இநன்யா ;;;INANYA NAMOO NAMA ;;; விண் படைத்தோன் வரைந்தேன் விதியை உன் நெற்றியில் ! கொன்றால் பாவம் தின்றால் போச்சு !
63 .இநன்யா நமோ நம.. !!INANYA NAMOO NAMA ;;;
விண் படைத்தோன் வரைந்தேன் விதியை உன் நெற்றியில் ! யுகத்தில் கண் படைத்தேன் ! காணாமல் அலைகின்றாயே ? ஆநிரை மேய்த்தவன் நான் ! ஆழி ஆழம் பார்த்தவன் நான் ! ஆணந்தமானவன் நான் ! நான் இநன்யா !
கொன்றால் பாவம் தின்றால் போச்சு !
வசைபாடும் உயிர்கள் திகிலாய் விண் நோக்கி வேந்தன் எனை அழைக்க கேட்டேன், சொல்ல வொனா துயரம் இந்த பாவி மனிதனால் என்று !
இந்த செம்மறி ஆட்டுக் கூட்டம் உணரா பாவியாக வாழ கண்டேன் ! உணர்வு வரும் பொழுது உன்னை உணர்வாய். அதுவரை எதை உண்டால் நல்லது என்று உனக்கே தெரியாது. மாமிசம் சாப்பிடலாமா என்று என்னிடம் பலர் விளம்ப கேட்டேன். உனக்கு எதை உண்ண வேண்டும், எதை செய்ய வேண்டும் என்பது உன் நிலையை பொறுத்தது.
பிடித்தால் செய் ! பிடிக்காவிட்டால் வெறுத்து ஒதுக்கு !
ஆனாலும் கொல்லாமை வேண்டும். கல்லாமை உன்னிடம் !
யுகத்தில் மிருகங்களை ஒன்றை ஒன்று அடித்து சாப்பிட வைத்தேன் ! ஏன் என்று உணர்ந்தாயோ ? ஒரு துளி ரத்தத்திற்காக தான் இங்கு ஓயாமல் சண்டை ! மிருகங்களுக்கு பாவம், புண்ணியம் தெரியாது. கிடையாது ! நீ உணர்வதற்காக படைக்கப்பட்டது அவைகள். நீ அடித்து கொல்வதற்கு அவைகள் படைக்கப்படவில்லை. அணைத்து செல்லவும், அதை மதித்து செல்லவும் படைத்தான் படைப்பின் சூட்சுமதாரி !
மாமிச பிண்டம் நீ, மாமிச பட்சி ஆனாய் ! நீ இங்கு எதையும் விட்டு வைக்கவில்லை. நீ எதை உண்கின்றாயோ அதன் குணம் தான் உனக்கு வரும் ! குணம் தான் உன்னை தீர்மானிக்கின்றது என்பதை புரிந்து கொள் !
என் சிறு வயதில் என் பெற்றோர்கள் குல தெய்வத்தை வேண்டி ஆடு வெட்டி பொங்கலிடுவார்கள். ஏன் ஒரு உயிரை கொன்று தான் நமக்கு சுகம் தருமா இந்த சாமி என்று ஏழு வயதில் யோசிப்பதுண்டு.
ஒரு சமயம் வீட்டில் நான் வளர்க்கப்பட்ட ஆடு ஒன்றை பலியிட்டார்கள். என்னிடம் மிகுந்த பாசமாக இருக்கும். என்னை யார் தொட்டாலும் சீறிப் பாயும் அந்த ஆட்டை பலியிட முடிவு செய்தார்கள். மூன்று நாட்கள் முன்னே அது சாப்பிடாமல் இருந்தது. என்னை விட்டு ஒரு நிமிடம் கூட பிரியமால் இருந்தது. ஏன் என்று பின்னர் தான் புரிந்தது. என்னை விட்டு பிரியப் போகிறது என்பதை தெரிந்து கொண்டுள்ளது ! அதன் சத்தம், அந்த மரண ஓலம் என்னுள் ஓயாத ரணத்தை ஏற்படுத்தியது. அதிலிருந்து மாமிசம் சாப்பிடுவதை நிறுத்தினேன்.
ஒரு உயிரை கொன்று உடலை வளர்க்க தேவையில்லை. ஆனால் மனிதன் மனிதனை கொன்று சாப்பிடும் காலம் வந்துவிட்டது. உலகின் பல நாடுகள் இனி பஞ்சத்தில் மூழ்கும். இனி பசியின் கொடுமையால் மனித கறியை சாப்பிடுவார்கள்.
