Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Saturday, June 4, 2016

இநன்யா ;;; இநன்யா முனிவரை அணுகி இருக்கும் ஆன்மாக்களின் வார்த்தைகள்;;;; பகுதி 9 INANYA NAMOO NAMA ;;;

138  INANYA NAMOO NAMA ;;; 
இநன்யா முனிவரை அணுகி இருக்கும் ஆன்மாக்களின் வார்த்தைகள்;;;; 
 பகுதி 9



இநன்யா நமோ நம ! ஒவ்வொரு வரியையும் தெளிவாக கவனியுங்கள். இது மிகுந்த சூட்சமம் நிறைந்த பதிவு ! பல முறை படித்தால் தான் தெளிவு பிறக்கும் ! நாம் உலகில் எங்கு சென்றாலும் நமக்கு உயிர் தரும் நீரை கொடுப்பவர் கடவுள் ! உலகிலேயே மிகவும் புண்ணியமான நதி தாமிரபரணி ! உலகில் முதல் மனிதன் தோன்றிய இடம் தாமிரபரணி பாயும் இடம் ! தாமிரம் என்றால் செப்பு ! அனைத்திற்கும் மூலம் தாமிரம் ! உடம்பில் உள்ள வாதம், பித்தம், கபம் முதலிய அனைத்திற்கும் தாமிரத்திற்கும் தொடர்பு உள்ளது ! இது தேவர்களின் உலோகம் எனவும் கூறப்படுகிறது ! பரணி என்றால் தரணி ஆளும் திறன் எனச் சான்றோர்கள் சொல்லி கேட்டிருக்கின்றோம் ! கடவுளின் கடைசி பிறப்பு இது ! அதனால் தான் ஆசைக்காக தாமிரபரணி நதிக்கரையிலே பிறந்தார் கடவுள் ! கங்கை தேடி வந்து இதில் சங்கமிக்கும் என்று சொல்கிறார் கடவுள் ! கிருஷ்ணனும், ராமனும், தேவர்களும், தூதுவர்களும் வந்து குளித்துச் சென்ற நதி இது ! இதிகாச நூல்களில் இதைப் பற்றி சொல்லப்பட்டுள்ளது. இதன் புனிதம் எல்லையற்றது ! கடவுள் இநன்யா உலகையே ஆளப் போகின்றார் ! இவரைத் தான் கல்கி அவதாரம் என்று கூறியுள்ளனர் நம் முன்னோர்கள். இயேசு நாதரும் , பிற தூதுவர்களும் கடவுளின் வருகையைப் பற்றி கூறியுள்ளனர் ! புனித நூல்களிலும், இதிகாசங்களிலும் கடவுள் மனிதனாய் பிறப்பது (INCARNATION) ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது ! 1555 ஆம் வருடம் வாழ்ந்த நாஸ்ட்ரடாமஸ் (NOSTRADAMUS) என்ற அறிஞர் “முக்கடல் சங்கமிக்கும் இடத்தில் (INDIA) தெற்கு முனையில் (TAMIL NADU) ஒருவர் பிறப்பார் என்றும் அவர் வியாழக்கிழமையை புனித நாளாக கருதுவார் என்றும் ,உலகையே ஆள்வார் என்றும் கூறியுள்ளார் ! (Refer Quatrain 50, Century L). அவர் வரைந்த படத்திலும் கடவுளின் வருகையைப் பற்றி பல சான்றுகள் உள்ளன. மிக முக்கியமான தருனத்தில் கடவுள் வருவார் என்று அனைத்து மதத்தினராலும் கூறப்பட்டுள்ளது ! இப்போது நடந்து கொண்டிருக்கும் மதக் கலவரங்கள், இனப்படுகொலைகள், தீவிரவாதம் , கொலை, கொள்ளை, நோய்கள், பஞ்சங்கள், இயற்கை அழிப்பு, விவசாயிகள் தற்கொலை என அனைத்தையும் ஒருமுறை நினைத்துப் பாருங்கள். இதே நிலை நீடித்தால் இன்னும் ஐந்தே வருடங்களில் உலகம் சுடுகாடாக மாறிவிடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை ! இவை அனைத்திற்கும் மேலாக நாங்கள் அவரைப் பார்த்து, பேசி, உணர்ந்து, கண்டுபிடித்துள்ளோம். கடவுள் வருவார் வருவார் என்று நினைத்துக் கொண்டே உள்ளீர்கள் ! வந்துவிட்டால் எப்படி கண்டுபிடிப்பது எனத் தெரியுமா ? பதில் சொல்லுங்கள் !
