Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Saturday, June 4, 2016

இநன்யா ;;; இநன்யா முனிவரை அணுகி இருக்கும் ஆன்மாக்களின் வார்த்தைகள்;;;; பகுதி 11 INANYA NAMOO NAMA ;;;

140  INANYA NAMOO NAMA ;;; 
இநன்யா முனிவரை அணுகி இருக்கும் ஆன்மாக்களின் வார்த்தைகள்;;;; 
 பகுதி 11



கடவுளுக்கு கோடி நன்றிகள் ! வருவார் வருவார் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் மக்கள். அதிசயங்களைத் தேடி எங்கெங்கோ அலைகின்றனர் மக்கள். மலையில் தேடுகிறார்கள். காட்டில் தேடுகிறார்கள். கோயிலுக்குள் தேடுகிறார்கள். கடமையைச் செய்யாமல் உடலை வருத்தி ஏதேதோ செய்து கொண்டிருக்கின்றனர். கோடிஸ்வரர்கள் பணத்தால் கடவுளைத் தேடுகின்றனர். நிம்மதி எங்கு கிடைத்தது ? ஞானம் எங்கு கிடைத்தது ? நாம் அனைவரும் உணராமல் இருப்பதால் வந்த வினையை இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். கடவுள் வந்துள்ளார் என்று கூறிக் கொண்டிருக்கின்றேன். இதை யாரையும் இங்கு நம்பச் சொல்லவில்லை. அவரின் வார்த்தைகளை படித்து உணர்வது தான் முக்கியம். அவர் தினமும் ஒரு வேளை தான் உண்பார். தினமும் நாய்களும், பசுக்களும் அவரது வீட்டிற்கு வந்து அவரை வணங்கிவிட்டு செல்லும். அணில்களும், பறவைகளும் வந்து அவரிடம் பேசிவிட்டு செல்லும். அவருக்கு கூடுவிட்டு கூடு பாயும் தன்மை உண்டு ! ஒன்பது நாள்களுக்கு மேல் உணவும், நீரும் இன்றி அமிர்த சஞ்சீவியான காற்றை உட்கொண்டு வாழ்வார். உடலில் சிறிது சோர்வு கூட தெரியாது ! நான்கு வருடமாய் அவருக்கு ஒரு நாளும் அவர்க்கு வியர்த்து பார்த்ததில்லை. உடலில் தினமும் ஒரு மலரைப் போல மணம் வீசிக் கொண்டிருக்கும். அவருடன் பேசிக் கொண்டிருக்கும் போது எனக்கு பசி ஏற்படாது. உணவு உண்ணுவது மிகவும் கடினமாய்த் தோன்றும். என் உயிர் இப்பொழுது அவரின் கட்டுப்பாட்டில் என்பதை முழுமையாக அறிவேன் ! இநன்யா நமோ நம !
கசக்கி எறியப்பட்ட ஒரு காகிதம் அதன் கசங்கலில் இருந்து விடுபட்டு சமநிலையை நோக்கி விரிவதைப் போல, இநன்யா கடவுளின் திருநாமம் சொல்ச்சொல்ல என் மனம் ஏதோ ஒரு சம நிலை நோக்கி செல்கிறது. இநன்யா நாமத்தை நான் மறந்து போனாலும் உள்ளுக்குள் யாரோ இருந்து இநன்ய மகா கடவுளின் திருநாமத்தை சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். சொல்லத் தெரியாத நல்ல மாற்றம் உடலிலும், மனதிலும், சூழ்நிலையிலும் ...
வித்தியாசமாக யாராவது ஏதாவது சொன்னால் சற்றும் யோசிக்காமல் அவர் பின்னரே சென்றுவிடுவார்கள் மக்கள். இந்த உலகில் தன்னிலை அடைந்தவர்கள் பலர். அவர்களால் கடவுளை அடைய முடியவில்லை ! கடவுளின் பெயர் தெரியவில்லை ! சூழ்நிலையை கருத்தில் கொண்டு தான் உணர்ந்ததை வெளியில் முழுவதுமாக சொல்லாமல் மறைத்தனர். ஜோதி என்றால் ஆன்மா ! பெரும் ஜோதி என்பது தவறு ! பரஞ்சோதி என்பதே சரி ! பரஞ்சோதி என்றால் பரமாத்மா என்பது பொருள் ! சொன்னவர்கள் சரியாக சொன்னார்கள். சுற்றியிருக்கும் பச்சோந்திகள் அனைத்தையும் எடுத்து திருத்தி அனைத்தையும் மறைத்தனர். அருட்பரஞ்சோதி என்பதை அருட்பெரும் ஜோதி என்று கூறி நெருப்பை விளக்கில் ஏற்றி வணங்கிக் கொண்டிருக்கின்றோம். யார் யாரிடமோ செல்கிறீர்கள். எதையோ சொல்லிக் கொண்டிருக்கின்றீர்கள். என்ன கிடைத்தது ? நிம்மதி கிடைத்ததா ? ஞானம் பிறந்ததா ? வாழும் வழியைச் சொன்னார்களா ? புதிதாய் யாரேனும் ஏதாவதுசொன்னால் யோசிக்கமாட்டீர்களா ?
