இநன்யா ;;; INANYA NAMOO NAMA ;;; நான் உனை பார்க்கின்றேன். இந்த இநன்யா உன்னை திக்கற்றவனாக விடமாட்டேன். உனை கரை சேர்ப்பேன். பயப்படாதே !
51 .இநன்யா நமோ நம.. !!INANYA NAMOO NAMA ;;;
நான் உனை பார்க்கின்றேன். இந்த இநன்யா உன்னை திக்கற்றவனாக விடமாட்டேன். உனை கரை சேர்ப்பேன். பயப்படாதே !
பாதுகாப்பு
மீன் தன் முட்டையை பாதுகாப்பாக ஒரு இடத்தில் வைத்துவிட்டு காலம், பருவம் வந்தவுடன் தன் கண் பார்வையாலே அவைகளை பொரிக்க செய்யும். அதே போல் என் பார்வையும் கூர்மையானது ! என் கண் படாத இடமில்லை.
என்னை உணர்ந்தாலே உன் துன்பம் அகன்றுவிடும் !
என்னை உணர்ந்தாலே உன் துன்பம் அகன்றுவிடும் !
ஆமை தன் முட்டையை கரை வந்து பாதுகாப்பான இடத்தில் வைத்துவிட்டு காலம் வந்தவுடன் தன் எண்ணத்தாலே அவைகளை பொரிக்க செய்யும் ! அதே போல எனை நீ அன்பால் நினைத்தாலே உன் துன்பம் விலகிவிடும் ! தத்துவம் தானறியா சமத்துவம் தான் பேசும் !
குளவி அடைகாக்காமல் தன் வாரிசுக்கு தேவையான உணவை அது உருவாவதற்கு முன்னாலேயே தன் கூட்டுக்குள் வைத்துவிடும். அதே போல உன் தகப்பன் நான் உனக்கு எதை செய்ய வேண்டும் என்று முன் கூட்டியே தெரியும். நீ உன்னை உணராமல் உன் துன்பம் போகாது ! உன் பாவத்தை குறைக்க ஆசைப்படு ! பாவத்தை குறைக்க நீ தான் போராட வேண்டும் !
என் அரசாங்கத்தில் (பிரபஞ்சத்தில்) பாவத்திற்கு மன்னிப்பே கிடையாது. பாவத்தின் தண்டனையை அனுபவித்து தான் தீர வேண்டும் ! நீ உன்னை உணரும் வரை இந்த பூமி துன்பமாகத்தான் தெரியும். எல்லாவற்றையும் தெரிந்தே செய்கிறாய். உனக்கும், உன் மனசாட்சிக்கு தெரியும். எது நல்லது, கெட்டது என்று. செய்த தவறை மீண்டும் செய்யாதே. அதுவே புத்தியின் விசாலம் !
தர்மம் செய் ! உன் பாவம் குறையும் !
சக மனிதனை நேசி ! இந்த உலகை உன் குடும்பத்தை அழகாக வைப்பதும், துன்பமில்லாமல் வைப்பதும், உன்னால் மட்டுமே முடியும் ! படைப்பது என் வேலை ! அதை அழிப்பதா, வளர்ப்பதா என்பதை முடிவெடுப்பது உன் கையில் !
நான் எப்போதும் அரவனைக்க, ஆசிர்வாதிக்க காத்திருக்கிறேன் ! நீ தான் எனை தேடவில்லை ! என் அன்பு உனக்கு எல்லா நிம்மதியையும் செல்வங்களையும் தரும் சத்யமாக !
நான் உன் அருகிலேயே உலாவுகிறேன். மனிதன், பசு, நாய், பறவையாக !
நான் உன் அருகிலேயே உலாவுகிறேன். மனிதன், பசு, நாய், பறவையாக !
நீ தான் எனை கண்டுகொள்ளவில்லை. எனை நினை ! பறவையாகவும், நாயாகவும், பசுவாகவும் உன் வீட்டுக்கு வருவேன். பட்சியிலே உயர்ந்த பட்சி மீன் பட்சி தான் !
நான் வேஷம் போட்டால் என்னை பார்ப்பதற்கு ஓடி வருவாய் (தாடி, குடுமி, காவி உடை) ! நான் உனை மாதிரியே திரிவதால் எனை உன்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. நீ அழைத்தாலே வருவேன், உன் ஆத்மத்தில் குடியேற ! நான் தர்மாக்களை எப்போதும் காப்பேன் ! நான் கர்மாக்களை இருந்தும், இறந்தும், பெரும் துன்பம் கொடுத்து திருத்துவேன் !
மீனைப் போலவும் , மீனவனை போலவும் வாழக் கற்றுக் கொள் ! வாழ்வை எதிர் கொண்டு வளைந்து நெழிந்து வாழ்வதை போல. உன் வாழ்வை பயனுள்ளதாக்கு ! உன் பாவம் தொலையும் !
