இநன்யா ;;; INANYA NAMOO NAMA ;;; நீ காண்கின்ற பொருளில் எல்லாம் நீக்கமற நிறைந்திருக்கின்றேன். நிறைவான பேராண்மாவோடு !
48 .இநன்யா நமோ நம.. !!INANYA NAMOO NAMA ;;;
நீ காண்கின்ற பொருளில் எல்லாம் நீக்கமற நிறைந்திருக்கின்றேன். நிறைவான பேராண்மாவோடு !
எல்லாம் எனக்குள் !
எந்த பொருளிலும் நான் இல்லை ! எல்லா பொருட்களும் என்னில் உள்ளது ! எல்லாம் எனக்குள் அடக்கம் ! நான் எதனிலும் அடங்கவில்லை !
ஆண்மா, உயிர், விதை, வித்து, உலகில் உள்ள அனைத்தும் என்னிடம் உள்ளது. ஞானம். தெளிவு, அறிவு, ஆனந்தம் எனக்குள்ளே ! உன் விதியை மாற்றும் சூட்சுமமும் என்னுள்ளே ! அண்டங்கள் எல்லாம் என் உள்ளங் கையில். உண்மையை உணர பார். நான் யார் என்பதை அறிய முயற்சி செய் !
சத்தியம் தெளிவாகும் ! திறன் இருந்தால் ஆராய்ச்சி செய். வீரிய வித்தாக உனை ஆக்குவேன். என்னிலே எல்லாம் உருவானது ! என்னிலே எல்லாம் மறைகிறது ! நான் மறை பொருளான வேத வித்தகன். எத்தன் அல்ல.
நான் உன் உயிரை திருடும் பொல்லாத கள்ளன். நீ உயிரில்லா ஜடப் பொருளை திருடுகிறாய். நான் உன் உயிரை திருடுகிறேன். எனக்குள்ளே எல்லாம் மலர்கிறது. பின் சருகாக மறைகிறது. இந்த மாயவனை அறிய முற்படு !
இங்கு எல்லாம் உன்னை சாப்பிடுகின்றது. நீ உண்ணும் உணவு எல்லாம் உன்னை உண்கின்றது. எல்லாம் இவனை உண்ண காத்திருக்கின்றது. இவன் நான் சாப்பிட்டேன் என்று உளர்கின்றான் என்று என் தந்தை பிரபஞ்ச நாயகன் அடிக்கடி சொல்வார்கள். என் தர்ம குலமே, ஞான குழந்தையே, சத்திய செல்வங்களே, ஏன் ஞானத்தை தொலைத்து அலைகின்றீர்கள் ?
தேவர்களுக்கு எளிதாக நான் காணக் கிடைக்காதவன். உன் அருகிலே இருக்கிறேனடா. ஏன் மறந்தாய் நீ ?
தேவர்களுக்கு எளிதாக நான் காணக் கிடைக்காதவன். உன் அருகிலே இருக்கிறேனடா. ஏன் மறந்தாய் நீ ?
உனை அறிவை புகட்டி தான் மேலே இருந்து அனுப்பினேன். இந்த நரகத்துக்கு வந்த உடன் ஏன் அற்ப ஆசைகளில் மூழ்கிவிட்டாய் ? மேலே பார் என் அன்பு குழந்தையே !
விரிவான அழகான உலகம் காண்பாய். அதில் நான் அரசாட்சி புரிவதை பார்ப்பாய். எப்படியும் மேலே வரத்தானே போகிறாய். நான் எவ்வளவு உயர்ந்த இடத்தில் இருக்கின்றேன் என்று அங்கே வந்து பார்ப்பாய்.
தோன்றுவதெல்லாம் எனக்குள்ளே. எனை தோண்டி பார். தெளிந்த நீர் (ஞானம்) கிடைக்கும். நீ உணர்ந்தால் உனக்கு தோண்டியை (ஞான வழி முறையை) தருகிறேன். நீ வாழ்வாய் !
