Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, September 27, 2017

நாக்கு


28-09-2017· 
ஆக்கையிலே உயர்ந்த சூட்சுமம் ! உனை உருவாக்கும் அற்புத காட்சிகம் ! உன் உள்ளே உற்றுப் பாரடா ! உள்ளுரை உணரடா உண்மை சூட்சுமம் !
நாக்கு ;;;;;;;
பெண்மை மென்மையடா ! படைப்பின் சூட்சுமம் பெண் ! உலகில் இரண்டு மென்மையான வலைகள் உள்ளன. அழிக்கவும் செய்யும். ஆக்கவும் செய்யும். ஒன்று பெண் ! மற்றொன்று நாக்கு ! உலகை புரட்டி போடும். நல்வழி காட்டும். நாக்குக்கு வேலை கொடுக்காதே ! உன் பாவம் ஆரம்பிக்கும். அதை பிடித்து கடவுளின் தங்க கொட்டிலில் கட்டு !
நாக்கு நீரில் இல்லாவிட்டால் நீ நீசனாகி போவாய். கடவுள் படைப்பில் அற்புதம் நாக்கு ! எப்போதும் நீரில் வைத்தான். ஏன் என்று உணர்ந்தாயா ? உணர் !
நிம்மதி தரும் சூட்சுமம் நாக்கு ! எப்போதும் கடவுள் நாமம் சொல்வதற்கு உன் நாவை சுழட்டு ! உன் உமிழ் நீர் இனிக்குமடா ! உன் உமிழ்நிர் இனித்தால் உன் வாழ்வும் இனிக்குமடா !
மூன்று அங்குல நாக்கு ஆறடி மனிதனையும் கொல்லும். ஆளும் அரசாங்கத்தை ஆட்டி வைக்கும். நாக்கை ஆட்டி பெண்கள், மகான்கள் சாபத்தினால் தான் பூமியில் சர்வ நாசங்கள் நடக்கின்றன ! இந்த நரம்பில்லா நாக்கு தான் எல்லா துன்பத்தையும் தருகிறது. உண்பதற்கு மட்டுமே நாவை பயன்படுத்து. கடவுள் நாமம் சொல்வதற்கு மட்டும் நாவைத் திற !
நீரில் குளிர்வித்தான் ! நீ நீசனாகிவிடக்கூடாது என்பதற்காக ! நாவில் நீர் வறண்டு போனால் நீ வறண்டு போவாய் ! கொடிய விஷம் உன் நாவில். அதை நல்வழிக்காக மட்டும் பயன்படுத்து.
உலகம் நீ நினைக்கின்ற படி இல்லை. நீ நினைத்து ஏதும் நடவப் போவதில்லை. உன்னை தீர்மானிப்பது உன் எண்ணமே ! உலகில் எங்கு ஓடினாலும், தேடினாலும் கடவுளை அறிய முடியாது. ஒருவன் கூட்டத்தை கூட்டுகின்றான் என்றால் உன்னை ஏமாற்றுகிறான் என்று அர்த்தம். நாடு விட்டு, ஊரு விட்டு ஊர் சென்று கூட்டம் நடத்துபவனை நம்பாதே !
கடவுளிடம் எதையும் பொறுமையாக கேள். அவசரப்படாதே. நீ கேட்டது நிச்சயம் கிடைக்கும் ! உன் அவசரப் பேச்சு தான் உன்னை ஆளுமை இல்லாமல் வைக்கின்றது. உன் மனமயக்கம் தெளிவாக எப்போதும் மாயவனை நினைத்துக் கொண்டே இரு ! உன் நாவை கொண்டு நல்லது செய்ய நினை. சுடு சொல் உனை கீழ்நிலைக்கு அழைத்து செல்லும் என்பதனை புரிந்து கொள் !
நாவை பக்குவப்படுத்து ! நாயகன் நான் உனக்கு எப்போதும் துணை இருப்பேன். பொறுத்திரு ! உன் பொறுமைக்கு நிச்சயம் பரிசு உண்டு ! நீ தனிமையில் இருக்கும் போது எதை சிந்திக்கின்றாயோ அது தான் உன் வாழ்க்கை பாதையை தீர்மானிக்கின்றது.
பெண்ணின் சாபமே இங்கு பெரும் பீடையாய் இருக்கிறது. எப்போதும் தனித்திருக்கும் பொழுது கெட்ட எண்ணங்கள் வரும். ஆதலால் எப்போதும் கடவுளை பற்றியே நினை. யார் உன்னை இகழ்ந்தாலும் புகழ்ந்தாலும் காது கொடுத்து கேட்காதே. இது தான் உன் லட்சியத்தை நிறைவேற்றும் சூட்சுமம் !
நீ அதிகம் பேசுவதால் உன் நிலை இழக்கிறாய். கேட்கும் திறன் செவி மடு ! கீழான எண்ணங்களை ஒதுக்கு ! இழிவான பேச்சும், கடவுள் இல்லை என்று சொல்வதும் இந்த நாக்கு தான். முதலில் மேல் லோகத்தில் உன் நாக்குக்கு தான் தண்டனை கிடைக்கிறது.
நாக்கு உள் நாக்கு. உலகை அறியும் நாக்கு ! நாக்கை சுத்தமாக வை ! என் அன்னை நுணுவா உன் நாவில் அமர்ந்து நலம் தருவாள். உன் உள்ளுரை உவர்ப்பாக்காமல் இனிப்பாக்குவாள். என் நாவில் என் அன்னை உண்டு ! என் உமிழ்நீர் இனிப்பாகும் தத்துவம், நாவுக்கு நான் வேலை கொடுப்பதில்லை !
நாக்கை கட்டுப்படுத்து. நாயகன் நான் உன்னை எப்போதும் காப்பேன் !
உனை என்றென்றும் காப்பேன் நான் !
நான் இநன்யா !

Wednesday, September 20, 2017

யார் நண்பன் ?


