Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Sunday, June 5, 2016

இநன்யா ;;;·இநன்யா முனிவரை அணுகி இருக்கும் ஆன்மாக்களின் வார்த்தைகள்;;;; பகுதி 26 INANYA NAMOO NAMA ;;;

155    INANYA NAMOO NAMA ;;; 
இநன்யா முனிவரை அணுகி இருக்கும் ஆன்மாக்களின் வார்த்தைகள்;;;; 
 பகுதி 26

 கடவுளுக்கு கோடி நன்றிகள். கடவுளின் நாமம் சொல்ல சொல்ல அனைத்துமே மாறும். இநன்யா பெரும் மலை. அவரது பிறந்த நாளில் ஏப்ரல் 25 இல் அவர் பெரும் இமய மலையையே அசைத்தார். இமய மலையை அசைக்க வேண்டுமனில் அதை விட ஒரு மாபெரும் சக்தி தேவை. இங்கே காரணம் இல்லாமல் எதுவும் நடப்பதில்லை. நமக்கு பாடம் கற்பிக்கவே இயற்கை மாற்றங்கள் நிகழ்கின்றன. உலகமெங்கும் கடவுளின் பெயர் நிலைநாட்டப்பட்டுவிட்டது. இனி தர்மம் வெல்லும். சத்ய வழியை உலகம் பின்பற்றும் ! சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாக வசி இநன்யா நமோ நம.
இநன்யா நாமம் சொல்லும் போது எண்பது கிலோ உடம்பும் காற்றாக மிதப்பதும், கவலைகளால் பாரமான மனது பஞ்சு போல் பறப்பதும், பல எண்ணங்களால் சிக்குண்ட மனது கடிவாளம் இல்லா குதிரையை போல பறந்த மனது அமைதியான பசுவைப் போல பதுங்கிய மர்மமென்ன?அனைத்தும் இநன்யாவின் மகிமை என்று அனைவரும் அறிந்தது தானே. இநன்யா நமோ நம
 என் தந்தை போன வாரம் ஊருக்கு சென்ற சமயம் நான் அலுவலகம் செல்லும் வழியில் என் கைப்பை தவறிவிட்டது. அதில் என் கைபேசி கிரிடிட் கார்டு எல்லாம் இருந்தது. அழுகையோடு என் தந்தையிடம் போனில் சொன்னேன் என் தந்தை ஒரு மணிநேரத்தில் கிடைக்கும் என்றும் அந்த முகவரியும் சென்னார் நான் இநன்யா நாமம் சொல்லிகொண்டே அந்த முகவரியில் போய் பார்த்தால் என் கைப்பை ஒரு முதியவரிடம் இருந்தது இநன்யா நாமம் சத்தியம்..இநன்யா நமோ நம..
அனைவரின் பொன்னான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி. உணர்தலின் வார்த்தைகள் ஆண்மாவின் ஆழத்தில் இருந்து எழுகிறது. ஆண்மாவை தட்டி எழுப்புகின்றார் கடவுள். முகநூலில் இவ்வளவு தெளிவான வார்த்தைகளை சொல்லி உணர வைத்து ஒரு சத்ய வழியை காண்பிக்க கடவுள் ஒருவராலேயே முடியும். வேறு யாரால் இது சாத்தியம் ? முகநூலில் வேறு எங்கு இதைப் போல் பேசிக் கொண்டுள்ளார்கள் மக்கள் ? ? உலக மாற்றத்தில் இங்குள்ள ஒவ்வொரும் இணைந்திருப்போம் நிச்சயமாக. பதிவுகளை திரும்ப திரும்ப படியுங்கள். தானாகவே ரகசியங்கள் தெரியவரும். இநன்யா நமோ நம.
