இநன்யா ;;; INANYA NAMOO NAMA ;;; நானே மாயக் கண்ணன் ! இங்கு மாயம் புரிய வந்தேன் ! ஈசனாய் நானிருந்து உன் இன்னல் களைய வந்தேன் !
29 .இநன்யா நமோ நம.. !!INANYA NAMOO NAMA ;;;
நானே மாயக் கண்ணன் ! இங்கு மாயம் புரிய வந்தேன் ! ஈசனாய் நானிருந்து உன் இன்னல் களைய வந்தேன் !
ஆனந்த தூறல் நான் ! ஆர்ப்பரிக்கும் வெள்ளமும் நான் ! வான் அமிர்தம் நான் ! உனை வாழ வைக்க வந்த வான்மகனும் நான் !
வான் அமிர்தம் மழை !
விண்ணின் கொடை வான் அமிர்தம் மழை ! அது மண்ணிற்கும், மண்ணின் மேல் இருக்கும் உனக்கும் மகிழ்ச்சி தரும் ! அது விண்ணுக்கு அல்ல ! இங்கே இந்த பூமி என்ற பெண்ணுக்கும் கர்ப்பம் தரிக்க வந்த மின்னுருவாய் வந்த மேன் மழை ! இங்கே துளிகளை நிரப்பி பின் அதை தூய்மையாக உருவாக்கி உனக்கு அள்ளிப் பருகத் தந்தான் ! நீ உண்ணும் உணவுக்கு உயிரையும் கொடுத்தான் ஊழிக் காலத்தின் நாயகன் ! அந்த ஆனந்த கூத்தினை அறியாமல் நீ கடல் அலை போல ஆர்ப்பரிக்கின்றாய்! தூவும் மழை இல்லையென்றால் துயர்ப்படுவாய் ! உணர் !
கீழே நீர் இல்லையென்றால் என்றால் மேலே நோக்குகிறாய் ! இடைப்பட்ட காலத்தில் எதை நோக்குகிறாய் ? மழையில் பறவைகள், மிருகங்கள், மரங்கள் ஆனந்தமாக நனைகின்றன ! ஆனால் நீ வீட்டுக்குள் முடங்கி போனாய் மூடனை போல ! விண்ணின் மழைத் துளி மண்ணில் உயிர்த்துவம் நிலைக்க வைக்கும் ! துளி துளியாய் தூவும் தூரிகையை மறந்து நீ துயர்ப்பட கண்டேன் நான் !
மழைத்துளி மண்ணில் விழுந்தவுடன் பூமித்தாய் வாசனை வீசி வரவேற்கின்றாள் ! நீ தான் தூற்றக் கண்டேன் ! நீ செய்யும் தர்மத்தை வைத்து தான் உனக்கு கொடுக்கும் அளவு ! நீருக்கு சண்டையிடும் காலம் வந்துவிட்டது ! இனி மழை பொய்க்க கண்டேன் ! உலகின் பல நாடுகள் வறட்சியின் கோரப்பிடியில் சிக்கி தவிக்கும் ! இனி மழைக்கு பருவ காலம் இருக்காது ! பருவ நிலை மாறும் ! பஞ்ச நிலை தலைவிரித்தாடும் ! மதம் கொண்ட அசுர வர்க்கங்கள் மனிதக் கறியை இனி உண்பார்கள் !
ஆனால் நூற்றில் பத்து பேர் தர்மாக்கள் ! அவர்கள் காக்கப்படுவார்கள் ! இனியாவது மதத்திற்காக சண்டை போடாமல் மனிதனாக இரு ! தரைக்கும், நீருக்கும், காற்றுக்கு மதமில்லை ! உனக்கு எதற்கு மதம் ?
ஆனால் நூற்றில் பத்து பேர் தர்மாக்கள் ! அவர்கள் காக்கப்படுவார்கள் ! இனியாவது மதத்திற்காக சண்டை போடாமல் மனிதனாக இரு ! தரைக்கும், நீருக்கும், காற்றுக்கு மதமில்லை ! உனக்கு எதற்கு மதம் ?
விண்ணின் மழைத் துளியை நம்பித்தான் மண்ணில் அத்தனை பேரும் ! அது புரியாமல் மதம் என்ற உடைந்த பாய் மரத்தில் துடுப்பில்லாமல் அலைகின்றாய் ! நீ மூழ்கிக் கொண்டிருக்கின்றாய் என்பதை உணர் ! நான் நீரில்லாமல் வாழ்வேன் ! நிலமில்லாமல் வாழ்வேன் ! காற்றை மட்டும் உட்கொண்டு காலம் யாவும் கதிர் போல வாழ்வேன் ! என் நாமம் சொல் ! மாதம் மும்மாரி மழை பெய்யும் !
ஆகாயப் பால் என்ற அமிர்த நீரை வணங்கு ! நீசனாய் இருக்காதே ! இங்கே பாவம் செய்து யாகம் செய்தால் மழை வராது ! நீ தர்மம் செய்து யோகம் பெறு ! நல் மழை நாளும் பெய்யும் ! மாதம் மும்மாரி மழை பெய்யும் ! நீ மாறிப் போனதால் மாரியும் மாறிப் போனது ! நீ செய்யும் செயலால் உன்னை மரங்களும், பறவைகளும், மிருகங்களும் தூற்றக் கண்டேன். தூறல் உன்னாலே பூமியில் விழவில்லை என்று துயர்ப்பட பேசக் கண்டேன். புரண்டு வரும் நீரை பொக்கிஷமாக அடைத்துவை !
தங்கத்தை சேர்க்காதே ! தரையை சேர்க்காதே ! தங்கத்தை கூவி விற்கும் காலம் வந்துவிட்டது. பொற்காசு காலம் வரும் !
