Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, May 11, 2016

இநன்யா ;;; அடக்கு ! இல்லையேல் அடக்குவேன் ! அடங்கா மனமும், ஆர்பரிக்கும் பேய்களும் எனக்குள் அடங்கும். ஆணந்தமானவன் நானடா ! INANYA NAMOO NAMA ;;;

இநன்யா ;;;  INANYA NAMOO NAMA ;;; அடக்கு ! இல்லையேல் அடக்குவேன் ! அடங்கா மனமும், ஆர்பரிக்கும் பேய்களும் எனக்குள் அடங்கும். ஆணந்தமானவன் நானடா !
53 .இநன்யா நமோ நம.. !!INANYA NAMOO NAMA ;;; 
அடக்கு ! இல்லையேல் அடக்குவேன் ! அடங்கா மனமும், ஆர்பரிக்கும் பேய்களும் எனக்குள் அடங்கும். ஆணந்தமானவன் நானடா !
பக்குவப்படு என் ஞானக் குழந்தையே !
மனிதனின் ஆறு அங்குல நாக்கு எல்லாவற்றிலும் நீளமானது. மரணத்தின் வாசல் உன் நாக்கு தான். அதை கட்டுப்படுத்து ! மௌனத்தால் உன் நாக்கை கட்டிப்போடு ! புலன்களில் வாய் வழி தான் எல்லா துன்பமும் வருகிறது. உண்ணும் உணவிலிருந்து பேசும் பேச்சு வரை, மறு பிறப்பை உன் நாக்கு தான் நிர்ணயிக்கிறது ! மண்ணில் குனிந்து இலை, தளை சாப்பிடும் பசுவின் நாக்கில் பக்குவம் நிறைய உண்டு !
உன் நாக்கு உனக்கு நோயையே உருவாக்குகிறது. எப்போதும் ஊற்று ஒன்று ஊற வைத்தேன். உனக்குள் ஏன் என்று உணர்ந்தாயோ ?
உன் கர்மம் போகவும், பாவம் போகவும், உன் உமிழ் நீர் சிறப்படும். என்னை நினைத்து என் நாமத்தை சொல்லிப் பார் ! உன் உமிழ் நீர் இனிக்குமடா ! என் நாமம், என் வேதம் உன் உமிழ் நீர் மூலமாக உன் ஆண்மாவை தட்டுமடா ! உன்னை அறிந்தால் மட்டுமே ஆண்மாவை அறிய முடியும் ! உன் உயிரின் நிலையை அறிய முற்படு ! நரம்பில்லா நாக்கை கட்டுப்படுத்து ! எப்போதும் பேசிக் கொண்டே இருக்காதே !
கடவுளை தவிர உன் நாவு எதையும் அசை போடாமல் பார்த்து கொள்வது உன் வேலை ! வாய் பேசாமல் இருப்பது மட்டும் மௌனம் இல்லை. ஐம்புலன் அடக்குவதே மௌனம். ஜீவராசிகள் குட்டி போட்டவுடன் தன் நாவால் வருடும். அதன் உமிழ் நீர் அனைத்து வியாதிகளையும் தீர்க்கும் !
அன்பில் வரும் உமிழ்நீர் உனை ஆளும். ஆண்மாவை காண்பிக்கும். காமத்தில் வரும் உமிழ்நீர் உனை மீண்டும் யுகத்தில் பிறக்க வைக்கும். உணர்ந்து பார் மனிதகுலமே !
எல்லாம் தெரியும் என்று சொல்கின்றாயே ? உன் வாயில் ஒரு ஊற்று வைத்துள்ளேன். அது எப்படி சுரக்கிறது? அதன் தார்ப்பரியம் என்ன என்பதை என்றாவது யோசித்துள்ளாயா ?
உமிழ்நீர் இல்லை என்றால் உன் சரீரம் சறுகாகும் ! நீ தியானம், யோகா என்று கண்மூடி தியானிக்கிறாய். என்றாவது உன் உமிழ்நீரை இனிப்பாக்க நினைத்தாயா ? ஊழ்வினை அறுக்க பாடுபடு ! உன் நாக்கை கட்டுப்படுத்து ! உன் நோயையும், பாவத்தையும் துவஷம் செய்வேன். நாக்கும், காமமும் மரணத்தின் வாசல் என்பதை புரிந்து கொள். எப்போதும் கடவுளை பற்றி பேசு ! நினை !
தேவையற்ற வார்த்தையை நீக்கு ! மனிதரில் உனை மாணிக்கமாக வைப்பேன். ஆறு அங்குல நாக்கு உனக்கு அரச போக வாழ்வையும் தரும். ஆறு அடி குழிக்குள்ளும் தள்ளும் ! ஆற்றல் வொனா பாவி அலங்கோலமாக திரிய கண்டேன்.