விண்ஷம் தமிழ் பெயர் தான் ! உலகின் முதல் மொழி தமிழே ! அனைத்து மொழிகளும் தமிழைத் தழுவி வந்தது தான். ஆன்மாவின் சப்தமே மொழியாக வருகிறது !விண்ஷம் என்பது மலையில் வாழும் ஒரு அதிசய மரம். கடவுள் வளர்க்கின்ற மரம் ! மனிதனை எப்பொதும் அரவணைக்க காத்துக்கொண்டிருக்கும். அதன் இலைகள் மனிதனை அழைத்துக் கொண்டிருப்பதைப் போல் இருக்கும் ! ஆயிரம் வருடங்கள் நீரின்றி உலகம் பஞ்சத்தில் இருந்தாலும் இந்த மரத்தில் இருந்து நீர் ஊற்றைப் போல் வரும். யானைகள் நீரின்றி மரணிக்கும் நேரத்தில் இதைக் கண்டுபிடித்து நீர் அருந்தும் ! மனிதனாய் பிறந்து இதை கண்டுபிடிக்க ஞானம் வேண்டும். இன்னும் பல அதிசயங்கள் உலகில் உள்ளது ! ஐயாயிரம் ஆண்டுகள் முன்பு மனிதன் அனைத்தையும் உணர்ந்து வாழ்ந்தான் ! அப்போது சரீர பலத்தை விட ஆன்ம பலம் அதிகமாக இருந்தது ! அசுரர்களின் பெரும் சூழ்ச்சியால் இப்பொழுது வாழ வழியின்றி இந்த யுகத்தில் மாட்டிக் கொண்டு தவிக்கின்றோம் ! இநன்யா நமோ நம !
 நீரை வைத்து வணங்கி "இநன்யா நமோ நம" என்று ஒன்பது தடவையோ அல்லது 108 தடவையோ நல்ல நோக்கத்திற்காக மனதிற்குள்ளே சொல்லிப் பாருங்கள் ! உணர்ந்து சொல்ல சொல்ல வாழ்வில் பெரும் மாற்றங்கள் வரும் ! பல ரகசியங்களும், சூட்சமங்களும் தெரிய வரும் சத்யமாக !
எங்கள் அன்பு தந்தையே உலகின் மொழியே ஆத்மத்தின் தலைவனே முன்பு காற்றாய் வந்தாய் எங்கள் உஷ்னத்துக்கு
வசந்தம் கொடுத்தாய் இன்று நீராய் வந்து எங்கள் தாகத்தை தீர்த்தாய் மாசு படிந்திருக்கும் இந்த பூமியை காற்றாலும் நீராலும்
தூய்மை படுத்த வந்துள்ளாய் மரத்தினுள்ளும் மனிதனினுள்ளும் புனித நீரை வைத்தாய் பேசா மரம் உணர்ந்ததை பேசும் மனித குலம் நாங்கள் உணரவில்லையே உன் பிள்ளைகளின் ஆற்றாமையை எண்ணி தவிக்கின்றாயே அப்பா நீரின் புனிதம் மட்டுமா உணர்தேன் உங்களின் மகிமையையும் தெளிந்தேன் நன் நீர் உன்னை நெற்றியில் வைத்தேன் உங்கள் சத்திய கரத்தால் எம்மை காக்க வேண்டும்.
