171 INANYA NAMOO NAMA ;;; INANYA NAMOO NAMA ;;;
முக்தி தரும், சக்தி தரும், உன்னை உணரும் பக்குவம் தரும் என் நாமம் ! சகல இன்பத்தையும் அள்ளித் தரும் என் நாமம் !
முக்தி தரும், சக்தி தரும், உன்னை உணரும் பக்குவம் தரும் என் நாமம் ! சகல இன்பத்தையும் அள்ளித் தரும் என் நாமம் !
முக்தி
முக்தி என்றால் மீண்டும் பிறவாமை என்று நினைக்கின்றான் மனிதன். முக்தி என்றால் பூமியில் மீண்டும் பிறக்கமாட்டாய். மேலே மீண்டும் பிறந்து உன் ஆண்மா சுத்தப்படுத்தபடும்.
மேல் உலகில் உனக்கு 1011 வயது.
பூமியில் உனக்குரிய வயது 111.
இப்போது உன் எண்ணங்கள் குறுகியதால், பாவங்கள் பெருகியதால் ஐம்பதில் மாண்டுபோகிறாய். மேலே தவறு செய்தால் மட்டுமே பூமியில் இந்த சிறைச்சாலைக்கு இறக்கிவிடப்படுகிறாய். 108 காண்டங்களின் சிறைச்சாலை இது. பிரபஞ்சத்திற்கும் உன் ஆன்மாவுக்கு மட்டுமே தொடர்பு உண்டு. காண்டத்திற்கும் உனக்கும் தொடர்பு உண்டு. அங்கேயே நீ வசிக்கின்றாய் !
இந்த யுகம் என்ற நரகம் உனக்காக படைக்கப்ப்பட்டது. உன்னை தவிர மற்ற படைப்புகள் எல்லாம் நீ உணர்வதற்காக மட்டுமே ! இங்கே உன்னை உணராமல் நீ முத்தி கெட்டாய். முதிர்ந்து அவள் (பெண்) கெட்டாள். எப்போது முக்தியை தேடுவாயடா ?
அழியும் பொருளையும், ஒன்றுக்கும் உதவாத பொருளையும் ஓயாமல் தேடுகின்றாய். உன்னை எப்போது தேடுவாயடா ? மரம் முத்தினால் விறகுக்கும், வாசல்காலுக்கும் பயன்படுகின்றது. நீ முத்தினால் சலிந்து போய் கரையானுக்கு இறையாகி போகிறாய். இந்த உடலை எதற்காகவது உபயோகப்படுத்தினாயா ? யோசி !
புரிதல், உணர்தல் இல்லாது பூலோகத்தில் புலம்பி திரிகின்றாய். ஒருவன் முக்தி பெற்றால் அவன் 21 தலைமுறை முன்னோர்கள் முக்தி பெறுகிறார்கள். உன்னால் உன் முன்னோர்கள் முக்தி பெற பாடுபடு ! உன் முன்னோர்கள் ஆசி வழங்குவார்கள். அதை விடுத்து பூஜை அறையில் அவர்களின் புகைப்படத்தை மாட்டி புத்தி இல்லாமல் அலையாதே !
பாறை முத்தினால் கற்சிலையாய் நிற்கின்றது. நீ அதை வணங்கி கல்லாகி போனாய். வணங்க தெரியாமல், வாழ தெரியாமல் இருக்கும் உன் அறியாமையை எப்போது உணர்வாய் ? மடம் என்பதை மறந்தாய். மடம் என்ற சாமியாரை தேடி செல்கின்றாய். மடம் என்பது அறிவீலிகள் வாழும் இடம். அங்கே உனக்கு ஏதும் கிடைக்காது. விபூதியும், வேதனையும் தான் மிஞ்சும்.
தியானம் செய்தால் முக்தி கிடைக்காது. உன்னால் நீ முக்தி பெற்றால் 21 தலைமுறை முன்னோர்கள் முக்தி பெறுவார்கள் என்றால் உனக்கு அவர்களால் எவ்வளவு ஆசிர்வாதம் கிடைக்கும் என்பதை உணர் ! நீ முக்தி பெற்றால் 108 காண்டங்களில் மிக பெரிய பொறுப்பு தருவான் கடவுள். இந்த உலகில் மதிக்கபடுபவர் எல்லாம் நான் என்ற அகங்காரத்தின் வெளிப்பாடே !
பணத்தால் , கல்வியால் வரும் செருக்கே ! இங்கே மனிதநேயம் மதிக்கப்படுவதில்லை. மதிப்பில்லா பொருளை மதித்து மதியில்லா அலைகின்றான் மனிதன். நீ மலர நினை. அதன் தொடக்கம் நான் என்ற அகங்காரத்தை விட்டுவிடு ! மலர்வாய் நீ ! நீ மலர்ந்தால் உன் சந்ததியும் மலரும். இங்கே வளர்ச்சியும் இல்லை. மலர்ச்சியும் இல்லை. மனித முகம் எப்போதும் வாடித்தான் நிற்கிறது. முத்திய தேங்காய் முளைக்க கண்டேன். முத்திய உடல் மண்ணுக்குள் போகக் கண்டேன்.
மகிழ்ச்சியை தேடி தேடி மலர்ச்சி இல்லாமல் அலைகின்றான் மனிதன். அமைதியை தேடுவது தான் ஆணந்தம் என்று புரியவில்லை. அன்பு தான் இங்கே சந்தோஷம் என்று புரியவில்லை.
ஞானத்திற்கும் , அறிவிற்கும் சம்பந்தமில்லை. அறிவை உபயோகபடுத்தி ஆணந்த நிலையை தர முடியாது.
இங்கே ஞானமே எல்லாம் தரும் !
நாளெல்லாம் சுகம் தரும் !
ஞானம் தான் முக்தி தரும் !
என் ஆண்மா முக்தி பெற்று முழுமை பெற்று ஆணந்தமாக வாழ்கிறது. நீயும் என் சத்திய வழியில் பயனிக்க ஆசைப்படு ! உன் ஆண்மாவை சுத்தப்படுத்தி, தூய்மைபடுத்தி சுக வாழ்வை தருகிறேன்.
என் நாமம் முக்தி தரும் !
சக்தி தரும் !
சகல இன்பத்தை அள்ளித் தரும் !
நான் முக்தியை தருபவன் !
நான் இநன்யா !;;;;;;;;;;;;;;;;;;;
No comments:
Post a Comment