என் தந்தை பிரபஞ்ச நாயகன் சொல்வார்கள். ஏழு வயதில், தான் பிச்சை எடுக்கும் போது எல்லோர் வீட்டிலும் எல்லா விதமான சோற்றையும் தருவார்கள் என்று ! அதில் மாமிசம் கூட இருக்கும். பசி ருசி அறியாது என்பதால் அதை உண்ணும் சூழ்நிலை வந்தது. சிறு வயது சூழ்நிலை தள்ளி நின்று வேடிக்கை பார்த்தது. அதனால் மாமிசம் சாப்பிட்டால் ஞானம் வராது என்று அர்த்தமில்லை. உணர்ந்தால் துன்பமில்லை என்று சொல்வார்கள்.
கொன்றால் பாவம் தின்றால் போச்சு என்று சொல்கின்றாய். அதன் அர்த்தம் ஒரு உயிரை கொன்று விட்ட பிறகு அதை தின்றால் பாவம் தீர்ந்து விடும் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றாய். கொன்றதை தின்றால் பாவம் எப்படி போகும் என்று எப்பொழுதாவது யோசித்தாயா ?
மேலோகத்தில், தீர்ப்பு காண்டத்தில் கீழே கொன்ற பாவத்திற்கு நீ எதை கொன்று, ருசித்து சாப்பிட்டாயோ அதன் பாகத்தை உன் உடம்பில் இருந்து வெட்டி உன்னை உண்ண வைப்பார்கள் யாஷிய தீர்ப்பு காண்ட முனிவர்கள். நீ செய்த பாவம் உன் சதையை சாப்பிட்டால் தான் போகும் என்பது தான் அதன் அர்த்தம். ஆதலால் பலியிடாதே. உயிர் கொலை செய்யாதே. பசுவதை செய்யாதே. பரிதவிப்பாய் இங்கு !
ஒரு கிலோ தானியம், பருப்பு கிடைக்க நாற்பது லிட்டர் தண்ணீர் தான் தேவைப்படும். ஆனால் ஒரு கிலோ அசைவ உணவு கிடைக்க நான்காயிரம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. தண்ணீரின் தேவையை உணர்ந்து பாரடா ! பசுவுக்கு ஒரு கிலோ சதை உற்பத்தியாக பத்தாயிரம் லிட்டர் தண்ணீர் தேவை ! ஆனால் அது உனக்கு பாலாக திருப்பி தந்துவிடுகிறது. பசுவுக்கு உண்டான தர்ம குணம் கூட உனக்கில்லையே. ஏன் ?
மிருகங்களின் சதையை தின்று மிருகமாகி போனான் மனிதன் ! சிந்தி !
தானியங்களை பூச்சி அரிக்கும் ! சதையை புழு அரிக்கும் ! இதில் எது உயர்ந்தது என்று நீயே உணர்ந்து கண்டுபிடி !
இங்கு கொல்லாமை வேண்டும் !
பிறர் மனதை கொல்லாமை ! பிற உயிரை கொல்லாமை !
நில்லாது நான் உனக்கு சுகம் தருவேன் !
தொன்னீர், முந்நீர், செந்நீர், உன் பாவம் தீர்க்கும் உமிழ் நீரை விட கீழானது தான்.
அழலில் உழல்கின்றாய், உன் இமை நெற்றி தகிப்பாலே ! பசுவுக்கு இரண்டு இரைப்பை உள்ளது போல எறும்புக்கு இரண்டு வயிறு உண்டு.
படைத்ததில் எண்ணிலடங்கா சூட்சுமம் உண்டு ! பார்த்தவன் ஏன் உணராமல் அலைகின்றாய் ?
பரவை போல் பரந்து விரிந்திடு !
பறவை போல் பறந்து வானில் விரிந்திடு !
நான் பரப்பிரம்மம் ! உன்னை உணர வைப்பேன் !
இங்கே இரண்டு கண் தெரிந்தவன் தான் மிக அதிகமாக பாவம் செய்கின்றான். கண் இல்லாதவன் பாவம் செய்வதில்லை. கண் இல்லாதவன் தவறு செய்யமாட்டான். இனி மேலிருந்து வரும் ஒரு வித வெளிச்சம் உன் கண்களை பாதிக்கும். இனி பறக்கும் தட்டில் பல கோடி முனிவர்கள் வருவார்கள் ! அதன் ஒளியில் கண்கள் இருளாக நான் கண்டேன். இனி நீ செய்த பாவத்திற்கு தண்டனை மறு நிமிடமே கிடைக்கும். தெய்வம் நின்று கொல்லாது, அன்றே கொல்லும் ! ஆதலால் பாவம் செய்யாதே !
படைப்பின் சூட்சுமம் தெரிந்தவன் கூறுகின்றேன் !
பார்த்தவன் நீ எப்போது உணர்வாயடா ?
நான் விண்ணுக்கும், மண்ணுக்கும் சாட்சி !
நான் இநன்யா !
No comments:
Post a Comment