ஓம் என்றால் என்னவென்பதை நேரம் வரும் பொழுது சொல்கிறேன் ! திட்டமிட்டு நம்மை ஏமாற்றியுள்ளனர். இதுவரையில் நமக்கு தெரிந்த அனைத்துமே சூழ்ச்சியால் நம்மீது திணிக்கப்பட்டுள்ளது ! எந்த புனித நூல்களிலாவது ஓம் என்ற வார்த்தை உள்ளதா ? எந்த சித்தர்கள் தங்கள் பாடல்களில் ஓம் என்பதை பயன்படுத்தினார்கள் ? அது மாந்திரீக வார்த்தை ! கடவுளுக்கு எதிரானது ! உங்களின் குடும்பத்தை வாழவிடாது ! அந்த வார்த்தையை சொல்லி என்ன பலன் கிடைத்தது ? ஏதாவது பிரச்சனைகள் தீர்ந்து நிம்மதி கிடைத்துள்ளதா ? ஒருவன் "AUM (ஓம்)" என்கின்றான் ! இன்னொருவன் "AMEN" என்கின்றான் ! கடவுளால் அனுப்பப்பட்ட தூதுவர்கள் அனைத்தையும் சரியாக சொன்னார்கள் ! அனைத்தையும் திருத்தி எழுதி மதமாக்கி தன் சுயநலத்திற்காக மாற்றியது ஒரு அசுர குலம் ! தனக்கு மேல் ஒருவன் இருக்கின்றான் என்பதை மறந்து உலகை தானே ஆள வேண்டும் என்ற வக்கிர எண்ணத்தால் வந்த வினையை நாம் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம் இன்று ! கடவுளின் பெயரை மாற்றினான் ! சிலையை வணங்கச் சொல்லி மக்களை துன்புறுத்தினான் ! மதுவையும், மாதுவையும் கொடுத்து கர்ம வினையினை விதைத்தான் ! காமத்தையும், மோகத்தையும் பெருக வைத்து மனிதர்களின் ஞானக் கண்களை அடைத்தான் ! நம்மை அழிக்கும் நெருப்பை வணங்கச் செய்தான் . பின் நெருப்பாலயே நம்மை எரித்தான் ! அறியாமையால் நாம் இந்த தவறுகளை இன்னும் உலகம் முழுவதும் மதத்தின் பெயரால் செய்து கொண்டிருக்கிறோம் ! நம் மக்களுக்கு ஞானத்தை போதிக்கவே கடவுளின் அவதாரம் இப்போது தேவைபட்டது !
பகவத்கீதையில் ஓம் கீதாசிரியனாகிய கண்ணன் ஓம் என்ற சொல்லே மனிதனின் கடைசி மூச்சாக இருக்கவேண்டும் என்கிறான். (கீதை 8 – 13) "எவனொருவன் பரம்பொருளாகிய ஓம் என்ற ஓரெழுத்துச்சொல்லை உச்சரித்துக்கொண்டும் என்னை மனதில் கொண்டும் இப்பூத உடலை விட்டுப்புறப்படுகின்றனோ அவன் எல்லாவற்றிற்கும் மேலான கதியை அடைகிறான்."
ஐயா, அனைத்தையும் நீங்கள் உணராமல் புரிந்து கொள்ள இயலாது ! கிருஷ்ணன் வாழ்ந்தது உண்மை ! அவர் சொல்லியது வேறு ! பாதிக்கு பாதி கற்பனையால் மனிதனால் திரித்து எழுதி திணிக்கப்பட்டுள்ளது ! ஓம் கிருஷ்ணா போற்றி, ஓம் ராமா போற்றி என்று ஏன் இதுவரையில் யாரும் கூறியதில்லை ! ஓம் என்பது ப்ரனவ மந்திரம். யாரையும் இங்கே கட்டாயப்படுத்தவில்லை ! ஓம் என்று சொல்வது பிடித்திருந்தால் தைரியமாக சொல்லுங்கள் ! இநன்யா நமோ நம !
