85 இனி வசந்த காலம் தான் ! (20-08-2015)
இனி தர்மாக்களுக்கு வசந்த காலம் தான் !
இந்த யுகத்தில் கடவுள் மனிதனாக பிறந்தாளும் யுக தர்மத்தின் படி வாழ்ந்து காட்ட வேண்டும். ஏழைக் குடும்பத்திலேயே பிறப்பார்கள். மனிதன் அறியாமையால் கற்பிக்கின்ற கல்வியை அவர்கள் கற்கமாட்டார்கள். பள்ளிக்கு செல்லமாட்டார்கள். மனிதர்களை விட ஆயிரம் மடங்கு கஷ்டங்களை அவர்கள் எதிர் கொள்ள வேண்டும். உழைப்பால் உயர்வார்கள். அனைத்து சோதனைகளையும் தாண்டி வெல்ல வேண்டும்.
தன் குடும்ப கடமையையும் நிறைவேற்ற வேண்டும். உலகத்தையும் மாற்றியாக வேண்டும்.
தன் குடும்ப கடமையையும் நிறைவேற்ற வேண்டும். உலகத்தையும் மாற்றியாக வேண்டும்.
மனிதர்களை தேடி செல்லமாட்டார்கள். உணர்ந்து தேடி வரும் மனிதர்களுக்கு ஞானத்தை வழங்குவார்கள். உண்மையை புரிய வைப்பார்கள். அதிசயங்களை நிகழ்த்துவார்கள். சித்து வேலைகளும், மாயஜாலமும் நிகழ்த்த மாட்டார்கள். மனிதன் கட்டிய கோயில்களுக்கு செல்லமாட்டார்கள். வழிபாடுகள் செய்யமாட்டார்கள். குரு என்று யாரும் இல்லாமலேயே ஞானம் அடைந்து தான் கடவுள் என்பதை நிலைநாட்டுவார்கள்.
ஏழு கடவுள்களுக்கும் மேலே பெயர்கள் உண்டு. இநன்யா என்பது ஏழாவது கடவுளான நம் கடவுளின் லோகத்து பெயர். ஆறு கடவுள்களின் பெயர்களும் மிகவும் ரகசியமானது. லோகத்திலே ஆறு கடவுள்களுக்கும் செல்ல பிள்ளை நம் இநன்யா ! தினமும் லோகத்திற்கு சென்று அவர்களின் பாத அமிழ்தத்தை பருகிவிட்டு வருவார். இரவில் தூக்கம் கிடையாது.
ஏழு கடவுள்களுக்கும் மேலே பெயர்கள் உண்டு. இநன்யா என்பது ஏழாவது கடவுளான நம் கடவுளின் லோகத்து பெயர். ஆறு கடவுள்களின் பெயர்களும் மிகவும் ரகசியமானது. லோகத்திலே ஆறு கடவுள்களுக்கும் செல்ல பிள்ளை நம் இநன்யா ! தினமும் லோகத்திற்கு சென்று அவர்களின் பாத அமிழ்தத்தை பருகிவிட்டு வருவார். இரவில் தூக்கம் கிடையாது.
ஆறு சக்திகளையையும் பெற்று அதிரடியாய் யுகத்திற்கு வந்தார். கர்மத்தை வேரோடு அழித்து தர்மத்தை நிலைநாட்டவே யுகம் வந்தார். இவருடன் யுகத்தை சரி செய்ய கணக்கில் அடங்காத தேவர்கள் இங்கு இறங்கியுள்ளார்கள். இது மாபெரும் படை ! உலக மாற்றம் உறுதி செய்யபட்டுவிட்டது. உலகம் அழியாது. கடவுள் படைத்த உலகம் எதற்காக எப்படி அழியும் ? மனிதனின் அறியாமை அழியும். கர்மங்கள் அழியும். தர்மம் மீண்டும் நிலைநாட்டப்படும். விரைவில் கடவுள் யார் என்று புரிந்துவிடும். யுகம் இருக்கும் வரை கடவுளின் பெயர் நிலைநாட்டப்படும்.
