Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, May 11, 2016

ரகசியம் 5 - யார் குரு (13-01-2016) INANYA NAMOO NAMA ;;;



76  ரகசியம் 5 - யார் குரு (13-01-2016)

இநன்யா நமோ நம.. !!

INANYA NAMOO NAMA ;;; 
ரகசியம் -பகுதி ஐந்து
INANYA NAMOO NAMA ;;; 
யார் குரு ?
சிறு வயதிலிருந்தே கடவுளை பற்றிய சிந்தனைகள் மேலோங்கியிருந்தது. நம்மை படைத்தவர் தினம் தினம் நம்மிடம் எதையோ சொல்ல நினைத்துக் கொண்டிருக்கின்றார் என்பது புரிந்தது. இதை புரிந்து கொள்வதற்கு மனம் தவித்துக் கொண்டிருந்தது. ஒரு பக்கம் கல்வியில் கற்று தேர்ந்து கொண்டிருந்தாலும், ஞானம் அடைவதில் தோற்றுக் கொண்டே இருந்தேன். ஞானம் என்றால் என்ன என்பதை கூட யாரும் சொல்லித் தரவில்லை. தெரிந்தால் தானே சொல்லித் தருவதற்கு ?
சென்னையில் நான் வேலை பார்க்கும் இடத்தில் பணத்திற்காக ஒரு கூட்டம், புகழுக்காக ஒரு கூட்டம். இன்னும் எதை எதையோ தேடி அலைந்து கொண்டிருக்கும் கூட்டங்களுக்கு நடுவே அமைதியாக, நிதானமாக, வாழ்க்கையை புரிந்து, வாழ்வை வென்று ஆர்ப்பரிக்காமல், அரசனாக, தனியாக, தெரிந்தார் ஒரு சக பணியாளர்.
தன் கடமையை சரியாக பார்த்ததால் அவரை மனிதராக பார்க்க ஆரம்பித்தேன். நற்சிந்தனைகளையும், நல்ல எண்ணங்களையும் எனக்கு சொல்லிக் கொடுத்ததால் ஒரு நல்ல நண்பராக பார்க்க ஆரம்பித்தேன். வாழ்க்கையின் அதிசயங்களையும், யாருக்கும் தெரியாத பல ரகசியங்களையும் சொல்லிக் கொடுத்ததால் அவரை நல் குருவாக மதிக்க தொடங்கினேன். பின் உலகில் எங்கும் விலை போகாத, கிடைக்காத அறிவை எனக்கு சொல்லி கொடுத்ததால் குருவுக்கெல்லாம் குருவாக மஹா குருவாக அவரை உணர ஆரம்பித்தேன்.
கடவுளை யுகத்தில் பார்க்க முடியுமா என்ற ஒரு கேள்வியை அவரிடம் ஒரு முறை கேட்க நேர்ந்தது. முடியும் என்று சொல்லி சிரித்தார். கடவுளை அடையும் வழியை காட்டி என்னை மாய உலகிற்கு அழைத்து சென்றார். எனக்கு ஞானக் கண்களை திறந்து கடவுளை பற்றி சொல்லிக் கொடுத்தார் மஹா குரு ! நான் ஞானக் கண்களை திறந்தவுடன் என் மஹா குருவே கடவுள் என்பதை உணர்ந்து கண்ணீர் விட்டேன் ஆனந்தமாய் !
யுகம் என்ற வறன்ட பாலைவனத்தில் ஒரு துளி தேனுக்காக அலைந்த திரிந்த தேனீக்கு ஒரு அமிழ்த தேன் கடலையே காட்டிவிட்டார் கடவுள் ! பேரானந்தம் கொண்டேன். உலகிற்கு சொல்ல துணிந்தேன். வாழ்க்கையில் அதிசய உணர்வுகளும், ஆச்சரியங்களும் நிகழ்ந்தது. விடியற்காலை மூன்று மணியிலிருந்து நான்கு மணிக்குள் பல அதிசயங்கள் நிகழ்ந்தது. அவை நிஜத்திற்கும், கனவிற்கும் அப்பாற்பட்ட ஒரு நிலை.