உன் துன்பத்திலும் இன்பத்திலும் உன்னுள்ளே இருக்கின்றேன். நீ தான் கஷ்டம் வந்தால் என்னை வெறுப்பதும், சந்தோஷம் கிடைத்தால் மறுப்பதுமாக செயல் புரிகிறாய். ஆண்மா, உயிர், தொடர்பு ! மனம், உடல் தொடர்பு ! இந்த மனம் தனித்து செயல்படும் போது ஆண்மா விலகி கொள்கின்றது. மனத்தால் உயிர் வதைபடுகிறது. உயிர் உடலை வதைக்கின்றது. அதனாலே உன்னுள் ஒலிக்கும் ஆண்மாவின் கூக்குரலை அறிய முற்படு.
உன் துன்பத்திலும் இன்பத்திலும் உன்னுள்ளே இருக்கின்றேன். நீ தான் கஷ்டம் வந்தால் என்னை வெறுப்பதும், சந்தோஷம் கிடைத்தால் மறுப்பதுமாக செயல் புரிகிறாய். ஆண்மா, உயிர், தொடர்பு ! மனம், உடல் தொடர்பு ! இந்த மனம் தனித்து செயல்படும் போது ஆண்மா விலகி கொள்கின்றது. மனத்தால் உயிர் வதைபடுகிறது. உயிர் உடலை வதைக்கின்றது. அதனாலே உன்னுள் ஒலிக்கும் ஆண்மாவின் கூக்குரலை அறிய முற்படு.
நீ என்பது தொட முடிந்த உயிர் ! ஆனால் நான் என்பது தொட முடியாத ஆண்மா ! நான் வானம் ! வானின் சூட்சுமம் நான். வசந்தங்களும் வாழ்வின் அனைத்தும் என்னுள்ளே. என்னுள் வந்து எடுத்து கொள். என் செல்லக் குழந்தையே, அள்ள அள்ள குறையாத செல்வம் நான் ! கடலிலே முத்தெடுக்க நினைத்தால் மூச்சடக்கி தான் ஆக வேண்டும் ! இங்கு எதுவும் எளிதாக கிடைப்பதில்லை ! முயற்சியும், தன்னம்பிக்கை உள்ளவனே இங்கு ஜெயிக்கின்றான்.
என்னை பார்த்து சென்றவனும் உண்டு. பக்கத்தில் வர துடிப்பவனும் உண்டு. நம்பிக்கை என்ற விதையை இநன்யா என்ற பெரு வயலில் விதைக்க யாரும் நினைக்கவில்லை. விதைத்தவன் மிகுந்த பலனை அறுவடை செய்கின்றான். ஒரு மூட்டை தானியம் விதைத்தால் நூறு மூட்டையாக கொடுக்கின்றேன். நதியின் பக்கத்தில் நின்று யோசிக்காதே, குளிக்கலாமா ? வேண்டாமா ? என்று. அதில் ஆழம் இருக்கிறதா, பாறை இருக்கிறதா, விஷம் உள்ள உயிரினம் இருக்கிறதா என்று யோசிக்காமல் என் மேல் நம்பிக்கை வைத்து மூழ்கி திளைத்து மூச்சடக்க பழகு ! பழக்கம் முதலில் ஒட்டடை. பிறகு பழக பழக இரும்பு சங்கிலியாக மாறும். பின் உனை வெல்ல யாருமில்லை. உனக்கு தோள் கொடுக்க நானே இறங்கி உன்னில் வருவேன் !