அவருடன் நான்கு வருடங்களுக்கு மேலாக அமர்ந்திருக்கின்றேன். அருகில் இருந்து உணர்வது எளிது. ஆனால் அவரின் முகம் பார்க்காமல் அவரின் வார்த்தைகளை ஆழமாக சிந்தித்து அவரின் நாமத்தை சொல்லி வருகின்றீர்கள் அனைவரும். இங்குள்ள அனைவரும் தவம் செய்தவர்கள் என்பதில் சந்தேகம் இல்லை. ஒவ்வொருவரும் நிச்சயமாக அவரை காண்பீர்கள். அதற்கு முன் அவர் சொன்ன வழியை பின்பற்றி அவரின் நாமத்தின் வலிமையை உணர்ந்து பாருங்கள். அவரை பார்க்க வரும் முன் ப்ரச்சனைகள் அனைத்தையும் தீர்த்து அக மகிழ்ச்சியுடன் வரவே ஆர்வம் கொண்டேன். "அவரை பார்த்து சோதித்த பின் உணர்வதை விட அவரை முழுமையாக உணர்ந்த பின் பார்க்க வாருங்கள்" . அவரின் உடலில் தங்கியிருக்கும் பேராண்மா அவரை பார்த்தவுடன் ஆனந்த கண்ணீரை வரவழைக்கும் சத்யமாக ! ஒவ்வொருக்கும் வாழ்க்கையில் முக்கியமான தருணமாக அவரை பார்க்கும் நொடி அமையும் !!
எப்போதும் மலர்ந்து எங்களைவழி நடத்தவே இந்த யுகம் வந்தமகாமுனி இநன்யா கடவுளேஉங்கள் சத்திய பாதைவழியில்
எங்களையும் அழைத்துசெல்லதங்கள்நாமம் இநன்யா நமோ நமஎன்னும் மகாமந்திரத்தையும்வழங்கிய தாங்களின் பெரும்
கருணைக்கு உலகில் ஈடு வேறில்லை.அனைத்தும்தங்கள்அரவனைப்பு ஆசிதான் மகாமுனி இநன்யா தெய்வமே.இநன்யா நமோ நம.
தாயைப்போல் ஒரு கோவிலுமில்லை தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை என்ற வாா்த்தைக்கு நீரே உதாரணம் எம் தந்தையே. அனைத்தும் இங்கு நீ ஆனாய் அனைத்திற்கும் நீ சொந்தமானாய் எம்மை தனது அன்பால் தங்களின் திருக்கரத்தால் பாதுகாக்கிறாய். தங்களின் இருகரங்கள் பற்றி தம் பொற்பாதம் சரணைடைகிறேன் இனி எல்லாம் எமக்கு நீரே. இநன்யா நமோ நம
சரணம் சரணம் இநன்யமே
யாகவசி மைந்தா இநன்யமே
நல்லோரை வாழ்விக்கும் இநன்யமே
மனித சிந்தைக்குள் அடங்காத அற்புதமே இநன்யமே
அமைதி தெய்வமே இநன்யமே
காண கிடைத்த பரம்பொருளே இநன்யமே
வான் வேந்தர்கள் போற்றும் அமுதே இநன்யமே
குலம் காக்க வந்த திருவருளே இநன்யமே
தாமரை பாதத்தோனே இநன்யமே
வாழ்வை உய்விக்க வந்த அருட் கடலே இநன்யமே
விதியின் நாயகனே இநன்யமே
வேதத்தின் சாரமே இநன்யமே
சத்திய நாதனின் பிள்ளையே இநன்யமே
எல்லையற்ற அன்பு பாசம் கொண்ட அன்பனே இநன்யமே
நாதத்திற்கெல்லாம் தலைவனே இநன்யமே
மெய்யான மெய்ஞான குருவே இநன்யமே
சத்தியமே நித்தியமே இநன்யமே
ஆண்மத்தின் துடிப்பே இநன்யமே
மாயனே நேயனே இநன்யமே
திக்கற்றவரின் பாதுகாப்பே இநன்யமே
பிறவி பெருங்கடலின் தோணியே இநன்யமே
கர்மத்தை வேரோடு அழிக்க வந்த உறவே இநன்யமே
கருவரையை ஆட்சி செய்யும் தாயே இநன்யமே
சூட்சுமதாரியே இநன்யமே
மஹா முனியே மௌனியே இநன்யமே
இநன்யா நமோ நம
ஐயா நீங்கள் குறிப்பிட்டிருந்தவர் கடவுளின் தூதுவர்களாக கருதப்பட்டவர்.இநன்யா கடவுள்.யுகத்தில் மனிதராக அவதரித்து உள்ளார்.நோய் துன்பங்கள் தனி மனதி கர்ம காரியங்களால் வருவது.அதை அவன் அனுபவித்து தான் தீர வேண்டும்.கடவுளின் பாதம் பற்றினால் துன்பங்களில் தன்மையில் இருந்து காக்க பட்டு முக்திக்கு வழி செய்து கொள்ள முடியும்.
