202 INANYA NAMOO NAMA ;;; இநன்யா ;;;
இநன்யா நமோ நம;;;இநன்யா நமோ நம;;;இநன்யா நமோ நம;;;
Ravichandiran Murugan அன்பே இநன்யா.
கடவுளுக்கு மஹாகுரு தின வணக்கம்.
எங்கள் நபாகம் விலக்க யோசிக்கின்றீர்; கடவுளே, உங்கள் கருணையும் அன்பும் உச்சம்தான்.
மன்னிப்பு இல்லாமல் இங்கு தண்டனை உடனே என்றால் நாம் நிச்சயம் இவ்யுகத்தில் இல்லை. கடவுள் எவ்வளவு பொறுமையானவன்; அந்த பொறுமைக்கும் எல்லையுண்டு என்பது வரும் காலங்களின் நிகழ்வுகள் பதில் கூறும் என்பது தெளிவாகிறது.
பித்தம் தெளிய கோயிலுக்கும், குலதெய்வத்தை நோக்கி நாம் சென்றதும் உண்மைதான். இப்பொழுது நாம் அதில் இல்லை என்றாலும் எம் வீட்டில் உள்ளவர்கள் செல்கிறார்கள். கடவுளைபற்றி கூறினேன்; உனக்கு என்னவோ ஆகிவிட்டது என்கிறார்கள். எம் தாய் என்னிடம் கடவுளின் புகைப்படம் இருந்தால் காட்டு என்று அப்பாவி முகத்தோடு கேட்கிறார்; அவர் அறியாமை முகத்தில் அன்பிற்க்கு குறையில்லை. நாம் பாக்கியசாலிதான்.
மனம் எப்போதும் உடலை சார்ந்துதான் உள்ளது என்பதை நன்கு அறிகிறேன்; அதை கட்டுப்படுத்த நாம் படும் பாடு கொஞ்சமல்ல; உடனே கடவுள் நாமம் சொல்லி கட்டுப்படுத்துவேன்.
லோகத்தில் மன்னிப்பே இல்லை; இனி பாவம் செய்யாமல் இருக்க பாடாய்படுகிறேன். நாம் வாழும் சூழல் அப்படி இருக்கிறது; பொறுத்து போக ஆயத்தமாகிறேன்; எங்களுக்கு நல்ல எண்ணங்களை கொடுப்பீராக.
இங்கு நீதி என்பே இல்லை கடவுளே; குற்றங்கள் பெறுகிவிட்டது; நீதியே குற்றம் செய்கையில், குற்றமே நீதியாகிவிட்டது. பொறுக்க முடியவில்லை, கடவுள் தன் நீதியை நிலைநாட்ட காத்திருக்கிறோம். அதில் நாங்களும் உங்களுடன் பயணிப்பதில் சம்மதம்தான்.
கடவுளின் 2017-ன் எச்சரிக்கை உள்ளத்தை கலங்கவைக்கிறது; இனி யார் இங்கு தவறு செய்தாலும் மன்னிப்பில்லை என தெளிவாகிறது. கடவுள் தம் சத்திய வலக்கரத்தால் தர்மாக்களை காப்பார் எனவும் தெளிவாகிறது. இனி தெளிய வேண்டியது நாம்; அறியாதவர்களுக்கு தெளிய வைக்க வேண்டியதும் நம் கடமை.
பெற்றவர்கள், மனைவியை தவிர நம்மேல் பலன் எதிர்பாரா அன்பு காட்ட உம்மைவிட்டால் யாரும் இல்லை கடவுளே. இனி எப்போதும் உம்மை நாம் விடப்போவதில்லை. வேர் அறுக்க வேண்டும் இந்த கபட வேடதாரிகளை. வெண்மையின் வெற்றியை வெளிக்காட்ட வேண்டும் அவர்களுக்கு.
நம்பிக்கையும் அன்பும் எப்போதும் எங்களிடத்தில்; கடவுள் நீவிர் இருக்க எங்களுக்கு ஏது பயம். சதிராடவேண்டும் இந்த சதிகாரர்களை; சதிராடும் வித்தையை எங்களுக்கு கற்பிப்பீராக.
உம் அன்பு எம்மை ஆகாயத்தில் மிதப்பது போன்ற உணர்வை கொடுக்கிறதை அறிகிறேன். உண்மைதான். நீவிர் அன்பின் உச்சம்.
உம் சத்திய வழியில் ஆக்ரோஷமாக பயணிக்க ஆயத்தமாக உள்ளோம். தங்களின் இந்த பதிவிற்க்கு மிக்க நன்றி.
இநன்யா நமோ நம!!!
No comments:
Post a Comment