யாகவா உரையாடல் ;;; இரு மடங்கு நன்மை ;;; இங்கு வருபவன் தப்பு செய்தாலும், தண்டனையும் இரு மடங்கு.நீ இரு ,தோணியில் கால் வைக்காதே.வட்டத்தில் நின்று சார்ஜ் (திறன்) செய்து கொள்.நீ இவரது ஞானங்களை ஏற்று தர்மத்தின் வழி வாழ்க்கை நடத்த இங்குள்ள வட்டத்தில் நின்று வணங்கி சார்ஜ் (திறன்) ஏற்று கொள்வதால் உனக்கு கிடைக்கும் நன்மை இரு மடங்கு.அதுவே எதிர்மறையாக செயல் பட்டால் கிடைக்கும் தண்டனையும் இரு மடங்கு என்பதனை உணர் .எனவே இரு வழியில் செல்ல எண்ணாதே .பிரம்ம ஸ்தலத்தில் பாம்பு கடிக்கு (கர்மாவின் தாக்குதலுக்கு) மருந்து உண்டு. அதுவே கழுதையிடம் உதைபட்டால் (தர்மாவிடம் அடிவாங்கினாள்)மருந்து இல்லை.
பாம்பு-கர்மாக்களால் ஏவப்பட்ட பில்லி, சூன்னியம்,ஏவல்,மந்திரம்,பேய்,மதம்,வசியம்,பொய் கதையின் மயக்கம்,போதை,பக்தி, மடமை ஆகியவற்றை போக்க மருந்து உண்டு.
கழுதை-இவரது ஞானங்களுக்கு எதிர் மறையாக செயல் பட்டு,இங்குள்ள முனிவர்களிடம் உதை வாங்கினால் மருந்து இல்லை.ஊமத்தங்காயை பிரசாதம் செய்ய பயன் படுத்தி உன்னை வசியம் செய்தால் ,நீ நெல்லிக்காயை உண்டு அதனை முறித்து விடு.
யாகவா உரையாடல் ;;; - தலை கீழ் ;;; நான் உன்னை மேலிருந்து, [ஆகாயத்தி
லிருந்து] பார்க்கும் போது , இங்கு நீ நடப்பது தலை கீழாய் தான் தெரிகிறது. உன் செயல் யாவும் தலை கீழ். அழியும் உடல், அழியா உயிர் கொண்ட இவன் தன் பொய் உடலை மெய் உடல் என்கிறான். பசுவின் பால் அருந்தி வளர்ந்த இவன்,பாம்பை பயத்தால் வணங்குகின்றான்.தர்மாவின் பலனை பெற்று வளர்ந்த பின் தர்மா,கர்மா அறியாது வணங்குகின்றான்.உயிர் உள்ளனவற்றிக்கு செய்யா பாவி இவன் உயிரும்,மயிரும் அற்ற சிலைக்கு செய்வதை தர்மா என்கிறான். புலியை பார்த்து பயப்படுகிறான்.புலித்தோலில் அமர்ந்து உள்ளவனை கும்பிடுகிறான். இல்லறமற்றவனிடம் இல்லற பிரச்னைக்கு தீர்வு காணும் முட்டாள் தனத்தை செய்கிறான்.மதம் என்கிற மதம் பிடித்து அலையும் இவன் ,மரணம் ஓன்று இருப்பதை மறந்து அலைகிறான்.பிரம்மாவை தாழ்வாகவும்,சிவனை உயர்வாகவும் சொலிகிறான்.பிரம்மா-வயல் காட்டில் வேலை செய்யும் உழவனுக்கும் அவன் மனைவி பாசத்துடன் கஞ்சி கலயம் கொண்டு வருவாள்.விஷ்ணு-தோட்டத்தினை காவல் செய்யும் காவல் காரனுக்கும் அவன் மனைவி பாசத்துடன் கஞ்சி கலயம் கொண்டு வருவாள். சிவன்-இடுகாட்டில் வேலை செய்பவனுக்கும் அவன் மனைவி பாசத்துடன் கஞ்சி கலயம் கொண்டு வருவாளோ ? உயர்ந்தவன் யார்? ஏய் ! பொய் உடல் காரனே சிந்தி.
யாகவா உரையாடல் ;;; - கொடு .என்னவே இது? கற்கண்டுப்பா. இங்கு உள்ள எல்லோருக்கும் கொடு .இவையில் இல்லாத பொருள் நீ எதை செய்தாய்.?என் பொருளை எடுத்து நீ பிறருக்கு கொடுப்பதே உன் பொருள்.அதுவே தர்மா.நீ உழைத்து பிறர்க்கு உதவுவதே தர்மா.இவையில் உழைத்து சேர்த்த பொருள் யாவும் உன் பொருள் அல்ல .உன் உழைப்பால் உண்டாகும் நன்மையே உன் பொருள்.தேனீயின் உழைப்பு - உனக்கு தேன் (அமிர்த பொருள்) கிடைக்க.சிலந்தியின் உழைப்பு - பிறரை சிக்க வைப்பதில் என்பதனை உணர்.யாகவாவல் இவையில் கிடைத்தது தேன் அமிர்தபால்.அப்பொருளை உட்க்கொண்ட நீ அதன் வழி நடந்து பிறர்க்கு இவரது ஞானங்களை சொல்லி க்கொடு.அச்செயலே உன் பொருள்.யாகவா முனிவரின் கருத்துக்களை அல்லி எடு.எல்லோருக்கும் சொல்லி க்கொடு.லோகத்தை வந்தடைவாய்..உன்னால் முடிந்ததை கொடுத்து பழகு.கொட்டியா வைத்துள்ளது என்று சொல்லாதே.
