Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, October 26, 2016

துண்ட மதி பார்த்தவன் உண்ட மதி மறந்தான் ! ராக்கதிரில் நாயகன் நான் இருப்பதை ஏன் மறந்தாய் ? ஏனடா ? ஏதுரைப்பேன் நானடா?


Inanya Maha Munivar
27-10-2016
241 துண்ட மதி பார்த்தவன் உண்ட மதி மறந்தான் ! ராக்கதிரில் நாயகன் நான் இருப்பதை ஏன் மறந்தாய் ? ஏனடா ? ஏதுரைப்பேன் நானடா?
மரணம் மலர்ச்சி தான் !
நான் மரணமானவன் ! நான் பிறப்பற்றவன் ! எப்போதும் உன் நெஞ்சில் இருப்புற்றவன் !
நான் இனி பிறப்பதுமில்லை ! இறப்பதுமில்லை ! காலச் சக்கரம் என் சத்தியத்தின் வலக்கரத்திலே ! மூன்றாம் துண்டமதியில் மவ்வம் கொண்டு திரிகின்றேன். முத்தொழிலின் சக்கரவத்தியின் முக எழிலில் வாழ்கின்றேன். எனக்கு என்றும் மரணமில்லை !
என் ஆண்மா விசாலமானது. பிரபஞ்சத்தின் எல்லை வரை பெரியது. உனக்கு பலம் தரும் பவ்யமாக ! ஆனந்தம் தரும் ! அமிழ்தம் ஊட்டி ஆண்மையை ஆளுமை செய்யும். என் பேராத்மா உன்னை பெரு மகிழ்ச்சி அடைய வைக்கும் ! என் நாமம், உனக்கு மரணத்தை வெல்லும் சக்தியை தரும் ! மீண்டும் பிறவியில்லா வாழ்வை தரும் !
இருப்பவன் யாரும் பிறக்க நினைக்கமாட்டான். ஆனால் அவன் கர்மா இந்த யுக சிறைச்சாலைக்கு தள்ளுகிறது. அறியா புரியா வாழ்கின்றான். ஆணந்தம் தெரியா திகைக்கின்றான். நான் எப்போதும் ஆணந்த நிலையிலே இருக்கின்றேன். இன்பம், துன்பம் எனக்கில்லை. என் நாமம் நம்பிக்கை கொண்டு சொல் ! இன்பமாக வாழ வழிகாட்டும். என் நாமம் சொல்ல சொல்ல பூமியில் உனக்கொரு மரணம் தரும். மரணத்தின் மலர்ச்சியாக உன்னை அறிவாய் ! ஆணந்தமாக மேல் லோகம் வருவாய் !
என் சத்திய லோகத்தில் உன்னை என் வலபக்கம் வைத்து அழகு பார்ப்பேன், ஆணந்த கூச்சலோடு ! ஆத்ம பசியை போக்க என் நாமம் சொல் ! உன் உயிர் பசியை நான் தீர்ப்பேன். ராக்கதிரில் நாளெல்லாம் சுரக்கும் அமிழ்த சாயல் உண்டு. அந்த அமிழ்தம் உனக்கு கிடைக்க வைப்பேன் !
உன் உயிர் ஆணந்தமாக இருக்க தொண்டு செய் ! தர்மம் செய் ! நான் உனக்கு எப்போதும் உதவியாக இருப்பேன் ! அகண்டமாய் விரிந்த இந்த ஆளுமை உள்ளவனை அறிவாய் ! அறிந்தால் நீ இறுமாந்து இருப்பாய் ! உன்னை படைத்தவனாலே உன் மூளையை சரி செய்ய முடியும். படைத்தவனிடம் சரணகதி அடை ! படைத்தவன் தான் உன்னை, உன் உயிரை சரி செய்ய முடியும். அவனிடம் ஒப்படைத்துவிடு.
