இநன்யா ;;; INANYA NAMOO NAMA ;;; நீ ஒழுக்கமாக இரு. ஆத்ம சக்தியை தருவேன் ! சுத்தமாக இரு என் ஞான குழந்தையே. உன் துயரம் போக்குவேன் !
55 .இநன்யா நமோ நம.. !!INANYA NAMOO NAMA ;;;
நீ ஒழுக்கமாக இரு. ஆத்ம சக்தியை தருவேன் ! சுத்தமாக இரு என் ஞான குழந்தையே. உன் துயரம் போக்குவேன் !
ஒழுக்கம்
தன்னலமற்ற, சுய நலமற்ற சேவை செய்ய ஆசைப்படு ! சுயநலமில்லாது தன் கடமையை செய். ஒழுக்கம் தானாக வரும். எல்லா படைப்பும், ஒழுங்காக நேர்த்தியாக படைக்கப்பட்டது. நீ தான் ஒழுங்கீனமாக நடந்து கொள்கிறாய் ! பாவத்தை செய்து மீண்டும் மீண்டும் பிறக்கின்றாய் இங்கு ! ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற கட்டுப்பாட்டை மீறும் போது இந்த இயற்கை உன்னை வெறுக்கிறது. உன்னை நீயே வெறுக்கின்றாய்.
உனக்குள் மனம் என்ற தீக்கோள் ஒன்று உருவாகின்றது. நான் உன் நெஞ்சுக் கூட்டுக்குள் இருக்கும் பக்கத்தில் அது பந்து போல் சுருண்டு உனை பாடாய்படுத்துகின்றது ! அதன் வெப்பத்தில் நான் அமர்ந்து இருக்கும் தாமரை இதழ் கருகி போகின்றது. உணரடா !
நீ உணர முயன்றால் உன்னை உணர வைப்பேன் ! பந்து போல் சுருளும் உன் மனம் எனக்கு அடங்கும். நான் நீர் ! நீ உணர்ந்தால் அந்த அக்னியை (மனம்) அழிப்பேன். ஜீவராசிகள் எல்லாம் ஒழுக்கத்தில் இருந்து மீறவில்லை. நீரை உறிந்து குடிக்கும் புறா ஒருத்தனுக்கு ஒருத்தி என்றே வாழ்கின்றது. ஜோடியில் ஏதாவது ஒன்று இறந்தால் மறுகணமே மூர்ச்சையாகிறது. அதற்கு யார் சொல்லி கொடுத்தது ?
படைப்பின் மீறலை மீறவில்லை அது. கிளிகளும், அணில்களும் தனக்கென்று ஒரு இணையைத் தான் தேர்ந்தெடுக்கின்றது. நீ ஆயிரம் உறவை எதிர்பார்க்கின்றாய். இந்த கரையான் உண்ணப் போகின்ற வெற்று உடலை வேடிக்கை பார்க்கின்றாய். அதற்கு விதவிதமாக சாயம் பூசி, விதவிதமாக ஆடை உடுத்தி அழகு பார்க்கின்றாய். நடனங்களையும், நாட்டியத்தையும் பார்த்து நாளெல்லாம் பாவம் செய்ய நினைக்கின்றாய். உன் வேடிக்கை வாழ்க்கையை என்ன சொல்வேன் ? ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற உறவை மிறினால் உனக்கு பாவம் தான் சேரும். பிறந்த பாவத்தை சரி செய்யாமல் மீண்டும் பாவம் செய்கின்றாய்.
என் தந்தை பிரபஞ்ச நாயகன் சொல்வார்கள், வந்த வழி தேடி வசந்தம் தொலைத்து அலைகின்ற மனிதன் தான் செல்கின்ற வழியை அறியாமால் புத்தி தொலைத்து அழைகின்றான் என்று ! கருங்குழியில் பிறந்து கருங்குழிக்கே சொந்தமானவன் என்பதை மறந்து அலைகின்றான் என்று சொல்வார்கள். எப்போது உணர்வானடா என் அன்பு மகனே இநன்யா என்று சொல்வார்கள்.
ஒழுக்கம் கத்தி மேல் நிற்கும் வித்தை ! நீ உன்னை மறந்தால் உன் உடலை பதம்பார்க்கும் (நோய், துன்பம்) ! ஒழுக்கம் உன்னை பேரிண்பத்திற்கு அழைத்து செல்லும். பாதை மீறி பயணிக்காதே. மீறினால் உன் ஊர் (மேல் உலகம்) சென்று சேர முடியாது.
என் நாமம் சொல். உனக்கு ஒழுக்கம் வரும் !
சலனமான எண்ணம் கொண்டவன், கடல் அலை போல தள்ளாடுகிறான் ! நித்சலமான எண்ணத்தோடு இரு ! வைராக்கியம் எதையும் சாதிக்க வைக்கும்.
வீரத்தோடு இரு. அதே போல் விவேகத்தோடு இரு. நீ உன்னை வெல்ல போராடு ! என்னையும் அழைத்து கொள். நானும் உன் பின்னால் வருகிறேன்.
உன் துன்பத்தை இன்பமாக எப்போதும் நினை. இன்பத்தை துன்பமாக நினை. எல்லாம் நீ திண்றாய். எல்லாம் நீ செய்தாய். உனக்கு துன்பம் என்றால் மட்டும் என்னை வசைபாடுகிறாய்.
