இநன்யா ;;;INANYA NAMOO NAMA ;;; எனது வழி சத்யம் ! என் வழியில் சத்தியமுண்டு, நித்தியமுண்டு, ஜீவனுண்டு ! உனை காக்கும் பக்குவம் உண்டு ! உணரடா !
58 .இநன்யா நமோ நம.. !!INANYA NAMOO NAMA ;;;
எனது வழி சத்யம் ! என் வழியில் சத்தியமுண்டு, நித்தியமுண்டு, ஜீவனுண்டு ! உனை காக்கும் பக்குவம் உண்டு ! உணரடா !
நம்பிக்கை
என் காக்கும் கரங்கள் கணப்பொழுதில் உனை காப்பாற்றும். இந்த இநன்யா உன்னை கண்ணின் மெய் போல காத்து நிற்பேன். கண் (ஆண்மா), மெய் (உடல், வேலி). உன் மேல் நம்பிக்கை வையடா !
என் வழியில் சத்யம், ஜீவன், ஒழுக்கம் உண்டு ! உன்னை வாழ வைக்கும் பக்குவம் உண்டு ! உன் இடத்திற்கு அழைத்து செல்லும் பக்குவமுண்டு ! என் அன்பு மகனே, மகளே, உன்னை உணர் !
உனை காப்பேன் ! கரை சேர்ப்பேன் !
முழ் (உயிர்) முறியாமல் முடித்த பூ (தாமரை இதழ் ஆண்மா) வாடாமல் உனை காப்பாற்றுவேனடா !
நான் காப்பேன் என்ற நம்பிக்கை என்ற விதையை விதைத்து செல்லடா ! உனை எப்படியும் காப்பாற்றி கரை சேர்ப்பேன். உன் சிந்தனை இன்னும் அறியாமையிலே இருக்கின்றது.
பெண்ணை தேடி அலையும் வேகத்தையும், ஆர்வத்தையும் என் மேல் காட்டடா ! மதுவையும், மாதுவையும், நடனத்தையும் தேடி செல்லாதே ! இன்பம் எனும் கடவுளைத் தேடி செல் ! அற்ப பொருள் துன்பம் தானடா !
என் நாமமே, பேரின்பம் உனக்கு. உன்னை எப்போதும் தூய்மைப்படுத்திக் கொண்டே இரு ! என் நாமம் மிகப் பெரிய சக்தி ! ஆராய்ந்து பார் !
உனக்கு அளவில்லா ஆனந்தம் தரும் என் நாமத்தை சொல்லி உணர் ! முதலில் எதையும் நோக்கி செல்லும் பொழுது சந்தேகம் வரும். மேலும் மேலும் ஆராய்ந்து பார் ! உனக்கு விடை கிடைக்கும் ! நீ அளவில்லா ஞானம் உடையவன். உன் கேள்விக்கு உனக்குள்ளேயே பதில் இருக்கின்றது. பதில் கிடைக்கும். ஏனென்றால் உனக்குள் இருப்பது நான் !
கல்லில் மேல் வைக்கும் நம்பிக்கையை சக மனிதனிடம் வை ! உனக்கு குருவாய் கற்றுத் தரும் அனுபவத்தில் நம்பிக்கை வை ! உன் மனைவி, உன் குழந்தைகள் மேல் நம்பிக்கை வை ! உழவன் பூமியை நம்பி விதைக்கின்றான். பூமி ஏமாற்றுவதில்லை ! பயிருக்கு வீரியம் கொடுத்த நாங்களும் உன்னை ஏமாற்றுவதில்லை. நானும் உன்னை ஏமாற்றுவதில்லை !
நம்பிக்கை கொண்டு எதையும் செய். தளராதே ! நான் உனக்குள் இருக்கிறேன். மனிதன் நல்ல செயலை செய்யும் போதும், கடவுளை தேடும் போதும் பல குறுக்கீடுகள் வரும் ! எல்லாவற்றையும் தாண்டி நம்பிக்கையோடு செய்யும் போது ஜெயிப்பாய் நிச்சயமாக ! எதை நினைக்கின்றாயோ அதை அடையும் வரை போராடு !
உயிர் ஒன்று தான் மிச்சம். அதுவும் போனால் போகிறது. இருந்தால் மணக்க வேண்டும். இல்லையேல் உடலுக்கு வேலை இல்லாமல் ஆக்க வேண்டும். இநன்யா என்னும் பெரு வயலில் ( பேராத்மா ) விதையை விதை நம்பிக்கையாக ! உன் எண்ணம், செயல் சோடை போகாது ! உன் வழி தவறாது !