பதினாறு வயதில் (1986) என் வெளி உலக பயனம் ஆரம்பித்தது. 108 கிராமத்தில் 108 ஞான பெண்களிடம் பிச்சை எடுத்து உணவருந்த வேண்டும் ஞான கதவு திறக்க ! திருவோடு என்றால் உள்ளங்கை என்று அர்த்தம் ! இவன் தவறுதலாக ஏதோ ஒரு ஜடப் பொருளை கையில் வைத்து ஏந்துகிறான். இந்த உள்ளங்கையில் பெண்கள் கையினால் அன்னம் வாங்கி சாப்பிட்டால் தான் ஞான தீட்சை கிடைக்கும் ! அதனால் தான் சித்தர்கள், கடவுள்கள் எல்லாரும் பிச்சை எடுத்து சாப்பிட்டார்கள்.
முதலில் நடை பயனமாக நெல்லையில் இருந்து சென்னை வந்தேன். திருவொற்றியூர், பெரம்பூரில் கொஞ்ச நாள் இருந்தேன். பின் சேலம் புறப்பட்டேன். சேலத்தின் பக்கத்தில் இருக்கும் ஒரு கிராமத்தின் பக்கம் செல்லும் பொழுது வயல் வெளியில் ஒரு எழுபது வயதுள்ள மூதாட்டி என்னை பார்த்தவுடன் என் நோக்கி வந்தார்கள் ! என் மகனே என்று என்னை கட்டிப்பிடித்து உன்னை காணவே இவ்வளவு நாள் உயிரோடு இருக்கின்றேன் என்றும், எனக்கு வாரிசு இல்லை, நீ தான் என் வாரிசு என்றும் சொன்னார்கள். பின் அவர்கள் வாழும் கிராமத்தில் இருக்கும் ஏழை குடிசைக்கு அழைத்து சென்றார்கள். நான் என்னுடன் நண்பர்கள் இருவரை அழைத்து சென்றிருந்தேன். அந்த நண்பரகள் இருவரும் ஆச்சரியமாக பார்த்தார்கள். பிறகு அந்த ஏழை அன்னை தரும் கூழை குடித்து இரண்டு நாள் அங்கு தங்கி இருந்தேன். என்னோடு வந்தவர்களோ நாங்கள் சேரியில் சாப்பிடமாட்டோம். நீ வேண்டுமென்றால் இங்கே இரு என்று என்னை விடுத்து கோவை சென்றுவிட்டார்கள். அட மனித குலமே, கடவுளுக்கு எதுக்கு ஜாதி, மதம் ?
இரு நாள் கழித்து நடு இரவு ஒரு மணிக்கு அந்த புணித அன்னை என்னை அழைத்து உன் மடியில் நான் படுக்க வேண்டும் என்று சொன்னார். அரை மணி நேரம் கழித்து என் கையை அவர்கள் நெற்றியில் வைத்து கண்ணீர்விட்டார்கள். பின் நீ தான் என் வாரிசு எனவும் சிறு வயதில் காணாமல் போய்விட்டாய் என்றும் ஊர்க்காரர்களிடம் சொல்ல சொன்னார். நான் இறக்கும் போது அனாதையாக இருக்க கூடாது என்றும் சொன்னார். பின் இந்த உலகை விட்டு சென்றார்கள். அந்த ஆண்மா என்னில் கலந்து பின் அந்த ஊரின் அனுமதியுடன் அவருக்கு கொள்ளி வைத்தேன். எங்கோ எனக்காக காத்து கிடந்த அந்த நல் ஆண்மவை நான் அனாதையாக்கவில்லை.
எங்கிருந்தோ என்னை அழைத்த நல் ஆண்மாவிற்கு என் ஸ்பரிஷம் கொடுக்க நான் ஆயத்தமான போது உனக்கு தர மாட்டேனா என்ன ?
நான் பிரபஞ்ச விரிவு ! என்னை அறிந்தவன் வாழ்கின்றான் !
எந்த பொருளிலும் நான் இல்லை. எல்லாம் எனக்குள் தான் !
உணர் தெளிவிருந்தால் ! நான் உன் ஆண்மா !
நான் இநன்யா !
No comments:
Post a Comment