Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Tuesday, October 28, 2014

ஜீவாத்மா, சைத்தியப் புருஷன்

ஜீவாத்மா, சைத்தியப் புருஷன்:
ஜீவாத்மா, பரமாத்மாவின் பகுதி என்பது மரபு.ஜீவாத்மாவே பரமாத்மா என்பது ஸ்ரீ அரவிந்தம்.உலகில் ஒரு பிரகிருதியும் இலட்சக்கணக்கான ஜீவாத்மாக்களும் இருப்பதாக சாங்கியம் கூறுகிறது.பிரகிருதி ஒன்று, ஜீவாத்மாவும் ஒன்றே என்கிறார் அன்னை.பிரபஞ்ச பிரகிருதி தன்னுள் பலபுள்ளிகள் போல்  பல ஜீவாத்மாக்களை உண்டு பண்ணுகிறது. பலவாகத் தோன்றினாலும் அவை ஒன்றே.சத்திய ஜீவியத்திற்குள்ள மூன்று நிலைகளில் ஜீவாத்மாவும் ஒன்று.ஜீவாத் மாவை நாம் மனத்தில் சாட்சிப் புருஷனாகவும், உடல் அன்னமயப் புருஷனாகவும், வாழ்வில் பிராணமயப் புருஷனாகவும் காண்கிறோம்.இவை தொடர்ந்து விஞ்ஞானமயப் புருஷனாக சத்திய ஜீவியத்திலும், ஆனந்தமயப் புருஷனாக ஆனந்தத்திலும்தெரிகின்றன. ஜீவாத்மா வுக்குப் பரிணாமமில்லை.சைத்தியப் புருஷன் பரிணாமத்தில் ஜீவாத்மாவின் பிரகிருதி.ஜீவாத்மாவை Being எனவும் சைத்தியப் புருஷனை Being of the becoming  எனவும் கூறுவோம்.ஜீவாத்மா காலத்தைக் கடந்தது.சைத்தியப் புருஷன் காலத்துள், காலத்தைக் கடந்துள்ளது.ஜீவாத்மாவின் பகுதியான மனோமயப் புருஷன் மேல் மனத்திலிருக்கிறான்.சைத்தியப் புருஷன் அடிமனக் குகையிலிருக்கிறான். சைத்தியப் புருஷனும் ஜீவாத்மாபோல் மோட்சத்திற்கு அழைத்துக் செல்வான். ஆனால் ஜீவாத்மாவுக்கு திருவுருமாற்றமில்லைகிருஷ்ணபரமாத்மா வந்த பிறகே பக்தியோகம் வந்தது. சைத்தியப் புருஷன் அதன் பிறகே பிறந்தான்.1947க்கு முன் இந்தியாவில் தொழில்கள் இருந்தன. அவை ஆங்கிலேயருடையவை. இந்தியர் தொழில்கள் இருந்தாலும் ஆங்கிலேயர் அனுமதியிலிருந்து கிடைத்தவை. இன்றுள்ள தொழில்கள் சுதந்திர இந்தியர் நடத்துபவை. ஜீவாத்மா 1947க்கு முன் உள்ள நிலைக்கும் சைத்தியப் புருஷன் பின்னுள்ள நிலைக்கும் ஒப்பிடலாம்.ஜீவாத்மாவை விடுதலை செய்ய, பிரகிருதியை விட்டு அகல இதுவரை யோகம் செய்தனர். ஸ்ரீ அரவிந்தம் பிரகிருதியின் யோகம், சைத்தியப் புருஷன் பிரகிருதிக்கு பூலோகத்தில் மோட்சம் கிடைக்க யோகம் செய்கிறது. அதை ஆன்மீகப் பரிணாமம் என்கிறோம்.                                                      
அனந்தத்தின் தத்துவம்அனந்தம் என்பது அந்தமில்லாதது, முடிவில்லாதது. நடந்து போனால் நாம் ஓர் இடத்தில் முடிவடைகிறோம் என்பதன்று. காலத்தைக் கடந்ததில் நினைத்தாலும், எதிர்காலத்தில் நினைத்தாலும் முடிவு தெரிவதில்லை.காமதேனு, கற்பக விருக்ஷம், அட்சயபாத்திரம் என்பவை புராணங்களில் கேட்டவை. எடுக்க எடுக்கக் குறையாது எனக் கேள்விப்பட்டுள்ளோம் (inexhaustible). கணித சாஸ்திரத்திலும், தத்துவத்திலும் அனந்தம் ஒரு கருத்தாக (conception) விளக்கப்படுகிறது. ஆன்மிகத்திற்கு அனந்தம் வெறும் கருத்தன்று, அது ஓர் அனுபவம். எடுக்க எடுக்கக் குறையாதது மட்டுமன்று, எடுத்தால் வளரும் என்பது அனந்தத்தின் அம்சம்.வாழ்வில், நடைமுறையில் இது உண்மை என்பதை ஸ்ரீ அரவிந்தம் எடுத்துக்காட்டுகிறது, வலியுறுத்துகிறது. இது புரிந்தால் ஸ்ரீ அரவிந்தம் புரியும். இது புரியாமல் புரியாது. உபநிஷதம் முழுமையிலிருந்து முழுமையை எடுத்தபின் முழுமை மீதியாக இருக்கும் என்று இக்கருத்தைக் கூறுகிறது.கல்வியைப் பொருத்தவரை எடுத்தால் வளரும் என்பதை ஏற்கலாம். தெம்பு, சக்தி, பணம் ஆகியவற்றுள் இக்கருத்தை ஏற்பது எளிதன்று என்றாலும் அங்கும் இவை உண்மை.உழைப்பவன் உடலால் உழைக்கிறான். உழைத்தால் உடல் களைப்படையும். உடலில் உணர்வுண்டு, உணர்வில் அறிவுண்டு, அறிவில் ஆன்மா உண்டு. உடல் உழைப்பில் ஆன்மா அறிவு, உணர்வு மூலம் வெளிப்பட உழைத்தால் 12 மணி, 18 மணிநேர வேலைக்குப் பின் களைப்புத் தெரியாது என்பது அனுபவம். போரில் பலர் அனுபவம் இது.வயதாக ஆக, மேற்சொன்னதுபோல் வாழ்பவர், வயோதிகம் வராமல், இளமை நிறைவது அனுபவம்.பணம் உழைப்பால் வரும். அதற்கு உணர்வும், கடமையும், லட்சியமும் உண்டு. அதன்படி பணம் செலவானால், உபரியாவது அனுபவம்.ஒரு செயல் அதன் உயர் அம்சம் வெளிப்பட்டால், செயலும், சக்தியும், பொருளும் உபரியாவது அனுபவம். உபநிஷத தத்துவத்தை அனுபவத்தால் அறிந்தவர் கூறுவதை மனம் தெளிவாக அறியுமானால் (conceive) அத்தெளிவை மனத்தில் உறுதி ஏற்குமானால் (as a concrete conception of Infinite) அத்தெளிவுக்குப் பலனாக வாழ்வு உபரியாகும். அதிர்ஷ்டமாக முடியும்.




பிரம்மம்

பிரம்மம்
இதுவரை நாமறிந்தது
ஸ்ரீ அரவிந்தம்
  1. அடையலாம், விளக்க முடியாது
விளக்கலாம்
  1. Indeterminable
சிருஷ்டிக்காது
Has self-determination
பிரபஞ்ச சிருஷ்டி பிரம்ம சிருஷ்டி
  1. Self contained being
தனித்து வாழ்வது
Has principles and truths and powers
சக்தி உண்டு, வெளிப்படும்
  1. Not relative உலகோடு தொடர்புள்ளதன்று
உலகமே பிரம்மம்
பிரம்மம் வேறு, உலகம் வேறன்று
  1. World is its Lila லீலை
ஆனந்தத்திற்காக லீலை
  1. All negating Absolute neti, neti
Is an Absolute that is relative
  1. Dwells sufficient to itself on its immobile delight
Seeks delight in emerging from its opposite
  1. Solely a Force restoring in inactive sameness
Must have endless powers of its being.
Must have endless truths of its own self-awareness
  1. Don't ask, accept creation
Creation is self-manifestation
Every possibility is a truth in the Absolute
 மனிதன் என்பவனை நாம் மனிதன் என்கிறோம். அவனிடம் நல்ல குணமிருந்தால் அதை பாஸிட்டிவ் எனவும், கெட்ட குணமிருந்தால் நெகட்டிவ் எனவும் கூறுகிறோம், அதனால்,
மனிதன் இரு பிரிவுகளாக இருப்பதாக அர்த்தமில்லை.ஒன்றை விலக்க முடியும் என்றாகாது.மனிதனைப் பிரிக்க முடியாது, பிரித்து அறியலாம். பிரிக்க முடியாது. அதே போல் பிரம்மம் ஒன்றே, உலகம் ஒன்றே. அவற்றைப் பிரித்து அறியலாம். தனித் தனிப் பாகங்களாகப் பிரிக்க முடியாது. இரண்டும் சேர்ந்த முழுமை பூரண யோகத்தின் அடிப்படை.அறிவு பிரித்துப் பார்ப்பதைச் செயலால் பிரித்து அவை வேறுவேறு பகுதிகள் என்றால் அது உண்மையில்லை. அதன் அடிப்படையில் நாம் புரிந்து கொள்பவை அனைத்தும் தவறாகும். நமக்கு வேண்டியவை, வேண்டாதவை என உண்டு.நாம் வேண்டியதை சேர்த்துக் கொள்கிறோம், வேண்டாததை விலக்குகிறோம்.இன்று வேண்டாதது, நாளை வேண்டும் என்பது முக்கியம்.எதையும் விலக்கக் கூடாது. முழுமை என்பது அதுவே.எந்த அளவுக்கு வேண்டாததைச் சேர்த்துக் கொள்கிறோமோ அந்த அளவுக்கு முழுமையுண்டு.எவ்வளவு சீக்கிரம் வேண்டாதது வேண்டியது எனப் புரிகிறதோ, அவ்வளவு சீக்கிரம் முழுமை வரும்.வாழ்வில் விலக்குவதை தேடிப் போக வேண்டியது விதியாக செயல்படுவதை அனுபவம் கூறுகிறது.அவசியமான நேரம், ஆபத்தான நேரம், முக்கிய விஷயம் வந்த நேரம் விலக்க முடியாதவை தங்களை வலியுறுத்துவதைக் காண்பது வாழ்க்கையில் ஸ்ரீ அரவிந்த இரகஸ்யம்.தற்காப்புக்காக விலக்க அனுமதியுண்டு.அப்பொழுதும் இவை விலக்கப்பட வேண்டியதில்லை என்ற ஞானத்தோடு தற்காப்புக்காக விலக்குவது முறை, சட்டமாகும்.
Sri Aurobindo has realized God in his body .மோட்சமடைபவன் ஆன்மா அவனைவிட்டுப் பிரிந்து பரமாத்மாவை அடைகிறது. அவனது 4 கரணங்களும் அதை சாதிக்கவில்லை. அப்படிப்பட்ட யோகம் இதுவரை இல்லை.ஆன்மா ஆண்டவனை அடைவது மோட்சம்.நான்கு கரணங்களும் இறைவனாக மாறுவதுதிருவுருமாற்றம்.அப்படி மாற யோகம் செய்தால் மனிதன் மனத்திலிருந்து உயர்ந்து சத்திய ஜீவியத்தை அடைந்து, சத்திய ஜீவியம் அவனுள் எல்லாக் கரணங்களிலும் இறங்கி வந்து நிரம்பும்.பகவான் சத்திய ஜீவியத்தை எட்டிய பின்னும் சத்திய ஜீவியம் இறங்கி வரும் அளவில் அமையவில்லை. 1926ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் தேதி தெய்வீக மனத்தை பகவான் எட்டியது முழுமை பெற்றதால், அது இறங்கி வர ஆரம்பித்து அவர் மனம், வாழ்வு, உடலை, நிரப்பியதை சித்தி தினம் என நாம் தரிசன நாளாகக் கொண்டாடுகிறோம். அன்று அவர் தனிமையை நாடினார். பிறகு சத்திய ஜீவியத்தை அடைந்தார். இது பிரம்மத்துடன் நிரந்தரத் தொடர்புள்ளது. சத்திய ஜீவியம் அவர் உடலில் இறங்கி வந்து நிரப்பியது, அப்படி சித்தித்தது அவருடைய physical consciousness உடலின் ஜீவியத்தில் நடந்தது. அடுத்த கட்டம் உடலின் ஜடப்பொருள். அதைச் செய்தது அன்னை.வேத ரிஷிகள் இயற்கையோடு இணைந்த வாழ்வை நடத்திய பொழுது தங்கள் ஜடமான உடலும், ஜடமான மலை, நதியும் ஒன்று எனக் கண்டனர். உடலின் அன்னமயப் புருஷன் விழித்து எழுந்ததால் ஏற்பட்ட சித்தியிது. பூரண யோகத்தில் உடலின் சைத்தியப் புருஷன் அதைச் செய்ய வேண்டும். பகவானுக்குப் பின் அன்னை யோகத்தை உடலில் தொடர்ந்தார்.
Karma is of the Force, not of the Being.பிரம்மம் என்பது ஜீவன், இது இதன் சக்தியால் கவரப்பட்டுள்ளது. மனம் துண்டாடும்பொழுது சக்தியைத் துண்டு செய்கிறது. ஜீவனைத் துண்டாடுவதில்லை, துண்டாட முடியாது. சக்தி, காரண காரியத்திற்குட்பட்டது. ஜீவன் காரணத்திற்கோ, காரியத்திற்கோ உட்பட்டதில்லை.அதனால் அதற்குக் கர்மம் இல்லை. கர்மம் மேலேயுள்ள சக்திக்கு, ஜீவனுக்கில்லை.சக்தியை நம்புபவர்க்குக் கர்மம் உண்டு.நம்பாதவர்க்குக் கர்மம் இல்லை.ஸ்ரீ அரவிந்தம் மனத்திலிருந்து செயல்பட வில்லை. Being of the becoming  சைத்தியப் புருஷனிலிருந்துசெயல்படுகிறது. கர்மம்  Being  இல்லை. Being of the becomingக்கு கர்மம் இல்லை.கர்மம் மனத்திற்கும், வாழ்வுக்கும் உண்டு.ஜீவனுக்கு கர்மமில்லை.

