Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, May 11, 2016

இநன்யா ;;; நீ கடவுளால் அனுப்பப்பட்ட சேனை ! உலகத்திற்கு ஞானத்தை சொல்லி கொடுக்க அனுப்பிய ஞான சேனை ! INANYA NAMOO NAMA ;;;

இநன்யா ;;;  INANYA NAMOO NAMA ;;; நீ கடவுளால் அனுப்பப்பட்ட சேனை ! உலகத்திற்கு ஞானத்தை சொல்லி கொடுக்க அனுப்பிய ஞான சேனை !
50 .இநன்யா நமோ நம.. !!INANYA NAMOO NAMA ;;; 
நீ கடவுளால் அனுப்பப்பட்ட சேனை ! உலகத்திற்கு ஞானத்தை சொல்லி கொடுக்க அனுப்பிய ஞான சேனை !
வலிமை மிக்க புரவி நீ !
புணிதம் நிறைந்த ஞான சேனை நீ ! உன் கடந்த காலத்தை மறந்து விடு ! நீ நூறு முறை தோற்றிருக்கலாம். அவமானப்பட்டிருக்கலாம். உன்னை நீயே வெறுத்திருக்கலாம். எதிர்காலம் இருளாக தெரிந்திருக்கலாம். வாழவே முடியாது என்று விரக்தியில் வாழ்ந்திருக்கலாம். ஆனால் இன்றிலிருந்து எல்லாவற்றையும் மறந்து விடு ! நான் உன் எதிர்காலம் !
நீ வலிமைமிக்கவன் என்பதை ஏன் மறந்தாய் ? உன்னால் உலகம் எழும் என்பதை ஏன் மறந்தாய் ? உனக்கு ஆயிரம் புரவியின் வலிமை உண்டு என்பதையும் மறந்தாய் இங்கு !
அல்ப ஆசையில் மூழ்கி கடல் அலை போல் கேடுகெட்ட மனம் என்ற குறுகலில் மாட்டிக் கொண்டு தவிக்கின்றாய் நீ.
என் வலிமை மிக்க சேனையே ! வாழ்வின் அர்த்தம் உணர் !
நான் உன் முன்னால் நிற்கின்றேன் ! உன்னை தொலைத்து அலைகின்றாய். உன்னால் ஏதும் முடியும். நான் உனக்குள் இருந்து சிரிக்கின்றேன் ! ஆனால் நீ அழுது துடிக்கின்றாய். ஞானத்தை சொல்லிக் கொடுக்கவே உன்னை இங்கே அனுப்பினோம். இன்றிலிருந்து உன் துக்கம், துயரம், துன்பங்களை மறந்துவிடு ! உன் பாதத்தில் எதிர்காலம் காத்திருக்கிறது தவமாய் தவமிருந்து ! எழுந்து நில் ! என் செல்ல குழந்தையே, உன்னால் இமயத்தை கூட புரட்ட முடியும் !
உன் வலிமையான தோளுக்கு நான் பலம் தருகிறேன். நீ பலமுள்ளவன் என்று உலகத்திற்கு நிரூபித்துக் காட்டு ! வீறு கொண்டு எழு ! நான் வீழ்ந்து விடுவேன் என்று நினைக்காதே. நான் உன் பக்கத்தில் ஆயிரம் ஆயிரம் யானை பலத்தோடு நிற்கின்றேன். உனை விழ விட மாட்டேன். உன் தொடை எலும்புக்கு பலம் சேர்ப்பேன். சத்தியத்தை நிலைநாட்டு !
வந்த வேலையை முடித்து திரும்பு ! வெற்றி செய்தி கொண்டு வருவாய் என்று நான் மேலே உனக்காக காத்திருக்கின்றேன் ! உன் பிறவியை கடந்துவிட்டேன் என்று செய்தி கொண்டு வா !
நீ பூமியில் இனி பிறக்க மாட்டாய் என்ற சொல்லை உன் வாயினால் கேட்க காத்திருக்கின்றேன் !
கடந்த காலத்தையும், நீ தோற்றதையும், பிறரிடம் கை ஏந்தி நின்றதையும் மறந்துவிடு ! இனி நான் உன்னை கரை சேர்ப்பேன் ! என் சத்திய கரங்களை கெட்டியாக பிடித்து கொள். உன்னை பற்றி உனக்கு தெரியவில்லை. நீ எவ்வளவு வலிமையானவன், ஞானமிக்கவன், பலமுள்ளவன் (ஆத்ம பலம்) என்று எனக்கு மட்டுமே தெரியும்.
எழுந்திடு !
என் ஞான குழந்தையே, உலகை புரட்டி போடுவோம் ! புஷ்பக விமானத்தில் பறப்பதற்கும், பூலோகத்தை சதிராடவும் நான் உனக்கு சொல்லி தருகிறேன்.
வா சதிராடுவோம் !
நான் மட்டும் ஜெயித்தால் போதாது. நீயும் ஜெயித்துவிட்டேன் என்ற வெற்றி முழக்கத்தை கேட்க உன் தகப்பன் நான் காத்திருக்கின்றேன். நீ நினைத்தால் உன் பின்னால் கோடி முகங்களை வரவழைக்கலாம் !