Inanya Maha Munivar 
21-09-2017
வீதியிலே விதாரகம் இருந்தது. விதர்ப்பணம் இல்லாது வாழ்ந்தான். இப்போது மாட வீதி கட்டி மனிதநேயம் இல்லாது வாழ்கின்றான். ஏனடா ?
யார் நண்பன் ?
எனக்கு நள்ளுநர் அன்பிற்கினிய கடவுள் மட்டுமே ! பூமியில் நண்பன் என்று எனக்கு யாருமில்லை. எனக்கு நண்பன் என் அன்பிற்கினிய தந்தை பிரபஞ்சத்தின் தலைவன் யாகவா மட்டுமே ! உலகில் மனித தோன்றலில் நண்பன் என்பது கடைந்தெடுத்தல் போல் தான் ! உனக்கு நண்பன் உன் தாய் தந்தை தான் ! தாய், தந்தை போல, மனைவி போல நண்பன் யுகத்தில் யாருமில்லை. இவர்கள் தான் உனக்கு தலை சிறந்த நண்பர்கள் !
எங்கே ரகசியம் இருக்கிறதோ அங்கே நட்பும் இல்லை, நண்பனும் இல்லை. செயல் அனைத்தும் மறைவு என்பதாலே உன் மனைவியிடம் நீ நண்பனாக இல்லை. வரிடம் எப்போது ரகசியம் இல்லையோ அங்கே நட்பின் வேர் துளிர்க்கிறது. உன் வாழ்வு சத்திய பாதையில் பயணிக்கிறது.
நண்பன் என்பவன் உன் போலவே துன்பம், கவலை, குழப்பத்தில் இருப்பவன் தான். அவனோடு பேசினால் குழப்பம் தான் வரும். தாய், தந்தை உன் வாழ்வில் குழப்பம் தரமாட்டார்கள். ஆதலால் தாய் தந்தையை நண்பனாக்கு. உயரிய நண்பன் என்றால் உன் மனைவி தான். மனைவியிடம் உண்மையாக இரு ! பெண்கள் கணவனிடம் உண்மையாக இருக்க வேண்டும் !
உன் வாழ்வில் இனிய பயணம் தொடங்கும். உன் வாழ்வு சிறக்க உன் மனைவியிடம் ஆலோசனை கேள் ! ஏனென்றால் ஆணை விட பெண்களுக்கு ஆசை இரண்டு மடங்கு ! புத்தி ஐந்து மடங்கு ! பெண் இல்லாமல் இங்கே உயர்வு இல்லை !
பூமியில் நான் கண்ட நண்பன் நாய் மட்டுமே. அது தான் நன்றியோடு எப்போதும் இருக்க கண்டேன். நான் எதை செய்தாலும் என் அன்பிற்கினிய தந்தை யாகவா தலைவனிடம் விளம்புவது உண்டு. ஏனென்றால் என் அன்பிற்கினிய நண்பன் என் தந்தை யாகவா !
உலகில் தாய் தந்தை போல நல்ல நண்பர்கள் இருக்க முடியாது. என் தந்தை யாகவா கட்டளையை நான் மீறுவதில்லை. நான் அமைத்த சத்திய பாதையும் என் அன்பிற்கினிய தந்தை கட்டளைப்படியே ! அதனால் தான் சொல்கிறேன், நான் சத்தியத்தின் வாசல் என்று ! என் பாதையில் நீ வர ஆயத்தமானால் சத்தியத்தின் பாதை தெரியும் !
உன்னை நம்பியவரிடம் எதையும் மறைக்காதே. பொய் சொல்லாதே ! நல்ல நட்பின் அடையாளம் பொய் சொல்லாமல் இருப்பது தான் ! உன் துன்பத்தை போக்குபவன், உனக்கு வழி காட்டுபவன் சிறந்த நண்பன் !
நான் உன் ஆணந்தத்தை எதிர்பார்க்கிறேன். நீ எப்போதும் வாய்விட்டு சிரிக்க ஆசைபடுகிறேன். நான் உன் தலைசிறந்த நண்பன் தானடா ? நீ உலகை ஆள வேண்டும் என்று துடிப்பவன் நான். உன் இருளை போக்க நினைப்பவன் நான் ! உன் நண்பனை புரிந்து கொள் !
இருபது வயதில் நான் வசித்த ஊரின் பக்கத்தில் ஒரு பெரியவர். அவரின் பெயர் ராஜா பிள்ளை. வயது எழுபத்து ஐந்து. பெரும் நிலகிழார். அறிவில் சிறந்தவர். பத்திர எழுத்தர். நான் அவரிடம் வேலைக்கு சேர்ந்தேன். உலகில் ஒரு நல்ல மனிதரை மனித நேயமிக்க தலைவனை பார்த்தேன். என்னை பற்றி தெரிந்த நல் ஆத்மா. உலகில் எந்த உயரத்தில் இருந்தாலும் தான் யார் என்று காட்டி கொள்ளாத பணிவு தான் உன்னை உயர்த்தும்.
என் செயல் அவர் நெஞ்சில் என்னை வைத்தது. மூன்று மாதம் கழித்து என்னை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் சேர்ந்தார். “நீ என் வாழ்வில் கண்ட அரிய பொக்கிஷம். நீ என்னிடம் வேலை செய்ய என் மனம் ஒப்பவில்லை. உலகில் நான் கண்ட தலை சிறந்த நண்பன் நீ. உன்னை வேலை செய்ய தூண்ட மனமில்லை என்றார்.” அது மிகைபடுத்த முடியாத சிறந்த நட்பு.
எப்போதும் நல்ல நண்பன் உன் எதிர் காலத்தை நிர்ணயிப்பவனாக இருக்க வேண்டும். பின் அந்த பணி வேண்டாமென்று சென்னை வந்துவிட்டேன். என் தந்தையை பார்ப்பதற்கு ! அதே போல் சுயதன்ராஜ் என்ற நல்ல மனிதரையும் பார்த்தேன். வயது என்பது இருக்கும். ராணுவத்தில் பணி புரிந்தவர். மதம் தாண்டி மனித நேயத்தையும் ஒழுக்கத்தையும் பார்த்தேன்.
உலகில் தாய், தந்தை, மனைவி, கடவுள் தலை சிறந்த நண்பர்கள் என்பதை புரிந்து கொள் ! நல்ல நண்பன் உள்ளவன் இங்கே ஜெயிப்பான் ! நான் எதிரிலி ! என் ஏற்றனை உனக்காக காத்திருக்கிறது. நல்ல நட்பின் அடையாளம் உன்னை உயர்த்தும் !
உன் உயிர் நண்பன் நான் !
நான் இநன்யா !

Saturday, September 16, 2017

என்னுள் வளரும் விருட்சம் செதுவல் ஆகாது.

இநன்யா மகா முனிவர்.
16-09-2017 அன்றைய பதிவு.
என்னுள் வளரும் விருட்சம் செதுவல் ஆகாது.
நான் உனக்கு எப்போதும் சுடாரிபோல் இருப்பேனடா.
என் தேவ தீபம் உனை நோக்கி ...
வருடா வருடம் செப்டம்பர் மாதம் 9 - ஆம் தேதி முதல் 18 - ஆம் தேதி மாலை வரை
ஒரு வேளை உணவருந்தி மனம், வாக்கு, உடல் சுத்தமாக இருக்க
என் அன்பிற்கினிய தந்தை
யாகவா கட்டளையிட்டுட்டார்கள்.
ஏனென்றால் 9 நாளும் மேலிருந்து ரிஷிகள், யோகிகள் யுகம் வருவார்கள்.
ரிஷிகள், யோகிகள் பூமியில் பிறப்பதில்லை.
அவர்கள் மெய் உடலோடு இந்த யுகத்திற்கு வருவார்கள்.
இன்னொன்றும் முக்கியமாக
இந்த செப்டம்பர் மாதம் அமாவாசையை ஒட்டியுள்ள நாட்களில் ,
சூரியன் பூமியின் நடுப் பாகத்தில் வந்து கதிர்வீச்சைத் தரும்.
உடலில் அதிக பாதிப்புகள் உருவாகும்.
கரு கூடத் தங்காது.
இன்னொன்றும் மிக முக்கியமாக
தேவர்களின் கணக்குப்படி உனக்கு ஒரு வருடம் தேவர்களுக்கு ஒரு நாள் .
இந்த ஒரு நாளில் நடு இரவாக இந்த செப்டம்பர் மாதம் (புரட்டாசி ) வருகிறது.
அதனால் இந்த 9 நாள். உன் மனம், காயம் , நலம் பெற இந்த நாள் குறிக்கப்பட்டது.
அதனால் தான் சித்தர்களின் கணக்கு படி 9 நாள் நவராத்திரி கொண்டாடுகிறாய்.
இதை மத சாயம் பூசிவிட்டாய்.
அதனால் இது விரதம் என்பது சாத்தியமல்ல.
27-ஆம் தேதிக்குள் வன்னி இலை பறித்து பெரியோர்கள் காலில் வைத்து வணங்கி உன் வீட்டில் வை.
மரத்தடியில் (வன்னி) கொஞ்சம் பச்சரிசி , வெல்லம் கலந்து வை.
செந்நிற எறும்புகள் சாப்பிட்டு உன் வறுமை, துன்பத்தை போக்கும்.
கால கணக்கு எல்லாம் சரிதான்.
ஆனால் காலத்தை தான் நீ உணரவில்லை.
உணரடா .
உண்மையில் நன்மை நானடா.
என் அன்பின் ஆசிகள் உனை நோக்கி இநன்யா.........
...............................

Thursday, September 14, 2017

கடவுள் யார் ???

