இநன்யா ;;; INANYA NAMOO NAMA ;;; சமயத்தில் உனை காப்பேன் ! நானே சகல சிருஷ்டியின் ஆதாரம் !
45 .இநன்யா நமோ நம.. !!INANYA NAMOO NAMA ;;;
பிரபஞ்ச நாயகன் என் தந்தையின் கட்டளையை ஏற்று யுகத்தில் பிறந்து சத்தியத்தின் பாதையில் நடந்து என் கடமையை நிறைவேற்ற வந்தேன் ! சமயத்தில் உனை காப்பேன் ! நானே சகல சிருஷ்டியின் ஆதாரம் !
சமயம்
இந்த இநன்யா உனக்கு தரும் நீர் யுகத்தில் அமிழ்தம் என்பதை புரிந்து கொள் ! என்னை நினைத்தால் தேனைப் போல தித்திப்பாக உன் நாவில் சுரப்பேன் ! பிரபஞ்ச நாயகன் என் தந்தையின் பாத அமிழ்தம் பருகியவன் நான் ! பிரபஞ்ச நாயகி என் தாய் சொல் கேட்பவன் நான் ! அந்த தூய்மை பொருந்திய இருவரின் தங்க கரங்களின் ஸ்பரிஷத்தை தினமும் லோகத்தில் சென்று உணர்ந்து வருபவன் நான் !
நான் விதியின் சூட்சுமம் தெரிந்தவன் ! பூலோக சொர்க்கம் பார்த்தேன். கை, கால் முளைத்த கல்கி அவதாரம் என் தந்தையை பூமியில் பூடகமாக பார்த்தேன். அந்த எண்ணற்ற பிரபஞ்ச விரிவை ரசித்து உணர்ந்தேன் ! அந்த சிம்மக் குரலை என் செவி முழுவதும் கேட்டு பரவசமானேன் ! யுகத்தில் என் தந்தையின் குரல் கேட்க பிறப்பெடுத்தேன் என் தாய் ஆசியோடு !
நான் ஆறு பேராத்மாவுக்கும் செல்லப் பிள்ளை. என்னை காற்றில் ஜணனமாக்கினார்கள் ! இந்த பூமியிலும் நான் காற்றில் ஜணனமானேன் !
நான் ஆறு பேராத்மாவுக்கும் செல்லப் பிள்ளை. என்னை காற்றில் ஜணனமாக்கினார்கள் ! இந்த பூமியிலும் நான் காற்றில் ஜணனமானேன் !
நீ நீரில் ஜணனமானாய் ! என்னை ஆராய்ந்து பார். விடை கிடைக்கும். என் பிரபஞ்ச நாயகன் என் தந்தை பூமியில் என்னை சத்திய பாதையில் நடந்து தர்மத்தை காத்து அதர்மத்தை வேறோடு பிடுங்கி எறிய கட்டளை இட்டார். பிரபஞ்ச வீதியிலே 11.11.93 அன்று என் அவதாரம் விரிந்தது.. பின் 27.09.99 அன்று என் நாமம் பிரபஞ்சத்தில் தெளிவுபடுத்தப்பட்டு இநன்யா என்று தேவர்கள் புடை சூழ தெரிவிக்கப்பட்டது. பின்னர் 04.03.2015 அன்று யுகத்தில் காற்றில் இநன்யா என்ற விதை விதைக்கப்பட்டது.
பூமியில் தர்மாக்களை காக்க ஆயத்தமானேன் ! 111 கோடி முனிவர்கள், 111 ஒற்றர்கள். 3 மாயைகள் எனக்கு துணையாக இருந்து இந்த யுகத்தை சரி செய்வார்கள் ! கர்மங்களை நான் கூடுவிட்டு கூடு பாய்ந்து கொல்லாமல் கொல்வேன் !