இந்த புனிதன் சொல்வதை கேள் !
இந்த புனிதன் சொல்வதை கேள் !
இனி தங்கம் திருடமாட்டான். தானியம் திருடுவான் ! நீரை திருடுவான் ! நீர் புரண்டு வர நான் கண்டேன் ! பூமியும் புரண்டால் என்ன செய்வாய் ? இனி பூமியும் அடிக்கடி புரளும் ! புண்ணியம் குறைந்து போனது ! பூலோகம் அல்லல்படுகின்றது ! பனித்துளி அமிர்தம் ! அதிகாலையில் விழும் பனித்துளியை ஒரு சொட்டு அருந்தினால் ஆனந்த வாழ்வு பெறுவாய் ! அரச மரம், அருகம்புல், நாயுறுவி இதில் விழும் பனித்துளி அமிர்தத்தை விட மேலானது ! நாய் அருகம்புல் சாப்பிடும் ! அதில் பனித்துளி பட்டு உயிர்த்துவம் இருப்பதால் . எத்தனையோ புல் வகைகள் இருக்கிறது ! ஏன் அருகம்புல்லை மட்டும் நாய் சாப்பிடுகிறது என்று கண்டுபிடி ! நீ இதை ஆராயாமல் அருகம்புல்லைக் கட்டி சிலைக்கு போடுகிறாய் ! கீரிப்பிள்ளைக்கு தெரியும் காலையில் பனித்துளியை அருந்தும் வித்தை.
எதை தின்றால் பித்தம் தெளியும் என்று மிருகங்களுக்கு தெரியும். உனக்கு தான் ஏதும் தெரியவில்லை !
நீ கோவிலையும், மலையையும் தேடி அலைகின்றாய் ! மழை நீரில் மகத்துவம் கோடி உண்டு ! மழைத்துளி அமிர்தம் அதில் கோடி ரகசியம் உண்டு ! மேலிருந்து வரும் எந்த மழைத்துளியை உள் வாங்கினால் கர்ப்பம் தரிக்கும் என ஓரறிவுள்ள சிப்பிக்கு தெரியும் ! முத்துக்கள் மழைத் துளியால் உருவாகும் வித்தையை கண்டுபிடி ! நீ ஞானியாவாய் !
என்னை நினை ! எல்லா வித்தையும், எல்லா ஞானமும் உனக்கு வந்துவிடும் ! குருவாய், தந்தையாய் உன் இதயத்தில் நானிருந்து உனக்கு கற்றுத் தருவேன் ! வான் மகளை நேசி ! வாழ்த்துவாள் தினம் உன்னை ! புனித தாமரை போல மேல் நோக்கி வணங்கு ! மாதம் மும்மாரி பெய்து உனை மகிழ்ச்சியில் திளைக்க வைப்பாள் !
சில வேளையில் என் கடமைக்காக வெளியில் சென்று வரும் பொழுது புனித மழை வேகமாக பெய்யும் ! அனால் நான் ஒரு சொட்டு நீர் உடம்பில் படாமல் என் துணியெல்லாம் நனையாமல் வீட்டிற்கு வருவேன் ! வீட்டில் எல்லோரும் ஆச்சரியமாக பார்ப்பார்கள் ! இவர் சித்து வேலை செய்து மழை நீரில் நனையாமல் வருகின்றார் என்று ! நான் சிரிப்பேன் ! அனைத்தும் நானாக இருக்கும் போது நான் ஏன் சித்து வேலை செய்ய வேண்டும் ? மனிதரிடம் சித்து வேலையை காண்பித்து எனக்கென்ன லாபம் ? என் தேவர்கள் எனக்கு குடை பிடித்து வருவதை யார் அறிவார் ? எல்லாம் என் மாயை ! நான் மாயவன் என்பதால் என் அடி முடியை காண லோகத்தில் தவம் இருக்கிறார்கள் !
நான் யுகத்தில் கை கால் முளைத்த மனிதனாக பூடகமாக அலைகின்றேன். உணர்வாயா நீ ?
என் அருகில் இருப்பவர்களுக்கு என் ஆனந்த லீலைகள் புரியும் ! நான் சுயம்பு ! மரம், செடி, கொடி, ஜீவராசிகளுக்கு என்னை தெரியும் ! நீ தான் என்னை காணாமல் செல்கின்றாய் ! உன் அறியாமையை என்னவென்று சொல்ல ? இந்த ஆத்மத்தின் தலைவனை அறிய முயற்சி செய் ! ஆனந்த வாழ்வுக்கு உனை கொண்டு செல்வேன் !
ஆனந்த தூறலும் நான் ! ஆர்ப்பரிக்கும் வெள்ளமும் நான் !
இது வேடிக்கை பேச்சல்ல ! இது விஷமத்தின் சூழ்ச்சி அல்ல !
நானே மாயக் கண்ணன் ! மாயம் புரிய வந்தேன் இங்கு ! ஈசனாக நானிருந்து உன் இன்னல் களைய வந்தேன் ! என்னால் உன் உயிரையும், ஆன்மாவையும் ஆளுமை செய்ய முடியும் ! நான் நானல்ல ! நான் இருக்கும் இடத்திலும், என் பெயர் ஒலிக்கின்ற இடத்திலும் பெரும் செல்வம், நிம்மதி, நல்ல நீர், ஆரோக்கியம் சத்யமாக உண்டு ! தர்மத்தை செய்து மறந்து விடு !
நான் மாரியாய் பொழிவேன் உன் இல்லத்தில் !
நான் வான் அமிர்தம் ! நான் இநன்யா !
No comments:
Post a Comment