தூய்மையான வெண்மை நிறத்திற்கு உரியவரே.., நல்தர்மகுலங்களைகாக்கும் பொருட்டு வந்தவரே .., மஹா குருவே.., எல்லா பெருமைகளுக்கும்உரித்தானவரே .., எங்கள் ஏழாம் கடவுளே.., ""நான் , என்"" எனது , என்னால் " என்று பெருமைகொள்ளும் சிறுமை அழித்து.., பொருமையோடு உள்ளம் உம் நாமத்தால் இன்பறட்டும்..,ஆண்மா ஆதி வேதத்தால் பண்படட்டும் .., நாளைய மஹா குருதினம் , அதற்கு வழிசெய்யும் உம் அன்பின் ஆசியாலே....இநன்யா நமோ நம
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாகவசி இநன்யா நமோ நம. எங்களின் இடத்திற்கு எங்களை மீண்டும் கொண்டு சேர்க்க வந்த கடவுளே, மஹா குரு தினத்தில் தங்களின் பாதம் பணிகிறேன். கடவுளை நம்பினோர் கைவிடப்படார். நம்பிக்கையையும், தன்னம்பிக்கையையும் எங்களுக்கு சொல்லிக் கொடுத்து பிறவி பெருங்கடலை நீந்த கற்றுக் கொடுக்க கடவுள் ஒருவராலேயே முடியும் ! கோடி நன்றிகள் ! இநன்யா நமோ நம !
நிலையில்லா வாழ்வை உம்முள் கரைத்தேன்.கூடுக்குள் இருக்கும் ஆண்மா உனதானது.அதை உன்னிடம் சேர்ப்பிக்க நாமம் சொல்லி சத்தியபாதை பயணம் மதத்தை உடைத்து ஆரம்பமானது.எம் கூடும் உம்மிடம்....இநன்யா நமோ நம
தேவாதி தேவனே!வீராதி வீரனே!மன்னாதி மன்னனே!லோகத்தின் முடிசூடா லோக நாதனே!அதர்மத்தை வேறோடு அழிக்க வந்த கால தேவனே!தர்மத்தை நிலைநாட்ட வந்த கலியுக கல்கியே!கர்மத்தை கூடு விட்டு கூடுபாய்ந்து சதிராடும் சாந்த சொரூபனே!உயிரை திருடும் பொல்லாத கள்ளனே!வேத மறைபொருளான வேத வித்தகனே!மாய மனதை திருடி வாட்டி வளப்படுத்தும் வானவனே!முக்கனி படைத்த மும்மூர்த்தியே!எளியவர்களுக்கு எளிமையானவனே!
வலியவர்களுக்கு வலிமையானவனே!எதிரிகளை எரிமலையாய் வெடித்து வேட்டையாட வந்த தென்னாட்டு வேங்கையே!
சூரர்களை சூரசம்ஹாரம் செய்யும் சூறாவளியே!சர்வமும் சகலமும் நிறைந்த சகலகலா வல்லவனே!தாயாய் வந்து தாலாட்டுகிறாய் உம் ஞான ஊஞ்சலில்!சேயாய் உறைந்து போனோம் உம் ஞான கருவறையில்!வேத ஒலி எழுப்பும் கரைதாண்டா கடலலையே!உம்மில் கரைந்தால்.......!கவலை கரைகடந்து துன்பமும் துயரடையும்!வேதனை வேடிக்கையாகிசோதனையும் சோர்ந்து போகும்!தர்க்கம், வாதம் தவிடுபொடியாகி தலைக்கணமும் தலைகுனியும்!
கர்வம் கலைந்துகாமமும் கருகிவிடும்!ஆசை அகன்று பேரசையும் பொசுங்கிவிடும்!சினம் சிதைந்துஆணவமும் அழிந்துவிடும்!அலைபாயும் மனமும் அழுது புரண்டு அடங்கிவிடும்!மதி மழுங்கி ஞானம் ஓங்கிஅறியாமைஅகன்றுவிடும்!