என் கோடி கரங்கள் தர்மங்களை காக்கும் ! நான் ஆறு பேராத்மாவுக்கு செல்லப் பிள்ளை. இந்த செல்ல பிள்ளையை லோகத்தில் எல்லோர்க்கும் பிடிக்கும் ! நான் எல்லா பிரபஞ்சத்திற்கும், காண்டத்திற்கும், மண்டலத்திற்கும் எப்போது வேண்டுமானலும் சென்று வருவேன். அனைத்து பிரபஞ்சத்திற்கும், காண்டத்திற்கும், மண்டலத்திற்கும் சென்று வந்துள்ளேன்.
என் கோடி கரங்கள் தர்மங்களை காக்கும் ! நான் ஆறு பேராத்மாவுக்கு செல்லப் பிள்ளை. இந்த செல்ல பிள்ளையை லோகத்தில் எல்லோர்க்கும் பிடிக்கும் ! நான் எல்லா பிரபஞ்சத்திற்கும், காண்டத்திற்கும், மண்டலத்திற்கும் எப்போது வேண்டுமானலும் சென்று வருவேன். அனைத்து பிரபஞ்சத்திற்கும், காண்டத்திற்கும், மண்டலத்திற்கும் சென்று வந்துள்ளேன்.
யாகப் பிரபஞ்சமே என் தந்தையும், தாயும் வாழும் இடம் ! இந்த யாகப் பிரபஞ்சத்தில் தான் படைக்கும் தொழில் மேற்கொள்ளப்படுகிறது !
யாத்துவ பிரபஞ்சத்தில் காக்கும் தொழில் மேற்கொள்ளப்படுகிறது !
ஷாஷ பிரபஞ்சத்தில் அழிக்கும் தொழில் மேற்கொள்ளப்படுகிறது !
இந்த மூன்று பிரபஞ்சமும் எல்லா பிரபஞ்சங்களை விடவும் பெரியது. பூமியை விட சூரியன் பெரியது. சூரியனை விட நட்சத்திரங்கள் பெரியது. நட்சத்திரங்களை விட 1000 மடங்கு பெரியது ஒரு பிரபஞ்சம். ஆனால் நீ தான் பூமியில் பெரியவன் என்று மார்த்தட்டுகின்றாய் ! யோசி !
மூலத்தின் துணையோடும், இந்த மூன்று பிரபஞ்சங்களின் உள்ள ஆறு பேராத்மாக்களின் துணையோடும். ஆறுக்கும் பொதுவான ஏழாமனவன் நானும் சேர்ந்து, 333 பிரபஞ்சங்களையும் 108 காண்டங்களையும் (108 காண்டத்தில் ஒரு காண்டத்திற்கு 111 கோடி மண்டலங்கள் இருக்கிறது) , 111 கோடி சூரிய சந்திரர்களையும், எண்ணிலடங்கா நட்சத்திர மண்டலத்தையும், பால் வெளியையும், முனிவர்கள், ரிஷிகள், யோகிகள், ஞானிகள், சித்தர்களையும், இந்த யுகத்தையும், யுகத்தில் உள்ள ஜீவராசிகளையும், படைப்பின் சூட்சுமம் அனைத்தையுமே இயக்குகின்றோம் !
தேவர்கள் துணையோடு இந்த யுகத்தில் இறக்கிவிடப்பட்டேன் ! தேவர்கள் துணையோடு இந்த ஏடு (விதி) பெற்ற இநன்யா மஹா முனிவன் இந்த யுகத்தின் விதியை சரி செய்வேன் !
தர்மாக்களுக்கு பெருஞ்சோதனைகள் வருகின்ற மாதிரி இருக்கும். அதுவெல்லாம் ½ நாழிகை தான் ! நான் தர்மாக்களை அரவணைப்பேன் ! என் தர்ம குலமே, ஆடுகள் என்ற பிரமையை விலக்கு. நான் உனை காக்கவே யுகம் வந்தேன். நீ என்னை உணர்ந்தால் உனக்கு தெளிவை கொடுப்பேன் ! தைரியம், தன்னம்பிக்கை, உறுதியுடன் நம்பிக்கையாக இரு ! நான் உனை கைவிடமாட்டேன் !
