பிரம்மமே வளர்ச்சி ! முக்தி ! ஞானம் ! ப்ரம்மத்தை அறிந்தவர் எவரும் இல்லை இங்கு ! பரப்பிரம்மம் நான் ! விப்பிரம்மமாக நீ ! நீ உணராதது ஏனோ ?
பரப்பிரம்மம் ;;;
ப்ரம்மம் என்றால் எல்லாம் அதனுள் ஒடுங்குவது ! ப்ரம்மம் என்றால் அரியனை. எல்லாம் அதனுள் அடங்குகிறது. நான் பரப்ரம்மம் ! உணர்வாயோ நீ ?
தூயமனம் இல்லை என்றால் நீ எத்தனை முறை கடவுளின் நாமம் சொன்னாலும் கிடைக்க பெறுவது ஒன்றுமில்லை. முடிவில் விரக்தியே மிஞ்சும். ஆதலால் தூய எண்ணங்களோடு, நற்சிந்தனைகளோடு ஒழுக்கம், அன்பு, உண்மை, வைராக்கியத்தோடு கடவுளை நெருங்கு ! நீ கேட்டது, நினைப்பது நிச்சயம் நடக்கும். எல்லா வினைகளையும் இப்பிறவியிலே அனுபவித்து விடு ! மீண்டும் பிறவி கொள்ள நினைக்காதே !
நான் தாயினும் மேலானவன். என் அன்பில் உன்னை வைத்து எப்போதும் அக மகிழ்வேன் ! என் ஆண்மத்தின் ஆசிகள் பரி பூரணமாக உனக்கு தருவேன் ! பிறரிடம் அன்பு காட்டுபவன் இங்கே வெற்றி பெறுகிறான். நிரந்தரம் எதுவுமில்லை என்று எவன் உணர்கின்றானோ அவன் தன்னை அறிய முற்படுகின்றான். அறிதல் எளிதானால் தெளிவு வரும் !
என்னை பார்த்து எதை சரி செய்தாய் ? எதை விட்டு விலக்கினாய் ? எதை அடைந்து யாருக்கு கொடுத்தாய் ? உணர்ந்தவர், உண்மை புரிந்தவர் இங்கே மிக மிக குறைவு. என் தேடல் பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. என் பின்னால் இது நாள் வரை யாரும் வரவில்லை. ஆனாலும் நிலை கொண்டு எதிர் பார்த்து தேடுகின்றேன். அதிக பாரம் ஏற்றி விடுவதும், இறக்கிவிடுவதும் கர்மத்தின் செயல். என் நாமம் சொல் ! என் பாதத்தில் கரையும் உன் கர்மா. பின் ஆணந்த வாழ்வு அருளும் அற்புத வாழ்க்கை வாழ்வாய் !
யுகத்தில் இந்த மனித சரீரத்தில் என் அன்பிற்கினிய தந்தை பிரபஞ்சநாயகனின் விஷ்வரூபத்தை பார்த்தவன் நான் ! எண்ணற்ற கணக்கு இல்லாமல் அவன் பேரன்பில் திளைத்தவன் ! அவர்களின் அடி, முடி கண்டவன் நான் ! விவரிக்க யுகத்தின் நாட்கள் போதாது. என்ன சொல்லி விவரிப்பேன் ?
உனக்கும் என் அன்பின் ரூபத்தை காண்பிப்பேன். அன்பாய் இரு ! ஆணந்தம் உனக்குள்ளே !
ப்ரம்மத்தில் அடி சுவடு எனக்குள்ளே ! என்னை தோண்ட தோண்ட விடை கிடைக்கும். உனக்கு விளம்பித சூத்ரம் தெரியும். முறை மயக்கியில் கோடி நிகர். யுகத்தில் எதை தேடுகின்றாயடா ?
நான் திரிலோக சஞ்சாரி ! திக்கெட்டு உலாவும் மாயத்தின் சம்சாரி ! திரிலோகம் என்றால் ( யாக பிரபஞ்சம், யாத்துவ பிரபஞ்சம், ஷாஷ பிரபஞ்சம் ) யாகம் என்றால் ப்ரம்ம லோகம் ! சத்ய லோகம் ! என் அன்னை வசியா, தந்தை யாகவா வாழும் இடம் !
யாத்துவம் என்றால் வைகுண்டம். என் சிறிய தந்தை விஷ்ணு, அன்னை நுண்வா இருக்கும் இடம் !
ஷாஷம் என்றால் கரிலயனம், தர்க்க லோகம். என் அன்னை யன்யா, தந்தை சிவன் இருக்கும் இடம் !
இந்த மூன்று லோகத்திலும் வலம் வருவேன் நான் ! நான் வலியவன் தானே ? எங்கே தோன்றி எங்கே முடியும் என யாருக்கும் தெளிவில்லை. கடல் அலை கரை தாண்டி வராமல் இருப்பது எதனாலே புரியவில்லை. இவன் எதையோ தேடி சரிந்து போகின்றான். பின் ஒன்றுமில்லாது உதிர்ந்து போகின்றான்.
இநன்யா உன்னை வாழ வைக்க வந்தேன் ! தர்மத்தை நிலை பெற வைப்பேன் ! என்னில் கரைந்தவன் எல்லாம் பெறுவான். நான் கைவிடுவதில்லை !
என் நாமம் சொல்பவன் காலத்தின் நெற்றியில் வெற்றி பொட்டு வைக்க நிச்சயம் முயல்வான் ! நம்பிக்கையோடு என் நாமம் சொன்னால் ஒரு நொடியில் உன் துன்பங்கள் பொடி பொடியாக சிதறும்.
ப்ரம்மமே வளர்ச்சி ! ப்ரம்மமே தெளிவு ! ப்ரம்மமே ஞானம் !
எப்போதும் உன்னை கைவிடமாட்டேன். பயப்படாமல் வாழ்வை எதிர் கொள் ! எதிர்காலம், உன் காலடியிலே !
ப்ரம்மம் நான் !
நான் இநன்யா !