கடவுள் யார் ???
கடவுள் காற்றுபோல ஒரு உணர்வு ,
அதற்கு வடிவமில்லை,
மனமுமில்லை,
நன்மையுமில்லை,
தீமையுமில்லை,
தூய்மையுமில்லை,
அசுத்தமுமில்லை,
பொய்யுமில்லை.
உண்மையுமில்லை,
கடைசியில் அது ஒன்றுமில்லை,
ஆனால் அது இல்லாமல் ஒரு துளியுமில்லை.
கடவுள் மிகப்பெரிய அளவில் இருப்பது அதிசயமில்லை,
கண்ணுக்கும் தெரியாத ஒரு சிரிய அணுவுக்குள்ளும் இருப்பதேஅதிசயம்.
கடவுள் கண்களை மூடிப்பார் .
கடவுள் உன் உள்ளே இருப்பதை உணர்வாய்,
கடவுள் எங்கேயில்லை,
எதிலே இல்லை,
ஏன் இந்த தடுமாற்றம்,
கடவுள் உன் எதிரிக்குள்ளும் இருப்பானே ,
நீ பகைப்பது உன் எதிரியையா,
அல்லது கடவுளையா,,,
ஆத்மாதான் உடலை வாழச் செய்கிறது,
அப்படியானால் உடல் வெறும் கருவி,,,
கருவி எப்படி கடவுளாக முடியும்,
கருவிக்குள் கடவுளை உணர்ந்தால் ஏன் மகான்களை மட்டும் வணங்க வேண்டும்,,
பிரபஞ்சமே கடவுள் அல்லவா,
பிரபஞ்சமே கடவுள் என்றால் எல்லாமும் வணங்க தக்கதே,
இந்த உண்மை புரியாமல் ஒருவரை துன்பப்படுத்தியும்,
இன்னொருவரை ஆனந்தபடுத்தியும் தொலைகிறோமே,
இந்த முட்டாள்தனமான சிந்தனை ஒழிந்தால் இந்த முழு பிரபஞ்சமே வணங்கதக்தாக ஆகிவிடுமே ;;;;;;;
.............................
மனிதனுக்கு எப்பொழுதெல்லாம் துன்பம் ஏற்படுகிறது?
மனிதன் நல்லதை நோக்கி சென்றாலும் துன்பம் அடைவான்.
கெட்டதை நோக்கி சென்றாலும் துன்பம் அடைவான்.
துன்பம் இயற்கையானது இது புத்தனுக்கும் உண்டு.
புத்தியில்லாதவனுக்கும் உண்டு.
ஆனால் துன்பம் நிரந்தமற்றது ;
நான் யார்? என்பதை உணராமல் இருப்பதே மனிதனின் துன்பத்திற்கு எல்லாக் காரணமும்.நான் யார்?
என்பதை உணராவிடில் ஆசை என்பது என்ன என்று புரியாமல் போய்விடுகிறது.;;;;;;;;;;;
நீங்கள் கடவுளிடம் கேளுங்கள் தப்பே இல்லை எதையும் கேளுங்கள் கடவுள் கருணை வடிவம்தான் கேட்டாலும் பிரார்தனைதான் ///
கேட்கவிட்டாலும் பிரார்தனைதான் தருவார்.. கண்டிப்பாக தருவார்,,அவரிடம் அவ்வளவு அன்பு உங்கள் மீது கொண்டிருக்கிறார்.;;;;;

பரியாகி கடவுளை அறிவான் ! ஆனால் அறிதல் ஓமிடி செயலில்தானடா !

பரியாகி கடவுளை அறிவான் ! ஆனால் அறிதல் ஓமிடி செயலில்தானடா ! உணரடா ! உண்மை நானடா !
கடவுள் உன்னோடு பேசுவான் !
அன்பிற்கினியவன், ஆளுமை மிகுந்தவன் எண்ணிலடங்கா ஜீவகோடிகளை ஈன்ற அப்பன் என் நெஞ்சில் சிரிக்கும் தூயவன் உன்னோடு பேசுவான் ! எப்போது ? நீ நன்மை செய்து துன்பத்தில் உணரும் போது !
நீ எந்த செயல் செய்தாலும் முதலில் ஒரு விநாடி ஒரு கூக்குரல் கேட்கிறது. வேண்டாம் என்றும், செய் என்றும் ! ஆனால் கடவுள் பேசுகிறான் என்று நீ அதனை உணரவில்லையே ?
மனதில் ஆசையை அடக்கும் போதும், இல்லையேல் அதை கடந்து செல்லும் போதும் உன் உள் உணர்வு தாமதமாக ஆணந்தபடும் ! அப்போது கடவுள் பேசுவான் ! இங்கே பூமியில் தவறு செய்பவனிடம் கடவுள் பேசுவதில்லை. பிறந்த குழந்தை ஒரு வருடம் (தேவர்களுக்கு ஒரு நாள்) கடவுளிடம் பேசும் ! சிரிக்கும் ! அழும் ! உணர் !
உணர்ந்தும் கடவுளின் இருப்பை அறியாமல் இருக்கின்றாயே ? தவம், தியானம் இருந்தால் தான் கடவுள் பேசுவான் என்று அர்த்தமில்லை. ஞானியர்கள் தன்னை ஒடுக்கி உள்ளே விரிந்தார்கள். துன்பத்தில் கடவுளை கண்டார்கள் ! கடவுள் நீ மேலே செல்லும் போது ஒரு தடவை தான் ஒரு வார்த்தை பேசுகிறான். ஆனால் பூமியிலே எப்போதும் பேசுவான் !
யுகத்தில் பிறந்த மானிடன் தவம் செய்தவன் ! ஆனால் கடவுளோடு பேசுவதை மறந்துவிட்டான். உன் சத்திய பாதையை செம்மையாக்கு. ஆசையை விலக்கு. எல்லாம் உனக்கு காலத்தில் கிடைக்கும் !
கடவுளோடு எப்போதும் பேசி ஆணந்தப்படு ! எப்போதும் நன்மையே நினை. ஒழுக்கம் உன்னை கடவுளிடம் அழைத்து செல்லும். மது, மாது தொடாதே ! ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற உணர்வோடு வாழ் ! உயிர் போக நினைத்தலும் ஒழுக்கதில் தவறாதே !
தர்மத்தை செய்யாவிட்டாலும், தர்ம சிந்தனையோடு இரு !
நீ ஆணந்தமாவாய் ! ஆணந்தமானவன் உன்னோடு பேசுவான் ! நான் தினமும் உன்னோடு பேசுகிறேன். நீ தான் உன் செவி திறக்காது தீவினைக்குள் இருக்கின்றாய். உன் ஆளுமை உன்னுள் உறங்கி கொண்டிருக்கின்றது. நீ தான் தட்டி எழுப்ப வேண்டும் !
எண்ணம் நல் எண்ணமாக திண்ணியமாக இருக்கும் போது கடவுள் எப்போதும் உன்னோடு பேசிக் கொண்டிருப்பான். கடவுளோடு பேசிக் கொண்டிருப்பதால் தான் ஞானிகள் உன்னோடு பேசுவதில்லை !
நான் எப்போதும் எனக்குள்ளே பேசி ஆணந்தமாய் இருக்கின்றேன் ! அளவிளா பேரின்பமாய் இருக்கின்றேன். நானும் என் தந்தையும் எப்போதும் பேசிக் கொண்டிருக்கின்றோம். நான் உன் நெஞ்சில் இருப்பதை நினைத்து நீயும் கர்வப்படு !
ஒழுக்கத்தை எப்போதும் உன் உயிருக்கு மேலாக மதி ! உன் துன்பத்தை பனி போல ஒரு நொடியில் உருக வைப்பான்.
உண்மையை சொல்கிறேனடா ! கடவுள் உன்னோடு பேசுவான் ! உன் வழி அமைத்து தருவான் ! உன் சுட்டு விரல் பிடித்து அழைத்து செல்வான் லோகத்திற்கு !
வீறு கொண்டு எழு ! வீணாய் புலம்பாதே ! துன்பம் என்று ஏதுமில்லை ! எல்லாம் இன்பம் தான் ! என்னை பெறு ! நான் உன்னோடு பேசுவேன். இது சத்திய வார்த்தை. நித்சலன் வேண்டாம். ஏனென்றால் நானே சத்தியம் !
என்னை உணர்ந்தவன் ஞானியாவான் !
நான் இநன்யா !

மனிதன் கற்றுக்கொள்ள வேண்டிய 21 பாடங்கள் ..!

