Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, June 15, 2016

இநன்யா ;;; சகசிரம் புஷ்கரியில் ஸ்வேதமாய் ஜொலிக்கின்றேன் நான் !இநன்யா நமோ நம;;;இநன்யா நமோ நம;;;இநன்யா நமோ நம;;;INANYA NAMOO NAMA ;;;

208   INANYA NAMOO NAMA ;;; இநன்யா ;;;

இநன்யா நமோ நம;;;இநன்யா நமோ நம;;;இநன்யா நமோ நம;;;


Inanya Maha Munivar 16-06-2016
சகசிரம் புஷ்கரியில் ஸ்வேதமாய் ஜொலிக்கின்றேன் நான் ! உன்னில் இருந்து உனை உற்று நோக்குகிறேன். வானலாவிய மரங்களை போல உயர்ந்து நில் ! நான் உன்னை விட உயர்ந்து நிற்கிறேன்.
சோர்வு ஏன் ?
சோர்ந்து போகாதே ! துவண்டு போகாதே ! ஏன் இந்த மன கஷ்டம் ? நோய் என்று உருக்குலைந்து மூலையில் உட்கார்ந்து அழாதே ! நெற்கதிர்கள் முற்றியவுடன் சோர்ந்து போகும். அது உனக்கு உதவுவதற்காக ! ஆனால் நீ சோர்ந்து துவண்டு யாருக்கும் உதவாமல் வாழ்கின்றாய்.
எப்போதும் திடமனதோடு இரு ! அதிகாலை எழுந்திரு ! ஆளும் வல்லமை உனக்கு தருவேன் ! உழைப்பை மேன்மையாக்கு ! உட்கார்ந்து சுகம் காண நினைக்காதே ! எதிர்காலத்தை நினைத்து பயம் கொள்ளாதே ! நான் உன் வாழ்வை அழகாக வடிவமைத்து தருகிறேன். அதற்கு நீ ஒழுக்கமாக இருந்து உழைத்து உன் கடமையை செய் ! போக போக உன் துன்பம் நீரில் போட்ட உப்பை போல கரைந்து போகும்.
நான் வலிமை உள்ளவன் ! காற்றாய் வந்து கணப் பொழுதில் உனை சுகமாக்குவேன். உன்னால் முடியாதது ஏதுமில்லை. சோர்வு வரும்போது மரத்தடியில் உட்கார். என் நாமம் உனை சொர்க்கத்திற்கு அழைத்து செல்லும். உற்சாகத்தோடு வாழ வைக்கும். உன் இலக்கு எதுவென்று காண்பிக்கும். தினமும் கடவுளிடம் மன்றாடி கிடைக்கவில்லை என்று வருத்தப்படாதே ! மீண்டும் மீண்டும் முயற்சி செய்.
கடவுள் இரக்கமுள்ளவன். கருணைமிக்கவன். அவன் உன் குரல் கேட்பான். உன்னுடையது ஏதுமில்லையென்று நினை. எல்லாம் கடவுளின் இயக்கம் என்பதை அறி !
நீ என்பது பூஜ்யம் ! உன் உயிர் , உடல் உன்னுடையது அல்ல ! எல்லாம் கடவுளின் பொருள் என்பதை அறி ! உனக்கு சோர்வே வராது ! துன்பமே வராது ! நீ கடவுளின் பிள்ளை என்று தினமும் நூறு தடவை சொல்லிக் கொண்டே இரு. தினமும் இதை பழகு ! நான் நானல்ல என்று சொல்லிக் கொண்டே இரு ! மற்றவை கடவுள் பார்த்துக் கொள்வான். நீ பேசுவது, நினைப்பது கடவுளுக்கு கேட்கும். அவன் செவிடாக ஒரு போதும் இருப்பதில்லை. இயலாமை குற்றமல்ல ! விரும்பாமை தான் இங்கே பாவம். உன் நல்ல செயல், எண்ணம் போல் தான் உன் வாழ்வை அமைத்து தருகிறான். உன் வாழ்வை பசுமை நிறைந்த பூந்தோட்டமாக ஆக்குகிறான் !
