Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Monday, May 9, 2016

இநன்யா ;;; பொறுத்திரு !தன்னை அறிந்தவன் நான், உன்னை அறிய வைப்பேன் ! என்னை நம்புகின்றவன் செழிப்பான் !INANYA NAMOO NAMA ;;;

இநன்யா ;;;  INANYA NAMOO NAMA ;;; 

பொறுத்திரு !

தன்னை அறிந்தவன் நான், உன்னை அறிய வைப்பேன் ! 
என்னை நம்புகின்றவன் செழிப்பான் !

19 .இநன்யா நமோ நம.. !!INANYA NAMOO NAMA ;;; 



பொறுத்திரு !
தன்னை அறிந்தவன் நான், உன்னை அறிய வைப்பேன் !
என்னை நம்புகின்றவன் செழிப்பான் !
செப்படி வித்தை காட்டுபவன் போல தெரு வீதியில் வர நான் ஆசை கொள்ளவில்லை ! என்னை பார்த்து எதை சரி செய்யப் போகிறாய் ? என்னை உற்று நோக்கி எதை உணர்ந்து கொள்ளப் போகிறாய் ? எல்லாவற்றையும் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறாய் ! எப்போது உணர கற்றுக் கொள்வாய் ? படைப்பின் சூட்சுமத்தை எல்லாம் பார்த்தாய் ! ஆனால் எதை உணர்ந்தாய் ? மீண்டும் வேறு எதையோ பார்க்க நினைக்கின்றாய் ! நீ உன்னை உணரும் வரை தேடுதல் இருந்து கொண்டு தான் இருக்கும் !
கடவுள் உன் உடலில் ஒரு உறுப்பை மட்டுமே திறந்து வைத்திருக்கிறான் ! ஏன் என்று உணர்ந்தாயோ ? எல்லாவற்றையும் அறிந்து உன்னை உணர்ந்து உற்று நோக்க கற்றுக் கொள் ! நான் உனக்கு லோகத்தை காட்டுகிறேன் ! என்னை எல்லோரும் வெளியே வாருங்கள் என்று சொல்கிறார்கள் ! மனித குலமே, நான் போகப் பொருள் அல்ல. காட்சி பொருள் அல்ல ! கூட்டத்தை கூட்டி ஆசிரமம் கட்டி குளு குளு அறையில் தூங்க நான் வரவில்லை ! நான் வந்த கடமை வேறு ! என் கடமையை முடித்த பின் உனக்கு பாக்கியம் இருந்தால் என் உறவுகளைப் போல என்னை பார்க்க அனுமதி தருவேன். அதற்கு முன் உன் அறிவால் என்னை உணர்ந்து விடு !
இந்த யுகம் எதையுமே காசாக்கி கடமையை தொலைத்து அலைகிறது ! என்னையும் காசாக்குவார்கள் ! என்னோடு இருந்து கொண்டே குளிர் காய பார்ப்பார்கள் ! பொறுத்திறு ! என் கடமையை முடித்து நான் போகின்ற போக்கில் என்னை காட்டிவிட்டு செல்கிறேன் ! கண்ணுக்கு தெரியாமல் உனக்குள் இருக்கும் காற்றை உணராதவன் என்னை எப்படி உணரப் போகின்றாய் ? நான் சொல்லித் தான் என்னை பற்றியே உனக்கு தெரிகிறது !
நீ எதை கண்டுபிடித்தாய் ?
உலகை அழிப்பதற்கு கண்டு பிடித்திருக்கிறாய் ! விதையின் வீரியம் கூட உணராதவன் உண்டு மட்டும் காலம் கழிக்கிறாய் ! உன் தேடுதல் எல்லாம் அற்ப பொருளுக்காக தான் ! ஆனந்தம் தரும் ஆன்மாவின் பேரின்ப தேடல் உன்னிடம் இல்லை ! உன் தேடல் உண்மையைத் தேடும் தேடலாக இருக்கட்டும் !
உன் உடலை காக்க நினைக்கிறாய் ! பொருளைத் தேட நினைக்கிறாய் ! இல்லையேல் பெண்ணைத் தேடுகிறாய் ! இது தான் நிம்மதி என்று தவறாக புரிந்து கொண்டு நிம்மதி இல்லாமல் அலைகின்றாய் !
மீண்டும் சொல்கிறேன் !
