Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, May 11, 2016

இந்த இநன்யாவின் பேரன்பு நித்சலமான தூய நீர் போன்றது ! உன்னை சுகமாக்கும் ! அளவில்லா ஆனந்தம் தரும் ! INANYA NAMOO NAMA ;;;

86  இநன்யா நமோ நம.. !!INANYA NAMOO NAMA ;;; 

Inanya Maha Munivar April 28 at 6:28am இந்த இநன்யாவின் பேரன்பு நித்சலமான தூய நீர் போன்றது ! உன்னை சுகமாக்கும் ! அளவில்லா ஆனந்தம் தரும் !அன்புபற்றற்று நிற்பவனே அன்பு காட்ட முடியும் !எல்லாம் இழந்தவனே அன்பு காட்ட முடியும் !என் அன்பு எதையும் எதிர்பார்க்கவில்லை ! உண்மை அன்பு தன்னை கொடுக்கும். விதையில் முதலில் உருவாகும் தளிர் அன்பினால் வருகிறது. கடவுளின் தூய அன்பினால் மரங்கள் கனி தருகிறது. பசு பால் தருகிறது. மண் தானியத்தை விளைவித்து தருகிறது. வான் மழையாக பொழிகிறது. கடவுள் எவ்வளவு கருணைமிக்கவன் என்பதை ஏன் மறந்தாய் ?உன் அன்பு எதை கொடுத்தது ? நீ பாவம் செய்து யுகத்திற்கு வந்தாலும் எல்லா சுகமும், வளமும் தந்த அந்த தூயவன் அன்பை ஏன் மறந்தாய் ?என் நாமம் அன்பு மயமானது ! கடவுள் எனக்கு சூட்டியது அன்பு நாமம். இதை சொல்ல சொல்ல அன்பு உருவாகும். சொல்ல சொல்ல உன் உமிழ்நீர் இனிப்பாகும். அன்பை யாராலும் கொடுக்க முடியாது கடவுளை தவிர !ஆணும், பெண்ணும் பழகுவது அன்பல்ல ! இங்கே எல்லாம் எதிர்பார்த்து தான் அன்பை செலுத்துகிறது, கடவுளை தவிர !கடவுள் உன்னிடம் எதையும் எதிர்பார்க்கவில்லை !ஏதோ அன்பு காட்டுவதாக நினைத்துக் கொண்டிருக்கின்றாய். உன் ஆணவத்தை விட்டால் தான் அன்பு வரும். என் அன்பு கரங்கள் உனை கைவிடாது ! கவலைபடாதே !இந்த பிரபஞ்சத்தின் இளவரசன், மானுட சாதியில் உனை உயர்ந்தவனாக்குவேன். கடவுளை பற்றிய வீண் ஆராய்ச்சியை விட்டுவிடு ! ஒரு மணி நேரம் உன் மூச்சை நிறுத்த முடியவில்லை. நீ கடவுளை பற்றி நிந்திக்கிறாய். கடவுளை பூரணமாக நம்பு ! கடவுளின் அன்புக்கு தகுதிபடுத்தி கொள். கடவுளின் அன்பு உனக்கு கிடைத்தால் பூமியில் பறப்பது போல உணர்வாய் !ஞானிகள், மகான்கள் கடவுளின் அன்பை உணர்ந்தவர்கள். அதனாலே எப்போதும் ஆனந்தமாக வாழ்கின்றார்கள். அன்பு மயமான கடவுள் அன்பை தரும்போது அளவில்லாது இருக்கும். கடவுளின் பாதம் தேடுவதே உன் நோக்கமாக இருக்கட்டும்.விண் கனி, மண் கனி, தேகனி, என் கனியை உணராது இருக்கின்றாயே ? கோமியத்தில் கூட குணத்தை வைத்தேன். நீ சிறுமியத்தில் சிக்கிக் கொண்டு தவிக்கின்றாய். உலகிலுள்ள நன்மையை மட்டும் ஏற்க பழகு. பாலும், தண்ணீரும் கலந்திருந்தாலும் அண்ணம் பாலை மட்டுமே பருகும்.உன் விருப்பம் ஏதுமில்லை. கடவுளின் விருப்பமின்றி ஏதும் அசையாது. உன் தேவை கடவுளுக்கு தெரியும். எதை, எப்போது கொடுக்க வேண்டும் என்று கடவுளுக்கு தெரியும்.நீ நீ அல்ல என்பதை புரிந்து கொள் ! மனிதனாக இருக்கும் வரை உன் அகங்காரம் மனதை விட்டு அகலாது. எப்போதும் உன்னை கடவுளின் பக்கம் செலுத்து !