Force is anterior to the instrumentவிஞ்ஞானி சக்தி கருவியிலிருந்து எழுகிறது என்பதை மறுத்து ஸ்ரீ அரவிந்தர் சக்தி தனக்குத் தேவையான கருவியைச் செய்து அதன் மூலம் செயல்படுகிறது என்கிறார். மின்சாரம் மோட்டாரை ஓட்டினால், மின்சாரம் மோட்டாரிலிருந்து வரவில்லை, வெளியிலிருந்து வருகிறது. மனம் தான் செயல்பட ஒரு கருவி வேண்டும் என மூளையை உற்பத்தி செய்தது, ஜீவாத்மா உலகில் செயல்பட உடலைத் தாங்குவதுபோல். மூளை வேலை செய்வதால் எண்ணம் உற்பத்தியாவதாக விஞ்ஞானி கருதுவது சரியில்லை என்கிறார் ஸ்ரீ அரவிந்தர்.




யோக விளக்கம்

யோக விளக்கம்
மனிதன் தன் உயர்ந்த கரணமான ஆன்மாவை உடலிலிருந்து விடுவித்து அதன் ஆதியை அடைவது மோட்சம். ஆன்மா வேறு, உடலும் மனமும் வேறு என ஏற்றுக் கொள்வதால் மேற்கொள்ளும் பாதை மோட்சம்.உடலும், வாழ்வும், மனமும் ஆன்மாவின் வேறு உருவங்கள், அவற்றுள் ஆன்மா பொதிந்துள்ளது. அது அனுபவம் பெற உடலைத் தாங்கியுள்ளது, விடுவிக்கக் கூடாது. பள்ளிக்குப் படிக்க வந்த பையனிடம் படிப்பை முடிக்கச் சொல்ல வேண்டும், வீட்டுக்கு அனுப்புவது மோட்சம் போலாகும். உடல் உழைப்பதும், உயிர் வாழ்வதும், மனம் சிந்திப்பதும் ஆன்மா அவற்றுள் பிறவியின் அனுபவத்தைப் பெறுவதாகும். அனுபவம் சேருமிடம் சைத்தியப் புருஷன். இவனை உடலில், முதலில் காண முடியாது. மனத்தில் காணலாம். அங்கு கண்டு அவன் வளர்ச்சியை மேலே 4 நிலைகளிலும் கீழே 3 நிலைகளிலும் தொடர்ந்து உடல் சத்திய ஜீவனாகவும், சத்திய ஜீவியத்தில் ஈஸ்வரனாகவும் முடிப்பது ஆன்மீகப் பரிணாமமாகும். இதைப் பல பிறவிகளில் முடிக்க வேண்டும் என்பதால் மறுபிறப்புண்டு.ஞானம் knowledge என்பது ஜீவியத்தின் வெளிப்பாடு.ஞானம் அடுத்த கட்டத்தில் Light ஒளியாகிறது.மீண்டும் Light மனிதனுக்குப் புரியும் அறிவாகும்.அவற்றுள் கடைசி கட்டமான அறிவு புலன்கள் மூலம் நாம் பெறும் அறிவு. கண்ணால் பார்ப்பதும், காதால் கேட்பதுமான அறிவு கண், காது என்ற பொறிகளால் நாம் பெறுவது.அறிவது மனம். புலன் கருவி. மனம் நேரே அறிய முடியும். அதற்குப் புலன் உதவிஅத்தியாவ சியமில்லை .இன்று நமக்கு ஐம்புலன்களுண்டு. 12 புலன்களிலிருந்து மனம் வளர்ந்ததால் மற்ற புலன்களை நாம் இழந்துவிட்டதாக அன்னை கூறுகிறார்.அடிமனம் புலனின்றி நடப்பவற்றை பதிவு செய்து கொள்ளக் கூடியது.ஒரு கிரேக்கப் பேராசிரியரிடம் வேலை செய்த படிக்காத பெண்ணுக்கு ஜன்னி வந்தபொழுது அவர் படித்த பாடங்களை அவள் மனப்பாடமாகக் கூறினாள்.ஒரு சமஸ்கிருதப் பண்டிதரின் சமையல்காரன் ஸ்லோகங்களை சரளமாகச் சொன்னான்.நம் அறிவு மேல் மனத்திற்குரியது. அடுத்தது அடிமனம்.நேரடி ஞானம் (intution) யோகியுடையது. அவருக்குப் புலனோ மனமோ இல்லாமல் நேரடியாக அறிய முடியும்.முடிவான ஞானம் இறைவனுடன் ஐக்கியம் பெறுவதால் எழுவது.
முரண்பாடு
 Contradiction              முரண்பாடு                 Matter            ஜடம்
Conflict                        பிணக்கு                     Life                வாழ்வு
Compromise                விட்டுக்கொடுப்பது     Mind               மனம்
Harmony                      சுமுகம்                     Supermind      சத்திய ஜீவியம்
Union                           இணைவது                Consciousness ஜீவியம்
Unity                             ஐக்கியம்                  Sat                    சத்

 பிரம்மம் சிருஷ்டியில் மேலிருந்து கீழே வரும்பொழுது ஏற்படும் பல மாறுதல்களில் மேற்சொன்னதும் ஒன்று. மாறுதல்கள் பல.1. சத் பல நிலைகளைக் கடந்து ஜடமாகிறது.2. எதுவுமேயில்லாத பிரம்மம், எப்படியும் விவரிக்க முடியாத பிரம்மம், ஐக்கியமே உருவான பிரம்மம் ஜீவனாக முதல் மாறுகிறது. அது சத் புருஷன்.3. அந்நிலையில் ஐக்கியம் பாதிக்கப்படுவதில்லை.4. ஐக்கியம் தன்னைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து முடிவில் ஜடத்தில் முரண்பாடாகிறது.5. ஜடத்தில் முரண்பாடும், வாழ்வில் பிணக்கும், மனத்தில் விட்டுக் கொடுத்து வாழ்வதும், சத்திய ஜீவியத்தில் சுமுகமும், ஜீவியத்தில் இணைவதும், சத்தில் மீண்டும் ஐக்கியம் பெற்று பரிணாமம் பூர்த்தியாகிறது.6. ஐக்கியத்தை இழந்து முரண்பாடாவது சிருஷ்டி. கீழே வருவது.7. முரண்பாடு மீண்டும் ஐக்கியமாவது பரிணாமம்.8. பிரம்மம் தன்னைத் தன்னுள் மறைத்து ஜடமாகும் பாதை ஐக்கியம் முரண்பாடாவது.




