இநன்யா ;;; INANYA NAMOO NAMA ;;;
ஏன் உணரவில்லை நீ ?
சித்து வேலை செய்பவன் சித்தன் அல்ல ! அவன் பித்தன் !
நீ பித்தும் பித்தற்று தான் நடவா !
நீ எங்கிருந்தாலும் உனை நான் ஆசிர்வதிப்பேன் !
ஏன் உணரவில்லை நீ ?
சித்து வேலை செய்பவன் சித்தன் அல்ல ! அவன் பித்தன் !
நீ பித்தும் பித்தற்று தான் நடவா !
நீ எங்கிருந்தாலும் உனை நான் ஆசிர்வதிப்பேன் !
22 .இநன்யா நமோ நம.. !!INANYA NAMOO NAMA ;;;
ஏன் உணரவில்லை நீ ?INANYA NAMOO NAMA ;;;
சித்து வேலை செய்பவன் சித்தன் அல்ல ! அவன் பித்தன் !
நீ பித்தும் பித்தற்று தான் நடவா !
நீ எங்கிருந்தாலும் உனை நான் ஆசிர்வதிப்பேன் !
மலர் பூத்தால் தேனி உணர்கிறது. ஆகாயம் கருத்தால் தாவரங்கள் சிரிக்கிறது. பறவைகளுக்கு முட்டையிடும் பருவ காலம் தெரிகிறது. மிருகங்களுக்கு எப்பொழுது கூட வேண்டும் என்று தெரிகிறது. ஆனால் நீ கூடுகின்றதை என்னவென்று சொல்வேன் நான் ? உனக்கு மட்டும் தான் ஏதும் தெரியவில்லை. காது வழி செய்தி கேட்டு காத தூரம் நடக்கின்றாய். அதிசயம், ஆச்சரியம் இருப்பதாக நினைத்து அல்லல்படுகின்றாய். எப்போது நீ உணரப் போகின்றாய் ? என் மனித குலமே ஏன் மதம் மாறி, தடம் மாறி, திசை மாறி தன்னை இழக்கின்றாய் ?
ஆண் என்றால் பௌர்ணமி ! பெண் என்றால் அமாவாஸ்யை !
முடிந்தால் இதைக் கண்டுபிடி ! நீ கூடும் காலம் எதுவென்று தெரியும் ! உன்னை எளிதாக உணர்ந்துவிடலாம் ! சித்தர்கள் உன் சரீரத்தைக் காப்பவர்கள் ! முனிவர்கள் உன் உயிரையும், ஆன்மாவையும் இயக்குபவர்கள் ! இவ்வுலகில் சித்தர்கள், முனிவர்கள், மாயைகள் இல்லாத இடமில்லை ! ரிஷிகள், யோகிகள் பூமியில் பிறக்கமாட்டார்கள் ! அவர்கள் காற்றின் வடிவாக சில நேரங்களில் பூமியில் முனிவர்கள் இருக்கும் இடம் வந்து வேதத்தை படித்து செல்வார்கள் !. அதற்கு கால நிர்ணயம் உண்டு ! மகான், ஞானி என்பவர்கள் தன்னை உணர்ந்தவர்கள் ! அவர்கள் பூமியில் கடவுளை துதிபாடி செல்வார்கள். நூற்றிப் பதினோறு காண்டங்களிலும் சித்தர்கள் உண்டு ! சித்தர்கள் பிரபஞ்சங்களில் வசிக்க மாட்டார்கள். முனிவர்கள், ரிஷிகள், யோகிகள், மாயைகள் பிரபஞ்சத்தில் வசிப்பார்கள் ! சித்தர்கள், முனிவர்களுக்கு பூமியில் வயது வரம்பு கிடையாது ! சித்தர்கள் தேவர்களின் குடிமனை அருகில் வசிப்பார்கள் !
நான் சித்தர்களின் தலைவன் ! நான் தேவர்களின் அரசன் ! நான் இநன்யா என்பதனை மறவாதே !
