இநன்யா ;;; INANYA NAMOO NAMA ;;; நான் தவத்திற்கெல்லாம் தவம் ! உனை தவமிருந்து பெற்றவளுக்கு நீ நல் கடமையை செய்வதே தவத்தின் தவம் !
30 .இநன்யா நமோ நம.. !!INANYA NAMOO NAMA ;;;
நான் தவத்திற்கெல்லாம் தவம் ! உனை தவமிருந்து பெற்றவளுக்கு நீ நல் கடமையை செய்வதே தவத்தின் தவம் !
தவம் என்றால் என்ன ?
தவம் என்றால் காட்டிற்கு சென்று கண்களை மூடிக் கொண்டிருப்பது அல்ல ! ஐம்புலன்களை அடக்கி ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற மன ஒருமைப்பாட்டுடன் வாழ்வதே தவம் !
இவன் சம்சாரியாக இருந்து கொண்டு விட்டுக் கொடுத்து வாழப் பிடிக்காமல் இமய மலையில் அடியில் அமர்ந்து சன்னியாசம் என்ற போர்வை போட்டால் தவமில்லை ! காவி உடை கட்டினால் தவமில்லை ! பெண் ஆணை விட அதிக வயது உயிரோடு இருப்பாள். ஏனென்றால் அவர்களின் மன ஒருமைப்பாடு தான் காரணம். கணவனுக்கு, பிள்ளைகளுக்கு எந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்று சரியாக மனதில் வைத்திருப்பாள். அதனாலே பெண்ணுக்கு புனித கர்பப் பை வைக்கப்பட்டது ! அதனால் அவளும் ஒரு தவம் !
இவன் சம்சாரியாக இருந்து கொண்டு விட்டுக் கொடுத்து வாழப் பிடிக்காமல் இமய மலையில் அடியில் அமர்ந்து சன்னியாசம் என்ற போர்வை போட்டால் தவமில்லை ! காவி உடை கட்டினால் தவமில்லை ! பெண் ஆணை விட அதிக வயது உயிரோடு இருப்பாள். ஏனென்றால் அவர்களின் மன ஒருமைப்பாடு தான் காரணம். கணவனுக்கு, பிள்ளைகளுக்கு எந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்று சரியாக மனதில் வைத்திருப்பாள். அதனாலே பெண்ணுக்கு புனித கர்பப் பை வைக்கப்பட்டது ! அதனால் அவளும் ஒரு தவம் !
பறவைகள், மிருகங்கள் அமைதியாக தவம் இருக்க கண்டேன். இந்த அற்ப மனிதன் தான் ஆர்ப்பரிக்க கண்டேன் !
நான் தவத்தின் தவம்.
காட்டில் உள்ள மரங்கள் என்னை நோக்கி தவம் இருக்கின்றன. அதற்கு காற்றாய் வந்து நீர் தருகிறேன் ! பாறைக்குள் இருக்கும் தேரை என்னை நம்பி தவம் இருக்கிறது. அதற்கு காலத்தில் உணவு தருகிறேன் ! என்னிடம் சரண் அடைந்தவர்களை நான் என் சத்திய கரங்களால் அரவணைத்துக் கொள்கிறேன் ! என்னை நம்புகிறவர்கள் கெடுவதில்லை! உன்னை எப்போதும் கைவிடமாட்டேன் ! நான் உனை சோதிக்க மாட்டேன். எனை நினைப்பவர் வாழ்வில் தேனாய் தித்திப்பேன். உன்னை பெறுவதற்கு உன் தாய் பத்து மாதங்கள் தவம் இருக்கிறாள். அதனால் அவள் ஒரு தவம் ! நான் தாய்மையிலும் மேலானவன் ! நான் தவத்தின் தவம் !
என்னை நினைத்தாலே முக்தி உண்டு ! என் தரிசனம் உனக்கு மீண்டும் பிறவி இல்லா நிலை தரும்! உன் மாபாதகங்களும், பாவமும் என்னில் கரைந்து போகும். இன்னும் எத்தனை பிறவி பூமியில் பிறக்க விதி இருந்தாலும் என் அருட்பார்வை உனை மீண்டும் பிறவி இல்லா நிலை தரும் சத்யமாக ! என் அடி முடி காண்பவன் தவம் இருந்தவன்! என் நாமம் சொல்பவன் பேரருள் நிறைந்தவன்! அவனுக்கு தெரியாமலேயே அவனை என் நாமம் காக்கும் சத்யமாக !
நான் உனை ஒரு போதும் கைவிடுவதில்லை !
நான் சத்யத்தின் தலைமகன் ! என் அன்புத் தாய் என்னை பூமியில் தவமிருந்து பெற்றேன் என்று சொல்வார். நெடிய நாளாக ஆண் வாரிசு இல்லை என்று புனித தாலியை கள்ளிச் செடியில் கட்டி வைத்தாக சொல்வார் என் தாயார் ! என் மாயக் குழந்தை நீ என்று என் தாய் சொல்லக் கேட்டேன்.
