28-09-2017·
ஆக்கையிலே உயர்ந்த சூட்சுமம் ! உனை உருவாக்கும் அற்புத காட்சிகம் ! உன் உள்ளே உற்றுப் பாரடா ! உள்ளுரை உணரடா உண்மை சூட்சுமம் !
நாக்கு ;;;;;;;
பெண்மை மென்மையடா ! படைப்பின் சூட்சுமம் பெண் ! உலகில் இரண்டு மென்மையான வலைகள் உள்ளன. அழிக்கவும் செய்யும். ஆக்கவும் செய்யும். ஒன்று பெண் ! மற்றொன்று நாக்கு ! உலகை புரட்டி போடும். நல்வழி காட்டும். நாக்குக்கு வேலை கொடுக்காதே ! உன் பாவம் ஆரம்பிக்கும். அதை பிடித்து கடவுளின் தங்க கொட்டிலில் கட்டு !
நாக்கு நீரில் இல்லாவிட்டால் நீ நீசனாகி போவாய். கடவுள் படைப்பில் அற்புதம் நாக்கு ! எப்போதும் நீரில் வைத்தான். ஏன் என்று உணர்ந்தாயா ? உணர் !
நிம்மதி தரும் சூட்சுமம் நாக்கு ! எப்போதும் கடவுள் நாமம் சொல்வதற்கு உன் நாவை சுழட்டு ! உன் உமிழ் நீர் இனிக்குமடா ! உன் உமிழ்நிர் இனித்தால் உன் வாழ்வும் இனிக்குமடா !
மூன்று அங்குல நாக்கு ஆறடி மனிதனையும் கொல்லும். ஆளும் அரசாங்கத்தை ஆட்டி வைக்கும். நாக்கை ஆட்டி பெண்கள், மகான்கள் சாபத்தினால் தான் பூமியில் சர்வ நாசங்கள் நடக்கின்றன ! இந்த நரம்பில்லா நாக்கு தான் எல்லா துன்பத்தையும் தருகிறது. உண்பதற்கு மட்டுமே நாவை பயன்படுத்து. கடவுள் நாமம் சொல்வதற்கு மட்டும் நாவைத் திற !
நீரில் குளிர்வித்தான் ! நீ நீசனாகிவிடக்கூடாது என்பதற்காக ! நாவில் நீர் வறண்டு போனால் நீ வறண்டு போவாய் ! கொடிய விஷம் உன் நாவில். அதை நல்வழிக்காக மட்டும் பயன்படுத்து.
உலகம் நீ நினைக்கின்ற படி இல்லை. நீ நினைத்து ஏதும் நடவப் போவதில்லை. உன்னை தீர்மானிப்பது உன் எண்ணமே ! உலகில் எங்கு ஓடினாலும், தேடினாலும் கடவுளை அறிய முடியாது. ஒருவன் கூட்டத்தை கூட்டுகின்றான் என்றால் உன்னை ஏமாற்றுகிறான் என்று அர்த்தம். நாடு விட்டு, ஊரு விட்டு ஊர் சென்று கூட்டம் நடத்துபவனை நம்பாதே !
கடவுளிடம் எதையும் பொறுமையாக கேள். அவசரப்படாதே. நீ கேட்டது நிச்சயம் கிடைக்கும் ! உன் அவசரப் பேச்சு தான் உன்னை ஆளுமை இல்லாமல் வைக்கின்றது. உன் மனமயக்கம் தெளிவாக எப்போதும் மாயவனை நினைத்துக் கொண்டே இரு ! உன் நாவை கொண்டு நல்லது செய்ய நினை. சுடு சொல் உனை கீழ்நிலைக்கு அழைத்து செல்லும் என்பதனை புரிந்து கொள் !
நாவை பக்குவப்படுத்து ! நாயகன் நான் உனக்கு எப்போதும் துணை இருப்பேன். பொறுத்திரு ! உன் பொறுமைக்கு நிச்சயம் பரிசு உண்டு ! நீ தனிமையில் இருக்கும் போது எதை சிந்திக்கின்றாயோ அது தான் உன் வாழ்க்கை பாதையை தீர்மானிக்கின்றது.
பெண்ணின் சாபமே இங்கு பெரும் பீடையாய் இருக்கிறது. எப்போதும் தனித்திருக்கும் பொழுது கெட்ட எண்ணங்கள் வரும். ஆதலால் எப்போதும் கடவுளை பற்றியே நினை. யார் உன்னை இகழ்ந்தாலும் புகழ்ந்தாலும் காது கொடுத்து கேட்காதே. இது தான் உன் லட்சியத்தை நிறைவேற்றும் சூட்சுமம் !
நீ அதிகம் பேசுவதால் உன் நிலை இழக்கிறாய். கேட்கும் திறன் செவி மடு ! கீழான எண்ணங்களை ஒதுக்கு ! இழிவான பேச்சும், கடவுள் இல்லை என்று சொல்வதும் இந்த நாக்கு தான். முதலில் மேல் லோகத்தில் உன் நாக்குக்கு தான் தண்டனை கிடைக்கிறது.
நாக்கு உள் நாக்கு. உலகை அறியும் நாக்கு ! நாக்கை சுத்தமாக வை ! என் அன்னை நுணுவா உன் நாவில் அமர்ந்து நலம் தருவாள். உன் உள்ளுரை உவர்ப்பாக்காமல் இனிப்பாக்குவாள். என் நாவில் என் அன்னை உண்டு ! என் உமிழ்நீர் இனிப்பாகும் தத்துவம், நாவுக்கு நான் வேலை கொடுப்பதில்லை !
நாக்கை கட்டுப்படுத்து. நாயகன் நான் உன்னை எப்போதும் காப்பேன் !
உனை என்றென்றும் காப்பேன் நான் !
நான் இநன்யா !