Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Tuesday, May 10, 2016

இநன்யா ;;; சிறந்த தானம் தர்மம் எது ? INANYA NAMOO NAMA ;;;

இநன்யா ;;; INANYA NAMOO NAMA ;;; சிறந்த தானம் தர்மம் எது ?
25 .இநன்யா நமோ நம.. !!INANYA NAMOO NAMA ;;; 
சிறந்த தானம் தர்மம் எது ?
நான் ஞானத்தை தானம் தருவேன். அது நல் வழிபடுத்தும் உன்னை !
என் சத்ய வார்த்தை என்றுமே தோற்பதில்லை !
தானத்தில் சிறந்தது அன்னதானம் என்று நினைக்கின்றான் மனிதன் ! பிறருக்கு வழிகாட்டுவது தான் சிறந்த தானம் ! இதுவே தர்மம் ! ஏழை எப்போதும் ஏழையாகவே இருக்க தானம் செய்யச் சொல்லி உளர்கின்றான். பிறருக்கு போதிப்பது தர்மம் அல்ல ! உணர்வது தான் இங்கு தர்மம் ! மற்றவரை உணர வைப்பது தான் தர்மம் !
பசித்தவனுக்கு உணவு கொடுப்பதை விட அவன் நாளைய உணவை தேட வழி சொல்லிக் கொடு ! அது தான் சிறந்த தான தர்மம் ! இல்லாதவர்க்கு கொடு என்று சொல்கின்றான் ! எதை கொடுப்பது ? ஒரு வாய் அன்னமா ? இல்லாதவர்களுக்கு அறிவை கற்றுக் கொடு ! உழைப்பு தான் ஞானம் என்று கற்றுக் கொடு ! உன் கடமையை செய்யாமல் கோயிலுக்கு சென்று உண்டியலில் காசு போடுவது தர்மம் ஆகி விடாது !
நீ காசிக்கு சென்றாலும், ராமேஸ்வரம் சென்றாலும் உன் பாவம் தீராது !
நீ அன்னத்தை தானம் செய்வதால் புண்ணியம் ஆகிவிடாது ! பாவத்தை மீண்டும் செய்யாமல் இருந்து பிறருக்கு அறிவை கொடு ! இந்த தர்மம் லோக ஏட்டிலே வரையப்படுகிறது ! பாவத்தை செய்துவிட்டு அன்ன தானம் செய்தால் தர்மம் ஆகிவிடாது ! நீ ஞானத்தை அறிய முற்படு ! அது நான்கு பேருக்கு உதவும் ! இது சிறந்த தானம் !
இங்கு ஆசிரியர்களும் சொல்லித்தரவில்லை !
இங்கு அறிஞன், கவிஞன், புலவனும் சொல்லித்தரவில்லை !
பூசாரியும் சொல்லித்தரவில்லை !
நடிகர்களும் சொல்லித்தரவில்லை !
பொய் வேடம் போட்டு மேடை பேசும் சாமியார்களும் சொல்லித் தரவில்லை !
என்ன செய்வேன் நான் ?
இங்கு இராமாயணம், மகாபாரத கதைகளைப் படித்துவிட்டு அதை மனிதன் காசாக்கவே நான் கண்டேன் ! படித்தவன் இதை கேட்டு காலத்தை விரயமாக்க நான் கண்டேன் ! உழைப்பதற்கு கற்றுக் கொடு ! அறிவை கற்றுக் கொடு ! அது சிறந்த தானம் ! நீ கற்ற வித்தையை பிறருக்கு சொல்லிக் கொடு ! அது மிகப் பெரிய தானம் !
நிதானம் நிம்மதி தரும் ! தானத்தில் சிறந்த தானம் நிதானம் தான் !
தானம் செய் என்று உளராதே ! நீ அன்னத்தை தானம் செய்வதனாலாயே உலகில் பிச்சைக்கார கூட்டம் அதிகமாகிப் போனது ! உழைப்பது இங்கு காணாமல் போனது ! ஆசிரமத்தை கட்டி சாப்பாடு போடுகின்றான் அல்லது கோவில் கட்டி சாப்பாடு போடுகின்றான். மக்களை நல்வழிபடுத்த நலமான வார்த்தைகளை சொல்கின்ற எவரையும் நான் காணேன்.