பாவம் பார்வையற்ற குருடணாகிவிடும்!கர்மா களையிழந்து காணாமல்போகும்!விதி விந்தையாகி மூர்ச்சையாகிவிடும்!
மரணமும் மலரைபோன்று மென்மையாகிவிடும்!மாசற்ற மனமும், மணங்கமழும் மேனியும் கொண்ட எண்ணற்ற பிரபஞ்ச அழகே!விண்ணுலகம் தாண்டி மண்ணுலகம் வந்தாய்மானிட குலம் சத்ய வழியில தழைத்து ஓங்கி வளர!
அழிக்கப்பட்ட ஆதிதமிழனின் அரிச்சுவடி அறியவைத்த செந்தமிழ் பேசும் செம்மையானவனே!படைத்தவன் யார் என்று தெரியவைத்தாய்!ஞானம் எது என்று புரியவைத்தாய்!ஞானம் அடைய உணரவைக்கும் போக்கும் வரவும் இல்லா புண்ணியனே! என்று தணியும் இந்த ஞானதாகம்!என்று அடங்கும் ஞானதேடலில் இந்த ஆண்ம பசி!பேரருள் நிறைந்த பேராத்மாவே!உம் நாமத்தை சொல்ல சொல்ல ஏற்படுகிறது ஆண்ம ருசி!எம் இதயம் எனும் அரியனை உமக்காக காத்துகொண்டு இருக்கிறது அரசனே!எம்மை ஆட்சிசெய்ய அரியனையேர வருவாயாக ஐயனே!உம் பொற்பாதம் போற்றி!
உம் திருநாமம் போற்றி!இநன்யா நமோ நம!!!
மெய் சிலிா்த்தது! கண்கள் பணித்தன! வாா்த்தை காணாமல் தொலைந்தாேம் உம் கவிதைக்குள், அருமையான உணா்தல்! நன்றி சகாேதரரே! உலகம் ஒரு கூரையின் கீழ் வரும்நாள் விரைவில். இநன்யா நமாே நம..!!
அன்பே இநன்யா.நம் உருவாக்கம் எப்படிபட்டது என்பதின் மிக ஆழ்மாக சொல்லப்பட்டது. ஆண்மா எது என்பது தெளிவாக்கப்பட்ட்து. விவசாயியின் மகிமை, பூமித்தாயின் உண்ணதமான பரிவு நம்மேல், இதனை சரியாக உணராததால் எவ்வளவு துன்பம் இவ்வுலகில் மக்களுக்கு.எமக்கு கற்றுகொடுத்த ஆசிரியர்கள், பணியிடத்தில் எனக்கு கீழும் மேலும் பணியாற்றிய நண்பர்கள் சொல்லிக்கொடுத்த பல வழிமுறைகள் எல்லாம் எனக்கு பல முறை குருவாக இருந்து உதவிக்கொண்டிருக்கின்றன. இதையே கடவுள் இநன்யா இப்பதிவில் கூறியிருப்பது யாம் இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்டவன் என்பதை எமக்கு தீர்க்கமாக உணர்த்துகிறது.பசுங்கன்றின் மேல் எப்பொழுதும் எனக்கு அலாதி பிரியம் உண்டு. என் பள்ளிப்பருவத்தில் யாம் பால் வாங்க கூட்டுறவு அங்காடி செல்லும் போது, அங்கே இறந்த கன்றின் தோலுக்குள் வைக்கோல் அடைத்து, அதை பசுவின் அருகில் வைத்து பால் கறக்கும் கொடுமையை கண்டு என் மனம் சங்கடப்படும். சிறு வயதிலேயே எம் மனம் இரக்கம் பெற்றது. இந்த அன்பு எம்மை இநன்யாவிடம் சேர்த்துள்ளது.