சிருஷ்டியின் இரகஸ்யம் - முறைகள்

சிருஷ்டியின் இரகஸ்யம் - முறைகள்
தன்னிச்சையாகச் செயல்படுவது, தனக்கு அளவு ஏற்படுத்துவது, தன்னை தன்னுள் கிரகித்துக் கொள்வது; அகம் புறம்; பகுத்தல், சக்தியை எழுப்புதல், சக்தி ரூபம் ஏற்படுத்துவது; ரூபம் புலனுணர்வை எழுப்புவது; மேலும், கீழும் ஒரே சமயத்தில் செல்வது; ஒன்று பலவாக மாற, பிரிந்து சேர்வது.எல்லா லோகங்களும் ஒன்றே, எல்லா முறைகளும் ஒன்றே.லோகங்களும் முறைகளும் ஒன்றே.தன்னைக் கிரகித்துக் கொள்ள தானே முடிவு செய்வதால் அது தன்னிச்சையாகும்.அமைதி லோகம், சலனம் முறை.ஜடமாக மாறும் சத், இருளாக மாறும் ஒளி, வலியாக மாறும் ஆனந்தம் தன்னுள் தன்னைக் கிரகித்துக் கொள்ளும் முறையைப் பயன்படுத்துகிறது. தானே இச்சைப்பட்டு இது நடப்பதால் இவ்விருமுறைகளும் ஒன்றே. அகத்தில் ஒளியானது புறத்தில் இருளாக இருப்பதால், இதுவே அகம் புறம் என்ற முறையாகும். ஒளி என்பது ஓர் அளவு. இருள் என்பதும் ஓர் அளவு. ஒளி இருளாக மாற தனக்குத் தானே அளவை ஏற்படுத்திக் கொள்கிறது.சத் என்பது ஒரு லோகம். கிரகிப்பது ஒரு முறை. இவையிரண்டும் ஒன்றே என மனம் எனும் லோகமும், எண்ணம் என்ற முறையில் விளக்கலாம்.மனம் செயல்படும்பொழுது எண்ணம் எழுகிறது. எண்ணம் செயல்படாமல் அமைதியானால் மனம் என்ற லோகம் உண்டாகிறது. இதேபோல் எல்லா முறைகளும் ஒன்று எனவும், எல்லா லோகங்களும் ஒன்று எனவும் கூறலாம். மேலும் எல்லா லோகங்களும் எல்லா முறைகளும் ஒன்றே எனவும் கூறலாம்.முறைகள், பொருள்கள், ரூபங்கள், குணங்கள் ஆகிய பல ஒன்றிலிருந்து எழுந்த வகை இதுவே.
காலம், இடம்சித்தின் அகம் காலம், புறம் இடம்.சித் என்பது இங்கு முழு சச்சிதானந்தத்தையும் குறிக்கும்.சத்தில் அகம், புறம்; காலம், இடம் இருக்க முடியும். சத் பிரியப்பட்டால் அவற்றிலிருந்து விலகலாம்.சத்திய ஜீவியத்தில் காலத்தைக் கடந்த பகுதியும், காலத்திற்குட்பட்ட பகுதியும் உண்டு.மனம் இவற்றிடையே ஏற்பட்டது. மனத்திற்கு ஒரு சமயத்தில் ஒரு பக்கத்தைப் பார்க்க முடியும் என்றாலும் திரும்பி மறுபக்கத்தையும் பார்க்கும் திறன் உண்டு.சித்திலிருந்து வரும் சக்தியில் காலமும், இடமும் உற்பத்தியாகின்றன.சத்திற்கும், சித்திற்கும் முழுமையுண்டு. சக்தியைப் பிரிக்கலாம். சத், சித்தைப் பிரிக்க முடியாது.பிரியும் சக்தி மேலும், பிரியாத ஜீவியமும், சத்தும் முழுமையாக உள்ளேயும் உள்ளன.மனத்தால் தான் பிரித்த சக்தியையும், அதன் பாகங்களையும் காண முடியும். முழுமையான சித், சத்தைப் பார்க்க முடியாது, சத்திய ஜீவியம் பார்க்கும்.மனிதன் சிந்தனையில் எழுவது கற்பனை, காவியம், சித் தெய்வ சிந்தனையில் எழுவது காலம். அது அகம், அதன் புறம் இடம். காலமும், இடமும் உலகைத் தாங்குகின்றன. ஐக்கியம், சத்தியம், நல்லது, ஞானம், சக்தி, அன்பு ஆகிய ஆறு அம்சங்களும் சிருஷ்டி பூர்த்தியாக அவசியம். ஒரு சமயத்தில் ஓர் அம்சமே செயல்பட முடியும் என்பதால், அச்சமயம் மற்றவை குறையாக இருப்பதாகத் தெரியும். அது குறையில்லை. அதன் முறை இன்னும் வரவில்லை எனப் பொருள்.நமக்கு வலியிருப்பது ஆனந்தமில்லாதது தெரிவது போல் மற்ற எந்த அம்சம் குறையாக இருப்பதும் தெரியவில்லை என்பதால், வலியிருப்பதை மட்டும் குறையெனக் கூறுகிறோம்.
1.
The immobile immutable Self
அக்ஷர பிரம்மம்
The Self that becomes all things
சத் புருஷன் (The essence and source of all determinations and the dynamic essentiality.)
2.
The Nirguna Brahman
நிர்குணப் பிரம்மம்
The Saguna Brahman
சகுணப் பிரம்மம்
3.
The Eternal without qualities
The Eternal with infinite qualities
4.
The pure featureless
One Existence - One பரமாத்மா
The One who is the Many - Many
ஜீவாத்மா
5.
The Impersonal
அனந்தகுணா
The infinite person who is the source and foundation of all persons and personalities.
6.
The Silence void of activities புருஷன்
The Lord of Creation, the word ஓம்
7.
The Non-Being அசத்
The Master of all works and creation சத்
8.
9.
The Ineffable
The Unknowable
That being known, all is known
 ஒரு நாணயத்தின் ஒரு பக்கத்தைப் பார்த்து அதிலுள்ளதை நாம் அறிந்து அடுத்த பக்கமில்லை என்று கூறுவதில்லை. ஆனால் வாழ்வில் பல சமயங்களில் அதைச் செய்கிறோம், விவசாயிக்கு விவசாயமே பெரியது எனத் தோன்றுகிறது. அதைப் பேசும் பொழுது உலகமே விவசாயம் என்கிறான். மற்றது கண்ணுக்குத் தெரிவதில்லை. தெரிந்தால் மனதில் படுவதில்லை.பிரம்மத்தைக் கண்டவர், கண்டு சித்தித்தவர் ஆயிரம் பேருண்டு. கண்டவர்கள் மனத்தால் கண்டவர்கள். நம் உயர்ந்த பகுதி மனம். மனத்தால் மட்டுமே நாம் காண முடியும். மனத்தால் பிரம்மத்தைக் காண்பது மைக்கிராஸ்கோப்பால் மனிதனைப் பார்ப்பதாகும்.அப்படி இதுவரை கண்டவர்களுடைய ஆன்மீக அனுபவம் இரு பகுதிகளாகும். ஒன்றை பாஸிடிவ் எனவும், அடுத்ததைநெகட்டிவ் எனவும் கூறினால் 7 வகைகளாக அவற்றைப் பிரித்து ஸ்ரீ அரவிந்தர் விளக்குகிறார். அவற்றை மேலே எழுதியுள்ளேன். ஒன்றை இரண்டாகப் பிரித்து, இரண்டையும் ஒன்றுக்கு எதிரானது மற்றது என்று காண்பிப்பது இயற்கையின் முறை என்கிறார். பிரம்மத்தை சத் எனவும் அசத் எனவும் அதுபோல் பிரித்துக் காட்டுகிறது சிருஷ்டி. சத் என்பதை ஆன்மாவாகவும், அசத் என்பதை ஜடமாகவும் கருதுவோம்.சலனமற்ற மாறுதலற்ற பிரம்மம் என ஒன்றை ரிஷிகள் அறிவார்கள். அதை அக்ஷர பிரம்மம் என்பர். இதன் மறுபுறத்தைக் கண்டவர்கள் இந்த பிரம்மமே உலகிலுள்ள எல்லாப் பொருள்களாகவுமாயிற்று என்பர். அதை சத் புருஷனின் அம்சமாகக் கருதுவர்.குணங்களற்றவன், நிர்குண பிரம்மம் என்பது அடுத்தது. அதன் மறுபுறம் சகுணம், எல்லா குணங்களையும் உடைய பிரம்மம். ஈஸ்வரன் இவ்விரு பகுதிகளாகப் பிரிந்து தெரிகிறது. இரண்டும் சேர்ந்த முழுமை ஈஸ்வரன்.ரூபமற்ற பிரம்மம், அரூபிணி என்பது ஒன்று. இதன் மறுபுறம் எல்லா ரூபங்களுக்கும் உற்பத்தி ஸ்தானமாக இருப்பது.செயலற்ற சொல்லற்ற மௌனம் அடுத்தது. எல்லா செயல்களையும் எல்லா சொற்களையும் தன்னுட் கொண்ட ஓம், சப்த பிரம்மம் அதன் மறுபுறம்.சொல்லால் விவரிக்க முடியாதது, அறிவுக்கு எட்டாதது அடுத்தது, எதை அறிந்தால் எல்லாவற்றையும் அறிந்து கொள்ளலாமோ அது இதன் மறுபுறம்.
The range of spiritual mind
Higher mind                Silence              முனி
Illumined mind            Light                  ரிஷி
Intuitive mind              Knowledge        யோகி
Overmind                    Knowledge        தெய்வம்
                                   unhampered
                                    by Ignorance
மனத்திற்கும் சத்திய ஜீவியத்திற்கும் இடையே இந்த 4 நிலைகள் உள்ளன. தெய்வீக மனத்திற்கும் மேல் ஒரு பொன் மூடியுள்ளது.பொன்மூடியைக் கடந்தவுடன் நிர்வாண நிலையுண்டு.மனம் என்பதை மேற்சொன்ன 4 நிலைகளாலும், மனித மனத்தாலும் குறிப்பிடுகிறார்.சத்திய ஜீவியம் இரண்டாகப் பிரியும்பொழுது காலத்தைக் கடந்ததும், காலத்திற்குரியதுமாக அவற்றிடையே சத்திய ஜீவியத்தின் சிறு பகுதியாக மனம் உற்பத்தியாகிறது.சத்திய ஜீவியத்திற்கு முழுமையுண்டு.தன் முழுமையையிழந்து பகுதியான மனத்தை சத்திய ஜீவியம் உற்பத்தி செய்கிறது.சிருஷ்டி சத்திலிருந்து ஜடத்தை நோக்கி வரும்பொழுது தன்னை பிரம்மம் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து ஜடமாகிறது.சத்திய ஜீவியம் முழுமையை இழந்து மனமாவது அதன் பகுதி. மனத்தைப் பிரிவினையின் கருவியாக உற்பத்தி செய்கிறது.ஆன்மாவை (spiritual substance) மனம் பிரித்து வாழ்வையும், ஜடத்தையும் உற்பத்தி செய்கிறது.பிரம்மம் சிருஷ்டியின் அடியில் ஜீவனாகவும் மேலே சக்தியாகவும் உள்ளது. ஜீவன் என்றும் முழுமையானது. அதைப் பிரிக்க முடியாது. அதன் ஜீவியத்தையும் பிரிக்க முடியாது. பிரிவது Force சக்தி.




சத்திய ஜீவியம்

சத்திய ஜீவியம் Supermind is the nature of Sachchidanandamசத் - சித் - ஆனந்தம் அகமானால்சத்தியம் - ஞானம் - அனந்தம் புறமாகும்புறம் என்பதை nature என்கிறார். சத்திய ஜீவியத்தில் இருபகுதிகள் உள்ளன.முதற்பகுதி காலத்தைக் கடந்தது.அடுத்தது காலத்திலுள்ளது.மனம்இவற்றினிடையேபிறக்கிறது. சத்தியஜீவியம்முழுமையானது.இங்கு ஞானமும், உறுதியும் இணைந்துள்ளன. பிரம்மத்தின்தொடர்பு இங்கு நிரந்தரமானது.மனத்தில் பிரிந்து தெரிபவை இங்கு இணைந்து தெரியும். புருஷப் பிரகிருதி இங்கு ஒன்றே, சத், சித், ஆனந்தம் மூன்றாகத் தெரிந்தாலும் ஒன்றானவை. தகப்பன், கணவன் ஒரே மனிதன் என்பதைப்போல் பிரியாத பாகுபாடுள்ள இடம்.பூரண எண்ணத்தால் சிருஷ்டிக்கிறது.
வாழ்வுமனத்தில் இரு பகுதிகள் உள்ளன.ஞானம், உறுதி என்பவை அவை.உறுதி என்பது சக்தி.ஞானம் உறுதியுடன் செயல்பட்டால் சக்தி பிறக்கும்.அப்படிச் செயல்படும்பொழுது ஞானம் தன்னை ஓரளவு இழக்கும், 




சக்தி எழுந்தால் சக்தியின் லோகம் (Plane of life) உற்பத்தியாகும்.வாழ்வு என்ற லோகம் ஞானம், உறுதியில் செயல்படுவதால் எழுவது. இங்கு ஞானம் குறைவாக இருக்கும்.