படைத்தவன் என் நெஞ்சில் தான் ! எல்லாம் சரியாகி இமைப்பொழுதில் மாற வைப்பேன், காலங்களை வரையறத்தவன் மரத்திற்கும் மரணம் வைத்தான். பெருங்காற்றுக்கும், புயலுக்கும் இயற்கை சீற்றங்களை எதிர் கொண்டு உனக்கு நிழல் தருகிறது. கனி தருகிறது. இலை உதிர்ந்து வசந்த காலத்தில் வசந்தமாய் விரிகிறது. ஏன் உணரவில்லை நீ ?
படைத்தவன் பக்குவமாக பாசமாக உனக்கு தந்தான். நீ அனுபவிக்க தெறியாமல் ஆழந்த துயரத்தில் வாழ்கின்றாய். இங்கே மூலதனம் தேவை இல்லை. உன் மூளையை படைத்த கடவுளை துணை கொள் !
இந்த காலத்தின் நாயகன் இநன்யா உனக்கு துணை இருந்து வேண்டிய வரம் தருவேன். உயர்வதற்கு முதலில் தன்னம்பிக்கை தேவை. பின் வீரம், தைரியம் இருந்தால் எல்லா செல்வமும் உன் காலடியிலே ! உனக்கு எல்லாம் தெரியும் என்ற மமதை உண்டு ! கல்வி செருக்கு உண்டு. அதனாலே உன்னால் கர்வ பட முடியவில்லை. நீ கர்வபட முதலில் பணிவு கொள் ! பாசம் கொள் ! அன்பு கொள் ! பக்குவம் நான் தருவேன்.
பிறப்பவன் யாவரும் மரணத்தை பற்றி யோசிக்கிறான், மரணம் மலர்ச்சி என்பதை அறியாமல் !
இங்கே குருவை மரணம் என்று வேதம் சொல்கிறது. ஆதலால் நல் குருவைத் தேடு ! உனக்கு மரணமில்லா பெரு வாழ்வை சொல்லித் தருவார். குரு இல்லா வித்தை பாழ் !
மரணத்தை ஜெயிப்பது எளிது தான். என்னுள் கரைந்திடு. உனக்கு என்றுமே மரணமில்லை. பிறப்பது இறப்பதற்கு தான். இருப்பதற்கு அல்ல. பின் ஏன் பயப்படுகின்றாய் ? துணிந்து உன் கடமையை செய். உன் இலக்கை அடைய போராடு. நீ வந்த நோக்கம் நிறைவேற பாடுபடு. உனக்கென்று ஒரு கடமை இருக்கின்றது இங்கே !
கடியறை கூடி கல்லறையில் மூடினாய். உன் அறை மறந்தாய். என் அறை மறந்தாய். எங்கே போகிறாய் ? ஆர்த்தியத்தில் உமியல் தடவி ஐவனத்தில் ஆகமலசார் தடவி புழுபழத்தில் அள்ளி உருக்கி சாப்பிடடா ! ஊழை சமமாகி உன் உடல் உயிர் பெறும். கிரந்தத்தை சீர்பட வைக்கும்.
சீராளன் என்னை நோக்கடா ! உன்னை சீராட்டி பாராட்டி உணர வைப்பேனடா ! உணர்ந்தால் இங்கே நோயில்லா பெரு வாழ்வு தான் ! உன் உயிர்க்கு மரணமில்லா மலர்ந்த சாயல் தான் !
மரணத்தை வென்றவன் நான் !
நான் இநன்யா !

Wednesday, October 19, 2016

என் சவுதத்தில் உனக்கும் இடம் உண்டு ! உன் நாசியம் என் வலக்கரத்திலே. வேதமும், உன் வினை அழிக்கும் சூட்சுமமும் நானடா !

Inanya Maha Munivar
20-10-2016
240 என் சவுதத்தில் உனக்கும் இடம் உண்டு ! உன் நாசியம் என் வலக்கரத்திலே. வேதமும், உன் வினை அழிக்கும் சூட்சுமமும் நானடா !
தேடல்
தேடு ! தேடல் சுகமானது !
