ரகசியம்- பகுதி நான்கு:
INANYA NAMOO NAMA ;;;
யார் கல்கி அவதாரம் ? எப்போது கல்கி வருவார் ? கல்கி அவதாரத்தை பற்றிய புராணங்கள், கதைகள், அகராதிகளை பற்றி பேச வரவில்லை இங்கு ! அவரவர் வாழ்ந்த காலத்திற்கும், சூழ்நிலைக்கும் ஏற்ப உண்மைகள் மாற்றி, திருத்தி எழுதப்பட்டுள்ளன. இங்கு இப்போது கல்கி அவதாரத்தை பற்றி சுருக்கமாக பார்ப்போம். உலகில் கடவுளின் அவதாரங்கள் பல உண்டு. அனைத்திலும் மனிதனாக மட்டுமே பிறப்பார் கடவுள் என்பதை புரிந்து கொள்ளுங்கள். கடவுள் ஒரு நோக்கத்துடனே இங்கே பிறப்பெடுப்பார் ! ராமன், கிருஷ்ணன் வாழ்ந்தது உண்மை. ஆனால் அவர்களை பற்றி நமக்கு தெரிந்தது அனைத்தும் உண்மை இல்லை. உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளன. கல்கி அவதாரமும் உண்மை தான். ஆனால் அவர் கல்கி என்ற பெயருடன் பிறக்கமாட்டார் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
எப்படி கல்கி அவதாரத்தை கண்டுபிடிப்பீர்கள் ? கல்கி என்ற பெயரை பிறப்பு சான்றிதழில் வைத்துக் கொண்டு, வித்தியாசமாக வேஷமிட்டு, குதிரையில் வேகமாக வந்து இறங்கி நான் தான் கல்கி என்று உங்களிடம் யாராவது வந்து சொன்னால் நம்பிவிடுவீர்களா ? இல்லையேல் பிரபல பத்திரிக்கையின் முதல் பக்கத்தில் கல்கி அவதாரம் வந்துள்ளார் என்று அச்சிடப்பட்டால் நம்பிவிடுவீர்களா ? அல்லது தலைப்பு செய்திகளில் திரும்ப திரும்ப போட்டு கொண்டிருந்தால் ஏற்று கொள்வீர்களா ?
கல்கி அவதாரம் உலகம் ஸ்தம்பிக்கும் போது பிறப்பார் என்று அனைவரும் சொல்லிச் சென்றது உண்மை தான். இப்போது உலகில் நடக்கின்ற கொலை, கொள்ளை, கற்பழிப்பு, பேராசை, புகழ் போதை, அதிகரிக்கும் காமம், மோகம் வஞ்சம், இயற்கை அழிப்பு, மதக் கலவரம், தீவிரவாதம், அணு ஆயுதம், ஆபத்தான கண்டுபிடிப்புகள், பெருகி வரும் தீராத நோய்கள், ஓரின சேர்க்கை முதலியவற்றை யோசித்து பாருங்கள். இது தொடர்ந்தால் இனி ஐந்தே வருடங்களில் உலகம் சுடுகாடாக மாறிவிடும். இதற்கு பிறகு கடவுள் பிறந்து, வளர்ந்து நம் அனைவரையும் திருத்தி மாற்றிவிட முடியுமோ ?
மக்களுக்கு ஞானத்தை வழங்க ஒருவர் கூட உலகில் இல்லாத நிலையில் தான் கடவுள் தோன்றுவார். அனைத்தையும் மாற்றுவார். எந்த மதத்தையும் பின்பற்றமாட்டார் ! ஆனால் அனைத்து மக்களையும் நேசிப்பார். மக்களின் செயல்களை மட்டுமே வெறுப்பார். முதலில் உண்மையை பக்குவமாக சொல்லி புரிய வைக்க நினைப்பார். அவ்வப்போது சில வாய்ப்புகள் கொடுக்கப்படும். மறுபிறவியை தடுக்க நல் வார்த்தைகளையும், வேதங்களையும் மக்களுக்கு உரைத்து ஞானத்தை வழங்குவார் ! .
அனைத்து நூல்களிலும் உண்மைகள் மறைந்துள்ளன. தெரிந்தோ, தெரியாமலோ மறைக்கப்பட்டுள்ளன ! தமிழன் பழமொழிகளின் அர்த்தங்களை கூட தவறாக புரிந்து கொண்டான். கழுதை தேய்ந்து கட்டெரும்பு ஆகியது என்று ஒரு பழமொழி உள்ளது. இதன் உண்மையான வடிவம் “கழுது தேய்ந்து கட்ட இரும்பு ஆகியது” என்பதே ! கழுது என்றால் கனமான இரும்பு என்று பொருள். அது நாளடைவில் துரு பிடித்து கட்ட இரும்பு ஆகும். இது தான் உண்மை. கால மாற்றத்தால் அனைத்தும் மாறிப் போனது.