எத்திசையும் நானிருக்கிறேன் !
எப்போதும் நான் நான் தான் ! ஆனால் நீ நீ இல்லை ! மீண்டும் வேறு உடலில் பயனிக்கின்றாய். நான் கர்ம பிறப்பை வேறருக்க வந்தவன். என்னை உனக்குள் வைத்து கொண்டு முடியாது முடியாது என்று புலம்பாதே ! நாக்கை கட்டுப்படுத்து ! உள்நாக்கில் உண்மை உண்டு. உற்று நோக்கு. உனை நாதத்திற்கு தலைவன் ஆக்குவேன் !
நான் படைத்தவற்றையும் என் படைப்பின் ரகசியங்களையும் அறிய முற்படு ! நான் எல்லாவற்றிலும் ரகசியம் வைத்துள்ளேன் ! கரிசல் மண்ணில் ஊறும் நீரை ஆராய்ந்து பார். உன் சரீரத்தை மெத்தையாக்கும் அது ! உனை மேதாவியாக்கும் ! ஜீவராசிகள் எல்லாம் மண்னை உடலில் தடவி தன் சரீரத்தை சீராக்குகிறது. நீ தான் விதவிதமாக வாசனை திரவியங்களை உடலில் தடவி சரீரத்தின் வாசலை அடைக்கின்றாய் !
ஏழு ஊற்று நீர் யுகத்தில் உண்டு ! ஆனால் எட்டாவதாக உன் வாயில் ஊறும் உமிழ் நீர் தான் எல்லாவற்றிலும் சிறந்தது ! நீ அதை ஆராயாமல் வெட்டி பேச்சு பேசி வீணாக அலைகின்றாய். கற்சிலைக்கு நீரை ஊற்றி அது அபிஷேக நீர் என்று உள்ளங்கையில் வைத்து குடித்து உரு இல்லாமல் அலைகின்றாய்.
உன்னை விட பலம் வாய்ந்த ஜீவராசிகளை அடக்கி உன் வீரத்தை உலகிற்கு பறைசாற்றிய நீ, ஏன் உன்னை அடக்க முடியாமல் அலைகின்றாய் ?
நவ துவாரத்தின் வழியாக உன் உயிரை செல்ல வைக்காதே !
உன் உயிரை உன் உச்சந்தலையின் ஆறு குழியின் வழியாக அனுப்பினேன் ! நீ கருவறையில் இருக்கும் காலம் அதன் மூலமாகவே உன் உயிருக்கு உணவு கொடுத்தேன். நீ சாகும் போது உன் உச்சந்தலையின் வழியாக உயிரை மேலெழுப்ப ஆசைப்படு ! மீண்டும் பிறக்கமாட்டாய் இங்கு !
தன்னை உணர்ந்தவன் உயிர் உச்சந்தலையின் வழியாகவே மேல் உலகம் செல்கிறது. பாவம், கர்மம் செய்பவன் உயிர் நவ துவாரங்களின் வழியாகவே மேலே வருகிறது. உன் உள் நாக்குக்கும், உன் கபாலத்தில் உள்ள ஆறு குழிகளுக்கும், ஆறு நரம்புகளுக்கும், இதயத்தின் பதினெட்டு நரம்புகளுக்கும் தொடர்பு உண்டு. இந்த மூன்றுக்கும், உயிரின் முடிச்சிக்கும் தொடர்பு உண்டு. உணரடா !
என் ஞான குழந்தையே கீரிப்பிள்ளை, கிளிப்பிள்ளை, அணில்பிள்ளை, தென்னம்பிள்ளை, நீ ஒரு பிள்ளை, இந்த ஐந்துக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. முடிந்தால் கண்டுபிடி !
என் ஞான குழந்தையே, எப்போது உணர்வாயடா ? உணர்ந்து உவகை படு. உள்ளொளி உன்னை உற்று நோக்க வைக்கும். என் ஞான குலமே புறப்படு !
இனி கடவுள் இல்லை என்று சொல்லும் மூடர் கூட்டத்தின் நாவையும், கடவுள் பெயரால் ஏமாற்றும் முட்டாள் கூட்டத்தின் நரம்பில்லா நாவையும் அறுந்து போக வைப்பேன் !
நான் உனக்குள் இருந்து சிரிப்பவன் !
உன் மாய திரையை விலக்க வந்த மாயவன் நான் !
நான் இநன்யா !

No comments:

Post a Comment