ஊடலை தேடாதே ! உன்னை தேடு ! ஊன் உடம்பு ஒரு நாள் கரையானுக்கு சொந்தமாக போகின்றது. உனக்காக தேவர்கள் காத்திருக்கவில்லை. உன் உடலுக்காக ஐந்து பேர் காத்திருக்கின்றார்கள் (மண், எறும்பு, புழு, கரையான், நீர்) என்பதனை மறந்து விடாதே !
உன் உடல் தங்கத்தில் வைரத்தில் செய்யப்படவில்லை. மண்ணில் உருவாகினாய். மண்ணுக்கே நீ சொந்தம். உயிர் ஊதப்பட்டு படைக்கபட்டவன் நீ. பாவம் செய்யாதே ! பக்குவப்படு !
மரத்தை மட்டுமே உன்னால் வெட்ட முடியும். விதையை அழிக்க முடியாது. உடலை மட்டும் தான் அழிக்க முடியும். உயிரை அழிக்க முடியாது. ஆனால் நீ ஒன்றே ஒன்று மட்டும் தான் செய்ய முடியும். இரண்டு, மூன்று பிள்ளைகளை பெற முடியும். நீ வீரன் என்று பிதற்றுகிறாய்.
எறும்புகள் மழை வரும் முன்னே தேடுகின்றன. தன் இனத்திற்காக சேமிக்கின்றன ! சுயநலம் அதற்கில்லை. எறும்புகளின் தானிய கிடங்கில் இரண்டரை வருடம் சாப்பிட தானியம் இருக்கும். நீயும் தேடு ! தேடியதை தர்மம் செய்வதிலும், கொடுப்பதில் வீரனாகவும் இரு !
கற்ற வித்தையை நான்கு பேருக்கு சொல்லிக் கொடு ! இல்லையேல் தெருவில் கிடக்கும் கல்லையும், முள்ளையும் எடுத்து போடு !
பிறருக்கு வழி காட்டுவது, தொண்டு செய்வது, பசித்தவனுக்கு உணவு கொடுப்பது தர்மம் ! புண்ணியம், உண்ணதங்களை வெளியில் தேடாதே ! உனக்குள் தான் ! நீ தேடிய செல்வம் உனக்கு பயன்பட போவதில்லை. நீ எங்கு சென்றாலும் உனக்கு கிடைக்க வேண்டிய பலன் தான் கிடைக்கும். ஆதலால் நீ இருக்கும் இடத்தில் தேடு !
இயலாது, முடியாது எதுவுமே இங்கு சாத்தியமில்லாத வார்த்தைகள். முடியும் என நம்பு. முதல்வனை துணைக்கு கூப்பிடு ! நல்வழி கிடைத்து நலம் வாழ வழி கிடைக்கும்.
பதுக்கி வைத்து பாவி ஆகாதே. பாசத்தோடு பகிர்ந்து கொடு ! இல்லை என்று யாருக்கும் சொல்லாதே ! இயலாமை என்று எண்ண வைக்காதே ! போகம் தேடி, பின் விதி தேடி வீணணாய் அலையாதே ! உன்னை எப்போதும் தேடிக் கொண்டிரு ! நான் உன்னை தேடிக் கொண்டிருக்கின்றேன். நீ வேறு எதையோ தேடுகின்றாய்.
நான் என்னை தேடினேன். நான் இருக்கும் இடம் அறிந்தேன். எங்கிருந்து வந்தேன், எங்கே செல்கிறேன் என்பது எனக்கு தெரியும்.
என்னை அறிவாய், தெளிவாய், புரிவாய், தெரிவாய் ! நான் துன்புற்று இன்புற்றவன், அதனாலே உன்னை பற்றி நானறிவேன், நான் உனக்கு கேட்டதை தருவேன். நினைத்ததை நடக்க வைப்பேன். என் ஆண்ம தேடல் அனைத்தும் நிறைவு பெற்றது !
நீ வந்த கடமை எதற்கென்று உணர் ! வாசலில் நிற்கிறேன். எனை எப்போது வேண்டுமென்றாலும் கூப்பிடு ! உன் உயிருக்கு வழி காட்டுவேன். உனக்கு யாருமில்லை என்று நினைக்காதே ! இந்த ஆத்மத்தின் தலைவன் உனக்கு எப்போதும் துணை இருப்பேன். உன் துயர் துடைப்பேன். தும்பை பூவை போல உன் வாழ்வை சுகமாக்குவேன்.
