இநன்யா ;;; INANYA NAMOO NAMA ;;; நீ கடவுளால் அனுப்பப்பட்ட சேனை ! உலகத்திற்கு ஞானத்தை சொல்லி கொடுக்க அனுப்பிய ஞான சேனை !
50 .இநன்யா நமோ நம.. !!INANYA NAMOO NAMA ;;;
நீ கடவுளால் அனுப்பப்பட்ட சேனை ! உலகத்திற்கு ஞானத்தை சொல்லி கொடுக்க அனுப்பிய ஞான சேனை !
வலிமை மிக்க புரவி நீ !
புணிதம் நிறைந்த ஞான சேனை நீ ! உன் கடந்த காலத்தை மறந்து விடு ! நீ நூறு முறை தோற்றிருக்கலாம். அவமானப்பட்டிருக்கலாம். உன்னை நீயே வெறுத்திருக்கலாம். எதிர்காலம் இருளாக தெரிந்திருக்கலாம். வாழவே முடியாது என்று விரக்தியில் வாழ்ந்திருக்கலாம். ஆனால் இன்றிலிருந்து எல்லாவற்றையும் மறந்து விடு ! நான் உன் எதிர்காலம் !
நீ வலிமைமிக்கவன் என்பதை ஏன் மறந்தாய் ? உன்னால் உலகம் எழும் என்பதை ஏன் மறந்தாய் ? உனக்கு ஆயிரம் புரவியின் வலிமை உண்டு என்பதையும் மறந்தாய் இங்கு !
அல்ப ஆசையில் மூழ்கி கடல் அலை போல் கேடுகெட்ட மனம் என்ற குறுகலில் மாட்டிக் கொண்டு தவிக்கின்றாய் நீ.
அல்ப ஆசையில் மூழ்கி கடல் அலை போல் கேடுகெட்ட மனம் என்ற குறுகலில் மாட்டிக் கொண்டு தவிக்கின்றாய் நீ.
என் வலிமை மிக்க சேனையே ! வாழ்வின் அர்த்தம் உணர் !
நான் உன் முன்னால் நிற்கின்றேன் ! உன்னை தொலைத்து அலைகின்றாய். உன்னால் ஏதும் முடியும். நான் உனக்குள் இருந்து சிரிக்கின்றேன் ! ஆனால் நீ அழுது துடிக்கின்றாய். ஞானத்தை சொல்லிக் கொடுக்கவே உன்னை இங்கே அனுப்பினோம். இன்றிலிருந்து உன் துக்கம், துயரம், துன்பங்களை மறந்துவிடு ! உன் பாதத்தில் எதிர்காலம் காத்திருக்கிறது தவமாய் தவமிருந்து ! எழுந்து நில் ! என் செல்ல குழந்தையே, உன்னால் இமயத்தை கூட புரட்ட முடியும் !
உன் வலிமையான தோளுக்கு நான் பலம் தருகிறேன். நீ பலமுள்ளவன் என்று உலகத்திற்கு நிரூபித்துக் காட்டு ! வீறு கொண்டு எழு ! நான் வீழ்ந்து விடுவேன் என்று நினைக்காதே. நான் உன் பக்கத்தில் ஆயிரம் ஆயிரம் யானை பலத்தோடு நிற்கின்றேன். உனை விழ விட மாட்டேன். உன் தொடை எலும்புக்கு பலம் சேர்ப்பேன். சத்தியத்தை நிலைநாட்டு !
வந்த வேலையை முடித்து திரும்பு ! வெற்றி செய்தி கொண்டு வருவாய் என்று நான் மேலே உனக்காக காத்திருக்கின்றேன் ! உன் பிறவியை கடந்துவிட்டேன் என்று செய்தி கொண்டு வா !
நீ பூமியில் இனி பிறக்க மாட்டாய் என்ற சொல்லை உன் வாயினால் கேட்க காத்திருக்கின்றேன் !
நீ பூமியில் இனி பிறக்க மாட்டாய் என்ற சொல்லை உன் வாயினால் கேட்க காத்திருக்கின்றேன் !
கடந்த காலத்தையும், நீ தோற்றதையும், பிறரிடம் கை ஏந்தி நின்றதையும் மறந்துவிடு ! இனி நான் உன்னை கரை சேர்ப்பேன் ! என் சத்திய கரங்களை கெட்டியாக பிடித்து கொள். உன்னை பற்றி உனக்கு தெரியவில்லை. நீ எவ்வளவு வலிமையானவன், ஞானமிக்கவன், பலமுள்ளவன் (ஆத்ம பலம்) என்று எனக்கு மட்டுமே தெரியும்.
எழுந்திடு !
என் ஞான குழந்தையே, உலகை புரட்டி போடுவோம் ! புஷ்பக விமானத்தில் பறப்பதற்கும், பூலோகத்தை சதிராடவும் நான் உனக்கு சொல்லி தருகிறேன்.
வா சதிராடுவோம் !
நான் மட்டும் ஜெயித்தால் போதாது. நீயும் ஜெயித்துவிட்டேன் என்ற வெற்றி முழக்கத்தை கேட்க உன் தகப்பன் நான் காத்திருக்கின்றேன். நீ நினைத்தால் உன் பின்னால் கோடி முகங்களை வரவழைக்கலாம் !