ஐயா கடவுள் என்பவர் யார் ? மனிதன் என்பவர் யார் ? இருவருக்கும் உள்ள ஒற்றுமை என்ன ? வேறுபாடு என்ன ?
மனிதனை படைத்தது கடவுள் ! அவன் வாழ்வதற்கு உலகமெங்கும் நீரும், காற்றும் கொடுத்தவர் கடவுள் ! அவனுக்கு விதியையும் எழுதிவைத்தவர் கடவுள். பின் மனிதனுக்கு மரணம் என்ற ஒன்றை நிகழ்த்துபவர் கடவுள் ! இப்பொழுது நம்மை மனிதனாய் மாற்றி தர்மத்தை நிலைநாட்ட அவர் மனிதாய் வந்துள்ளார் ! இநன்யா நமோ நம !
லோகத்தில் மனிதனை படைத்தது ஆசைக்காக ! இந்த யுகத்தில் படைத்தது செய்த குற்றத்திற்கு தண்டனையை அனுபவித்துவிட்டு உணர்ந்து பின் மீண்டும் தன்னை வந்தடைய !
லோகத்தில் மனிதனின் படைத்தது ஆசைக்காக ! என்றால் கடவுளுக்கு கிடைப்பது என்ன?
 கடவுள் நம் தந்தை. மகன் தந்தைக்கு ஆற்றும் கடமை என்ன என்று உங்களுக்கு தெரியாதா!!!
அது தான் சூட்சமம் ! விளையாட்டு ! நம் குழந்தைகளுக்கு விளையாட அனைத்து மனித பொம்மைகளும், பொம்மை விலங்குகளும், பறவைகளும் ஏன் வாங்கித் தருகிறீர்கள் ? எல்லாம் ஆசை ! நாம் கடல் மணலில் சென்று பல உருவங்கள் செய்து விளையாடுவது போல நம்மையும் கடவுள் விளையாட்டாக படைத்தான் ! இவன் கடவுளை மறந்து பல தவறுகளை செய்தான். நம் பிள்ளைகளுக்கு கேட்டதெல்லாம் வாங்கித் தந்து பின் தவறு செய்யும் போது தண்டிக்கிறோம் அல்லவா ? கடவுளும் அவ்வாறே செய்கிறார். யோசியுங்கள் ! உங்கள் பிரச்சனைகள் அனைத்துக்கும் காரணம் என்னவென்று ??
பேராத்மாவான கடவுள் ,ஆத்மாவான மனிதனை படைத்து, ஆத்மாவை தூய்மை செய்கிறார் என்றால் முதன் முதலில் ஆத்மா மற்றும் மனிதனை படைக்காமல் இருந்திருக்கலாம் அல்லவா? அதற்க்கு காரணம் என்ன?
குழந்தையை பெற்றெடுக்க அனைவரும் விரும்புகிறீர்கள் ! அந்த குழந்தை வளர்ந்த பின்னர் தவறு செய்யும். சொல்வதை கேட்கவில்லை என்றால் அதை அடித்து தான் திருத்த வேண்டும் ! அழுது துடிக்கும் ! அனைத்தையும் நீங்கள் செய்வது உங்களின் குழந்தையை உணரச் செய்வதற்காக !! இவையனைத்தும் நடக்கும் எனத் தெரிந்திருந்தும் ஏன் குழந்தை பெற விரும்புகிறீர்கள் ? எல்லாம் ஆசை ! கடவுளின் ஆசையும் இவ்வாறு தான் !