மகிழாவின் பக்கம்
மனிதன் கற்றுக்கொள்ள வேண்டிய 21 பாடங்கள் ..!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சிங்கத்திடம் இருந்து ஒன்றையும், கொக்கிடம் இருந்து இரண்டையும், கழுதையிடம் இருந்து மூன்றையும், கோழியிடம் இருந்து நான்கையும், காக்கையிடம் இருந்து ஐந்தையும், நாயிடம் இருந்து ஆறையும் நாம் கற்று கொள்ள வேண்டும்.
1 - சிங்கம் எந்த ஒரு விஷயத்தையும் உடனடியாக செய்யாது, நன்கு ஆலோசனை செய்த பின்பு முழு மனதுடன் உறுதியாக செயல்படும்.
2 - கொக்கு ஓடு மீன் ஓட, உறு மீன் வரும் வரை காத்து நிற்கும். அதுபோல் அறிவாளி ஒரு காரியத்தை செய்வதற்கு முன் காலம், இடம், தன் ஆற்றல் கூடும் வரை காத்திருந்து செய்வான்.
3 - கழுதையானது களைப்புற்றாலும் தன் வேலையை தொடர்ந்து செய்யும், வெயில், மழை என்று பாராமல் உழைக்கும், தன் முதலாளிக்கு கட்டுப்பட்டிருக்கும் குணம் ஆகிய மூன்றும் கழுதையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.
4 - விடியற்காலை எழுதல், தைரியமாக சண்டையிடுதல், அவரவர்க்கு தேவையானவற்றை பிரித்துக் கொடுத்தல், தனக்கு தேவையானவற்றை தானே உழைத்துத் தேடி சம்பாதித்தல் ஆகிய நான்கும் சேவலிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.
5 - இரவில் மனைவியுடன் சேர்ந்து இருத்தல், தேவையான பொருள்களை சேமித்து வைத்தல், யாரையும் எளிதில் நம்பாமல் இருத்தல், தைரியம், எச்சரிக்கை உணர்வு ஆகிய ஐந்தும் காக்கையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.
6 - கிடைப்பதை உண்டு திருப்தி அடைதல், உணவு கிடைக்காத நேரத்தில் பட்டினி இருத்தல், நன்றாக பசி இருந்தும் கட்டளை வரும் வரை காத்து இருத்தல், நல்ல தூக்கத்தில் இருந்தாலும் உடனடியாக எழுந்து செயல் படுதல், முதலாளிக்கு விசுவாசமாக இருத்தல், தன்னைவிடவும் உருவத்தில் பெரிய மிருகமாக இருந்தாலும் தைரியமாக எதிர்த்தல் ஆகிய ஆறு குணங்களை நாயிடம் இருந்து கற்று கொள்ள வேண்டும்.
எவன் ஒருவன் மேலே சொன்ன இந்த இருபத்தியொரு விஷயங்களை கடைபிடிக்கிறானோ அவன் எதிலும் வெற்றி அடைவான். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றியாகும்.
இது நாங்க சொல்லலைங்க ..!
சாணக்கியர் சொல்லியிருக்கார் ..!!!
www.facebook.com/Magilavinpakkam

வளமுடன் வாழ (108) சூத்திரங்கள்

வளமுடன் வாழ (108) சூத்திரங்கள்
××××××××××××××××××
1. கடமையை செய்.
2. காலம் போற்று.
3. கீர்த்தனை பாடு.
4. குறைகள் களை.
5. கெட்டவை அகற்று.
6. கேள்வி வேண்டும்.
7. கை கொடு.
8. கோவிலுக்குச் செல்.
9. கொலை செய்யாதே.
10. கூச்சம் வேண்டாம்.
11. தர்மம் செய்.
12. தாயை வணங்கு.
13. திமிர் வேண்டாம்.
14. தீயவை பழகாதே.
15. துன்பம் துரத்து.
16. தூய்மையாய் இரு.
17. தெளிவாக சிந்தி.
18. தைரியம் வேண்டும்.
19. தொண்டு செய்.
20. தோழனை கண்டுபிடி.
21. சத்துணவு சாப்பிடு.
22. சஞ்சலம் போக்கு.
23. சாதனை செய்.
24. சிக்கனம் தேவை.
25. சீருடன் வாழ்.
26. சுத்தம் பேண்.
27. சூழ்ச்சி செய்யாதே.
28. செலவை குறை.
29. சேர்க்கப் பழகு.
30. சைவம் சிறந்தது.
31. சொர்க்கம் தேடு.
32. சோகம் வேண்டாம்.
33. சோம்பல் அகற்று.
34. செளந்தர்யம் சேர்.
35. நம்பிக்கை கொள்.
36. நிம்மதி பெரிது.
37. நெஞ்சத்தில் நில்.
38. நேர்மை கடைபிடி.
39. நைந்து பழகு.
40. நொறுங்கத் தின்னு.
41. நோயை விரட்டு.
42. பண்புடன் பழகு.
43. பாவம் செய்யாதே.
44. பிதற்றல் குறை.
45. பீடிகை போடாதே.
46. புண்ணியம் சேர்.
47. பூசல் நீக்கு.
48. பெரியோரை மதி.
49. பேதம் வேண்டாம்.
50. பைந்தமிழ் பேசு.
51. பொய் பேசாதே.
52. முகத்தை சுழிக்காதே.
53. மூத்தோற்கு உதவு.
54. மெல்லப் பேசு.
55. மேலானவை நினை.
56. மோசம் செய்யாதே.
57. மௌனம் நல்லது.
58. வறுமை ஒழி.
59. வளம் சேர்.
60. விளையாட்டல்ல வாழ்க்கை.
61. வீம்பு விலக்கு.
62. ஒவ்வொன்றாக செய்.
63. வருவோரெல்லாம் நண்பர்களல்லர்.
64. வேற்றுமை ஒழி.
65. வையகம் போற்று.
66. கலைஞனாய் இரு.
67. ஞானம் வேண்டு.
68. குணம் வளர்.
69. பண்ணிப் பார்.
70. எண்ணுக உயர்வு.
71. பயம் தவிர்.
72. மெய்யூட்டி வளர்.
73. மெய்யென பேசு.
74. தன் கையே உதவி.
75. தீயோடு விளையாடாதே.
76. மலையோடு மோதாதே.
77. தடத்தில் நட.
78. விபரீதம் வேண்டாம்.
79. கண்டு களி.
80. அட்டூழியம் செய்யாதே.
81. கேட்டேதும் பெறா.
82. நாட்டை நேசி.
83. வீட்டோடு வாழ்.
84. வரம் கேள்.
85. திருடி பிழைக்காதே.
86. மேதாவித்தனம் வேண்டாம்.
87. சொல்லுக பயனுள.
88. பழங்கள் சாப்பிடு.
89. சினம் தவிர்.
90. அனுபவம் பலம்.
91. கண்ணெனப் போற்று.
92. திருடனே திருந்து.
93. இறைவனைப் புகழ்.
94. அமைதி கொள்.
95. துக்கம் மற.
96. பங்கம் பண்ணாதே.
97. அன்பே அச்சாணி.
98. கொஞ்சி மகிழ்.
99. மட்டம் தட்டாதே.
100. சொந்தம் சூழ்ந்திரு.
101. தவறைத் திருத்து.
102. அம்மாவே தெய்வம்.
103. வன்மம் வைக்காதே.
104. சொல் தவறாதே.
105. தோள் கொடு.
106. பேராசைப் படாதே.
107. புன்னகை அணி.
108. நீடுழி வாழ்.
################

மதம் அழிந்து மனிதநேயம் மலரும்.

மதம் அழிந்து மனிதநேயம் மலரும்.
அந்த வசந்தகாலம் 2025 ல் தொடங்கும் .
இந்தியா முதல் வல்லரசாகும் .
கங்கை காவிரியோடு இணையும்,
தாமிரபரணியோடு சங்கமிக்கும்.
வல்லரசு நாடுகள் எல்லாம் வசந்தம் தொலைத்து நிற்கும்.
தமிழன் உலகை ஆள்வான்,
மக்களாட்சி முடிந்து மன்னராட்சி தொடங்கும்.
என் தந்தையை வணங்கும் யூத சாம்ராஜ்யம் இந்திய தேசத்திற்கு வருவார்கள்....
வெண்மையைவிட வேறெதுவும் பெரியதல்ல ,
அதுவே ஆணந்தம் நிம்மதி தரும் .
நான் வெண்மை உண்மை .
உலகில் அன்புமலரே மிக சிறந்த ஸ்பரிஷம் கடவுளை அறிய ,
உன்னை அறிய வைப்பேனடா என் நெஞ்சம் நிறைந்த அன்பின் ஆசிகள் உனக்கு.
************************
நன்றிகள்....
இநன்யா நமோ நம...

