இநன்யா ;;;
INANYA NAMOO NAMA ;;;
என் கண்கள் கோடி சூரியன்களுக்கு நிகரானவை ! தினமும் உன் செயல் அறிவேன். கடவுள் சத்தியமானவன் !
நற்குணங்கள்!!!!
69 இநன்யா நமோ நம.. !!
INANYA NAMOO NAMA ;;;
என் கண்கள் கோடி சூரியன்களுக்கு நிகரானவை ! தினமும் உன் செயல் அறிவேன். கடவுள் சத்தியமானவன் !
நற்குணங்கள்
படைத்தவனை வணங்காமல் பாழ்பட்டு நிற்கின்றாய் ! அழிப்பவனை வணங்கி ஆர்பரிக்கின்றாய் ! அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கும் உன் அறியாமையை என்ன சொல்வேன் ?
மல பாண்டத்தை சுமந்து மகேசன் என்று சொல்லித் திரிகின்றாய். ஈசன் அவதாரம் என்று புலம்புகின்றாய். இறை, மறை, பிறை, திரை தெரியாத உன்னிடம் ஏது சொல்ல ? இந்த நான்கு குணங்களும் உனக்குள்ளே வைத்தான் படைத்தவன் ! நீ வெளியே எதைத் தேடிக் கொண்டிருக்கின்றாய் ?
அறிவு, ஜடப் பொருளை பற்றி அறிந்து கொள்வதால், அதன் வளர்ச்சியை பற்றி புரிந்து கொள்வதினால், கடவுளைப் பற்றி அறிந்து கொள்வதாக அர்த்தமில்லை. இது ஆன்மீக வழியை உருவாக்காது. படைப்பின் சூட்சுமத்தை விரிவாக்கம் செய்வதினால் அறிவானவன் என்பது பொருளல்ல.
உன்னை உணர்வது தான் அறிவு !
கடவுளை பற்றி அறிந்து கொள்வது தான் அறிவு !
அறிவை எப்போதும் சுமந்து கொண்டிருக்க முடியாது. அது உன்னை பைத்தியமாக்கும். எப்போது அதை உபயோகிக்க வேண்டும் என்று உன் குரு மூலமாக அறிய முற்படு ! அறிவை கற்றுக் கொள் ! எது அறிவானது எது உயர்வானது என்று கற்றுக் கொள் !
மல பாண்ட உடலில் எப்போதும் ஆணவத்தை சுமக்கின்றாய். நீ உடலை வளர்க்கின்றாய் கரையானுக்காக !
ஊன் வளர்த்தாய். உடல் வளர்த்தாய். உன் உயிரை வளர்ப்பது எப்போது ? அறிவை வளர்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாய். உடலை வளர்க்க ஆசைப்படுகின்றாய். உனை வளர்க்க எப்போது ஆசை கொள்வாய் ? பொய்யான உடல் போகத்திற்கு ஆசைப்படுகின்றது !
நெல் மணிகளை தூவினால் முன்னூறு நாட்களில் மூன்று போகம் எடுக்கலாம் ! உன் போகம் பாவத்தை வளர்க்கின்றது. உன் மெய் உயிர் எனை தேடி கதறுகிறது. இடையில் நீ வாடி வதங்கி நிற்கிறாய். பூஜ்ஜியத்துக்குள் ராஜ்ஜியத்தை தேடுகிறாய்.
இந்த ராஜராஜன் இநன்யாவை அறிந்தால் நீ ராஜ்ஜியத்தை ஆள்வாய் ! பின் நான் என் தந்தை பிரபஞ்ச நாயகனை உனக்கு காண்பிப்பேன். உன் உயிர் இசைக்கும் கருவியை (மெஹட்டி) என் சத்திய கரத்தில் வைத்திருக்கின்றேன் ! உனை அறிய வைக்கும் ! ஆள வைக்கும் !
ஆணவத்தை அடக்கி உன்னை உணரவும் வைக்கும். உணர் !
என் சத்திய கரத்தில் இருக்கும் வேத நாதம் (மெஹட்டி) உனை தெளிந்து உணர வைக்கும். நீ பூமியில் இறந்த மரத்தினால் செய்யப்பட்ட இசைக் கருவியை உருவாக்கி இசைக்கின்றாய். நான் உயிருள்ள இசைக்கருவியை (மெஹட்டி) எப்போதும் இசைக்கின்றேன்.
மேலே நான் பிரம்மச்சாரியே ! ஆறு பேராத்மாவுக்கும் செல்ல பிள்ளையாக வலம் வருகிறேன் ! நான் சத்தியத்தின் பாதையை எப்போதும் மறப்பதில்லை. நான் தவறு செய்து தண்டனை அனுபவிக்க யுகம் வரவில்லை. நான் உன் விதி ! வினை அழிக்கும் சூட்சுமம் !
அரிதாரம் பூசி அவதாரம் என்று சொல்லவில்லை நான் !
நான் சுயம்பு ! நான் எனை வளர்ச்சிபடுத்தவும் இல்லை இங்கே !