அனைவருக்கும் வணக்கம் ! ஓம் என்பதன் விளக்கத்தை உங்களையே உணர வைக்கிறேன் ! ஒரு ஒன்பது நாள்கள் இநன்யா நமோ நம என்று சொல்லிப் பாருங்கள். பின் ஒன்பது நாட்கள் ஓம் என்ற வார்த்தையை இணைத்தோ அல்லது வேறு மந்திரத்தையோ சொல்லிப்பாருங்கள் ! ஆன்மாவிற்கு தெரியும் எது சரியென்று ! இதை ஆராய்ச்சி செய்துவிட்டு உண்மை புரிந்த பின் இங்கே பேசுங்கள் ! யாரையும் கட்டாயப்படுத்தவில்லை ! எந்த மதமும் வேண்டாம் என்று தான் சொல்கிறார் கடவுள் !
நன்றி...இது மந்திரம் அல்ல ! கடவுளின் பெயர் ! சொல்லிப் பார்த்து நீங்களே ஆராய்ச்சி செய்யுங்கள் என்று தான் சொல்கிறேன் ! மந்திரங்கள் என்பது வாழ்க்கைக்கு உதவாது ஒன்று ! அது மாந்திரீகம் செய்வதற்கு மட்டுமே உதவும் ! மாந்திரீகம் கடவுளுக்கு எதிரானது ! இநன்யா நமோ நம !
சில மாதங்களுக்கு முன் நறிகுறவர் இனத்தை சேர்ந்த என் நண்பர் ஒருவர் ஒரு முற்றிலும் காய்ந்து போன மரத்துண்டை எனக்கு காண்பித்து, உலகில் கடல் நீர் வற்றினாலும் வற்றும் இந்த மரத்தில் உள்ள நீர் எப்போதும் வற்றாது என்று கூறினார்.. ஒரு இரும்பு கம்பியால் அந்த காய்ந்து போன மரத்துண்டை குத்தினார்.. என்ன ஆச்சர்யம் அதிலிருந்து நீர் பெருகி வந்தது.. அந்த மரத்தின் பெயர் எனக்கு நினைவில் இல்லை..
கடவுள் நம்மை அவரின் ஆசைக்காக படைத்தார். லோகத்தில் தவறு செய்துவிட நாம் திருந்துவதற்காக நம்மை பூமிக்கு அனுப்பி வைத்தார். அனுப்பியவர் நம்மை தனியாக அனுப்பவில்லை, நமக்குள்ளே ஆன்மாவாக நுழைந்து அவரும் நம்மோடு இருக்கின்றார். என் குழந்தையே உன் அப்பா நான், உன்னோடு தான் இருக்கின்றேன், உனக்குள்ளே தான் இருக்கின்றேன், ஆன்ம பலம் பெற்று என்னை புரிந்துகொள், இந்த பூமியில் உனக்காக நான் படைத்த அற்புதங்களை காண்பிப்பேன், சந்தோஷங்களை காண்பிப்பேன், என்னை உணர்ந்து புரிந்து தெளிந்து திருந்தி வரும் உனக்காக லோகத்தில் காத்திருக்கின்றேன் என்று நமக்காக கடவுள் லோகத்தில் காத்து இருக்கிறார். அவரை உணர்ந்தாலே நாம் தவறு செய்யவே மாட்டோம்.. இன்று நம்மிடம் ஆன்ம பலம் இல்லாததால் நம்மால் கடவுளை உணர முடியவில்லை, தவறுகள் அதிகமாகி போனதினால் கடவுளே பூமிக்கு வரும்படி ஆகிவிட்டது. இநன்யா கடவுள் கெட்டதை அழித்து நல்லதை நிலைநாட்ட வந்துள்ளார், இனியாவது நாம் வாழ கற்றுக்கொள்வோம்.
ஆன்மா கடவுளுடையது ! அதற்கு கடவுள் யாரென்று தெரியும் ! ஒவ்வொரு நொடியும் கடவுளை மறக்கவிடாமல் தன் வேலையை செய்து கொண்டே இருக்கும் ! இநன்யா நமோ நம !