இந்த உடல் பஞ்சபூதங்களால் ஆனது என்று சொல்லக் கேட்டிருக்கிறோம்.

இந்த உடல் பஞ்சபூதங்களால் ஆனது என்று சொல்லக் கேட்டிருக்கிறோம். அந்த பஞ்சபூதங்கள் என்னவாக இருக்கிறது என்று பார்க்கலாம். மண்ணின் கூறாக மயிர், எலும்பு, தோல், நரம்பு, தசை ஆகியவை ஐந்தும் இருக்கின்றன. நீரின் கூறாக இரத்தம், கொழுப்பு, வியர்வை, உமிழ்நீர், சிறுநீர் ஆகியவை ஐந்தும் இருக்கின்றன. நெருப்பின் கூறாக உணவு, தூக்கம், அச்சம், சேர்க்கை, சோம்பல் ஆகிய ஐந்தும் இருக்கின்றன. காற்றின் கூறாக நடத்தல், ஓடல், நிற்றல், இருத்தல்ர கிடத்தில் ஆகிய ஐந்தும் திகழ்கின்றன. ஆகாயத்தின் கூறாக காமம், லோபம், குரோதம், மோகம், மதம் ஆகிய ஐந்தும் விளங்குகின்றன. இவற்றை சித்தர்கள் புறக்கரணம் அல்லது புறக் கருவிகள் என்பர்.
புறக் கரணங்களைப் பற்றி தெரிந்து கொண்ட நாம் இந்த பூதங்களின் சேர்க்கையால் என்னவெல்லாம் உருவாகிறது என்று தெரிந்து கொள்வோம்.


முதலில் மண்ணின் கூறு.
மண் + மண் = எலும்பு
மண் + நீர் = மாமிசம்
மண் + நெருப்பு = தோல்
மண் + வாயு = நரம்பு
மண் + ஆகாயம் = முடி.


நீரின் கூறு.
நீர் + நீர் =சிறு நீர்
நீர் + மண் = உமிழ் நீர்
நீர் + நெருப்பு = வியர்வை
நீர் + வாயு = இரத்தம்
நீர் + ஆகாயம் = சுக்கிலம்.


நெருப்பின் கூறு.
நெருப்பு + நெருப்பு = தூக்கம்
நெருப்பு + மண் = பசி
நெருப்பு + நீர் = தாகம்
நெருப்பு + வாயு =ஆலகியம்
நெருப்பு + ஆகாயம் = சேர்க்கை.


வாயுவின் கூறு.
வாயு + வாயு = ஓடல்
வாயு + மண் = படுத்தல்
வாயு + நீர் = நடத்தல்
வாயு + நெருப்பு = உட்காருதல்
வாயு + ஆகாயம் = தாண்டல்.


ஆகாயத்தின் கூறு.
ஆகாயம் + ஆகாயம் = மோகம்
ஆகாயம் + மண் = ராகம்
ஆகாயம் + நீர் = துவேஷம்
ஆகாயம் + நெருப்பு = பயம்
ஆகாயம் + வாயு = நாணம்.


இதே போன்று நம்முடைய ஆதாரங்களும் பஞ்சபூதங்களின் தன்மைகளைக் கொண்டுள்ளன என்பது சித்தர்கள் வாக்கு. மூலாதாரம் மண்பூதம், சுவாதிஷ்டானம் நீர் பூதம், மணிபூரகம் நெருப்பு பூதம், அனாஹதம் வாயு பூதம், விசுத்தி ஆகாய பூதம் என்றும் ஆக்ஞா, சகஸ்ராரம் என்ற இரண்டு ஆதாரங்களும் உயர்நிலை ஆதாரங்கள் எனவும், அவைகளுக்கு தனிப்பட்ட பஞ்சபூதத் தன்மை கிடையாது என்று சொல்கிறார்கள். விசுத்தியை தாண்டும் போது ஆகாயபூதத்தோடு கலந்துவிடுவார்கள் யோகிகள். 


35 வயதுக்கு மேல்தான் மேல்நிலை ஆதாரங்கள் வலுப் பெறும் என்றும், மிகமிக அரிதாக கோடியில் ஒருவருக்கு இளமையிலேயே அதுவும் இயற்கையிலேயே இவை வலுவாக அமைந்து விடுவதுண்டு. அது இறைவனின் அருள் அல்லது பூர்வ ஜென்ம பலன் என்று கூறலாம். எவர் ஒருவர் மேல்நிலை ஆதரங்களின் எல்லைகளைத் தொடுகிறாரோ அவர் கர்மாவானது அறுபடுகிறது. பாவ, புண்ணிய கர்ம பந்தங்கள் அறுபட்ட பரமாக சுத்தவெளியாக மாறிவிடுவார். 


இப்படி ஆன்மா சுத்தப் படுத்தப்படும் நிகழ்வு விஷுத்தி என்கிற ஐந்தாவது ஆதாரத்தில்தான் நடை பெறுகிறது. எனவேதான் அது தூய்மையான என்ற பொருள் கொண்ட விஷுதி என்று அழைக்கப்படுகிறது. அதன் பிறகே ஜீவாத்மா பரமாத்மாவை அடைய முடியும்.

உண்மை சம்பவம் என் வாழ்க்கையில் நடந்தது ....

உண்மை சம்பவம் என் வாழ்க்கையில் நடந்தது ....
சனிபகவானை தீய எண்ணத்தோடு பார்த்ததை ......
நண்பர் ஒருவரை நீண்ட இடைவெளிக்குப்பிறகு சந்திக்க நேர்ந்ததது.
மிகவும் சோர்வாக வருத்தம் தோய்ந்த முகத்துடன் காணப்பட்டார்.
எப்போதும் கலகலப்பாக சந்தோஷமாகக் காணப்படுவார்.
என்னாயிற்று என்று விசாரித்த போது மிகவும் அலுப்புடன் ..........
''அஷ்டமத்துச் சனி'' பாடாய்
படுத்திவிட்டான்.
குடும்பத்தில் குழப்பம்,
தொழில் முடக்கம்,
கடன், வியாதி,
என்று அடுக்கிக் கொண்டே போனார்.
இடைஇடையே சனீஸ்வர பகவானுக்கு அர்ச்சனை (திட்டு) வேறு.
அவர் பேசி முடிக்கும் வரை காத்திருந்த நான்.........
அஷ்டமத்துச் சனி என்றால் என்ன ?
என்று கேட்க , 8 ஆமிடத்துச் சனி என்றார்.
முதலில் எட்டாமிடம் என்பது மறைவு ஸ்தானம் என்கிற வரையில் நிறைய பேர் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.
அப்படி என்றால் நம்மை விட்டு மறைந்து போய்விட்ட கிரகம் எப்படி நமக்கு தீமை செய்ய முடியும்......
யோசித்துப் பார்க்க வேண்டும்........
8 ஆமிடம் என்பது மறைவு ஸ்தானம் மட்டுமல்ல நமக்கு எதிரில் வெகு தொலைவில் இருக்கும் இடம்.
அதாவது அந்த கிரகத்துக்கும் நமக்குமான தொடர்பு துண்டிக்கப் பட்டுவிட்டது,
அல்லது அந்த கிரகத்தின் ஆற்றல்களை நாம் பெற முடியவில்லை என்பதே உண்மை.
ஆக .... சனீஸ்வர பகவானின் ஆற்றலை பெற்றுக் கொண்டிருக்கும் வரை இன்பமாக இருந்த நாம்,
அவரது ஆற்றல் கிடைக்காத போது துன்பப்டுகிறோம் என்றால் .....
அவர்தானே நமக்கு நன்மைகளை அதிகமாகச் செய்பவர்.
எனவே இனிமேலாவது திட்டுவதை விடுத்து அந்த கிரகத்தின் ஆற்றல்களைப் பெற நம் முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கும் வழிமுறைகளைக் கையாண்டு பலன் பெறுவோமாக.
பொதுவாக பிறக்கும் போது தீய ஸதானங்கள் என்று சொல்லப்படும் இடங்களில் கிரகங்கள் இருக்கிறது என்றால்,
அந்த கிரகங்களின் கதிர் வீச்சை நாம் பெற மிடியவில்லை என்பதே பொருள்.
பிறக்கும் போது நமக்கு கிடைத்த கிரகங்களின் கதிர்வீச்சை நம் உடல் ஏற்றுக் கொள்ளும்.
ஆனால் பிறக்கும் போது நமக்கு கிடைக்காத கதிர்வீச்சு நம் உடலுக்கோ மனதுக்கோ ஒவ்வாமையை ஏற்படுத்தும்.
இளமையிலேயே அதைக் கண்டுபிடித்து அந்த கிரகங்களின் ஆற்றலை மேம்படுத்தி பழகிக் கொண்டால் எல்லாம் சுகமே.
உதாரணமாக புதிய சூழ்நிலைகள்,
புதிய ஊர்,
தண்ணீர்
இதெல்லாம் நமக்கு பிரச்சனைகளை உண்டு பண்ணும்.
பிறகு போகப் போக பழகிவிடும் ....
அது போலத்தான் இதுவும்.....
எல்லா கிரஹங்களின் பாதுகாப்பில் தான் நாம் இருக்கிறோம் ...
எந்த கிரகத்தையும் குறை கூறாமல் இருப்பதே நல்லது . இதுவே தீர்வு. .
தன்னையே சரிபடுத்த முடியாதவன் கிரஹங்களை குறை கூறுவது அர்த்தமேயில்லை.
குரு கொடுப்பான் ...சனி கெடுப்பான் என்று குறை கூற நமக்கு என்ன தகுதியிருக்கு ....
கிரஹங்களின் நிழலில் வாழும் நாம் ,,,,
கிரஹங்களையே குறை சொல்லலாமா ,,,
மாபெரும் தவறே ,,,
மாற்றிக் கொள்ளுங்கள் உங்கள் குணாதிசயத்தை ....
நன்றி ......

