இநன்யா ;;; INANYA NAMOO NAMA ;;; அடக்கு ! இல்லையேல் அடக்குவேன் ! அடங்கா மனமும், ஆர்பரிக்கும் பேய்களும் எனக்குள் அடங்கும். ஆணந்தமானவன் நானடா !
53 .இநன்யா நமோ நம.. !!INANYA NAMOO NAMA ;;;
அடக்கு ! இல்லையேல் அடக்குவேன் ! அடங்கா மனமும், ஆர்பரிக்கும் பேய்களும் எனக்குள் அடங்கும். ஆணந்தமானவன் நானடா !
பக்குவப்படு என் ஞானக் குழந்தையே !
மனிதனின் ஆறு அங்குல நாக்கு எல்லாவற்றிலும் நீளமானது. மரணத்தின் வாசல் உன் நாக்கு தான். அதை கட்டுப்படுத்து ! மௌனத்தால் உன் நாக்கை கட்டிப்போடு ! புலன்களில் வாய் வழி தான் எல்லா துன்பமும் வருகிறது. உண்ணும் உணவிலிருந்து பேசும் பேச்சு வரை, மறு பிறப்பை உன் நாக்கு தான் நிர்ணயிக்கிறது ! மண்ணில் குனிந்து இலை, தளை சாப்பிடும் பசுவின் நாக்கில் பக்குவம் நிறைய உண்டு !
உன் நாக்கு உனக்கு நோயையே உருவாக்குகிறது. எப்போதும் ஊற்று ஒன்று ஊற வைத்தேன். உனக்குள் ஏன் என்று உணர்ந்தாயோ ?
உன் கர்மம் போகவும், பாவம் போகவும், உன் உமிழ் நீர் சிறப்படும். என்னை நினைத்து என் நாமத்தை சொல்லிப் பார் ! உன் உமிழ் நீர் இனிக்குமடா ! என் நாமம், என் வேதம் உன் உமிழ் நீர் மூலமாக உன் ஆண்மாவை தட்டுமடா ! உன்னை அறிந்தால் மட்டுமே ஆண்மாவை அறிய முடியும் ! உன் உயிரின் நிலையை அறிய முற்படு ! நரம்பில்லா நாக்கை கட்டுப்படுத்து ! எப்போதும் பேசிக் கொண்டே இருக்காதே !
கடவுளை தவிர உன் நாவு எதையும் அசை போடாமல் பார்த்து கொள்வது உன் வேலை ! வாய் பேசாமல் இருப்பது மட்டும் மௌனம் இல்லை. ஐம்புலன் அடக்குவதே மௌனம். ஜீவராசிகள் குட்டி போட்டவுடன் தன் நாவால் வருடும். அதன் உமிழ் நீர் அனைத்து வியாதிகளையும் தீர்க்கும் !
அன்பில் வரும் உமிழ்நீர் உனை ஆளும். ஆண்மாவை காண்பிக்கும். காமத்தில் வரும் உமிழ்நீர் உனை மீண்டும் யுகத்தில் பிறக்க வைக்கும். உணர்ந்து பார் மனிதகுலமே !
எல்லாம் தெரியும் என்று சொல்கின்றாயே ? உன் வாயில் ஒரு ஊற்று வைத்துள்ளேன். அது எப்படி சுரக்கிறது? அதன் தார்ப்பரியம் என்ன என்பதை என்றாவது யோசித்துள்ளாயா ?
எல்லாம் தெரியும் என்று சொல்கின்றாயே ? உன் வாயில் ஒரு ஊற்று வைத்துள்ளேன். அது எப்படி சுரக்கிறது? அதன் தார்ப்பரியம் என்ன என்பதை என்றாவது யோசித்துள்ளாயா ?
உமிழ்நீர் இல்லை என்றால் உன் சரீரம் சறுகாகும் ! நீ தியானம், யோகா என்று கண்மூடி தியானிக்கிறாய். என்றாவது உன் உமிழ்நீரை இனிப்பாக்க நினைத்தாயா ? ஊழ்வினை அறுக்க பாடுபடு ! உன் நாக்கை கட்டுப்படுத்து ! உன் நோயையும், பாவத்தையும் துவஷம் செய்வேன். நாக்கும், காமமும் மரணத்தின் வாசல் என்பதை புரிந்து கொள். எப்போதும் கடவுளை பற்றி பேசு ! நினை !
தேவையற்ற வார்த்தையை நீக்கு ! மனிதரில் உனை மாணிக்கமாக வைப்பேன். ஆறு அங்குல நாக்கு உனக்கு அரச போக வாழ்வையும் தரும். ஆறு அடி குழிக்குள்ளும் தள்ளும் ! ஆற்றல் வொனா பாவி அலங்கோலமாக திரிய கண்டேன்.
எத்திசையும் நானிருக்கிறேன் !
எத்திசையும் நானிருக்கிறேன் !