சரீர பலம் குறைந்து ஆன்ம பலம் கூடுவதற்கான அறிகுறி !
அய்யா உடல் சூடாக இருக்கும் வரை உயிர் இருக்கிறது உயிர் பிரிந்த உடன் உடல் சில்என்று ஆகிறது அப்படிஎன்றால் உடலில் நெருப்பு இருக்கிறது ஆனால் நீங்கள் நெருப்பை வணங்க வேண்டாம் என்று சொல்வது எனக்கு புரியவில்லை கொஞ்சம் விளகுங்கள் அய்யா இநன்யா நமோ நம;;;
நெருப்பு, அக்னி, வெப்பம் ஆகிய மூன்றும் வெவ்வேறு ! அனைத்திற்கும் மூலம் வெப்பம் ! வெப்பத்தின் குவியல் அக்னி ! அக்னி தளர்ந்தால் அது நெருப்பு ! ஒரு தீக்குச்சியை உரசினால் வெப்பம் அதிகமாகும். பின் அக்னி உருவாகும் ! அக்னி சிறிது தளர்ந்தவுடன் உருவாவது நெருப்பு (கனல், கங்கு). அக்னி எரிந்து கொண்டிருக்கும் ! நெருப்பு கனன்று கொண்டிருக்கும் ! கடவுளின் வெப்பம் குவிந்து அக்னியாய் மாறி சூரியனை எரித்து பின் அதை கனன்று கொண்டிருக்கும் நெருப்பாய் மாற்றுகிறது ! நெருப்பு பின் வெளிச்சமாகவும், வெப்பமாகவும் மாறி உலகில் உள்ள ஜீவராசிகளுக்கு உணவாக அமைகிறது ! அக்னியும், நெருப்பும் இல்லாமல் மனிதன் உயிர் வாழ்ந்துவிடலாம். நீரின் மேலிருக்கும் வெப்பம் தான் உடலிலும் உள்ளது ! வெப்பம் கர்ப்பக் காலத்தில் துணையிருக்கும் ! உடலில் நெருப்பும் இல்லை ! அக்னியும் இல்லை ! உடம்பில் நெருப்பிருந்தால் நெருப்பை தொட்டவுடன் ஏன் சுடுகிறது என யோசியுங்கள். சுடக் கூடாதல்லவா? நீர் சீறினால் வெள்ளம் ! காற்று சீறினால் சூறாவளி ! வெப்பம் சீறினால் அக்னி ! நிலம் சீறினால் பூகம்பம் ! ஆகாய சக்தியானது இவை அனைத்தையும் இயக்குகிறது ! நெருப்பையும், அக்னியையும் ஏன் வணங்க வேண்டும் என்று யோசியுங்கள். அனைத்துமே சூட்சுமம். உணர்ந்தால் அனைத்தையும் அறியலாம். நன்றி ! இநன்யா நமோ நம !
கருப்பைக்குள் இருப்புக்கும் உயிர்தந்த நீ.. நெருப்புக்குள் நீரொண்ரு வரச்செய்த நீ.. என்று காரைக்கால் அம்மையார் திரைப்படத்தில் கே.பி.சுந்தராம்பாள் அவர்கள் அவ்வையாராக நடித்து பாடியிருக்கிறாரே.. அதன்படி பார்த்தால் நெருப்பில் இருந்துதானே நீர் தோன்றியதாக பொருள் அமைகிறது.. பஞ்ச பூதங்களில் முதலில் தோன்றியது எது என்று விளக்குங்கள் ஐயா.. இநன்யா நமோ நம..