ஜடம் ஞானம் உறுதிமேல் செயல்படும்பொழுது வாழ்வுஉண்டானால், ஓரளவு ஞானம் தன்னை இழக்கும்,முழுவதும் ஞானம் தன்னை இழந்தால் வாழ்வுஜடமாகும். ஜடம் இவ்விதம் உற்பத்தியாகிறது. இதையே வேறுவிதமாகவும் கூறலாம்.சத்திற்கும் சத்தியத்திற்கும் இடையேயுள்ளது ஆன்மா.இதை spirit எனவும் spiritual substance எனவும் கூறுகிறார். சிருஷ்டியில் spiritual substance மாறி material substance ஜடப் பொருளாக வேண்டும். Spirit கண்ணுக்கு புலனுக்கு தெரியாது. புலனுக்குத் தெரிய உருவம் வேண்டும். புலன் மனத்தின் கருவி. மனம் புலன் வழி ஆன்மாவைக் கண்டால் Spiritual substance மாறி  material substance, அதாவது Matter  ஜடமாகிறது என்பது தத்துவம்.
சத்திற்கும் சத்தியத்திற்கும் இடையேயுள்ள ஆன்மாவை சத்திய ஜீவியத்தின் இரு பிரிவுகளிடையே பிறந்த மனம் கண் என்ற புலன் வழி காணும்பொழுது ஜடமாகத் தெரிகிறது. ஜடம் என்பது ஆன்மா.ஜடம் என்பது மனத்தின் பார்வைக்கே தவிர ஜடம்என்பதில்லை. ஆன்மாவை மனம் ஜடமாகக்காணபுலன்வழியாகக்காணவேண்டும்.ஆன்மாவுக்கு உருவமில்லாவிட்டால் மனம் காண முடியாது.உருவம் பெற்ற ஆன்மா புலன் வழி காணும் மனத்திற்கு ஜடமாகத் தெரிகிறது.


மேல் மனம்:
மேல்மனம், உள்மனம், அடிமனம், ஆழ்மனம் (surface mind,inner mind,subliminal mind,subconscious mind)ஆழ்மனம் நம் கடந்த கால வாழ்வை உடலும், ஜீன், குரோமசோம், DNA என்பவற்றிலும் வைத்துள்ளது. இதயம், ஜீரணம், அனிச்சைச் செயல் போன்றவற்றைக் கட்டுப்படுத்துவது, தானே இயங்குவது.மேல் மனம் என்பதையே நாம் மனம் என்கிறோம். நாம் ஆழம் என்பது மேல் மனத்தின் ஆழம், depth of the surface. இதன் அம்சங்கள்,மனம், சிறியது, அகந்தை, காலம், மேலேழுந்ததாகஇருப்பது.அஞ்ஞானம் இங்கே பூர்த்தியாகிறது.உள்மனம் பரந்தது, மேல் மனத்திற்கு அடியில் உள்ளது. சூட்சுமமானது, ஆன்மிகமானதன்று, பெரியது. அடிமனம் உள் மனத்தில் அமைந்துள்ளது.உள் மனம் மேல் மனத்தின் ஆழம் எனலாம்.மனோமயப் புருஷனும், நிர்வாணக் கதவும் இங்குள்ளன. சைத்தியப் புருஷன் உள்ள அடிமனத்திற்குப் போக உதவும்.Superconscient பரமாத்மா வும், ஆழ்மனம் subconscientஉம் உள்மனத்தில் சேருமிடத்தில் அடிமனம் ஏற்படுகிறது. சைத்தியப் புருஷன் அடிமனக் குகையில் இருக்கிறான். அடிமனம் பிரபஞ்சம் முழுவதும் பரவக் கூடியது. எல்லா மனிதர்களுக்கும் அவர்கள் மனம், உணர்வு, உடல் அடிமனத்தில் சந்தித்து ஒன்றாக உள்ளன.நம் கண்ணில் படாதவை, காதில் விழாதவை அடிமனத்திற்குத் தெரியும். அங்குப் பதிவாகும்.ஒருவர் சந்தோஷம் உலகத்தின் சந்தோஷம் ஒருவர் வருத்தம் உலகத்தின் வருத்தம்என்பதை உண்மையாக்கும் மனம் அடிமனமாகும்.உலகம் பெரியது. அது சூரிய மண்டலத்தின் பகுதி, சூரிய மண்டலம் பிரபஞ்சத்தின் பகுதி. நாம் அறிவது நம் ஊர், சந்தர்ப்பங்கள் மட்டும்.சாதாரண மனிதனுக்கு ஊர் தெரியும்.படித்தவனுக்கு நாட்டைப் பற்றித் தெரியும். நடைமுறையில் அவனும் சாதாரண மனிதனே.தவம் செய்தவர்கள் தவிர மற்றவர்க்கு திருஷ்டியில்லை. திருஷ்டியின் நிலைக்கேற்ப, கவி இயற்கை எழிலைக் காண்கிறான். தவசிகள் காண்பவை மூன்று.1. அக்ஷரப் பிரம்மம்.2. சித் சக்தி3. ஆனந்தம்,,,சத் புருஷனைக் கண்டவன் அதை அக்ஷரப் புருஷனாகக் காண்கிறான்.அக்ஷரப் பிரம்மத்தைக் கண்டவனுக்கு உலகம் மாயை.சித்சக்தியைக் கண்டவனுக்கு உலகம் பிரகிருதி. இவன் நாத்திகன்.ஆனந்தத்தைக் கண்டவனுக்கு உலகம் லீலை.ஒன்றைக் கண்டவர்கள் மற்ற இரண்டையும் மறுக்கிறார்கள்.மனம் அக்ஷரப் பிரம்மத்தைக் கண்டால், தவசியின் நிலை தெய்வீக மனத்திற்கு உயர்ந்து மனோமயப் புருஷனை அடையலாம். அப்பொழுது மனம் கண்டஅக்ஷரப்பிரம்மம்முதல்புருஷனாகவும், அடுத்த உயர்ந்த கட்டத்தில் கீதை புருஷோத்தமனாகவும் தெரிகிறது.அக்ஷரப் புருஷன் புருஷோத்தமனில் அடக்கம்.தவசி மேலும் உயர்ந்து சத்திய ஜீவியத்தை அடைந்து சத் புருஷனைக் கண்டால், சத் புருஷன் ஈஸ்வரனாகத் தெரியும். ஈஸ்வரனுள் புருஷோத்தமன் அடக்கம்.அக்ஷரப் பிரம்மமும், புருஷோத்தமனும் பிரளயத்தால் அழிவதில்லை. ஈஸ்வரன் அழிவான். அதனால் ரிஷிகள் ஈஸ்வரனைக் கருதவில்லை.ஈஸ்வரன் அழிந்தாலும் பிரதமர்போல் சக்தியுள்ளவன். புருஷோத்தமன் ஜனாதிபதிபோல் அழியாவிட்டாலும் power இல்லாதவர்.அக்ஷரப் பிரம்மமும், புருஷோத்தமனும் சிருஷ்டிக்காதவர்கள், ஈஸ்வரன் சிருஷ்டிப்பவன்.




ஆன்மா

ஆத்மாவின் இரு முனைகள் மனிதனுடைய   ஆயுள்   முடிய   அவனுடைய   சம்மதம்   தேவை. மனிதனாகிய ஜீவாத்மா முடிவு செய்யாமல் உயிர் உடலை விட்டுப் பிரியாது  என்கிறார்  ஸ்ரீ  அரவிந்தர்.மேலும்  பரமாத்மாவின்  உத்தரவும்  தேவை.பரமாத்மாவும், ஜீவாத்மாவும் சம்மதிக்கா மல் உயிர் உடலை விட்டுப் போகாது.எந்த  சிறு  காரியத்திற்கும்  பிரபஞ்ச  சட்டம் இதுவே.ஜீவா த்மாவும், பரமாத்மாவும் ஆத்மாவின் இருமுனைகள் என்பதால் ஒன்று  சம்மதப்பட்டால்  இரண் டும்  சம்மதப்படுவதாக  அர்த்தம்.உலகிலும்,  பிரபஞ்சத்திலும்  உயிருடையது  ஆத்மா மட்டுமே. மற்றஅனைத்தும் ஆத்மாவுடன்  தொடர்பு  கொள்வதால்  உயிர் பெறுகின்றன.ஆத்மாவின்  ஒரு  முனை பிரம்மம். அடுத்தமுனை வாழ்வு.ஆத்மாஅறிவாலும், அறிவின் திறனாலும்  செயல்படுகி றது.பிரம்மமே முதல்,  அதுவே  முடிவு  என்பது  ஸ்ரீ  அரவிந்தம்.மேலிருந்து  கீழே  வருவது  சிரு ஷ்டி,  கீழிருந்து  மேலே  போவது பரிணாமம்..மறைந்த பிரம்மம்மறந்தது  ஜடம்.  நினைவுபடுத்து வது  அருள். ஏற்பது  அறிவு.  நடப்பது  யோகம்.ஆத்மா அசைந்தால்  அனைத்தும்  அசையும்.ஆத்மாஅசைக்காதது  இல்லை. ஆத்மா  அறிவால்  எதையும்  அசைக்கும்.மனிதன் விரும்பினால் எதையும் சாதிப்பான் என்பது ஆத்மாவின் தத்துவம்.    

ஆன்மா உற்பத்தியான வகை அகமான சத் சத்தியமாகப் புறத்தில் மாறும்பொழுது ஆன்மா உற்பத்தியாகிறது. சத் தன்னுள் சித்தையும், ஆனந்தத்தையும் கொண்டது. சத்திற்குத் தன்னை அறியவோ, அனுபவிக்கவோ அவசியமில்லை, ஆனால் முடியும். சத் தன்னை அறிவதால் சித் ஆகிறது. சத் தன்னை அறிந்தபின் சித் மூலம் தன்னை உணர்ந்து அனுபவிப்பதால் ஆனந்தமாகிறது. சத் தன்னைப் புரிந்து கொள்ள முயன்றால் (comprehend) சத்திய ஜீவியமாகிறது. சத்திற்குத் தான் சத்தாக இருக்கவேண்டிய அவசியமும் இல்லை என்பதைச் செயல்படுத்தினால் சத் மீண்டும் பிரம்மமாகும். சத் is Self-Conscious Being.. இதன் அம்சங்கள் மூன்று. ஆத்மா- புருஷா- ஈஸ்வரா. மனம் ஆத்மாவை அக்ஷரப்பிரம்மமாகக் காணும். தெய்வீக மனம் ஆத்மாவைப் புருஷனாகவும், புருஷோத்தமனாகவும் காணும். சத்திய ஜீவியம் ஆத்மாவை ஈஸ்வரனாகக்காணும்.அக்ஷர பிரம்மம் புருஷோத்தமனில் அடக்கம்.அக்ஷர பிரம்மமும், புருஷோத்தமனும் ஈஸ்வரனுள் அடக்கம்.Self என்பது பிரம்மம். பிரபஞ்சத்தைக் கடந்தது.Soul என்பதும் அதுவே. நாம் ஆத்மா என்போம். இது பிரபஞ்சத்திற்குரியது.Being என்பது பொதுச் சொல். ஜீவன் எனலாம்.Spirit என்பது ஆன்மா எனப்படும்.Self,soul.being என்பவை Spiritஇன் பல நிலைகள், பல தோற்றங்கள்.புருஷன், ஈஸ்வர அம்சங்கட்கு முன் நிலை பிரம்மம்.    