நாளை நன்நாள் நான் ஆணந்தமாய் யோகிகள்,ரிஷிகளோடு இருக்கின்ற நாள்

இநன்யா நமோ நம
08-09-2017
நாளை நன்நாள் நான் ஆணந்தமாய் யோகிகள்,ரிஷிகளோடு இருக்கின்ற நாள் என் அன்பிற்கினிய தந்தை யாகவா ஸ்தலத்திற்கு ஒன்பது நாள் வந்து செல்வார்கள் .நீ அன்பால் கேட்கும் எல்லா பிரார்த்தனையும் நிறைவேற நான் பரிந்துரை செய்வேன் .என் நாமம் தேவர்கள் அழைக்கும் நாமம் உன் பாவம் கரைக்கும் காலனையும் மிதிக்கும் என் சொல் சத்யம் நீ வெல்வாயடா.
***************************
நன்றிகள்
இநன்யா நமோ நம

காரணகுரு, காரியகுரு ...!

காரணகுரு, காரியகுரு ...!
'கு' ஆகிய இருளிலிருந்து 'ரு' ஆகிய வெளிச்சத்தைக் காட்டக்கூடிய ஆற்றல் பெற்றவரே குரு என்பவர். உலகில் காரணகுரு, காரியகுரு என இருவகையினர் உள்ளனர்.

காரியகுரு *******
காரியகுரு எனப்படுபவர் சில சித்திகளை கைவரப் பெற்று, முற்றுப் பெறாமல் பொருளை இச்சித்து செயல்படுவராவர். காரியகுருவாகிய தவறாகப் போதிப்பவரே உண்மையில் 'குருடு' என்ற தமிழ்ப்பதத்திற்குப் பொருத்தமானவர். கண் பார்வையற்றவரைக் 'குருடு' என்பது தவறான சொற் பிரயோகமாகும். இப்போலிக் குருவாகிய குருடுகளை ஆசான் திருமூலர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர்
குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்
குருடும் குருடும் குழிவிழு மாறே.
- திருமந்திரம் (10.6.105)

காரணகுரு **********
எந்தப் பொருளின் மீதும் பற்றற்று இருப்பவரே காரணகுரு ஆவார். முற்றுப்பெற்ற சித்தர்களே காரணகுரு ஆவார்கள். மகான் அகத்தீசர், மகான் நந்தீசர், மகான் திருமூலதேவர், மகான் போகர், மகான் கருவூர்தேவர், மகான் பட்டினத்தார், மகான் சிவவாக்கியார், மகான் காலாங்கிநாதர், மகான் வள்ளலார் போன்ற ஞானிகளே காரணகுரு ஆவார்கள். ஆசான் அகத்தீசரின் ஆசிபெற்ற ஒன்பது கோடி ஞானிகளும் காரணகுரு ஆவார்கள்.
அத்தகு காரணகுருவின் திருவடிப்பற்றி பூசித்து ஆசிமாறாமல் உடம்பைப் பற்றியும், உயிரைப்பற்றியும் அறிய முடியாது. சத்தைப் பற்றியும், அசத்தைப் பற்றியும் அறிய முடியாது.

காலம் உள்ளபோதே அதாவது இளமை இருக்கும்போதே காரணகுருவை அறிந்து, அவரது உபதேசத்தைப் பெற்றுப் பிறவிப்பிணியை நீக்கிக் கொள்ளவேண்டும்.;;;;;;;;;;

தொழும்பி யாருமில்லை ! ஞான பெண்ணே, இங்கே நீ கடவுளின் சிறுவிதானடா ! மகிழ்ந்து நில்லடா ! அசுர மனத்தை மிதித்து வெல்லடா !

