Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, May 11, 2016

ரகசியம் 4 - யார் கல்கி அவதாரம் (11-12-2015) INANYA NAMOO NAMA ;;;



75  ரகசியம் 4 - யார் கல்கி அவதாரம் (11-12-2015)

இநன்யா நமோ நம.. !!

INANYA NAMOO NAMA ;;; 

ரகசியம்- பகுதி நான்கு:
INANYA NAMOO NAMA ;;; 
யார் கல்கி அவதாரம் ? எப்போது கல்கி வருவார் ? கல்கி அவதாரத்தை பற்றிய புராணங்கள், கதைகள், அகராதிகளை பற்றி பேச வரவில்லை இங்கு ! அவரவர் வாழ்ந்த காலத்திற்கும், சூழ்நிலைக்கும் ஏற்ப உண்மைகள் மாற்றி, திருத்தி எழுதப்பட்டுள்ளன. இங்கு இப்போது கல்கி அவதாரத்தை பற்றி சுருக்கமாக பார்ப்போம். உலகில் கடவுளின் அவதாரங்கள் பல உண்டு. அனைத்திலும் மனிதனாக மட்டுமே பிறப்பார் கடவுள் என்பதை புரிந்து கொள்ளுங்கள். கடவுள் ஒரு நோக்கத்துடனே இங்கே பிறப்பெடுப்பார் ! ராமன், கிருஷ்ணன் வாழ்ந்தது உண்மை. ஆனால் அவர்களை பற்றி நமக்கு தெரிந்தது அனைத்தும் உண்மை இல்லை. உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளன. கல்கி அவதாரமும் உண்மை தான். ஆனால் அவர் கல்கி என்ற பெயருடன் பிறக்கமாட்டார் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
எப்படி கல்கி அவதாரத்தை கண்டுபிடிப்பீர்கள் ? கல்கி என்ற பெயரை பிறப்பு சான்றிதழில் வைத்துக் கொண்டு, வித்தியாசமாக வேஷமிட்டு, குதிரையில் வேகமாக வந்து இறங்கி நான் தான் கல்கி என்று உங்களிடம் யாராவது வந்து சொன்னால் நம்பிவிடுவீர்களா ? இல்லையேல் பிரபல பத்திரிக்கையின் முதல் பக்கத்தில் கல்கி அவதாரம் வந்துள்ளார் என்று அச்சிடப்பட்டால் நம்பிவிடுவீர்களா ? அல்லது தலைப்பு செய்திகளில் திரும்ப திரும்ப போட்டு கொண்டிருந்தால் ஏற்று கொள்வீர்களா ?
கல்கி அவதாரம் உலகம் ஸ்தம்பிக்கும் போது பிறப்பார் என்று அனைவரும் சொல்லிச் சென்றது உண்மை தான். இப்போது உலகில் நடக்கின்ற கொலை, கொள்ளை, கற்பழிப்பு, பேராசை, புகழ் போதை, அதிகரிக்கும் காமம், மோகம் வஞ்சம், இயற்கை அழிப்பு, மதக் கலவரம், தீவிரவாதம், அணு ஆயுதம், ஆபத்தான கண்டுபிடிப்புகள், பெருகி வரும் தீராத நோய்கள், ஓரின சேர்க்கை முதலியவற்றை யோசித்து பாருங்கள். இது தொடர்ந்தால் இனி ஐந்தே வருடங்களில் உலகம் சுடுகாடாக மாறிவிடும். இதற்கு பிறகு கடவுள் பிறந்து, வளர்ந்து நம் அனைவரையும் திருத்தி மாற்றிவிட முடியுமோ ?
மக்களுக்கு ஞானத்தை வழங்க ஒருவர் கூட உலகில் இல்லாத நிலையில் தான் கடவுள் தோன்றுவார். அனைத்தையும் மாற்றுவார். எந்த மதத்தையும் பின்பற்றமாட்டார் ! ஆனால் அனைத்து மக்களையும் நேசிப்பார். மக்களின் செயல்களை மட்டுமே வெறுப்பார். முதலில் உண்மையை பக்குவமாக சொல்லி புரிய வைக்க நினைப்பார். அவ்வப்போது சில வாய்ப்புகள் கொடுக்கப்படும். மறுபிறவியை தடுக்க நல் வார்த்தைகளையும், வேதங்களையும் மக்களுக்கு உரைத்து ஞானத்தை வழங்குவார் ! .
