241 துண்ட மதி பார்த்தவன் உண்ட மதி மறந்தான் ! ராக்கதிரில் நாயகன் நான் இருப்பதை ஏன் மறந்தாய் ? ஏனடா ? ஏதுரைப்பேன் நானடா?
மரணம் மலர்ச்சி தான் !
நான் மரணமானவன் ! நான் பிறப்பற்றவன் ! எப்போதும் உன் நெஞ்சில் இருப்புற்றவன் !
நான் இனி பிறப்பதுமில்லை ! இறப்பதுமில்லை ! காலச் சக்கரம் என் சத்தியத்தின் வலக்கரத்திலே ! மூன்றாம் துண்டமதியில் மவ்வம் கொண்டு திரிகின்றேன். முத்தொழிலின் சக்கரவத்தியின் முக எழிலில் வாழ்கின்றேன். எனக்கு என்றும் மரணமில்லை !
என் ஆண்மா விசாலமானது. பிரபஞ்சத்தின் எல்லை வரை பெரியது. உனக்கு பலம் தரும் பவ்யமாக ! ஆனந்தம் தரும் ! அமிழ்தம் ஊட்டி ஆண்மையை ஆளுமை செய்யும். என் பேராத்மா உன்னை பெரு மகிழ்ச்சி அடைய வைக்கும் ! என் நாமம், உனக்கு மரணத்தை வெல்லும் சக்தியை தரும் ! மீண்டும் பிறவியில்லா வாழ்வை தரும் !
இருப்பவன் யாரும் பிறக்க நினைக்கமாட்டான். ஆனால் அவன் கர்மா இந்த யுக சிறைச்சாலைக்கு தள்ளுகிறது. அறியா புரியா வாழ்கின்றான். ஆணந்தம் தெரியா திகைக்கின்றான். நான் எப்போதும் ஆணந்த நிலையிலே இருக்கின்றேன். இன்பம், துன்பம் எனக்கில்லை. என் நாமம் நம்பிக்கை கொண்டு சொல் ! இன்பமாக வாழ வழிகாட்டும். என் நாமம் சொல்ல சொல்ல பூமியில் உனக்கொரு மரணம் தரும். மரணத்தின் மலர்ச்சியாக உன்னை அறிவாய் ! ஆணந்தமாக மேல் லோகம் வருவாய் !
என் சத்திய லோகத்தில் உன்னை என் வலபக்கம் வைத்து அழகு பார்ப்பேன், ஆணந்த கூச்சலோடு ! ஆத்ம பசியை போக்க என் நாமம் சொல் ! உன் உயிர் பசியை நான் தீர்ப்பேன். ராக்கதிரில் நாளெல்லாம் சுரக்கும் அமிழ்த சாயல் உண்டு. அந்த அமிழ்தம் உனக்கு கிடைக்க வைப்பேன் !
உன் உயிர் ஆணந்தமாக இருக்க தொண்டு செய் ! தர்மம் செய் ! நான் உனக்கு எப்போதும் உதவியாக இருப்பேன் ! அகண்டமாய் விரிந்த இந்த ஆளுமை உள்ளவனை அறிவாய் ! அறிந்தால் நீ இறுமாந்து இருப்பாய் ! உன்னை படைத்தவனாலே உன் மூளையை சரி செய்ய முடியும். படைத்தவனிடம் சரணகதி அடை ! படைத்தவன் தான் உன்னை, உன் உயிரை சரி செய்ய முடியும். அவனிடம் ஒப்படைத்துவிடு.
படைத்தவன் என் நெஞ்சில் தான் ! எல்லாம் சரியாகி இமைப்பொழுதில் மாற வைப்பேன், காலங்களை வரையறத்தவன் மரத்திற்கும் மரணம் வைத்தான். பெருங்காற்றுக்கும், புயலுக்கும் இயற்கை சீற்றங்களை எதிர் கொண்டு உனக்கு நிழல் தருகிறது. கனி தருகிறது. இலை உதிர்ந்து வசந்த காலத்தில் வசந்தமாய் விரிகிறது. ஏன் உணரவில்லை நீ ?
படைத்தவன் பக்குவமாக பாசமாக உனக்கு தந்தான். நீ அனுபவிக்க தெறியாமல் ஆழந்த துயரத்தில் வாழ்கின்றாய். இங்கே மூலதனம் தேவை இல்லை. உன் மூளையை படைத்த கடவுளை துணை கொள் !
இந்த காலத்தின் நாயகன் இநன்யா உனக்கு துணை இருந்து வேண்டிய வரம் தருவேன். உயர்வதற்கு முதலில் தன்னம்பிக்கை தேவை. பின் வீரம், தைரியம் இருந்தால் எல்லா செல்வமும் உன் காலடியிலே ! உனக்கு எல்லாம் தெரியும் என்ற மமதை உண்டு ! கல்வி செருக்கு உண்டு. அதனாலே உன்னால் கர்வ பட முடியவில்லை. நீ கர்வபட முதலில் பணிவு கொள் ! பாசம் கொள் ! அன்பு கொள் ! பக்குவம் நான் தருவேன்.
பிறப்பவன் யாவரும் மரணத்தை பற்றி யோசிக்கிறான், மரணம் மலர்ச்சி என்பதை அறியாமல் !
இங்கே குருவை மரணம் என்று வேதம் சொல்கிறது. ஆதலால் நல் குருவைத் தேடு ! உனக்கு மரணமில்லா பெரு வாழ்வை சொல்லித் தருவார். குரு இல்லா வித்தை பாழ் !
மரணத்தை ஜெயிப்பது எளிது தான். என்னுள் கரைந்திடு. உனக்கு என்றுமே மரணமில்லை. பிறப்பது இறப்பதற்கு தான். இருப்பதற்கு அல்ல. பின் ஏன் பயப்படுகின்றாய் ? துணிந்து உன் கடமையை செய். உன் இலக்கை அடைய போராடு. நீ வந்த நோக்கம் நிறைவேற பாடுபடு. உனக்கென்று ஒரு கடமை இருக்கின்றது இங்கே !
கடியறை கூடி கல்லறையில் மூடினாய். உன் அறை மறந்தாய். என் அறை மறந்தாய். எங்கே போகிறாய் ? ஆர்த்தியத்தில் உமியல் தடவி ஐவனத்தில் ஆகமலசார் தடவி புழுபழத்தில் அள்ளி உருக்கி சாப்பிடடா ! ஊழை சமமாகி உன் உடல் உயிர் பெறும். கிரந்தத்தை சீர்பட வைக்கும்.
சீராளன் என்னை நோக்கடா ! உன்னை சீராட்டி பாராட்டி உணர வைப்பேனடா ! உணர்ந்தால் இங்கே நோயில்லா பெரு வாழ்வு தான் ! உன் உயிர்க்கு மரணமில்லா மலர்ந்த சாயல் தான் !
மரணத்தை வென்றவன் நான் !
நான் இநன்யா !