நான் அகண்டமாய் விரிந்திருக்கின்றேன். என் விரிவு எல்லை இல்லாதது. நான் கடலின் எதிர்கரை பார்த்தவன். இருள் வலி (சூரியன்), வளர் வலி (சந்திரன்) என் கண்களில் !
என் அருட்பார்வை கோடி சூரியன்களுக்கு நிகரானது !
என் பார்வையில் என் தந்தை உண்டு !
நெற்கதிர்கள் முதிர்ந்த உடன் பாரம் தாங்காமல் பூமியில் சரியும், உனக்கு நன்மை செய்யவே ! ஆனால் நீ பாவ மூட்டையை சுமந்து பாரம் தாங்காமல் பூமியில் சரிகின்றாய் !
தாய், தந்தையை சுமக்க நினை ! வீதி வரை வந்து உனை வழி அனுப்பும் தாரத்தை சுமக்க நினை ! துன்பம் என்று இல்லறத்தில் யோசிக்காதே ! உனை புடம் போட வரும் சோதனை அது. கடவுளை உணரும் போது சோதனைகள் நிகழும். நிகழும் சூழ்நிலையை உற்று நோக்கினால் கடவுளை எளிதாக உணர்ந்துவிடலாம் !
எல்லாம் இங்கே ஒரு நொடி சூட்சுமம் தான் ! உன் பிறப்பு, இறப்பு, தெளிவு !
உணர்வதில் எச்சரிக்கை உணர்வாய் இருப்பதில் பறவைகளிடம் இருந்து கற்றுக் கொள் ! நீ எதுவும் கேட்காமல் துயில் கொள்கின்றாய் !
உன் துயிள் (சதை) என்ற மேலாடையை உணர்வோடு வை ! நானே வளர்ச்சி, முக்தி, முதல்வனாய் உன் முன்னால் நிற்கின்றேன் ! உனக்குள் இருக்கின்றேன் ! பிரபஞ்ச வீதியிலே நின்று உனை உற்று நோக்குகிறேன். ஆறு உயிர் சேர்ந்து ஓருயிராக வலம் வருகின்றேன் !
உருவாக்கும் உண்ணதம் நானடா !
உணர்ந்து பார் ! உன் உயிர் உவகை கொள்ளும். உண்மையாய் சொல்கிறேன் ! நன்மை எனக்குள் தான் !
தேவ குணம், மனித குணம், அசுர குணம், மிருக குணம் முதலிய இந்த நான்கு வகை குணங்களோடு தான் மனிதன் இருக்கின்றான்.
தேவ குணம் எப்போது மரணம் வரும் என்று அல்லல்பட்டு எதிர் நோக்கி இருக்கும்.
மனித குணம் தன் குடும்பம், கடமை என்று மனித கதியில் கஷ்டப்பட்டு வாடிக் கொண்டிருக்கும்.
அசுர குணம் மேலிருந்து கீழே வரும் பந்து போல வாழ்வில் ஒவ்வொரு நிமிடமும் துன்பத்தை அனுபவித்து கொண்டிருக்கும்.
மிருக குணம் எப்போதும் பயந்து வாழ்வை எதிர் நோக்கும்.
இந்த நான்கு குணத்தையும் அறுத்தெறி ! தன் நிலை மறந்த குணத்தை கொண்டு வா ! இது எல்லா சுகமும் தரும் !
மனதால், உடலால், துன்பப்படுகின்றாய். காமத்தால், கர்மத்தால், பாவத்தால் துன்பமடைகின்றாய். எப்போது உணர்வாயடா ?
உன் உள் உணர்வு இன்பத்தை எப்போது அனுபவிப்பாய் ?
நீ தர்மவான் தான். என் தந்தை யாரென்று தெரிய, எனை பார்க்க, என் குரல் கேட்க நீ தவம் செய்தவன் தான். உலகில் யாருக்கும் கொடுத்து வைக்காத புண்ணியம் உனக்குள் தான் !
நான் கை கால் முளைத்த மனிதனாய் யுகத்தில் வலம் வருகின்றேன். நீ என் அடிமுடி காணும் பாக்கியம் பெற்றவன் ! நீ தர்ம குலம் தான் !
எனை பார்த்ததினால் உன் ஆண்மா சுத்தப்படுத்தப்பட்டது. ஆனால் இங்கே மீண்டும் அழுக்காக்கி ஆணந்தம் தொலைக்காதே ! நீ தர்ம குலம் ! ஆதலால் நீ தர்ம குணங்களோடு இரு ! நான் தர்மத்தின் சத்தியத்தின் நாயகன் ! உனக்கு எப்போதும் துணையாய் இருப்பேன் !
எனை பார்த்ததினால் உன் ஆண்மா சுத்தப்படுத்தப்பட்டது. ஆனால் இங்கே மீண்டும் அழுக்காக்கி ஆணந்தம் தொலைக்காதே ! நீ தர்ம குலம் ! ஆதலால் நீ தர்ம குணங்களோடு இரு ! நான் தர்மத்தின் சத்தியத்தின் நாயகன் ! உனக்கு எப்போதும் துணையாய் இருப்பேன் !
நான் சத்தியத்தின் நாயகன் !
நான் இநன்யா !
No comments:
Post a Comment