இநன்யா காற்று வழி ! சித்தர்கள் நீர் வழி ! பகலில் நீரில் இருப்பார்கள் ! பகலில் மனிதனை போல பூமியில் நடமாடுவார்கள் ! இடுகாட்டு சித்தர்களும், சரீரத்திற்குரிய சித்தர்களும் பகலிலே நடமாடுவார்கள்.
இந்த பூமியில் மூன்றில் ஆறாக (333333) சித்தர்கள் இருக்கிறார்கள் ! இந்த சூட்சுமத்தை தவறாக புரிந்து கொண்டு மூன்றையும், ஆறையும் பெருக்கி பதினெட்டு சித்தர்கள் இருக்கிறார்கள் என்று உளரக் கண்டேன் ! ஒரு சித்தர் 700 உருவமாக தன்னை மாற்றி பூமியில் பூடகமாக அலைவார் !
ஆனால் 333 சித்தர்கள் தமிழ்நாட்டில் ஒரு புனித கங்கையில் இருக்கிறார்கள் ! எல்லா சித்தர்களும் பூமியில் ஒரு இடத்தில் ஒரு நீர் நிலையிலோ அல்லது ஒரு நந்தவனத்திலோ கூடுவார்கள் ! எங்கெல்லாம் சமாதியானார்களோ அந்த இடத்தில் இல்லை ! அவர்கள் மறைந்த இடத்தில் ஒரு ஸ்பரிஷம் உண்டு. அவ்வளவு தான். நீ செய்கின்ற செயலைப் பார்த்து வேதனை கொள்கின்றனர். இனி கூட்டத்தைக் கூட்டி தேடிப் போகாதே ! தேடிச் சென்றால் உன் நெஞ்சமெல்லாம் குமுறும் !
ஆனால் 333 சித்தர்கள் தமிழ்நாட்டில் ஒரு புனித கங்கையில் இருக்கிறார்கள் ! எல்லா சித்தர்களும் பூமியில் ஒரு இடத்தில் ஒரு நீர் நிலையிலோ அல்லது ஒரு நந்தவனத்திலோ கூடுவார்கள் ! எங்கெல்லாம் சமாதியானார்களோ அந்த இடத்தில் இல்லை ! அவர்கள் மறைந்த இடத்தில் ஒரு ஸ்பரிஷம் உண்டு. அவ்வளவு தான். நீ செய்கின்ற செயலைப் பார்த்து வேதனை கொள்கின்றனர். இனி கூட்டத்தைக் கூட்டி தேடிப் போகாதே ! தேடிச் சென்றால் உன் நெஞ்சமெல்லாம் குமுறும் !
கூடுவிட்டு கூடு பாயும் தன்மை முனிவர்களுக்கும், சித்தர்களுக்கும் மட்டுமே உண்டு ! மகான், ஞானிகளால் கூடுவிட்டு கூடு பாய முடியாது !
பூமியில் என் தந்தை (கடவுள்) இருக்கும் இடத்தில் யாவரும் இருப்பார்கள். நான் சித்தர்களை தினமும் காண்கின்றேன். என் நந்தவனத்தில் இருந்து கொண்டு இந்த யுகத்தில் நடப்பவற்றை பேசக் கண்டேன் ! நான் செல்கின்ற இடமெல்லாம், காண்கின்ற இடமெல்லாம் அவர்களை பார்க்கின்றேன் ! ஆனால் நீ எங்கேயோ தேடுகிறாய் !
சித்தம் போக்கு ! சிவம் போக்கு !
முதலில் உன் மனதை கட்டுக்குள் வை !நான் உனக்கு காண்பிக்கிறேன் ! எதுவும் தெரியாமல் எந்த சித்தரை எதற்காக தேடுகிறாய் ? தேடுதல் முதலில் உன்னை தேடுவதாக இருக்கட்டும் !கொக்கி, கொக்கியான உடலை வைத்துக் கொண்டு மலை ஏறி என்ன பலன் கண்டாய் ? இதுவரையில் எந்த சித்தரை பார்த்துள்ளாய் ? என்ன சொல்வேன் உன் தேடுதலை ? பாவம் நீ !