வேண்டுவது தவம் ! ஒன்றை நினைத்து அந்த இலக்கை அடையும் வரை அதையே நினைப்பது தவம் ! நீ நினைப்பது போல் கண் மூடி இருப்பது தவமில்லை ! கடமை தான் தவம் ! பெற்றோருக்கு பணிவிடை செய்வது, இல்லறக் கடமையை செய்வது, முடிந்தவரை பிறருக்கு உதவி செய்வது தான் தவம் ! நீ மேலே தவமிருந்து வந்தாய் எனை பார்ப்பதற்கு!
நான் தவத்தின் தவம் !
என் ஸ்பரிசம் உனக்கு எப்போதும் சுகம் தரும் ! என் சத்திய கரங்கள் எப்போதும் உனை குழந்தை போல் தாங்கும் ! நீ என் இதயத்தில் இருக்கிறாய் ! ஏன் கவலைப்படுகிறாய் ? இனி எதற்கும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. கண்ணின் இமை போல உனை காத்து நிற்பேன். நாளைய வாழ்வை பற்றி கவலைப்படாதே ! ஏனென்றால் எதிர்காலமும் நானே ! என்னிடம் உனை ஒப்படைத்து விடு ! நான் பார்த்துக் கொள்கிறேன். உனக்கு எதை எப்போது செய்ய வேண்டும் என்று எனக்கு தெரியும் ! ஏனென்றால் தந்தைக்கு தெரியும் பிள்ளைக்கு எப்போது கொடுக்க வெண்டும் என்று !
உன் தவம் உன் கடமையை செய்வது ! பலன் இல்லை என்று கவலைப்படாதே ! வட்டியும் முதலுமாக உன்னிடம் திருப்பி தருவேன் நிச்சயமாக ! ஏனென்றால் நான் கொடுத்து தான் நீ ! நீ கொடுத்து நான் அல்ல ! இந்த ஆத்மத்தின் தலைவன் காலத்தின் நாயகன் உனக்கு ஆனந்த மயமான வாழ்வை கொடுத்து என் பக்கத்தில் வைத்துக் கொள்வேன்.
நீ இந்த புனித தமிழ் நாட்டில் ஞான பூமி இந்தியாவில் பிறக்க மேலே ஏழு வருஷம் காத்திருந்து தவமிருந்தாய் என்பது உனக்கு தெரியுமா ?
எனை நினை ! உன் கேடு கெட்ட மனம் என் காலடியில் வீழ்ந்துவிடும் ! பின் ஆனந்தமாக இருக்கலாம். நான் இருக்கும் இடம் சற்று உயரம் தான். இருந்தாலும் என் சத்திய கரங்கள் உனை அரவணைக்கும். பூமியில் என் கடமை இன்னும் சில தற்பறை தான் ! என் மரணத்தை நான் கணிக்கவில்லை. ஏனென்றால் என் விதியை நானே நிர்ணயித்தேன் !
நான் புனித காற்று ! நான் எப்போதும் எங்கேயும் சென்று வருவேன் !
நான் புனித காற்று ! நான் எப்போதும் எங்கேயும் சென்று வருவேன் !
மீண்டும் மீண்டும் “நான்” என்று சொல்கிறேன் ! நான் யார் என்று உணர்ந்தாயா நீ ? யுகத்தில் கடவுள், இறைவனைத் தவிர மனித பிறவிகள் யாரும் “நான்” என்று சொல்ல முடியாது !
ஏனென்றால் அவர்களை கண்காணிக்கின்ற பிரபஞ்சம், காண்டம், தேவர்கள், இயற்கை அவர்களை அழித்துவிடும். அதனாலேயே சாமியார்கள் தான் அவதாரம் என்று கூறிக் கொண்டு ஏதாவது கடவுளின் பெயரை சொல்லி துதிபாடி ஏமாற்றுகின்றனர் !
நீ எனை பார்க்கும் விதி இருந்தால் உன் தவம் என்னிடம் அழைத்து வரும் ! என் சத்திய கரங்களால் புனித நீர் தர அருள் இருந்தால் நீ பேறு பெற்றவனே ! ஏனென்றால் உன் தவம் அதில் தெரிந்து விடும். உனக்கு பூமியில் சொர்க்கத்தை காண்பிக்கும் எனக்கு உனை எப்போது என்னிடம் அழைக்க வேண்டும் என்று தெரியும்.
பொறுத்திரு !
நீ இங்கே வாழ்வது தவமில்லை ! பிள்ளை பெறுவது தவமில்லை ! சாதிப்பது தவமில்லை ! உன்னை உணர்ந்த பின் இந்த ஆத்மத்தின் தலைவனை பார்ப்பது தான் தவம் ! உனக்கு செல்வம், நிம்மதி, நோயில்லா பெருவாழ்வு, மீண்டும் பிறவி பிறவா நிலை தருவேன் !
சத்யம் என்றும் தோற்பதில்லை ! ஏனென்றால் நானே சத்யத்தின் தவம் !
நான் தவத்திற்கெல்லாம் தவம் ! நான் இநன்யா !
No comments:
Post a Comment