நீ எதை தர்மம் என நினைக்கிறாய் என்று புரியவில்லை !
இரண்டு கண் இல்லாதோரே இங்கு கை ஏந்தாமல் உழைப்பதை நான் பார்க்கின்றேன் ! நீ கண் தெரிந்தும் கை ஏந்த நான் கண்டேன் !
உழைக்கத் தெரியாதவன், உழைப்பில்லாதவன் தான் கை ஏந்துவான் ! உழைப்பை சொல்லிக் கொடு ! அதை வணங்கு, இதை வணங்கு என்று கூறாதே ! வணங்கி ஒரு பலனும் இல்லை ! பாவம் எதுவென்று உணர் ! உன் நாவிலிருந்து வரும் சொல் தான் பாவம் ! உன் இனிய குரல் எங்கிருந்து வருகிறது ? அதன் சூட்சுமம் என்ன ? அதை படைத்த அந்த இனியவனை அறிய முயற்சி செய்தாயா ? உன் வாழ்வு இனிக்க வேண்டும் என்றால் உன் நாவிலிருந்து வரும் நற்சொல்லால் மட்டுமே இனிக்கும் ! உடலை வளைத்து (தியானம், யோகா) என்று உடலுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கின்றாய். உன் உயிரை அறிய முற்படு !
உடலை ஆட வைக்காதே ! உன் அறிவை ஆட வை !
கதை கேட்டு காலத்தை கழிக்காதே !
கடவுளைப் போற்று ! உன் பெற்றோரை போற்று ! உழைப்பவனை போற்று ! உதவுகின்றவனை போற்று ! அன்பை தானமாக கொடு ! அறிவை தானமாக கொடு ! நீ கற்ற வித்தையை தானமாக கொடு ! பிறருக்கு தானம் செய்ய மனம் இருந்தால் நல் பாதையையும். நல் விஷயங்களையும் கற்றுக் கொடு ! இது சிறந்த தர்மம் !
இங்கு ஏழை என்று இனி யாரும் இருக்கக் கூடாது !
ஏழை, பணக்காரன், நல்லவன், கெட்டவன் என்று கடவுள் படைக்கவில்லை ! எதுவும் ஆவது உன் கையில் தான் இருக்கிறது ! இங்கு தர்மம் சேர்க்க இரக்கம் தேவையில்லை ! இளக்கம் தான் தேவை ! என்னை நினை ! உன்னை ஏழையாக, கோழையாக வைக்க மாட்டேன் ! நீ ஏழையாக இருந்தாலும் கோழையாக இருக்காதே ! தர்மம் செய்வதில் வீரணாய் இரு ! காற்றை உன்னால் தானம் கொடுக்க முடியுமா ? நான் தருவேன் ! உணர் !
உலகில் உயர்ந்த தானம் நிதானம் ! பிறருக்கு வழிகாட்டி ஞானத்தை கற்று கொடுப்பது தான் சிறந்த தானம் !
சோற்றைக் கொடுத்து சோம்பேறி ஆக்காதே ! என் நாமத்தை சொல் !
உன் வீட்டில் தானிய குவியலை குவிப்பேன் ! நீ எனக்கு தானம் செய்வதாயிருந்தால் உன் செயல் அனைத்தையும் என்னிடம் ஒப்படைத்து விடு!
நான் செயலை உருவாக்குபவன் ! மனிதன் பிறரை ஏமாற்றுவான் ! நான் உன்னை ஏமாற்றுவதில்லை ! உண்மையான அன்பு எதையும் எதிர்பார்ப்பதில்லை ! அது தன்னையே கொடுக்கும் !
ஞானத்தை தானம் தருபவன் இநன்யா !

No comments:

Post a Comment