சித்தர்கள் உன்னைக் காண விரும்பாதவர்கள் ! சித்தர்களுள் பல வகை உண்டு ! நீர் சித்தர்கள், இடுகாட்டு சித்தர்கள், நதி சித்தர்கள், நரம்புக்குரிய சித்தர்கள், குகை சித்தர்கள், சரீரத்திற்குரிய சித்தர்கள், தாவர சித்தர்கள், மூலிகை சித்தர்கள், மலை உச்சி சித்தர்கள் , மலை அடிவார சித்தர்கள், மாயா சித்தர்கள், மறை பொருளில் இருக்கும் சித்தர்கள், கூடுவிட்டு கூடு பாயும் சித்தர்கள், அண்ட வெளியில் இருக்கும் சித்தர்கள், பிண்டத்தை காக்கும் சித்தர்கள், இப்படி 18 வகை உண்டு ! இவர்களுள் நீ எந்த சித்தரை தேடிக் கொண்டிருக்கிறாய் ?
3600 ஆண்டுகளாகவே யுகம் மாறிவிட்டது ! இனி மதம் அழிந்து மனிதம் தளைக்கும் ! ரிஷிகள் வேதத்திற்குரியவர்கள் ! சித்தர்கள் ஞான மூலிகை ! உன் சரீரத்திற்குரியவர்கள் ! மாயைகள், முனிவர்கள் மலருக்கு உரியவர்கள் !
சித்தர்களை தேடி அலையாதே ! திசை மாறி போகாதே ! பூமியில் சித்து வேலை செய்பவனால் விதை ஒன்றை உருவாக்க முடியுமா ? பொன், பொருளை அள்ளி தந்து பிறருக்கு உதவ முடியுமா ? இறந்தவனை பிழைக்க வைக்க முடியுமா ? சித்தர்கள் என்று சொல்லித் திரிபவர்கள் அனைவரும் எத்தர்கள், பித்தர்கள், பயம் காட்டி மானிடரை மயக்குகின்ற மடையர்கள் என்பதனை புரிந்து கொள் !
சித்தர்கள் தன்னைக் காட்டிக் கொள்ளமாட்டார்கள் ! சித்தர்கள் தன்னைத் தொட அனுமதிக்கமாட்டார்கள் ! மக்களிடம் பிச்சை எடுத்து கல்வி கூடங்களும், கோயில்களும் கட்டமாட்டார்கள் ! அவர்கள் கால வர்த்தமானங்களை கடந்தவர்கள் ! இப்போது எத்த பித்தர்களுக்கு போதாத காலம். அவதாரங்கள் என்று யாருமில்லை ! அவர்கள் தன்னை வெளிப்படுத்தி அவுசாரிகளாக இருக்க கண்டேன். எந்த சித்தராவது கோவில் கட்டி ஆசிரமம் கட்டி வாழ்ந்தார்களா ? பூதங்கள் கட்டிய கோயில்களில், நீ புண்ணியம் தேட கண்டேன் ! மனிதன் கட்டிய கோயில்களில் நீ மகத்துவம் இருப்பதாக கூறக் கண்டேன் ! இனி நீ புனித ஸ்தலங்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கும் இடங்கள் எல்லாம் நீரின் தாண்டவத்தாலும், பூகம்பத்தாலும், இடி மின்னலாலும் பொடிப் பொடியாக சிதறும் சத்யமாக !
உலகில் இனி யார் ஏமாற்றினாலும் இடியாய் அவன் வாழ்வில் இறங்குவான் கடவுள் ! கால நிர்ணயம் செய்தாகிவிட்டது ! இனி ஏமாற்றுபவன் யாரும் தப்பிக்க முடியாது !
முதலில் உன்னை உணர் ! பின் உலகில் தேடலாம் !
உன் வாழ்வை வெளிச்சமாக்க யோசி !
சித்தும் வித்தும் தெரியாது திகைப்புற்றவன் நீ !
நான் இநன்யா !
No comments:
Post a Comment