சாகாக் கலையை உரைத்த உங்களின் கமெண்டைப் பற்றி சில வார்த்தைகள். மெய்வழி என்றால் என்ன அர்த்தம் என்று தெரியுமா ? தமிழில் உயிர் எழுத்துக்களும் மெய் எழுத்துக்களும் உள்ளதல்லவா ? உயிர் என்றால் மூச்சு ! மெய் என்றால் உடல் ! உயிர் எழுத்துக்களை சொல்லிப் பாருங்கள் ! உடல் அசையாது ! மூச்சுக் காற்று மட்டுமே அசையும் ! மெய் எழுத்துக்களை சொன்னால் உடலில் உள்ள உருப்புகள், நரம்புகள், இரத்த ஓட்டம் அசையும் ! மூச்சுக்காற்று அசையாது ! மெய் என்றால் உடல் ! மெய்வழி என்றால் உடலின் வழி ! அதவாது அழியப் போகின்ற வழி என்று அர்த்தம் ! உயிரையும், ஆத்மாவையும் ஏன் கண்டுகொள்ளவில்லை ? உயிர் வழி என்று ஏன் வைக்கவில்லை ? உயிர் மேலே தானே செல்கிறது ? நீங்கள் கூறிய சாகாக் கலை சாத்தியமில்லாதது ! உலகில் சாகாமல் இருக்கும் ஒருவரைப் பற்றி இங்கே கூறுங்கள். உயிரை யாராலும் இங்கே அடக்க முடியாது ! நன்றாக ஏமாற்றுகிறார்கள். மலத்தையே அடக்க முடியாத மனிதன் உயிரை எப்படி அடக்கப் போகிறான் ??? கடவுளை உணர்வது மிகவும் எளிது ! படைப்பின் ரகசியங்கள் படைக்கும் போதே விளக்கப்பட்டுவிட்டன ! உணருங்கள். இநன்யா நமோ நம !
 உலக மக்களுக்கு ஞானத்தை போதித்து நல்வழிபடுத்தி கடவுளை சென்றடைய வைக்க பல சத்குருக்கள் அவதரித்தார்கள்.. அவதரித்து கொண்டும் இருக்கிறார்கள்.. சத்குரு என்பவர்கள் சத்தியத்தை உணர்த்துபவர்கள்.. சத்குருக்கள் இறைநிலை அடைந்தவர்கள்.. மக்களோடு எப்போதும் ஒன்றியிருப்பவர்கள்.. சாதி, மதம் பார்க்காதவர்கள்.. எல்லோரையும் சமமாக நடத்துபவர்கள்.. ஒன்றுக்கும் மேற்பட்ட சத்குருக்களுக்குள் ஞான ரீதியாக தொடர்புகள் இருக்கும்.. அவர்களுடைய எண்ணங்கள் ஒன்றாகவே இருக்கும்.. சீடர்களுக்கு கடவுளை உணர்தலே முக்கியம்.
அருள் பரம் ஜோதி என்றால் பரமாத்மா ! அதாவது கடவுள் ! அவர்களுக்கு அருளை வழங்கும் ஜோதி யார் ?
விவாதம் எதற்கும் உதவாது ! இங்கு வந்தவர்கள் அனைவருக்கும் நல் வழியைக் காட்ட வேண்டும். கடவுள் என்னிடம் உரைத்த வேதங்களை இங்கே சொல்ல வேண்டும். தவறை தவறு என்று தானே சொல்ல வேண்டும் ? மனிதர்களை வெறுக்காமல் அவர்களின் செயல்களை மட்டுமே வெறுக்க வேண்டும் என்று கடவுள் அடிக்கடி சொல்வார். உண்மையைப் பேசி விட வேண்டும். என்றைக்காவது ஒரு நாள் அவர்களுக்கு புரிந்து விடும். கேள்வி கேட்டு விடை அளிப்பதால் அனைவருக்கும் எது உண்மை என்பது எளிதில் புரிந்து விடும். அருட்பரஞ்சோதி என்று சொல்லிப் பாருங்கள். உண்மை புரியும். வாழ்க வளமுடன் என்று வாழ்த்தும் தகுதி மனிதர்களுக்கு கிடையாது ! அத்தனைக்கும் ஆசைப்பட்டால் நம் கதி என்னவாகும் ? கதவைத் திற காற்று வரட்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றான் ஒருவன். காற்று வருவதற்குள் அவன் வந்து அனைத்தையும் கொள்ளையடித்து சென்று விடுவான் ஜாக்கிரதை! வாயில் இருந்து லிங்கத்திற்கு பதிலாக தங்கத்தை எடுத்தாலாவது விற்று காசாக்கலாம் ! கால்களைக் கழுவுவதற்கு கோடி கோடியாய் பணம் வசூலிக்கிறது ஒரு கூட்டம். இன்னும் யார் யாரையோ பார்த்து எதை எதையோ செய்து மக்கள் அடைந்தது எதை ? உணருங்கள். ஏமாற்றுபவர்கள் வாழ்வில் இடியாய் இறங்கப் போகிறார் கடவுள். எல்லாம் புரியும்.