                                                             

கடுக்காய் ....வைத்தியம்

பாட்டி வைத்தியம்!!!
அத்திக்காயை வேக வைத்து சிறுபருப்பு சேர்த்து கடைந்து சாப்பிட்டால் கை, கால் வலிகள் நீங்கும்.அதிவிடயம், எள், வெள்ளரி விதை மூன்றும் தலா 100 கிராம் அளவுக்கு எடுத்து அரைத்து கொள்ளவும். காலை மாலை இரு வேளையும் 2 கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் உடல் உறுதிப்படும்.அமுக்காரா, ஏலக்காய், சுக்கு, சித்திரத்தை ஆகியவற்றில் தலா 100 கிராம் எடுத்து அரைத்துக் கொள்ளவும் இதில் ஐந்து கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் கை, கால் மற்றும் மூட்டு வலிகள் குணமாகும்.மூட்டு வலிக்கு அவுரி இலையை விளக்கெண்ணெயில் வதக்கி ஒத்தடம் கொடுக்கலாம்.ஆடாதொடா இலையை கஷாயம் வைத்து குடித்தால் உடல் குடைச்சல் குணமாகும்.ஆளி விதை 100 கிராம் பொடி செய்து அத்துடன் 10 கிராம குங்கிலி பஸ்பம் 10 கிராம் சேர்த்து கலந்து தினமும் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.இலுப்பைக் கொட்டையில் இருந்து எண்ணெய் எடுத்து இடுப்பில் தேய்த்தால் நிவாரணம் பெறலாம்.உளுந்து, கோதுமை, கஸ்தூரி மஞ்சள் மூன்றையும் சம அளவு எடுத்து பொடி செய்து அதில் வெந்நீரில் கலந்து பற்று போட்டால் மூட்டு வாதம், மூட்டு வலி குணமாகும்.

கடுக்காயை மருந்தாக்குவது எப்படி?
கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும்.தரமான கடுக்காயை வாங்கி வந்து உடைத்துஉள்ளே இருக்கும்பருப்பை எடுத்துவிட்டுநன்கு தூளாக அரைத்து வைத்துக்கொள்ளவும். இதில் தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின்சாப்பிட்டு வரநோயில்லா நீடித்த வாழ்க்கை யைப் பெறலாம்.
கடுக்காய் குணப்படுத்தும் நோய்கள்
கண் பார்வைக் கோளாறுகள்காது கேளாமைசுவையின்மைபித்தநோய்கள்வாய்ப்புண்நாக்குப்புண்மூக்குப்புண்தொண்டைப்புண்,இரைப்பைப்புண்குடற்புண்ஆசனப்புண்அக்கிதேமல்படைதோல்நோய்கள்உடல் உஷ்ணம்வெள்ளைப்படுதல்மூத்திரக் குழாய்களில்உண்டாகும் புண்மூத்திர எரிச்சல்கல்லடைப்புசதையடைப்பு,நீரடைப்புபாத எரிச்சல்மூல எரிச்சல்உள்மூலம்சீழ்மூலம்,ரத்தமூலம்ரத்தபேதிபௌத்திரக் கட்டிசர்க்கரை நோய்இதய நோய்,மூட்டு வலிஉடல் பலவீனம்உடல் பருமன்ரத்தக் கோளாறுகள்,ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள் போன்ற அனைத்துக்கும்இறைவன் அருளிய அருமருந்தே கடுக்காய். கடுக்காயை உணவாய்தினசரி சாப்பிட்டு வாருங்கள். உங்களை எந்த நோயும் அணுகாது.பின் வரும் சித்தர் பாடலைக் கவனியுங்கள்.
காலை வெறும் வயிற்றில் இஞ்சி- நண்பகலில் சுக்கு- இரவில்கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டுவர,கிழவனும் குமரனாகலாம் என்பதே இந்தப் பாடலின் கருத்தாம்.எனவே தொடர்ந்து கடுக்காயை இரவில் சாப்பிட்டு வரப் பழகிக்கொள்ளுங்கள். இதனால் முன் சொன்ன அனைத்து நோய்களும்உங்களை அண்டாமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.
தென்னாட்டவருக்கு திரிபலா...
திரிபலா என்பது கடுக்காய்நெல்லிக்காய்தான்றிக்காய் ஆகியமூன்றும் சம அளவு கலந்த மருந்தாகும். இதனை எவர்வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம்.குறிப்பாக ஆங்கில மருந்துகள் நிறைய உட்கொள்பவர்கள்,இம்மருந்தினை காலை-இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர,ஆங்கில மருந்துகளால் உண்டாகும் பக்க விளைவுகளைக் குறைத்துக்கொள்ளலாம். மேலும் சர்க்கரை நோய்க்கு இணை மருந்தாய்பயன்படுத்த லாம்.
உடல் வலிமை பெற...
நூறு கிராம் கடுக்காய்சிலாசத்து பற்பம் 50 கிராம்- இரண்டையும்ஒன்றாகக் கலந்து கொள்ளவும். இதில் இரண்டு கிராம் அளவு காலை-இரவு சாப்பிட்டு வந்தால் இளைத்த உடல் தேறும்நரம்புகள்முறுக்கேறும்.
பல் நோய்கள் தீர...
கடுக்காய்கொட்டைப்பாக்குபடிகாரம் ஆகிய மூன்றையும் வகைக்குநூறு கிராம் எடுத்து ஒன்றாகத் தூள் செய்து கொள்ளவும். இதில் பல்துலக்கி வர அனைத்து பல் வியாதிகளும் தீரும்.
மூல எரிச்சல் தீர...
கடுக்காய்த் தூளை நீரிலிட்டு கொதிக்க வைத்து ஆற வைத்துஅந்தநீரால் ஆசன வாயைக் கழுவி வர மூல எரிச்சல்புண்ஆகியனஆறும்.
எனவேகடுக்காய் உங்கள் வீடுகளில் கண்டிப்பாய் இருக்க வேண்டியபொக்கிஷ மாகும். கடுக்காய் திருமூலரின் ஆசி பெற்றது. நாமும்அதைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால்இந்த உடல் பெற்ற உபாயம்அறிவோம். நல்லன செய்து நலம் பல பெறுவோம். கடுக் காயைக்கருத்தில் வையுங்கள். திருமூலர் ஆசி உங்களுக்கு எப்பொழுதும்உண்டு. வாழ்க வளமுடன்!
கடுக்காய்:
அறு சுவையில் ஒரு சுவையான உப்பு தவிர்த்து துவர்ப்புஇனிப்பு,புளிப்புகசப்புஎரிப்பு ஆகிய ஐந்து சுவை நிறைந்த கடுக்காயில்வாத-பித்தகப தன்மையை சீர்படுத்தும் சக்தி இருக்கிறது. கடுக்காயின் விதைப் பகுதி நஞ்சு போல் பாவிக்கப்படுவதால் அதைநீக்கிவிட்டு பயன்படுத்த வேண்டும்.
பயன்கள் :
ஜீரண சக்தி அதிகரிப்புஇளமை பாதுகாப்புபுத்தி சக்தி மேம்பாடு,ஐம்புலன்களுக்கும் சக்தி தருதல் ஆகியவை உள்ளன. கனமானதொடைப்பகுதியை சுருக்குதல்தோல்வியாதியை குணப்படுத்துதல்,மண்ணீரல் சக்தியை மேம்படுத்துதல்உடல் வீக்கங்களை போக்குதல்,சுவாசநோய்களை கட்டுப்படுத்துதல்ரத்த நாள அடைப்பை நீக்கிஇதயத்தை வலுப்படுத்துதல் போன்ற பல பலன்களை கடுக்காய்தருகிறது.
இரவு படுக்கச் செல்வதற்கு முன்பு கிராம் கடுக்காய் தூள் எடுத்துசூடான நீரில் கலந்து பருகவேண்டும். இஞ்சிசுக்குகடுக்காயை ஒருமண்டலம் எனப்படும் 48 நாட்கள் காலைமதியம்இரவு என மூன்றுவேளையும் மேலே குறிப்பிட்டதுபோல் உட்கொண்டால் நன்றாகஜீரணமாகும். ஜீரணம் ஆன பின்பு மலமும் நன்றாக வெளியேறும்.
இதனால் உடலின் முழு இயக்கமும் சீரடையும். நோய் அண்டாது.இளமையோடு நீண்ட நாள் வாழலாம். அதனால்தான் "காலையில்இஞ்சி... நண்பகல் சுக்கு... மாலையில் கடுக்காய் மண்டலம் உண்ணகோலை ஊன்றி குழைந்து நடந்தவர் கோலை வீசி குலாவிநடப்பரே..''- என்று சித்த மருத்துவ பாடல் குறிப்பிடுகிறது.      
கடுக்காய்
இயற்கை நமக்கு பல்வேறு வளங்களை வழங்கியுள்ளது. உடல் உறுதிபெறவும்நோயற்ற வாழ்வைப் பெறவும்நோய்களைக்குணப்படுத்தவும்ஆரோக்கியம் மேம்படவும்உடல் உள்ளுறுப்புகள்பலப்படவும் உதவக்கூடிய வழிமுறைகளைதாவரங்கள் மூலம்இயற்கை நமக்கு வாரி வழங்குகிறது. இந்த இயற்கை தரும்முறைகளை செவ்வனே பயன்படுத்தினால் நோயற்ற வாழ்வைவாழலாம். அவ்வகையில் மிகவும் சிறப்பு வாய்ந்தது கடுக்காய்.
கடுக்காயின் தாயகம் இந்தியா. இது மிகவும் பழமையான மரம்.புராணங்களில் இம்மரத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.தேவலோகத்தில் இந்திரன் அமிர்தத்தை அருந்தும்பொழுது ஒரு துளிஅமிர்தம் சிந்தியதாம். அத்துளி பூமியில் விழுந்து கடுக்காய் மரமாகஉருவெடுத்தது என புராணம் உரைக்கிறது. சுமார் 4000 ஆண்டுகட்குமுற்பட்ட சித்த மருத்துவ நூல்களில் கடுக்காய் பற்றிக்குறிப்பிடப்பட்டுள்ளது.
கடுக்காய் மரம் ஓங்கி உயரமாக வளரும் தன்மை கொண்டது. சுமார்20 முதல் 25 மீட்டர் உயரத்தில்அரை மீட்டர் விட்டமுடையஅடிமரத்துடன் காணப்படுகிறது. இது குளிர் காலத்தில் இலையுதிர்த்து,மார்ச் மாத வாக்கில் துளிர்க்கிறது. இலைகள் சிறுகாம்புடன் முட்டைவடிவத்துடன் இருக்கும். பூக்கள் பச்சை நிறம் கலந்த வெண்மைநிறமாகசிறிது மணத்துடன் காணப்படும். காய்கள் பச்சைநிறமுடையதாகவும்முதிரும்போது கரும்பழுப்பு நிறமாக நீண்டபள்ளங்களுடைய தடித்த ஓட்டோடு காணப்படும். ஓட்டினுள்கொட்டை காணப்படும்.
கடுக்காயானது முட்டை வடிவிலோ அல்லது நீண்ட முட்டைவடிவத்துடனோ காணப்படும். கடுக்காயில் ஏழு வகைகள் உள்ளதெனநமது சித்த மருத்துவ நூல்கள் குறிப்பிடுகின்றன. அவை முறையேஅபயன்விசயன்பிரிதிவிசிவந்திஅமுர்தம்ரோகினிதிருவிருதுதம்என்பதாகும். மேலும் மரங்கள்இடம்காயின் வடிவம்தன்மைஇவற்றைப் பொறுத்து கருங்கடுக்காய்செங்கடுக்காய்வரிக்கடுக்காய்,பால் கடுக்காய் எனப் பல வகைகள் உள்ளன.
சிறப்புத் தன்மைகள் :
கடுக்காய் சிறந்த மருத்துவத் தன்மையுடையதாகும். வடமொழியில்மருத்துவரின் காதலி’ எனப்படுகிறது. மருத்துவத்தில் மட்டுமின்றிபொருளாதா£ரம்தொழிலியல் துறைகளில் வெகுவாக பயன்படுகிறது.திரிபலா’ என்பது சித்த மருத்துவத்தில் புகழ்பெற்ற ஒரு கூட்டுமருந்தாகும். இதில் கடுக்காய்தான்றிக்காய்நெல்லிக்காய் என்றமூன்றும் சேர்க்கப்படுகின்றன. கடுக்காய் என்பது ஒரு கடினமானமருந்து என்று நாம் கருதுகிறோம். ஆனால் கடுக்காயை நாட்டுமருந்துக் கடைகளில் எளிதாக வாங்கலாம். கடுக்காயின் தோலைமட்டுமே பயன்படுத்த வேண்டும். உள்ளிருக்கும் பருப்பைப்பயன்படுத்தக்கூடாது. இதன் ஓட்டைப் பொடியாக்கி வைத்துக்கொண்டுபயன்படுத்தலாம்.
பொருளாதாரப் பயன்கள்:
கடுக்காய் மரத்தழைகளை கால்நடைத் தீவனமாகப் பயன்படுத்தலாம்.
கடுக்காய் மரத்திலிருந்து பிசின் எடுக்கலாம்.
மரப்பட்டை பொடியிலிருந்து மோல்டிங் மாவு தயாரிக்கப்படுகிறது.
பல்வேறு தொழில்களுக்கு ஒரு உப மூலப்பொருளாக விளங்கும்டானின் சத்து கடுக்காய்த் தோலிருந்து பெறப்படுகிறது.
தோல் பதனிட டானின் பயன்படுகிறது.
துணிகளுக்குச் சாயமேற்றசிமெண்ட் தயாரிப்புசிலேட் கற்களுக்குநிறமூட்டநிலக்கரியைச் சுத்தம் செய்ய டானின் உதவுகிறது.
டானின் பிரித்தெடுத்த பின் எஞ்சும் கடுக்காய்ச் சக்கை அட்டைக்காகிதம் செய்யவும்ஒட்டுப்பசை தயாரிக்கவும் பயனாகிறது.
முற்காலத்தில் கட்டடம்கோவில் கட்ட கடுக்காய்ச்சாறுசேர்க்கப்பட்டது.
கடுக்காய் கொட்டையிலிருந்து ஒருவகையான எண்ணெய்எடுக்கப்படுகிறது.
குணங்கள் :
வலிமையூட்டிநீர்ப்பெருக்கிஉள்ளழலகற்றி போன்ற குணங்களைக்கொண்டுள்ளது. புண்கள்கண்நோய்இருமல்காமாலைகைகால்நமச்சல்தலைநோய்இரைப்புதொண்டை வலிநாவறட்சிமார்புநோய்மூலம்மேகம்வயிற்றுப்பொருமல்விக்கல் போன்றவைகளைக்குணப்படுத்தும்.
மருத்துவப் பயன்கள் :
கடுக்காய் ஓட்டைத் தூளாக்கி இரவு உணவு உண்டதும் அரைதேக்கரண்டி பொடியைத் தின்றுஒரு டம்ளர் நீரைக் குடித்துவர உடல்வலுவாகும். வாதம் குணமாகும்.
மூன்று கடுக்காய்த் தோல்களை எடுத்துதேவையான இஞ்சிமிளகாய்,புளிஉளுத்தம்பருப்பு சேர்த்து எல்லாவற்றையும் நெய்யில் வதக்கிஎடுத்து உப்பு சேர்த்து துவையலாக அரைத்து சாதத்துடன் பிசைந்துஉண்டு வரஜீரண சக்தி கூடும். மலச்சிக்கல் மாறும்உடல் பலம்பெறும்.
கடுக்காய்த்தூளை 10 கிராம் எடுத்துஅதே அளவு சுக்குத்தூள்,திப்பிலித்தூள் எடுத்து கலந்துகொண்டு காலைமாலை அரை ஸ்பூன்வீதம், 21 நாட்கள் சாப்பிட்டு வரவாதவலிபித்த நோய்கள் குணமாகும்.