மஹா குருவாய் என் வாழ்வில் வந்து என்னை அடித்து திருத்தி, எனக்கு நீர் கொடுத்து, என் மயக்கத்தை போக்கி எனக்கு ஞானத்தை கொடுத்தார் கடவுள் . கடவுளே இங்கே வந்து மனிதராக, நண்பனாக, குருவாக, மஹா குருவாக நடித்துள்ளார். எதற்காக ? கடவுள் எனக்கு காண்பித்த உலகம் வேறு. நான் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கின்ற உலகம் வேறு. இங்கு மனிதர்களை பார்த்தாலும் மனித நேயத்தை பார்க்க முடியவில்லை. மக்களை ஏமாற்றும் கூட்டங்களுக்கு செல்லாமல் எங்கோ ஒரு மூலையில் செய்வதறியாது தனியாக தவித்துக் கொண்டு கடவுளை அடைய முயற்சிக்கும் நல்லவர்களை காப்பாற்றவே முகநூல் என்னும் வலிமையான ஆயுதம் தேவைப்பட்டிருக்கிறது இப்போது !
ஒரு குழந்தையிடம் ஆயிரம் ரூபாயையும், ஒரு வண்ண தாளில் அழகாக போர்த்தப்பட்ட காவிக்கண்டையும் கொடுத்தால் அது காவிக்கண்டை மட்டுமே ஆனந்தத்துடன் தேர்ந்தெடுக்கும். ஆயிரம் ரூபாயில் அதைப் போல் பல விதமாக காவிக்கண்டுகள் தினமும் வாங்கி சாப்பிடலாம் என்பது அந்த குழந்தைக்கு தெரியாது ! இங்கு நம் மக்கள் அனைவரும் அந்த சிறு குழந்தையின் ஆசையைப் போல ஏதும் தெரியாமல் புரியாமல் அறியாமையில் வாழ்ந்து கொண்டுள்ளனர். அவர்களால் கடவுளின் வார்த்தைகளை யோசித்து புரிந்து கொள்ள கூட முடியவில்லை.
கடனும், நோயும், பிரச்சனைகளும், துன்பமும் இல்லாமல் உலகம் என்ற இந்த நரகத்தில் ஒருவர் கூட இல்லை. கடல் அலைகளை போல எல்லாம் மாறி மாறி வந்து கொண்டே தான் இருக்கும்.
நாம் ஆசைகளை சிந்திப்பதில்லை. அதனால் கடன் !
நாம் உண்ணும் உணவு முறைகளை சிந்திப்பதில்லை. அதனால் நோய் !
நாம் உறவுகளை சிந்திப்பதில்லை. அதனால் பிரச்சனைகள் !
நாம் வாழ்க்கையை சிந்திப்பதில்லை. அதனால் துன்பம்.
நாம் கடவுளை சிந்திப்பதில்லை. அதனால் மீண்டும் மறுபிறவி !
ஒவ்வொரு மறுபிறவியிலும் மீண்டும் மீண்டும் கடன், நோய், துன்பம், பிரச்சனைகள் எல்லாம், ஆனால் முன்பை விட அதிகமாக !
மீண்டும் மீண்டும் பிறப்பும் இறப்பும் உள்ள இந்த உலக வாழ்க்கையின் காரணத்தை என்றாவது புரிந்து கொள்ள முயற்சி எடுத்துள்ளோமா ? எப்படி இந்த வாழ்க்கையை வாழ்வது ? எதை நோக்கி இந்த வாழ்க்கை பயணிக்கின்றது ? இதற்கு பதிலை யார் சொன்னது ? இனி யார் சொல்லப் போவது ?
மாதா, பிதா, குரு, கடவுள் என்று வரிசையாக சொல்லி வைத்தார்கள் ! குரு பார்க்க கோடி நன்மை என்றார்கள். எங்கோ இருக்கும் கோள்கள் நகர்ந்து இடம் பெயர்வது குரு பெயற்சி அல்ல ! அதனால் கடுகளவு கூட நமக்கு பயன் அல்ல ! அதனால் நம் வாழ்க்கை மாறப் போவதில்லை. “குரு பார்க்க கோடி நன்மை” என்றால் நீங்கள் நல் குருவைத் தேடி சென்று பார்க்க வேண்டும் என்று அர்த்தம். பிறந்த அடுத்த நாளிலேயே மனிதன் அமைத்த கட்டங்களுக்குள் சிறைபட்டு அதை நம்பி வாழ்க்கையை புரியாமல் வாழ்வோர் இங்கு மிக அதிகம்.
