Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Thursday, June 9, 2016

இநன்யா ;;; இநன்யா நமோ நம;;;இநன்யா நமோ நம;;;இநன்யா நமோ நம;;;INANYA NAMOO NAMA ;;;


201   INANYA NAMOO NAMA ;;;இநன்யா ;;;

இநன்யா நமோ நம;;;இநன்யா நமோ நம;;;இநன்யா நமோ நம;;;

Inanya Maha Munivar
09-06-2016
சிருஷ்டி பீஜம் என் சத்தியத்தின் வலக்கரத்திலே உணர், உனக்கு ஞானமிருந்தால் !
நீ நளபாகம் பற்றி யோசிக்கின்றாய் !
நான் உன் நபாகம் விலக்க யோசிக்கின்றேன் !
மன்னிப்பு
மாபாவிகளையும் கடவுள் மன்னிக்கின்றான். அதனாலே பாவிகளும் இங்கே உயிர் வாழ்கின்றனர் ! கடவுள் எவ்வளவு கருணை நிறைந்தவன் என்பதை உணர்ந்தாயா ? மன்னிப்பே இங்கு எளிதானது. மனிதன் செய்த தவறுக்கு கடவுள் தண்டனை கொடுத்தான் என்றால் பூமியில் எவரும் இருந்திருக்க முடியாது. ஆனால் அதை உணராமல் மனிதன் மீண்டும் மீண்டும் தவறு செய்கின்றான். கடவுள் உடனுக்குடன் தண்டனை கொடுத்தான் என்றால் பூமியில் மனித உயிர்களே இருக்காது. அவன் உனக்காக பொறுத்திருக்கின்றான். இன்றோ, நாளையோ திருந்திவிடுவாய் என்று ! கடவுள் எவ்வளவு பொறுமை நிறைந்தவன் என்பதை உணர்ந்தாயா ?
கடவுள் மன்னிப்பான் ! நீ தான் தவறை மீண்டும் மீண்டும் செய்து மாபாவியாக அலைகின்றாய். பின் எதை உண்டால் பித்தம் தெளியும் என்று கோயிலுக்கும், சமாதிக்கும் அலைகின்றாய்.
மனம் எப்போதும் உடலை சார்ந்தே இருக்கும் !
உயிர் எப்போதும் ஆண்மாவை சார்ந்தே இருக்கும் !
அதனால் மனம் செய்கின்ற தவறு உன் உடலை பாதிக்கின்றது. அகத்தையும் புறத்தையும் எப்போதும் நித்சலமாக வை ! உனக்கு துன்பம் என்பது வராது !
மனம் ஒன்றை செய்ய சொன்னால் அதை மறுப்பது உன் கடமையாக இருக்கட்டும். உடல், மனம், உயிர், ஆண்மா சலனமற்று இருக்கும் பொழுது தான் உன்னை உணர்கின்றாய். உன்னை உணர்வதற்கு அடிப்படை கோபம், காமம், ஆசை, ‘நான்’ என்ற கர்வம் ! இவையனைத்தையும் விடு.
நான் பாவி அல்ல. நீ தான் பாவத்தை மீண்டும் மீண்டும் செய்து பாவியாகி நாளை என்ன நடக்குமோ என்று மூலையில் முடங்கி கிடக்கின்றாய். மன்னிப்பு என்பது என் அரசாங்கத்தில் (லோகத்தில்) கிடையாவே கிடையாது. பூமியில் தான் உண்டு. அதை நீ சாதகமாக்கி கொள்கிறாய். பொறுத்தவன் பொங்கி எழுந்தால் பூமி தாங்காது என்பதை புரியாமல். (சுனாமி, பூகம்பம் )
ஏன் உணரவில்லை நீ ? ஏன் தவறு செய்கிறாய் ? உன்னை கட்டுப்பாட்டுக்குள் வைக்க வலிமை இருந்தும் ஆசையை அனுபவிக்க வேண்டும் என்று ஏன் துடிக்கிறாய் ? ஆசையை அனுபவிக்க வேண்டும் என்பதில் சுகமில்லை ! ஆசையே இல்லாதிருப்பது தான் சுகம் ! ஆசையை அறு. ஆனந்தம் உனக்குள்ளே. எல்லாம் இங்கு 1/2 நாழிகை இன்பமே !