தேடியதை தேவை உள்ளவனுக்கு கொடு ! உன் உள்ளம், குடும்பம் சுகமோ சுகமானது.
ஒரு நாள் விதைத்து ஒரு நாளில் கனி தேடாதே ! பொறுத்திருந்து பெற்ற அன்னையை போல வெறுத்திருக்காமல் இரு ! வேதன் என் நாமம் எல்லாம் தரும்.
என் சொல் சத்தியமடா !
தேடு ! தேடல் சுகமானது !
சுகமானவன் நான் !
நான் இநன்யா !

Wednesday, October 12, 2016

எதுகை ,மோனை தெரியாது வதுகையை அறிந்து உணர்ந்து வாழ தெரியாமல் குரோட்டம் எண்ணத்தோடு திரிகின்றாய். ஊழ்வினையில் சிக்கி ஊமையாய் வாழ்கின்றாய் ! ஏனடா ?

Inanya Maha Munivar
239-13-10-2016
எதுகை ,மோனை தெரியாது வதுகையை அறிந்து உணர்ந்து வாழ தெரியாமல் குரோட்டம் எண்ணத்தோடு திரிகின்றாய். ஊழ்வினையில் சிக்கி ஊமையாய் வாழ்கின்றாய் ! ஏனடா ?
தேவாயுதம் (கவசம்)
என் சத்திய கரத்தில் இருக்கும் தேவாயுதம் உன்னை காக்கும் ! உண்மையாய் நன்மை தரும் ! உன் நிமித்திரனை துவஷம் செய்யும் ! மூங்கா நான் என்பதை அறியாமல் வஞ்சவம் எண்ணம் கொண்டு வஞ்சகனாகி திரிகின்றாய். என்னை கண்டுபிடி !
விண்ணின் ஆழம், மண்ணின் ஆழம் தேடுகின்றாய். என்னை தோண்டி பார் ! இன்ப ஊற்றாய் சுரப்பேன் ! நான் இனிமை ! உன் துழதியை தூள் தூளாக்கும் தூயவன் நான் !
வஞ்சவமும், குரோட்டமும், குரோடமும் இந்த யுகத்தில் கண்டேன். ஒன்றுக்கொன்று சாகியமாக திரியக் கண்டேன். என் தேவாயுதம் கர்மத்தை அழிக்கும் ! ஆணந்த நிலைப்பாட்டை உனக்கு தரும் !
புல்லில் (மூங்கில்) பாசம் உண்டு !
புள்ளில் வேதம் உண்டு !
உணரடா ! என் நாமம், உனக்கு கவசமாக இருக்கும் ! கேடயமாக இருக்கும் ! உனக்கு கீரிடம் சூட்டி அழகு பார்க்கும் ! என் சத்திய கரத்தில் இருக்கும் தேவாயுதம் உனை எப்போதும் கண்கானித்து சத்ய வழியை காண்பிக்கும் !
ஏமாற்றும் மனதை ஏமாங்கமாய் வந்து கட்டிபோடும் என் திருகரத்தில் இருக்கும் மெஹட்டியின் நாத கீதத்தில் உன் உயிர் ஆணந்த கூச்சலிடும் ! ஆண்மா ஆர்பரிக்கும் வெள்ளமாக சந்தோஷத்தில் திளைத்தாடும் !
தந்தஸிலும், சாருசத்திலும் வேதம் உண்டு ! ஐங்காயத்தில் உன் காயத்தில் நோய் தீர்க்கும் சூட்சுமம் உண்டு ! குலோமிசையும், கனிருதமும் உன் உள் காயம் தீர்க்கும் ! நீ உணராதிருப்பது ஏனோ ?