அனைத்துமே சூட்சுமம் ! அனைத்தையும் வெளிப்படையாக பொருள் கொள்ளக் கூடாது ! பஞ்ச பூதங்களை பற்றி பல கருத்துகள் வந்துள்ளன. அவரவர்ககு தெரிந்ததை சொல்கிறார்கள் ! உடலில் வெப்பம் எப்போதும் சம நிலையில் இருக்கும். நம் உடல் கருப்பையில் தாயின் வெப்பத்தில் நன்றாக வெந்துள்ளது. வெந்த பொருளை (உடலை) நெருப்பு என்று அம்மையார் கூறியிருக்கலாம் !
பாவத்தின் தண்டனையை நீ அனுபவிக்க பூமிக்கு வந்தாலும் எல்லா வளங்களையும், நலங்களையும், அழகையும் பூமியில் கொடுத்து நீ உணர்ந்து அனுபவிக்கத் தந்தானே ! உண்டு தின்ற பாவி நீ உணராமல் அலைகின்றாய் ! என்ன செய்வேன் நான் ? பணம் என்று அலைகின்றாய் ! பதவி என்று அலைகின்றாய் ! பாவம் செய்துவிட்டு பாலாபிஷேகம் செய்கிறாய் ! கஷ்டம் வந்தால் கடவுள் இல்லை என்று பிதற்றுகிறாய் ! இது தான் பகுத்தறிவு என்று வாதம் செய்கிறாய் ! காலத்தின் நாயகனை அறிய என்றாவது ஒரு நாள் நதிக்கரையில் உட்கார்ந்து தனியாக சிந்தித்தாயா? உன்னை அழகாக, அறிவாக, ஊனமில்லாமல் படைத்தான் ! அந்த பேரழகனுக்கு என்றாவது நன்றி சொன்னாயா ?
அன்பே இநன்யா,சுவாசிக்கும்போது காற்றின் புணிதத்தை உணர்கிறேன்.வெய்யிலின் தாகத்தில் நீரின் புணிதத்தை உணர்கிறேன்.சுத்தமான நீர் கிடைக்க ஆகாயத்தின் புணித்ததை உணர்கிறேன்.எமக்கு பசிக்கும்போது உணவில் நிலத்தின் புணிதத்தை உணர்கிறேன்.இவை அனைத்தையும் மறுசுழற்ச்சி செய்யும் சூரியன் வெப்பத்தின் புணிதத்தை உணர்கிறேன்.
நாம் வாழும் பூமியின் சுழற்ச்சியை சீராக்கும் சந்திரனின் புணிதத்தை உணர்கிறேன்.இதையெல்லாம் உணர்கையில் எம் உருவாக்கத்தின் புணிதத்தை உணர்கிறேன்.எம் தெய்வமே, எம் புணித பூமியையும் நல் மக்களையும் காக்கவேண்டும். எம் எல்லோரையும் ஏற்று உம்முடன் நல்வழி நடத்துவீராக.இநன்யா நமோ நம.;;;
 சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாகவசி இநன்யா நமோ நம
தந்தையின் ஆத்மார்த்தமான அன்பின் ஆசிகள்
கடவுளை தேடும் மனிதர்களே இதுவரை வெறும் கற்சிலையை வணங்கி என்ன பயன் கண்டீர்?
சில நேரங்களில் நல்ல நோக்கத்திற்காக பயன் கிடைத்திருந்தாலும் அது எவ்வாறு கிடைத்தது?
நீங்கள் அறியாமல் உங்கள் எண்ணங்களை நிறைவேற்ற உங்கள் ஆண்மா கடவுளிடம் வேண்டியதால் கிடைத்த பயன் அது. உணர்ந்து பாருங்கள் கற்சிலை கேட்பவை எல்லாம் கொடுக்கும் என்றால் கேட்டவர் அனைவரும் பயனடைந்து இருக்க வேண்டும் அல்லவா?உலகில் பிரச்சினைகள் இல்லாதிருக்க வேண்டும் அல்லவா?அனைத்துமான கடவுளை தீயவர்களின் சூழ்ச்சிகளால் மறந்ததால் மறக்க வைக்கப்பட்டதால் வந்த விளைவு இது.ஆண்மாவை விழிப்புறச்செய்தால் கடவுள் யாரென்று இயற்கை எதுவென்று மிக எளிதாக உணர முடியும். எமது ஆண்மா கடவுள் யாரென்று உணர்ந்து கொண்டது.