எப்போதும் நான் நான் தான் ! ஆனால் நீ நீ இல்லை ! மீண்டும் வேறு உடலில் பயனிக்கின்றாய். நான் கர்ம பிறப்பை வேறருக்க வந்தவன். என்னை உனக்குள் வைத்து கொண்டு முடியாது முடியாது என்று புலம்பாதே ! நாக்கை கட்டுப்படுத்து ! உள்நாக்கில் உண்மை உண்டு. உற்று நோக்கு. உனை நாதத்திற்கு தலைவன் ஆக்குவேன் !
நான் படைத்தவற்றையும் என் படைப்பின் ரகசியங்களையும் அறிய முற்படு ! நான் எல்லாவற்றிலும் ரகசியம் வைத்துள்ளேன் ! கரிசல் மண்ணில் ஊறும் நீரை ஆராய்ந்து பார். உன் சரீரத்தை மெத்தையாக்கும் அது ! உனை மேதாவியாக்கும் ! ஜீவராசிகள் எல்லாம் மண்னை உடலில் தடவி தன் சரீரத்தை சீராக்குகிறது. நீ தான் விதவிதமாக வாசனை திரவியங்களை உடலில் தடவி சரீரத்தின் வாசலை அடைக்கின்றாய் !
ஏழு ஊற்று நீர் யுகத்தில் உண்டு ! ஆனால் எட்டாவதாக உன் வாயில் ஊறும் உமிழ் நீர் தான் எல்லாவற்றிலும் சிறந்தது ! நீ அதை ஆராயாமல் வெட்டி பேச்சு பேசி வீணாக அலைகின்றாய். கற்சிலைக்கு நீரை ஊற்றி அது அபிஷேக நீர் என்று உள்ளங்கையில் வைத்து குடித்து உரு இல்லாமல் அலைகின்றாய்.
உன்னை விட பலம் வாய்ந்த ஜீவராசிகளை அடக்கி உன் வீரத்தை உலகிற்கு பறைசாற்றிய நீ, ஏன் உன்னை அடக்க முடியாமல் அலைகின்றாய் ?
நவ துவாரத்தின் வழியாக உன் உயிரை செல்ல வைக்காதே !
உன் உயிரை உன் உச்சந்தலையின் ஆறு குழியின் வழியாக அனுப்பினேன் ! நீ கருவறையில் இருக்கும் காலம் அதன் மூலமாகவே உன் உயிருக்கு உணவு கொடுத்தேன். நீ சாகும் போது உன் உச்சந்தலையின் வழியாக உயிரை மேலெழுப்ப ஆசைப்படு ! மீண்டும் பிறக்கமாட்டாய் இங்கு !
உன் உயிரை உன் உச்சந்தலையின் ஆறு குழியின் வழியாக அனுப்பினேன் ! நீ கருவறையில் இருக்கும் காலம் அதன் மூலமாகவே உன் உயிருக்கு உணவு கொடுத்தேன். நீ சாகும் போது உன் உச்சந்தலையின் வழியாக உயிரை மேலெழுப்ப ஆசைப்படு ! மீண்டும் பிறக்கமாட்டாய் இங்கு !
தன்னை உணர்ந்தவன் உயிர் உச்சந்தலையின் வழியாகவே மேல் உலகம் செல்கிறது. பாவம், கர்மம் செய்பவன் உயிர் நவ துவாரங்களின் வழியாகவே மேலே வருகிறது. உன் உள் நாக்குக்கும், உன் கபாலத்தில் உள்ள ஆறு குழிகளுக்கும், ஆறு நரம்புகளுக்கும், இதயத்தின் பதினெட்டு நரம்புகளுக்கும் தொடர்பு உண்டு. இந்த மூன்றுக்கும், உயிரின் முடிச்சிக்கும் தொடர்பு உண்டு. உணரடா !
என் ஞான குழந்தையே கீரிப்பிள்ளை, கிளிப்பிள்ளை, அணில்பிள்ளை, தென்னம்பிள்ளை, நீ ஒரு பிள்ளை, இந்த ஐந்துக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. முடிந்தால் கண்டுபிடி !
என் ஞான குழந்தையே, எப்போது உணர்வாயடா ? உணர்ந்து உவகை படு. உள்ளொளி உன்னை உற்று நோக்க வைக்கும். என் ஞான குலமே புறப்படு !
என் ஞான குழந்தையே, எப்போது உணர்வாயடா ? உணர்ந்து உவகை படு. உள்ளொளி உன்னை உற்று நோக்க வைக்கும். என் ஞான குலமே புறப்படு !
இனி கடவுள் இல்லை என்று சொல்லும் மூடர் கூட்டத்தின் நாவையும், கடவுள் பெயரால் ஏமாற்றும் முட்டாள் கூட்டத்தின் நரம்பில்லா நாவையும் அறுந்து போக வைப்பேன் !
நான் உனக்குள் இருந்து சிரிப்பவன் !
உன் மாய திரையை விலக்க வந்த மாயவன் நான் !
நான் இநன்யா !
No comments:
Post a Comment