15 
கிராம் கடுக்காய்த் தோலை எடுத்து நசுக்கி, 15 கிராம் கிராம்புசேர்த்து ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைத்துஆறியபின்அதிகாலையில் குடிக்க நாலைந்து முறை பேதியாகும். அதன்பின்மலச்சிக்கல்வயிற்றுப் பிணிகள் மாறிவிடும்.

200 
கிராம் கற்கண்டை தூளாக்கிநீர் விட்டுப் பாகு போலக் கிளறி,அதோடு 20 கிராம் கடுக்காய்த் தூளைக் கலந்து வைத்துக்கொண்டு,காலைமாலை அரை தேக்கரண்டி தின்றுவெந்நீர் குடிக்க குடல்புண்,சுவாச காசம்மூலம்வாதநோய்கள் குணமாகும்.
மூக்கிலிருந்து இரத்தம் வந்தால்சிறிதளவு கடுக்காய்த்தூளை எடுத்துமூக்கால் உறியரத்தம் வருவது நின்றுவிடும்.

10 
கிராம் வீதம் கடுக்காய்த்தூள்காசுக்கட்டித் தூள் எடுத்து பொடியாக்கிசிறிதளவு பொடியைவெண்ணெயில் குழைத்துநாக்குப்புண்உதட்டுப்புண்ணில் பூசிவர புண்கள் ஆறும்.
கடுக்காய்நெல்லிக்காய்தான்றிக்காய் மூன்றும் கலந்த திரிபலாசூரணத்தை அடிக்கடி நீரில் கலந்து குடிக்க உடல்பலம் ஏற்படும்.வயிற்றுக் கோளாறு மாறும்.
நாவறட்சிதலை நோய்ஈரல் நோய்வயிற்றுவலிகுஷ்டம்இரைப்பு,தொண்டை நோய்புண்கண்நோய்வாதம்வயிற்றுப்புண்காமாலைபோன்ற நோய்களைக் குணப்படுத்தும் தன்மையும் கடுக்காய்க்குஉண்டு
வேறு பெயர்கள் : அமுதம்அம்ருதாஅரபிஅரிதகிரோகினிவரிக்காய்,ஜீவந்திஅமரிதம்.
தாவரவியற் பெயர் :Terminalla Chebula
ஆங்கிலப் பெயர் : Chebulic Myrobalam, Ink nut
இது மரவகுப்பைச் சேர்ந்தது. இது சில இடங்களில் உயர்ந்தும்சிலஇடங்களில் மிக உயரமின்றித் தாழ்ந்தும் பயிராகின்றது. இதன்பிஞ்சும் பழமுமே மருத்துவத்தில் உபயோகமாகின்றன. தாயோஅறுசுவை உணவை ஊட்டி வளர்ப்பாள். கடுக்காயோ உடற்பிணிகளைஓட்டி உடலைத் தேற்றும். இதனால் தாயினும் கடுக்காய் சிறந்ததுஎனக் கூறப்படுகின்றது. மருத்துவப் பாவனைகளாவன;
குடற்புழுக்களிற்கு
கடுக்காய்த் தோல்வேப்பிலை ஈர்க்குசமஅளவு எடுத்து அம்மியில்வைத்து மைபோன்று அரைத்து அதில் நெல்லிக்காய்ப் பிரமாணம் 1தே. கரண்டி ஆமணக்கெண்ணெயில்  கலந்து காலையில் வெறும்வயிற்றில் நாட்கள் தொடர்ந்து அருந்திவர குடலில் உள்ள புழுக்கள்வெளியேறி குடல் சுத்தம் அடையும்.
கரப்பான் நோய்க்கு (எக்ஸிமா)
கடுக்காய்த் தோலை சூரணித்து 1/2 தே.கரண்டி காலைமாலைபாலுடன் உட்கொண்டு அச்சூரணத்தையே வெந்நீரில் கலந்து உடலில்பூசி ஸ்நானம் செய்து வந்தால் குணமாகும்.
மலச்சிக்கலுக்கு
பச்சைக் கடுக்காயை கொட்டை நீக்கி இடித்து அதற்கு 1/5 பங்குஉப்பிட்டு, 15 நாள் சென்ற பின் பிசைந்து அதை சோற்றுடன்சேர்த்தவாறு தனித்தாவது புசிக்கின் மலம் கழியும்.
உடல் எடையைக் குறைக்க
கடுக்காய்த் தோல்தான்றித்தோல்நெல்லி வற்றல் சம எடை எடுத்துசுத்தம் செய்து இடித்து வஸ்திரகாயஞ் செய்து அதில் 1/2 தே. கரண்டிஅளவு கொள்ளுக் குடிநீருடன் காலைமாலை என இருவேளைசாப்பிட நல்ல பலன் கிடைக்கும்.
தலைவலிக்கு 
வேப்பம்பட்டை கடுக்காய் (கொட்டை நீக்கியது)கோரைக்கிழங்கு,நிலவேம்பு சம எடை எடுத்து தட்டி ஒரு சட்டியில் போட்டு 400 மி.லீ.நீர் விட்டு பாதியாக சுண்டுமளவுக்கு காய்ச்சி ஒரு நாளைக்கு 3வேளை வீதம் தேன் கலந்து சாப்பிட தலைவலி குணமாகும்.
மூலத்திற்கு கடுக்காய் லேகியம்
கடுக்காய் 300 கிராம் எடுத்து இடித்து பங்கு நீர்விட்டு எட்டிலொன்றாகவற்றக் காய்ச்சி வடித்த கசாயத்தில் 300 கிராம் சர்க்கரையைக்கரைத்துப் பாகு செய்து  அதில் சிவதை இஞ்சிமிளகுஓமம்,வாய்விளங்கம்திப்பிலி வகைக்கு 30 கிராம் எடுத்து அரைத்துப்போட்டு பசு நெய் படி விட்டுக் கிண்டி லேகியஞ் செய்து வேளைஒன்றுக்கு கொட்டைப் பாக்குப் பிரமாணம் உட்கொள்ள மூலநோயுடன்பசியின்மைமலசலக்கட்டும் தீரும். கரப்பான் பதார்த்தம் நீக்கவேண்டும்.
கண் மறைப்பிற்கு (கட்காசம்)
கடுக்காய்த் தோலைத் தட்டி சூரணமாக்கி துணியில் முடித்துஆமணக்கெண்ணெயில் இட்டுச் சூரிய ஒளியில் வைத்து  கண்ணில்பிழியலாம்.
கரப்பான்குட்டம் போன்ற நிலைக்கு
கடுக்காய் சூரணத்தை 1/2 தே.கரண்டி காலைமாலை பாலில்அரைத்துச் சாப்பிட வேண்டும்.
பல்லீறு வலிஇரத்தம் வடிதலுக்கு
கடுக்காய்த் தோலை பொடி செய்து அதனைக் கொண்டு பல்துலக்கவிரணம் ஆறுவதுடன் பல்லும் இறுகும்.
நீரிழிவு நோய்க்கு
கடுக்காய்த்தோல் பங்குநெல்லி வற்றல் பங்குகறிவேப்பிலை 1பங்குசிறுகுறிஞ் சா இலை1/2 பங்கு தனித்தனியாக பொடி செய்துஒன்று கலந்து காலைமாலை தே. கரண்டி வெந்நீருடன் பருகலாம்.ஆனால் இலங்கன இரத்தப் பரிசோதனையின் பின் வேண்டுமானால் 3வேளையும் பருகலாம். பாவித்து நல்ல பலன் கிடைத்த ஒன்றாகும்.
இருமலிற்கு
கடுக்காய்த் தோல்திப்பிலி சம எடை எடுத்து இடித்து தூள் செய்து 2கி. தூளை தேனில் சேர்த்து தினமும் வேளை சாப்பிட்டு வரஇருமல் குணமாகும்.
காலையில் இஞ்சி 1 துண்டுமதியம் சுக்கு துண்டுஇரவு 1/2தே.கரண்டி கடுக்காய் தோல் பொடி உண்டால் இளமையுடன்வாழலாம்.
புற்று நோயை குணமாக்கும் எளிய மூலிகைமருத்துவம் !
புற்று நோய் எவ்வளவு கொடூரமானது என்பதைபலரும் அறிந்திருப்போம்.புற்று நோயை குணப்படுத்துவதற்க்கான சிகிச்சைகள் மிகவும்கடினமானதும் செலவு மிகுந்ததும் பக்க விளைவுகளைஏற்படுத்துவதாக அமைந்துள்ளன.
இதற்க்கு மாறாக மிகவும் எளிதான பக்க விளைவற்றஓர் மூலிகை மருத்துவத்தை தெரிந்துகொள்வோம் . 
இந்த சிகிச்சையை கண்டுபிடித்தவர் பிரேசில் நாட்டில்பிறந்தவரும் சிறந்த மருத்துவரும் பாதிரியாருமாகியFr ரோமனோ சகோ (Fr Romano Zago) என்பவர். இவர்கண்டு பிடித்த இம்மருந்தை புற்று நோயால் மிககடுமையாக பாதிக்கப் பட்டவர்கள்கூட உபயோகித்துகுணமடைந்துள்ளனர். . 
இனி இம்மருந்தை எப்படி தயாரிப்பது என்பதைபார்ப்போம் .இதில் பயன்படுத்தப்படும் மூலிகைஎங்கும் எளிதாக கிடைக்கும் சோற்று கற்றாழை ஆகும்.
தயாரிப்பு முறை
சோற்று கற்றாழை 400 கிராம்
சுத்தமான தேன் 500 கிராம்
whisky(or)brandy 50 மில்லி
சோற்றுக் கற்றாழையை எடுத்து பக்கவாட்டில் உள்ளமுட்களை நீக்கி கொள்ள வேண்டும்
தோலை நீக்கிவிடக்கூடாது 
தோலை சுத்தமான துணியினால் துடைத்துக்கொள்ளவேண்டும்
அடுத்த படியாக எவ்வளவு முடியுமோ அவ்வளவுசிறியதாக கற்றாழையை நறுக்கிக் கொள்ளவேண்டும்
நறுக்கப்பட்ட துண்டுகளை ஒரு பாத்திரத்தில் கொட்டிதேன் மற்றும் whisky (or) brandy யுடன் சேர்த்து ஒருகரண்டியால் நன்றாக கலக்க வேண்டும்