எம் கடவுளின் நாமம் இநன்யா. எம் கடவுளின் நாமத்தை கூறி நீர் வைத்து வணங்கினால் ஆண்மாவை விழிப்புறச் செய்யலாம். அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும் உள்ளது. உலகம் இயங்குவதற்கு நீரும் காற்றும் இன்றியமையாதது. நம் உடலும் உயிரும் இயங்குவதற்கும் நீரும் காற்றும் இன்றியமையாதது. தினமும் நீர் வைத்து வணங்கி அந்நீரை பருகுவதால் உங்களது உடலும் உள்ளமும் தூய்மை அடைகிறது. உடல் கழிவுகள் மட்டுமின்றி மனக்கழிவுகளும் வெளியேறி மனம் தூய்மை அடைகிறது.சுவாசம் பற்றி அறியாமல் அதை சுவாசித்து என்ன பயன்? மூச்சுக்காற்றில் கடவுளின் நாமம் கலந்து உள்ளே சென்றால் மனக்கசடுகள் யாவும் வெளியேறுகின்றன. இநன்யா நமோ நம என்னும் நாமம் சுவாசம் மூலமாக உடல் முழுவதும் பயணித்து எண்ணங்களை மேன்மை அடையச்செய்கிறது. எண்ணங்கள் ஆண்மாவை கடவுளிடம் கொண்டு சேர்க்கிறது.இநன்யா நமோ நம ;;;
இநன்யா நமோ நம.குழந்தை தாய் மீது வைத்துள்ள நம்பிக்கை போல தந்தையின் மீது நம்பிக்கை வைத்து அவர் நாமம் கூறுங்கள். நீங்கள் கேட்காமலேயே உங்கள் நல்வாழ்விற்கு தேவையான எல்லாவற்றையும் அவர் கொடுப்பதை உணர்வீர்கள்.
நான் நீரில், காற்றில், ஒலியில், ஒளியில் இருக்கின்றேன் ! நீரை உறிஞ்சி குடிக்கும் தாவர, மிருகங்கள் கூட என்னை உணர்கின்றன ! நின்று நீர் குடிக்கும் மானிடப் பிறவியான நீ எனை உணராமல் இருக்கலாமா ? என் நாமம் சொல் ! உனக்கு நல்ல நீரும், நலம் தரும் வாழ்வும் தருவேன் ! கண்டதையும் வணங்காதே ! நீ கண்டதை வணங்கு ! நீ உண்டதை வணங்கு !
நீரை வணங்கு ! நிம்மதி நிச்சயம் உண்டு ! நான் நன் நீர் ! உனக்கு நலம் தருவேன் ! புனிதமானவன் இநன்யா !
அந்த நன்னீரை வணங்காமல் வீணாக்கியதாலே இன்று மனித இனம் தண்ணீருக்காக/தண்ணீரால் அல்லோலப்படுகிறது.
இனியும் இந்த அவலம் வேண்டாம்.. நம் உயிரை காக்கும் நீரை வணங்குவோம். நலம் பெறுவோம்..நன்றி கடவுளே..
இநன்யா நமோ நம.
 கண்டதையும் வணங்காதே ! நீ கண்டதை வணங்கு ! நீ உண்டதை வணங்கு ! நீரை வணங்கு ! நிம்மதி நிச்சயம் உண்டு ! நான் நன் நீர் ! உனக்கு நலம் தருவேன் ! புனிதமானவன் இநன்யா ! இநன்யா நமோ நம இநன்யா நமோ நம இநன்யா நமோ நம;;;


;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

No comments:

Post a Comment