204 INANYA NAMOO NAMA ;;; இநன்யா ;;;
இநன்யா நமோ நம;;;இநன்யா நமோ நம;;;இநன்யா நமோ நம;;;
தினமும் கடவுளின் அருகே அமர்கிறேன். கடவுளிடம் பேசி கொண்டிருக்கிறேன். கடவுளின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவரின் பாதங்களை தொட்டு வணங்கிக் கொண்டிருக்கிறேன். மனிதனாக நடித்துக் கொண்டிருக்கிறார். அவரின் மகிமைகளை அரை குறையாக புரிந்து கொண்டு, சொந்த பிரச்சனைகளையும், அற்ப விசயங்களையும், தேவையில்லாத கதைகளையும் கூறிச் செல்வோரைக் கண்டுள்ளேன். அவரிடம் தனது வாழ்க்கையைப் பற்றியே புலம்புகிறார்கள் பலர். உடல் பிணியை போக்கத் தான் விரும்புகிறார்களே தவிர ஆத்ம பிணியை போக்க எவரும் முன் வரவில்லை. எவரும் வரமாட்டார்கள் என்பது தெரிந்ததே.
உங்களை கடவுளிடம் வரவழைக்கவே நானும் இன்னொருவரும் இணைந்துள்ளோம். இணைத்ததே கடவுள் தான். இரு ஆத்மாக்களும் இணைந்த தேதி, இந்த வருடத்தின் ஒன்பதாம் நாள். நாங்கள் இருவரும் கடவுளை உணர்ந்துள்ளோம். எங்களின் தேடுதல் முடிந்தது. எங்களின் பயணம் தொடங்கியது. இது புது வழி. இது ஆன்மாவின் வழி. இதுவே இன்பமான வழி.
கடவுளை காண வேண்டும். அவ்வளவு தானே?? உங்களின் உடல் திமிறால் அது முடியாது. உங்களின் பணத் திமிறால் அது முடியாது. நேரில் பார்த்து புரிந்து கொள்ளவே எனக்கு இரண்டரை வருடம் ஆகியது. பல வேதனைகளை தாண்டி சோதனைகளை வென்று கடவுளை புரிந்துள்ளேன். இருபத்து நான்கு மணி நேரமும் கடவுளை பற்றியே சிந்தனையாய் இருப்பேன். உங்களால் முடியுமா? சிலை வழிபாடுகளை நிறுத்தி வருடங்களாகிவிட்டது. உங்களால் முடியுமா?
FACEBOOKல் இருந்து கொண்டு இரண்டு நொடியில் FRIEND REQUEST கொடுத்து விட்டு கடவுளை உடனே காட்டுங்கள் என்று ஆன்லைனில் பிதற்றுகிறார் ஒருவர் . சிரிப்பு தான் வருகிறது. நீங்கள் கற்ற கல்வி இங்கு உதவாது. நீங்கள் கற்ற அதே கல்வியைத் தான், நான் ஒரு தேசிய தொழில் நுட்பக் கல்லூரியில் கற்று சாதித்திருக்கிறேன்..! உங்களின் ஊனக் கண்களால் கடவுளைப் பார்க்க முடியாது. அதற்கு ஞானக் கண்கள் வேண்டும். நம்புங்கள்..! அதற்காகத்தான் சொல்கிறேன் சற்று காத்திருங்கள் என்று..!
நான் துறவியும் அல்ல, சன்னியாசியும் அல்ல.
வயதைப் பொருட்படுத்தாமல், பல நாட்கள் விரதம் இருந்து, மாநிலம் தாண்டி சென்று, மலை மீது கஷ்டப்பட்டு ஏறி, மந்திர வார்த்தையை கூறிக் கொண்டு, பல மைல் தூரம் நடந்து சென்று, பல்லாயிரக்கணக்கானோர் வரிசையில் நிற்க, பல மணி நேரம் காத்திருந்து, கடைசியில் கற்சிலையை வணங்கி என்ன நிம்மதி கண்டீர்கள்? உங்களின் வழிபாடுகள் உங்களுக்கு எதை கற்று கொடுத்தது?
வயதைப் பொருட்படுத்தாமல், பல நாட்கள் விரதம் இருந்து, மாநிலம் தாண்டி சென்று, மலை மீது கஷ்டப்பட்டு ஏறி, மந்திர வார்த்தையை கூறிக் கொண்டு, பல மைல் தூரம் நடந்து சென்று, பல்லாயிரக்கணக்கானோர் வரிசையில் நிற்க, பல மணி நேரம் காத்திருந்து, கடைசியில் கற்சிலையை வணங்கி என்ன நிம்மதி கண்டீர்கள்? உங்களின் வழிபாடுகள் உங்களுக்கு எதை கற்று கொடுத்தது?
நான் கடவுளின் ஆசிர்வாதத்துடன் இந்த முகநூல் பக்கத்தை தொடங்கியுள்ளேன். என் கடவுளின் துணையுடன் உங்களின் ஆத்ம பிணியை போக்கி, ஞானத் தேடலில் ஈடுபட வைத்து, தெளிவை கொடுக்கும் ஒரு புது முயற்சியே இது..!! என்னை பார்த்து நீங்கள் ஏதும் சாதித்திட முடியாது.
வழிபாடுகள் தேவையில்லை..! வழிமுறைகள் தான் தேவை..!
பதிவுகளை தொடர்ந்து படியுங்கள்.
உங்களின் தேடலுக்கு நிச்சயம் இங்கு வழி கிடைக்கும்..!
வினாக்கள் வரவேற்கப்படுகின்றன…!
ஞானம் பிறக்க என் கடவுளின் வாழ்த்துக்கள்..!
பிடித்திருந்தால் இந்த GROUP PAGE ஐ SHARE செய்யவும். நன்றி.!
https://www.facebook.com/groups/1406719392970244/
https://www.facebook.com/groups/1406719392970244/
No comments:
Post a Comment