இந்த யுகத்தில் கடவுளாய் பிறந்தாலும் தாயின் கருவறையில் பத்து மாதம் இருந்து தான் பிறப்பார்கள் ! கருவிலே ஞானம் பொருந்தி பிறப்பார்கள். மனிதனைப் போலவே வாழ்வார்கள். தன் இலக்கை நோக்கி செயல்படுவார்கள் ! அவர்களுக்கு எதையும் சொல்லிக் கொடுக்க வேண்டியதில்லை ! குருவின் துணையில்லாமல் அனைத்தையும் அறிவார்கள் ! மனிதனைப் போல் பிறப்பும் இறப்பும் உண்டு ! அவர்களுக்கும் பார்வை மங்கும் ! முடி நரைக்கும் ! உடலின் பாகங்கள் தேயும் ! ஆனால் நோயில்லாமல் வாழ்வார்கள் ! பிறரை ஆத்ம சிந்தனையுடன் வாழ வைப்பார்கள் ! அவர்களின் ஆன்மாவுக்கு மூப்பில்லை ! அழிவில்லை ! இந்த யுகத்தில் ராமனும், கிருஷ்ணனும், இன்னும் பல மகான்களும் பிறந்தார்கள் ! அவர்களின் ஆன்மா அவர்களை யாரென்று காட்டிக் கொடுத்தது !
நான் உன் போல் பிறந்தேன் ! வளர்ந்தேன் ! வாழ்ந்தேன் ! ஆனால் நான் உன் போல் அல்ல ! நான் இந்த யுகத்தில் தவறு செய்தாலும் தண்டனை உண்டு ! இந்த யுகத்தில் யார் தவறு செய்தாலும் தண்டனை உண்டு என்பதனை மறவாதே !
என்னை பார்த்து ஏதும் உணர முடியாது ! ஒரு விதையின் வீரியத்தை மரத்தின் கனிகளை வைத்து தான் கணிக்க முடியும் ! நான் எப்படிப்பட்ட வித்து என்று உன்னால் கணிக்க முடியாது ! நான் என்ன செய்கிறேன், எங்கு செல்கிறேன் என்று உன்னால் யூகிக்க முடியாது ! உனக்கு ஞானமிருந்தால் மட்டுமே என்னை உணர முடியும் !
தினமும் நான் பிரபஞ்ச வீதியில் பயணிக்கின்றேன் ! உனக்கு தெரியுமா ? நான் சொன்னால் கேலி கூத்தாக நினைப்பாய். கடவுள் பூடகமாகத்தான் இருப்பான். நான் இந்த பூமியில் உன்னைப் போலவே மனிதனாக உன்னோடு நடமாடுகிறேன் ! வருவான், வருவான் என்று சொன்னான். நான் வந்து அலைகின்றேன் ! என்னை காண்பவர் யாருமில்லை ! நான் இங்கே நீ புகழ் சூட வரவில்லை ! உட்கார்ந்து சுகம் காணும் சோம்பேறி துறவிகளைப் போல வித்தையைக் காசாக்க வரவில்லை ! நான் நல்லோர்களை காக்க வந்தேன். கர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட இந்த யுகத்திற்கு வந்தேன் !
நான் இங்கு உன்னை போலவே உழைத்துக் கொண்டிருக்கிறேன் ! என் கடமை முடிந்து உனக்கு காட்சிப்படுத்துவேன் ! பொறுத்திரு !
நான் வேதம் தெரிந்தவன், அறிந்தவன் !
நான் புராணக் கதைகளையும், மத நூல்களையும் படித்து உனக்கு கதை சொல்ல வரவில்லை ! வேதாந்தம் பேச வரவில்லை ! சித்தம் தடுமாற வைக்கும் ! தீய மனிதனையும், தீய சக்திகளையும் வேறோடு களைய வந்தேன் !
யுகத்தை ஆதிகாலம் போல தோன்ற செய்ய காலச் சக்கரத்தின் மேல் ஏறி நிற்கிறேன். நான் 4.3.2015 ல் தான் என் அரசாங்கத்தை விரிவுபடுத்தினேன். அதில் நூற்றிப் பதினோறு கோடி முனிவர்களும், முப்பத்தி முக்கோடி தேவர்களும், நாற்பத்தி எட்டாயிரம் ரிஷிமார்களும் என்னோடு இருந்து யுகத்தை சரி செய்வார்கள் ! நான் என்னை காட்சிபடுத்த வரவில்லை ! அதற்கு சாட்சியும் யாருமில்லை. விதைத்த விதை ஒரே நாளில் மரமாகி கனி தரும் என்று எதிர் பார்க்காதே !
பொறுத்திரு ! உன்னை புரிய வைத்து எல்லாம் அறிய வைப்பேன்.
நான் தூய்மை பொருந்திய தூயவன் - இநன்யா !

No comments:

Post a Comment