அனைத்து நூல்களிலும் உண்மைகள் மறைந்துள்ளன. தெரிந்தோ, தெரியாமலோ மறைக்கப்பட்டுள்ளன ! தமிழன் பழமொழிகளின் அர்த்தங்களை கூட தவறாக புரிந்து கொண்டான். கழுதை தேய்ந்து கட்டெரும்பு ஆகியது என்று ஒரு பழமொழி உள்ளது. இதன் உண்மையான வடிவம் “கழுது தேய்ந்து கட்ட இரும்பு ஆகியது” என்பதே ! கழுது என்றால் கனமான இரும்பு என்று பொருள். அது நாளடைவில் துரு பிடித்து கட்ட இரும்பு ஆகும். இது தான் உண்மை. கால மாற்றத்தால் அனைத்தும் மாறிப் போனது.
கல்கி அவதாரத்துடன் தொடர்புடைய குதிரை என்ற வார்த்தை ஒரு விலங்கை நேரடியாக குறிப்பதல்ல. குதிர் என்ற சொல் அசுர வேகத்தையும், பலத்தையும் குறிக்கும். இதில் இருந்து தான் குதிரை என்ற பெயர்ச் சொல் வந்தது ! சில நேரங்களில் எதையும் யோசிக்காமல் அவசரப்பட்டு செய்வோரை “”ஏன் குதிக்கின்றாய் ?“” என்று கேட்போம் அல்லவா ? குதித்தல் என்றால் வேகமாக செய்யும் ஒரு செயலையே குறிக்கின்றது. குதிர் என்ற சொல் நெற்கதிர்களை பத்திரமாக பாதுகாக்கும் ஒரு பலமான மண் சட்டியை குறிக்கும் ! வேகமாக பாயும் நீர்நிலைகளில் வரும் மணல் மேடுகளை குதிர்கள் என்று அழைப்பதுண்டு ! கிராமத்தில் இந்த சொற்கள் இன்னும் வழக்கத்தில் தான் உள்ளன ! தமிழின் சிறப்பை என்னவென்று சொல்வது ? ஆனால் தமிழன் அனைத்தையும் மறந்தான். ஆராய்ச்சி செய்யுங்கள்.
கடவுள் குதிரையை போல் அன்புடன் அரவணைத்து தன் மேல் ஏற்றி நல் வழியை காண்பித்து அதில் பயணிக்கவும் செய்வார் ! குதிரையை போல் வேகமாய் பாய்ந்து பலமாய் அடித்து திருத்தவும் செய்வார் ! ஆக கல்கி குதிரையை போல் அன்பாகவும், வேகமாகவும், பலமாகவும் உலகத்தின் சிருஷ்டியை மாற்றத் தொடங்குவார் என்பதே உண்மை ! யோசியுங்கள் மக்களே. இதைத் தான் சூட்சுமமாக சொல்லிவிட்டு சென்றார்கள் சில நல் ஆண்மாக்கள். ஆக குதிரை மீது ஏறி சவாரி செய்து வரமாட்டார் கல்கி என்பதை புரிந்து கொள்ளுங்கள். மது, மாது, புகழ், பணத்திற்காக எதுவும் செய்யத் துணியும் தற்காலத்து மனிதனுக்கு இறந்தாலும் இது புரியப் போவதில்லை.
கல்கி என்ற பெயருடன் இப்போது குதிரை வைத்திருப்போர் எவருமில்லை. அவ்வாறு இனி யாரும் பிறக்கப் போவதுமில்லை. அவ்வாறு பிறந்தாலும் அவர் கடவுளாக இருக்கப் போவதுமில்லை. சொல்லாமல் எதையும் செய்வது தான் கடவுளின் சிறப்பு. இன்னொரு கூட்டமோ கடவுள் வருவார், வருவார் என்று காத்து கொண்டு உலகம் முழுவதும் அழுது புலம்பி கொண்டிருக்கின்றது. எப்படி வருவார் ? எங்கு வருவார் ? எப்படி கண்டுபிடிப்பார்கள் ? யார் பார்த்தார்கள் ?
உலகில் உள்ள எந்த நூல்களிலும் கல்கி அவதாரத்தின் பிறப்பை பற்றியும், அவர் பிறந்து, வாழ்கின்ற இடத்தை பற்றியும் நேரடியாக குறிப்பிடப்படவில்லை என்பதை நீங்களே ஆராய்ச்சி செய்து புரிந்து கொள்ளுங்கள். (VISHNU PURANA, BHAGAVAD GITA, SRIMAD BHAGAVATHAM, MAHABHARATA, RAMAYANA, BIBLE, QURAN, THE LOST BOOK OF NOSTRADAMUS, etc). இந்த முக்கிய நூல்களில் கல்கியை பற்றிய தகவல்களை எடுத்து, அவரவர்களின் அறிவுக்கு ஏற்ப அதை புரிய முயற்சி செய்து, பின் திருத்தி நூல்களாக உலகில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் பலர் அவர்களது நாட்டில் வெளியிட்டனர் .