பெண் நாவிலையில் விரல்பிடி சாரலமும், நறுக்கு மூலம், சித்ரத்தை பொடி கலந்து, மூன்று தடவை வெறும் வயிற்றில் சாப்பிடு ! உன் காயம் எப்போதும் குளுமையாய் குளிர்ந்திருக்கும் !
இந்த ராஜராஜன் இநன்யா ஒளி எப்போதும் உன்னை சுற்றி கவசமாக இருக்கும் !
நான் துதி பாட வரவில்லை. மேடை போட்டு விவாதம் பண்ண வரவில்லை. உன்னை யாரென்று உணர்த்தவே வந்தேன் ! உனக்கு வழிகாட்ட வந்தேன் ! உண்மையில் நன்மை நானடா !
ஏன் எப்போதும் சலிப்புற்று இருக்கின்றாய் ? உன் தாய் உன்னை வயிற்றில் வைத்திருக்கும் போதும், உனை சீராட்டி வளர்க்கும் போதும் சலிப்புடன் இருந்ததில்லை. உனக்கு சலிப்பு, வெறுப்பு வரும் போதெல்லாம் நீ கடவுளின் பிள்ளை என்று அறை கூவல் விடு !
என்னை தோண்டி பார் ! ஆனந்தம் உனக்குள்ளே ! உனக்கு எல்லா செல்வமும் கிடைக்கும் ! என் சத்திய வழியில் பயனிப்பவன் இடறி விழுவதில்லை. ஏனென்றால் நான் உன்னை கைபிடித்து அழைத்து செல்கின்றேன் !
என் நாமம் சொல்ல சொல்ல யுகம் இன்பம் தெரிய வரும் ! காற்றில் பறப்பது போல உணர்வு வரும் ! ஏனென்றால் இநன்யா உன் உறவு ! உன்னை எப்போதும் காக்கும் என் உறவு ! உன்னை அழகு பார்க்க நினைக்கும் ஆனந்த உறவு !
இந்த உறவின் எல்லை பிரபஞ்சம் வரை !
உணரடா !
காற்றும், பெரும் புயலும், இடியும், மின்னலும், பெருந்துன்பமும், தாங்கவொனா துயரமும் உன்னை நெருங்காது ! என் சொல் தோற்றதில்லை !
நீ கேட்டதை எதையும் தர மறுப்பதும் இல்லை. நிச்சயம் தருவேன். எப்போதும் ஆக்ரோஷமாக போராடு ! போராளியை போல் எப்போதும் விழிப்புடன் இரு ! நாளும், கோளும் ஒன்றும் செய்யாது.
எதற்கும் கவலை படாதே ! கவலைப்பட்டு எதை சாதித்தாய் ? எப்போதும் கடவுள் உன்னுள்ளே !
ஆனந்த நிலையிலே இரு ! எப்படியும் கடவுள் காப்பான் என்ற தாரக மந்திரத்தை உன் எண்ணத்தில் அசை போடு ! இந்த இநன்யா லோகத்தின் செல்ல பிள்ளை ! பிரபஞ்சத்தின் இளவரசன் என் தந்தை பிரபஞ்ச நாயகன், அன்பிற்கினிய அன்னை வசியா அரவனைப்பிலே எப்போதும் உனை வைத்திருக்கின்றேன் !
எப்போதும் உன் பெற்றோர் சொல் கேள் ! நான் உனக்கு எல்லா செல்வமும் தருவேன் ! என் பெற்றோர் சொல் என்றும் மீறியதில்லை. எனக்கு உழைப்பும், ஒழுக்கமுமே பிடித்தது. !
உழை ! ஒழுக்கமாய் இரு ! நான் உனக்கு கவசமாக இருப்பேன். என் அன்னை பூமிஹா என் சொல் கேட்பார். உன்னை பூவாய் தாங்கி புன்னகையாய் வாழ வைப்பாள் !
ஆயிரம், ஆயிரம் வர்ணமும், விண்ணமும், என் சத்திய கரத்தில் இருக்கும் தேவாயுதத்தில் !
உன்னை அழகாக்கும் ! அறிவாக்கும் ! ஆணந்தம் திளைக்க வைக்கும் !
