Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, May 11, 2016

இநன்யா ;;;எனது வழி சத்யம் ! என் வழியில் சத்தியமுண்டு, நித்தியமுண்டு, ஜீவனுண்டு ! உனை காக்கும் பக்குவம் உண்டு ! உணரடா ! INANYA NAMOO NAMA ;;;

இநன்யா ;;;INANYA NAMOO NAMA ;;; எனது வழி சத்யம் ! என் வழியில் சத்தியமுண்டு, நித்தியமுண்டு, ஜீவனுண்டு ! உனை காக்கும் பக்குவம் உண்டு ! உணரடா !
58 .இநன்யா நமோ நம.. !!INANYA NAMOO NAMA ;;; 
எனது வழி சத்யம் ! என் வழியில் சத்தியமுண்டு, நித்தியமுண்டு, ஜீவனுண்டு ! உனை காக்கும் பக்குவம் உண்டு ! உணரடா !
நம்பிக்கை
என் காக்கும் கரங்கள் கணப்பொழுதில் உனை காப்பாற்றும். இந்த இநன்யா உன்னை கண்ணின் மெய் போல காத்து நிற்பேன். கண் (ஆண்மா), மெய் (உடல், வேலி). உன் மேல் நம்பிக்கை வையடா !
என் வழியில் சத்யம், ஜீவன், ஒழுக்கம் உண்டு ! உன்னை வாழ வைக்கும் பக்குவம் உண்டு ! உன் இடத்திற்கு அழைத்து செல்லும் பக்குவமுண்டு ! என் அன்பு மகனே, மகளே, உன்னை உணர் !
உனை காப்பேன் ! கரை சேர்ப்பேன் !
முழ் (உயிர்) முறியாமல் முடித்த பூ (தாமரை இதழ் ஆண்மா) வாடாமல் உனை காப்பாற்றுவேனடா !
நான் காப்பேன் என்ற நம்பிக்கை என்ற விதையை விதைத்து செல்லடா ! உனை எப்படியும் காப்பாற்றி கரை சேர்ப்பேன். உன் சிந்தனை இன்னும் அறியாமையிலே இருக்கின்றது.
பெண்ணை தேடி அலையும் வேகத்தையும், ஆர்வத்தையும் என் மேல் காட்டடா ! மதுவையும், மாதுவையும், நடனத்தையும் தேடி செல்லாதே ! இன்பம் எனும் கடவுளைத் தேடி செல் ! அற்ப பொருள் துன்பம் தானடா !
என் நாமமே, பேரின்பம் உனக்கு. உன்னை எப்போதும் தூய்மைப்படுத்திக் கொண்டே இரு ! என் நாமம் மிகப் பெரிய சக்தி ! ஆராய்ந்து பார் !
உனக்கு அளவில்லா ஆனந்தம் தரும் என் நாமத்தை சொல்லி உணர் ! முதலில் எதையும் நோக்கி செல்லும் பொழுது சந்தேகம் வரும். மேலும் மேலும் ஆராய்ந்து பார் ! உனக்கு விடை கிடைக்கும் ! நீ அளவில்லா ஞானம் உடையவன். உன் கேள்விக்கு உனக்குள்ளேயே பதில் இருக்கின்றது. பதில் கிடைக்கும். ஏனென்றால் உனக்குள் இருப்பது நான் !
கல்லில் மேல் வைக்கும் நம்பிக்கையை சக மனிதனிடம் வை ! உனக்கு குருவாய் கற்றுத் தரும் அனுபவத்தில் நம்பிக்கை வை ! உன் மனைவி, உன் குழந்தைகள் மேல் நம்பிக்கை வை ! உழவன் பூமியை நம்பி விதைக்கின்றான். பூமி ஏமாற்றுவதில்லை ! பயிருக்கு வீரியம் கொடுத்த நாங்களும் உன்னை ஏமாற்றுவதில்லை. நானும் உன்னை ஏமாற்றுவதில்லை !
