Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, May 11, 2016

இநன்யா ;;; நீ ஒழுக்கமாக இரு. ஆத்ம சக்தியை தருவேன் ! சுத்தமாக இரு என் ஞான குழந்தையே. உன் துயரம் போக்குவேன் ! INANYA NAMOO NAMA ;;;

இநன்யா ;;;  INANYA NAMOO NAMA ;;; நீ ஒழுக்கமாக இரு. ஆத்ம சக்தியை தருவேன் ! சுத்தமாக இரு என் ஞான குழந்தையே. உன் துயரம் போக்குவேன் !
55 .இநன்யா நமோ நம.. !!INANYA NAMOO NAMA ;;; 
நீ ஒழுக்கமாக இரு. ஆத்ம சக்தியை தருவேன் ! சுத்தமாக இரு என் ஞான குழந்தையே. உன் துயரம் போக்குவேன் !
ஒழுக்கம்
தன்னலமற்ற, சுய நலமற்ற சேவை செய்ய ஆசைப்படு ! சுயநலமில்லாது தன் கடமையை செய். ஒழுக்கம் தானாக வரும். எல்லா படைப்பும், ஒழுங்காக நேர்த்தியாக படைக்கப்பட்டது. நீ தான் ஒழுங்கீனமாக நடந்து கொள்கிறாய் ! பாவத்தை செய்து மீண்டும் மீண்டும் பிறக்கின்றாய் இங்கு ! ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற கட்டுப்பாட்டை மீறும் போது இந்த இயற்கை உன்னை வெறுக்கிறது. உன்னை நீயே வெறுக்கின்றாய்.
உனக்குள் மனம் என்ற தீக்கோள் ஒன்று உருவாகின்றது. நான் உன் நெஞ்சுக் கூட்டுக்குள் இருக்கும் பக்கத்தில் அது பந்து போல் சுருண்டு உனை பாடாய்படுத்துகின்றது ! அதன் வெப்பத்தில் நான் அமர்ந்து இருக்கும் தாமரை இதழ் கருகி போகின்றது. உணரடா !
நீ உணர முயன்றால் உன்னை உணர வைப்பேன் ! பந்து போல் சுருளும் உன் மனம் எனக்கு அடங்கும். நான் நீர் ! நீ உணர்ந்தால் அந்த அக்னியை (மனம்) அழிப்பேன். ஜீவராசிகள் எல்லாம் ஒழுக்கத்தில் இருந்து மீறவில்லை. நீரை உறிந்து குடிக்கும் புறா ஒருத்தனுக்கு ஒருத்தி என்றே வாழ்கின்றது. ஜோடியில் ஏதாவது ஒன்று இறந்தால் மறுகணமே மூர்ச்சையாகிறது. அதற்கு யார் சொல்லி கொடுத்தது ?
படைப்பின் மீறலை மீறவில்லை அது. கிளிகளும், அணில்களும் தனக்கென்று ஒரு இணையைத் தான் தேர்ந்தெடுக்கின்றது. நீ ஆயிரம் உறவை எதிர்பார்க்கின்றாய். இந்த கரையான் உண்ணப் போகின்ற வெற்று உடலை வேடிக்கை பார்க்கின்றாய். அதற்கு விதவிதமாக சாயம் பூசி, விதவிதமாக ஆடை உடுத்தி அழகு பார்க்கின்றாய். நடனங்களையும், நாட்டியத்தையும் பார்த்து நாளெல்லாம் பாவம் செய்ய நினைக்கின்றாய். உன் வேடிக்கை வாழ்க்கையை என்ன சொல்வேன் ? ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற உறவை மிறினால் உனக்கு பாவம் தான் சேரும். பிறந்த பாவத்தை சரி செய்யாமல் மீண்டும் பாவம் செய்கின்றாய்.
என் தந்தை பிரபஞ்ச நாயகன் சொல்வார்கள், வந்த வழி தேடி வசந்தம் தொலைத்து அலைகின்ற மனிதன் தான் செல்கின்ற வழியை அறியாமால் புத்தி தொலைத்து அழைகின்றான் என்று ! கருங்குழியில் பிறந்து கருங்குழிக்கே சொந்தமானவன் என்பதை மறந்து அலைகின்றான் என்று சொல்வார்கள். எப்போது உணர்வானடா என் அன்பு மகனே இநன்யா என்று சொல்வார்கள்.
