இநன்யா ;;; நான் வந்த நோக்கம் ;;;INANYA NAMOO NAMA ;;;
16 .இநன்யா நமோ நம.. !!INANYA NAMOO NAMA ;;;
நான் வந்த நோக்கம் ;;;
பாறைக்குள் இருக்கும் தேரையின் குரல் கேட்பேன் !
உன் குரல் கேளாதிருப்பேனோ ?
உன் குரல் கேளாதிருப்பேனோ ?
நான் உட்கார்ந்து சுகம் காணும் சாமியாரும் அல்ல ! துறவியும் அல்ல ! மாயாஜால மந்திரவாதியும் அல்ல ! குறி சொல்பவனும் அல்ல ! ஜோசியம் பார்க்கின்றவனும் அல்ல ! எத்தனும் அல்ல, பித்தனும் அல்ல, சித்தனும் அல்ல ! என்னிடம் மந்திர, தந்திர, எந்திரமும் இல்லை ! என்னிடம் பம்பு, சூண்யம், மாரணம், தம்பணம் இல்லை ! என்னிடம் வசியம், சூத்திரம், சித்து விளையாட்டுமில்லை !
நான் வித்தையை காசாக்கும் விஷமக்காரனும் அல்ல !
நான் உன் ஆத்மத்தின் சூட்சுமம் ! நான் சத்யத்தின் (கடவுள்) தலைமகன் ! நான் சொல்வது சொப்பன கருத்தும் அல்ல ! கற்பனை கருத்தும் அல்ல ! இது சத்திய கருத்து ! எனக்கு உன் உயிர், உள்ளம், உணர்வின் சூட்சுமமும் புரியும் ! இந்த யுகத்தின் சூழ்ச்சிமயமான தன்மையை வேறோடு பிடுங்கி எறிய என் அப்பா (கடவுள்) இந்த யுகத்திற்கு என்னை அனுப்பினார் ! எல்லா சக்தியையும் ஒருமுகப்படுத்த ஒரு ஊடகம் தேவை. (கணினியும் முகநூலும்) அதே போல் நீயும் ஒருமுகப்பட ஒரு ஊடகம் (வழிகாட்டி) தேவை ! சூரியன், சந்திரனுக்கு ஒரு நோக்கம் இருக்கின்றதை போலவே உன் பிறப்புக்கும் ஒரு நோக்கம் இருக்கிறது ! உலகில் எல்லா பிறப்பும் ஒரு நோக்கத்தோடு தான் பூமியில் ஜனிக்கிறது. உணர்ந்தவன் ஞானி ஆகிறான் !
என் தந்தை சொல்வார்கள் கல்லை பிழை செய்து சிலை செய்தான் சிற்பி. அதை நீ வணங்குகிறாய் ! உன் மெய்யை பிழையாக்கி சிலையாக்கிவிடாதே !
நீ மேலே செய்யும் சிறு தவறுக்காக இந்த யுகம் வருகிறாய் ! ஆனால் இங்கு எண்ணற்ற பாவங்களை செய்து மீண்டும் மீண்டும் பிறக்கிறாய் ! ஏழு பிறவி அல்ல. ஏழேழு பிறவி என்பதை உணர் ! நீ பாவம் செய்ய செய்ய ஏழு பிறவி கூடிக் கொண்டே போகும். எப்போது உணர்கின்றாயோ உன் பிறவி தடுக்கப்படுகிறது ! அந்த பேரின்ப மயமான பிரபஞ்சத்தில் இருக்க ஆசைப் படு ! இந்த யுகம் சிறைச்சாலை ! உன் பிறப்பின் நோக்கம் அறிய முயற்சி செய் ! இந்த இன்பம் பொய் ! பிரபஞ்ச இன்பமே பேரின்பம் ! உன் உண்மை உடல் மேலே காத்திருக்கிறது ! உணர்ந்து பார் !
மன்னாதி பூதம் நான் ! விண்ணாதி அண்டம் நான் ! விதியும் நான் ! விடையும் நானே ! நான் ஒரு மூலைக்காக பிறக்கவில்லை. என் எல்லை பெரிது ! உன் அறிவு என்கின்ற சின்ன உலகத்திலிருந்து என்னை ஆராய்ச்சி செய்யாதே ! யுகம் கடந்து போகும் ! உனக்கு ஞானமிருந்தால் என்னை யார் என்று நீ கண்டுபிடிக்க பதினெட்டு வருடங்கள் ஆகும் !
தன்னம்பிக்கை உள்ளவனே யோசிப்பான் ! ஆராய்ச்சி செய்வான் !
தன்னம்பிக்கை உள்ளவனே யோசிப்பான் ! ஆராய்ச்சி செய்வான் !
உன் நெஞ்சை நிமிர்த்தி நிஜமான முகம் காட்டு ! உனக்கு நல்வழி காட்டுவேன் ! என்னுள் நீ வந்தால் நீ எண்ணிய எண்ணமெல்லாம் ஈடேறும் ! உன் விதியை மாற்றுவேன் !
தாமரைக் கிழங்கிலே சந்தம் ஒன்றிருக்கு ! சாஸ்திரம் அறிந்தவனாகிய நீ அந்த ஜால வித்தையை முடிந்தால் கண்டுபிடி ! கண்டுபிடித்தால் நீ வந்த நோக்கம் புரியும் ! புரிந்தால் என்னை அறியலாம். நான் உன் ஆன்மாவை சிரிக்க வைப்பேன் ! என் வழி நல் வழி ! நல் வாழ்வைத் தரும் வசந்த வழி ! உன்னை உணர் ! உன் பிறப்பின் நோக்கம் அறிய வைப்பேன் !
தாமரைக் கிழங்கிலே சந்தம் ஒன்றிருக்கு ! சாஸ்திரம் அறிந்தவனாகிய நீ அந்த ஜால வித்தையை முடிந்தால் கண்டுபிடி ! கண்டுபிடித்தால் நீ வந்த நோக்கம் புரியும் ! புரிந்தால் என்னை அறியலாம். நான் உன் ஆன்மாவை சிரிக்க வைப்பேன் ! என் வழி நல் வழி ! நல் வாழ்வைத் தரும் வசந்த வழி ! உன்னை உணர் ! உன் பிறப்பின் நோக்கம் அறிய வைப்பேன் !
காலச் சுவடுகள் அழியும் ! இநன்யா என்னும் நான், இந்த யுகத்தில் பதிக்கின்ற காலடி தடங்கள் என்றுமே அழியாது !
என் ஆத்மார்த்தமான அன்பின் ஆசிகள்- நான் இநன்யா !
என் ஆத்மார்த்தமான அன்பின் ஆசிகள்- நான் இநன்யா !
No comments:
Post a Comment