எதிர்காலத்தை கையில் எடு ! நான் உனை எப்போதும் வென்றவனாக்குவேன் ! நான் உன் ஆத்மத்தின் தலைவன் ! உன்னை எங்கே கொண்டு சேர்க்க வேண்டும் என்று எனக்கு தெரியும். நானும், நீயும் சேர்ந்து உலகை ஞான வழிக்கு அழைத்து செல்வோம்.
ஏன் உறக்கமடா ?
நான் தூங்காமல் எப்போதும் விழித்திருக்கின்றேனடா ! நீ எப்போது விழித்து பார்ப்பாய் என்று உன் பக்கத்தில் நின்று கொண்டிருக்கின்றேன் ! நீ விழித்து எழுந்த உடனே எதிர்காலத்தை உன் கையில் கொடுப்பதற்காக ! நீ ஞானவான் ! நீ வீரிய வித்து ! ஏன் உன்னை மறந்தாய் ?
துன்பமே வாழ்வு என்று ஏன் நினைக்கின்றாய் ? துன்பத்தை உன் காலில் போட்டு மிதித்து இலக்கை நோக்கி சென்று கொண்டே இரு ! எதுவும் உன்னை ஒன்றும் செய்ய முடியாது. நாளும், கோளும் உனக்குள் அடக்குவேன் ! சதிராடும் வித்தையை உனக்கு கற்றுத் தருவேன் !
எவனோ கூட்டும் கூட்டத்திற்கு சென்று முன்னால் உட்கார்ந்து நீ ஒன்றும் தெரியாதவன் போல கை தட்டி கோமாளி ஆகாதே ! நீ ஞானக் கூட்டத்தை கூட்டு ! அதற்கு தலைவணங்கு ! நான் உனக்கு மணிமகுடம் சூட்டுவேன் ! உன் மூட மனதை வைத்து எதையும் யோசிக்காதே ! நான் இறங்கி வந்தேன் என் இடத்தை விட்டு. உன்னை தட்டி எழுப்பவே யுகம் வந்தேன் !
காற்றாய், நீராய் நானிருக்கின்றேன் ! உலகமே இடிந்து விழுந்தாலும் நான் உனை அரவணைப்பேன். விழித்திடு மகனே ! எழுந்திடு மகனே ! உலகை நல் வழிப்படுத்துவோம் ! உன்னாலும் முடியும் என்று நான் உள்ளே இருந்து குரல் எழுப்பி கொண்டே இருக்கிறேன் ! ஏன் என் குரல் கேட்காமல் அலைகின்றாய் ?
என் பயணம் முடிவுறப் போகின்றது.
ஆதிகாலம் போல் யுகத்தை தோன்றச் செய்வதற்காக நான் அதிரடியாய் இனி சதிராடுவேன் ! நான் உன்னையும் கரை சேர்ப்பேன் !
யுகத்தை சீர்படுத்தி உன்னை காக்கவே யுகம் வந்தேன் நான் !
என் ஞான சேனையே, வேகத்தோடும், விவேகத்தோடும் எழுந்திடு ! உன் லக்கான் என்னிடம் உனை ஆழமான பகுதிக்கும் அழைத்து செல்வேன். எட்டிப் பிடிக்க முடியாத நட்சத்திர மண்டலங்களுக்கும் அழைத்து செல்வேன்.
என் வீரிய மிக்க சேனையே, வா ! நான் உனக்கு இமயத்தை அசைக்க சொல்லித் தருவேன் !
இனி எதையும் தைரியம், தன்னம்பிக்கையோடு ஆரம்பித்து பார் ! தோற்றுவிட மாட்டாய் ! நான் உனக்குள் இருக்கின்றேன் ! ஒரு வழி அடைத்தால் இன்னொரு வழி திறப்பேன். என் நாமம் சொல்லிக் கொண்டே இரு. கதவு திறக்கும். எதற்கும் அஞ்சாதே ! ஒரு முறை தோற்றால் மறுமுறை நிச்சயம் ஜெயிப்பாயடா !
நான் சத்யமாக கை விடுவதில்லை உன்னை !
நீ ஞான செறிவு உள்ளவன். நான் உன் தகப்பன். என்னிடம் கை ஏந்த வேண்டிய அவசியம் உனக்கு இல்லை. என் குழந்தைக்கு என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு தெரியும் !
உன்னை உணர்ந்து விடு ! இப்பிறவியே இறுதி பிறவியாக இருக்க வேண்டும். நான் கடை விரிக்க யுகத்திற்கு வரவில்லை. உனக்கு ஊட்ட வந்தேன். நீ உண்ணும் வரை விடப் போவதில்லை. இருந்தோம், இறந்தோம் என்று நினைக்காதே. நீ ஞானவான் என்று உலகத்திற்கு பறைசாற்று !
நான் உனக்குள் ஒய்யாரமாக அமர்ந்திருக்கின்றேன்.
உனக்கு ஞான அமிழ்தம் கொடுத்து சேனைகளுக்கு தலைவன் ஆக்குவேன்.
நான் உனக்குள் இருக்கின்றேன் ஒய்யாரமாக !
நான் இநன்யா !

No comments:

Post a Comment