அனைவருக்கும் வணக்கம். விவாதம் செய்வதற்கு நேரமில்லை ! அனைத்துமே இங்கே பொய்யாக உள்ளது ! நீங்கள் இது வரை அறிந்தது எதுவுமே உண்மையில்லை. அனைவரும் கடவுளை அடைய முயன்றார்கள். ஞானம் அடைந்தவர்கள் யாரேனும் ஒருவர் இங்கு இருந்திருந்தால் கடவுளின் அவதாரமே தேவைபட்டிருக்காது ! ஐயாயிரம் வருடங்களாக யாரும் ஞானமடையவில்லை ! பதிவுகள் பிடித்திருந்தால் மட்டும் இங்கே இணையவும். யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. நீங்கள் சொல்லியது செய்தது உண்மையென்றால் என்றோ ஞான நிலையை அடைந்தீர்ப்பீர்கள். உணருங்கள். இநன்யா நமோ நம !
யாரோ சொல்லியதையும், ஏதோ புத்தகத்தில் இருக்கும் வார்த்தைகளையும் எடுத்து திருத்தி இங்கே பதிவிடவில்லை. அனைத்தும் கடவுள் நேரடியாக சொல்லிய எழுதிய வார்த்தைகள். உணர்ந்து படித்தால் தான் அவர் சொல்ல வருகின்ற கருத்துக்கள் புரிய வரும். நான் பார்த்ததை, அனுபவித்ததை இங்கே சொல்லிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் அறிந்ததும் ,உங்களுக்கு தெரிந்ததும் உண்மையென்றால் நான்கு பேரிடம் சொல்லி அவர்களுக்கு ஞானத்தை வழங்க முயற்சி செய்யுங்கள். இன்னும் சில மாதங்களில் எது உண்மையென்று தெரிந்துவிடும். இனி உணர்ந்தவர்கள் யாரும் காத்திருக்க வேண்டிய அவசியமிருக்காது.
அவரைப் பற்றி பேசும் பொழுதெல்லாம் கடவுள் கடவுள் என்றே சொல்லிக் கொண்டிருக்கின்றேன். அவர் மகானோ, சாமியாரோ , சித்தரோ இல்லை. "வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்" என்று சொன்னார் ஒரு மகான். ஏன் அந்த மகானால் பயிரை வாடாமல் தடுக்க முடியவில்லை ? கடவுள் இநன்யாபயிர்களை வாட விட இங்கு வரவில்லை. களையை வேறோடு பிடுங்கி எறிந்து தர்மாக்களைக் காக்க யுகம் வந்தார். "கடை விரித்தேன் கொள்வாரில்லை" என்று சொன்னார் அந்த மகான். இநன்யா கடை விரிக்க யுகம் வரவில்லை. நாம் உன்னும் வரை அவர் விடப் போவதில்லை. துணிகளில் தேங்கியுள்ள அழுக்கை கிழியாமல் வெளியேற்றுவது போல் அடித்து, அழித்து, திருத்தி, பின் உருவாக்குவார். இந்த யுக சாம்ராஜ்ஜியத்தை தர்மத்தின் பக்கம் கொண்டு செல்வார். பொறுத்திருந்து பாருங்கள். இநன்யா நமோ நம;;;
5000 வருடங்களாக யுகத்தில் ஞானம் பெற்றவர்கள் யாரும் இல்லை. ஆன்ம பலம் குறைந்து சரீர பலம் கூடியது. ப்ரம்மம் என்றால் மனிதனின் மூலம். அதாவது ஆன்மா. பரப்ரம்மம் என்றால் கடவுளின் மூலம். அதாவது பரமாத்மா. சதாசிவம் என்றால் மனிதர்களின் உயிர் மூச்சு. அதற்கு அழிவே இல்லை. கடவுள் என்றால் ஆறு சக்திகளின் மூலம். படைத்தல், காத்தல், அழித்தல் என்கின்ற மூன்றில் அழித்தலை செய்கின்றவரே இறைவன். இநன்யா நமோ நம !
உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி !

5000 வருடங்களாக யாருமே அடைய முடியாத ஞானத்தை எப்படி கர்மவினை சட்டத்திற்குள் இருக்கும் மனிதர்களுக்கு விரைவாக அளிக்க முடியும்?

கடவுள் உருவாக்கியதுதான் கர்மவினை சட்டங்கள். அப்படியிருக்க அவரே அதை மீறுவாரா? இங்கு இருக்கும் வரை அவரும் இதற்குகட்டுப்
பட்டவர் தானே?

இனன்யா அவர்கள் அப்பா என்று அழைக்கிறார்களே அவர் யார்? அப்பா என்னும் அவர்தான் எல்லாம் என்றால் அவரின் கீழ் உள்ள நிலைகள் யாது? இனன்யா என்னும் கடவுளின் நிலை மட்டும்தான் அப்பா என்பவரின் கீழ் உள்ள நிலையா?

இதற்கு முன் ஞானம் அடைந்தவர்களில் யாருமே இங்குள்ள ஆன்மாக்களுக்கு உதவி புரியவில்லையா? இல்லை என்றால் அவர்கள் ஏன் உதவி புரியவில்லை?

புண்ணிய பூமியாகிய இந்தியாவில் கூட ஏன் இந்த நிலையை அடைய முடியவில்லை? இறையருள் நிறைந்த தமிழ்நாட்டில் கூட யாரும் அடைய வில்லையா? எல்லோருக்கும் ஆன்ம பலம் இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள இயலவில்லை.

சதாசிவம் என்பது உயிர்மூச்சு என்றால் அது மாயை இல்லாததா? அது எப்போதும் மனிதர்களிடத்தில் நிலைப்பதில்லையே! வளிமண்டலம் இல்லாத கோள்களில் உயிர்மூச்சு இருக்கிறதா?