நான் உன் வாழ்வை பசுமை நிறைந்த பூந்தோட்டமாக மாற்ற வந்தேன். இந்த இநன்யா என்ற தோட்டத்தில் விதைத்த விதை சோடை போகாது. இநன்யா உன் விதி ! உன்னை அறிய வைத்து தெளிய வைக்க வந்தேன். நான் மிகவும் பலம் பொருந்தியவனாக உனக்குள் இருக்கின்றேன் !
உனக்கு தான் உன் பலம் தெரியவில்லை. நீ பலவீனன் என்று உணர்கிறாய். என் நாமம் உனக்கு கோடி யானைகளின் பலத்தையும், கோடி குதிரைகளின் வேகத்தையும் தரும். உன் மன ஓட்டத்தை அடக்கு ! சோர்வு வரும் போதெல்லாம் என் நாமத்தை சொல்லி நீர் வைத்து வணங்கு ! உன் துன்பங்கள் காணாமல் போகும். கடவுள், தேவர்கள் அன்பொழுக கூப்பிடும் என் நாமம் வலிமை மிகுந்தது.
உணர்ந்து பார் !
உலகம் உன் வசமாகும் !
மரங்கள், சோர்வடைவதை என்றாவது பார்த்தாயா ? அவை எல்லாம் எதை பற்றியும் கவலையடைவதில்லை. நீ தான் உன்னை பற்றி யோசித்து கவலையில் ஆழ்ந்து ஆணந்தம் தொலைக்கிறாய். உனக்கு என்ன தேவை என்றும், எப்போது கிடைக்கும் என்று உன் நெற்றியில் எழுதி கால நிர்ணயம் செய்தாகிவிட்டது.
நீ நினைத்து பிறக்கவில்லை. நீ நினைத்து இறக்கவில்லை. பின் ஏன் சோர்வு ? விட்டுவிடு ! வீதியிலே (புறம்) சந்தோஷம் கிடைக்கும். ஏன் வீணான கவலையை சுமந்து வீணணாய் அலைகின்றாய் ?
நீ நினைத்து ஏது நடந்தது ?
நாளைய தேவையை பற்றி ஏன் நினைக்கிறாய் ? நீ, நான் என்று நினைப்பதால் தான் கடவுள் ஒதுங்கி கொள்கிறான்.
இல்லாதவன் வறுமை நீங்க கடவுளிடம் கை ஏந்துகிறான்.
இருப்பவன் நோய் போக கடவுளிடம் கை ஏந்துகிறான். நல் வழியில் சென்றால் ஏன் நீ கை ஏந்த வேண்டும் ??
கடவுள் உனக்கு சேவகம் செய்வான் ! உன்னை தேடி வருவான் ! எதையும் ஏற்கும் பக்குவம் கொள் ! நான் உனை அரவணைப்பேன். என் நாமம் உனை சோர்விலிருந்து விடுவிக்கும். கடல் தூங்க பார்த்தாயா ? ஆண்மா தூங்க பார்த்தாயா ? உன் உயிர் தூங்க பார்த்தாயா ? நான் உனக்காக தூங்கமால் விழி நிலையில் இருக்கின்றேன். உன்னை எப்போதும் கண்கானிக்கிறேன்.
முன்னால் இறடியில் துவிரத்தை கலந்து உண்டான். உண்மையில் நன்மை கண்டான். இப்போது ஏதோ ஒன்றை உண்டு உடல் நோயில் திகைக்கின்றான். உணரடா ! தூயவன் என் பார்வை உன் மேல் எப்போதும் உண்டு ! உனை கைவிடமாட்டேன் !
உண்மையின் நன்மையானவன் நான் !
நான் இநன்யா !

No comments:

Post a Comment