ஆணவம் தான் உன் அழிவுக்கு காரணம். பாவம் தெரிந்தவனுக்கு புண்ணியமும் தெரியும். வெளிச்சம் இருந்தால் இருளும் உண்டு. நீ இருள் பக்கம் போகாதே. அறியாமையை நீ சொந்தமாக்கி கொள்கிறாய். நீ அறிவை தேடவில்லை. எதுவும் இங்கு உன் பொருள் அல்ல !பொறாமை, சூது, வஞ்சம், காமம், ஆசை, இந்த அற்ப எண்ணங்கள் உன்னில் முதலில் வரவேற்கிறாய். உன்னில் நிலை பெற துடிக்கிறாய். ஏன் ? எதற்கு என்று தெரியாததால் உன்னை நீ உணராததால் உணர்வற்று போய்விட்டாய். எல்லாவற்றுக்கும் போராடுகிறாய். எல்லா கெட்ட குணங்களையும் உனக்குள் வைத்துக் கொண்டு வாழ் நாளெல்லாம் அதை அழிக்கப் போராடுகிறாய் ! இயல்பாய் இரு ! அன்பு என்று எதையும் விர்கசிக்காதே. அன்பு உன் பிறவி ! அன்பு சத்தியம் ! அது மேலிருந்து வந்தது. அன்பை மறந்து யுக சாக்கடையில் உள்ள வஸ்துக்களை உடம்பில் செலுத்தியதால் வாழ் நாளெல்லாம் போராடுகிறாய். யுகத்தில் தான் போட்டி, பொறாமை, மேலே உள்ள உலகம் வசந்த உலகம். அங்கே அன்பை தவிர போட்டி, பொறாமை கிடையாது !துன்பத்தை நீயே படைத்தாய். அதிலே ஊறி சிக்கி தவிக்கிறாய். எல்லாம் உனக்குள் இருப்பதை மறந்து வெளியில் தேடுகிறாய். உன் இறப்பை அழகாக, ஆனந்தமாக்கி கொள். அதற்கு அன்பு காட்டு ! பறவை, மிருகங்கள் அன்பாய், ஆனந்தமாய் வாழ்கின்றன. அவைகள் அழுவதில்லை. நீ தான் அழுது கொண்டிருக்கின்றாய். அவைகள் வாழ்வை எதிர் கொண்டு வாழக் கற்றுக் கொள்கிறன. நீ தான் வாழ முடியவில்லை என்று சாகத் துடிக்கின்றாய். பிறப்பை, இறப்பை மட்டும் தான் கடவுள் நிர்ணயிக்கின்றான்.உன்னில் மகிழ்ச்சியை தேடாதே !அமைதியை தேடு, அன்பை தேடு. அதுவே ஆனந்தம் தரும். உண்மை அன்பிருந்தால் பிராத்தனை, வழிபாடுகள் தேவையில்லை. ஆற்றின் கரை நிரந்தரம் அதில் ஓடும் தண்ணீர் நிரந்தரமல்ல ! தண்ணீர் போல தான் உன் வாழ்வும் !என் தந்தை பிரபஞ்ச நாயகன் சொல்வார்கள். மனிதனுக்கு தொண்டு செய். அன்பு காட்டு. நீ ஆனந்தமாவாய் என்று. வேறு எந்த பிடிப்பனையும் ஆக்ஞம் தான் தரும் என்று சொல்வார்கள். உனக்குள் நிறைவை தேடு ! அடுத்தவர்களை பற்றி யோசனை செய்யாதே ! யாரும், யாரையும் நிறைவு செய்ய முடியாது இங்கு, கடவுளை தவிர !நான் ஆனந்தம் ! அன்பின் இருப்பிடம் ! மாசற்ற அன்பின் நீரூற்று. என் நாமத்தை பருகி பார். உனக்கு அன்பு வரும். ஆனந்த நிலைக்கு செல்வாய். என்னுள் வந்து இருக்க ஆசைப்படு. பூமியில் மீண்டும் பிறவி பிறவா நிலை அடைவாய்.இந்த இநன்யாவின் அன்பு இந்த யுக உலகில் அன்பால் உனை ஆளவைக்கும் ! ஆயிரம் வருடம் உனை வாழ வைக்கும் ! குறுகலான பாதையில் சிக்கி தவிக்கும் வேதாளம் போல மனதை சுருக்கி வைத்து துயரப்படுகிறாய். கடவுள் இல்லை என்று சொல்வது உன் மனதின் உண்மையான உணர்ச்சி இல்லை. உன்னை நீயே ஏமாற்றிக் கொண்டிருக்கின்றாய். அன்பில் கரைந்திடு ! ஆணவம் மறையும் !இந்த இநன்யா அன்பானவன் ! உண்மையான அன்பு எதையும் எதிர்பார்க்காது. அது தன்னையே கொடுக்கும் !அன்பு உயர்ந்தது ! உன் அன்பு தூய்மையானது என்றால் என்னிடம் உனை கொண்டு வந்து சேர்க்கும் சத்யமாக !அன்பின் உச்சம் நான் !நான் இநன்யா !

No comments:

Post a Comment