கல்கி சம்பந்தமாக பல்வேறு கருத்துக்கள் உலகம் முழுவதும் பரவியுள்ளது. பல முரண்பாடுகளும் உண்டு !
ஆனால் அனைத்து நூல்களிலும், புராணங்களிலும், இதிகாசங்களிலும் சொல்லப்பட்ட கருத்துக்கள் ஒத்துப் போகின்ற ஒரே இடம் முக்கடல் சங்கமிக்கும் தென் தமிழ்நாடு மட்டுமே ! உலகின் முதல் மனிதன் தோன்றிய இடத்தில் தான் கடவுளின் கடைசி அவதாரமும் ! பாவத்தை நாசமாக்கும் பாபநாசத்தில் அதிசயமாய் வானத்தில் இருந்து பொழியும் பாண தீர்த்ததில் இருந்து பெருக்கெடுத்து ஓடும் தாமிரபரணி நதியின் கரை அருகே தான் அது ! தாமிரம் இல்லாமல் எந்த உலோகமும் இல்லை. கோயில்கள் அனைத்திலும் தாமிரத்தை ஏன் பதிக்கின்றார்கள் என்று யோசியுங்கள். அது மனிதனை தன் வசப்படுத்தும். மிகச் சிறந்த மின் கடத்தியும் கூட. உலகில் எந்த நதிக்கும் இல்லாத சிறப்பு தாமிரபரணிக்கு மட்டுமே.
கடவுள் கடைசியாக யுகத்தில் பிறந்தால் அழகிய செந்தமிழில் மட்டுமே பேச நினைப்பார் ! தமிழ்நாட்டில் பிறந்தால் மட்டுமே இது சாத்தியம் ! இது ஞான பூமி ! ஞான மக்கள் அதிகமாய் வாழ்கின்ற இடம் ! தமிழனை மாற்றாமல் உலகை எப்படி மாற்ற முடியும் என்று நினைக்கின்றீர்கள் ?
கல்கி அவதாரம் வெளியே உலகிற்கு தெரியும் போது தமிழகம் முதலில் சுத்தமாக்கப்படும். புதுபிக்கப்படும். தமிழ்நாடு தாமரையாய் மலரும். கடவுளை தாலாட்டும் தாமிரபரணி அன்னை மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீரில் துள்ளி குதித்து ஆப்பரித்து ஓடுவாள். தமிழகம் எங்கும் ஆணவம், ஆசைகள் அடக்கப்படும். மேடு பள்ளங்களை நீர் சமமாக்குவதைப் போல ஏழை, பணக்காரன் பாகுபாடு சமமாக்கப்படும். உலக வரலாற்றில் முதன்முறையாக தன் மதத்தையும், இனத்தையும், ஜாதியையும் மறந்து தமிழினம் அன்பை வெளிப்படுத்தும். யார் ஆட்சி செய்தாலும் கடவுளின் சட்டம் நிலைநாட்டப்படும் ! பள்ளியும், கல்லூரிகளும் மூடியிருந்தாலும் கடவுளின் பாடத்தை தமிழர்கள் அனைவரும் கற்பார்கள். உலகமே துன்பத்தில் தத்தளித்து தவித்து கொண்டிருக்க தமிழினம் ஒன்று கூடி உலகிற்கு கடவுள் யார் என்பதை சொல்லி ஞானத்தை வழங்கும் சத்யமாக ! தர்மம் மட்டுமே நிலைநாட்டப்படும் ! கர்மம் வேரோடு அழிக்கப்படும் !
கல்கி அவதாரம் இப்போது வந்துள்ளார். சில மாதங்களில் உலகிற்கு கல்கி யார் என்று தெரிந்துவிடும் சத்யமாக ! பொறுத்திருந்து பாருங்கள் யார் கல்கி என்று ! கல்கி யாரென்று தெரிந்தாலும் இந்த பதிவு இங்கேயே தான் இருக்கும். ஆனால் உங்களால் படிக்க இயலாது. புரிந்து கொள்ளுங்கள்.
இநன்யா நமோ நம !

No comments:

Post a Comment