பூமியை நம்பி விதைக்கின்றாய் ! இந்த பூமி உன்னை ஏமாற்றுவதில்லை. ஆனாலும் இந்த தாய் பூமியை நீ மதிப்பதில்லை. நான் தாயிலும் மேலானவன். தாய் பூமியை விட கருணைமிக்கவன். உன்னை ஏமாற்றமாட்டேன். எப்போதும் இந்த பூமிக்கு நன்றி தெரிவித்துக் கொண்டே இரு !
நான் உனக்குள் இருந்து சிரிப்பேனடா !
நான் உனக்குள் இருந்து சிரிப்பேனடா !
வாழைக் கன்று, தென்னங்கன்று, பசுங்கன்று ஆகிய மூன்றுக்கும் தியாகத்திற்கும் சம்பந்தம் உண்டு ! நீயும் தியாக உணர்வோடு இரு ! இந்த மூன்றையும் ஏன் கன்று என்று குறிப்பிட்டார்கள் என்று கண்டுபிடி ! கன்றை கட்டியிருக்கும் கயிறை தாண்டாதே !
உனக்கும், ஆண்மாவுக்கும், இந்த மூன்று கன்றுக்கும் தொடர்பிருக்கிறது. இதை புரிந்தவன், அறிந்தவன் ஞானியாகிறான் ! என் வலது பரிசத்தில் இருந்து கொள்கிறான். வெற்றி எவ்வளவு அருகில் இருக்கிறது என்பதை தெரியாமல் தான் தோல்வி அடைகிறாய். என் நாமம் உனக்கு வெற்றியை தரும் !
உனக்கும், ஆண்மாவுக்கும், இந்த மூன்று கன்றுக்கும் தொடர்பிருக்கிறது. இதை புரிந்தவன், அறிந்தவன் ஞானியாகிறான் ! என் வலது பரிசத்தில் இருந்து கொள்கிறான். வெற்றி எவ்வளவு அருகில் இருக்கிறது என்பதை தெரியாமல் தான் தோல்வி அடைகிறாய். என் நாமம் உனக்கு வெற்றியை தரும் !
வேதம், நாதம், கீதம் வைத்தேன் உனக்குள் ! வேதம் என்றால் உருவாக்கம் ! நாதம் என்றால் உயிர் ! கீதம் என்றால் ஒலி ! உணராமல் அலைகின்றாயே ? உணர்ந்தவர்கள் சத்தியத்தோடு வாழ்வார்கள் ! வசந்தத்தோடு வாழ்வார்கள் ! நிம்மதி காண்பார்கள் !
எதை பற்றியும் யோசிக்காதே ! யாரை பற்றியும் நினைக்காதே ! உனக்குரிய கஷ்டம் ஏன் வந்தது என்று நினை ! பிறர் நலமாக இருக்கிறார்கள் என்று பொறாமை கொள்ளாதே ! அவரவர்க்கு ஆயிரம் கஷ்டங்கள். உன்னை பற்றி முதலில் யோசி ! உன் கஷ்டம் விலக வழி கிடைக்கும்.
என் செல்ல மகனே , கவலைப்படாதே ! நான் உன்னை கைவிடுவதில்லை ! என் நாமத்தை சொல்பவர் எக்காலத்திலும் தோற்பதில்லை !
என் நாமம் உனை காப்பாற்றி கரை சேர்க்கும் !
இது தேவர்கள் பேசும் நாமம் !
இது தேவர்கள் உச்சரிக்கும் நாமம் !
ஆறு கடவுள்களும் கூப்பிட்ட நாமம் இது !
என் தந்தையின் அமிழ்த செவ்வாயினால் அழைத்த நாமம் இது !
இது தேவர்கள் பேசும் நாமம் !
இது தேவர்கள் உச்சரிக்கும் நாமம் !
ஆறு கடவுள்களும் கூப்பிட்ட நாமம் இது !
என் தந்தையின் அமிழ்த செவ்வாயினால் அழைத்த நாமம் இது !
என் நாமத்தை உரக்க சொல் ! உண்மையாக நீ வாழ்வாயடா !
நான் காப்பாற்றுவேன் உன்னை எப்போதும் !
உருவாக்கும் உண்ணதம் நான்!
நான் இநன்யா !
No comments:
Post a Comment