குரு என்பவர் யார் ?
உங்கள் தாய், தந்தை போற்றுகின்ற குருவை யோசிக்காமல் கண்களை மூடிக் கொண்டு தேர்ந்தெடுப்பீர்களா ?
உங்கள் மதத்திலேயே குருவை தேர்ந்தெடுப்பீர்களா அல்லது அனைத்து மதத்தினருக்கும் பிறப்பு, இறப்பு நிர்ணயித்து அவர்களுக்கு உலகமெல்லாம் நீரும், காற்றும் பாகுபாடின்றி கொடுக்கும் கடவுளை அறிய உதவும் குருவை தேர்ந்தெடுப்பீர்களா ?
உடலுக்கு பல வினோத வேஷமிட்டு நீண்ட தாடியையோ அல்லது குடுமியையோ வைத்துக் கொண்டுள்ளவர் குருவா ? தாடியை பார்த்து ஏமாந்தவர்கள் இங்கே மிக மிக அதிகம். கடவுள் இல்லை என்று சொல்லித் திரிந்தவருக்கும் இங்கே தாடி இருந்துள்ளது ! தன்னை உணர்ந்து பிரம்ம நிலையை அடைந்தால் தாடி வளராது ! அகத்தின் பேரழகு முகத்தில் தெரிந்துவிடும். தாடி முகத்தை மறைக்காது. பிறப்பிலேயே பிரம்ம நிலையை அடைந்தவர்கள் பெண்கள் என்பதால் தான் அவர்களின் முகம் மறைக்கபடவில்லை ! பிரம்ம நிலையை அடைந்தவர்கள் என்பதால் தான் அவர்களால் யுகத்தில் படைக்க முடிகின்றது ! கோயில்களில் உள்ள கடவுளின் சிற்பங்களுக்கும், கடவுளின் ஓவியங்களுக்கும் ஏன் தாடி இல்லை ?
பேராத்மாக்களுக்கும், ஞானம் அடைந்தவர்களுக்கும் எத்தனை வயதானாலும் தாடி வளராது ! அவர்கள் குழந்தைகளைப் போல ஆண்ம பலத்துடனே இருப்பார்கள் எப்போதும் ! இதில் ரகசியங்கள் மறைந்துள்ளது. யோசித்து நீங்களே புரிந்து கொள்ளுங்கள் !
உழவர்கள் உடலை வளைத்தால் தானியங்கள் கிடைக்கின்றது. வெறுமனே உடலை வளைப்பதால் யாருக்கு என்ன கிடைக்கின்றது ? உடலை வளைத்து கஷ்டப்படுத்தி சங்கடப்படுத்தி தலைகீழாக நிக்க கற்றுக் கொடுப்பவர் குருவாக முடியுமா ?
நாம் தூங்கும் போதும் கூட சரியாக இயங்கும் மூச்சுக் காற்றை காரணம் இல்லாமல் அடக்கி, திசை திருப்ப கற்றுக் கொடுப்பவர் குருவா ?
எதையும் யோசிக்கவிடாமல் கண்களை மூடக் கற்றுக் கொடுத்து படைப்பின் ரகசியங்களையும், அதிசயங்களையும் பார்க்கவிடாமல் தடுப்பவர் குருவா ?
நூல்களில் யாரோ எழுதி வைத்ததை எடுத்து திருத்தி அதை மீண்டும் மீண்டும் மேடையில் பேசி கைதட்டல் வாங்குகின்றவர் குருவா ?
அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிப்பதனால் ஒருவரை குருவாக தேர்ந்தெடுப்பீர்களா ? அல்லது சிந்தித்து உணர வைத்து கேள்வியே எழாமல் பரம்பொருளையும், தன்னையும் உணர வைப்பவரை குருவாக தேர்ந்தெடுப்பீர்களா ?