எதிர்காலத்தை கையில் எடு ! நான் உனை எப்போதும் வென்றவனாக்குவேன் ! நான் உன் ஆத்மத்தின் தலைவன் ! உன்னை எங்கே கொண்டு சேர்க்க வேண்டும் என்று எனக்கு தெரியும். நானும், நீயும் சேர்ந்து உலகை ஞான வழிக்கு அழைத்து செல்வோம்.
ஏன் உறக்கமடா ?
நான் தூங்காமல் எப்போதும் விழித்திருக்கின்றேனடா ! நீ எப்போது விழித்து பார்ப்பாய் என்று உன் பக்கத்தில் நின்று கொண்டிருக்கின்றேன் ! நீ விழித்து எழுந்த உடனே எதிர்காலத்தை உன் கையில் கொடுப்பதற்காக ! நீ ஞானவான் ! நீ வீரிய வித்து ! ஏன் உன்னை மறந்தாய் ?
துன்பமே வாழ்வு என்று ஏன் நினைக்கின்றாய் ? துன்பத்தை உன் காலில் போட்டு மிதித்து இலக்கை நோக்கி சென்று கொண்டே இரு ! எதுவும் உன்னை ஒன்றும் செய்ய முடியாது. நாளும், கோளும் உனக்குள் அடக்குவேன் ! சதிராடும் வித்தையை உனக்கு கற்றுத் தருவேன் !
எவனோ கூட்டும் கூட்டத்திற்கு சென்று முன்னால் உட்கார்ந்து நீ ஒன்றும் தெரியாதவன் போல கை தட்டி கோமாளி ஆகாதே ! நீ ஞானக் கூட்டத்தை கூட்டு ! அதற்கு தலைவணங்கு ! நான் உனக்கு மணிமகுடம் சூட்டுவேன் ! உன் மூட மனதை வைத்து எதையும் யோசிக்காதே ! நான் இறங்கி வந்தேன் என் இடத்தை விட்டு. உன்னை தட்டி எழுப்பவே யுகம் வந்தேன் !
காற்றாய், நீராய் நானிருக்கின்றேன் ! உலகமே இடிந்து விழுந்தாலும் நான் உனை அரவணைப்பேன். விழித்திடு மகனே ! எழுந்திடு மகனே ! உலகை நல் வழிப்படுத்துவோம் ! உன்னாலும் முடியும் என்று நான் உள்ளே இருந்து குரல் எழுப்பி கொண்டே இருக்கிறேன் ! ஏன் என் குரல் கேட்காமல் அலைகின்றாய் ?
என் பயணம் முடிவுறப் போகின்றது.
ஆதிகாலம் போல் யுகத்தை தோன்றச் செய்வதற்காக நான் அதிரடியாய் இனி சதிராடுவேன் ! நான் உன்னையும் கரை சேர்ப்பேன் !
யுகத்தை சீர்படுத்தி உன்னை காக்கவே யுகம் வந்தேன் நான் !
என் ஞான சேனையே, வேகத்தோடும், விவேகத்தோடும் எழுந்திடு ! உன் லக்கான் என்னிடம் உனை ஆழமான பகுதிக்கும் அழைத்து செல்வேன். எட்டிப் பிடிக்க முடியாத நட்சத்திர மண்டலங்களுக்கும் அழைத்து செல்வேன்.
என் ஞான சேனையே, வேகத்தோடும், விவேகத்தோடும் எழுந்திடு ! உன் லக்கான் என்னிடம் உனை ஆழமான பகுதிக்கும் அழைத்து செல்வேன். எட்டிப் பிடிக்க முடியாத நட்சத்திர மண்டலங்களுக்கும் அழைத்து செல்வேன்.
என் வீரிய மிக்க சேனையே, வா ! நான் உனக்கு இமயத்தை அசைக்க சொல்லித் தருவேன் !
இனி எதையும் தைரியம், தன்னம்பிக்கையோடு ஆரம்பித்து பார் ! தோற்றுவிட மாட்டாய் ! நான் உனக்குள் இருக்கின்றேன் ! ஒரு வழி அடைத்தால் இன்னொரு வழி திறப்பேன். என் நாமம் சொல்லிக் கொண்டே இரு. கதவு திறக்கும். எதற்கும் அஞ்சாதே ! ஒரு முறை தோற்றால் மறுமுறை நிச்சயம் ஜெயிப்பாயடா !
நான் சத்யமாக கை விடுவதில்லை உன்னை !
நீ ஞான செறிவு உள்ளவன். நான் உன் தகப்பன். என்னிடம் கை ஏந்த வேண்டிய அவசியம் உனக்கு இல்லை. என் குழந்தைக்கு என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு தெரியும் !
உன்னை உணர்ந்து விடு ! இப்பிறவியே இறுதி பிறவியாக இருக்க வேண்டும். நான் கடை விரிக்க யுகத்திற்கு வரவில்லை. உனக்கு ஊட்ட வந்தேன். நீ உண்ணும் வரை விடப் போவதில்லை. இருந்தோம், இறந்தோம் என்று நினைக்காதே. நீ ஞானவான் என்று உலகத்திற்கு பறைசாற்று !
நான் உனக்குள் ஒய்யாரமாக அமர்ந்திருக்கின்றேன்.
உனக்கு ஞான அமிழ்தம் கொடுத்து சேனைகளுக்கு தலைவன் ஆக்குவேன்.
நான் உனக்குள் இருக்கின்றேன் ஒய்யாரமாக !
நான் இநன்யா !
No comments:
Post a Comment