யாகவா உரையாடல் ;;; உன் இடத்திலேயே உட்க்காருவே! நான் பிறர்க்கு என தூக்கி போடும் பொருளை நீ எட்டி பிடிக்காதே .உனக்கு உரிய பொருள் உன் இடம் தேடி வரும்.பிரித்து வைத்துள்ள பொருள் யாவும் நல்லதானால்,வைத்துள்ள பொருள் யாவும் அப்படியே உள்ளன.மனிதன் ஜாதி,மதம்,மொழி,இனம்,நிறம்,மாநிலம்,நாடு, ஏழை, பணக்காரன்,என பலவாறாக பிரித்து வைக்கப்பட்டுள்ளான்.அவ்வாறு பிரித்து வைக்க பட்டுள்ள மனிதன் தன் இடத்தில் இருந்து எங்கும் போக வேண்டாம்.[மதம் மாற வேண்டாம்].பிறரை எட்டி பிடிக்க எண்ணவும் வேண்டாம்.பிரித்து வைக்கப்பட்டுள்ள மனிதர்கள் யாவும் இவரது நன்மை எனும் ஞானங்களை உட்க்கொண்டு நல்லதானால், இவரால் கடலுக்கு அடியில் சிறைப்பட்டு மீட்கப்பட்டு வைத்துள்ள 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்த ஆதி வேதம் சற்றும் தன் தன்மை மாறாமல்,உன் நன்மைக்கு என அப்படியே உள்ளது.அதுவே சஞ்சிநாதம், அழியா ஆதி வேதம்,நீ உட்க்கொள்ள !காண்டமும் உன் நன் நிலைக்கு ஏற்ப நன்மை என்பதனை உன் இடத்திற்க்கே வந்து சேர்க்கும்.நான் ஜாதி என குறிப்பிட்டு கூறுகிறேன்.நீ உன் ஜாதிக்கு மதம் [வெறி] பிடிக்காமல் பார்த்து கொள்.
யாகவா உரையாடல் ;;; இரண்டு என்னும் பொருள்;
நட்சத்திர காண்ட முனிவர்கள் ஏட்டில் வரைவது;;;தர்மா,கர்மா
தர்மா-நம் தந்தை யாகவா அவர்களால் யுகத்திற்கு கிடைத்த பொருள்.
கர்மா-யாகவா கருத்துக்களை ஏற்க மறுக்கும் மதம் கொண்ட மனம்,திறனற்ற அறிவு , தன்னிலை மறக்க செய்யும் வேடம்.
போதும் என்னும் பொருள் இரண்டு-பசியும் ,பிணியும்.இவை தவிர போதும் என்னும் எண்ணம் இடுகாடு போகும் வரை வருவதில்லையே ஏன்? யூகி.
வேண்டா பொருள் இரண்டு-மலமும்,பிணமும்.
மலம்-மலத்தையும் சந்தனம் போல் பாவிக்கும் மனம் கொண்ட தாய்.
பிணம் -ஓர் நாள் உன் பிணம் தூக்க மனிதர்களுடன் மனிதனாக பாசமாக பழகு.
கடவுளை காண வழி கேட்க கூடாத நபர்கள்-பக்தி என்னும் போதையில் இருப்பவன், நாத்திகன் என்னும் குருடன்.பஜனை என்னும் போதையில் இருப்பவன் பக்திமான். புரியாததை பொய் என்னும் நாத்திகன்.
இரண்டு ஞானங்கள்-திருஞானம்,பெருஞானம்.
திருஞானம்-அழியும் உடலுக்கு காரணமான தாய்,தந்தை மற்றும் மனைவி ,மக்கள், உறவினர்,நண்பர்கள்,இவர்களை பற்றிய செயல்பாடு உடைய சிந்தனை.
பெருஞ்ஞானம்-அழியா உயிருக்கு காரணமாகிய நம் தந்தையை பற்றிய சிந்தனை.நம் இடம் பற்றிய சிந்தனை.
மனிதர்களில் இல்லா ஊனங்கள் இரண்டு-நெற்றியில்லா மனிதன்,வயிறில்லா மனிதன்.விதி வரையப்பட்ட நெற்றியை வினை கொண்டு பாழாக்காதே.வயிறில்லா மனிதன்-வயிறு என்பது உண்பதற்க,உணர்வதற்கா,சிந்தி மானிடா.
பயனில்லா பொருள்-பாசமில்லா பாவியிடம் உள்ள பணம்.பணமில்லா பாவியிடம் உள்ள பாசம்.
யாகவா கருத்துக்களை கற்பதினால் இல்லை, பயன் கடை பிடித்தால் உண்டு,பயன் என்பதை மறவாதே !
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;