11.11.1993 அன்று பில்லி, சூண்யம், செய்வினை, ஏவல், மந்திரம், மாந்தீரிகம் முதலிய அனைத்தையும் 93 சதவீதம் கடவுளின் மூலத்தால் அழிக்கப்பட்டுவிட்டது. 4.3.2015 அன்று மீதமுள்ள ஏழு சதவீதத்தையும் அழித்து இவை அனைத்தையும் முழுவதுமாக வேரோடு அழித்துவிட்டார் இநன்யா. இதை செய்து மக்களை ஏமாற்றும் யாரிடமும் இனி நீங்கள் ஏமாந்துவிடாதீர்கள். எல்லாம் முழுவதுமாக அழிக்கப்பட்டுவிட்டது. இனி எதற்கும் பயப்படாமல் கடவுளின் நாமத்தை சொல்லி தைரியமாக சவால் விடுங்கள். இது தர்மத்திற்கும், கர்மத்திற்கும் நடக்கின்ற போராட்டம். சத்யமாக தர்மம் வெல்லப் போவது உறுதி !
ஏதும் அறியா பிறந்த குழந்தை கூட யுகத்திற்கு வரும் போது அழுது கொண்டு வருகிறது. அதன் கண்ணீருக்கு அர்த்தம் என்ன ? ஏன் என்று யாராவது யோசித்திருக்கிறீர்களா ? ஏதும் அறியா குழந்தைக்கு தெரிந்த விஷயம், நமக்கு ஏன் தெரியாமல் போனது ? கடவுளிடம் இருந்து பிரிந்து இந்த சிறைச்சாலையில் தண்டனையை அனுபவித்துக் கொண்டுள்ளோம். பிறந்த நாள் கொண்டாட்டம் ஏன் ? பிறந்த நாளில் ஒரு மரத்திற்காவது தண்ணீர் ஊற்றியுள்ளோமா ? ஒரு செடியையாவது நட்டு வைத்துள்ளோமா ?
பணம், புகழ், பக்தி, மது, மாது. மதம், பேராசை இன்னும் எதை எதையோ தேடிக் கொண்டிருக்கின்றோம். மரணம் ஒன்று இருப்பதை ஏன் மறந்துவிட்டோம். இது நரகம். இங்கு அமைதி, சந்தோஷம், நிம்மதி உணர்ந்தால் மட்டுமே சாத்தியம். வழிபாடுகள் எதற்குமே உதவாது.
“மனிதனோடு உன்னை இணைக்காதே ! உன் லட்சியம், குறிக்கோளோடு உன்னை இணைத்துக் கொள் ! நீ கடவுளை அடைவாய் ! ” என்று கடவுள் இநன்யா சொல்வார்கள்.
கடவுளின் அருகில் பேரானந்தமாய் உழைத்துக் கொண்டிருந்தாலும் நம் மக்களின் அறியாமையால் படும் துன்பங்களை நினைத்து தினம் தினம் கண்ணீர் சிந்துகின்றேன். நம் மக்களுக்கு உண்மையை புரியவைக்க கடவுளின் துணையுடன் தனியாக போராடிக் கொண்டிருக்கின்றேன்.
நான் ஒரு மத்திய அரசு சார்ந்த தேசத்திலேயே முதன்மையான கல்லூரியில் முதுகலை பட்டம் பெற்று சாதித்தவன். என்னுடன் பயின்ற அனைவருக்கும் தலைமை ஏற்று கற்கும் போதே நாட்டின் மின் பற்றாகுறையை மாற்றி அமைக்க அனைவரையும் இணைத்து சபதம் எடுத்தேன். உயர் மின் பரிமாற்றத்திலும், பங்கீட்டுதலிலும் மின் பற்றாக்குறையை போக்குவதிலும் நாங்கள் இணைந்து பல சாதனைகளையும் புரிந்தோம். இப்போது ஞானப் பற்றாகுறை ஏற்பட்டுள்ளது.