ஒழுக்கம் கத்தி மேல் நிற்கும் வித்தை ! நீ உன்னை மறந்தால் உன் உடலை பதம்பார்க்கும் (நோய், துன்பம்) ! ஒழுக்கம் உன்னை பேரிண்பத்திற்கு அழைத்து செல்லும். பாதை மீறி பயணிக்காதே. மீறினால் உன் ஊர் (மேல் உலகம்) சென்று சேர முடியாது.
என் நாமம் சொல். உனக்கு ஒழுக்கம் வரும் !
சலனமான எண்ணம் கொண்டவன், கடல் அலை போல தள்ளாடுகிறான் ! நித்சலமான எண்ணத்தோடு இரு ! வைராக்கியம் எதையும் சாதிக்க வைக்கும்.
வீரத்தோடு இரு. அதே போல் விவேகத்தோடு இரு. நீ உன்னை வெல்ல போராடு ! என்னையும் அழைத்து கொள். நானும் உன் பின்னால் வருகிறேன்.
உன் துன்பத்தை இன்பமாக எப்போதும் நினை. இன்பத்தை துன்பமாக நினை. எல்லாம் நீ திண்றாய். எல்லாம் நீ செய்தாய். உனக்கு துன்பம் என்றால் மட்டும் என்னை வசைபாடுகிறாய்.
எனக்கும் உன் துன்பத்திற்கும் சம்பந்தம் இல்லையடா !
தொட்டாசினிங்கியில் கோடி ரகசியம் வைத்தேன். உணரடா அதன் உணர்வை ! எப்போதும் நீயும் உணர்வுடனே இரு !
போருக்கு செல்லும் போர் வீரனை போன்று எப்போதும் விழி நிலையிலே இரு. வேதனை வராது. எந்த நற்செயலையும் ஒரு இருபத்து ஏழு நாட்கள் தொடர்ந்து செய். அது பழக்கமாகிவிடும். எல்லா இந்திரியங்களையும் உன் கட்டுப்பாட்டுக்குள் வை. அதற்கு நீயே எஜமானாக இரு. அது உனக்கு அடங்கும் !
மனம் போல போக்கில் செல்லாதே ! மனம் சொல்லும் சொல்லை கேட்காதே ! ஆழமாக (ஆண்மா) கூக்குரலிடும் என் சொல் கேள். நீ உச்சத்தின் உச்சமடா !
நான் என் பணி செய்யும் இடத்தில் எனக்குரிய வேலையை கடமை தவறாது செய்கின்றேன். எனக்குரிய வேலையை நானே செய்கின்றேன். என் உடைகளை நானே சுத்தம் செய்கின்றேன். எனக்குரிய உணவை நானே தயாரித்து சாப்பிடுகிறேன். நான் யாரையும் எதிர்பார்க்கவில்லை. யாரிடமும் கையேந்தவில்லை. மற்றவர்க்கு நான் உதவியாக இருக்கிறேன்.
இங்கே நானும் ஒழுக்கம் தவறினாலும், சத்திய பாதையை விட்டு விலகினாலும் எனக்கும் தண்டனை உண்டு, எனக்கும் துன்பம் உண்டு ! பாவம் செய்தால் எவராலும் இங்கே தப்பிக்க முடியாது, கடவுளாக இருந்தாலும்.
என் செல்ல மகனே உணரடா !
கடமையை சரிவர செய்தால் ஒழுக்கம் தானாக வரும். மது, மாது உனக்கு துன்பத்தை தான் கொடுக்கும். மதுவை தொட்டவன் உடலை கரையான் சாப்பிட கூட யோசிக்குமடா ! பூமி தாய் உன்னை வெறுக்க வைக்காதே, எல்லா நல் பழக்கத்தையும் ஒரு சேர கொண்டு வா ! பழக்கம் முதலில் ஒட்டடை மாதிரி பழக பழக இரும்பு சங்கிலியாக மாறிவிடும்.
ஒழுக்கமாக இரு. எல்லாவித்தைகளையும் இந்த தகப்பன் உனக்கு குருவாய் இருந்து கற்று தருகிறேன். என் வாசல் (ஆண்மா) உனக்காக திறந்திருக்கின்றது . உள்ளே வர ஆசைப்படு. பேரிண்பமான வாழ்வை நீ ஆள்வாய் என் அன்பு குழந்தையே.
நான் ஆசை, இன்பம், துன்பம் கடந்தவன் ! எல்லாம் கடந்து மூலத்தில் (பேராத்மா) ஒன்றியவன் நான்.
உனக்குள் முதல்வனாய் இருப்பவன் நான் ! என்னை சிக்கென பிடி ! வெட்டென மற (பாவம்) !
வேதனை உனக்கில்லையடா !
நீ ஒழுக்கமாக இரு ! ஆத்ம சக்தியை தருவேன்.
நான் இநன்யா !

No comments:

Post a Comment