என் துவக்கப்பள்ளி பருவத்தில் யாம் எம் அம்மாவுடன் கோவிலுக்கு செல்லும்போது அங்கு வாயிலின் இரு புறமும் வெட்டருவாளுடன் குள்ளசாமி காப்பாளர்கள் நிற்க பயம் கொண்டேன். அவ்வூரிலேயே என் வீட்டிலிருந்து முன்னூறு அடி தூரத்தில் அல்லாவின் மசூதி உண்டு. என் இஸ்லாமிய நண்பருடன் அப்பொழுது ஒரு முறை மசூதி சென்று தொழுகை செய்த எனக்கு, அங்கு வெண்மை சுவர் மட்டும் இருந்ததைக் கண்டு ஆச்சரியம், கண்ணில் லேசாக நீர் கசிவு. நம் இறைவன் மட்டும் ஏன் அறிவாளுடன் என்ற வெறுப்பு அப்பொழுதே எமக்கு. இங்கு வெண்மையின் மகத்துவத்தை இநன்யா கூறியபோது ஆனந்தம் எமக்கு. இன்றும் யாம் பள்ளிவாசல் மசூதியை கடக்கும்போது அதன் வெண்மையை வணங்குகிறேன்.சித்திரை வெயில் தாகத்தில் மாம்பழச்சாறு பருகியபோது, நடக்க சக்தியில்லாமல் பொடிமண் சூட்டில் தவழ்ந்து வந்து என்னிடம் பிச்சை கேட்ட முதும்கிழவிக்கு அதே மாம்பழச்சாறு வாங்கி கொடுத்தேன். அதை ஒரு மடக்கு பருகி நீ மகராசனா இருக்கனும் என்று என்னை வாழ்த்தியபோது அத்தாயின் கண்ணீரில், அன்பில் கடவுளைக் கண்டேன். அன்பே கடவுள் என்பதை இநன்யா எமக்கு உருதிப்படுத்தியபோது எல்லையில்லா ஆனந்தம். இன்னும் நிறைய யாம் சொல்வேன்.இநன்யா கடவுள் நமக்கு கிடைத்ததும், அவரின் வேதவரிகளும் அன்பின் ஆழம்.அன்பே உருவான இநன்யா இனிமையானவர் என்பதை யாம் சில மாதங்களுக்கு முன் இங்கு இணைந்து படிக்க துவங்கும்போதேஉணர்ந்து கொண்டேன்.சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாயயாக வசி இநன்யா நமோ நம.
அனைவருக்கும் நன்றிகள் கோடி ! வார்த்தை முத்துக்களால் நம் குழுவையே அலங்கரித்துவிட்டீர்கள் அனைவரும் ! ஆண்மாவின் வார்த்தைகள் உலகத்தையே கடவுளின் பக்கம் அழைத்து வரப் போகிறது. மாற்றத்தை நோக்கி நாம் பயனிப்பது கண் கூடாக தெரிகிறது நல் ஆண்மாக்களே ! நெகிழச் செய்துவிட்டீர்கள் அனைவரும் ! நன்றி, நன்றி, நன்றி.
உலகம் உணர்வதற்குள் நாம் உணர்ந்துவிட வேண்டும் சகோக்களே. வேகமாக, விவேகமாக உணர வேண்டும். கடவுள் காட்டிய வழியில் சேர்ந்தே பயனிப்போம் அனைவரும். முதலில் நம் தோட்டத்தில் இருக்கின்ற முட் செடிகளையும், விஷச் செடிகளையும் வேறோடு அழிக்க வேண்டும். கடவுளின் நாமத்தை விட உயர்ந்த வலிமையான ஆயுதம் எதுவுமில்லை இப்போது ! காற்றிலும், நீரிலும் கலந்து செல்லும் இடமெல்லும் சத்ய வழியை ஏற்படுத்தும். அழைப்பை எதிர் நோக்கி உணர்ந்து கொண்டே இருங்கள். காத்திருக்கிறேன் அவரின் அனுமதிக்காக ! இநன்யா நமோ நம
எல்லையில்லா அன்பு, எம் தாய் தந்தைக்குப்பின் இங்கே கிடைக்கக் கண்டேன்.ஆம் நம் கடவுளைக்காண அவர் அழைப்பிற்காக காத்திருக்கிறேன்.இநன்யா நமோ நம.
