Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Monday, May 9, 2016

இநன்யா ;;; நான் வந்த நோக்கம் ;;;INANYA NAMOO NAMA ;;;

இநன்யா ;;; நான் வந்த நோக்கம் ;;;INANYA NAMOO NAMA ;;; 

16 .இநன்யா நமோ நம.. !!INANYA NAMOO NAMA ;;; 


நான் வந்த நோக்கம் ;;;
பாறைக்குள் இருக்கும் தேரையின் குரல் கேட்பேன் !
உன் குரல் கேளாதிருப்பேனோ ?
நான் உட்கார்ந்து சுகம் காணும் சாமியாரும் அல்ல ! துறவியும் அல்ல ! மாயாஜால மந்திரவாதியும் அல்ல ! குறி சொல்பவனும் அல்ல ! ஜோசியம் பார்க்கின்றவனும் அல்ல ! எத்தனும் அல்ல, பித்தனும் அல்ல, சித்தனும் அல்ல ! என்னிடம் மந்திர, தந்திர, எந்திரமும் இல்லை ! என்னிடம் பம்பு, சூண்யம், மாரணம், தம்பணம் இல்லை ! என்னிடம் வசியம், சூத்திரம், சித்து விளையாட்டுமில்லை !
நான் வித்தையை காசாக்கும் விஷமக்காரனும் அல்ல !
நான் உன் ஆத்மத்தின் சூட்சுமம் ! நான் சத்யத்தின் (கடவுள்) தலைமகன் ! நான் சொல்வது சொப்பன கருத்தும் அல்ல ! கற்பனை கருத்தும் அல்ல ! இது சத்திய கருத்து ! எனக்கு உன் உயிர், உள்ளம், உணர்வின் சூட்சுமமும் புரியும் ! இந்த யுகத்தின் சூழ்ச்சிமயமான தன்மையை வேறோடு பிடுங்கி எறிய என் அப்பா (கடவுள்) இந்த யுகத்திற்கு என்னை அனுப்பினார் ! எல்லா சக்தியையும் ஒருமுகப்படுத்த ஒரு ஊடகம் தேவை. (கணினியும் முகநூலும்) அதே போல் நீயும் ஒருமுகப்பட ஒரு ஊடகம் (வழிகாட்டி) தேவை ! சூரியன், சந்திரனுக்கு ஒரு நோக்கம் இருக்கின்றதை போலவே உன் பிறப்புக்கும் ஒரு நோக்கம் இருக்கிறது ! உலகில் எல்லா பிறப்பும் ஒரு நோக்கத்தோடு தான் பூமியில் ஜனிக்கிறது. உணர்ந்தவன் ஞானி ஆகிறான் !
என் தந்தை சொல்வார்கள் கல்லை பிழை செய்து சிலை செய்தான் சிற்பி. அதை நீ வணங்குகிறாய் ! உன் மெய்யை பிழையாக்கி சிலையாக்கிவிடாதே !
நீ மேலே செய்யும் சிறு தவறுக்காக இந்த யுகம் வருகிறாய் ! ஆனால் இங்கு எண்ணற்ற பாவங்களை செய்து மீண்டும் மீண்டும் பிறக்கிறாய் ! ஏழு பிறவி அல்ல. ஏழேழு பிறவி என்பதை உணர் ! நீ பாவம் செய்ய செய்ய ஏழு பிறவி கூடிக் கொண்டே போகும். எப்போது உணர்கின்றாயோ உன் பிறவி தடுக்கப்படுகிறது ! அந்த பேரின்ப மயமான பிரபஞ்சத்தில் இருக்க ஆசைப் படு ! இந்த யுகம் சிறைச்சாலை ! உன் பிறப்பின் நோக்கம் அறிய முயற்சி செய் ! இந்த இன்பம் பொய் ! பிரபஞ்ச இன்பமே பேரின்பம் ! உன் உண்மை உடல் மேலே காத்திருக்கிறது ! உணர்ந்து பார் !
மன்னாதி பூதம் நான் ! விண்ணாதி அண்டம் நான் ! விதியும் நான் ! விடையும் நானே ! நான் ஒரு மூலைக்காக பிறக்கவில்லை. என் எல்லை பெரிது ! உன் அறிவு என்கின்ற சின்ன உலகத்திலிருந்து என்னை ஆராய்ச்சி செய்யாதே ! யுகம் கடந்து போகும் ! உனக்கு ஞானமிருந்தால் என்னை யார் என்று நீ கண்டுபிடிக்க பதினெட்டு வருடங்கள் ஆகும் !
தன்னம்பிக்கை உள்ளவனே யோசிப்பான் ! ஆராய்ச்சி செய்வான் !
உன் நெஞ்சை நிமிர்த்தி நிஜமான முகம் காட்டு ! உனக்கு நல்வழி காட்டுவேன் ! என்னுள் நீ வந்தால் நீ எண்ணிய எண்ணமெல்லாம் ஈடேறும் ! உன் விதியை மாற்றுவேன் !
தாமரைக் கிழங்கிலே சந்தம் ஒன்றிருக்கு ! சாஸ்திரம் அறிந்தவனாகிய நீ அந்த ஜால வித்தையை முடிந்தால் கண்டுபிடி ! கண்டுபிடித்தால் நீ வந்த நோக்கம் புரியும் ! புரிந்தால் என்னை அறியலாம். நான் உன் ஆன்மாவை சிரிக்க வைப்பேன் ! என் வழி நல் வழி ! நல் வாழ்வைத் தரும் வசந்த வழி ! உன்னை உணர் ! உன் பிறப்பின் நோக்கம் அறிய வைப்பேன் !
காலச் சுவடுகள் அழியும் ! இநன்யா என்னும் நான், இந்த யுகத்தில் பதிக்கின்ற காலடி தடங்கள் என்றுமே அழியாது !
என் ஆத்மார்த்தமான அன்பின் ஆசிகள்- நான் இநன்யா !



No comments:

Post a Comment