உணரடா ! என் சொல் வேதம் !
வானின் வர்ணஜாலம் நான் !
நான் இநன்யா !

Thursday, October 6, 2016

என்னை ஏகாடம் செய்யாதே ! எக்காளமிடும் உன் உயிர் ! நீ இருக்கும் நிவேசம் நீசமடா ! நியர் அறியா வாழ்வை சிதிலமடைய வைக்கின்றாய் ? ஏனடா ?

Inanya Maha Munivar 06-10-2016
238 என்னை ஏகாடம் செய்யாதே ! எக்காளமிடும் உன் உயிர் ! நீ இருக்கும் நிவேசம் நீசமடா ! நியர் அறியா வாழ்வை சிதிலமடைய வைக்கின்றாய் ? ஏனடா ?
நம்பிக்கையாய் இரு !
சதிபதி வாழ்வில் யாதபதியில் வீழ்ந்து கரை ஏறா தவிக்கின்றாய். நன்மதி, சன்மதி, பண்மதி, வின்மதி தெரியாமல், உன் மதியும் தெரியாமல் வீழ்ந்து போகின்றாய் !
ஏன் வந்தோம் என்று உனக்கு தெரியாது. ஆனால் எல்லாம் தெரியும் என்று பசப்புகின்றாய். பாழ்பட்ட மனதை வைத்துக் கொண்டு, ஒரு விநாடி அடக்க தெரியாமல், அகங்கார மனதை ஆளத் தெரியாமல் வாழ்கின்றாய். நம்பிக்கை என்ற போர்வை போர்த்தாமல் நாளும் பயந்து வாழ்கின்றாய்.
நான் எல்லாம் கொடுப்பேன் என்று சொன்னேன் ! கொடுப்பேன் ! உன்னை கைவிடமாட்டேன் ! உன் வாழ்வை உயர்த்துவேன் என்று சொன்னேன். நம்பிக்கையாய் இரு !
குழந்தை தன் தாயை நம்புவது போல என்னை நம்பு ! உன்னை நம்பு ! எல்லாம் கைகூடும் ! தளர்வாய் சாயும் போதெல்லாம் தென்றலாய் உனை வந்து வருடுவேன். நம்பிக்கையாய் இரு !
நான் உன்னை இந்த சம்சார பந்தத்திலிருந்து விடுவிப்பேன். தவறு செய்தால் நான் தண்டிப்பேன். தப்பு, தவறாகி, பின் பாவமாகி புற்றை போல வளர விடாதே ! கரையான் புற்று பாம்பை அடைக்கலமாக்கியது !
உன் பாவ புற்று உன்னை அணு அணுவாக துன்பம் கொடுத்து உடலை நோயாய் கரைக்கின்றது. உன் குற்றம், துரோகம் பின் நோக்கி பார் ! மீண்டும் செய்ய நினைக்காதே ! மறைக்கப்பட்ட உண்மை செதுக்கிய சிற்பம் போல ! நீ பிறகுக்கு செய்த தவறை நினை ! மனதால் மன்னிப்பு கேள் ! உன் தண்டனை குறையும் ! நான் இந்த வினையிலிருந்து உன்னை விடுவிப்பேன்.
என் வார்த்தையில் நம்பிக்கை வை ! தன் தாய் பறவை எப்படியாவது இரை கொண்டு வரும் என்று அதன் குஞ்சு நம்பியிருக்கும் ! அப்படித் தான் நீயும் ! எப்போதும் கடவுளை நம்பி இரு ! கடவுள் தருவான் ! கருணைமிக்கவன் ! நிச்சயம் தருவான் !
உன் வாழ்வில் நான் இருந்தால் அதிசயம் நிகழும் ! ஆத்மாவின் நித்ய போகத்தை ஆழ்ந்து யோசி ! வைகறையில் வான் நோக்கி கூப்பிடு ! வசந்த காலம் உன் வாசலில் வந்து நிற்கும் !