இப்போது மருந்து தயாராகி விட்டது 
மருந்தை உட்கொள்ளும் விதம் 
இம்மருந்தை தினமும் மூன்று வேளை உணவுஅருந்துவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பு 15 ml வீதம்உண்ணவேண்டும் .
ஒவ்வொரு முறை பயன்படுத்தும்போதும் மருந்தைநன்றாக குலுக்கிக் கொள்ளவேண்டும்
ஒரு முறை தயாரித்த மருந்து தீர்ந்தவுடன் 10 நாள்இடைவெளி விட்டு மீண்டும் தயாரித்துஉண்ணவேண்டும்
இடையிடையே மருத்துவ பரிசோதனை செய்துகொண்டு நோய் நன்கு குணமாகும் வரை மருந்தைஉட்கொள்ளவேண்டும் .சிலருக்கு மிக குறுகியகாலத்திலேயே இதன் மூலம் நிவாரணம்கிடைத்துள்ளது .இது மிகவும் எளிதான சக்தி மிகுந்த மருந்து ஆகும் .மருந்தை குளிர்சாதன பெட்டியிலோ அல்லது அதிகவெப்பம் இல்லாத இடங்களிலோ காற்று புகாதபாட்டிலில் வைத்திருப்பது நல்லது .
குடற்புண் குணமாக...
பொன்னாங்கண்ணி கீரைச்சாறு, கரிசலாங் கண்ணி கீரைச்சாறு வகைக்கு 100 மி.லி.அளவு எடுத்து ஒன்றாய் கலந்து கொள்ளவும். இதில் 50 கிராம் அதிமதுரத்தை பால்விட்டரைத்து விழுதாக்கி, மேற்படி சாறுடன் கலந்து கொள்ளவும். பின்னர் இதனைமெழுகுப் பதமாய்க் காய்ச்சி வைத்துக் கொள்ளுங்கள். இதை தினமும் காலை, மாலைஇருவேளையும் ஒரு ஸ்பூன் அளவு சாப்பிட்டு வர வாய்ப்புண், வயிற்றுப்புண்போன்றவை குணமாகும்.
நரம்புத் தளர்ச்சி நீங்க...
பொன்னாங்கண்ணிக் கீரை, செம்பருத்திப்பூ, ஆவாரம்பூ, ரோஜாப்பூ, கொன்றைப்பூஆகியவற்றை வகைக்கு 50 கிராம் எடுத்து ஒன்றாகத் தூள் செய்து கொள்ளவும்.இதில் ஐந்து கிராம் அளவு தினசரி உணவுக்குப்பின் இரவில் மட்டும் சாப்பிட்டுவர வேண்டும். இத்துடன் மறக்காமல் ஒரு டம்ளர் பாலும் சாப்பிட்டு வர, இரண்டுமாதங்களில் நரம்புத் தளர்ச்சி பூரணமாய் குணமாகும். மேலும் ஆண்மைக்குறைபாடுகளும் தீரும்.
அபார நினைவாற்றல் பெற...
பொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்ணி, சீந்தில், வல்லாரை ஆகியவற்றை வகைக்கு 100கிராம் எடுத்து ஒன்று கலந்து தூள் செய்து கொள்ளவும். இதில் மூன்று கிராம்அளவு, ஒரு டம்ளர் பசும்பாலுடன் சேர்த்து காலை- மாலை சாப்பிட்டு வர, அபாரநினைவாற்றல் உண்டாகும். மேலும் சோர்வு, பட படப்பு, தூக்கமின்மை, ரத்தஅழுத்தம், மன அழுத்தம், மன உளைச்சல் போன்ற கோளாறுகளும் தீரும்.
வெள்ளைப்படுதல் குணமாக...
பொன்னாங்கண்ணிச்சாறு, கரிசலாங் கண்ணிச்சாறு, பசு நெய், பசும்பால் எனஒவ்வொன்றிலும் வகைக்கு 60 மி.லி. அளவுக்கு எடுத்து ஒன்றாகக் கலக்கிக்காய்ச்சி, மெழுகு பதத்தில் இறக்கி வைத்துக் கொள்ளவும். இதில் தினமும்காலை- மாலை இரு வேளையும் ஒரு ஸ்பூன் (ஐந்து கிராம்) அளவுக்குச்சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் ஒரே வாரத்தில் குணமடையும். கை- கால்எரிச்சல், பித்த மயக்கம் போன்ற பாதிப்புகளும் குணமாகும்.
கண் நோய்கள் விலக...
பொன்னாங்கண்ணிக் கீரையுடன் சிறிது மிளகு, சீரகம், பூண்டு, மஞ்சள்,பெருங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து சூப் செய்து தொடர்ந்து 48 நாட்கள் (ஒருமண்டலம்) சாப்பிட்டு வர, கண் தொடர்பான அனைத்து வியாதிகளும் தீரும்.
மேனியழகு உண்டாக...
100 கிராம் பொன்னாங்கண்ணி (காய்ந்தது), 100 கிராம் பிஸ்தா பருப்புஇரண்டையும் ஒன்றாக்கி அரைத்துத் தூள் செய்து சலித்து வைத்துக் கொள்ளவும்.இதில் ஒரு ஸ்பூன் அளவு காலையும் மாலையும் சாப்பிட்டு வர, உடலுக்கு அழகும்பொன்னிறமும் ஒருசேர உண்டாகும்.
முகப்பரு, தேமல், படர்தாமரை விலக...
முந்திரிப் பருப்பு, முள்ளங்கி விதை சம அளவு எடுத்து, பொன்னாங்கண்ணிச் சாறு விட்டரைத்து பரு, தேமல், படர்தாமரை யின்மீது போட்டுவர, ஒரே வாரத்தில் குணமாகும்.
உஷ்ணம் தீர...
பொன்னாங்கண்ணிக் கீரையை விழுதாய் அரைத்து தலையில் தேய்த்துக் குளிக்க, உடல் உஷ்ணம், கண்நோய்கள் போன்றவை விலகும்.
நீண்ட கூந்தல் வளர்ச்சிக்கு...
இங்கு நான் உங்களுக்காக சித்தர்களால் அருளப்பட்ட ஒரு மிகச் சிறந்த கூந்தல்தைலத்தைப் பற்றிய குறிப்பை சொல்கிறேன். கவனமாய் குறிப்பெடுத்து, கருமையானகூந்தலுக்கு அச்சாரம் போடுங்கள்.
தேவதாருக்கட்டை- 50 கிராம்
கோஷ்டம்- 50 கிராம்
ஏலக்காய்- 50 கிராம்
வெள்ளைக் குண்டுமணிப் பருப்பு- 50 கிராம்
ஏலரிசி- 50 கிராம்
பொன்னாங்கண்ணிச் சாறு- அரை லிட்டர்
முதலில், வெள்ளைக் குண்டுமணியை பசும்பாலில் 12 மணி நேரம் ஊறவைத்து அதன்தோலை அகற்றிவிடவும். பின்னர் ஏலக்காயை உடைத்து உள்ளிருக்கும் விதையைமட்டும் 50 கிராம் அளவுக்கு எடுத்துக்கொள்ளவும். தேவதாரு, கோஷ்டம்இரண்டையும் நன்றாகத் தூள் செய்து, அத்துடன் வெள்ளைக் குண்டு மணிப்பருப்பு, ஏலரிசி ஆகியவற்றைச் சேர்த்து, சிறிது பொன்னாங்கண்ணிச் சாறுவிட்டரைத்து விழுதாக்கவும். அரைத்த விழுதை மீதமுள்ள பொன்னாங்கண்ணிச்சாற்றுடன் கலந்து மறுபடியும் 12 மணி நேரம் ஊற வைக்கவும்.இனி, இரண்டு லிட்டர் நல்லெண்ணெயை அடுப்பிலேற்றி, ஏற்கெனவே தயாரித்துவைக்கப்பட்டுள்ள பொன்னாங்கண்ணி விழுதையும் சேர்த்து, பதமுறக் காய்ச்சவும்.தைலம், கடுகு பதத்தில் திரளும்போது இறக்கவும். சூடு ஆறியபின் தைலத்தைவடிகட்டி பத்திரப்படுத்தவும்.இந்தத் தைலத்தைப் பயன்படுத்தினால் தலைமுடி நன்றாக வளரும். குறிப்பாகப்பெண்களுக்கு அவர்களே அதிசயிக்கத்தக்க அளவில் கூந்தல் மிக நீளமாகவும் கறுமையாகவும் வளரும். வழுக்கைத் தலையில்கூட முடி முளைக்கும். மேலும் உஷ்ணநோய்கள், கண்ணெரிச்சல், பித்த மயக்கம் போன்றவைகூட இருந்த இடம் தெரியாமல்மறைந்து விடும்.
இளநரை நீங்க...
பொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்ணி, கொட்டைக் கரந்தை, குப்பைமேனி, சிறுசெருப்படை ஆகியவற்றை வகைக்கு 50 கிராம் சேர்த்து தூள் செய்து கொள்ளவும்.இதில் ஒரு ஸ்பூன் அளவு காலை- மாலை சாப்பிட்டு பசும்பால் அருந்தி வர இளநரைமறையும். மேலும் நரை வருவதும் நின்றுவிடும்.
நூறாண்டு வாழ...
பொன்னாங்கண்ணியில் தங்கத்தின் சத்து அடங்கியுள்ளது. பொன்னாங்கண்ணியைத்தவறாது நமது உணவில் சேர்த்து வர வேண்டும். பொன்னாங்கண்ணித் தைலம் கடைகளில்வெகு சாதாரணமாய்க் கிடைக்கிறது. அதனை வாங்கி வாரம் ஒரு முறையேனும் தலைமுழுகி வர வேண்டும். பொன்னாங்கண்ணி சித்தர்கள் நமக்கு அருளிய வரம்.பொன்னாங்கண்ணியால் இந்த உடலைப் பண்படுத்தி, ஆத்ம சுகம் பெறுவோம்.