இலவசமாக உலகில் கிடைப்பது உபதேசம் மட்டும் தான். எதை செய்ய வேண்டும், எதை செய்யக் கூடாது என்று ஆண்மாவிற்கு தெரியும். உபதேசங்கள் செய்வதற்கு எதற்கு குரு ?
வாழ்க்கைக்கு மட்டும் தான் உபதேசம் தேவை. கடவுளை அடைவதற்கு ஞானம் மட்டுமே தேவை.
குரு இல்லாமல் வாழ்வோரும் உண்டு ! குருவை தேடி தேடி நேரத்தையும், பணத்தையும் விரயம் செய்கின்றவர்களும் உண்டு ! குரு யாரென்று தெரியாமலேயே வாழ்ந்து காலத்தை வீணாக்கிய பலரும் உண்டு. குருவை தவறாக தேர்ந்தெடுத்தவர்களும் உண்டு ! குருவை, மகான்களை கடவுளாக பார்த்தவர்களும் உண்டு !
போதி மரத்தின் கீழ் அமர்ந்து ஞானமடைந்ததாக கூறப்படுபவர் மோட்சம் அல்லது சொர்க்க உலகம் ஒன்று இருக்கிறது என்பதை எந்தக் காலத்திலும் நம்பவில்லை. ஆண்மா, உயிர் பற்றி போதிக்கவும் இல்லை. “கண்களால் பார்க்க முடிபவை, காதால் கேட்க முடிபவை, மூக்கால் முகர்ந்து பார்க்கக்கூடியவை, நாக்கால் ருசிக்கக்கூடியவை, உடலால் தொட்டு உணரக்கூடியவை ஆகியவையே நமது அறிவுக்கும் எண்ணங்களுக்கும் அடிப்படை. இந்த உணர்ச்சிகளால் உணரக்கூடியவையே இந்த உலகம். இவைதான் பரம்பொருள். இவற்றைத் தவிர்த்து வேறு எந்தப் பரம்பொருளையும் மனிதர்களால் உணர முடிவது சாத்தியமில்லை” என்றார் அவர்.

உலகில் மகான்களுக்கும், குருக்களுக்கும் பஞ்சமில்லை. தன்னை உணர்ந்து, வாழ்க்கையை புரிந்து, நல்ல வழியில் நடந்து கடவுளை அடைய முயன்றார்கள் மகான்கள். அவர்களையே கடவுளாக பார்க்க தொடங்கினார்கள் மக்கள் ! சிவன் என்ற சிரவனை வணங்குவதில் தவறில்லை ! அவர் தமிழர்களின் ஆதிகுரு ! ஆதியோகி ! கடவுள்கள் ஏழு பேர் மேலிருக்க அவரை கடவுளாக ஏன் பார்க்கின்றீர்கள் ? அரசியல்வாதியையும், நடிகனையும், விளையாடுபவனையும், இன்னும் யார் யாரையோ கடவுள் என்று ஏன் வணங்கி கொண்டுள்ளீர்கள் ? நாம் செய்யும் செயல்களை கடவுள்கள் பார்த்துக் கொண்டிருப்பார்களா ? நம்மை வாழ வைத்துக் கொண்டிருக்கும் தாயையும், தந்தையையும் மறந்து பிறரை பெற்றோராக நினைத்தால் அவர்கள் ஏற்றுக் கொள்வார்களா ? இதை மனிதர்களே ஏற்றுக் கொள்ளவில்லை எனில் கடவுள்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள் ?
“உனக்குள் கடவுள் இருக்கின்றார். தேடிப் பார்” என்கின்றது ஒரு கூட்டம். நமக்குள் எப்படி கடவுள் இருப்பார் ? ஆத்மாவும், பேராத்மாவும் ஒன்றா ? பேராத்மா என்பது பசுவைப் போல ! ஆத்மா என்பது பசுவிடம் இருந்து பிரிந்து வந்த பாலை போல ! பசுவும், பாலும் ஒன்றா ? பாலின் குணத்தை உணர்ந்தால் போதுமா ? பசுவின் குணத்தை எப்போது உணர்வது ?