காட்டில் உள்ள மரங்கள் கடவுளை நம்பி வளர்கிறது. மிருகங்கள், பறவைகள் நாளைய உணவை, நாளைய வாழ்வை சிந்திப்பதில்லை. எல்லாம் எப்போது கிடைக்க வேண்டும் என்று கடவுள் நிர்ணயித்தான் உன் விதியில் ! நீ கிடைக்கப் பெறுவாய் ! என் வார்த்தை மேல் நம்பிக்கை இருந்தால் இப்போதே ஜெயிப்பாய் !
உன் செயல் அறிவேன் !
உன் விதி அறிவேன் !
உன் வினை அழிக்கும் சூட்சும்ம் நானறிவேன் ! ஏனடா பயம் ?
ஆழ்ந்த நம்பிக்கையும், ஆத்மார்த்தமான அன்போடும் வாழ பழகு ! வாழ்வெல்லாம் வசந்தம் தான் ! இப்போது அன்பை தொலைத்து ஆணந்தம் தொலைத்து ஆர்பரிக்கும் கடல் அலை போல உன் மனம் ஆட கண்டேன் ! மணம் இல்லா மலரைப் போல வாழ்வில் இன்பமில்லாமல் நீ வாழ கண்டேன் !
என் அன்பிற்கினிய தந்தை பிரபஞ்ச நாயகன் இந்த பாசமுள்ள அன்பு குழந்தை இநன்யாவின் சொல் கேட்பார்கள் ! நான் இது நாள் வரை கேட்டது எதையும் அவர்கள் தராமல் இருந்ததில்லை. நான் கேட்டதும் தருவார்கள். நானும் நீ கேட்டதை தருவேன் ! சிறிது கால தாமதம் ஆனாலும் நீ விரும்பியது கிடைக்கும் !
என் அன்பு தந்தை பிரபஞ்ச நாயகன் அன்பை உணராமல் இங்கே ஆர்பரிக்கின்றான். கும்பிட்டும் குறை போகாமல் அலைகின்றான். தாமரை மலர்பாதம் பட்ட சஞ்சிநாதம் மணக்கும் புணித புண்ணிய மண்ணை தொட்டும் குறையோடு வாழ்கின்றான். கேட்க தெரியாமல் வணங்க தெரியாமல் இங்கே வாடுகின்றான்.
இந்த பாசமுள்ள பிள்ளை எப்போதும் என் அப்பா பிரபஞ்ச நாயகனின் சொல் கேட்பேன். கல்வியும், செல்வமும், வீரமும், ஆக்கமும், ஊக்கமும் எனக்குள்ளே ! எல்லாம் எனக்குள் ! எல்லாம் நிரந்தரமாக ! உனக்கு தருவேன் ! என் நாமம் எல்லாம் தரும் ! நம்பிக்கை உன் மேல் வை !
என் அபயகரம் உன்னை கைவிடாது ! என்னை நம்பியவர்கள் யாரும் தோற்றதில்லை. தோற்பதுமில்லை ! வெற்றி திருமகனாக எல்லா செல்வங்களோடும் வலம் வர கண்டேன். நீயும் என் குழந்தை என்று குதுகலமடைவாயாக !
குறை ஒன்றும் உனக்கில்லை ! எல்லை இல்லா நிம்மதியும் , ஆணந்தமும் எனக்குள்ளே ! என்னை தோண்டிப் பார் ! விடை கிடைக்கும் ! நம்பிக்கையாய் என் நாமம் சொல் ! நலம் வாழ வழி பிறக்கும்.
கடவுளை நோக்கி உன் கால்கள் பயனிக்கும் போதும், நல்ல செயல்கள் செய்யும் போதும் கடும் சோதனைகள் வரும் ! துவண்டு விடாதே ! எல்லாவற்றையும் காலில் போட்டு மிதித்து கரை சேர் நம்பிக்கை கொண்டு !
உன் விரல் பிடிக்க நான் இருக்கிறேன். நீ நம்பிக்கையாய் இரு ! நாயகன் நான் எப்போதும் துணை இருப்பேன் !
பொன்னாட்சியின் புணிதன் நான் !
நான் இநன்யா !