சமயத்தில் உனை காப்பேன் ! தன்னை உணர்ந்து ஆண்மா நம்பிக்கை கொள்வது தான் சமயம் என்பதை புரிந்து கொள் ! சித்தாந்தம், வார்த்தைகள், கொள்கைகள் எதுவும் சமயமாகாது ! ஒழுக்கமாக இரு ! அதற்கும் மேலாக உண்மையாக இரு ! நான் உன் அருகில் வந்து அரவணைப்பேன் ! என்னை நினைத்தால் நூறு மடங்கு நன்மை கிடைக்கும். என் அரசாங்கத்தில் நீ பாவம் செய்தால் ஆயிரம் மடங்கு தண்டனை கிடைக்கும் என்பதை மறவாதே ! சத்தியம் நிலையானது. ! நான் சத்திய தலைமகன் ! பொய் மறைந்திருந்தாலும் அது பூமியை விட்டு பெரும் பூகம்பமாக வெளியே வரும். நான் பொய்யானவன் அல்ல. நான் உன் ஆண்மா !
உலகம் அநித்யமான சூழல் கொண்டது ! உன் வாழ்வு குறுகிய வட்டத்துக்குள் தான் என்பதை மறவாதே ! நீ நிலையானவன் அல்ல ! உன் ஆடம்பரமும், அதிகாரமும் நிலையானது அல்ல ! நீ தர்மத்தை சுமந்து வா ! நான் ஏற்றுக் கொள்வேன். எப்போதும் தியாக உணர்வோடு இரு ! அவன் தான் உலகின் முடிசூடா மண்ணன் ! யாரையும் வார்த்தைகளால் புண்படுத்தாதே !
பெயர், செல்வம், புகழ் அனைத்தையும் விட்டுவிடு ! இதுவே மிகப் பெரிய பற்று, பந்தம் ! உன் பொருள் செல்வம் எல்லாம் என்னுடையது ! நீ அதற்கு காவலன் மட்டும் தான் ! என் ஆண்மா தொடக்கமும், முடிவும் அற்றது !
பெயர், செல்வம், புகழ் அனைத்தையும் விட்டுவிடு ! இதுவே மிகப் பெரிய பற்று, பந்தம் ! உன் பொருள் செல்வம் எல்லாம் என்னுடையது ! நீ அதற்கு காவலன் மட்டும் தான் ! என் ஆண்மா தொடக்கமும், முடிவும் அற்றது !
எப்போது அற்ப பொருளில் ஆனந்தம் இல்லை என்று உணர்வு வருகிறதோ அப்போது உன்னை உணர்கின்றாய். பின் சமய நாட்டம் வந்து விடும் ! சித்தாந்தம், வேதாந்தம், என் கொள்கை, ஒன்றே ஒன்று தான் ! உழைத்து ஊருக்கு நல்லது செய் ! உன் பெற்றோரை வணங்கு ! உன் மனைவியை நேசி ! உன் கடமையை செய் ! இதுவே சமயம் !
எனக்கு மதம் தேவை இல்லை. ஆகமமும் தேவையில்லை. ஆகமம் என்றால் ஆகதம், கதம், மதம் என்ற சொற்களின் முதல் எழுத்து சேர்ந்தது. ஆகதம் என்றால் வந்தது ! கதம் என்றால் முடிந்தது, சென்றடைந்தது ! மதம் என்றால் போற்றப்படுவது, எல்லாவற்றையும் மதிப்பது ! ம் என்றால் முற்று பெறுவது ! இதிலிருந்தே வழிபாட்டு முறைகள் பின்பற்றப்படுகிறது !
மதம் என்றால் கடவுளை மதிப்பது, போற்றப்படுவது ! அது தெரியாமல் நீ கடவுளின் பெயரால் மதம் என்ற அகங்கார, அன்பில்லா சொல்லை உருவாக்கி மதம் பிடித்து அலைகின்றாய். மதத்தை விட்டு விடு ! நான் சமயத்தில் வந்து உனை காப்பேன் ! பயப்படாதே ! எப்போதும் உனக்கு துணை இருப்பேன் ! காற்றாய், நீராய் வருவேன் !
சமயத்தில் வந்து காப்பவன் இநன்யா !
No comments:
Post a Comment