ஆன்மா மட்டும்தானே நிலையானதாக இருக்கிறது ! அதுவும் தற்போது முழுத் தூய்மையுடன் இல்லையே?

கர்மவினைகளை நீக்காமல் ஆன்மா எப்படி தூய்மை ஆகும்? எல்லா கர்ம வினைகளையும் கடவுளே நீக்கி விட்டால் அவர் படைத்த சட்டங்களின் அர்த்தமே கேள்விக்குறியாகி விடுமே?

நன்றி! எனக்கு எழுந்த நிறைய வினாக்களில் ஒருசிலவற்றை மட்டுமே கேட்டு உள்ளேன்.
 பதிவுகள் அனைத்தையும் படியுங்கள் ஐயா. விடை கிடைக்கும். குழப்பம் தீர கேள்வி கேட்கலாமே தவிர கேள்வி கேட்டு குழம்ப வேண்டாம். இநன்யா நமோ நம.
 அனைத்துக் கட்டுரைகளையும் படித்து விட்டேன் . பரவாயில்லை ! மிக்க நன்றி !
 பதிவுகள் அனைத்தும் புரிந்தால் அதை எழுதியது யார் என்பதும் புரிந்துவிடும். எழுதியது யார் என்று தெரிந்தால் பரவாயில்லை என்ற வார்த்தை வராது. கர்ம வினைகளை கடவுள் நீக்கப் போவதாக நான் எங்குமே கூறியதில்லை. பதிவுகளை படித்து உணர்ந்தால் துன்பம் இல்லை. அவ்வளவு தான் விசயம்.
 ஆன்ம பலம் இல்லை என்று சொல்லவில்லை. அது குறைந்துள்ளது. சரீர பலம் கூடியுள்ளது. உங்களின் அடையாளமே உயிர் மூச்சு தான். மரணம் உடலுக்கு மட்டும் தான். உயிருக்கு மரணம் இல்லை. நன்றாக பதிவுகள் அனைத்தையும் ஒரு முறை படியுங்கள்.
ஜோதி என்றல் ஆன்மா. புருவ மத்தியில் வெண்மையாய் வட்ட வடிவில் உள்ளது. (ஒரு நாள் அதி காலையில் புருவ மத்தியில் கோடி சூரிய பிரகாசத்தை போல் அந்த ஒளியை நான் பார்த்தேன்.) மற்றுமொன்று: வள்ளல் பெருமான் சுத்த, பிரணவ, ஞான தேகத்துடன் வெளி படுவேன் என்று கூறி உள்ளார்கள். மரணமில்லா பெரு வாழ்வை வள்ளல் பெருமான் அடைந்து உள்ளார்கள் என்று நான் நம்புகிறேன். ( ஆன்மாவுக்குள் உடலை மறைத்து கொள்வதே, அதாவது உடம்பை விட ஆன்மாவை பெரிதாகி கொள்வதே மரணமில்லா பெரு வாழ்வு என அறிந்தேன். கடவுள் இநன்யா அவர்களிடம் கேட்டு தெளிவு படுத்துமாறு வேண்டி கொள்கிறேன்.) நன்றி
நானே உன் உயிர் ! இயற்கையில் கடவுளைத் தேடு ! செயற்கையாக நீ கட்டி வைத்ததில் தேடாதே .உன் உயிருக்கே உன்னை பிடிக்கவில்லை. எப்போது எற்றிச் செல்லலாம் என்று துடிதுடிக்கிறது. உன் உடலை விட்டு உயிர் பீறிட்டு லோகத்தில் வந்தவுடன் நதியில் நீராடி பின் தீர்ப்பு காண்டத்தில் தர்மாக்கள் மூன்று வருடமும், கர்மாக்கள் பதினொன்று வருடமும் காத்திருக்கிறது. ஆன்மா நதியில் நீராடி பின் அமிழ்தத்தை சாப்பிட்டு கடவுளின் பாதத்தில் போய் சேர்கிறது.