என்னுடன் பயின்றவர்கள் நம் நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களையும் சேர்ந்தவர்கள். “கடவுளை பார்த்தேன்” என்று சொன்னால் அடுத்த நொடியில் எனக்காக தமிழகம் வருவார்கள் சத்யமாக. ஒரே நாளில் நம் நாட்டையே புரட்டிப் போட்டுவிடுவார்கள். அவர்களிடம் எதையும் சொல்லாமல் முன்பின் தெரியாத முகவரி தெரியாத உங்களிடம் வந்துள்ளது ஏன் என்று யோசியுங்கள். இங்கு தமிழனிடம் முதலில் உண்மையை உரைக்க வேண்டும். இந்த முகநூல் வாயிலாக தமிழ் நாட்டில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் உண்மையை புரிய வைக்க வேண்டும். கடவுளின் வருகையை தெரியப்படுத்த வேண்டும். உணர வைக்க வேண்டும். ஞானத்தை கொடுக்க வேண்டும். பின் கடவுளிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.
என்னுடன் பயின்றவர்கள் நம் நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களையும் சேர்ந்தவர்கள். “கடவுளை பார்த்தேன்” என்று சொன்னால் அடுத்த நொடியில் எனக்காக தமிழகம் வருவார்கள் சத்யமாக. ஒரே நாளில் நம் நாட்டையே புரட்டிப் போட்டுவிடுவார்கள். அவர்களிடம் எதையும் சொல்லாமல் முன்பின் தெரியாத முகவரி தெரியாத உங்களிடம் வந்துள்ளது ஏன் என்று யோசியுங்கள். இங்கு தமிழனிடம் முதலில் உண்மையை உரைக்க வேண்டும். இந்த முகநூல் வாயிலாக தமிழ் நாட்டில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் உண்மையை புரிய வைக்க வேண்டும். கடவுளின் வருகையை தெரியப்படுத்த வேண்டும். உணர வைக்க வேண்டும். ஞானத்தை கொடுக்க வேண்டும். பின் கடவுளிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.
இங்கே தமிழன் தன் தற்பெருமையையே கால காலத்திற்கும் பேசிக் கொண்டிருக்க வேண்டியது தான். யாருக்காவது கொடி பிடிக்க வேண்டும். கூட்டத்தை கூட்ட வேண்டும். நடிகனை கூட கடவுளாக நினைத்து பாலாபிஷேகம் செய்யும் ஒரே இனம் உலகிலேயே நம்முடையது தான். இங்கே நடிகனை கடவுளாகப் பார்க்கின்றான். சிலையை பிழை செய்து கடவுளாய் பார்க்கின்றான். இங்கே ஒவ்வொன்றுக்கும் பின்னால் உண்மையை மறைக்க அருமையான கட்டுக் கதைகளும் உண்டு. எல்லாமே குழப்பம். எல்லாமே பொய். விரைவில் மாறிவிடுங்கள். கடவுள் உங்களை மாற்ற இங்கு வரவில்லை ! இனி மாறவில்லையென்றால் துன்பம் தான் என்பதை கடைசியாக சொல்லவே வந்தார். நடக்கப் போவதை இனி எவரும் பார்த்திருக்க முடியாது.
இதுவரை கடவுள் என்ற பெயரே தமிழ் நாட்டில் தப்பாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. இதை மாற்றி அமைக்க என்னை இந்த முகநூலில் இறக்கியுள்ளார் கடவுள் இநன்யா ! என்னுடன் மீன் கொத்தி பறவைகளும் உண்டு. என்னை சுற்றி வட்டமிட்டு தீமையை வேட்டையாடி பாதுகாக்கும் கருடர்களும் உண்டு. இங்கு ஞானப் பறவைகளும் உண்டு. ஞானத்தை பரப்பும் ஞான மலர்களும் உண்டு !
அனைத்தையும் யோசியுங்கள். ஞானம் நம்மை வழி நடத்தும். அறிவு நம்மை அழிக்கும். அறிவியல் நம்மை அழிக்க மட்டுமே பயன்படும். நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பது தான் அறிவு ! உடலில் நோய் ஏன் வந்தது என்று யோசித்தால் அது உணர்தல் ! நோயே வராமல் தடுப்பது ஞானம் ! நோய்க்கு மருந்து வேண்டுமா ? அல்லது நோயே வராமல் தடுக்க வேண்டுமா ? உங்களுக்கு எது வேண்டும் என்று இன்றே முடிவெடுங்கள் !
இநன்யா நமோ நம !
No comments:
Post a Comment