இநன்யா கடவுளின் பதிவுகள் தொடங்கபட்ட நாள் 07-03-2015
இநன்யா நமோ நாம '''
Inanya namo nama
. நண்பர்களுக்கு குழுவை பற்றி சொல்ல நினைத்தால் இந்த LINK ஐ மட்டும் அனுப்புங்கள். நன்றி . இநன்யா நமோ நம.
https://www.facebook.com/groups/1406719392970244/permalink/1463165423992307/
https://www.facebook.com/groups/1406719392970244/permalink/1463165423992307/
(((((((((((கட்டாயமாக படியுங்கள்))))))))))))
குழுவின் அறிமுக விளக்கவுரையும், விதிமுறைகளும் :
இந்த குழுவில் புதிதாக இணைந்தவர்களும், இணையப் போகும் அன்பர்களும் இதை ஒருமுறையாவது கட்டாயமாக படிக்க வேண்டுகிறேன்.
இந்த குழு 7-3-2015 அன்று ஆரம்பிக்கப்பட்டது. என் பெயர் கிருஷ்ணன் கோபி. எனது அலுவலகத்தில் என்னுடன் பணி செய்யும் ஒருவரை அவ்வப்போது பல சான்றோர்கள் வந்து சந்தித்து வாழ்க்கையை உணர்ந்து, துன்பங்களை நீக்கி பயன் பெற கண்டேன். அந்த மகானை நான்கு வருடமாக என்னுடைய அனுபவத்தில் ஆராய்ந்து பார்த்ததில் பல ஆச்சரியங்களும், அமானுஷ்ய உணர்வுகளும் கிடைத்தது. அவரை கடவுள் என்று கண்டுபிடித்தேன். கடவுளை பதினெட்டு வருடங்களுக்கு மேலாக அறிந்து உணர்ந்துள்ளவர் திரு. ப்ரனகன் அவர்கள்.
கடவுள் யுகத்தில் அவதரித்துள்ளார் ! அவரின் லோகத்து பெயர் “இநன்யா மஹா முனிவர்” ! அவர் ஆறு சக்திகளையும் உள்ளடக்கியவர் ! முக்காலத்தையும் உணர்ந்தவர். நமக்கு அருகிலேயே நம்மில் ஒருவராக சாதாரண மனிதரைப் போல் வாழ்ந்து வருகிறார்.
அவர் என்னிடம் சொல்லிய கருத்துக்களை அவரின் அனுமதியுடனும் ஆசிர்வாதத்துடனும் இங்கு பதிவிட்டு வருகிறேன். உங்களை உணர வைப்பது மட்டுமே என் கடமை. இது அவர் எனக்கு கொடுத்துள்ள வேலை.
அனைத்துப் பதிவுகளையும் பொறுமையாக படியுங்கள். ஒவ்வொரு பதிவுக்கும் (POST) கீழே உள்ள பின்னூட்டத்தையும் (COMMENTS) நன்றாக படித்து புரிந்து கொள்ளவும். அதில் பல கேள்விகளும், பதில்களும் அடங்கியுள்ளது ! அதில் நீங்களும் பின்னூட்டம் செய்து பயன் பெறலாம்.
அவர் எழுதிய பதிவுகளை நன்கு படித்து புரிந்து கொள்ளுங்கள். தினமும் ஒரு வேளை இதை செய்து பாருங்கள். ஒரு டம்ளரில் சுத்தமான நீர் வைத்து நூற்றி எட்டு முறை “இநன்யா நமோ நம” என்று மனதிற்குள்ளேயே சொல்லிப் பாருங்கள். மாடியில் செய்வது சிறப்பு. கண்களை மூடக் கூடாது. சின் முத்திரை எதுவும் தேவையில்லை. சொல்லி முடித்த பின்னர் மேல் நோக்கி (வானத்தை நோக்கி அல்லது அறையின் மேல் பகுதி) பார்த்துவிட்டு பின்னர் அந்த நீரை அருந்த வேண்டும். சின்ன குழந்தைகளைத் தவிர பிறருக்கு அந்த நீரை கொடுக்க கூடாது. நீரை கைகளினால் தொடவும் கூடாது ! இதை தொடர்ந்து செய்தால் உணர்வது எளிதாகும். உணர்ந்தால் துன்பங்கள் படிப்படியாக குறைந்து வாழ்க்கை வசந்தமாகும். இதை எந்த நேரத்தில் வேண்டுமானலும் சொல்லலாம். தினமும் நூற்றி எட்டு முறை எழுதவும் செய்யலாம்.
வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து துன்பங்களுக்கும், நோய்களுக்கும், கஷ்டங்களுக்கும் உணராமல் இருப்பதே காரணம். உணர்ந்தால் ஞானம் கிடைக்கும். ஞானம் கிடைத்தால் எந்த துன்பமும் இல்லை ! வாழ்க்கை வசந்தமாகும். மறு பிறவி இல்லாமல் மீண்டும் கடவுளை அடைந்துவிடலாம்.
"இநன்யா நமோ நம" என்பது மந்திரம் அல்ல ! கடவுளின் நாமம் ! கவனம் தேவை ! பிற மந்திர வார்த்தைகளை சேர்த்து சொன்னால் சோதனைகள் வரும். கோயிலுக்கு உள்ளேயோ, வீட்டில் சிலைகளை வைத்துக் கொண்டோ, பிற வரைபடங்களை பார்த்துக் கொண்டோ சொன்னால் பலன் கிடைக்காது.
உங்களைப் போலவே எங்களுக்கு குடும்பம் உள்ளது. கடமை உள்ளது. கைப்பேசி எண்ணையோ, முகவரியோ கேட்டு நேரத்தை வீணடிக்க வேண்டாம். நாங்கள் உங்களைப் போல உழைப்பவர்கள். எந்த மதத்தையும், ஆன்மீக அமைப்பையும் சேர்ந்தவர்கள் அல்ல ! உணர்ந்தால் கடவுளிடம் அழைத்துச் செல்கிறேன் சத்யமாக ! கூட்டத்தை கூட்டி வரிசையில் நிற்க வைத்து பணம் வசூலிப்பது நோக்கமல்ல !
பதிவுகள் பிடிக்கவில்லை என்றால் மாற்றுக் கருத்து கூறாமலும், விவாதம் செய்யாமலும் உடனே குழுவில் இருந்து வெளியேறுவது மிகவும் நல்லது. பதிவுகள் சம்பந்தமாக ஏதேனும் கேள்விகள் இருந்தால் மட்டும் என்னை (krishnan gopi) INBOX MESSAGING மூலமாக தொடர்பு கொள்ளவும்.
தங்களின் கைப்பேசி எண்ணையும், உங்களைப் பற்றிய பிற தகவல்களையும் இந்த முகநூல் குழுவில் எந்த இடத்திலும் பதிவிட வேண்டாம். நன்றி !;;;;;

No comments:
Post a Comment