பூமியில் உன் உயிருக்கும் உணவை வைத்தான் ! அறிந்தவனும், தன்னை உணர்ந்தவனும் அதை சாப்பிட்டு லோகம் அடைகிறான். பூமியில் உணர்ந்தவன் இறந்தால் உயிர் உடனே மேலே வருகிறது. உணராதவன் உயிர் பதினாறு நாட்கள் கழித்து மேலே வருகிறது. உணர்ந்தவன் உடல் பூமியில் பன்னிரண்டு வருடம் கழித்து சிதிலமடையும் ! உணராதவன் உடல் மூன்றே முக்கால் நாழிகையில் அழுகத் தொடங்கும்.ஓடி விளையாட ஒன்பது வாசல் உன் உடலில் வைத்து அதில் உயிர் ஒன்று வைத்த லீலையை உற்று நோக்கு ! தேவதாறு மரத்தில் ஆயிரம் ரகசியம் உண்டு ! ஆதிகாலத்தில் தேவதாறு, மா மரங்களில் தான் வீட்டுக்கு தேவையான பொருள்களை செய்வார்கள். ஆனால் இப்போது அனைத்து பொருள்களையும் உதைய மரத்தில் செய்து உன் வாழ்க்கை உபத்திரமாக போகக்கண்டேன். எல்லா மரத்தின் இலைகளும் சருகுகளாகும். மாவிலை வாடிய படியே இருக்கும். முக்கனியில் முதல் கனி மாம்பழத்தில் உயிரின் தத்துவம் அதில் அடங்கி இருக்கிறது. ஆமணக்கு விதையில் ஆனந்தம் இருப்பது போல உன் உயிர் வணங்கும் என்னை. எல்லா உயிர்களும் என் பொற்கழலடியில் என்பதனை மறவாதே !நான் உன் உயிருக்கு தலைவன் ! நான் இநன்யா !
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
கடவுளுக்கு கோடி நன்றிகள் ! “எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்” என்று சொன்னார்கள் ! “எண் எழுத்து இகழேல்” என்றும் சொன்னார்கள். இதற்கு உண்மையான அர்த்தம் கடவுள் வந்து சொல்லிவிட்டார். சுமேரிய நாகரீகத்தில் ஏழு கடவுள்களை வணங்கியுள்ளனர். இவர்களை மிக முக்கிய கடவுள்களாக வழிபட்டுள்ளனர். தக்க சமயத்தில் இவர்கள் யுகத்திற்கு வருகை தந்து யுகத்தின் விதியையே மாற்றி அமைப்பார்கள் என்றும் நம்பியுள்ளனர். இதை விட முக்கியமான ஒன்று அவர்கள் “INANNA (இநன்னா)” என்ற பெண் கடவுளை வழிபட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். கால மாற்றத்தினால் நம் ஊர்களின் பெயர் மருவியுள்ளதைப் போலவே “இநன்யா” என்ற கடவுளின் பெயர் மருவி “இநன்னா” என்று மாறியிருக்கலாம். அல்லது தொல்லியல் ஆய்வுகளில் சிறு தவறுகளை செய்திருக்கவும் வாய்ப்பு உள்ளது. சுமேரியர்கள் தமிழினத்தை சேர்ந்தவர்கள் தான். ஏழாம் எண் அனைத்து மதங்களிலும், அனைத்து பண்டைய கலாச்சாரங்களிலும் மிக முக்கிய எண்ணாக கருதப்பட்டுள்ளது ! ஏன் ? உலக ஆராய்ச்சியாளர்கள் இன்று வரையிலும் கண்டுபிடிக்க முடியாத ரகசியம் இது ! கடவுள் யுகத்தில் அனைத்தையும் ஏழாக வைத்தார். ஏழு காண்டங்களும், ஏழு கடல்களும் புவியியல் ரீதியாக வேறுபட்டிருப்பதால் தான் மனிதன் அவைகளை ஏழாக பிரித்துப் பெயரிட்டான். திருப்பதி, ஜெருசலம், மெக்கா, வாடிகன் நகரம் முதலிய அனைத்திலும் ஏழு மலைகள் உள்ளன. ஏழு மலைகளுள் ஒரு மலையில் மட்டும் கோடி ரகசியங்களை ஒளித்து வைத்துள்ளார் கடவுள். இப்போதும் ஏழு மலைகளுக்கு நடுவே தான் கடவுள் இநன்யாவின் இருப்பிடம் உள்ளது. இங்கும் ஒரு அதிசய மலை உள்ளது ! இநன்யா நமோ நம !