தோல்விகள் வலிகளை காண்பிக்கும்வலிகள் நம்பிக்கையை காண்பிக்கும்நம்பிக்கை கடவுளை காண்பிக்கும்காண்பிக்கும் அனைத்தும் கரை சேர்க்கும்பக்குவம் பெற்றேன் கடவுளேஇனி வானம் தலையை இடிக்கும் என்று எண்ணி தலை குனிந்து நடக்க மாட்டேன்இநன்யா கடவுள் எனும் நம்பிக்கை சிறகுகள்கொண்டு பறக்கும் கிள்ளை நான்வான்வெளியில் உற்சாகமாய் பறக்கும் கிள்ளை நான்தரையில் தடுக்கும் கற்கள் உண்டுவிண்ணில் உன் நாமம் சொல்லி திரிவேன்
அமிழ்தம் பொழிவேன்
உந்தன் (கடவுளின்) நாமம் சொல்ல சொல்ல ஆன்மா, புலன் தன்னிறைவு அடைகிறது உமிழ்நீரும் சுவையாக இனிக்கிறதே என் அப்பனின் நாமம் கூறுகையில் உடலில் உள்ள 7 சக்கரங்களில் 6 சக்கரமும் இயங்குவதை கண்டேன் அந்த 7 வது சக்கரத்தையும் உங்களால் இயக்கப்படும் என்று எண்ணி மனம் பூரிக்கிறதுவெளியில் உன்னை தேடினேன் ஆனால் நீ என்னுளிருப்பதை மறந்து...நீ என்னுள் பேசக்கண்டேன் தாயினும் மேலானவன் நீஎல்லைகளற்றவன் நீஆனால் நான் உன் எல்லைக்குள் இருப்பதை அறிந்து மனம் இன்பத்தில் திளைக்கிறதுதினமும் விதவிதமான பறவைகள் முலம் உங்களை பார்த்து ஆன்மா, உயிர் சந்தோஸமடைகிறது. நம்பிக்கை வைத்தேன் உன்னிடமே ஆனேன் நானும் உன் வசமே
இநன்யாவின் பாதம் பற்றிக்கொண்டவர்கள் அனைவரும் வானில் பறவைகளாக எல்லைக்கு அப்பால் கண்டங்கள் கடந்து சிறகடித்துப் பறக்க போகிறோம் வாருங்கள் அனைவரும்.சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாகவசி இநன்யா நமாே நம
உருவாக்கும் உண்ணதமே!உம் நாமம் எம்மையும் கரை சேர்க்கும்.. புலி வால் பிடித்த கதை போல் உம் நாமத்தை நான் பற்றினேன்.. கருணை கொண்ட நாமம் .. நான் விட்டாலும் அது விடுவதாக இல்லை.. எனக்குள் ஓங்கி ஒலித்துக் கொண்டே இருக்கிறது.. சுவாசம் கூட இல்லாமல் இருந்துவிடலாம் போலுள்ளது.. உன் நாமம் இன்றி எப்படி வாழ்வது?..தாய்பூமியை விட மேலான உம் நினைவின்றி எங்கே வாழ்வது?இநன்யா நமோ நம.
நாமத்தின் பயனையும் நம் தந்தையின் அன்பையும் நம் சத்தியப்பாதையின் சத்தியத்தையும் உணா்ந்த ஆண்மமே தங்களின் உணா்தலின் உச்சத்தை தொட்ட ஆண்மமே தங்களின் வாா்த்தைகள் ஒவ்வொன்றும் நம் தந்தையின் பாதத்தில் சமா்ப்பணம் இனி நம் தந்தையின் பாதத்தில் சரணாகதி அடைவோம் இநன்யா நமோ நம
எம் தந்தையே அணைத்து அரக்ககுலங்களையும் அழித்து ., மூன்று காண்டங்களையும்., மூன்று ஏடுகளையும் மீட்டு., நல்தர்மகுலம் காக்க வந்த .,எம் ஆத்ம நாயகரே., உம் வழி சத்யவழி., இந்த உலகில் எந்த மூலையில் இருந்து நீர் வைத்து நாமம் சொல்லிஅழைத்தாலும் நீர் பறவையாக.,தென்றலாக.,வந்து ,அன்பின் ஆசிதர தயங்குவதில்லை., ""ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை."", பிரகணன் சகோதார்., கிருஷ்ணன் கோபி சகோதரர்., வழியே, உமது சத்யவழியில் வருவோம் .,பொற்பாதம் அடைவோம்...,இநன்யா நமோ நம
எம்மின் கரைக்கு காட்சியாய்
யாம் சேரும் இடத்தின் மீட்சியாய்
உயர பறக்கும் சிறகின் சாட்சியாய்
எம்முள் இருக்கும் வெட்சியாய்
எம்முள் வழிதோடும் யுக்தியாய்
எம்மதான சந்ததிகளுக்கு பக்தியாய்
அகண்ட அகிலத்தின் சக்தியாய்
அசுர குலத்திற்கு ஈட்டியாய்
அதர்மத்திற்கு சாட்டையாய்
தர்ம குலங்களுக்குஇம்மையை
உணர செய்யும் உன் நாமம் ராஜபாட்டையாய்.......