எனக்கும் உன் துன்பத்திற்கும் சம்பந்தம் இல்லையடா !
எனக்கும் உன் துன்பத்திற்கும் சம்பந்தம் இல்லையடா !
தொட்டாசினிங்கியில் கோடி ரகசியம் வைத்தேன். உணரடா அதன் உணர்வை ! எப்போதும் நீயும் உணர்வுடனே இரு !
போருக்கு செல்லும் போர் வீரனை போன்று எப்போதும் விழி நிலையிலே இரு. வேதனை வராது. எந்த நற்செயலையும் ஒரு இருபத்து ஏழு நாட்கள் தொடர்ந்து செய். அது பழக்கமாகிவிடும். எல்லா இந்திரியங்களையும் உன் கட்டுப்பாட்டுக்குள் வை. அதற்கு நீயே எஜமானாக இரு. அது உனக்கு அடங்கும் !
மனம் போல போக்கில் செல்லாதே ! மனம் சொல்லும் சொல்லை கேட்காதே ! ஆழமாக (ஆண்மா) கூக்குரலிடும் என் சொல் கேள். நீ உச்சத்தின் உச்சமடா !
போருக்கு செல்லும் போர் வீரனை போன்று எப்போதும் விழி நிலையிலே இரு. வேதனை வராது. எந்த நற்செயலையும் ஒரு இருபத்து ஏழு நாட்கள் தொடர்ந்து செய். அது பழக்கமாகிவிடும். எல்லா இந்திரியங்களையும் உன் கட்டுப்பாட்டுக்குள் வை. அதற்கு நீயே எஜமானாக இரு. அது உனக்கு அடங்கும் !
மனம் போல போக்கில் செல்லாதே ! மனம் சொல்லும் சொல்லை கேட்காதே ! ஆழமாக (ஆண்மா) கூக்குரலிடும் என் சொல் கேள். நீ உச்சத்தின் உச்சமடா !
நான் என் பணி செய்யும் இடத்தில் எனக்குரிய வேலையை கடமை தவறாது செய்கின்றேன். எனக்குரிய வேலையை நானே செய்கின்றேன். என் உடைகளை நானே சுத்தம் செய்கின்றேன். எனக்குரிய உணவை நானே தயாரித்து சாப்பிடுகிறேன். நான் யாரையும் எதிர்பார்க்கவில்லை. யாரிடமும் கையேந்தவில்லை. மற்றவர்க்கு நான் உதவியாக இருக்கிறேன்.
இங்கே நானும் ஒழுக்கம் தவறினாலும், சத்திய பாதையை விட்டு விலகினாலும் எனக்கும் தண்டனை உண்டு, எனக்கும் துன்பம் உண்டு ! பாவம் செய்தால் எவராலும் இங்கே தப்பிக்க முடியாது, கடவுளாக இருந்தாலும்.
இங்கே நானும் ஒழுக்கம் தவறினாலும், சத்திய பாதையை விட்டு விலகினாலும் எனக்கும் தண்டனை உண்டு, எனக்கும் துன்பம் உண்டு ! பாவம் செய்தால் எவராலும் இங்கே தப்பிக்க முடியாது, கடவுளாக இருந்தாலும்.
என் செல்ல மகனே உணரடா !
கடமையை சரிவர செய்தால் ஒழுக்கம் தானாக வரும். மது, மாது உனக்கு துன்பத்தை தான் கொடுக்கும். மதுவை தொட்டவன் உடலை கரையான் சாப்பிட கூட யோசிக்குமடா ! பூமி தாய் உன்னை வெறுக்க வைக்காதே, எல்லா நல் பழக்கத்தையும் ஒரு சேர கொண்டு வா ! பழக்கம் முதலில் ஒட்டடை மாதிரி பழக பழக இரும்பு சங்கிலியாக மாறிவிடும்.
ஒழுக்கமாக இரு. எல்லாவித்தைகளையும் இந்த தகப்பன் உனக்கு குருவாய் இருந்து கற்று தருகிறேன். என் வாசல் (ஆண்மா) உனக்காக திறந்திருக்கின்றது . உள்ளே வர ஆசைப்படு. பேரிண்பமான வாழ்வை நீ ஆள்வாய் என் அன்பு குழந்தையே.
ஒழுக்கமாக இரு. எல்லாவித்தைகளையும் இந்த தகப்பன் உனக்கு குருவாய் இருந்து கற்று தருகிறேன். என் வாசல் (ஆண்மா) உனக்காக திறந்திருக்கின்றது . உள்ளே வர ஆசைப்படு. பேரிண்பமான வாழ்வை நீ ஆள்வாய் என் அன்பு குழந்தையே.
நான் ஆசை, இன்பம், துன்பம் கடந்தவன் ! எல்லாம் கடந்து மூலத்தில் (பேராத்மா) ஒன்றியவன் நான்.
உனக்குள் முதல்வனாய் இருப்பவன் நான் ! என்னை சிக்கென பிடி ! வெட்டென மற (பாவம்) !
வேதனை உனக்கில்லையடா !
நீ ஒழுக்கமாக இரு ! ஆத்ம சக்தியை தருவேன்.
நான் இநன்யா !
No comments:
Post a Comment