இநன்யா கடவுள் ;;; நீ யார் ?INANYA NAMOO NAMA ;;;
6.இநன்யா கடவுள் INANYA NAMOO NAMA ;;;
6.இநன்யா கடவுள் INANYA NAMOO NAMA ;;;
நீ யார் ?
இன்பத்தமிழ் எப்பொழுதும் வாழும் !!!
படைத்த பொருளுக்கு யாதொன்றும் மதமில்லை ! மதம் என்ன செய்தது? இறை தூதர்களும், சித்தர்களும் சொன்ன கருத்துக்களை வைத்து மதமாக்கி கொண்டீர்கள். எல்லா மதத்திலும் ஞானிகள், மகான்கள், சித்தர்கள் இருக்கிறார்கள் என்று எனக்கு தெரியும். நான் மதத்தின் பெயரால் ஏமாற்றும் மூடர்களின் கூட்டத்தினையே வெறுக்கின்றேன். சித்தர்களை குறை கூறவில்லை ! சித்தர்கள் கால வர்த்தமானங்களை கடந்தவர்கள் என்பது எனக்குத் தெரியும். அவர்களின் ஜீவசமாதியின் மேல் கோவில் கட்டி வழிபாடு செய்து புலம்புகின்றீர்கள். உங்களின் செயலைப் பார்த்து தான் கண்ணுக்கு தெரியாமல் மறைந்து வாழ்கிறார்கள் சித்தர்கள். உங்களது வீட்டை சரி செய்ய முடியாத நீங்கள், வீதியை சரி செய்ய நினைக்கிறீர்கள்.!
வயிற்றில் இருக்கும் சிசு ஆணா? பெண்ணா? என்று ஸ்கேன் செய்து பார்க்கிறீர்கள்.! கரு எப்போது உருவாகும், குழந்தை எப்போது பிறக்கும் என தெரிந்து கொள்ள முடியாத நீங்கள், என்னை எப்படி தெரிந்து கொள்வீர்கள்?
வெறுப்பதும், மறுப்பதும், விதண்டாவாதமும், தர்க்கம் செய்வதும் உங்களின் வேலை என்று கருதிகிறீர்கள். அதனால் தான் மனதுக்கு ஒரு வினாடி கூட நிம்மதி இல்லாமல் எதை தின்றால் பித்தம் தெளியும் என்று ஓடியாடி அலைகிறீர்கள். முதலில் உங்களின் தாயையும், தந்தையையும் வணங்குங்கள் ! அவர்களை விட பெருங்கோயில் உலகில் எதுமில்லை !
என்னிடம் வந்த லட்சக்கணக்கான மக்களை ஜாதி, மதம் பார்த்து நலன் சொல்லவில்லை. என்னைக் கண்டுபிடித்து விடுவாய் என்று தான் நான் வேஷம் போடாமல் இருக்கிறேன். இது கரையான் தின்னும் வெற்று உடல்! அழுகும் உடலுக்கு வேஷம் எதற்கு? நான் பள்ளிக்குச் சென்று கற்றவனில்லை. என் உழைப்பால் வாழ்கிறேன். உங்களை ஏமாற்ற விரும்பினால் இந்த புண்ணிய தமிழ்நாட்டை விலைக்கு வாங்கியிருப்பேன்.
அவன் சொன்னான், இவன் சொன்னான் என்று பழைய பஞ்சாங்கத்தையும், பழைய வழிபாடுகளையும், கதைகளையும் பின்பற்றி, நிம்மதி இல்லாமல் தவிக்கிறீர்கள்.
அவன் சொன்னான், இவன் சொன்னான் என்று பழைய பஞ்சாங்கத்தையும், பழைய வழிபாடுகளையும், கதைகளையும் பின்பற்றி, நிம்மதி இல்லாமல் தவிக்கிறீர்கள்.
நீங்கள் யார் ? எதற்காக இந்த யுகம் வந்தீர்கள் ? என்பதை முதலில் உணருங்கள் ! நான் இயல்பாய் இருக்கிறேன். நான் ஆஸ்தீகன் ! இயல்பற்றதே நாஸ்தீகம் ! நான் வந்தேன், வாழ்ந்தேன், வென்றேன், யாக பிரஸ்தம் நோக்குகிறேன் ! என் மாருஸ்தலி பயணம் வெகு தூரமில்லை ! நீங்கள் உங்களின் இதய துடிப்பு அடங்கும் வரை பூமியில் இருப்பீர்கள். ஆனால் நான் நாளையே ஜீவசமாதி ஆக முடியும் ! நானே என் விதியை உருவாக்கினேன் ! ஆனால் என்னை உணர்ந்தவர்களின் வாழ்வில் பெரும் மாற்றத்தையும், மீண்டும் பிறவி இல்லாமல் இருக்க வழி சொல்லிக் கொடுக்கிறேன்.
தேன் சாப்பிட்டால் தான் ருசி தெரியும். என்னை உணர்ந்து பாருங்கள் ! அன்பாய் ருசிப்பேன் ! நீங்கள் என் உறவு (ஆன்மா). உங்களுக்கு வழி சொல்ல வந்தேன் ! நான் ஒரு புண்ணிய நதி. நீங்கள் குளிப்பதும், குளிக்காததும் உங்களின் விருப்பம் ! எனக்கொன்றும் நஷ்டமில்லை ! நான் உங்களை கடந்து போக வரவில்லை ! நான் கடந்து செல்லும் பாதை உங்களுக்கு நல் வழி ! பேரின்ப பாதையாக அமையும் சத்தியமாக !!!
நான் இநன்யா !!!
பதிவுகள் தொடரும் !!!
No comments:
Post a Comment