கல்கி அவதாரத்துடன் தொடர்புடைய குதிரை என்ற வார்த்தை ஒரு விலங்கை நேரடியாக குறிப்பதல்ல. குதிர் என்ற சொல் அசுர வேகத்தையும், பலத்தையும் குறிக்கும். இதில் இருந்து தான் குதிரை என்ற பெயர்ச் சொல் வந்தது ! சில நேரங்களில் எதையும் யோசிக்காமல் அவசரப்பட்டு செய்வோரை “”ஏன் குதிக்கின்றாய் ?“” என்று கேட்போம் அல்லவா ? குதித்தல் என்றால் வேகமாக செய்யும் ஒரு செயலையே குறிக்கின்றது. குதிர் என்ற சொல் நெற்கதிர்களை பத்திரமாக பாதுகாக்கும் ஒரு பலமான மண் சட்டியை குறிக்கும் ! வேகமாக பாயும் நீர்நிலைகளில் வரும் மணல் மேடுகளை குதிர்கள் என்று அழைப்பதுண்டு ! கிராமத்தில் இந்த சொற்கள் இன்னும் வழக்கத்தில் தான் உள்ளன ! தமிழின் சிறப்பை என்னவென்று சொல்வது ? ஆனால் தமிழன் அனைத்தையும் மறந்தான். ஆராய்ச்சி செய்யுங்கள்.
கடவுள் குதிரையை போல் அன்புடன் அரவணைத்து தன் மேல் ஏற்றி நல் வழியை காண்பித்து அதில் பயணிக்கவும் செய்வார் ! குதிரையை போல் வேகமாய் பாய்ந்து பலமாய் அடித்து திருத்தவும் செய்வார் ! ஆக கல்கி குதிரையை போல் அன்பாகவும், வேகமாகவும், பலமாகவும் உலகத்தின் சிருஷ்டியை மாற்றத் தொடங்குவார் என்பதே உண்மை ! யோசியுங்கள் மக்களே. இதைத் தான் சூட்சுமமாக சொல்லிவிட்டு சென்றார்கள் சில நல் ஆண்மாக்கள். ஆக குதிரை மீது ஏறி சவாரி செய்து வரமாட்டார் கல்கி என்பதை புரிந்து கொள்ளுங்கள். மது, மாது, புகழ், பணத்திற்காக எதுவும் செய்யத் துணியும் தற்காலத்து மனிதனுக்கு இறந்தாலும் இது புரியப் போவதில்லை.
கல்கி என்ற பெயருடன் இப்போது குதிரை வைத்திருப்போர் எவருமில்லை. அவ்வாறு இனி யாரும் பிறக்கப் போவதுமில்லை. அவ்வாறு பிறந்தாலும் அவர் கடவுளாக இருக்கப் போவதுமில்லை. சொல்லாமல் எதையும் செய்வது தான் கடவுளின் சிறப்பு. இன்னொரு கூட்டமோ கடவுள் வருவார், வருவார் என்று காத்து கொண்டு உலகம் முழுவதும் அழுது புலம்பி கொண்டிருக்கின்றது. எப்படி வருவார் ? எங்கு வருவார் ? எப்படி கண்டுபிடிப்பார்கள் ? யார் பார்த்தார்கள் ?
உலகில் உள்ள எந்த நூல்களிலும் கல்கி அவதாரத்தின் பிறப்பை பற்றியும், அவர் பிறந்து, வாழ்கின்ற இடத்தை பற்றியும் நேரடியாக குறிப்பிடப்படவில்லை என்பதை நீங்களே ஆராய்ச்சி செய்து புரிந்து கொள்ளுங்கள். (VISHNU PURANA, BHAGAVAD GITA, SRIMAD BHAGAVATHAM, MAHABHARATA, RAMAYANA, BIBLE, QURAN, THE LOST BOOK OF NOSTRADAMUS, etc). இந்த முக்கிய நூல்களில் கல்கியை பற்றிய தகவல்களை எடுத்து, அவரவர்களின் அறிவுக்கு ஏற்ப அதை புரிய முயற்சி செய்து, பின் திருத்தி நூல்களாக உலகில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் பலர் அவர்களது நாட்டில் வெளியிட்டனர் .
கல்கி சம்பந்தமாக பல்வேறு கருத்துக்கள் உலகம் முழுவதும் பரவியுள்ளது. பல முரண்பாடுகளும் உண்டு !
