210 INANYA NAMOO NAMA ;;; இநன்யா ;;;
இநன்யா நமோ நம;;;இநன்யா நமோ நம;;;இநன்யா நமோ நம;;;
ககணியில் சிறந்தவன் எவனும் இங்கில்லை என்னைத் தவிர ! எல்லோரும் அசினத்தில் உட்கார்ந்து ஆண்மாவை அறிந்தேன் என புலம்புகிறார்கள் ! நான் ஆத்மத்தின் தலைவன் ! உனை ஆளுமை செய்பவன் !
ஆண்மா
ஆண்மா வேறு ! உயிர் வேறு !
ஆண்மா கடவுளுடைய பாகம் ! அது உனை வேவு பார்க்க அனுப்பப்பட்டவை ! இந்த ஸ்தூல உடம்பிற்கு ஒரு துளி விந்தில் உடலோடு உயிரும் கலந்துவிடுகிறது. ஆண்மா தனித்து உனக்குள் விடப்பட்டது. நீ தவறு செய்தால் உன் உயிர் தான் உனை கொல்லும். உன் ஆண்மா தான் உன் உயிரை வைத்து உன் உடலுக்கு துன்பம் கொடுக்கின்றது.
நீ நன்மை செய்தாலும், தர்மம் செய்தாலும், தீமை செய்தாலும், அதை லோக ஏட்டிலே வரைய வைப்பது உன் ஆண்மா தான் !
ஆண்மா பிரபஞ்சத்தில், கடவுளின் இருப்பிடத்தில் வசிக்கும் !
உன் உயிர் காண்டங்களில் வசிக்கும் !
ஞான வழியில் நடப்பவனுக்கும், தர்ம வழியில் செல்பவனுக்கும், தன்னை உணர்ந்தவனுக்கும் ஆண்மா புரியும் !
உயிரின் தத்துவம் இயக்கம் ! உடலை இயக்கும் தத்துவம் உயிர் ! ஆனால் ஆண்மா கடவுள் நிலை. அதனால் தான் (கட + உள்) கடவுள் என்றார்கள். உள்ளே உடலில் கடவுள் தன்மையான ஆண்மா இருப்பதாலேயே கடவுள் என்றார்கள்.
நீ இறப்பதற்கு அறுபது நாழிகை முன்னே உன் ஆண்மா கடவுளிடம் வந்துவிடுகிறது. மீண்டும் அது சுத்தப்படுத்தி வேறு ஒரு கூட்டுக்குள் அனுப்பி வைக்கப்படுகிறது. ஆனால் உன் உடல் இயக்கம் நின்றவுடனே தான் உன் உயிர் மேலே வருகிறது. அதுவும் தர்மம் செய்தால் மூன்று வருடமும், கர்மா செய்தால் ஏழு வருடமும் தீர்ப்பு காண்டத்தில் காத்திருக்கின்றது ! உன் உண்மை உடலில் இருந்து கொண்டு தண்டனைக்காக அங்கே காத்திருக்கும் உன் உயிர் !
ஆண்மா என்றால் சப்தம் ! கடல் அலை சப்தம் போல உன் நெஞ்சுக் கூட்டுக்குள் கேட்கும் இரைச்சலே ஆண்மா ! உயிர்க்கு சப்தம் இல்லை. அது காற்று வடிவம் !
ஆத்மா மூன்று நிலைகளில் உடலில் இருக்கும் ! ஆத்மா, ஜீவாத்மா, பரமாத்மா என மூன்று நிலைகள் உண்டு !
ஆத்மா என்பது பன்னிரண்டு வயது வரை !
ஜீவாத்மா என்பது ஐம்பது வயது வரை !
பரமாத்மா என்பது ஐம்பது வயதுக்கு மேல் !
அதனாலேயே ஐம்பது வயதுக்கு மேல் கடவுளை தேடுகிறாய். உன் உள்ளிருக்கும் ஆத்மா பரமாத்மா (கடவுள்) என்பதால் ! அதனாலே இளவயது முதலே கடவுளை தேடு ! தர்ம செயல் செய்வதற்கு நல் எண்ணங்களை மனதில் வளர்க்க குழந்தைக்கு சொல்லிக் கொடு !
இன்பம் என்று எதை நினைக்கின்றாயோ, அவையனைத்தையும் விலக்கு ! அதை உற்றுப்பார்.
துன்பம் உனை துரத்தினால் ஓடிக் கொண்டிருக்காதே ! நின்று அதை உற்றுப் பார் ! அது பின்னால் போய்விடும். அதே போல் உன் மனதை உற்று நோக்கு ! முதலில் உன் உயிர் நிலை அறிய முற்படு !