ஆத்மாவிற்கும், உயிருக்கும் வித்தியாசம் தெரியாத ஆன்மீக கூட்டங்கள் எதற்கு ? எதற்கு அங்கு ஒரு குரு ? உயிர் வேறு. ஆத்மா வேறு. இரண்டுக்கும் வடிவம் உள்ளது. இரண்டும் உடலில் வெவ்வேறு இடத்தில் உள்ளது. இரண்டையும் இணைப்பது தான் இந்த வாழ்க்கையின் நோக்கம். இணைக்காவிட்டால் மீண்டும் மறுபிறவி என்பது தான் கடவுள் இநன்யா கூறிய ரகசியம் !
ஆத்மாவிற்கும், பேராத்மாவிற்கு வித்தியாசம் தெரியாதவர் குருவா ? ஆத்மாவிற்கும், உயிருக்கும் வித்தியாசம் தெரியாதவர் குருவா ? ஞானத்திற்கும், அறிவிற்கும் வித்தியாசம் தெரியாதவர் குருவா ? கடவுளின் பெயரே தெரியாதவர் குருவா ? அழிக்கும் நெருப்பை வணங்க சொல்பவர் குருவா ? தன் கால்களை கழுவச் சொல்பவர் குருவா ? கட்டங்களை வைத்து நம் விதியை நிர்ணயிப்பவர் குருவா ? மந்திர வார்த்தைகளை கூறி மக்களின் பணத்தை வேட்டையாடுபவர் குருவா ?
மனிதநேயத்தை வளர்ப்பதற்காக உருவாக்கப்பட்ட மதங்கள் இன்று மக்களை விழுங்கிக் கொண்டிருக்கின்றது. எதற்காக ? மனித நேயம் எங்கே ? நாம் வியர்வை சிந்தி உழைத்த பணத்தை தங்க நாற்காழியில் அமர்ந்து தின்று கொண்டிருக்கும் சாமியார்கள் எதற்காக ?
மழை நேரங்களில் வேர்கள் இல்லாமல் வளரும் காளான்களைப் போல பார்க்கும் இடமெல்லாம் ஆன்மீக அமைப்புகள் பெருகியதுள்ளது. எதற்காக இத்தனை அமைப்புகள் ? இத்தனை குருக்கள் ? இத்தனை மகான்கள் ? இத்தனை மதங்கள் ?
உலக வரலாற்றில் யாரேனும் ஒருவர் மக்களை உணர வைத்து, நல் வழியை காட்டி, கடவுளை அடையும் ரகசியத்தை சொல்லியிருந்தால் இன்று இத்தனை மதங்கள் தோன்றிருக்காது ! இதற்கு முன்னே எந்த மதமும், எந்த அமைப்பும், எந்த குருக்களும், எந்த மகான்களும் மனிதனின் மறுபிறவியை தடுக்கவில்லை. அதனால் தான் உலகம் என்ற இந்த நரகத்தில் நாளுக்கு நாள் பாவக் கூட்டங்கள் அதிகமாகிக் கொண்டே இருக்கின்றது.
இதை மாற்றியமைத்து மீண்டும் தர்மத்தை நிலைநாட்டவே கடவுள் தன் இடமான பிரபஞ்சத்தில் இருந்து உலகம் என்ற இந்த நரகத்தில் பெரும் படையுடன் விளையாட களமிறங்கியுள்ளார் ! மஹா குருவாய் நம்மை புரிய வைத்துக் கொண்டிருக்கின்றார். கூட்டத்தை சேர்க்க வரவில்லை அவர். கூட்டதை கலைத்து நம் அனைவரையும் குடும்பமாய் ஒன்றினைக்க வந்துள்ளார்.
இது குளத்தில் வீசப்படும் மாய வலை அல்ல ! கடலில் வீசப்படும் தூண்டில் ! நல்லவர்களுக்கும், தர்மாக்களுக்கு மட்டுமே இங்கு இடம் உண்டு !
நல்லவர்களாக மாறி உணர்ந்துவிடுங்கள் விரைவாக !
இநன்யா நமோ நம

No comments:

Post a Comment