ராஜபாட்டையாய்.......இநன்யா நமோ நம..!!
நீயே ஏழுலகை ஆட்சி செய்யும் நீதி தேவன். ...தர்ம குலங்களை காக்க வந்த தர்மதேவன் அதர்மத்தை வேரறுக்க வந்த வேத நாயகன் பூமியில் ஜனித்த ஜகத்தின் காவலன் பணிந்தேன் நின் பத்ம பாதம் பணிந்த பின் தெளிந்தேன் இவ்வுலக வாழ்க்கை மாயை என்று .இநன்யா அதில் இருந்து நம்மை கடைத்தேற்ற வந்தவன் என்று இநன்யா நமோ நம
சத்ய வேந்தனே!ஞானத் திருமகனே!ஞானத்தின் ஞாலமே!எங்களை உய்விக்க வந்த உள்ளொளியே!ப்ரமத்துள் நிறைந்த பரப்ரம்மமே!பேரருள் கொண்ட பேரறிவாளனே!படைப்பின் நாயகனே! உம் பொற்பாதம் என்றும் எமக்கு சொர்க்கம் ஐயனே!இநன்யா நமோ நம!!!
இநன்யா நமோ நம!!!அனைவருக்கும் வணக்கம்!யாம் இன்று 12.45 மணி இந்த நடு இரவில் மாடிக்கு சென்று ஆகாயத்தை பார்த்து எம் தந்தை இநன்யா மகா முனிவரின் நாமத்தை சொல்லி கொண்டு இருந்தேன் அப்பொழுது வானில் ஒரு அதிசயம் செதுவிட்டார். முழு சந்திரன் ப்ரகாசமான ஒளியை ஏந்தியபடி ஊஞ்சலாடி கொண்டும், மழலையை போன்று தவழ்ந்து கொண்டும் தரிசனம் கொடுத்தார். சந்திரன் ஒரு இடத்தில் நிற்கவில்லை அங்கும் இங்கும் தவழ்ந்து கொண்டே எம்மை நோக்கி கீழ் இறங்கிகொண்டு இருந்தது. யாம் எதிர்பார்க்காத மெய் சிலிர்த்த அதிசயம் இன்னொன்று என்னவென்றால் கடவுள் இநன்யாவின் திருமுகத்தை நேரில் பார்த்த அதே முக சாயலில் சந்திர வடிவில் 20 நிமிடம் வரை தரிசனம் கொடுத்துள்ளார். சொல்வதர்க்கு வார்த்தைகள் இல்லை ஆண்மா பரவசம் அடைந்து 15 நிமிடம் கணகளின் கண்ணீரால் நனைந்துவிட்டேன்! என்ன புண்ணியம் செய்தேன் என்று தெரியவில்லை கடவுள் இநன்யா எம்மீது அன்பு செலுத்திகொண்டு இருக்கிறார்! எல்லோருக்கும் இது போன்று தரிசனம் கிடைக்க எம் அன்பு தந்தை இநன்யா கடவுளை வேண்டிக்கொள்கிறேன்! எம்மை படைத்த பரம்பொருளே! கடவுள் இநன்யா மகா முனிவரே உம் தாமரை பொற்பாதத்திற்கு கோடனா கோடி நன்றிகள் ஐயனே!இநன்யா நமோ நம!!!