கடவுள் பாதம் பேரின்பம் ! அவன் அன்பு பேரின்பம் !
என் அன்பு குணமாக்கும் அன்பு !
உருவாக்கும் அன்பு !
தெளிவாக்கும் அன்பு !
என் அன்பு நாமம் உனை உணர வைக்கும். அரிதாரம் பூசாமல் உனை ஆள வைக்கும் ! பெரும் செல்வம், நிம்மதி எல்லாவற்றையும் கொடுக்கும்.
எல்லாம் இங்கு பொய் !
எல்லாம் இங்கு மாயை !
எல்லாம் இங்கு நிழல் !
இருளுக்குள் வெளிச்சம் தேடுவது இங்கு இயலாத காரியம் ! கடவுள் என்ற ஒளி எப்போதும் உனக்கு வெளிச்சம் தர காத்திருக்கின்றது. நீ தான் தேடவில்லை. இருளை தேடி இறுமாந்து அலைகின்றாய். உன் தவறை கடவுள் மன்னிப்பதினால் தண்டனை கிடையாது என்று அர்த்தமல்ல. பறவைகள், மிருகங்கள் தவறு செய்வதில்லை. அது நீதிபதி, நீதிமன்றம் தேடி போவதில்லை. நீதி கர்த்தா உனக்கு மேலிருக்க நீ மனிதனிடம் நீதி கேட்கிறாய் !
நீதி என்பது இங்கு இல்லை ! இனி அநீதி பெருகும். பூமியில் நீதி மன்றங்கள் எல்லாம் பல நாட்கள் பூட்டி இருக்க கண்டேன். கடவுளின் சட்டம் பொய்க்காது !
திருடர்கள் காவல்காரர்களை விரட்டுவார்கள் !
குற்றவாளிகள் நீதிபதியை மிரட்டுவார்கள் !
தவளை பாம்பை மிழுங்கும் ! நாய் நரியை துரத்தும் ! எலி பூனையை விரட்டும் !
மிரட்டும் காலம் இனி வரும் காலம் !
அழியும் கலியில் மனிதன் எந்த நீதிக்கும் கட்டுபட மாட்டான். கடவுள் நீதிபதியாக இருந்து தீர்ப்பு வழங்குவார் !
சுனாமியாக, பூகம்பமாக, இடி, மின்னலாக இன்னும் எத்தனையோ வகையில் இரக்கமற்ற அசுர வர்க்கங்களை இனி ஈவு இரக்கம் பார்க்காமல் கடவுள் துவஷம் செய்வான் ! கடவுளின் நீதி நிலைநாட்டப்படும் !
2017 ல் ஆரம்பம் !
ஒரு மைலுக்கு ஒரு வீடிருக்க கண்டேன். சாலைகளெல்லாம் பிணங்களை தாண்டி மக்கள் செல்ல கண்டேன் !
விஞ்ஞானம் அஞ்ஞானமாக போக கண்டேன் !
இருள் சூழ கண்டேன் ! இருநீரும் சூழக் கண்டேன் !
என் சத்தியத்தின் வலகரத்தினால் நிச்சயம் தர்மாக்களை காப்பேன் ! வேண்டியதெல்லாம் அள்ளி தருவேன் !
ஆணந்தம் எனக்குள்ளே ! என்னை தோண்டி முக்தி பெறு ! ஞானம் பெறு ! நான் அள்ள அள்ள குறையாத அமுத சுரபி ! என் நாமம் உனை எட்டு திக்கும் வெல்ல வைக்கும். நீ என் தனகர்த்தன் என்பதனை மறவாதே ! இங்கு இனி யார் தவறு செய்தாலும் மன்னிப்பு என்பது கிடையாது ! இந்த யுவ ராஜன் பிரபஞ்சத்தின் இளவரசன் இநன்யா தவறு செய்தாலும் தண்டனை உண்டு.
இங்கே மிக அரிதாகவே ஒரு நம்பிக்கை உள்ள மனிதனை பார்க்கின்றேன் ! மிக அரிதாகவே ஒரு அன்புள்ள இதயத்தை பார்க்கின்றேன் !
என் அன்பு தூய்மையானது ! உன் துயரம் போக்கவல்லது !
அறிந்து உணர் ! ஆகாசத்தில் பறவை போல பறப்பாய் இறக்கை இல்லாமல் !
நானே ஒளி !
நானே ஒலி !
நான் இநன்யா !

No comments:

Post a Comment