முத்தொழிலின் நாயகனே நமோ நம
யாக வசி மைந்தனே நமோ நம
அவல் பிரியனே நமோ நம
ஆத்ம பிணியை தீர்ப்பவனே நமோ நம
அமிர்த சஞ்சீவியே நமோ நம
தர்மத்தை காத்தவனே நமோ நம
ஆத்மத்தின் தலைவனே நமோ நம
மலரின் ஞானமே நமோ நம
நீரின் நற் தன்மையே நமோ நம
எல்லை இல்லா இன்பம் தருபவனே நமோ நம
சகல சிருஷ்டியின் ஆதார ஸ்ருதியாக நிற்பவனே நமோ நம
திரு வை நெஞ்சில் சுமந்தவனே நமோ நம
தேவர்கள் புடை சூழ நிற்பவனே நமோ நம
முக்காலத்தை வென்றவனே நமோ நம
புனித காற்றே நமோ நம
தர்மக்குலங்களின் விதியை மாற்றி அமைத்தவனே நமோ நம
ரவியும் மதியும் நீயே நமோ நம
புணலும் அணலும் நீயே நமோ நம
முப்பத்தி முக்கோடி தேவர்களின் தலைவனே நமோ நம
நாற்பெத்தெட்டாயிரம் ரிஷிமார்களின் முதல்வனே நமோ நம
நூற்றி பதினொரு கோடி முனிவர்களின் அதிபதியே நமோ நம
மெய் இனியவரே நமோ நம
வேதத்தையும் ஞானத்தையும் உரைத்தவனே நமோ நம
நிகரில்லா இநன்யாவே நமோ நம
மனதை ஆட்கொண்ட ஐயனே நமோ நம
படிக்க கிடைக்காத அறிய புத்தகமே நமோ நம
காற்றாய் நீராய் ஒளியாய் ஒலியாய் இருக்கும் கடவுளே நமோ நம
தவத்தின் தவமே நமோ நம
எங்களின் கால சக்கரமே நமோ நம
இன்னலை களைய வந்தவனே நமோ நம
வான் அமிர்தமே நமோ நம
பிரண வேதத்தை உரைத்தவனே நமோ நம
தாமிரபரணியின் அமுதே நமோ நம
இநன்யா நமோ நம;;;