தொழும்பி யாருமில்லை ! ஞான பெண்ணே, இங்கே நீ கடவுளின் சிறுவிதானடா ! மகிழ்ந்து நில்லடா ! அசுர மனத்தை மிதித்து வெல்லடா !
ஞான மலர்கள்
வெண்தாமரை, செந்தாமரை வேதசாரம் நிறைந்தது ! பாரிஜாதம் உன் உள் உயிர்க்கு ஆணந்தம் தருவது ! தாமரை, பாதிரி, செண்பகம், புன்னை, நீலோத்பவம், நந்தியா, அரளி, பாரிஜாதம் ஆகிய இந்த எட்டு மலர்களும் அஷ்ட புஷ்பங்கள் ! இது உன் வேண்டுதலை நிறைவேற்றும் ஞான மலர்கள் ! கடவுளின் பாதத்திற்கு உகந்தது.
இந்த எட்டு மலர்களையும் ஒரு சேராக கடவுளுக்கு வைத்தால் உனக்கு அஷ்ட அதிர்ஷ்டங்கள் உண்டு ! இவை வழிபாடுகள் அல்ல ! பூ வைத்து வணங்குவது மணம், அன்பிற்காக !
வெள்ளெருக்கு பூமிக்கு பிடித்த மலர் ! இந்த புணித பூமி அன்னைக்கு அந்த மலர் பதித்து வணங்கு ! உன் வீடு சுபமாகும். வாஸ்து குறை என்று சொல்கிறாயே, அந்த குறை கூட காணாமல் போகும். இந்த எட்டும் உன்னை எட்டின் நிலை குறை தீர வைக்கும். சட்டத்தில் உன்னை பிணமாக வைக்கும் போது உன் உடல் நாறும் நிலை மாறும் !
மற்ற மலர்களும் குறைந்தவை அல்ல. முல்லை, மல்லி, குவளை, மனோரஞ்சிதம், திகுவழை, பன்னீர் கூட உன் குறைகளை போக்கும்.
கவலை தீர வெண்தாமரை வைத்து வணங்கு !
செல்வம், மன அமைதி பெற செந்தாமரை வைத்து வணங்கு !
எதையும் பக்தியால் செய்யாதே ! பாசத்தால் செய் !
பயத்தால் செய்யாதே ! பணிவுடன் செய் !
நான் மலரின் ஞானம் ! உலகின் 333 கோடி மலர்களின் சாரம் நான் ! என்னுள் கரைந்திடு ! நிறைந்திடு ! பல்கி பெருகுவாய் பவிசோடு ! எல்லா பூக்களின் நறுமனமும், ஞானமும் எனக்குள் உண்டு ! என் அன்பிற்கினிய தந்தையின் சஞ்சிநாத பாதத்தில் உண்டு.
உன்னில் ஸ்வேதமாக ஜொலிக்கின்றேன். என் அன்பு உண்மை வெண்மை போன்றது. தர்மாக்களுக்கு சத்திய பாதையை காண்பிக்கும் ! ஆனால் துஷ்ட சாம்ராஜ்ஜியங்களுக்கும் அசுர வர்க்கங்களுக்கும் என் ருத்ரம் மிக மிக பெரிது தான் !
என்னுள் கர்வமில்லை. போட்டி, பொறாமை, வஞ்சமில்லை. உன்னால் அன்பால் அரவணைக்கும் எண்ணம் உண்டு ! நான் அழகாக இருப்பதன் ரகசியம் இது தான். இந்த மன அழுக்கை குப்பையாக சேர்ப்பதாலே மனிதன் அழகாக இல்லை. அழகு என்றால் துன்பம் இல்லாமல் இருப்பது தான் !
வெகுண்டெழுந்தேன் உன் வேதனை தீர்க்க !
உன் துன்பம், வறுமை, நோய், பாவத்தோடு நான் சண்டையிடுகிறேன். உன் பாவத்தை கவலையை என் பாதத்தில் வைத்து விடு ! நான் அழுத்தி கரைப்பேன். உனக்கென்ன மனக்கவலைடா ? என் நாமம் உனை கரை சேர்க்கும். இநன்யா மலரின் ஞானம் !
பூக்களுக்கும் மலர்களுக்கும் ஞானம் உள்ளதால் தான் பூஜைக்கு பயன்படுத்துகிறான்.
தும்பை மலர் எனக்கு பிடித்தது !
பன்னீர், பாரிஜாதம், தாமரை என் தந்தைக்கு பிடித்தது !
ஆனால் எல்லா மலரிலும் சிறந்தது பெண் மலர் தான். அவள் மலர்ந்தால் தான் நீ மலர்வாய். ஆதலால் பெண்ணே கடவுளின் படைப்பில் உண்ணதம் !
பெண் பிரம்மநிலை அடைந்தவள் !
புத்தி நான்கும், கீர்த்தி எட்டும், பலத்தால் பதினாறும் நிறைந்தவள் பெண் ! ஞானம் பொருந்தி பூமியில் இறக்கப்பட்டவள் பெண் !
போற்றி பாடடா பெண்மையை ! பெருமை உனக்குள் லோகத்தில் !
333 கோடி மலர்களின் ஞானம் நான் !
வேதத்தின் சாரம் தான் !
மலரின் ஞானம் நான் !
நான் இநன்யா !

நாம் தூங்கும் பொழுது நம் மூச்சுக் காற்று நின்றால் நம் கதி என்னவாகும் ?

நான் இநன்யா !
’இ’ என்றால் ஒலி ! ( ஆன்மா )
’ந’ என்றால் காற்று ! ( உழைப்பு )

’ன்’ என்றால் நீர் ! ( உயர்வு )
’யா’ என்றால் மலரின் ஞானம் ! (வசந்த காலம்)
நன்றி ! இநன்யா நமோ நம !
நாம் தூங்கும் பொழுது நம் மூச்சுக் காற்று நின்றால் நம் கதி என்னவாகும் ? நாம் தூங்கும் போது நம் மூச்சுக் காற்றை தூங்காமல் இயக்குபவர் கடவுள் ! நாத்திகன் என்று சொல்லித் திரியும் யாரேனும் இருந்தால் இன்றே சொல்லிவிடுங்கள் மூச்சுக் காற்று கடவுள் உடையது என்று ! நாம் தூங்கும் பொழுது கூட நம்மை பாதுகாப்பாக கண்காணிப்பவர் கடவுள். நாம் கேட்காமலேயே கடல் நீரை காற்றைக் கொண்டு மேல் எழுப்பி அதை மேகமாய் மாற்றி பின் இன்ப மழையாய் தருபவர் கடவுள் ! மழை இல்லையென்றால் நம் நிலைமை என்னவாகும் ? எல்லாவற்றையும் நாம் கேட்காமலேயே கொடுக்கும் கடவுள், பின் ஏன் நாம் கேட்டும் கொடுக்கவில்லை என என்றாவது யோசித்திருக்கிறோமா ? இப்பொழுதாவது உணருங்கள் ! நமக்கு கடவுளிடம் கேட்கத் தெரியவில்லை ! “இநன்யா நமோ நம” என்ற நாமத்தை சொன்னாலே போதும் ! ஆன்மா ஆனந்த கூத்தாடும் ! புனித காற்றை அறிவியலின் பெயரால் மாசுபடுத்திக் கொண்டிருக்கின்றோம் ! காற்று ஆவேசமாய் கோபம் கொண்டு நம்மையும் நம் அறிவியலை அழித்துக் கொண்டிருக்கின்றது ! புனித தென்றல் காற்றை கரும்புகையாக்கி தெருவெங்கும் தீக்கோலமாய் பட்டாசு வெடித்து கொண்டாடுவது எதற்காக ? நமக்கு கனிகள் தரும் மரங்கள் அழுகின்றது ! பறவைகள் தன் கூட்டைவிட்டு தூரம் சென்று கதறுகின்றன ! பூக்கள் வாடுகின்றன ! நாய்கள், பசுக்கள் அலறியடித்து ஓடுகின்றன ! ஆறறிவு படைத்த மனிதன் மட்டும் ஞானமிழந்து சிரித்துக் கொண்டாடுகின்றான் பண்டிகையாக ! மூச்சுக் காற்றை யோகா என்ற பெயரில் இழுத்து விடுவது, தியானம் என்ற பெயரில் அடக்குவது எதற்கும் உதவாது ! கடவுள் சொன்னது போல் வியர்வை சிந்தி உழைத்து உங்களின் கடமையை மட்டுமே செய்யுங்கள் ! தியானம், யோகாவில் கிடைக்காத நிம்மதி ஆயிரம் மடங்கு சத்யமாக கிடைக்கும் ! கர்ம வினையால் சிலரை பார்வையற்றவராக, கேட்கும் திறனற்றவராக, பேசும் திறனற்றவராக படைக்கின்றார் கடவுள் ! யாரையேனும் சுவாசிக்கும் திறனற்றவராக படைத்துள்ளாரா ? எதற்கென்று யோசியுங்கள் ! காற்றின் சூட்சுமம் புரியும் !

நான் இநன்யா !
’இ’ என்றால் ஒலி ! ( ஆன்மா )
’ந’ என்றால் காற்று ! ( உழைப்பு )

’ன்’ என்றால் நீர் ! ( உயர்வு )
’யா’ என்றால் மலரின் ஞானம் ! (வசந்த காலம்)

நன்றி !
இநன்யா நமோ நம !