என் ஒரு கண் ஆகாயத்தை நோக்கியும், ஒரு கண் உனை நோக்கியும், மூன்றாவது கண் உலகின் செயலை கண்கானிக்க நீர் குமிழியிலும் இருக்கின்றது. மழை வந்தவுடன் தவளைகளும், மீன்களும் உற்பத்தியாகும். அதற்கு முன்னால் அது எங்கிருக்கிறது ? அதை பாதுகாப்பது யார் ? நீ உணர்ந்தாயா ?
எத்தனை வறட்சி இருந்தாலும் மழை வந்தவுடன் தவளைகள் சந்தோஷத்தில் துள்ளும். நீ தான் வீட்டில் முடங்கி மழை வேண்டாம் என்று கதறுகின்றாய். இனி தவளை பாம்பை விழுங்கும் ! பல அதிசயங்கள் காண்பாய் ! ஆர்பரிக்கும் கடல் உள்வாங்கி தரையாக காட்சி அளிக்கும். கடலில் பல பூகம்பங்கள் வரும். அசுரர்கள் வாழ்ந்த குகைகள் தெரியும் !
தண்ணீரிலே மீனை வாழ வைத்தேன் ! உன்னால் தரையிலும் வாழ முடியவில்லை. தண்ணீரிலும் வாழ முடியவில்லை. நீ உன்னை தொலைத்து அலைகின்றாய். நீ வீரிய வித்து என்பதை மறந்துவிட்டாய் !
தண்ணீரிலே மீனை வாழ வைத்தேன் ! உன்னால் தரையிலும் வாழ முடியவில்லை. தண்ணீரிலும் வாழ முடியவில்லை. நீ உன்னை தொலைத்து அலைகின்றாய். நீ வீரிய வித்து என்பதை மறந்துவிட்டாய் !
உணர் ! மீன் குஞ்சிக்கு யார் நீந்த கற்றுக் கொடுத்தது ? எல்லா உயிரினமும் அறிந்து, உணர்ந்து வாழ்கின்றது. நீ தான் உணராமல் வாழ்கின்றாய். மீனின் பாசம் மீனை தின்றவனுக்கு இல்லை. மீனவன் என் நண்பன். அவனை ஏன் நடுக்கடலில் மீன் பிடிக்க வைத்தேன் என்று யோசி ! இரவு முழுவதும் கடலில் ஏன் உறங்க வைத்தேன் என சிந்தி ! உணர்ந்தாயோ நீ ? இரவு முழுவதும் நட்சத்திர பார்வையில் வாழ்கிறான். அவன் வீரியமிக்கவன் தானே ? நீ தான் கூத்தை பார்த்து கோமாளி போல கைதட்டி ஆர்பரிக்கின்றாய் !
மீனவன் உயிர் விலை மதிப்பில்லாதது ! மீனவன் துன்பமடைந்தால் நாடே துன்பமடையும் என்பதை மறவாதே ! கூத்தை பார்க்க கண் மூடித்தனமாக பணத்தை செலவழிக்கின்றாய் ! நீ அவன் பிடித்த மீனுக்கு பேரம் பேசுகின்றாய். இனி உழவனிடமும், மீனவனிடம் பேரம் பேசாதே !
உன்னை உணர வைக்க வந்தவன் நானடா ! எப்போது உணர்வாய் ? உன் கண் முன்னே படர்ந்திருக்கின்ற அருகனியில் ஆயிரம் ரகசியம் வைத்தேன் ! உணரடா !
நான் இருக்கும் இடம் செழிக்கும் ! நீயும் செழிப்பாய் ! என் அன்பு குழந்தையே, நான் உன்னை கண்காணிக்கின்றேன் ! குளவியை போல ! என் கண் படாத இடமில்லை. நான் உன் உறவு (ஆண்மா). நீ எப்போது வந்தாலும் தாயாய், தந்தையாய், உன் தோழனாய், குருவாய் உனை அரவணைப்பேன். வாழ்வாய் நீ !
பெண் என்ற ஞான மலரே, நீயும் வாழ்வாய் !
பெண் என்ற ஞான மலரே, நீயும் வாழ்வாய் !
நான் உனை பார்க்கின்றேன். எப்போதும் உனை பாதுகாப்பேன் ! பயப்படாதே.
வாழ்ந்து வென்றவன் இநன்யா !
என் அன்பு குழந்தையே, ஞான மலர்களே,
என் ஆத்மார்த்தமான அன்பின் ஆசிகள் !
இனி நீ வாழ்வாய் ! வசந்தங்கள் உன் வீட்டில் குடியேறும் !
உன்னை பாதுகாக்க வந்தவன் நான் !
நான் இநன்யா !
No comments:
Post a Comment