இருக்கும். ஆனால் தமிழ்நாட்டில் பிறந்தவன் மீண்டும் பிறக்கமாட்டான். தன்னை உணரும் பக்குவம் இங்கே அனைவருக்கும் உண்டு ! ஞானிகள், மகான்கள், சித்தர்கள் கடவுள்கள் வாழும் நிறைந்த பூமி இது !
வரம் வாங்கி வந்ததை மறந்து போகிறாய் ! வாசல் இது தான் என்று தெரியாது கிரங்கி போகின்றாய். பேச பேச எச்சில் ஊறும் ஆதி மொழி தமிழ் ! உன் ஜீரண உறுப்புகளை நோயில்லாமல் வைக்கும். புரிந்தவன் ஞானி தான். தமிழ் என்று சொன்னால் உள் நாக்கு மடிந்து நல்வினையை உருவாக்கும் ! அதனாலே சித்தர்கள் தமிழ் பேசி கடவுளை துதிபாடி ஆணந்தித்தான்.
உயிர், மெய், உயிர்மெய் என்று ஊமை கூட்டத்தை உசுப்பி எழுப்பும் மொழி ! அம்மா என்ற இந்த இனிய உறவின் மொழியை பிற மொழியில் தேட கிடைக்காதது. பசு கூட அம்மா என்று தான் அழைக்க கண்டேன். ஆதி தமிழன் சாரம் இப்போது இல்லை. இப்போது மொழியை சிதைக்கின்றான். அதன் இனிமை தெரியாமல் கண்டபடி பாடி கூத்தடிக்கின்றான்.
உலகில் எங்கு பிறந்தால் பிறப்பில்லை என்று இயேசு மகானிடம் சீடர்கள் கேட்டதற்கு தமிழ்நாட்டில் பிறந்தால் பிறப்பில்லை என்று சொன்னார். இராமன், கிருஷ்ணன், இயேசு தாமிரபரணி நதிக்கரைக்கு வந்து சென்றது உண்மை ! என் அன்பின் தந்தை பிரபஞ்ச நாயகன் யாகவா சொல்வார்கள், தமிழ் பேச வரம் வாங்கி வந்தாய் என்று. இனி தென்னாடு தாமரை போல் மலரும். வட நாடுகள் வாடும் என்றும் சொல்வார்கள். இது கால கணக்கு என்றும் உரைத்தார்கள்.
உலகில் உள்ள மன்னர்கள், ஞானிகள், சித்தர்கள், மகான்கள் இந்த ஞான பூமி இந்தியாவுக்குள் வருவார்கள். ஞான வாசல் தமிழ்நாட்டில் வந்து தங்குவார்கள். நிச்சயம் சத்தியமாக நடக்கும். தமிழ் உலகின் ஆட்சி மொழியாகும் ! தமிழன் உலகை ஆள்வான் !
அமிழ்த மொழி தமிழ் என்றும் வாழும் !
வாழ்பவன் நான் !
நான் இநன்யா !