ஆனால் அனைத்து நூல்களிலும், புராணங்களிலும், இதிகாசங்களிலும் சொல்லப்பட்ட கருத்துக்கள் ஒத்துப் போகின்ற ஒரே இடம் முக்கடல் சங்கமிக்கும் தென் தமிழ்நாடு மட்டுமே ! உலகின் முதல் மனிதன் தோன்றிய இடத்தில் தான் கடவுளின் கடைசி அவதாரமும் ! பாவத்தை நாசமாக்கும் பாபநாசத்தில் அதிசயமாய் வானத்தில் இருந்து பொழியும் பாண தீர்த்ததில் இருந்து பெருக்கெடுத்து ஓடும் தாமிரபரணி நதியின் கரை அருகே தான் அது ! தாமிரம் இல்லாமல் எந்த உலோகமும் இல்லை. கோயில்கள் அனைத்திலும் தாமிரத்தை ஏன் பதிக்கின்றார்கள் என்று யோசியுங்கள். அது மனிதனை தன் வசப்படுத்தும். மிகச் சிறந்த மின் கடத்தியும் கூட. உலகில் எந்த நதிக்கும் இல்லாத சிறப்பு தாமிரபரணிக்கு மட்டுமே.
ஆனால் அனைத்து நூல்களிலும், புராணங்களிலும், இதிகாசங்களிலும் சொல்லப்பட்ட கருத்துக்கள் ஒத்துப் போகின்ற ஒரே இடம் முக்கடல் சங்கமிக்கும் தென் தமிழ்நாடு மட்டுமே ! உலகின் முதல் மனிதன் தோன்றிய இடத்தில் தான் கடவுளின் கடைசி அவதாரமும் ! பாவத்தை நாசமாக்கும் பாபநாசத்தில் அதிசயமாய் வானத்தில் இருந்து பொழியும் பாண தீர்த்ததில் இருந்து பெருக்கெடுத்து ஓடும் தாமிரபரணி நதியின் கரை அருகே தான் அது ! தாமிரம் இல்லாமல் எந்த உலோகமும் இல்லை. கோயில்கள் அனைத்திலும் தாமிரத்தை ஏன் பதிக்கின்றார்கள் என்று யோசியுங்கள். அது மனிதனை தன் வசப்படுத்தும். மிகச் சிறந்த மின் கடத்தியும் கூட. உலகில் எந்த நதிக்கும் இல்லாத சிறப்பு தாமிரபரணிக்கு மட்டுமே.
கடவுள் கடைசியாக யுகத்தில் பிறந்தால் அழகிய செந்தமிழில் மட்டுமே பேச நினைப்பார் ! தமிழ்நாட்டில் பிறந்தால் மட்டுமே இது சாத்தியம் ! இது ஞான பூமி ! ஞான மக்கள் அதிகமாய் வாழ்கின்ற இடம் ! தமிழனை மாற்றாமல் உலகை எப்படி மாற்ற முடியும் என்று நினைக்கின்றீர்கள் ?
கல்கி அவதாரம் வெளியே உலகிற்கு தெரியும் போது தமிழகம் முதலில் சுத்தமாக்கப்படும். புதுபிக்கப்படும். தமிழ்நாடு தாமரையாய் மலரும். கடவுளை தாலாட்டும் தாமிரபரணி அன்னை மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீரில் துள்ளி குதித்து ஆப்பரித்து ஓடுவாள். தமிழகம் எங்கும் ஆணவம், ஆசைகள் அடக்கப்படும். மேடு பள்ளங்களை நீர் சமமாக்குவதைப் போல ஏழை, பணக்காரன் பாகுபாடு சமமாக்கப்படும். உலக வரலாற்றில் முதன்முறையாக தன் மதத்தையும், இனத்தையும், ஜாதியையும் மறந்து தமிழினம் அன்பை வெளிப்படுத்தும். யார் ஆட்சி செய்தாலும் கடவுளின் சட்டம் நிலைநாட்டப்படும் ! பள்ளியும், கல்லூரிகளும் மூடியிருந்தாலும் கடவுளின் பாடத்தை தமிழர்கள் அனைவரும் கற்பார்கள். உலகமே துன்பத்தில் தத்தளித்து தவித்து கொண்டிருக்க தமிழினம் ஒன்று கூடி உலகிற்கு கடவுள் யார் என்பதை சொல்லி ஞானத்தை வழங்கும் சத்யமாக ! தர்மம் மட்டுமே நிலைநாட்டப்படும் ! கர்மம் வேரோடு அழிக்கப்படும் !
கல்கி அவதாரம் இப்போது வந்துள்ளார். சில மாதங்களில் உலகிற்கு கல்கி யார் என்று தெரிந்துவிடும் சத்யமாக ! பொறுத்திருந்து பாருங்கள் யார் கல்கி என்று ! கல்கி யாரென்று தெரிந்தாலும் இந்த பதிவு இங்கேயே தான் இருக்கும். ஆனால் உங்களால் படிக்க இயலாது. புரிந்து கொள்ளுங்கள்.
இநன்யா நமோ நம !
No comments:
Post a Comment