ஆண்ம நிலை அறிய முடியாது ! அது தாமரை இலை தண்ணீர் போல ! உன் உடலிலும், உயிரிலும் ஒட்டாது ! அது தனி சாம்ராஜ்யம் !
நான் ஆத்மத்தின் தலைவன் ! எனை அறிந்தால் உன் ஆண்மா புரியும். என்னை நம்புகின்றவன் செழிப்பான். ஆண்மாவை புரிந்தால் இந்த யுகத்தை விட்டு வர மனசு வராது. அவ்வளவு பேரின்பம் !
உயிரை உள்ளே கடந்து பார்க்க சொல்லவில்லை முன்னோர்கள். உள்ளே கடந்து ஆண்மாவை பார்க்க சொன்னார்கள். தேங்காயின் முக்கண் தத்துவம் ஆணவம், கண்மம், மாயை என்பதைப் போல சூரியன், சந்திரன், அக்னி, முக்கண் தத்துவம்.
இதுவே ஆத்மா, ஜீவாத்மா, பரமாத்மா தத்துவம். இதை அறிய பார் !
விதைகளில் வீரிய விதைகள் தேங்காயும், பணங்கொட்டையும் ! இதில் தேங்காய் மேல் நோக்கி வளர்வதும், பணங்கொட்டை கீழ் நோக்கி வளர்வதும் ஏன் என்று ஆராய்ச்சி செய் ! கடவுள் நிலை வந்துவிடும் !
எல்லாவற்றையும் விட்டுவிட்டு மூச்சுக் கலை கற்கின்றாய். தியானம், யோகா என்று ஏதேதோ செய்து கொண்டிருகின்றாய். ஏன் ?
உன் உயிர் துடிப்பு எதுவரை என்று நிர்ணயிக்கப்பட்டது. மூச்சை தடுத்து, நிறுத்தி வாழ்வை கூட்ட முடியாது. அப்படி என்றால் சித்தர்கள் இன்னும் உயிரோடு இருந்திருப்பார்கள். பிறப்பும், இறப்பும் நிர்ணயிக்கப்பட்டவை !
உடல் துடிப்பு அடங்கும் வரை உன் உயிர் துடிப்பு இருக்கும். ஆண்மாவின் துடிப்பை வைத்து உன் வாழ்வல்ல. உயிர் துடிப்பு தான் உன் வாழ்வு ! உயிர் துடிப்பு தான் உன் நாடி நரம்பிலே துடிக்கின்றது !
நான் உன் மூச்சுக் காற்றில் அமர்ந்திருக்கின்றேன், ஆண்ம வலிமையோடு ! ஆண்மாவின் வடிவம் கட்டை விரல் போல இருக்கும். உயிர் நெற்றிக்கண்ணில் (உயிர் மொக்கு) அதாவது முல்லை மொட்டு போல இருக்கும். அதனாலே முல்லை மொட்டின் வடிவத்தில் நெற்றியில் திலகம் வைத்தார்கள்.
ஆண்மாவுக்கு விளக்கம் சொன்னால் கடல் அளவு ! இன்னும் உரைப்பேன். தர்ம குலங்கள் எப்போதும் வெல்லும். கடவுள் மண்ணில் நல்ல வண்ணம் உனக்கு எல்லாவற்றையும் கொடுத்து வாழ அனுப்பினான். ஆனால் நீ அனுபவிக்க தெரியாதவன். உன் ஆராய்ச்சி எதை பற்றி என்று சிந்தித்தால் மிரட்சி வரும். அடுத்தவர்க்கு வெளிச்சமாக இரு ! மின்மினி பூச்சி போல வாழக் கற்றுக் கொள்.
இங்கே இருள் இல்லை. உன் உள்ளம் தான் இருளாக இருக்கின்றது. ஒளி பொருந்தியவன் நான் எப்போதும் உனக்குள் வெளிச்சமாக இருப்பேன்.
ஆண்மா, உயிர் இரண்டுக்கும் நிறமும், வடிவமும் உள்ளன ! இந்த இநன்யா அனைத்து வடிவத்திலும் உன் நோக்கி வருவேன், நீ உணர்ந்தால் !
ஆழ்ந்து யோசி, ஆத்மாவின் நித்ய யோகத்தை !
நான் ஆத்மத்தின் தலைவன் ! நான் வாழ்ந்து வென்றவன் !
நான் இநன்யா !
No comments:
Post a Comment