200 INANYA NAMOO NAMA ;;; இநன்யா ;;;
இநன்யா நமோ நம;;;இநன்யா நமோ நம;;;இநன்யா நமோ நம;;;
கடவுளுக்கு கோடான கோடி நன்றிகள். பல சூட்சுமங்கள் நிறைந்த பதிவு. நம் குழுவில் உள்ள பலரும் கேட்ட கேள்வி ஒன்றை இந்த நேரத்தில் ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.
“நான் அதிகமாக பாவம் செய்துள்ளேன். கடவுள் என்னை மன்னித்து ஏற்றுக் கொள்வாரா ?”.
இந்த கேள்விக்கு பதில் கடவுள் அருளிய இந்த பதிவில் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. கடவுளை தவிர நம் யுகத்தில் பிறந்தவர்கள் அனைவருமே ஏதேனும் ஒரு வகையில் பாவம் செய்தவர்கள் தான். எப்போது இந்த பூமியில் முதன்முதலாக கால் வைக்கின்றோமோ, அப்போதிருந்தே அறியாமல் புரியாமல் பாவம் செய்ய தொடங்குகின்றோம். நாம் நிலத்தில் வைக்கும் ஒவ்வொரு அடியிலும் நம் கால் பட்டு கோடிக்கணக்கான நுண்ணுயிர்கள் மடிகின்றன. அதனால் தான் ஆதிகாலத்தில் மனிதர்களின் கால்கள் தரையில் படவில்லை என்று கடவுள் சொல்வார். ஆத்ம பலத்துடன் எப்போதும் காற்றில் தவழ்ந்தான் என்று சொல்வார். இந்த நரகத்தில் பாவம் செய்யாமல் வாழ கடவுளால் மட்டுமே முடியும். நாம் செய்த பாவங்கள் கரைவதற்கு நாமும் உணர்ந்து, பிறரையும் உணர வைத்து ஒரு நல்வழியை காட்ட வேண்டும் என்று கடவுள் சொல்வார்.
இவ்வுலகில் தலை சிறந்த உதவி என்பது மறுபிறவியை தடுக்கும் ஞானத்தை பிறருக்கு போதிப்பதாக மட்டுமே இருக்க முடியும் ! சிறைச்சாலையில் ஒருவருக்கு உதவி செய்தால் அதற்கு பெயர் உதவியா ? அல்லது சிறைச்சாலையில் இருந்து அவரை விடுவிக்க முயற்சி செய்வதற்கு பெயர் உதவியா ?
மன்னிப்பு என்பது கடவுளுக்கு பிடித்த வார்த்தை தான் ! நாம் செய்த பாவத்திற்கு நமக்கு துன்பத்தை கொடுத்து, நான்கு திசைகளையும் அடைத்து இறுதியாக வாழ வழியில்லாமல் ஆகாயத்தை பார்த்து கை நீட்டி மன்னிப்பு கேட்க வைப்பதும் கடவுள் தான் என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது ! “உணர்ந்தால் துன்பமில்லை” என்ற வார்த்தைகளில் எண்ணிலடங்கா ரகசியங்கள் உண்டு ! நாம் உணர உணர நாம் செய்த பாவங்கள் நிச்சயமாக கரையும் ! இநன்யா நமோ நம !
இநன்யா நமோ நம !இநன்யா நமோ நம !இநன்யா நமோ நம !
இநன்யா நமோ நம;;;இநன்யா நமோ நம;;;இநன்யா நமோ நம;;;
கடவுளுக்கு கோடான கோடி நன்றிகள். பல சூட்சுமங்கள் நிறைந்த பதிவு. நம் குழுவில் உள்ள பலரும் கேட்ட கேள்வி ஒன்றை இந்த நேரத்தில் ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.
“நான் அதிகமாக பாவம் செய்துள்ளேன். கடவுள் என்னை மன்னித்து ஏற்றுக் கொள்வாரா ?”.
இந்த கேள்விக்கு பதில் கடவுள் அருளிய இந்த பதிவில் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. கடவுளை தவிர நம் யுகத்தில் பிறந்தவர்கள் அனைவருமே ஏதேனும் ஒரு வகையில் பாவம் செய்தவர்கள் தான். எப்போது இந்த பூமியில் முதன்முதலாக கால் வைக்கின்றோமோ, அப்போதிருந்தே அறியாமல் புரியாமல் பாவம் செய்ய தொடங்குகின்றோம். நாம் நிலத்தில் வைக்கும் ஒவ்வொரு அடியிலும் நம் கால் பட்டு கோடிக்கணக்கான நுண்ணுயிர்கள் மடிகின்றன. அதனால் தான் ஆதிகாலத்தில் மனிதர்களின் கால்கள் தரையில் படவில்லை என்று கடவுள் சொல்வார். ஆத்ம பலத்துடன் எப்போதும் காற்றில் தவழ்ந்தான் என்று சொல்வார். இந்த நரகத்தில் பாவம் செய்யாமல் வாழ கடவுளால் மட்டுமே முடியும். நாம் செய்த பாவங்கள் கரைவதற்கு நாமும் உணர்ந்து, பிறரையும் உணர வைத்து ஒரு நல்வழியை காட்ட வேண்டும் என்று கடவுள் சொல்வார்.
இவ்வுலகில் தலை சிறந்த உதவி என்பது மறுபிறவியை தடுக்கும் ஞானத்தை பிறருக்கு போதிப்பதாக மட்டுமே இருக்க முடியும் ! சிறைச்சாலையில் ஒருவருக்கு உதவி செய்தால் அதற்கு பெயர் உதவியா ? அல்லது சிறைச்சாலையில் இருந்து அவரை விடுவிக்க முயற்சி செய்வதற்கு பெயர் உதவியா ?
மன்னிப்பு என்பது கடவுளுக்கு பிடித்த வார்த்தை தான் ! நாம் செய்த பாவத்திற்கு நமக்கு துன்பத்தை கொடுத்து, நான்கு திசைகளையும் அடைத்து இறுதியாக வாழ வழியில்லாமல் ஆகாயத்தை பார்த்து கை நீட்டி மன்னிப்பு கேட்க வைப்பதும் கடவுள் தான் என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது ! “உணர்ந்தால் துன்பமில்லை” என்ற வார்த்தைகளில் எண்ணிலடங்கா ரகசியங்கள் உண்டு ! நாம் உணர உணர நாம் செய்த பாவங்கள் நிச்சயமாக கரையும் ! இநன்யா நமோ நம !
இநன்யா நமோ நம !இநன்யா நமோ நம !இநன்யா நமோ நம !
No comments:
Post a Comment