புற்று நோயை குணமாக்கும் எளிய மூலிகை மருத்துவம் ! சோற்றுக் கற்றாழை...
தேடிய சொர்க்கம் அதிசயத் தாவரம் கிராமங்களின் மருந்தகம் எனப் பல்வேறு அடைமொழிகளால் அழைக்கப்படும் கற்றாழை அழகுக் குறிப்புகளின் அத்தியாவசிய மூலப் பொருளாக விளங்குகிறது.
சித்த மருந்துவர்களால் குமரி’ என்றழைக்கப்படும் இத்தாவரத்தின் தாயகம் தென்னாப்பிரிக்கா மற்றும் அரேபிய நாடுகளாகும்.
எப்பொழுதும் வாடாத பெரணி வகையைச் சார்ந்த இத்தாவரம் வெப்பமான பகுதிகளில் வயல் வரப்புகளிலும் உயரமான பகுதிகளில் வேலிகளிலும் வளரக்வடியது. பல பருவங்கள் வாழக்கூடியது.சதைப்பற்றுள்ள நீச்சத்து மிக்க குறுச்செடி. இலைகள் அடுக்கடுக்காக ரோஜா இதழ்கள் போன்று அமைந்திருக்கும்.
கற்றாழையில் சோற்றுக் கற்றாழை சிறு கற்றாழை பெரும் கற்றாழை பேய்க் கற்றாழை கருங் கற்றாழை செங்கற்றாழை இரயில் கற்றாழை எனப் பல வகை உண்டு. இதில் சோற்றுக் கற்றாழை மருத்துவகுணங்களுக்கென்று பயன்படுத்தப்பட்டு வருகிறது. இலைச்சாறுகளில் ஆந்த்ரோகுயினோன்கள்இ ரெசின்கள் பாலிசக்கரைடு மற்றும்ஆலோக்டின்பி’ எனும் பல வேதிப்பொருட்கள் உள்ளன. கற்றாழையிலிருந்து வடிக்கப்படும் மஞ்சள் நிற திரவம் மூசாம்பரம்எனப்படுகிறது.
தளிர்பச்சை இளம்பச்சை கரும்பச்சை எனப் பலவிதமாக உள்ள சோற்றுக்கற்றாழை முதிர்நதவற்றில்தான் மருத்துவத்தன்மை மிகுந்து காணப்படுகின்றன.
இன்றைய அனைத்து அழகுசாதனப் பொருட்களின் தயாரிப்பிலும் தவறாது இடம் பெறுவது கற்றாழைதான். இதன் சாறு சருமத்தின் ஈரப்பதத்தை சமன் செய்வதுடன்இ சர்ம நோய்களையும்குணப்படுத்துகிறது.
முகத்திலுள்ள கரும்புள்ளிகள் தழும்புகள் வெயில் பாதிப்புகள் உலர்ந்த சருமம் என சரும நோய் எதுவாக இருந்தாலும் சிறிது கற்றாழைச் சாறை தினமும் தடவி வர நல்ல குணம் கிடைக்கும்.

தலைமுறையின் இனிய தோழி தானே! வீட்டிற்கொரு கற்றாழை வளர்ப்போம்..

ஆண்கள் சவரம் செய்யும் பொழுது ஏற்படும் கீறல்கள் காயங்களுக்கும் உடனடி நிவாரணம் பெற கற்றாழைச் சாறை பயன்படுத்தலாம்.தீக்காயங்களுக்கும் உடனடி டாக்டர்’ கற்றாழைச்சாறுதான்.
இதன் சாறை இரவு வேளையில் முகத்தில் தேய்த்து காலையில் வெந்நீரால் கழுவ முகத்தில் உள்ள கருமை நீங்கி முகம் பொலிவு பெறும்.
தோலோடு கற்றாழையை பச்சை மஞ்சளோடு சேர்த்து மைய அரைத்து முகம் கழுத்து கை கால்களில் தடவி சில மணி நேரத்துக்குப் பின்னர் வெந்தய நுரை கொண்டு தேய்த்து குளித்தால் உடல் பளபளப்பாகும். தோல் நோய் வராது. கற்றாழை கழியைத் தலை முடியில் தடவி சீவினால் மடி கலையாது. தலையின் சூடும் குறையும். உடல் குளிர்ந்து காணப்படும்.
பிரயாணக் களைப்பினால் சோர்வுற்ற கால்களுக்கு கற்றாழை சாறைத் தடவலாம். சருமத்தில் ஏற்படும் எரிச்சலை அடக்கி சருமத்திற்கு குளிர்ச்சி தரும். திசுக்களைப் புதுப்பித்து ஈரப்பதம் அளிக்கும்.எல்லா வகை சருமத்திற்கும் ஏற்றது. முகத்தின் சுருக்கங்களைப் போக்கி புத்துணர்ச்சியையும் இளமைப் பொலிவையும் தக்க வைத்துக் கொள்ள உதவும். குறிப்பாக வடுக்கள் இருந்த சுவடு தெரியாமல் மறையும்.
கண்நோய் கண் எரிச்சலுக்கு கற்றாழைச் சோற்றை கண்களின் மேல் வைக்கலாம். விளக்கெண்ணெயுடன் கற்றாழைச் சோறைக் காய்ச்சி காலை மாலை என இரு வேளை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வர உடல் அனல் மாறி மேனி பளபளப்பாகத் தோன்றும். நீண்ட கால மலச்சிக்கல் நீங்கும். கல்லீரல் ஆரோக்கியமாக விளங்கும்.
கேசப் பராமரிப்பில் தலைக்கு கறுப்பிடவும் கேசத்தின் வளர்ச்சியைத் தூண்டவும் பயன்படுகிறது. தலையில் ஏற்படும் கேசப் பிரச்னைகள் மற்றும் பொடுகை நீக்குகிறது. தோல் இறுக்கத்திற்கு சுகமளிக்கும் மருந்தாகிறது. கற்றாழை சோறை தேங்காய் எண்ணெயுடன் காய்ச்சி தலைக்குத் தேய்த்து வர கேசம் நன்கு செழித்து வளரும். எண்ணெய் குளியல் செய்ய கண் குளிர்ச்சி மற்றும் சுக நித்திரை உண்டாகும்.
நமது தோலில் நீரை விட நான்கு மடங்கு வேகமாக கற்றாழைச் சாறு ஊடுருவக் கூடியது. வைட்டமின் சி மற்றும் பி சத்துகளும் தாதுக்களும் நிறைந்தது இச்சாறு. சருமத்திலுள்ள கொலாஜன்எனப்படும் கொழுப்பு சத்தை குறைக்கக்கூடிய புரோட்டீன் கற்றாழையில் அதிகம் காணப்படுவதால் முகத்திலுள்ள சுருக்கம் வயோதிக தோற்றத்தை குணப்படுத்துகிறது. மேலும் இந்த எண்ணெய் பெண்களின் மாதாந்திர ருதுவை ஒழுங்குபடுத்தும். கர்ப்பவதிகளுக்கு கருச்சிதைவை உண்டாக்கும்.
உள் மருந்தாக வயிற்றுப் புண் மற்றும் வயிறு சம்பந்தமான நோய்களைக் குணப்படுத்தும்.
சோற்றுக் கற்றாழை சோறை எடுத்து எண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைமுழுகி வர மயிர் வளர்வதுடன் சுகநித்திரையும் உண்டாகும்.

சிற்றாமணக்கெண்ணெயுடன் கற்றாழை சோறு ஊறு வைத்து அரைத்த வெந்தயம் அரிந்த வெள்ளை வெங்காயம் சேர்த்துக் காய்ச்சிப் பதத்தில் இறக்கி வடிகட்டி காலை அல்லது இரவு படுக்கைக்குபோகுமுன்னராகிலும் ஓர் கரண்டி சாப்பிட்டு வர உடற்சூடு நீங்கும். உடல் பெருகும். மேகஅனல் மாறும்.