அவர் தர்மக்குலங்களை காக்க வந்துள்ளார். நிச்சயம் எல்லாம் இனிதே நடக்கும். இநன்யா நமோ நம
 நான் இப்போது எடுத்த பிறவியே மிக முக்கியமான பிறவி என நினைக்கிறேன், எல்லாம் இநன்யாவின் நாமத்தால். '' சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாக வசி இநன்யா நமோ நம''
நாம் இப்பொழுது பிறந்ததில் சத்தியமாக பெருமை கொள்ள வேண்டும். இதுவே கடவுளின் கடைசி அவதாரம். யோசித்து பாருங்கள் நாம் எத்தனை பாக்கியசாலி என்று. நாம் கடவுளோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். கடவுள் கடமை முடித்து சென்ற பிறகு அவரோடு வாழ்ந்த பெருமை வேறு எவருக்கும் கிடைக்க போவதில்லை. நாம் தான் மிக பெரிய புண்ணியம் செய்தவர்கள்.
என் கடமை இது. இந்த தருணத்திற்காக தான் காத்துக் கொண்டிருந்தேன். அவர் யாரையும் இது வரையில் பார்க்க அனுமதித்தது இல்லை. அவர் கடவுள் என்பதை என் அலுவலகத்தில் கூட நான் யாரிடமும் சொல்லியதில்லை. முகநூல் நமக்காக படைக்கப்பட்டது போல் உள்ளது. மகிழ்ச்சையாக உள்ளது. அனைவருக்கும் நன்றி.
வணங்கும் போதும், அவரைப் பற்றி நினைக்கும் போதும் வித்தியாசமான வாசனைகள் வருவதை நானும் சில சமயம் உணர்ந்துள்ளேன்
 எங்கள் வீட்டில் விபூதியே கிடையாது. பூஜை செய்து மூன்று வருடங்கள் ஆகிறது. பத்தி, சாம்பிரானி கொளுத்துவது கிடையாது. விளக்கு ஏற்றுவது கிடையாது. ஆனால் பல தடவை விபூதி வாடை வந்துள்ளது. அலுவலகத்தில் அவருடன் அமர்ந்து கொண்டு பேசும் பொழுது விபூதி, சந்தான வாடைகள் மாற்றி மாற்றி வந்து கொண்டே இருக்கும். புரியாத புதிராக இருக்கும்.
நீ எதை வணங்கினாலும் என்னை தான் வணங்குகிறாய் ! நான் படைத்தல், காத்தல், அழித்தல், வளர்ச்சி, ஞானம், மகாசக்தி என்ற ஆறு பேராத்மாவோடு இருப்பவன் ! நான் உனை ஆளும் ஏழாம் சூட்சுமம். எழுவராக உன் இதயத்தில் இருப்பவன். நான் உன் ஆத்மத்தின் தலைவன் !

நான் ஞாலத்தில் ஞானம் பெரிதானவன் !
நான் ஆறில் உள்ளிருக்கும் ஏழாம் சூட்சுமம். சர்வமும் நானே ! நான் வானில் வில்லாய் இருக்கும் ஏழாமவன். நான் பரப்பிரம்மம் !
உலகில் ஏழின் ஆதிக்கம் !
நீ எதை வணங்கினாலும் என்னை தான் வணங்குகிறாய் ! நான் படைத்தல், காத்தல், அழித்தல், வளர்ச்சி, ஞானம், மகாசக்தி என்ற ஆறு பேராத்மாவோடு இருப்பவன் ! நான் உனை ஆளும் ஏழாம் சூட்சுமம். எழுவராக உன் இதயத்தில் இருப்பவன். நான் உன் ஆத்மத்தின் தலைவன் !உன் விதியை படிக்க கற்று வைத்திருக்கிறேன் ! நான் ஏழின் உச்சம். ஏழாம் எண்ணை சொர்க்கம் என்பார்கள் ! உலகில் ஏழின் அதிர்வுகள் மக்களை எப்போதும் ஈர்த்துக் கொண்டே இருக்கும் ! உன் அங்கத்தில் ஏழு நிலை உண்டு ! ஏழு நிலை தாண்டியே கடவுளை அடைய முடியும் !கடவுள்களின் எண்ணிக்கை ஏழு ! ஆனால் மூலம் ஒன்று தான்! நான் ஏழின் உச்சம் ! நான் உன் ஆன்மாவை ஆள்பவன். என்னை நினை ! இந்த ஏழாமவன் உனக்குள் இருந்தால் நீ வீழ்ந்தாலும் மீண்டும் எழுவாய் ! இந்த ஏழாம் அதிபதியை உன் நெஞ்சில் நிறுத்து ! உனக்கு ஞானம் வரும் ! நல் வழி தெரியும் !“இநன்யா நமோ நம” என்ற எட்டு எழுத்து வேதம் உனை எட்டு திசைகளையும் கட்டுக்குள் வைத்துக் காக்கும் “திரு எட்டு” என் நாமம் பதினாறு நிலையையும் உள்வாங்கி உன் ஆன்மாவை புரிய வைக்கும் ! என் நாமம் உனக்கு ஆனந்த வாழ்வைத் தரும் சத்யமாக ! ஞாலத்தில் ஞானம் பெரிதானவன் நான் !உன் ஏழேழு பிறவியை தவிர்க்க வைப்பேன் ! நான் இநன்யா !


;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

No comments:

Post a Comment