Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, May 11, 2016

இநன்யா ;;; நான் உனை பார்க்கின்றேன். இந்த இநன்யா உன்னை திக்கற்றவனாக விடமாட்டேன். உனை கரை சேர்ப்பேன். பயப்படாதே !INANYA NAMOO NAMA ;;;

இநன்யா ;;;  INANYA NAMOO NAMA ;;; நான் உனை பார்க்கின்றேன். இந்த இநன்யா உன்னை திக்கற்றவனாக விடமாட்டேன். உனை கரை சேர்ப்பேன். பயப்படாதே !
51 .இநன்யா நமோ நம.. !!INANYA NAMOO NAMA ;;; 
நான் உனை பார்க்கின்றேன். இந்த இநன்யா உன்னை திக்கற்றவனாக விடமாட்டேன். உனை கரை சேர்ப்பேன். பயப்படாதே !
பாதுகாப்பு
மீன் தன் முட்டையை பாதுகாப்பாக ஒரு இடத்தில் வைத்துவிட்டு காலம், பருவம் வந்தவுடன் தன் கண் பார்வையாலே அவைகளை பொரிக்க செய்யும். அதே போல் என் பார்வையும் கூர்மையானது ! என் கண் படாத இடமில்லை.
என்னை உணர்ந்தாலே உன் துன்பம் அகன்றுவிடும் !
ஆமை தன் முட்டையை கரை வந்து பாதுகாப்பான இடத்தில் வைத்துவிட்டு காலம் வந்தவுடன் தன் எண்ணத்தாலே அவைகளை பொரிக்க செய்யும் ! அதே போல எனை நீ அன்பால் நினைத்தாலே உன் துன்பம் விலகிவிடும் ! தத்துவம் தானறியா சமத்துவம் தான் பேசும் !
குளவி அடைகாக்காமல் தன் வாரிசுக்கு தேவையான உணவை அது உருவாவதற்கு முன்னாலேயே தன் கூட்டுக்குள் வைத்துவிடும். அதே போல உன் தகப்பன் நான் உனக்கு எதை செய்ய வேண்டும் என்று முன் கூட்டியே தெரியும். நீ உன்னை உணராமல் உன் துன்பம் போகாது ! உன் பாவத்தை குறைக்க ஆசைப்படு ! பாவத்தை குறைக்க நீ தான் போராட வேண்டும் !
என் அரசாங்கத்தில் (பிரபஞ்சத்தில்) பாவத்திற்கு மன்னிப்பே கிடையாது. பாவத்தின் தண்டனையை அனுபவித்து தான் தீர வேண்டும் ! நீ உன்னை உணரும் வரை இந்த பூமி துன்பமாகத்தான் தெரியும். எல்லாவற்றையும் தெரிந்தே செய்கிறாய். உனக்கும், உன் மனசாட்சிக்கு தெரியும். எது நல்லது, கெட்டது என்று. செய்த தவறை மீண்டும் செய்யாதே. அதுவே புத்தியின் விசாலம் !
தர்மம் செய் ! உன் பாவம் குறையும் !
சக மனிதனை நேசி ! இந்த உலகை உன் குடும்பத்தை அழகாக வைப்பதும், துன்பமில்லாமல் வைப்பதும், உன்னால் மட்டுமே முடியும் ! படைப்பது என் வேலை ! அதை அழிப்பதா, வளர்ப்பதா என்பதை முடிவெடுப்பது உன் கையில் !
நான் எப்போதும் அரவனைக்க, ஆசிர்வாதிக்க காத்திருக்கிறேன் ! நீ தான் எனை தேடவில்லை ! என் அன்பு உனக்கு எல்லா நிம்மதியையும் செல்வங்களையும் தரும் சத்யமாக !
நான் உன் அருகிலேயே உலாவுகிறேன். மனிதன், பசு, நாய், பறவையாக !
நீ தான் எனை கண்டுகொள்ளவில்லை. எனை நினை ! பறவையாகவும், நாயாகவும், பசுவாகவும் உன் வீட்டுக்கு வருவேன். பட்சியிலே உயர்ந்த பட்சி மீன் பட்சி தான் !
நான் வேஷம் போட்டால் என்னை பார்ப்பதற்கு ஓடி வருவாய் (தாடி, குடுமி, காவி உடை) ! நான் உனை மாதிரியே திரிவதால் எனை உன்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. நீ அழைத்தாலே வருவேன், உன் ஆத்மத்தில் குடியேற ! நான் தர்மாக்களை எப்போதும் காப்பேன் ! நான் கர்மாக்களை இருந்தும், இறந்தும், பெரும் துன்பம் கொடுத்து திருத்துவேன் !