அப்பா | " யாகவா உரையாடல் "

அப்பா | " யாகவா உரையாடல் " _ குருடன் .
குருடன் ,,,, அப்பா நீங்கள் திட்டுகின்றீர்கள் .என்று உங்களிடம் பேச பயப்படுகின்றார்கள்.
டாய், நான் உன்னை திட்டவில்லை'உன் உடலை தான் திட்டுகிறேன்.
பார்த்துப் போ ,,, பள்ளம் ஒன்று உள்ளது என்று நான் உன்னை எச்சரிக்கின்றேன்.
நீ இரு கண் இருந்தும் குருடனைப் போல் அலைகின்றாய். பாழும் கிணற்றில் குரு டன் ஒருவன் விழுந்து விடுகின்றான்.
குருடன் நினைக்கின்றான். தனக்கு உதவி செய்ய யாருமே இல்லை என்று.. அச்சமயம் நான் பட்சிகளை ஏவி விடுகின்றேன். அவை அக் குருடன் நிலைக் கண்டு குரல் கொடுக்க, குருடனோ தனக்கு துணையாக இங்கு ஒரு பட்சி இருக்கின்றது என்பதை அறிகின்றான்.
பின் அங்கு உள்ள மரத்தின் வேரை பிடித்து மேலே வந்து விடுகின்றான்.
நீ இவ் யுகம் எப்படி உள்ளது என்பதை இரு கண் தெரியாதவனிடம் போய் கேட்டால் அவன் தெளிவாக கூறுவான்.
இரு கண் தெரியாதவன் எதை வணங்குவான்.
இரு கண் இருந்தும் நீ எதை வணங்குகின்றாய். உன் கண்ணுக்கு யாவும் தெரியும்.
உன் உயிருக்கு மனம் தான் தெரியும். என்றால் நீ உன்னை சிந்தி .
இரு கண் தெரியாத குருடனை சிந்தித்துப் பார் .
இந்த யுகம் சப்த யுகமாக உள்ளது என்பதனை குருடன் தெளிவாக உணர்வான்.
குருடன் ஒளி சப்தத்தை அறியாதவன். அது அவனது முற்பிறவி கர்மப்பாவம்.
நீயோ இரு கண் ஒளி உனக்குள் தான் இருந்தும், உனக்குள் ஒளி இருப்பதால் தான் கற்சிலையை காண்கின்றோம் என்பதனை மறந்து,
கற்சிலையை கடவுள் என்கிறாய். அப்படி என்றால் உனக்குள் ஒளியாக இருப்பது யார்.
என்று சற்றேனும் சிந்தித்தாயா?
நீ உருவமற்றதை சிந்தித்தால் உள்ளுணர்வை அறிவாய் .இரு கண் தெரியாதவன் பாழும் கிணற்றில் வீழ்ந்தது போல் நீயும் இவ்வுயகத்தில் அவையில் செய்த பிழைக்காக வந்து வீழ்ந்து கிடக்கின்றாய் .
இங்கு உனக்கு உதவி செய்யவே யாகவா = முனிவர்கள், மாயைகள் சித்தர்களுக்கு ஒான சப்தத்தையும் , வேத சப்தத்தையும் கொடுத்து ஒலிக்க செய்கின்றார் .
நீ இவ்வுயகத்தை விட்டு யாகத்திற்கு கரை சேர பிரம்மஸ்தலம் என்கின்ற ஆணிவேரையும் கொடுத்துள்ளார்.
இரு கண் தெரியாதவன் சப்தத்தை வணங்குகின்றான்.
இரு கண் இருந்தும் ஏன் நீ ஒளியை ஒலியை உணர மறுக்கிறாய்.
உன்னதமான பொருள் என்பது ஒளி.
"எனக்கு மேல் ஒருவன் இருக்கிறான் என்று எண்ணி விடாதே!
எனக்கு மேல் ஒளி தான் இருக்கின்றது."
"யாகவா"
இநன்யா நமோ நம

கேள்வி : - ஞானிகளும் ஒரு வகையில் பைத்தியம்தான் என்று கூறுகிறீர்கள் . இதைச் சற்று விளக்க முடியுமா ?

கேள்வி : - ஞானிகளும் ஒரு வகையில் பைத்தியம்தான் என்று கூறுகிறீர்கள் . இதைச் சற்று விளக்க முடியுமா ?
ஓஷோ பதில் : - " ஆம் .
★ இது உண்மைதான் . ஏனெனில் இருவரும் சாதாரண மனநிலையில் , சாதாரண மக்களைப் போல பெரும்பாலும் இருப்பது இல்லை . ஞானி என்பவன் சாதாரண மனதைக் கடந்து மேலே சென்றவன் . பைத்தியம் என்பவன் மனதிற்குக் கீழே சென்றவன் . இதுதான் ஒரே வித்தியாசம் . ஆனால் இதன் பின்விளைவுதான் அசாதாரணமானது .
★ஞானி மனதைக் கடந்து மேலே சென்று பேரானந்த நிலையில் இருக்கிறான் . பைத்தியம் மனதிற்குக் கீழே சென்று ஒருசில எண்ணச் சுழலிலேயே சிக்கித் தவிக்கறான் . மேலே சென்றவன் , எண்ணங்களை ஒதுக்கிச் சென்றிருக்கிறான் . கீழே சென்றவன் மன இறுக்கம் , கவலை , எதிர்பாராத பெருத்த ஏமாற்றம் எல்லாம் சேர்ந்து அவனுடைய மனநிலையைப் பாதித்து அவனை கீழே கொண்டு சென்றுவிட்டது .
★ஆனால் இருவரது கண்களையும் பாருங்கள் . அவை ஒன்றுபோலவே ஒருவித வெறுமையில் இருக்கும் . இருவரும் இந்த உலகத்தைப் பற்றி கவலைப்படாமல் எங்கேயோ சஞ்சரித்துக்கொண்டு இருப்பார்கள் . இருவரும் பலசமயம் தங்களுக்குத் தாங்களே பேசிக்கொள்வார்கள் ; தானே சிரிப்பார்கள் ! இதனால் கீழை நாட்டில் , அநேக பைத்தியங்களை ஞானிகள் என்று கருதி மக்கள் வழிபடுகிறார்கள் ! இது கிராமத்தில் சகஜம் .
★ஆனால் மேலைநாட்டில் ஒரு ஞானியைக்கூட பைத்தியக்காரன் என்றுதான் எண்ணுவார்கள் . ஜீசஸ் , சாக்ரடீஸ் போன்றவர்களைப் பலர் பைத்தியக்காரன் என்றே கருதிவருகிறார்கள் . பொதுவாக பைத்தியம் ஒரு மிருகம்போல செயல்படும் . மனம் அவன்வசம் ஒருக்காலும் இருக்காது . ஆனால் ஞானியிடம் மனம் ஒரு வேலைக்காரன்போல செயல்படும் . அதைப் பார்த்துத்தான் அவன் சற்று சிரிப்பான் . இவன் வானத்தில் பறப்பவன் . ஆனால் பைத்தியம் பூமிக்கு அடியில் சென்றவன் .
★ஞானி விழிப்புணர்வில் முழுமையாக இருப்பவன் . பைத்தியக்காரன் விழிப்புணர்வின் அதல பாதாளத்தில் இருப்பவன் . ஆனால் வெளிப்பார்வைக்கு இருவருமே ஒன்றுபோலவே காணப்படுவார்கள் . இருவரும் ஆடை மற்றும் உணவு விஷயங்களில் அக்கறை காட்டமாட்டார்கள் . ஏதோ கிடைத்ததை உண்டு வழியில் எங்கேயாவது தன்னை மறந்து கிடப்பார்கள் .
★ஒருவன் ஞானி என்று எப்படி அடையாளம் காண்பது ? அதற்கு உங்கள் உள்ளுணர்வையும் , பகுத்தறிவையும் மேன்மைப்படுத்த வேண்டும் . அப்பொழுது அது உங்களுக்குச் சரியாகச் சுட்டிக்காட்டும் . வேறு வழியில்லை . " .
:-ஓஷோ

கடவுளை பற்றி பேசாத நிமிடம் நீ பிறவாத நிமிடமே,

இநன்யா நமோ நம
கடவுளை பற்றி பேசாத நிமிடம் நீ பிறவாத நிமிடமே,
கடவுளை நினைக்காத நிமிடம் இண்பத்தை தொலைத்த நிமிடம்.
எப்போதும் நினைத்திரு கடவுளை தவிற இங்கு எல்லாம் பொய்தான் ,
அன்பில் கரைந்திடு ஆளுமை உன்னில் பேசும்.
இந்த புணிதமாதத்தில் உன்னை கைவிடாது காக்க ஆயத்தமானேன் .
நீ செய்கின்ற செயல் அனைத்தும் வெற்றி பெற ஆசிகள் தந்தேன் .
உலகில் ஒருபக்கம் அழிவின் சாயல் கண்டேன் ,
ஒரு பக்கம் ஆணந்தம் சிறிது கண்டேன் .
நீ ஆளுமையோடு இருக்கிறாய் .
புறப்படு உன் கடமையை செய்ய ...
நீ வெல்ல நெஞ்சம் நிறைந்து ஆசிகள் தந்தேன் .
********************
நன்றிகள்
இநன்யா நமோ நம