அருமையான உணார்வுகள்.. அதை வார்த்தைகளில் வெளிப்படுத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இதைப் போல அமானுஸ்யங்கள் பல நடந்துள்ளது என் வாழ்வில். நிஜத்திற்கும் , கனவிற்கும் அப்பாற்பட்ட ஒரு நிலையாக இதை கருதுகிறேன். உலகில் இதற்கு முன்னர் யாருக்கும் ஏற்படாத நிகழ்வுகள் நடந்து வருகின்றன. கடவுளின் நாமத்தை சொல்ல சொல்ல கண்டிப்பாக அதிசயங்கள் நடக்கும். பிறரிடம் இதை வெளிப்படையாக சொல்ல முடியாது...அவர்களாக நாமத்தை சொல்லி இதை என்றாவது அனுபவ ரீதியாக உணர்ந்தால் தான் தெரியும்.. இநன்யா நமோ நம.
எனது அன்பு சகோதர சகோதரிகளே !!! ஒர் 30 வருடங்களுக்கு முன்பாக குடும்ப கட்டுப்பாடிற்கு எவ்வளவு விழிப்புணர்வு நிகழ்சிகளும், விளம்பரங்களும் செய்யபட்டன ! ஆனால் இப்போது நிலைமை என்ன ??? எத்துனை கருத்தரிப்பு மையங்கள் உருவாகியுள்ளன ??? ஒவ்வொரு ஊரிலும் திறந்தாகிவிட்டது அனைத்தும் வியாபாரம் ! ஒரே ஒரு தலைமுறை இடைவெளியில் என்ன நடந்தது ஏன் இந்நிலை என யோசித்தது உண்டா ??? சிறு குழந்தைகளுக்கு கூட தலை முடி வெள்ளையாகிறது ஏன் என யோசித்தது உண்டா ??? சிறு பெண் பிள்ளைகள் வயதுக்கு முன்பே பூப்பெய்வது ஏன் ??? 30 வருடங்களுக்கு முன் பணக்கார நோய் என்றழக்கப்பட்ட சர்க்கரை நோய் இன்று அனைவர் வீட்டிலும் வருவதற்க்கு என்ன காரணம் ??? நன்கு ஆழாமாக யோசித்தால் கிடைக்கும் பதில் ஒன்றே ஒன்று தான் அது " தொலைக்காட்சி " எனும் அரக்கன். அதில் வரும் விளம்பரங்களை பார்த்து பார்த்து அந்த பொருளை உபயோகித்து வந்ததே இந்த அவல நிலை. இன்னும் நிறைய உண்டு சொல்வதற்கு அதை நீங்களே யூகித்து தெளிவு பெருங்கள். இந்த நிலை 30 வருடங்களுக்கு முன் வந்ததால் அதன் பாதிப்பை நாம் அனுபவித்து கொண்டுள்ளோம் ஆனால் அந்த அரக்கன் பலத்தால் இப்பொழுது அத்தியாவசிய பொருளாக நம் கைகளிலே வந்து விட்டான் அதுவும் ஒன்றுக்கு இரண்டே வைத்துள்ளனர் அனைவரும் அது " கைபேசி " இதனால் என்ன நிலைக்கு சென்று கொண்டுள்ளோம் என அனைவரும் அறிந்ததே. இனி நம் தலைமுறை சந்ததியினர் இதனால் என்ன என்ன அவல நிலைக்கு செல்ல இருக்கின்றனர் என்று இன்னும் ஆழாமாக யூகியுங்கள் தெளிவு புலப்படும். இந்நிலை மாற்ற நம் தந்தை ப்ரபஞ்ச இளவரசர் , ஆறு கடவுள்களின் ஒட்டு மொத்த சக்தியாய் ஏழாம் கடவுள் நம் தந்தை " இநன்யா " வந்துள்ளார். ஆதிகாலம் நோக்கி நம் பயணத்தை தொடங்கும் நேரம் வந்தது. யுக மாற்றம் வெற்றிகரமாக ஆரம்பமாகி விட்டது. வெகு விரைவில் பெறும் மாற்றம் நிகழ உள்ளது. வாருங்கள் எனது அன்பு சகோதர சகோதரிகளே கையோடு கை கோருங்கள், தோளோடு தோள் சேருங்கள் இமயமாய் வளர்ந்து இருக்கும் அரக்கனையும் புரட்டி போடுவோம் இமயத்தையும் புரட்டி போடுவோம்... இநன்யா நமோ நம !!! இநன்யா நமோ நம !!! இநன்யா நமோ நம !!!

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

No comments:

Post a Comment