மீனைப் போலவும் , மீனவனை போலவும் வாழக் கற்றுக் கொள் ! வாழ்வை எதிர் கொண்டு வளைந்து நெழிந்து வாழ்வதை போல. உன் வாழ்வை பயனுள்ளதாக்கு ! உன் பாவம் தொலையும் !
என் ஒரு கண் ஆகாயத்தை நோக்கியும், ஒரு கண் உனை நோக்கியும், மூன்றாவது கண் உலகின் செயலை கண்கானிக்க நீர் குமிழியிலும் இருக்கின்றது. மழை வந்தவுடன் தவளைகளும், மீன்களும் உற்பத்தியாகும். அதற்கு முன்னால் அது எங்கிருக்கிறது ? அதை பாதுகாப்பது யார் ? நீ உணர்ந்தாயா ?
எத்தனை வறட்சி இருந்தாலும் மழை வந்தவுடன் தவளைகள் சந்தோஷத்தில் துள்ளும். நீ தான் வீட்டில் முடங்கி மழை வேண்டாம் என்று கதறுகின்றாய். இனி தவளை பாம்பை விழுங்கும் ! பல அதிசயங்கள் காண்பாய் ! ஆர்பரிக்கும் கடல் உள்வாங்கி தரையாக காட்சி அளிக்கும். கடலில் பல பூகம்பங்கள் வரும். அசுரர்கள் வாழ்ந்த குகைகள் தெரியும் !
தண்ணீரிலே மீனை வாழ வைத்தேன் ! உன்னால் தரையிலும் வாழ முடியவில்லை. தண்ணீரிலும் வாழ முடியவில்லை. நீ உன்னை தொலைத்து அலைகின்றாய். நீ வீரிய வித்து என்பதை மறந்துவிட்டாய் !
உணர் ! மீன் குஞ்சிக்கு யார் நீந்த கற்றுக் கொடுத்தது ? எல்லா உயிரினமும் அறிந்து, உணர்ந்து வாழ்கின்றது. நீ தான் உணராமல் வாழ்கின்றாய். மீனின் பாசம் மீனை தின்றவனுக்கு இல்லை. மீனவன் என் நண்பன். அவனை ஏன் நடுக்கடலில் மீன் பிடிக்க வைத்தேன் என்று யோசி ! இரவு முழுவதும் கடலில் ஏன் உறங்க வைத்தேன் என சிந்தி ! உணர்ந்தாயோ நீ ? இரவு முழுவதும் நட்சத்திர பார்வையில் வாழ்கிறான். அவன் வீரியமிக்கவன் தானே ? நீ தான் கூத்தை பார்த்து கோமாளி போல கைதட்டி ஆர்பரிக்கின்றாய் !
மீனவன் உயிர் விலை மதிப்பில்லாதது ! மீனவன் துன்பமடைந்தால் நாடே துன்பமடையும் என்பதை மறவாதே ! கூத்தை பார்க்க கண் மூடித்தனமாக பணத்தை செலவழிக்கின்றாய் ! நீ அவன் பிடித்த மீனுக்கு பேரம் பேசுகின்றாய். இனி உழவனிடமும், மீனவனிடம் பேரம் பேசாதே !
உன்னை உணர வைக்க வந்தவன் நானடா ! எப்போது உணர்வாய் ? உன் கண் முன்னே படர்ந்திருக்கின்ற அருகனியில் ஆயிரம் ரகசியம் வைத்தேன் ! உணரடா !
நான் இருக்கும் இடம் செழிக்கும் ! நீயும் செழிப்பாய் ! என் அன்பு குழந்தையே, நான் உன்னை கண்காணிக்கின்றேன் ! குளவியை போல ! என் கண் படாத இடமில்லை. நான் உன் உறவு (ஆண்மா). நீ எப்போது வந்தாலும் தாயாய், தந்தையாய், உன் தோழனாய், குருவாய் உனை அரவணைப்பேன். வாழ்வாய் நீ !
பெண் என்ற ஞான மலரே, நீயும் வாழ்வாய் !
நான் உனை பார்க்கின்றேன். எப்போதும் உனை பாதுகாப்பேன் ! பயப்படாதே.
வாழ்ந்து வென்றவன் இநன்யா !
என் அன்பு குழந்தையே, ஞான மலர்களே,
என் ஆத்மார்த்தமான அன்பின் ஆசிகள் !
இனி நீ வாழ்வாய் ! வசந்தங்கள் உன் வீட்டில் குடியேறும் !
உன்னை பாதுகாக்க வந்தவன் நான் !
நான் இநன்யா !

No comments:

Post a Comment