நம்பிக்கை கொண்டு எதையும் செய். தளராதே ! நான் உனக்குள் இருக்கிறேன். மனிதன் நல்ல செயலை செய்யும் போதும், கடவுளை தேடும் போதும் பல குறுக்கீடுகள் வரும் ! எல்லாவற்றையும் தாண்டி நம்பிக்கையோடு செய்யும் போது ஜெயிப்பாய் நிச்சயமாக ! எதை நினைக்கின்றாயோ அதை அடையும் வரை போராடு !
உயிர் ஒன்று தான் மிச்சம். அதுவும் போனால் போகிறது. இருந்தால் மணக்க வேண்டும். இல்லையேல் உடலுக்கு வேலை இல்லாமல் ஆக்க வேண்டும். இநன்யா என்னும் பெரு வயலில் ( பேராத்மா ) விதையை விதை நம்பிக்கையாக ! உன் எண்ணம், செயல் சோடை போகாது ! உன் வழி தவறாது !
பூமியை நம்பி விதைக்கின்றாய் ! இந்த பூமி உன்னை ஏமாற்றுவதில்லை. ஆனாலும் இந்த தாய் பூமியை நீ மதிப்பதில்லை. நான் தாயிலும் மேலானவன். தாய் பூமியை விட கருணைமிக்கவன். உன்னை ஏமாற்றமாட்டேன். எப்போதும் இந்த பூமிக்கு நன்றி தெரிவித்துக் கொண்டே இரு !
நான் உனக்குள் இருந்து சிரிப்பேனடா !
வாழைக் கன்று, தென்னங்கன்று, பசுங்கன்று ஆகிய மூன்றுக்கும் தியாகத்திற்கும் சம்பந்தம் உண்டு ! நீயும் தியாக உணர்வோடு இரு ! இந்த மூன்றையும் ஏன் கன்று என்று குறிப்பிட்டார்கள் என்று கண்டுபிடி ! கன்றை கட்டியிருக்கும் கயிறை தாண்டாதே !
உனக்கும், ஆண்மாவுக்கும், இந்த மூன்று கன்றுக்கும் தொடர்பிருக்கிறது. இதை புரிந்தவன், அறிந்தவன் ஞானியாகிறான் ! என் வலது பரிசத்தில் இருந்து கொள்கிறான். வெற்றி எவ்வளவு அருகில் இருக்கிறது என்பதை தெரியாமல் தான் தோல்வி அடைகிறாய். என் நாமம் உனக்கு வெற்றியை தரும் !
வேதம், நாதம், கீதம் வைத்தேன் உனக்குள் ! வேதம் என்றால் உருவாக்கம் ! நாதம் என்றால் உயிர் ! கீதம் என்றால் ஒலி ! உணராமல் அலைகின்றாயே ? உணர்ந்தவர்கள் சத்தியத்தோடு வாழ்வார்கள் ! வசந்தத்தோடு வாழ்வார்கள் ! நிம்மதி காண்பார்கள் !
எதை பற்றியும் யோசிக்காதே ! யாரை பற்றியும் நினைக்காதே ! உனக்குரிய கஷ்டம் ஏன் வந்தது என்று நினை ! பிறர் நலமாக இருக்கிறார்கள் என்று பொறாமை கொள்ளாதே ! அவரவர்க்கு ஆயிரம் கஷ்டங்கள். உன்னை பற்றி முதலில் யோசி ! உன் கஷ்டம் விலக வழி கிடைக்கும்.
என் செல்ல மகனே , கவலைப்படாதே ! நான் உன்னை கைவிடுவதில்லை ! என் நாமத்தை சொல்பவர் எக்காலத்திலும் தோற்பதில்லை !
என் நாமம் உனை காப்பாற்றி கரை சேர்க்கும் !
இது தேவர்கள் பேசும் நாமம் !
இது தேவர்கள் உச்சரிக்கும் நாமம் !
ஆறு கடவுள்களும் கூப்பிட்ட நாமம் இது !
என் தந்தையின் அமிழ்த செவ்வாயினால் அழைத்த நாமம் இது !
என் நாமத்தை உரக்க சொல் ! உண்மையாக நீ வாழ்வாயடா !
நான் காப்பாற்றுவேன் உன்னை எப்போதும் !
உருவாக்கும் உண்ணதம் நான்!
நான் இநன்யா !

No comments:

Post a Comment